JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

சதுரங்கம் 7

Subageetha

Well-known member
ஒருவழியாக சாதுர்யா தனது பத்தாம் வகுப்பு பரீட்சைகளை எழுதி முடித்துவிட்டாள். அவளுக்கு தேர்வுகள் முடிந்தவுடன் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு செல்லலாம் என்று அவள் அம்மா முன்பே சொல்லியிருந்ததால் உள்ளூர ஊறும் ஆர்வத்தை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து பதினோராம் வகுப்பு பள்ளி திறப்பதற்கு எப்படியும் மூன்று மாதங்கள் ஆகிவிடும். மூன்று வருடங்களுக்கும் சேர்த்து இந்த மூன்று மாதங்களில் கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்ற முடிவில் இருந்தாள் பெண். முதலில் பதிநைந்து நாட்கள் திருநெல்வேலியில் இருக்கும் தன் பெற்றோரிடம் தன் மகளை விட வேண்டும். பிறகு இரண்டரை மாதங்கள் அவள் ஸ்ரீரங்கத்தில் இருக்கட்டும் என்று முடிவு செய்திருந்தாள்
சாதுர்யாவின் அம்மா. ஒரு மாதம் மகளை திருநெல்வேலியில் தன் அம்மா வீட்டில் விட ஆசை தான் மாலாவுக்கு. வெங்கடேசனோ, மாமியார் மாமனாரோ நிச்சயம் மறுக்க போவதில்லை.ஆனால் சதா சர்வ காலமும் மகளுக்கு ஸ்ரீரங்கம் தான் எல்லாமும்.
தானும் பெற்றோருடன் திருநெல்வேலிக்கு வீட்டிலிருந்து வெகு காலமாயிற்று. அங்கிருந்து சீராடவும் ,ஒரு மகளாய் ம பிறந்த வீட்டு பாசம் பெற்றோருடன் நேரம் செலவிட வேண்டும் என்று மாலாவுக்கும் ஆசை உண்டு.முதல் பதிநைந்து நாட்கள் திருநெல்வேலியிலும் அடுத்த பதினைந்து நாட்கள் ஸ்ரீரங்கத்திலும் இருந்துவிட்டு அங்கிருந்து கணவரை பார்க்க உத்திரபிரதேசம் செல்வதாக ஏற்பாடு ஏற்பாடு செய்து கொண்டாள். அவருடன் இரண்டு மாதங்களாவது அங்கே தங்கி விட வேண்டும் என்று மனைவியாய் தவிப்பு மாலாவுக்குள்.

இது போன்ற தவிப்புகள் மாலாவுக்கு மட்டுமல்ல, குடும்ப கடமையை சுமந்து கொண்டிருக்கும் அகில உலக பெண்களுக்கும் பொது.
பெற்றோருக்கு மகளாய், கணவனுக்கு மனைவியாய், கணவர் வீட்டில் மருமகளாய், தன் மக்களுக்கு தாயாய் ஒவ்வொரு உறவிற்கும் தகுந்தவாறு பெண்களின் மனம் அடையும் மாற்றங்கள் அதற்காக அவர்கள் செய்துகொள்ளும் தியாகங்கள் எத்தனை எத்தனை?
பெற்றோர் வீட்டில் இருக்கும் போது கணவர் ஞாபகம்... கணவனுடன் இருக்கும் போது பெற்றோர் ஞாபகம்.பெற்ற
மக்களை பிரிந்து கணவனுடன் இருந்தால் குழந்தைகள் நினைவு... கணவனை விட்டு குழந்தைகளுடன் தங்கும் நிலையில் இருப்பத்து நான்கு மணி நேரமும் கணவன் ஞாபகம். பெரும்பாலும் பெண்கள் தங்களை பற்றி அதிகம் சிந்திப்பது இல்லையோ என்று எனக்கு வெகுவாக தோன்றும். இதனால்தான் பெண்களை உயர்வாக சொல்கிறோமோ?

