JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அன்பே உ( எ )ன்னை உனக்காக .....அத்தியாயம் -12

saaral

Well-known member
அன்பே உ( எ )ன்னை உனக்காக .....அத்தியாயம் -12
 

Sujitha SuJa

New member
அன்பே உ( எ )ன்னை உனக்காக .....அத்தியாயம் -12

ஆம் அவளுக்கு அழைத்தது நிஸ்வந்த் . அவனுக்கு அபிதாவை கண்டவுடன் ஒரு பிடித்தம் . அவளின் முதிர்ச்சியில்லாத குழந்தை தனமான முகம் சற்றே மேல்தட்டு வர்க்கத்தில் பிறந்தாலும் இன்னும் கலாச்சாரத்தை மதிக்கும் அவள் பாங்கு ...கன்னியமான உடை என்று அணைத்து வகையிலும் அபிதா அவளின் நிஷுவை கவர்ந்தாள் .


யாஷ் சென்னை சென்று திரும்புவதற்குள் இருவரின் தொலை பேசி வாயிலான நட்பு வலுப்பெற்றது . முதலில் தயங்கிய அபிதா நிஸ்வந்தின் பேச்சினால் கவரப்பட்டாள் . பத்தொன்பது வயது பேதை பேராசை கொண்ட அன்னையிடமோ ....தொழில் பின் ஓடும் தமயனிடமோ எதையும் பகிர்ந்துகொள்ள முடியாமல் மனதில் மருகினாள் . அதற்கு என்று ஒருவன் தானாக வந்து தோல் கொடுக்கவும் என்ன ஏது என்று ஆராயாமல் நெருங்க ஆரம்பித்தாள் .

ஊரில் இருந்து வந்த யாஷ் நிஷுவிடம் “நிஷு உன் முகத்தில் எதோ ஒரு மாற்றம் தெரியுதே " என்றான் .

புன்னகையுடன் "அப்படி என்ன மற்றம் தெரியுது யாஷ் " என்றான் நிஷு.

"அத தான் நானும் யோசிக்கிறேன் ....! ...ஹ்ம்ம் நான் ஊரில் இல்லாத பொழுது என்ன நடந்தது நிஷு " என்றான் .

"ஹ்ம்ம் ஆடு நடந்தது,மாடு நடந்தது ஏன் நான் கூட நடந்தேன் ! " நிஷுவின் குரலில் ஒரு துள்ளல் .

"மொக்க போடாம மட்டேற்கு வாடா " சலித்துக்கொண்டான் யாஷ் .

அப்பொழுது அவர்கள் இருவரின் நடுவில் மேஜை மேல் இருந்த நிஷுவின் கைபேசி அவனை அழைத்து . இருவரின் பார்வையும் திரையின் மேல் தெரிந்த பிம்பத்தில் விழுந்தது . ஒருவனின் முகம் பிரகாசம் ஆனது ஒருவனின் முகம் யோசனையை தத்தெடுத்தது .

"சொல்லுமா " என்று பேசிக்கொண்டே இருக்கைவிட்டு எழுந்து ஜன்னலின் அருகினில் சென்று முகம் விகாசிக்க பேசிக்கொண்டு இருந்தான் நிஸ்வந்த் . யஸ்வந்த்தின் முகம் பெரும் குழப்பத்தை சுமந்திருந்தது .

வெகு நேர உரையாடலின் பொழுது எதார்த்தமாக திரும்பிய நிஸ்வந்த் யஸ்வந்த்தின் முகம் கண்டு இணைப்பை துண்டித்து யாஷ் முன் வந்து அமர்ந்தான் .

"சொல்லு யாஷ் " என்றான் இயல்பாக .

"நிஷு நீ என்ன பன்னிட்டு இருக்க ....நிச்சயம் இது சரிவராது ..." என்றான் யஸ்வந்த் . அவனின் குரலில் ஆதங்கம் வெளிப்பட்டதை உணர்ந்தான் நிஸ்வந்த் .

"நீ என்ன யோசிக்கிறனு புரியுது யாஷ் ....ஹ்ம்ம்ம் என்னால அபிதாவை பார்த்த நாளில் இருந்து அவளின் நியாபகத்தை தடுக்க முடில ...எதார்த்தமா ஒரு நாள் பார்க்க நேர்ந்தது ..." பேசிக்கொண்டு இருக்கும்போதே பாதியில் நிறுத்தி யஸ்வந்த்தின் முகம் நோக்கினான் . யஸ்வந்த்தோ நீ சொல்வதை சொல் என்ற பாவனையில் அழுத்தமாக உடன் பிறப்பின் முகம் நோக்கினான் .

