JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கயல் விழியால் சிறை பிடித்தாள் டீஸர்

❤️கயல் விழியால் சிறை பிடித்தாள்❤️டீஸர் 1

அப்போது அந்த நட்சத்திர ஹோட்டலின் லிஃப்ட் மூன்றாவது தளத்தை எட்டி இருக்க..

ஜனனியின் இதயம் தாறு மாறாக துடிக்க ஆரம்பித்தது. அந்த அறையின் வாயிலை எட்டி இருந்தவள் மனம் ஒரு நிமிடம் பயத்தில் உதறியது. பேசாமல் திரும்பிச் சென்று விடுவோமா என்று மனம் தடுமாற.. அடுத்த நிமிடமே அவள் குடும்ப சூழ்நிலை நினைவு வர.. அவள் இதயம் மறத்துப் போனது .

இல்லை, இதில் எந்த தவறும் இல்லை என்று மனதுக்குள் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டவள், இப்போது எனது ஒரே குறிக்கோள் அந்த கவின் என்ற இளைஞன் என்னைப் பார்த்த உடன் மயங்கச் செய்ய வேண்டும். அவன் என்னைப் பார்த்த நொடியில் காதல் வயப்பட வைக்க வேண்டும்.

தோற்றத்தால் மட்டும் அல்லாது அவளின் கனிவான பேச்சில்.. இந்த ஒரே வாய்ப்பில் அவனை வீழ்த்தி விட வேண்டும். என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் தன் வறண்டு போன உதடுகளை தன் கைப்பையில் வைத்து இருந்த லிப் பாம் கொண்டு குளுமையாக்கியவள் அந்த அறை கதவை மென்மையாக தட்டினாள்.

உள்ளே நுழைந்த ஜனனி அந்த அறையை பார்வை இட.. அந்த அறையில் டேபிள் சேர் இருக்க ஓர் ஆண் மகன் மட்டும் அந்த அறையில் இருந்தான்.

அவனைப் பார்த்த ஜனனி சற்று அதிர்ந்து தான் போனாள். விஜி அந்த கவினைப் பற்றி சொன்ன போது.. வாய் பேச முடியாத இளைஞன். அவனுக்கு ஆதரவாக வாழ வேண்டும் என்று சொன்னதால் ஜனனியின் கற்பனையில் ஒரு சாதுவாக அவள் அவனை உருவகப் படுத்தி இருக்க.. அங்கு நின்றதோ ஆறு அடிக்கு உயர்ந்து.. பரந்து விரிந்திருந்த தோள்களைக் கொண்டு.. ஊளைச் சதையே சற்றும் இல்லாத ஒரு கம்பீரமான ஆடவன்.

ஜனனிக்கோ அவனைப் பார்த்த நொடியில் உள்ளுக்குள் லேசாக உதறத் தான் தொடங்கி இருந்தது. இருந்தும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள், தன் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டு “குட் மார்னிங் சார்!!.. இன்டர்வியூ க்கு வந்து இருக்கேன்” என்றாள்.

அப்போது ஜனனிக்கு விஜி சொன்ன வார்த்தைகள் நினைவு வர.. தன் முகத்தில் மென் புன்னகையை படற விட்டுக் கொண்டாள். அந்த மலர்ச்சி அவள் முகத்தில் வசீகரத்தை கூட்டத்தான் செய்து இருந்தது.

அந்த கவின் அவளையே தான் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“என்ன பார்வைடா சாமி இது..” என்று அவள் அவனின் காந்தப் பார்வையைப் பொறுக்க முடியாமல் அவள் மனதுக்குள் புலம்ப..

சும்மாவே இப்படி பார்க்கிறான்.. இதுல விஜி சொன்ன மாதிரி ஒரு ரொமாண்டிக் லூக் எல்லாம் வுட்டா என்ன ஆகிறது.. என்று எண்ணியவள் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

“வாயில என்ன கொழுக்கட்டையா வச்சு இருக்கான்!!.. உட்காருன்னு சொல்லலாம் ல”.. என்று அவள் மைண்ட் வாய்ஸ்ஸில் புலம்ப..