திட்டமிட்டபடியே பெற்றோருடன், முதல் பதினைந்து நாட்கள் கழித்த மாலா பிறகு ஸ்ரீரங்கம் நோக்கி சென்றாள். அங்கிருந்து நாத்தனார் வீட்டில் இரண்டு நாட்கள் கழித்து விட்டு, மாமனார் மாமியாருக்கும் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்துவிட்டு, கணவரை காணப்போகிறோம் என்ற சந்தோஷம் ஒருபுறமும், மகளைப் பிரிந்து இரண்டு மாதங்களா என்ற ஏக்கம் ஒரு புறமுமாக திருச்சியில் விமானம் ஏறினாள் மாலா. அவள் ஏங்கிக்கொண்டிருக்கும் நிரம்ப எதிர்பார்க்கும் மகளுக்கான 'அந்த' விஷயம் இது வரை நிகழவில்லை. அந்த கவலை வேறு அவளை அரித்துக் கொண்டிருந்தது. எல்லாம் விதி விட்ட வழி என்று மனதைத் தேற்றிக் கொண்டு விட்டாள். கிளம்பும் முன் மாமியார் மாமனாரிடம் இது பற்றி பேசியவளுக்கு, மாமியார் வழியில் இந்தத் தாமதம் சகஜம்தான் என்ற தகவல் மனதை கொஞ்சம் திடப் படுத்தியது. என்னவானாலும் தான் பார்த்துக் கொள்வதாக மாமியார் கொடுத்த தைரியம் அவளை சற்றே ஆசுவாசம் கொள்ள செய்தது.

சொன்னபடியே தனது தேர்வுகள் முடிந்த பிறகு, தனது பிரிய சாதுர்யாவைக் காண விரைந்து கிளம்பி வந்தான் ரங்கன். அவன் முகம் முழுவதும் சந்தோஷம் வெளிப்படையாகவே தெரிந்தது. டெல்லியில் அவள் வீட்டில் கண்ட விழிநீர் அவனை கடந்த ஒருமாதமாக தூங்க விடவில்லை. மாமன் மகள் அவ்வளவு தவித்திருக்கிறாளா என்ற எண்ணம் அவனுக்குள் அவனது மன ஏக்கத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது. இந்த உணர்வு என்னவென்று அவனுக்கு புரியவில்லை. ஆனால், தன் வாழ்க்கையில் சாதுர்யாவுக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு என்று நினைத்துக்கொண்டான்.

