JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

சதுரங்கம் 8

Subageetha

Well-known member
வீட்டுக்கு வந்த சிவனின் மனம் முழுவதும் எப்படி ஆரம்பித்து, எதை
மனைவியிடம் பேசுவது என்றே ஓடிக் கொண்டிருந்தது.

சாப்பிடும் பொழுது வாய்ப்பு தானாகவே அமைந்து வந்தது. மூன்று பெண்களையும் தனது கணவரையும் அமரவைத்து உணவு பரிமாறிய சிவனின் மனைவி பாறுக்குட்டி உணவு பாத்திரத்தில் உள்ள பதார்த்தங்களை எல்லாம் கணவனுக்கு மக்களுக்கும் இட்டுவிட்டு தனக்கு வெறும் சோற்றில் மோர் ஊற்றி உப்பிட்டு கரைத்துக் குடித்து விட்டாள். மூன்று மகள்களும் தனது தாயின் இவ்வாறான உணவு பழக்கத்தை இன்றுவரை அறிந்து கொண்டதில்லை.
அவ்வளவு திறமையாக கையாண்டு கொண்டிருக்கிறாள்
பாறுக்குட்டி .
சில சமயங்களில் சிவனின் கண்களிலும் இது படுவதுதான். ஆனால் கணவனையும் சமாளிக்கும் சாமர்த்தியசாலி பார்வதி.
இன்று சிவன் இதையே ஒரு சாக்காக வைத்து இரவு தனிமையில் தன் மனைவியிடம் மூத்த மகளின் திருமணம் பற்றி பேச்சை எடுத்துவிட்டார். சிவன் வீட்டில் மூன்று வேளையும் தவறாது உணவு உண்டு. ஆனால் சிவனின் மனைவி தனது மூன்று மகள்களுக்கும் படிக்க வைத்து திருமணம் செய்து வைப்பதற்காக வெகுவாக சிக்கனம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பெரும்பாலான நடுத்தர வர்க்க பெண்மணிகளிடம் காணப்படும் பொதுவான குணங்கள் என்று சில உண்டு. கணவனுக்காக, பெற்ற மக்களுக்காக அதிலும் மகளாக பிறந்து விட்டால் அந்த மக்களுக்கு திருமணத்திற்காக சேர்க்க வேண்டும் என்று வேறு நம் இந்தியப் பெண்களின் சிக்கனத்திற்கு காரணங்கள் ஏராளம். சொந்த குடும்பத்தை பொருத்தவரை அந்தப் பெண்களின் மனம் தாராளம். பாறுக்குட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல.

சிவன் மெதுவாக, ஆரம்பித்தார். அவர் மனம் முழுக்க நாம் எடுக்கும் இந்த முடிவு சரியா தவறா என்ற பட்டிமன்றம் வேறு நடந்து கொண்டிருக்கிறது. அவராலேயே நிர்ணயம் செய்ய முடியாத ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு முடிக்க வேறு பார்க்கிறார்.

' பாறு... உன்கிட்ட ஒன்னு பேசணும்.

ம்ம்ம்...சொல்லுங்க...

நம்ம உமாவுக்கு ஒரு நல்ல
வரன் ஒன்னு அமையும் போல இருக்குடி. பையன் நல்ல பெரிய இடம். சல்லிக்காசு வரதட்சணை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சரியா சொல்லனும்னா நாம கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரிய இடம். இது அமைந்தால் நம்ம குடும்பத்துக்கு அதிர்ஷ்டம்.
சட்டென்று விஷயத்தை போட்டு உடைத்துவிட்டு மௌனத்தை கையில் ஏந்திக் கொண்டார் சிவம்.

அதுவரை படுத்துக் கொண்டே இருந்தவள் கணவனின் பேச்சைக் கேட்டவுடன் சடக்கென்று எழுந்து அமர்ந்து கொண்டாள்.
அது யாருங்க அவ்வளவு பெரிய இடம்? இந்த காலத்துல ஏழை வீட்டு பொண்ணுன்னு வரதட்சனை வாங்காமல் கல்யாணம் செஞ்சிருக்காங்க?