“அட ஆமால்ல.. அவரால தான் வாய் பேச முடியாதே” என்பது சட்டென நினைவு வர

அவள் எண்ணம் புரிந்தவனாய்.. அவன் இருக்கையில் அமர்ந்து கொண்டவன் அவளையும் உட்காறும்படி கை அசைத்தான்.

ஜனனியும் அமர்ந்து கொள்ள.. அவளுக்கு நினைவு வந்ததோ வாலி பட அஜித் தான். அந்த படத்தில் எப்படி அஜித் சூயிங் கம்மை மென்று கொண்டே தனக்கு வாய் பேச வராது என்பதைக் காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பாரோ.. அப்படித் தான் அந்த கவினும் தன் சைகையாலே அவளை பேச வைத்து இருந்தான்.

சார் நான் சென்னை கல்லூரியில் நர்சிங் முடிச்சிருக்கேன். சைன் லாங்வேஜ் கோர்ஸ் கூட முடிச்சிருக்கேன். ஐ கேன் ஈசிலி கம்யூனிகேட் வித் யூ. நான் உங்களுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டாகவும் லைஃப் பார்ட்னராகவும் இருப்பேன். உங்க முகத்துல இருக்க இறுக்கம் தளர்ந்து, புன்னகை பூக்க வைக்கிறது என் பொறுப்பு என்று மெல்லிய புன்னகை பூக்க கூறத் தொடங்கினாள்.

அவளது ஒவ்வொரு வார்த்தையையும், அவளது ஒவ்வொரு அசைவையும் அவன் விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க..

ஜனனிக்குத் தான் மூச்சு முட்டியது. அவன் குறுகுறுக்கும் பார்வையை இன்னும் எவ்வளவு நேரம் சகிக்க வேண்டுமோ.. எப்போதுடா வெளியே போவோம் என்று இருந்தது.

“ ஏ லூசு.. இதுக்கே இப்படி சொல்றியே.. இவனோட இந்த பார்வையை கொஞ்ச நேரம் கூட பொறுக்க முடியவில்லைன்னா இவனை எப்படி வாழ்க்கை முழுக்க சகிச்சிக்க முடியும்” என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்க..

கொஞ்சம் கஷ்டம்தான்.. ஆனா கோடீஸ்வரன் ஆச்சே!!.. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். என்று எண்ண.. அப்போது

“ஹவ்??” என்று ஒரு வார்த்தை மட்டும் அவள் காதில் விழ-. யாரும் புதிதாக அந்த அறைக்குள் வந்து விட்டார்களா என்று அவள் தலை நிமிர்த்தி சுற்றி பார்க்க, அங்கு யாரும் இல்லை..

“ம்.. சொல்லு எப்படி என் முகத்துல சிரிப்பை வர வைப்ப??என்று அவள் எதிரில் அமர்ந்து இருந்தவன் அதட்டிக் கேட்க..

ஜனனியின் கண்கள் விரிந்து கொள்ள.. “சார் உங்களால பேச முடியுமா??.. அப்ப நீங்க கவின் இல்லையா??”.. என்று ஜனனி அதிர்ச்சியுடன் கேட்க..

“நான் கவின் இல்ல!!.. பட் ஐ ஆம் செலக்டிங் ஃபார் ஹிம்!!.. இப்ப சொல்லு நீ என்ன பண்ணி கவின் முகத்துல ஸ்மைல் வர வைப்ப” என்று அவன் கண்கள் இப்போதும் அவள் உதடுகளையும் அவள் கண்களையும் மட்டுமே குறுகுறுவென பார்த்து இருக்க..

ஜனனிக்கோ கோபம் தலைக்கு ஏறியது. இவன் தான் கவின் என்று அவன் பார்வையைப் பொருத்துக் கொண்டவளுக்கு அதற்கு மேல் சகிக்க முடியாமல் போனது.

“மிஸ்டர் நான் அதை உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் கவின் சாரை நேரடியாக சந்திக்கும் போது சொல்லிக்கிறேன். திஸ் இஸ் நாட் ஜாப் இன்டர்வியூ. இது ரொம்ப பெர்சனல் கொஸ்டின்”.. என்று அவள் முடிக்க..