சாதுர்யா ஸ்ரீரங்கத்தில் பாட்டி தாத்தாவுடன் இருக்கும் பொழுது, ரங்கன் நேராக வயலூர் சென்றுவிட்டான். அவன் அம்மா ரேணு அவனுக்காக ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருப்பது அவனுக்கு தெரியும். ரேணுகாவை விட்டு அதிகம் அவன் வெளி தங்கியதில்லை. சிறுவயதில் ரேணுகா கூட்டி செல்ல பாட்டி வீட்டிற்கு சென்று தங்கி வந்தவன் பிறகு கொஞ்சம் விவரம் வந்ததும் எங்கு சென்றாலும் இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தான். ரேணுகாவால் வீட்டை விட்டு விட்டு எங்கும் அதிக நாட்களுக்கு தங்க முடியாது என்பது அவனுக்கு நிச்சயமாய் தெரியும். தன்னால் இயன்ற ஒரு விஷயம் அம்மாவை தனித்து இருக்க விடாமல் கூடவே இருப்பது என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டு இருந்தான். ஆனால் கல்விக்கான இந்த பிரிவு அவனால் நிச்சயம் தவிர்க்க முடியாத ஒன்று. இந்த கல்வி தான் அவனுக்கு வெளி உலகை தெரியப்படுத்தும். அவன் மேன்மேலும் குடும்பத் தொழிலில் விஸ்தீரணம் செய்யவும் இந்தப் பிரிவும் வைராக்கியமும் தேவை. எவ்வளவு நாள் ஆண்பிள்ளை பெற்றவளின் அரவணைப்பில் இருக்க முடியும்?
தொழிலிலும், குடும்பத்திலும் தன் கணவனுடன் சேர்ந்து தோள் கொடுக்கும் ரேணுகாவே கூட இதை விரும்பப் போவதில்லை.
வெகு மாதங்களுக்குப் பின் தன் மகனுடன் நேரம் செலவழிப்பது எண்ணி ரேணுகாவின் மனம் நிறைந்திருந்தது. பார்த்து பார்த்து அவனுக்கு பிடித்தமானவகளை சமைத்தாள். மகனின் பிரிவும் ஏக்கமும் அவளிடம் அதிகம் தெரிந்தது. அவள் மாமியார் மாமனாரும் அவளை புரிந்துகொண்டு மகனுடன் அவளுக்கான நேரத்திற்கு தொல்லை செய்யாமல் நகர்ந்து கொண்டார்கள். மூன்று மக்களை பெற்று, அதில் ஒருத்தி வெளிநாட்டில், ஒரு மகனோ இருக்கும் இடமே தெரியாது. அவர்களின் ஏக்கம் எத்தனை வயதானாலும் தீரப் போவதில்லை.
ரேணுகாவின் கணவரோ தொழில் விஷயமாக மூன்று மாதங்களுக்கு ஸ்பெயின் சென்றிருக்கிறார். எனவே மாமியார் மாமனார் இருவரையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ரேணுகாவினது. அவளால் வீட்டை விட்டு விட்டு எங்கும் செல்ல இயலாது.பத்து நாட்கள் அம்மாவுடனும் வயதான பாட்டி தாத்தாவுடன் அதிக நேரம் செலவழித்த ரங்கனிடம் அவன் தாத்தா 'என்னடா போயி ஸ்ரீரங்கத்துல போய் சம்பந்தியையும் பாத்துட்டு வரதானடா... அவங்க ரெண்டு பேருக்கும் கூட வயசு ஆயிடுச்சு. நாம தான் போய் பார்த்துட்டு வரணும்' என்று பெரியவராய் அவனுக்கு புத்தி சொல்ல, ரங்கனுக்கும் தாமு தாத்தா லக்ஷ்மி பாட்டியை பார்க்க வேண்டும் போலிருந்தது. தாத்தாவையாவது இரண்டு மாதங்களுக்கு முன் டில்லியில் பார்த்தான். ஆனால் பாட்டி, அவளைப் பார்த்தே வெகுகாலம் ஆகிவிட்டது. அனேகமாக ஆறேழு மாதங்கள் இருக்கும். சாதுர்யாவும் என்னை பார்க்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பாள் என்று எண்ணியவாறே, தன் அம்மாவிடம் பாட்டி தாத்தா கூட ரெண்டு நாள் இருந்துட்டு வரேம்மா " என்று கிளம்பினான் ரங்கன்.
'வரும்பொழுது சதுவையும் கூட்டிட்டு வாடா' என்று வழி அனுப்பினாள் ரேணுகா.

ஸ்ரீரங்கத்தில் சாதுர்யா பயங்கர கோபத்தில் இருந்தாள். காரணம் வேறு ஒன்றும் இல்லை. ரங்கன் ஊரிலிருந்து வந்துவிட்டது தெரிந்ததும், இந்த கணமே வயலூர் செல்ல வேண்டுமென்று சது அடம்பிடிக்க, தாமுவும் லக்ஷ்மியும் அவன் இப்பதான் ஊரிலிருந்து வந்து இருக்கான். நாம இப்போ போக வேண்டாம். கொஞ்ச நாள் ஆகட்டும் என்று நிறுத்தி வைத்து விட்டார்கள். ரங்கனும் வந்ததிலிருந்து இவளுக்கு ஒரு போன் கூட செய்து பேசவில்லை. திரும்பவும் ரங்கன் மாறி விட்டான் என்று சாதுர்யாவின் மனதிற்குள் ஒரே போராட்ட மழை.

