Subageetha
Well-known member
இரண்டு நாட்களாய் மாந்தோப்பில், குருபரன் தங்கி இருக்கிறான். அவனுக்கு தனியே தங்குவதற்கு பயம் போலும். துணைக்காக மேலூரிலிருந்து ராக்காயியை துணைக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறான். உணவு வகையறா எல்லாம்,இருக்கும் மளிகை பொருட்களை கொண்டு ராக்காயியே சமைத்து விடுவதால் இரண்டு வித பசிக்கும் சரியான உணவு.ஒழுங்கான பெற்றோரால் வளர்க்கப்பட்டும் கூட ஏனோ அவனது வளர்ப்பு பொய்த்துப் போய்விட்டது. ராக்காயி குருபரனை விட பன்னிரண்டு வயது மூத்தவள். அவளது தொழில் இதுதான். அவளைப் பொறுத்தவரை இளம் குமரனும், வாலிபத்தை தேடி மீட்டெடுக்க அலையும் வயோதிகனும் ஒன்றுதான். சேர வேண்டியது சேர்ந்துவிட்டால் போதும். இன்று வரை அவளது குடும்பம் அவளது இந்த தொழிலை வைத்து தான் ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டிலிருக்கும் மற்றவர்களின் வயிறு வாடாமல் இருப்பதற்கு அவள் இந்த சமூக சேவையை செய்தாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு.நிறைய பெண்மணிகளின் நிலை குடும்பத்திற்காக என்று தியாகம் செய்வதிலேயே பாதை மாறி விடுகிறது. பலருக்கு சரியான குடும்ப வாழ்வு அமைவதில்லை. இன்னும் சிலருக்கு குடும்ப வாழ்வே அமைவதில்லை... அவர்களைக் குற்றம் சொல்லி பயனில்லை. ராக்காயி வீட்டில் கூட சுற்றியிருக்கும் விவசாய நிலங்களில் வேலைசெய்து நேர்மையான வழியில் வாழ ஒத்துழைப்பார்களேயானால், அவளுக்கு ஏன் இந்த விதி? வீட்டில் தடிமாடு போல ஆண்களும் உண்டு. அவர்களுக்கு உடம்பு நோகாமல் செய்யும் வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டின் பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். அவர்களுக்கு இதில் கூச்சமும் வருத்தமும் எதுவுமில்லை. முதலில் ராக்காயியை சினிமா தொழிலில் இறக்கி, பணம் பண்ணுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று தான் பார்த்தார்கள். ஆனால், ராக்காயியின் சதைக்கு இருந்த மவுசு, அவளுக்கு இல்லை. பெயர், நடை உடை பாவனை மாற்றி இரண்டொரு சினிமாக்களில் துணை நடிகையாக வலம் வந்தவள், தொடர்ந்து வாய்ப்புகள் ஏதும் சரியாக அமையாததால், சொந்த ஊருக்கே வந்து விட்டாள். அதற்குப் பிறகுதான், வீட்டின் ஆண்கள் ஒரு முறை சதையை விற்றால் என்ன,ஓராயிரம் முறை சதையை விற்றால் என்ன என்று முடிவெடுத்து அவளை இந்த தொழிலிலேயே இறக்கி விட்டார்கள். ராக்காயி இந்த தொழிலில் இறங்கும் பொழுது அவளுக்கு வயது பதினேழு. நிறைய விதமான ஆண்களைப் பார்த்து விட்டாள் அவள். அவள் சினிமாவில் வாய்ப்பு தேடும் போதே அவளது தாயார் அழுது புரண்டு பார்த்துவிட்டார். அவரது குரல் அம்பலம் ஏறவில்லை.