“மிஸ் ஜனனி.. எனக்கு எல்லா உரிமையும் கொடுக்கப்பட்டு தான்.. நான் இந்த சீட்ல உட்கார்ந்து இருக்கேன். இந்த நேர்முக தேர்வுல இங்க நான் எடுக்குற முடிவு தான் ஃபைனல் டெசிஷன்.

“ம்.. சொல்லு.. என் மூடை மாத்தி.. ஐ மீன் கவின் மூடை மாத்தி ஸ்மைல் பண்ண வைப்பேன்னு சொன்னியே.. அப்படி என்ன பண்ணுவ??” என்று அவன் அதிகாரமாக கேட்க..

ஜனனிக்கோ அத்தனை பொறுமையும் போய் இருந்தது. “ம்.. உன்னை மாதிரி கொடூரமாக முகத்தை வச்சிருந்தா.. கட்டிப் பிடிச்சு ஒரு லிப் லாக் கிஸ் கொடுத்து அவரு மூடை மாற்றுவேன் போதுமா!!”.. என்று ஜனனி பொறுக்க முடியாமல் பதில் கொடுக்க..

அந்த இளைஞன் முகமே அவள் பதிலில் சற்று அதிர்ந்து தான் போனது.

“திஸ் இஸ் டூ மச்!!..”

“எது சார் டூ மச்!!.. ஒரு மேரேஜ் டிஸ்கஷனுக்கு மாப்பிள்ளை வராம.. வெறும் மேனேஜரை விட்டிருக்காங்களே.. இது எப்படிப்பட்ட ஃபேமிலியாக இருக்கும்.?”

“ஹேய் லிசன்!!..

கவினுக்கு பேச முடியாததால் தான் நான் இன்டர்வியூ நடத்துறேன். இப்போ உன்னால நான் கேட்கிற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல முடியும்னா உட்கார்!!. அதர்வைஸ் யூ கேன் கோ!”.. என்று அவன் கறாராக முடிக்க..

ஜனனி தன்னைக் கட்டுப்படுத்தி அமர்ந்து கொண்டாள். அடுத்த இருபது நிமிடம் அந்த இளைஞன் அவள் நிதி நிலைமை, எதற்காக இந்த திருமணம் என்று பல கேள்விகளைக் கேட்டு அவள் பதிலையும் பெற்று இருந்தான்.

அவன் கேள்விகள் பொதுப்படையாக இருக்க.. ஜனனியும் இந்த தடவை பொறுமையாகவே பதில் சொல்லி முடித்தாள்.

அவள் ஃபைலைத் திருப்பிக் கொடுத்தவன் “உங்கள் ஆர்வத்திற்கு நன்றி ஜனனி.. பட் ஐ ஆம் சாரி நீங்க எங்க எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இல்லை.” என்று அவன் முடிக்க..

“வாட்!!.. என்ன சார் சொல்றீங்க!!..என் கிட்ட என்ன குறை!!.. அதுவும் இல்லாம நீங்க வெறும் ஒரு மீடியேட்டர் தானே. கவின் சார் என்னைப் பார்த்து பிடிக்கலைனு சொல்லட்டும்.. அப்ப நான் போறேன்.” என்று அவள் அதிகாரமாய் அமர்ந்து கொள்ள..

சட்டென சிரித்தவன்.. “ஏய் உன்னை வெளியே தூக்கி எறிய எனக்கு ரெண்டு நிமிஷம் ஆகாது. பட். இருந்தாலும் நான் ஏன் உன்னை ரிஜெக்ட் பண்ணேன்னு சொல்றேன் கேளு..

ஃபர்ஸ்ட் பாய்ண்ட் நீ வெளியில் இருந்து உள்ளே வர்றப்ப ஒரு கிளாமர் லூக் வேணும்ன்னு லிப் பாம் போட்ட..

அப்பறம் நான் தான் கவின்னு நினைச்சு.. உன்னோட கண் அசைவுளையும் உதட்டு அசைவுகளையும் கொண்டு நீ என்ன செட்யூஸ் பண்ண பார்த்த.. ஐ மீன் மயக்கப் பார்த்த..

அப்புறம் நான் கொஞ்சம் அசந்து இருந்தா.. எனக்கே லிப் லாக் கொடுத்து இருப்ப..

