JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஒரு புன்னகைப் பூவே - அத்தியாயம் 5.

revathyrey04

New member
புன்னகை 5 :

“அப்பறம் அண்ணா, உங்க ஆளு எப்பவோ ஊருக்கு போய்ட்டா, இந்த தடவை ஆச்சும் வாங்க” என்று தொலைபேசியை அணைத்தாள்.

தங்கை தொலைபேசியை அணைத்தவுடன் அவனின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது. அதில் சுகமாய் தொலைந்தான் தன் அத்தை மகளின் நினைவில். இந்நேரம் என்னை நியாபகம் இருக்குமா இல்ல மறந்துருப்பாளா? தன் நண்பர்களுல் சிலர் தன் அத்தை அல்லது மாமன் மகளை காதலிக்கிறேன் என்று சொல்லி கேட்டிருக்கிறானே. அப்பொழுது எல்லாம் கிண்டல் பண்ணினான்.

“அதெல்லாம் ஓல்டு ஸ்டைல் டா, அது என்ன எப்போ பாரு ஒரு அத்தை மகள் இருந்தா அவள தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணனுமா என்ன? அப்ப மத்த ஃபிகர் எல்லாம் கோச்சுக்க மாட்டாங்க? அப்பறம் நம்ம லைஃப் ஒரு ஷார்ட் சர்கில்லையே முடிஞ்சிடும். அப்டியே கலர் கலரா நாலு ஃபிகர பார்த்தோமா சைட் அடிச்சோமா அதுல ஒன்ன மட்டும் கரெக்ட் பண்ணிட்டு மேரேஜ் பண்ணனும் டா, அத விட்டுட்டு டைம் வேஸ்ட் டா” என்று சொல்லி விடுவான். அவன் நண்பர்கள் கூட “நீயும் ஒரு நாள் இப்டி,மச்சான் ஐ ஆம் இன் லவ் வித் மை கஸின் டா னுட்டு சொல்லும் போது பார்த்துக்கிறோம்” என்று சொல்லி ஏகத்துக்கும் சாபம் விட்டார்கள். பின்னே அவர்களின் லவ்வை எல்லாம் கிண்டல் செய்தால்?

அவர்கள் விட்ட சாபம் தானோ என்னவோ நம்ம ராசுவும் காதலில் விழுந்து விட்டான் ஒற்றை பார்வையில். ஆனாலும் கிட்டத் தட்ட மூன்று வருடங்கள் அவள் முன்னால் செல்லாமல் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறான். எங்கே நண்பர்களிடம் சொன்னால் கிண்டலில் இறங்கி விடுவார்கள் என்று சொல்லாமல் மறைத்து விட்டான். “மாமன் வரேன்டி சீக்கிரமே என் அத்தை மகளே, வந்து தூக்கிட்டு போரேன் எல்லாருக்கும் முன்னாடி முழு உரிமையோட”. என டூயெட் பாட சென்று விட்டான்.


மூன்று வருடங்களுக்கு முன்னால் தன் தங்கையின் வற்புறுத்தலிற்கு இணங்க மதுரைக்கு சென்றிருந்தான். மதுரையில் தான் பாட்டி வீடும் உள்ளது. சரி இரண்டு நாள் தங்கி விடலாம் என்ற எண்ணத்தில் சென்றான். காரில் பயணம் செய்ததன் பயன் எட்டு மணி நேர பயணம் ஆறு மணி நேரத்தில் சனிக்கிழமை காலை நான்கு மணி அளவில் சித்தி கலையரசியின் இல்லத்தை அடைந்தான். வைஷூ தன் அன்பு அண்ணன் தான் சொன்னதிற்காகவே வந்ததினால் ஏகத்துக்கும் மகிழ்ந்தவள் அவனை விட்டு நகரவே இல்லை.


பயண கலைப்பு தீர தனக்காக என இங்கு அமைக்கப்பட்ட அறையில் தூங்கி எழுந்தவன் காலை பத்து மணி அளவில் வான நிற டீசர்ட் கருப்பு நிற ட்ராக் என மாடியில் இருந்து வேகமாக இறங்கியதால் முன் நெற்றியில் விழுந்த சிகையை அழகாக கோதியபடி இறங்கி வந்தான். “குட் மார்னிங் அம்மா, குட் மார்னிங் சித்தப்பா, இன்னும் அந்த வாலு எழுந்திருக்கலையா” என்று கேட்டவாறு டைனிங் ஹாலில் நாற்காலியை இழுத்து போட்டவாரு உட்கார போனான்.