அண்ணன்களின் முடிவுக்கு கீழ்ப்படிந்து ஆக வேண்டிய அவலநிலை ராக்காயிக்கு. இவள் சினிமாவில் சேரும் பொழுதே அவள் அண்ணன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டிருந்தது. ஒன்றுக்கும் உதவாத அவளது இரண்டு அண்ணன்களின் குடும்பத்தையும் சேர்த்து சுமக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் ராக்காயி. அவரவருக்கு திருமணமாகி குடும்பம் கூட இருக்கிறது. அவர்கள் தத்தம் மனையாளை இவ்வாறு அனுப்புவார்களா என்றால் அதெல்லாம் முடியாது. அவரவர் மனைவி கற்பு நெறி பிறழாது இருத்தல் வேண்டும். ஒற்றைத் தங்கை என்னவானாலும் சரி தான். அம்மா இறந்த பிறகு வாழ்க்கை பட்ட மரம் தான்.அவள் சீரழிந்த கதை மட்டுமல்ல... இன்னும் இவ்வுலகில் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டு ஏமாந்து நிற்கும் பெண்டிர் ஆயிரம் உண்டு. ஒரு பக்கம் பெண் உரிமைக் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும், இன்னொருபுறம் சூழ்நிலை கைதிகளாய் ஆயுள் தண்டனை பெற்று வெறும் வெற்று உரிமை வார்த்தைகளாய் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு ஆயிரமாயிரம் கதைகளும் உண்டு.அவர்களுக்கு ஒன்று தப்பிப்பதற்கு வாய்ப்பு அமைவதில்லை. இல்லையென்றால் விதியின் முன் தன்னைத்தானே ஒப்புக்கொடுத்து கொள்கிறார்கள். இங்கு குருவுக்கும் கூட ராக்காயியின்
வதனம்தான் பெரிதே தவிர அவள் வயது அல்ல.
இரண்டு நாட்கள் கொட்டமடித்தும் தீராத மோகமும் வேகமும் குருபரனுடையது. அவளை சக்கை போன்று உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவனது இளமை வேகம் அவளுக்கு புரிந்து தான் இருக்கிறது. ஆனால் 'இதெல்லாம் தவறு தம்பி 'என்று சொல்ல வேண்டிய நாக்கு அதை சொல்ல வழி இன்றி மனதிற்குள்ளேயே அந்த வார்த்தைகளை சொல்லிக் கொண்டு ஊமையாகிப் போனது. முப்பதுகளில் இருக்கும் ராக்காயியை பொறுத்தவரை பத்தொன்பது வயது குரு சிறுவனே. அவள் மனமும் ஊமையாய் அழுதது. அவளால் வேறொன்றும் செய்ய முடியாது. ராக்காயி கிடைக்கவில்லை என்றால் இன்னொரு பெண். அவளுக்கு தேவை பணம். அது இவனிடம் தாராளமாகவே கிடைக்கிறது. இரண்டு நாட்களும், தன்னால் முடிந்தவரை அவனை வாடாமல் பார்த்துக்கொண்டாள் ராக்காயி.
பற்றாக்குறைக்கு, குரு சரக்கு பாட்டில்களை வேறு ஒரு வாரத்திற்காக வாங்கி வைத்திருக்கிறான். அவன் ஒரு முடிவோடு தான் இங்கு வந்து குடியிருக்கிறான். யாராலும் தடுக்க முடியாது.
ராகாயி பற்றி நான் இவ்வளவு சொல்கிறேன் என்று கதை போக்கில் புரிந்து கொள்வீர்கள்.
தோப்பிற்குள் நடக்கும் இந்த அலங்கோலம் வீரனுக்கும் தெரியும். முதல் விஷயம் வீரன் கண்டிப்பாக பெரிய இடத்து சமாச்சாரங்களில் தலையிட முடியாது. இன்னொன்று அருணாச்சலம் மிகக் கண்டிப்பாக சொல்லி வைத்திருக்கிறார், குருபரனின் திருவிளையாடல்கள் எந்த நிலையிலும் அன்னபூரணிக்கு தெரியக்கூடாது என்று. இந்நிலையில் வீரன் எவ்வாறு அன்னபூரணியை எதிர் கொள்வான்?