“ஸோ, உனக்கு கேரக்டர் சரியில்ல போதுமா!!”..
ஜனனிக்கு அவன் சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவளை எரிமலையாக மாற்றி இருந்தது.

“ஹேய் மிஸ்டர் என் கேரக்டர் பத்தி நீ பேசுறியா??.. ஒரு பொண்ணோட கண்ணை மட்டும் பார்த்து பேசாம உன் கண்ணு எங்க எல்லாம் என் மேல போச்சுன்னு எனக்கு தெரியாதா??.. என்று அவள் மனதை மறையாமல் கேட்டு விட..

அவளை மேலும் கீழுமாக பார்த்தவன் “ம் அப்புறம் ஏன் அமைதியா ரசிச்சிகிட்டு இருந்த அப்பவே சொல்லுறதுக்கு என்ன..” என்று அவன் சிறு நக்கலுடன் கேட்க..

“ம்.. ரசிச்சிகிட்டு இருந்தேனா!!.. கொதிச்சிட்டு இருந்தேன்.”.. என்று அவள் பதிலடி கொடுத்தாள்.

“அப்படி தெரியலையே.. பொறிக்குள்ள எலி சரியா மாட்டிகிச்சுன்னு சந்தோசப் பட்ட மாதிரியில தெரிஞ்சது.”.. என்று அவன் கண்கள் அவளை ஆராய்ச்சியாய் பார்த்தன.


*********************
❤️டீஸர் 2❤️
இப்ப சாப்பாடா முக்கியம்!!. என் மொத்த கனவையும் சிதைச்சுட்டு.. நான் நிர்க்கதியா நிற்கிறேன். நீ என்னடான்னா சாப்பிடச் சொல்லிட்டு இருக்க..” என்று அவள் கத்த..

“நிறுத்து டீ!!.. இப்ப ஓமன் வேலை கிடைக்கவில்லைனா என்ன.. உனக்கு தான் வேலை இருக்குல்ல.. மாசம் பிறந்த உடனேயே என் சம்பளமும் வரும்.. இது போதாதா உனக்கு”

“போதாது!!.. எனக்கு பெரிய தொகையாக சம்பாதிக்கனும். அதுக்கு நான் வெளிநாடு போனால் தான் முடியும்.” என்று அவள் அதிலே குறியாய் இருக்க..

பொறுமை இழந்த ஆகாஷ் அவளை தன் கை வளையத்துக்குள் அவளை பிடித்து நிறுத்தினான்.
அவள் கண்களையே பார்த்தவன்.. “ஏன்டி!!.. ஏன் இப்படி காசு காசுன்னு அலைகிற.. உனக்கு வெளிநாடு தானே போகனும்!!.. வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்”

“ஆமா ஈசியா சொல்லிட்டாரு!!.. நீங்க கேட்ட உடனே வேலை கிடைச்சிடும்னு நினைக்கிறீங்களா!!. அது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா??” உங்களுக்கு.அடுத்தவங்க வலி என்னன்னு புரிய மாட்டேங்குது ஆகாஷ்!!’

“யாருக்குடி புரிய மாட்டேங்குது!!.. உனக்கு தான் என் வலி என்னன்னு புரிய மாட்டேங்குது. நீ தான் என்னை அவ்வளவு காயப்படுத்துற.. சரி.. நான் வெளிப்படையாகவே சொல்றேன் என்னால் உன்னைப் பிரிந்து வாழ முடியாது.

என்னால உன்னை எங்கேயாவது அனுப்பிட்டு இங்க சும்மா உட்கார முடியாது. இப்ப கூட நான் உனக்கு கொடுத்த வாக்குக்காக என்னை எவ்வளவு கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா..

உன் லிப்ஸை கிஸ் பண்ணனும்னு என் உதடு துடிக்குது. சிலை போல நிக்கிற உன் பொண்டாட்டியை கட்டிப்பிடிடான்னு என் கைகள் கெஞ்சுது..

நான் உன் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கணும்னு விலகி நின்னு தவிக்கிறேன். இது ஏண்டி உனக்கு புரிய மாட்டேங்குது.