அவள் கேள்வியில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை மீறி பயம் தொனித்தது.
மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் இது போன்று யாரையும் நம்பி நம் பெண் கொடுத்தால்... என்ற மறைமுக செய்தி சொன்னாள் தன் கணவருக்கு.
மனைவி சொல்வது சிவனுக்கு புரியாமல் இல்லை. அதே நடுக்கம் தானே அவரும் கொண்டிருப்பது.

இல்ல பாறு...நமக்கு ரொம்ப தெரிஞ்ச பெரிய இடம் தான். பெரிய
இடம்னா பைசாவில் மட்டும் இல்லடி, மனசால யும் பெரியவங்க தான். நம்ம குடும்பத்துக்கு எவ்வளவோ செஞ்சிருக்காங்க... இன்னைக்கு வரைக்கும் நம்ம குடும்பத்துக்கு படி
அளக்குறாங்க. கேரளாவில் இங்க தமிழ் நாட்டுக்கு, கையில காசு பணம் ஒன்னும் இல்லாம நாம மூன்று பெண் குழந்தைகளை கூட்டிட்டு வந்த போது நம்ம குடும்பத்திற்கான ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுத்தவங்க அவங்க.
அதுக்கு நன்றியாத்தான்... என்று நிறுத்தி விட்டார் சிவன்.

அவர் மனைவி சட்டென்று திக்பிரமை பிடித்தது போல் அமர்ந்துவிட்டாள்.

யாருக்காக தன் பெண்ணை கேட்கிறார்கள் என்பது அவளுக்கு இப்பொழுது தெள்ளத் தெளிவாக புரிகிறது. நன்றிக்காக எவ்வளவோ செய்யலாம். தவறில்லை. உயிரை கூட கொடுக்கலாம். ஆனால் தெரிந்தே பெற்ற மகளை பாழும் கிணற்றில் தள்ளுவது என்பது எந்த விதத்தில் சரியாகும்?
அந்த குரு சிறுவயதிலிருந்தே
பாறுவுக்கு நன்கு
தெரிந்தவன்தான். முன்பெல்லாம் நாள் கிழமைகளில் அன்னபூரணி,
பாருவையும் சிவனின் மூன்று மகள்களையும் வீட்டிற்கு கூப்பிட்டு விருந்து வைத்து, தாம்பூலம் வைத்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், சமீபகாலங்களில் ஒரு நான்கைந்து வருடங்களாக குருவின் நடவடிக்கைகள் சரியில்லை என்று கேள்வியுற்ற பார்வதி அன்னபூரணி அழைக்கும் சமயங்களில், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கொண்டு பெண்களை வீட்டில் விட்டுவிட்டு தான் மட்டும் சென்று தாம்பூலம் வாங்கி வருவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டாள். பூங்குவளையில் மட்டுமல்லாது சுற்றியுள்ள வட்டாரங்களிலும் குருவின் பழக்க வழக்கங்கள் பிரசித்தமாகி விட்டிருந்தது. குருவுக்கு பெண்ணை கொடுத்தால் யாரும் நம்மை பார்த்து பொறாமைப்பட போடுவதில்லை. எல்லோரும் நம் மீது பரிதாபம் தான் படப் போகிறார்கள், என்பதெல்லாம் பாறுவின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

''அப்ப நீங்க முடிவு பண்ணிட்டீங்களா நம்ம பொண்ண பலி கொடுக்கிறதா?"பாருவை மீறிக்கொண்டு அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து வெளியில் விழுந்துவிட்டது.
மனைவியின் சொற்கள் சரியாக குறி பார்த்து தாக்க,தன்னை சுதாரித்துக் கொள்ள சிவனுக்கு சற்று நேரம் தேவைப்பட்டது. மனைவி கேட்கும் கேள்வி நிச்சயம் சாட்டையடி.

எப்படியும் மனைவியையும் மகளையும் சம்மதிக்க வைத்து விடுவது என்பதேயே குறிக்கோளாக வைத்திருந்து அருணாச்சலத்தின் வீட்டு கணக்குப் பிள்ளையாக பேசிக் கொண்டிருந்தார் சிவன். நன்றி உணர்ச்சி அவரை குருவுக்காக பேச வைத்தது.