அவன் சங்கடத்துடன் நெளிவதை அன்னபூரணி வேறு விதமாக எடுத்துக் கொண்டாள். எப்பொழுதும் நேராகவே யோசித்துக் கொண்டிருக்கும் அவள் மனம் வீரனுக்கு வேறு ஏதேனும் வீட்டில் பிரச்சினையா என்று யோசித்தது. உங்கள் வீட்டு பிரச்சனையை உங்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வேன் என்று தவித்தது வீரனின் மனம் . அன்னபூரணி தோண்டி கேட்க கேட்க வீரனால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியாமல், 'இளநீர் வெட்டிக்கொண்டாறேன் அம்மா'என்று சென்று விட்டான்.
அவன் பின்னாடியே சென்ற சிவன்,
'என்ன விஷயம் வீரா, உன் முகமே சரியில்லையே, ஏதாச்சும் பிரச்சனையா...' என்று விசாரிக்க, இப்பொழுது உள்ள தோப்பின் நிலவரம் பற்றியும் குருபரனுடன் தங்கி இருக்கும் பெண் பற்றியும் எல்லாவற்றையும் சொல்லி விட்டான் வீரன். குரு ஓரிரு நாட்களாக,வீட்டிற்கு வரவில்லை என்றதுமே சிவனுக்கு சந்தேகம்தான். இங்குதான் தங்கி இருக்கிறான் என்பது நிச்சயமாக தெரிந்திருந்தால் கண்டிப்பாக அன்னபூரணியை கூட்டிக்கொண்டு வந்திருக்க மாட்டார். ஆனால், அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்றது 'எல்லா தோப்புகளையுமே ஒரு பார்வை பார்த்து விட்டு வா 'என்று. கணவர் சொல்வதை என்றுமே மீறி நடக்காத அன்னபூரணி இந்த இடத்திற்கு தான் சென்றாக வேண்டும் என்றால் அன்னபூரணியி டம் வேலை செய்யும் சிவனால் இதை மறுக்க முடியாது.
ஒருவழியாக வீரனிடம் எல்லா தகவல்களையும் கேட்டறிந்த சிவன்,
இப்பொழுது அன்னபூரணியை எவ்வாறு வீட்டிற்கு திரும்ப கூட்டி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அருணாசலத்திற்கு
அழைத்தவர், உள்ளதை உள்ளவாறு சொல்ல, சென்னையில் முக்கிய நபரை சந்திப்பதற்காக சென்றிருந்த அருணாசலத்திற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. 'உடனே குருவுக்கு அழைத்து அன்னபூரணி வந்திருக்கும் தகவலை சொல்லிடு சிவா... மேற்கொண்டு அவனுக்கு தெரியும் என்ன செய்யவேண்டும் என்று 'என பேசி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார். சிவன் நிலைமைதான் மோசமாகிவிட்டது. குருவுக்கு போன் அடித்தால் குருவோ பேசும் நிலையிலேயே இல்லை. ராக்காயி தான் அழைப்பை எடுத்தாள். சிவனிடமிருந்து விஷயத்தை கேட்டு அறிந்து கொண்டவள், தனது சாமான்களை எல்லாம் மூட்டை கட்டி மாடியில் இருக்கும் பழைய சாமான்கள் போடும் டஞ்சன் அறையில் போட்டுவிட்டு, வீட்டு வாயிலில் வந்து அமர்ந்து கொண்டு விட்டாள். தன்னால் முடிந்தது இவ்வளவுதான். தோப்பில் இருந்து வெளியேற கண்டிப்பாய் வழி இல்லை. அப்படி முயன்றால் அன்னபூரணியிடம் சிக்கிக்கொண்டு பதில் சொல்ல வேண்டியது வரும். அதில் திருட்டுத்தனம் நிச்சயமாக வெளிப்படும். அதைவிட இங்கேயே வாசலில் அமர்ந்து கொண்டிருந்தால் சமையல் வேலை செய்ய வந்ததாகவாவது சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தவளாக வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து கொண்டு, அன்னபூரணியையும் சிவனையும், எதிர்நோக்கிக் காத்திருந்தாள். அவளுக்குள் முழுதாக மது அருந்திவிட்டு மட்டையாகி சாய்ந்து இருக்கும் குருவை கண்டால் அன்னபூரணி என்ன நினைப்பாளோ என்ற பயம் வேறு. இதிலெல்லாம் அவள் என்ன செய்ய முடியும்? நல்லவேளை, மேலூர் காரியான ராக்காயியை அன்னபூரணிக்கு தெரியாது.