"பார்த்ததில் இருந்து ஒரு வித தவிப்பு அவளுடன் பழக வேண்டும் என்று ... மற்ற பெண்களை பார்க்கும் போது பழகும் போதோ இல்லை தனிப்பட்ட நேரங்களின் பொழுதோ வராத ஒரு உணர்வு இவளிடம் தோன்றியது சரி இவளுடன் பழகினால் அந்த உணர்வு போய்விடும் என்று எண்ணி பழகி பார்த்தேன் ...." நிஷுவின் விழிகள் கவிதை பேசின . யாஷ் அதை கவனிக்க தவறவில்லை .

"பழகினால் ஒவ்வொரு நாளும் புதிதாக தெரிகிறாள் ...என்னை வேறு ஒரு விதமான சுகமான உலகிற்கு அழைத்து செல்கிறாள் ...மற்றவர்களை போல் சிறிது நேர இன்பத்திற்கான பழக்கம் போல் தோன்றாமல் இவளுடனான பந்தம் வாழ்நாள் முழுமைக்கும் வேண்டும் என்று தோன்றுகிறது யாஷ் " கனவில் மிதந்து கொண்டே சொன்ன அவனின் கண்களில் தெரிந்த அப்பட்டமான காதலில் பயந்தான் யாஷ் 'இது சாத்தியம் ஆகுமா ? ' என்ற கேள்வி அவனுள் தோன்றாமல் இல்லை .

"நிஷு இது சரி வருமா ? " மனதில் தோன்றியதை கேட்டான் யஸ்வந்த் .

புரியாமல் பார்த்தான் நிஸ்வந்த் . "நிஷு யூ ஆர் இன் லவ் ... " என்றான் யாஷ் .

அவனின் மனதை அவனே அறியவில்லை . யஸ்வந்த்தின் கூற்றில் நிஸ்வந்த் அவனுக்குள் சிந்தனையில் ஆழ்ந்தான் . "நிஷு உன் முகம் பார்த்தாலே தெரியுது நீ அவங்களை காதலிக்கிறன்னு ...ஆனால் இது சரி வருமா ? நான் கேள்விப்பட்ட வரைக்கும் அபிதாவிற்கு வாழ்வில் ஒழுக்கம் முக்கியம் முக்கியம் ...நம்மளை நமக்கே தெரியும் ...நல்லா யோசி நிஷு தேவை இல்லாமல் ஒரு பெண்ணின் மனதில் ஆசை வளர்த்து விடாதே ... நாம் அன்றாடம் சந்திக்கும் பெண்கள் போல் இல்லை அபிதா " தனக்கு தோன்றியதை சொல்லிவிட்டான் யஸ்வந்த் .

இரட்டையர்களின் பலமே அவர்களுக்கு முன் அவர்களின் நுண் உணர்வுகளே அவர்களுடைய ஒட்டி பிறந்த உயிர் கண்டுகொள்ளும் . பெரும்பாலும் இரட்டையர்களில் ஒருவர் சொல்லாகவும் மற்றுமொருவர் செயலாகவும் இருப்பர் .

நம் அனைவருக்குமே நம்முடைய நிழல் நம்மை தொடரும் இரட்டையர்களை பொறுத்தவரை அவர்களின் நிழலுக்கு உயிர் உண்டு . யஸ்வந்த் கூறியதை கேட்ட நிஸ்வந்த் சிந்தனைவயப்பட்டான் .'யாஷ் சொல்வது போல் இது சரி வருமா ....அவளின் குணத்துக்கும் எனக்கும் பொருந்துமா ...அவள் சின்ன பெண் . முதலில் இது காதல் தானா ...? ' என்ற கேள்விகளுடன் நிஸ்வந்த் யோசித்தான் .

யஸ்வந்த்தும் நிஸ்வந்த் யோசிக்க இடமளித்து நகர்ந்தான் . தனக்குள் ஆழ்ந்து யோசித்த நிஸ்வந்த் இது காதலா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அபிதாவுடன் பேசுவதை தவிர்த்தான் . அபிதாவின் விரல்கள் நிஸ்வந்திற்கு அழைப்பு விடுத்தே தேய்ந்து போயின . நிஸ்வந்த் நிலை இல்லாமல் தவித்தான் . என்றும் சொல்லாக யஸ்வந்த் இருப்பான் . செயலாக நிஸ்வந்த் இருப்பான் .