இப்படி எல்லாம் பேசாத பாறு... பெத்த மகளை பலி கொடுக்குற அளவுக்கு நான் ஒன்னும் மோசமான அப்பன் இல்ல. நம்ம பொண்ணுங்களோட வளமான வருங்கால வாழ்க்கைக்காக நான் இவ்வளவு தூரம் யோசிக்கிறேன். என்ன இவ்வளவு சுயநலமாக உருவகப்படுத்தி பேசுறியே பாறு ... சிவனின் வார்த்தைகளில் உண்மையான வலி இருந்தது. தன் மகள் மகாராணியாக வாழவேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது?
உண்மையான விசுவாசி யாகவும், பொறுப்புள்ள தகப்பனாகவும் சிவன் பாடு திண்டாட்டம் தான். ஆனால் அவர் சொல்வதையெல்லாம் ஒப்புக் கொள்ளும் மனநிலையில் பாரும் கண்டிப்பாக இல்லை.
'இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேங்க... என் பொண்ணு அரை வயத்துக்கு சாப்பிட்டா கூட பரவாயில்லை... ஆனா சந்தோசமா நிம்மதியா இறங்கணும் சோறு. பணக்கார வீட்டில் பஞ்சாமிர்தம் சாப்பிடுவது இல்லைங்க வாழ்க்கை. கட்டின புருஷன் சரியா இல்ல நான் வெளியில இருக்குற சோறு வீணுங்க. இனிய வரைக்கும் நீங்க எனக்கு நல்ல புருஷனா நடந்துகிட்டு இருக்கீங்க. நம்ம பொண்ணுக்கு மட்டும் போக்கிய கல்யாணம் பண்ணி வைக்கணுமா?
அவளின் கேள்வி சிவனை அசைத்து பார்த்தது. அதே சமயம் மற்ற இரு பெண்களுக்கும் கூட திருமணம் நல்ல இடங்களில் செய்து வைப்பதாக அன்னபூரணியின் வார்த்தைகள் அவரைப் பின் வாங்க சம்மதிக்கவில்லை.
' இதைப் பற்றி நாம் முடிவெடுக்க வேண்டாம் பாறு. நான் அம்மா கிட்ட சொல்றேன். பேசுவேன் அவ என்ன சொல்றாளோ அதுதான் முடிவு என்று முடிக்க பார்த்தார் சிவம்.

' அவ அனுபவமில்லாத சின்ன பொண்ணுங்க அவ கிட்ட கேட்டா அவ என்ன சொல்ல முடியும்? ஒன்னு நீங்க சொல்ற ஆசை வார்த்தையில் மயங்கி ஒத்துக்கணும்... இல்லாட்டி குடும்ப சூழ்நிலையை நினைத்து ஒத்துக்கணும். எப்படியும் சம்மதிக்கணும் அவ. இதுதானே உங்களுடைய தீர்மானம்?எக்கேடோ கெட்டுப் போன்னு விட்டுத்தள்ள இது ஒன்னும் கடை சரக்கு வாங்கும் சமாச்சாரம் இல்லீங்க. என் பொண்ணோட வாழ்க்கை. அவள் வார்த்தைகள் விம்மலுடன் வெளிப்பட்டது. அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் மறுக்கமுடியாத உண்மை. ஆனாலும் ஏதோ ஒன்று அவரை உந்தித் தள்ள மேற்கொண்டு விவாதிக்க விரும்பாமல் கண்களை மூடிக்கொண்டு விட்டார். அவர் உறங்கவில்லை என்பது அவர் மனைவிக்கும் தெரியும். அவள் இரவு முழுவதும் கண்ணீரில்
கழிய,சிவன் அவராலும் உறங்க முடியவில்லை.
பாறுவுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. கணவர் இந்த விஷயத்தை அருணாச்சலத்தின் மகனுக்கு சாதகமாகத்தான் முடிக்க போகிறார். தடுக்கும் வழி புலப்படாமல் அந்த தாய் சோர்ந்து போனாள்.