“அண்ணாாாா” என்று அந்த வீடே அதிரும் படி ஓடி வந்தாள் வைஷூ. “ஹே குட்டிமா பார்த்து டா” என தன்னை நோக்கி ஓடி வந்த வைஷூவை தட்டாமாலை சுற்றி நெற்றியில் இதழ் பதித்தான். இப்பொழுது தான் தன்னுடைய முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பை, அதுவும் நல்ல மதிப்பெண் எடுத்திருந்ததால் மதுரையில் படித்துக் கொண்டிருக்கும் சுட்டிப் பெண்.

தன் அண்ணனை பார்த்தால் மட்டுமே இவ்வாறு என்று தெரிந்ததினால் அவர்களின் பாச போராட்டற்குள் நுழையாமல் மன நிறைவோடு பார்த்தனர் கலையரசி மற்றும் அவரின் கணவர்..

என்ன தான் தன் அக்காவின் மகனாக இருந்தாலும் கலையரசியின் மூத்த மகன் தான். அவனும் அது போல் தான். “போதும் போதும் வந்து சாப்டுங்க” என்றபடி தன் மகனை பார்த்து பார்த்து கவனித்தார். அவனோ ஒரு படி மேல போய் தன் தங்கைக்கு ஊட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

“அண்ணா இன்னைக்கு காலேஜ் லீவ் தான், வெளிய போவோமா, அப்டியே பாட்டி வீட்டிற்கும் போய்டு ஜாலியா சுத்திட்டு வரலாம்” என்று முகத்தை பாவம் போல் வைத்து கேட்டும் அவளின் அன்பு அண்ணன் வேண்டாம் என்றா சொல்வான்.

“உன் கூட டூ டேஸ் டைம் ஸ்பெண்ட் பண்ண தான் என்னோட இம்பார்டண்ட் வொர்க் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கேன். தீஸ் டூ டேஸ் இஸ் யுவர்ஸ் டா” நீ போய் ரெடி அகிட்டு வா” என்று தன் அறைக்குள் சென்று வெளியே செல்வதற்கு ஏற்றவாரு கிளம்பி பத்தே நிமிடங்களில் இறங்கி வந்தான்.

அண்ணனும் தங்கையும் சேர்ந்து முதலில் மாலிற்கு சென்றனர். இன்று பள்ளி கல்லூரிகளுக்கு பெரும்பாலும் விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதியது. தன் அண்ணன் உடன் வரும் சந்தோஷத்துடன் அவனின் கையை இறுக பற்றிய படி சுற்றி கொண்டிருந்தாள்.

கேம் விளையாட என ஸ்மாஷ் ஜோனிற்று சென்றனர். சிறு குழந்தை என ஆர்ப்பாட்டம் செய்து விளையாடிய தங்கையை இவன் ரசித்துக் கொண்டிருக்க வேறு இரு கண்களும் விழிகளாலே இவளை தழுவி கொண்டிருந்தது.


மாலில் கேம் ஜோனிற்கு சென்று கிட்டத் தட்ட ஒரு மணி நேரமாக ஆசை தீர விளையாடி விட்டு கடைசி தளத்தில் இருக்கும் ஃபுட் கோர்ட் சென்றனர். இரண்டு மணி நேரமாக தன்னை ஒருவர் பின் தொடர்கிறார் என்றும் தன்னை அறியாமலே ஒருவரின் கோபத்திற்கு ஆளாகிறோம் என்று அறியாமல் தன் அண்ணனின் கையை பிடித்துக் கொண்டு சுற்றி வந்தாள்.


பின்னர் மாலினை விட்டு வெளியேறி ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு தன் பாட்டியின் வீட்டு வாசலில் காரினை நிறத்தினான். இன்று வருவதாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இருந்ததால் வாசலில் கார் சத்தத்தில் பாட்டி வெளியில் வந்தார். தன் பேரனை திடீரென்று பார்த்தவுடன் மிகவும் மகிழ்ந்து போனார்.


“ஹே ராசு வாப்பா, மூனு மாசம் கழுச்சு இப்ப தா என் நெனப்பு வருதாயா” என்று தன் பேரனின் முகத்தை பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தார். அவனும் பாட்டியின் உயரத்திற்கு ஏற்ப வாகாக முன்னோக்கி குனிந்த படி நின்றிருந்தான் முகன் எல்லாம் கனிவும் பாசமும் பொங்க.

“பாட்டீடீடீ நானும் தான் வந்துருக்கேன், உனக்கு உன் பேரன பாத்தோனே என்னயலாம் கண்ணு தெரியாதே” என பொய் கோபத்தில் முகத்தை திருப்பினாள்.