ஆனால், நடந்ததோ முற்றிலும் வேறு. அன்னபூரணி தோப்பு வீட்டிற்குள் வரும் முன்னரே, ஆடிட்டர் அழைத்து தனது அலுவலகம் வந்து சேருமாறு அழைப்பு விடுக்க, சிவன் 'அன்னபூரணியை நீங்களும் வாங்கம்மா'என்று கூட்டி சென்று விட்டார்.
சிறிதுநேரம் ராக்காயி அன்னபூரணிக்காக காத்திருந்து பார்த்துவிட்டு, அவர்கள் வரவில்லை என்றானதும் பெருமூச்சு விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றவளுக்கு அங்கே முட்ட குடித்து விட்டு மல்லாந்து கிடக்கும் குருவை நினைத்து கோவம் ஒரு புறமும், வருத்தம் ஒருபுறமுமாக. பணம் ஒரு மனிதனை இவ்வளவு சீராழிக்க முடியுமா என்று அவளுக்கு ஆற்றமை. பெருமூச்சு விட்டு நகர்ந்து சென்றாள்.
இன்று எப்படியோ தப்பித்தாகி விட்டது. ஒருவழியாக போதை குருபரனும் அவன் கண்கள் கோவைப் பழம் போல சிவந்து கிடந்தன. இன்னும் ரெண்டு நாள் இங்கேயே தங்கிடு ராக்காயி என்று இளித்து கொண்டு நின்றான் குரு.
உள்ளுக்குள்ளே பயப்பந்து உருள , நடந்தவற்றை சுருக்கமாக சொன்னாள் ராகாயி.
தாடையை சொறிந்து கொண்டவாரே' சரி அப்ப நீ கிளம்பு ' என்றுவிட்டு தனது பாக்கெட்டிலிருந்து ஒரு கட்டு நோட்டை எடுத்து அவள் கையில் அழுத்திவிட்டு தனது சகாக்களுடன் போனில் பேசிக் கொண்டு மாடிக்குச் சென்று விட்டான். ராக்காயி தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து சென்றுவிட்டாள். வழியில் வீரனை பார்த்தவுடன் ராகாயியின் கண்கள் கலங்கின. இதே வீரனை ஒரு காலத்தில் தன் கணவனாகவே நினைத்து இருந்தாள் ராக்காயி. அப்பொழுதெல்லாம் வீரனும் ராக்காயியும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவருக்கும் மனது ஒன்று பட்டாலும் ராக்காயி சினிமாத்துறைக்கு சென்றபிறகு இருவருக்குமான தொடர்பு நிரந்தரமாகவே விட்டுப் போயிற்று. சில காதல் கதைகள் கண்ணீர் கதைகள் தான். வீரன் தேடியது காதல் மனைவியை... நடிகையை இல்லையே... வீரனுக்கு குடும்பம்?
**************
தில்லியில் இருந்து ஐந்தாம் வகுப்பு விடுமுறைக்காக நமது சாதுர்யா தன் அம்மா அப்பாவுடன் ஸ்ரீரங்கம் வந்திருக்கிறாள். முழு இரண்டு மாதங்களுக்கான விடுப்பும், அவளுக்கு இங்கு தான் கழிய போகிறது. அவளது பெற்றோர் அவளை மட்டும் ஸ்ரீரங்கத்தில் விட்டுவிட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிளம்பிவிடுவார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்கள் விடுப்பு முழுவதும் அவள் ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீட்டில் தான் இருந்தாக வேண்டும். அது அவளுக்கு பிடித்த விஷயமும் கூட. திருச்சி,ஸ்ரீரங்கத்தில் இருக்கும் எந்த விஷயமும் நிச்சயம் தில்லியில் இல்லை என்பது அவள் எண்ணம். ஆர்ப்பாட்டங்கள் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எல்லாவற்றையும்விட எப்போதும் உடனிருக்கும் ரங்கன் அங்கு இல்லை.