மூன்றாம் ஆண்டு படிக்கும் தனது மூத்த மகளை மட்டும் காலையில் எழுந்தவுடன், ' அம்மாடி உன் கூட கொஞ்சம் பேசணும். இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு வீட்ல இரு'. என்ற அப்பாவின் வார்த்தைகள் அவளுக்குள் பயப்பந்தை அவள் வயிற்றில் உருளச் செய்தது.
'சரிங்கப்பா ' என்றுவிட்டு வீட்டு வேலைகளில் உன் அம்மாவுக்கு உதவி செய்ய அடுக்களைக்குள் சென்று விட்டாள். மற்ற இரு பெண்களும் பள்ளிக்கு கிளம்பும் வரை சிவனிடமிருந்து எந்த வார்த்தைகளும் வெளிவரவில்லை. அம்மாவின் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. விஷயம் ஏதோ பெரியதுதான் என்பதுவரை உமாவுக்கு. புரிந்துவிட்டது.

பத்து மணி அளவில் சிவன் அன்னபூரணிக்கு தொலைபேசியில் அழைத்து இன்று குரு உடனான திருமணம் பற்றி தன் மனைவி மகளிடம் பேச போவதாகவும் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்து விட்டார். அருணாசலத்திற்கு இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்த உடன்பாடு இப்போது இல்லை. நடத்தையை முழுக்க முழுக்க அறிந்தவர் அவர். எந்தப் பெண்ணாக இருந்தாலும் தன் மகனுக்கு திருமணம் ஆனால் சரி என்று யோசிக்க இப்பொழுது அவருக்கு மனம் வரவில்லை. தனக்கு ஒரு பெண் இருந்தால், எப்படிப்பட்ட நிலையிலும் இதுபோன்ற வரனுக்கு திருமணம் செய்து வைப்போமா என்ற கேள்வி அவரை குடைந்தது.மனைவியின் பிடிவாதத்திற்கு முன் அவரால் ஒன்றும் சொல்வதற்கும் செய்வதற்கும் முடியவில்லை.

உமாவை அழைத்துக் கொண்டு தனியாக மலைக்கோட்டை கோவிலுக்கு வந்தவர் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, யாரும் அதிகம் வராத இடமாய் பார்த்து அமர்ந்து கொண்டார்கள் தகப்பனும் மகளும்.

மனைவியிடம் காட்டிய தயக்கம் மகளிடம் அவர் காட்டவில்லை. சட்டென விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த உமாவுக்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பேருந்து நிலையத்தில் நடந்தது அவர் கண்முன்னே படமாய் விரிந்தது.

உமா கல்லூரி விடுமுறை நாளொன்றில் தனது தோழிகளுடன், இரண்டு தங்கைகளையும் கூட கூட்டிக்கொண்டு சினிமாவிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாள். தான் எங்கு சென்றாலும், இரண்டு தங்கைகளையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. அவர்களுக்கும் அக்காவுடன் அக்காவின் தோழிகளுடன் செல்வது பிடித்தமான ஒன்று. வீட்டிலும் பாறுவுக்கும் சிவனுக்கும் மூன்று மகள்களும் ஒருவருடன் ஒருவர் துணை என்பது வரை நிம்மதிதான்.

பேருந்து நிலையத்தில்
கா த்துக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்து நின்று கொண்டிருந்த ஒரு ஜீப்பில் குரு ஆன் தோழர்களுடன் இருந்தான். போதை நிறைந்த அவன் மற்றும் அவனது தோழர்களின் விழிகள் அங்கிருந்து ஒவ்வொரு பெண்ணும் கூசும் பார்வை பார்த்தன. அவர்கள் சிறு பெண்ணான சாந்தாவை கூட விட்டுவைக்கவில்லை என்பது தான் கொடுமை.
அவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுதே உமாவின் முகம் அப்பட்டமாய் அருவருப்பை காட்ட மகளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தெளிவாக சிவனுக்கு புரிந்துவிட்டது.

'உனக்கு இஷ்டம் இல்லைன்னா
விட்டுடுமா... மூணு பொண்ணுங்களோட அப்பன் மா நானு. உங்க மூணு பேரையும் நல்லபடியா நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுக்கருது தான் என்னுடைய பெரிய கடமை. அருணாச்சலம் ஐயாவும் அன்னபூரணி அம்மாவும் உன்னோட கல்யாணம் குருபரனோட நல்லவிதமாக முடிஞ்சா மத்த ரெண்டு பேருக்கும் கூட நல்ல இடத்துல நல்லவிதமாக கல்யாணம் முடிச்சு வைக்கிறதா சொல்லி இருக்காங்க. இந்த கல்யாணம் மட்டும் முடிந்தால் நீயும் பணக்கார வீட்டுல ராணி ஆயிடுவ. எங்கள மாதிரி அன்னக்காவடியா நீ கஷ்டப்பட வேண்டாம். என் பொண்ணு ஒசந்தா இடத்துல வாக்கப்பட்டு வாழணும்னு எனக்கும் ஆசை உண்டு மா. இந்த குடும்பத்தோட வருங்காலம் உன் கையில தான் இருக்கு தாயி' என்று நீண்ட சினிமா
டயலாக்கை மூச்சுவிடாமல் பேசி முடித்தார் சிவம்.