வெகு நாட்கள் கழித்து தன் ஊருக்கு வந்து இருப்பவளுக்கு, தன்னுடன் விளையாடிக்
கொண்டிருந்த அனைத்து தோழர்களும் வளர்ந்து விட்டார்கள். ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு தோழிகள் அதிகம் இருந்ததில்லை. பெரும்பாலும் ரங்கன் உடனேயே சுற்றுவதால் அவனது தோழர்கள் எல்லாம் இவளையும் சேர்த்துக் கொண்டு விட்டார்கள். ஆனால் இப்போது எல்லோருமே கல்லூரியில் படிப்பவர்கள். இவள் பத்தாம் வகுப்பு முடிந்து விடுப்புக்கு வந்திருக்கிறாள். வெகுநாட்களாக இவளைப் பார்க்காமல் இருந்ததால் தோன்றிய இடைவெளி.
ரங்கனும் கூட இல்லாததால், அவளுக்கு எதிலுமே ஒன்றவில்லை. எத்தனை நேரம் மாட்டுக் கொட்டிலிலும் வயல்வெளிகளிலும் தனியாக நேரத்தை கடத்த முடியும்?
முன்புபோல் தாமுவுக்கும் அவளுக்கு இணையாக சுற்ற முடியவில்லை. இந்தப் வீட்டை விட்டு விட்டு வெளியே சென்று பேத்தியுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. தாமு வயலுக்குச் செல்லும் போதெல்லாம் பேத்தியை கூட கூட்டி சென்றார் தான். ஆனாலும் அவள் வயதிற்கு உரிய வேகம் அதற்கு அந்த தாத்தாவால் கூட ஓட முடியவில்லை.
ஒரு வழியாக ரங்கன் வந்து சேர்ந்தவுடன் அவன் கைகளை கோர்த்துக் கொண்டு சுற்ற ஆரம்பித்தவளுக்கு உலகம் பிடிப்படவில்லை. அவன் வந்தவுடன் சண்டை போட வேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கோ தான் நினைப்பு கூட மறந்து விட்டிருந்தது.
ரங்கனிடம் எப்போதுமே நிதானம் உண்டு. எந்தவித உணர்வுகளையும் ஒரு அளவில்தான் காண்பிப்பான். அவன் செய்கைகளில் பொறுப்பு இருக்கும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இதுவரை எந்த முடிவும் எடுத்திராதவன்.
அப்படிப்பட்டவன்
அவனவள் மீது வைத்திருக்கும் பேரன்பால் நிதானம் இழந்து தன்னை மறந்து செய்யவிருக்கும் காரியம் நிச்சயம் இந்த கதையின் போக்கை மாற்றக் கூடிய ஒன்றுதான்.

சொன்னவாறே தாத்தா பாட்டியுடன் சரியாக இரண்டு நாட்கள்
கழித்தவன் முயலுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து, குத்தகை பணம் வசூல் செய்து கொடுத்து, வீட்டில் தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு தாத்தா-பாட்டி அனுமதியுடன் சாதுர்யாவையும் கூட்டிக்கொண்டு வயலூர் நோக்கி பயணமானான்.சாதுர்யா இன்னும் குறைந்தது பத்து நாட்களுக்காவது வயலூரில் தான் இருக்கப் போகிறாள். அவள் மனம் துள்ளாட்டம் போட, காரில் வரும் வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தாள். தனக்கு தெரிந்தவை தான் கற்றுக்கொண்டவை எதையும் விடாமல் எல்லாவற்றையும் பற்றி அவனிடம் சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு தன்னுடன் வருபவனின் பதிலே தேவைப்படவில்லை. மௌனமாய் சாதுர்யா சொல்லும் விஷயங்களை கேட்டுக்கொண்டே வந்தவனுக்கோ ரகசியச் சிரிப்பில் அழுத்தமான மீசைக்கு கீழ் சிவந்த உதடுகள் நளினமாய் வளைந்தது. அவளின் குழந்தைத்தனம், அவனை கட்டிப் போட்டது.