ரங்கன் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு. நெடுநெடுவென்று ஐந்தரை அடிக்கும் கூடுதலாகவே வளர்ந்து விட்டான். வசீகரப் புன்னகை ஏந்திய உதடுகளுக்கு மேலே மெல்லியதான இளம் மீசை அரும்பு விட்டு இருந்தது அவனுக்கு. அந்த ரோஜா நிற உதடுகள் எப்பொழுதும் கூட இருப்போரையும் சேர்ந்து சிரிக்க அழைக்கும்.
வயலூரில் இருந்து ரேணுகாவும் ரங்கனும் காரை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வர, ரங்கனை பார்த்த வெங்கடேசன் மலைத்து தான் போனார். இந்த வயதில் இவ்வளவு அற்புதமாபிள்ளையா, இன்று அவருக்கு ஆச்சரியம். அவனிடம் பேசிக் கொண்டிருந்த இரண்டு நாட்களில் ரங்கனை பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம். அவனது பொறுமை, நிதானம்,அறிவு கூர்மை,அவரை அவன் பால் ஈர்த்தது.
தங்கையிடம் " ரேணு உன்னோட புள்ள தங்கம், அம்மா கிட்ட சொல்லி திருஷ்டி சுத்தி போட சொல்லு " என்றார். ரங்கனை நினைத்து அவர் மனம் பெருமையில் பூரித்தது.
இரண்டு நாட்களில் வெங்கடேசனும் அவர் மனைவியும் தில்லி சென்றுவிட சாதுர்யா ரங்கனை பிடித்துக் கொண்டு சுற்றளானாள்.
வாழ்நாள் முழுவதும் ரங்கனுடன் அவள் பயணம் தொடர என் பிரார்த்தனைகள்.
மீண்டும் சந்திப்போம்
சுகீ
அண்ணன்களின் முடிவுக்கு கீழ்ப்படிந்து ஆக வேண்டிய அவலநிலை ராக்காயிக்கு. இவள் சினிமாவில் சேரும் பொழுதே அவள் அண்ணன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டிருந்தது. ஒன்றுக்கும் உதவாத அவளது இரண்டு அண்ணன்களின் குடும்பத்தையும் சேர்த்து சுமக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் ராக்காயி. அவரவருக்கு திருமணமாகி குடும்பம் கூட இருக்கிறது. அவர்கள் தத்தம் மனையாளை இவ்வாறு அனுப்புவார்களா என்றால் அதெல்லாம் முடியாது. அவரவர் மனைவி கற்பு நெறி பிறழாது இருத்தல் வேண்டும். ஒற்றைத் தங்கை என்னவானாலும் சரி தான். அம்மா இறந்த பிறகு வாழ்க்கை பட்ட மரம் தான்.அவள் சீரழிந்த கதை மட்டுமல்ல... இன்னும் இவ்வுலகில் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டு ஏமாந்து நிற்கும் பெண்டிர் ஆயிரம் உண்டு. ஒரு பக்கம் பெண் உரிமைக் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும், இன்னொருபுறம் சூழ்நிலை கைதிகளாய் ஆயுள் தண்டனை பெற்று வெறும் வெற்று உரிமை வார்த்தைகளாய் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு ஆயிரமாயிரம் கதைகளும் உண்டு.அவர்களுக்கு ஒன்று தப்பிப்பதற்கு வாய்ப்பு அமைவதில்லை. இல்லையென்றால் விதியின் முன் தன்னைத்தானே ஒப்புக்கொடுத்து கொள்கிறார்கள். இங்கு குருவுக்கும் கூட ராக்காயியின்
வதனம்தான் பெரிதே தவிர அவள் வயது அல்ல.