நிஷு அபிதாவை தவிர்த்து வந்த சில நேரங்களில் சொல்லாகவும் செயலாகவும் யஸ்வந்த்தே இருக்கும் கட்டாயத்தினுள் சென்றான் . யஸ்வந்த்திற்கு அவன் உடன் பிறப்பின் தவிப்பு புரியாமல் இல்லை . ஒரு நாள் அபிதாவின் கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆர் ஆர் குழுமத்தின் ஒட்டி பிறந்த ரெட்டை இளவரசர்களை அழைத்திருந்தனர் .

நிஸ்வந்த் வர மறுத்துவிட்டான் . அழைப்பு இருவருக்குமானது வேறு வழி இல்லாமல் யாஷ் மட்டும் சென்றான் .

அபிதா இத்துணை நாட்களில் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ள கிடைத்த உற்ற தோலும் அவளை விட்டு விலகியதில் கலங்கினாள் . அபிதாவிற்கு அவளின் தந்தை வழி பழக்கம் அதிகம் . தமிழ்நாட்டில் கிராமத்தில் வளர்க்கப்பட்டவர் தனது மகளையும் அதே வழியில் வளத்தார் . இதுவே அவளுக்கு வினையாகி போனது . லட்சுமி போன்ற தாட்பீகம் பேசும் அன்னையுடன் அவள் தினமும் போராட வேண்டிய நிலை .

அவளின் குணத்தால் நவநாகிரக வளர்ச்சிக்கு பேர்போன மும்பையில் தனித்து தெரிந்தாள் . நண்பர்கள் என்று எவருமே இல்லை . நிஸ்வந்த் வழிய வந்து பேசவும் முதலில் தயங்கினாலும் அவனை மீறி அவனிடம் வெளிப்பட்ட அக்கரையில் தனது தந்தையை கண்டாள் . அவனும் கடந்த நாட்களில் அவளை தவிர்ப்பதை உணர்ந்து தவித்து போனாள் . லட்சுமி சொல்வதற்கு முன்பே ரோஹனுடன் அணைத்து பார்ட்டிக்கும் சென்றாள் . எங்கேனும் அவன் தென்படுகிறானா என்று தேடுவாள் அவளின் தேடல் புரிந்த மற்றைய ஜீவன் தன்னை மறைத்து தனக்கான தேடலை அவளின் கண்களில் கள்ள தனத்துடன் ரசிக்கும் .

நிகழ்ச்சி ஆரம்பித்தது . அபிதா நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு போகாமல் தன் போக்கில் வானத்தை பார்த்துக்கொண்டே மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தாள் . அப்பொழுது திடீர் என்று அங்கு பரபரப்பு கூடியது . சிறப்பு விருந்தினர் வருகையையொட்டி அனைவரும் அந்த அரங்கத்தின் வாயிலில் கூடி நின்றிருந்தனர் . யஸ்வந்த்தும் கருப்பு நிற கோர்ட் சுய்ட்டில் கம்பீரமாக இறங்கினான் . அவனை கண்ட பெண்களின் கண்கள் திறந்த வாய் மூடாமல் இருப்பதை கண்டு மனதில் நகைத்துக்கொண்டான் யாஷ் .

அப்பொழுது சுற்றத்தை ஒரு நொடி ஆராய்ந்த யஸ்வந்த்தின் கண்களில் விழுந்தாள் அபிதா . அவளை தூரத்தில் இருந்தே அவனால் அடையாளம் காண முடிந்தது . சிறப்பு விருந்தினர் பற்றிய தகவல் மாணவர்களுக்கு சொல்லி இருக்க வில்லை ஆகையால் அபிதா எதையும் உணராமல் கல்மேடையில் மரத்தின் அடியில் கண்களில் கண்ணீருடன் தனித்து அமர்ந்து இருந்தாள் .

யோசனையுடன் உள்ளே சென்ற யஸ்வந்த் சிறப்பு உரை ஆற்றி ,சில அறிவுரைகள் தொழில் சார்ந்தது பற்றி கூறி இறங்கினான் . நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் அபிதா அங்கு இருக்க முடியாமல் ரோஹனுக்கு அழைத்து காரை கொண்டு வரச்சொன்னாள் .