*****************************

சிவம் ஒருவழியாக தன் மனதை தேற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்தவருக்கு தன் மனைவியிடமும்,
மகள்களிடமும், எப்படி குருவுக்கு தன் மூத்த மகளை திருமணம் செய்வது குறித்து பேசுவது என்று உள்ளூர உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.
தான் செய்யப்போவது பெரிய தவறு, மூத்த மகளுக்கு குருவுடனான திருமணம் பெரிய தண்டனையாக அமையக்கூடும் என்று மனதில் ஒரு புறம் எச்சரித்தாலும், இன்னொருபுறம் அவள் ராஜ வாழ்க்கை வாழ பிறந்தவள், இல்லாவிட்டால் இப்பேர்பட்ட பழமையான வளமான குடும்பத்தின் வரன் அமைவதெல்லாம் வெறும் கனவில்தான் நிகழக்கூடும். இந்தத் திருமணத்தை எப்பாடுபட்டாவது முடித்தாக வேண்டும் கை நழுவ விட்டு விடக்கூடாது. இந்த திருமணம் மாற்றம் நிகழ்ந்து விட்டால் தனக்கு மற்ற இரு மகள்களுக்கும் கூட நல்ல இடங்களில் சம்பந்தம் வாய்க்கும். இவற்றையெல்லாம் எப்படியாவது மனைவிக்கு புரியவைக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு வீட்டிற்கு வந்தவருக்கு, தான் தனது இருபத்தொரு வயது குழந்தையை இந்த திருமண பந்தத்தின் மூலம் கள பலி கொடுக்கப் போகிறோம் என்பது மனதிற்கு உறைக்கவே இல்லை. இந்த திருமணத்தின் மூலம் அவள் மனது மட்டும் நோக போகிறதா என்பதெல்லாம்திருமணம் முடிந்தால் தான் தெரியும்.
ஒருவேளை குருவின் பெற்றோர் நினைப்பது போல் இந்த திருமணம் அவன் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம்.
திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகளைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதுமே நேர்மறையாக கருதுவது தான் நல்லது.

சிவனின் மூன்று பெண்களும் அழகிகள் தான். சிவனின் பூர்வீகம் கேரளம். கேரளத்தின் அந்த செழுமையும், அழகும், தந்த நிறமும், நீள முடியும் மூவருக்கும் உண்டு. எனினும் மூத்தவளின் கூர்நாசியும் கிரேக்க சிற்பம் போன்ற அழகும், பெண்களில் பொதுவாக காணப்பாடாத ஆறடியை தொடும் உயரமும் அவளை சுற்றி இருக்கும் பெண்களில் அவளை மட்டும் தனித்து காட்டும்.'அவள் பெயர் உமா'. கல்லூரி இரண்டாவது ஆண்டு.
சரி...இந்த சிறப்புகள் இருபத்தைந்து வயது குருவை அவளிடம் கட்டிப் போடுமா?
அவனது அனுபவ வயது அதிகம் ஆயிற்றே?
முதலில் இந்த திருமணம் கைக்கூடுமா?

ம்ம்ம்... சொல்ல மறந்து விட்டேன். மற்ற இரு அழகிகள் பற்றி நிச்சயம் சொல்லியாக வேண்டும்.அவர்களை முன்னிட்டும் தானே சிவன் இந்த திருமண உறவுக்கு ஒப்பியது.
இரண்டாவது பெண் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் ரத்னா. மூன்றாவது பெண் சாந்தா. பத்தாம் வகுப்பு.
ஹ்ம்ம்... இத்தனை விவரங்கள் எதற்கா?
யோசியுங்கள்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top