இரண்டு நாட்கள் கொட்டமடித்தும் தீராத மோகமும் வேகமும் குருபரனுடையது. அவளை சக்கை போன்று உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவனது இளமை வேகம் அவளுக்கு புரிந்து தான் இருக்கிறது. ஆனால் 'இதெல்லாம் தவறு தம்பி 'என்று சொல்ல வேண்டிய நாக்கு அதை சொல்ல வழி இன்றி மனதிற்குள்ளேயே அந்த வார்த்தைகளை சொல்லிக் கொண்டு ஊமையாகிப் போனது. முப்பதுகளில் இருக்கும் ராக்காயியை பொறுத்தவரை பத்தொன்பது வயது குரு சிறுவனே. அவள் மனமும் ஊமையாய் அழுதது. அவளால் வேறொன்றும் செய்ய முடியாது. ராக்காயி கிடைக்கவில்லை என்றால் இன்னொரு பெண். அவளுக்கு தேவை பணம். அது இவனிடம் தாராளமாகவே கிடைக்கிறது. இரண்டு நாட்களும், தன்னால் முடிந்தவரை அவனை வாடாமல் பார்த்துக்கொண்டாள் ராக்காயி.
பற்றாக்குறைக்கு, குரு சரக்கு பாட்டில்களை வேறு ஒரு வாரத்திற்காக வாங்கி வைத்திருக்கிறான். அவன் ஒரு முடிவோடு தான் இங்கு வந்து குடியிருக்கிறான். யாராலும் தடுக்க முடியாது.
ராகாயி பற்றி நான் இவ்வளவு சொல்கிறேன் என்று கதை போக்கில் புரிந்து கொள்வீர்கள்.
தோப்பிற்குள் நடக்கும் இந்த அலங்கோலம் வீரனுக்கும் தெரியும். முதல் விஷயம் வீரன் கண்டிப்பாக பெரிய இடத்து சமாச்சாரங்களில் தலையிட முடியாது. இன்னொன்று அருணாச்சலம் மிகக் கண்டிப்பாக சொல்லி வைத்திருக்கிறார், குருபரனின் திருவிளையாடல்கள் எந்த நிலையிலும் அன்னபூரணிக்கு தெரியக்கூடாது என்று. இந்நிலையில் வீரன் எவ்வாறு அன்னபூரணியை எதிர் கொள்வான்?
அவன் சங்கடத்துடன் நெளிவதை அன்னபூரணி வேறு விதமாக எடுத்துக் கொண்டாள். எப்பொழுதும் நேராகவே யோசித்துக் கொண்டிருக்கும் அவள் மனம் வீரனுக்கு வேறு ஏதேனும் வீட்டில் பிரச்சினையா என்று யோசித்தது. உங்கள் வீட்டு பிரச்சனையை உங்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வேன் என்று தவித்தது வீரனின் மனம் . அன்னபூரணி தோண்டி கேட்க கேட்க வீரனால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியாமல், 'இளநீர் வெட்டிக்கொண்டாறேன் அம்மா'என்று சென்று விட்டான்.
அவன் பின்னாடியே சென்ற சிவன்,
'என்ன விஷயம் வீரா, உன் முகமே சரியில்லையே, ஏதாச்சும் பிரச்சனையா...' என்று விசாரிக்க, இப்பொழுது உள்ள தோப்பின் நிலவரம் பற்றியும் குருபரனுடன் தங்கி இருக்கும் பெண் பற்றியும் எல்லாவற்றையும் சொல்லி விட்டான் வீரன். குரு ஓரிரு நாட்களாக,வீட்டிற்கு வரவில்லை என்றதுமே சிவனுக்கு சந்தேகம்தான். இங்குதான் தங்கி இருக்கிறான் என்பது நிச்சயமாக தெரிந்திருந்தால் கண்டிப்பாக அன்னபூரணியை கூட்டிக்கொண்டு வந்திருக்க மாட்டார். ஆனால், அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்றது 'எல்லா தோப்புகளையுமே ஒரு பார்வை பார்த்து விட்டு வா 'என்று. கணவர் சொல்வதை என்றுமே மீறி நடக்காத அன்னபூரணி இந்த இடத்திற்கு தான் சென்றாக வேண்டும் என்றால் அன்னபூரணியி டம் வேலை செய்யும் சிவனால் இதை மறுக்க முடியாது.