“ம்.. இப்ப புரிஞ்சுடுச்சு.. உங்களுக்கு என்ன தேவைன்னு.. கம் ஆன் லெட்ஸ் டூ இட்”.. என்று அவனை நெருங்கி இருந்தவள் அவனை கட்டித் தழுவிக் கொள்ள..

ஏற்கனவே உணர்ச்சிப் பெருக்கில் இருந்தவனுக்கோ.. அவளின் தொடுகையும் ஸ்பரிசமும் மோகத்தின் உச்சத்துக்கே அழைத்து சென்றது. அவன் கைகளும் அவளைத் தன்னோடு அழுத்தி பிணைத்துக் கொண்டன.

அவளின் நறுமணம் ஒரு புறம் அவனை கிறங்கடிக்க.. அவனின் மொத்த காதலும் தன் கையில் கிடைத்ததாக உணர்ந்தவன் தன் அணைப்பை இறுக்கிக் கொண்டான். அவளின் கழுத்து பகுதியில் பதிந்து இருந்த அவன் இதழ்கள் மெல்ல ஊர்வலம் எடுக்க..

“ஆகாஷ் பிடிச்சிருக்கா”.. என்று அவன் தொடுகையில் குழைந்தவள் அவன் காதருகில் கேட்க..
“ம்.. ரொம்ப.. சொர்க்கமே கிடைச்ச மாதிரி இருக்கு”.. என்று அவன் கிறக்கத்துடன் சொல்ல..

“சரி.. என்ஜாய் பண்ணுங்க.. ஆனா அதுக்கப்புறம் என் வழியில் நீங்க வரக் கூடாது. என் பாதையை தடுக்க கூடாது”..

என்று அவள் முடிக்கும் முன் அவன் மோக நிலை அறுபட.. அவளை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்தான்..

“என்ன டீல் பேசுறியா!!”.. என்று அவன் கண்கள் இப்போது கோபத்தில் ஜொலித்தன.

“ஏன்.. இதுல என்ன தப்பு இருக்கு.. நீ இதுக்காகத் தானே என்னை மிரட்டி கல்யாணம் பண்ண..”

“சீ ஏண்டி இப்படி பேசுற!!.. எனக்குத் தேவை இது இல்ல.. உன் மனசு மட்டும் தான்”

“அப்பா!!.. என்ன நடிப்பு.. இப்ப தான் உங்க லீலைகள் எல்லாம் பார்த்தேனே..”.. என்று அவள் உதடுகளைச் சுளிக்க..

ஆகாஷோ தன் அன்பை இவளிடம் எப்படி நிரூபிப்பது என்று துடித்துப் போனான்.

“இங்க பாரு.. நானா ஒன்னும் உன்னை இப்ப தொடலை.. நீயா தான் ஆரம்பிச்ச, மைண்ட் இட்!!”.. என்றவனுக்கு அவள் மீது இருந்த மோகம் முழுதும் மறைந்து கோபம் மட்டுமே எஞ்சி இருந்தது.
நான் சவுதி போகப் போறேன். நீங்க என்னத் தடுக்கக் கூடாது. அதுக்குப் பதிலா இது ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்”

அவன் கண்கள் கோபத்தில் சிவக்க.. முகமோ இறுகி இருந்தது. “அட்ஜஸ்ட்மென்ட்டா?? வாட் டூ யூ மீன்” என்று அவன் புரியாமல் கேட்க..

என்னால உங்க கிட்ட போராட முடியலை. எனவே நாம ரெண்டு பேரும் அவரவர் தேவையை பூர்த்தி செய்துக்குவோம். என்ன சொல்றீங்க”.. என்றவள் தன் புடவை மாராப்பை கீழே சரிய வீட..

ஆகாஷ் கோபத்தின் உச்சத்துக்கே சென்று இருந்தான். அவள் செயலில் கூசிப் போனவன்.

“சீ.. என்ன மனுஷி டீ நீ.. என்றவன் அவள் முந்தானையை நேராகப் போட்டு விட்டு.. நீ என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா ஜனனி.. என்று அவன் வேதனையுடன் சொல்ல..
ஜனனி சிலையாக மட்டுமே நின்றாள்.

நன்றி.





 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top