பாட்டிக்கு தான் தெரியுமே அண்ணன் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள், அவனை கொஞ்சியதற்கு எல்லாம் கோபம் கொள்ள மாட்டாள் என. எனவே அவரும் வம்பளந்தவாறே “அதான் வந்துட்டல்ல உள்ள போயி உன்னோட சிநேகிதிய பாரு, அவள பாக்க தான வந்துருப்ப” என்றார்.

“ஆமா கிழவி ஆமா, எங்க அம்முவ? “ என்றாள். “தோட்டத்துல போயி பாரு” என்று பேரன் பக்கம் திரும்பினார். இதை எல்லாம் ராசுவும் புன்சிரிப்புடன் பார்த்தவாறு பாட்டியின் கையை பிடித்துக் கொண்டு பேசியபடி வீட்டிற்குள் சென்றனர்.

“ஹே அம்மு” என்று ஓடி சென்று ஷாலுவை கட்டிக் கொண்டாள் வைஷூ. இருவரும் ஒரு வயது என்பதாலும், ஷாலினிக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை என்பதாலும் சிறு வயது முதலே நெருங்கிய தோழிகளாகவே பழகினர். அதுவும் இருவரும் சேர்ந்தால் அந்த இடம் அவ்வளவு அல்லோல் படும். குறும்பில் இருவரும் ஒருவரை ஒருவர் சலைத்தவர்கள் இல்லை.

“ஹே வாடி, இன்னைக்கு வரேனு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல, காலேஜ் எல்லாம் எப்டி போகுது” என்றவாறு சலசலத்துக் கொண்டு இருந்தனர். ஷாலினியும் தற்போது தான் தனது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறாள்.

இருவரும் அடிக்கடி வாட்ஸப், வீடியோ கால் என பேசினாலும் நேரில் பேசிவது போல் வரும்? தன் நண்பர்கள், கல்லூரியில் நடந்தது என இரண்டு மணி நேரமாக வாயாடிக் கொண்டிருந்தார்கள்.

இரவு ஏழு மணியை நெருங்கியும் வராத தங்கையை அழைத்து செல்ல தோட்டத்திற்கு வந்தான் ராசு. அவனுக்கும் ஷாலினி வந்திருப்பது தெரியும். போகும் போது வருவாள்ல அப்போ சொல்லிக் கொல்லலாம் என்று தான் நினைத்தான்.

இன்னும் இருவரும் வரும் சுவடே தெரியவில்லை என்று தான் இங்கு வந்தான். தோட்டத்தை சுற்றிப் பார்த்தவாறு வந்தவனிற்கு தங்கையின் பேச்சுக் குரலும் அதை தொடர்ந்து வந்த சிரிப்பு சத்ததிலும் பார்வையை திருப்பினான். அப்பொழுது தான் இருள் லேசாக படர ஆரம்பித்திருக்க தோட்ட விளக்கு வெளிச்சத்தில் அதிக வேலைப்பாடு அல்லாத வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற காட்டன் சுடிதாரும், தலையில் முல்லை பூ சூடி, நெற்றியில் விழுந்த சிறு முடி கற்றையை காதோதரம் ஒதுக்கிய படி கண்களில் குறும்பு புன்னகையுடன் வைஷூவிடம் பேசிக் கொண்டிருக்கும் ஷாலுவை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.

இவன் நின்ற இடத்தில் சிறு வெளிச்சம் பரவியதால் சட்டென்று மரத்தின் பின் மறைந்து கொண்டான். சிறிது நேரம் பார்த்து விட்டு தங்கையின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பினான்.

“வைஷூ ஆம் இன் கார்டன் ஒன்லி, பட் இப்போ சட்டுனு திரும்பி பார்க்காத, ஒரு டென் மினிட்ஸ் அப்புறம் நான் இங்க இருந்து வீட்டுக்குள்ள போய்டு நான் கார்ல வெய்ட் பண்றேன். இப்ப ரீசன் கேக்காத போரப்போ சொல்றேன்” என அனுப்பினான்.


தன் அலைபேசியில் மெசேஜ் வந்ததை எடுத்து படித்தவள் குழப்பத்தினூடே ஒரு நிமிடம் அமர்ந்தவள் விஷம சிரிப்புடன் “ஓ ஹோ கத அப்டி போகுதா “ என்றவாறு ஷாலினியின் பேச்சில் கவனமானாள்.