ஒருவழியாக வீரனிடம் எல்லா தகவல்களையும் கேட்டறிந்த சிவன்,
இப்பொழுது அன்னபூரணியை எவ்வாறு வீட்டிற்கு திரும்ப கூட்டி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அருணாசலத்திற்கு
அழைத்தவர், உள்ளதை உள்ளவாறு சொல்ல, சென்னையில் முக்கிய நபரை சந்திப்பதற்காக சென்றிருந்த அருணாசலத்திற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. 'உடனே குருவுக்கு அழைத்து அன்னபூரணி வந்திருக்கும் தகவலை சொல்லிடு சிவா... மேற்கொண்டு அவனுக்கு தெரியும் என்ன செய்யவேண்டும் என்று 'என பேசி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார். சிவன் நிலைமைதான் மோசமாகிவிட்டது. குருவுக்கு போன் அடித்தால் குருவோ பேசும் நிலையிலேயே இல்லை. ராக்காயி தான் அழைப்பை எடுத்தாள். சிவனிடமிருந்து விஷயத்தை கேட்டு அறிந்து கொண்டவள், தனது சாமான்களை எல்லாம் மூட்டை கட்டி மாடியில் இருக்கும் பழைய சாமான்கள் போடும் டஞ்சன் அறையில் போட்டுவிட்டு, வீட்டு வாயிலில் வந்து அமர்ந்து கொண்டு விட்டாள். தன்னால் முடிந்தது இவ்வளவுதான். தோப்பில் இருந்து வெளியேற கண்டிப்பாய் வழி இல்லை. அப்படி முயன்றால் அன்னபூரணியிடம் சிக்கிக்கொண்டு பதில் சொல்ல வேண்டியது வரும். அதில் திருட்டுத்தனம் நிச்சயமாக வெளிப்படும். அதைவிட இங்கேயே வாசலில் அமர்ந்து கொண்டிருந்தால் சமையல் வேலை செய்ய வந்ததாகவாவது சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தவளாக வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து கொண்டு, அன்னபூரணியையும் சிவனையும், எதிர்நோக்கிக் காத்திருந்தாள். அவளுக்குள் முழுதாக மது அருந்திவிட்டு மட்டையாகி சாய்ந்து இருக்கும் குருவை கண்டால் அன்னபூரணி என்ன நினைப்பாளோ என்ற பயம் வேறு. இதிலெல்லாம் அவள் என்ன செய்ய முடியும்? நல்லவேளை, மேலூர் காரியான ராக்காயியை அன்னபூரணிக்கு தெரியாது.
ஆனால், நடந்ததோ முற்றிலும் வேறு. அன்னபூரணி தோப்பு வீட்டிற்குள் வரும் முன்னரே, ஆடிட்டர் அழைத்து தனது அலுவலகம் வந்து சேருமாறு அழைப்பு விடுக்க, சிவன் 'அன்னபூரணியை நீங்களும் வாங்கம்மா'என்று கூட்டி சென்று விட்டார்.
சிறிதுநேரம் ராக்காயி அன்னபூரணிக்காக காத்திருந்து பார்த்துவிட்டு, அவர்கள் வரவில்லை என்றானதும் பெருமூச்சு விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றவளுக்கு அங்கே முட்ட குடித்து விட்டு மல்லாந்து கிடக்கும் குருவை நினைத்து கோவம் ஒரு புறமும், வருத்தம் ஒருபுறமுமாக. பணம் ஒரு மனிதனை இவ்வளவு சீராழிக்க முடியுமா என்று அவளுக்கு ஆற்றமை. பெருமூச்சு விட்டு நகர்ந்து சென்றாள்.
இன்று எப்படியோ தப்பித்தாகி விட்டது. ஒருவழியாக போதை குருபரனும் அவன் கண்கள் கோவைப் பழம் போல சிவந்து கிடந்தன. இன்னும் ரெண்டு நாள் இங்கேயே தங்கிடு ராக்காயி என்று இளித்து கொண்டு நின்றான் குரு.
உள்ளுக்குள்ளே பயப்பந்து உருள , நடந்தவற்றை சுருக்கமாக சொன்னாள் ராகாயி.
