Srinithya
Guest
View attachment 312
தலையணை முதல்
மிதியடி வரை
தோழமையாகிப் போனது..
காணாதவரிடத்திலும் கருணை
உண்டாகுது..
சாலையோரப் பூச்செடி கூட
பிருந்தாவனமாகுது..
அன்பெனில் எங்கே கிடைக்கும்
எனக் கேட்டலைந்த காலம் போய்
பொங்கி வரும் புது வெள்ளம் போல்
ஊற்றெடுக்கும் அன்பை
அடக்க வழி தெரியாது
தவித்துக் கிடக்குது மனசு..
தடுமாறிடும் உள்ளமது
உன்னைத் தேடுது..
உன் மடி தஞ்சம் கொண்டால்
மோட்சம் அடையுது..
என்ன செய்தாய் என்னை...
தலைகீழாய் மாறிப் போனேன்...
மடி கொடு இல்லையெனில் மடியவிடு...
தலையணை முதல்
மிதியடி வரை
தோழமையாகிப் போனது..
காணாதவரிடத்திலும் கருணை
உண்டாகுது..
சாலையோரப் பூச்செடி கூட
பிருந்தாவனமாகுது..
அன்பெனில் எங்கே கிடைக்கும்
எனக் கேட்டலைந்த காலம் போய்
பொங்கி வரும் புது வெள்ளம் போல்
ஊற்றெடுக்கும் அன்பை
அடக்க வழி தெரியாது
தவித்துக் கிடக்குது மனசு..
தடுமாறிடும் உள்ளமது
உன்னைத் தேடுது..
உன் மடி தஞ்சம் கொண்டால்
மோட்சம் அடையுது..
என்ன செய்தாய் என்னை...
தலைகீழாய் மாறிப் போனேன்...
மடி கொடு இல்லையெனில் மடியவிடு...