சிறிது நேர பேச்சிற்கு பின் தன் அண்ணன் சொன்னவாறு “சரி டி நாங்க கிளம்புறோம். அண்ணா ரொம்ப நேரம் வெய்ட் பண்றாங்க” என்று கூறி அவளை பார்த்தாள். அவளின் எதிர் பார்ப்பு பொய்யாக்காமல் அவளின் கண்களில் சன்னமான ஒளியும் தோன்றி சடுதியில் மறைந்தது.

இவர்கள் இருவரும் நெருங்கி பழகி இருந்தாலும் அவளின் அண்ணன் மேல் உள்ள ஆசையை சொல்லவில்லை. அவளே இப்போது தானே தன் மனதினை சிறு காலமாக தெரிந்திருக்கிறாள்.

மற்றும் அவள் அண்ணனின் மனதும் தெரியாதே.


இருவரும் தோட்டத்தை விட்டு பேசியபடி வீட்டிற்குள் வந்தனர். “சரி பாட்டி, நாங்க கிளம்புறோம்” என்று நகர்ந்தாள். ஷாலினியும் வீட்டை சுற்றி பார்வையை ஓட்டினாள். அவன் தான் காதல் மன்னனாச்சே. சொன்னபடி காரில் தான் இருந்தான்.

“ஹே அண்ணா எதுக்கு மெசேஜ் பண்ணிட்டு காருக்கு வந்துட்டீங்க” என்று காரில் ஏறி தன் பாட்டியின் வீட்டை விட்டு வெளியேறியதும் அண்ணனை பிடித்துக் கொண்டாள். அவனும் கள்ள சிரிப்புடன் “ஹான், உன் ஃப்ரண்ட உனக்கு அண்ணி ஆக்கனும்னு தான்” என்று தங்கையின் புறம் திரும்பி கண்சிமிட்டி சிரித்தான்.

---------------------------------------------------------

தீக்ஷா பேசி முடித்ததும் “இனி என் பக்கத்தில தான இருக்க போற, உன்ன அப்ப கவனிச்சுக்கிறேன் டி மை பேபி” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

அதன் பிறகு பைனல் ரௌண்ட் டெக்னிக்கல் நடைபெற்றது. இந்த சுற்று தனியாக தான் நடைபெறும். ஒவ்வொரு மாணவர்களின் புத்திக் கூர்மையையும், அவர்களின் இன்டராக்ஷன், செயல் என ஒவ்வொன்றாக மானிட்டர் பன்னினான். தீக்ஷாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவனுள் பதிந்து கொண்டிருந்தது. இன்டர்வியு முடிந்து அனைவரும் வெளியேறினர் ADS group of company staffs.

“ஒரு வழியா இன்டர்வியு முடிஞ்சிருச்சு, எப்டி டி பன்னுனீங்க இன்டர்வியு எல்லாம்” என்று தோழிகளிடம் கேட்டாள் யாழினி.

“ஹம் பன்னிருக்கோம் டி, ரிசல்ட் வரட்டும் பாக்கலாம்” என்றதோடு முடித்தாள் தீக்ஷா.

“சரி டி காலேஜ் முடிய ஜஸ்ட் டூ மன்த்ஸ் தான் இருக்கு. பைனல் எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் ஒரு ட்ரிப் போடலாமா” என்று ஆரம்பித்தால் யாழினி. இனி யார் யார் எங்கே இருப்போமோ, இதே போல் நினைத்த நேரம் பார்க்க முடியுமா என்று யோசித்து தான் சொன்னாள்.

“சரி டி, வீட்ல கேப்போம், ஒரு டூ ஆர் த்ரி டேஸ் மாதிரி பாப்போம், நா டாட் ட கேட்டு அரென்ஜ் பண்ண முடியுமானு சொல்றேன்” என்றாள் தீக்ஷா.


--------------------------------------------------------

கேம்பஸ் இன்டர்வியு முடிவு அடுத்த ஒரு வாரத்தில் அறிவித்தனர். இன்டர்வியு முடிந்து கல்லூரியில் இருந்து விடை பெறும் பொழுது ஒரு வாரத்தில் முடிவு கல்லூரிக்கு அறிவிக்கப்படுவதாகவும், அதன் பிறகு வேலையில் சேருவதற்கான ஆஃபர் லெட்டர் மற்றும் மற்ற தகவல்கள் மாணவர்களுக்கு ஃபார்மர் மெயில் அனுப்புவதாகவும், கூறியிருந்தனர் ஆதியின் கம்பெணி ஹச்.ஆர்(HR) டிபார்ட்மன்ட். அதன்படி முடிவுகள் மட்டும் முதலில் அறிவிக்கப்பட்டது.


“எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்.”


பூக்கும்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top