தாடையை சொறிந்து கொண்டவாரே' சரி அப்ப நீ கிளம்பு ' என்றுவிட்டு தனது பாக்கெட்டிலிருந்து ஒரு கட்டு நோட்டை எடுத்து அவள் கையில் அழுத்திவிட்டு தனது சகாக்களுடன் போனில் பேசிக் கொண்டு மாடிக்குச் சென்று விட்டான். ராக்காயி தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து சென்றுவிட்டாள். வழியில் வீரனை பார்த்தவுடன் ராகாயியின் கண்கள் கலங்கின. இதே வீரனை ஒரு காலத்தில் தன் கணவனாகவே நினைத்து இருந்தாள் ராக்காயி. அப்பொழுதெல்லாம் வீரனும் ராக்காயியும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவருக்கும் மனது ஒன்று பட்டாலும் ராக்காயி சினிமாத்துறைக்கு சென்றபிறகு இருவருக்குமான தொடர்பு நிரந்தரமாகவே விட்டுப் போயிற்று. சில காதல் கதைகள் கண்ணீர் கதைகள் தான். வீரன் தேடியது காதல் மனைவியை... நடிகையை இல்லையே... வீரனுக்கு குடும்பம்?
**************
தில்லியில் இருந்து ஐந்தாம் வகுப்பு விடுமுறைக்காக நமது சாதுர்யா தன் அம்மா அப்பாவுடன் ஸ்ரீரங்கம் வந்திருக்கிறாள். முழு இரண்டு மாதங்களுக்கான விடுப்பும், அவளுக்கு இங்கு தான் கழிய போகிறது. அவளது பெற்றோர் அவளை மட்டும் ஸ்ரீரங்கத்தில் விட்டுவிட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிளம்பிவிடுவார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்கள் விடுப்பு முழுவதும் அவள் ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீட்டில் தான் இருந்தாக வேண்டும். அது அவளுக்கு பிடித்த விஷயமும் கூட. திருச்சி,ஸ்ரீரங்கத்தில் இருக்கும் எந்த விஷயமும் நிச்சயம் தில்லியில் இல்லை என்பது அவள் எண்ணம். ஆர்ப்பாட்டங்கள் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எல்லாவற்றையும்விட எப்போதும் உடனிருக்கும் ரங்கன் அங்கு இல்லை.
ரங்கன் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு. நெடுநெடுவென்று ஐந்தரை அடிக்கும் கூடுதலாகவே வளர்ந்து விட்டான். வசீகரப் புன்னகை ஏந்திய உதடுகளுக்கு மேலே மெல்லியதான இளம் மீசை அரும்பு விட்டு இருந்தது அவனுக்கு. அந்த ரோஜா நிற உதடுகள் எப்பொழுதும் கூட இருப்போரையும் சேர்ந்து சிரிக்க அழைக்கும்.
வயலூரில் இருந்து ரேணுகாவும் ரங்கனும் காரை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வர, ரங்கனை பார்த்த வெங்கடேசன் மலைத்து தான் போனார். இந்த வயதில் இவ்வளவு அற்புதமாபிள்ளையா, இன்று அவருக்கு ஆச்சரியம். அவனிடம் பேசிக் கொண்டிருந்த இரண்டு நாட்களில் ரங்கனை பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம். அவனது பொறுமை, நிதானம்,அறிவு கூர்மை,அவரை அவன் பால் ஈர்த்தது.
தங்கையிடம் " ரேணு உன்னோட புள்ள தங்கம், அம்மா கிட்ட சொல்லி திருஷ்டி சுத்தி போட சொல்லு " என்றார். ரங்கனை நினைத்து அவர் மனம் பெருமையில் பூரித்தது.
இரண்டு நாட்களில் வெங்கடேசனும் அவர் மனைவியும் தில்லி சென்றுவிட சாதுர்யா ரங்கனை பிடித்துக் கொண்டு சுற்றளானாள்.
வாழ்நாள் முழுவதும் ரங்கனுடன் அவள் பயணம் தொடர என் பிரார்த்தனைகள்.
மீண்டும் சந்திப்போம்
சுகீ