கார் வந்து நின்றது . ஓட்டுநர் அவளுக்கு அழைப்புவிடுத்து இருந்தார் . அவளும் மெதுவாக நுழைவாயில் நோக்கி நடந்தாள் . சென்று கொண்டு இருந்தவளின் பார்வை பிரகாசமானது . வேக எட்டுக்களுடன் கண்களில் எதிர்பார்ப்புடன் அவனை நெருங்கினாள் .

யஸ்வந்த் ஒரு மணி நேரம் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்காக ஒதுக்கி இருந்தான் . அவன் வெளியே காரின் அருகில் வந்தான் . கார் வாயில்புரத்தை ஒட்டி உள்ளே நின்று இருந்தது அவனை நோக்கி எதிர்பார்ப்புடன் வரும் அபிதாவை கண்டு தயங்கி நின்றான் . அபிதா வேகமாக ஆவலுடன் அவன் எதிரில் வந்துநின்றாள் .

இருவரும் நேராக பார்த்து கொண்டனர் . யாஷ் என்ன நடக்கும் என்று பார்க்கலாம் என்று நின்றான் . அபி யோசனையுடன் அவனின் முகத்தை கண்டாள் . ஆவலுடன் வந்த அவளின் முகம் கூம்பியது . தலையை தொங்க போட்டு இரண்டு எட்டு வாயிலை நோக்கி நடந்தாள் .

யஸ்வந்த்தின் முகம் யோசனைக்கு சென்றது . சட்டென்று நின்று அபிதா திரட்டிய தெம்புடன் யஸ்வந்த்தை நோக்கி மீண்டும் வந்தாள் . யஸ்வந்த்திற்கு மனதில் சுவாரசியம் கூடியது என்ன நடக்கும் என்று ஆவலுடன் அவளை பார்த்தான் .

அபிதா அருகினில் சென்று "நீங்க யஸ்வந்த் தான ? " என்று கேட்டாள் .

யஸ்வந்த்தின் புருவங்கள் ஆச்சர்யத்தில் உச்சியை தொட்டன . அவர்களின் குடும்பத்தாரை தவிர்த்து எவராழும் இருவரையும் சரியாக அடையாளம் காண இயலாது . ஒரு சில முறை மட்டுமே பார்த்த நிஷ்வ்ந்த்தை சரியாக அடையாளம் கண்டுகொண்டவளை கண்டு ஆச்சர்யமுற்றான் .

"எஸ் ஆம் யஸ்வந்த் " ஏதும் தெரியாதது போல் பதில் கூறினான் .

"நிஸ்வந்த் வரலையா ? "என்று கேட்டவளை பார்த்து யஸ்வந்த்திற்கு சகலமும் விளங்கியது . 'நிஷுவின் பூனைக்குட்டிக்கு தயிரியம் வந்திருச்சு போலவே ...எல்லாம் காதல் படுத்தும் பாடு ஹான் ' என்று மனதில் எண்ணிக்கொண்டான் .

"உங்களுக்கு நிஷுவ தெரியுமா ? " அறியாப்பிள்ளை போல் கேக்கும் யாஷை என்ன செய்யலாம் .

"தி...தெரியும் அவர் நான் கூப்பிட்டா எடுக்க மாட்டீங்கிறார் நீங்க ஒரே ஒரு தடவை அவருக்கு உங்க நம்பர்ல இருந்து கூப்பி கூப்பிட முடியுமா ? " அபிதாவின் கண்கள் இறைஞ்சின . சரியாக அப்பொழுது அபிதாவை தாண்டி வாயிலை நோக்கியது யஸ்வந்த்தின் விழிகள் .

வாயிலுக்கு முதுகு காட்டி நிற்கும் அபிதா எதையும் உணரவில்லை . தலை குனிந்து திக்கி திக்கி கேட்டிருந்தாள் . யஸ்வந்த்திடம் பதில் இல்லாததால் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை அவன் பார்வை சென்ற திசை நோக்கி திரும்பியது .

என்ன நடந்தது என்று உணர்வதற்குள் அழுகையுடன் வாயிலில் நின்றிருந்தவனின் கைகளில் சரண் புகுந்திருந்தாள் அபிதா .
Waiting for the next epi
 

saaral

Well-known member
Kandipaga tholigale enaku intha kathaiku siru avagasam thevai padugirathu nichayam intha kathayudan ungalai santhipen .....ithan idaiyil oru mulu kathai yah ore naalil Koduka Enni irukiren atharkum ungal atharavai kodungal ......
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top