தங்கைகளுக்கும் நல்ல வாழ்க்கை என்பது உமாவின் மனதில் நன்றாக வேலை செய்தது.
'ஏம்பா நீங்க அவங்க வீட்டுல உண்மையா
இத்தனை வருஷம் வேலை செஞ்சதுக்கு அவங்க உங்க பொண்ணுங்க கல்யாணத்துக்கு உதவி பண்ணலாம்ப்பா. அதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி இல்லையா?ஒரு வித மிரட்டல் இல்லை... பேரம்?
இது என்னோட வாழ்க்கைப்பா. உங்களை மாதிரியே ஒழுக்கமான ஒருத்தன் தான் என்னோட வாழ்க்கை துணையா வருவானுன்னு நெனச்சேன். நீ வழிய மூடுறீங்கப்பா. வார்த்தைகளில் உஷ்ணம் தெரிந்தது. ஆனால் சிவன் தன் முடிவில் உறுதியாய் இருக்க மகளும் சம்மதித்து விட்டாள். அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை.

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். சிவனின் முகமே, விஷயம் வெற்றி தான் என்பதை தெரிவிக்க அவர் மனைவி இன்முகம் களை இழந்து விட்டது. எப்படியும் மகள் சம்மதிக்க மாட்டாள் என்று பாறு தீர்மானமாய் நம்பி இருந்தாள்.

விஷயம் அருணாசலத்திற்கு தெரிவிக்கப்பட, தன் மனைவியிடம் இன்னொருமுறை யோசிச்சு பாரு அன்னம். இந்த கல்யாண ஏற்பாடு தேவையா? இது இன்னொரு பொண்ணோட வாழ்க்கை இல்லையா? என்று கேட்க அன்னமோ, 'என் பையனுக்கு கல்யாணம் ஆனா திருந்திடுவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க நடுவுல நின்னு நந்தி போல தடுக்காதீங்க... என்று கண்ணீர் சிந்தினாள். இத்தனை வருஷங்களில் அருணாச்சலம் மிகவும் வருந்துவதும், அஞ்சுவதும் மனைவியின் கண்ணீருக்கு தான். மனைவின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட பூமியில் விழக்கூடாது என்ற உறுதி கொண்டவர் அவர்.

அன்றே நல்ல நாள் என்று,அன்னம் அருணாச்சலத்திடம் தெரிவிக்க, அன்று மாலை பெண் பார்க்கும் படலம் அரங்கேறியது.
சிவனது வீட்டுக்கு பெரிய பெரிய தட்டுகளில் பழங்களும் பூக்களும் இனிப்புகளும் ஒப்பு தாம்பூலம் செய்து விடுவதற்காக அழகான ஒரு பட்டு புடவையும், அதற்கு பொருத்தமாக கழுத்துக்கு சிவப்பு வெள்ளை கற்கள் பதித்து நெக்லெசும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் அருணாச்சலம் -அன்னம் தம்பதியர்.அவர்களுடன் நெருங்கிய சொந்தங்கள் பத்து பேர் சாட்சிக்கு.
இன்னும் இந்த விஷயம் குருபரனுக்கு தெரிவிக்கப்படவில்லை. தெரிந்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்ளவெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டான்.

நல்ல பெண்ணாய் அமையும்போது மகனுக்கு திருமணத்தை முடித்துவிட வேண்டும். மேலும் மேலும் திருமணத்தை தள்ளிப்போட்டு கிடைத்திருக்கும்
பெண்ணையும் கை நழுவ விட அன்னம் தயாராய் இல்லை.

இவர்கள் கொண்டு வந்த சீர் வரிசைகள் உமா -பாறு இருவருக்கும் வெறுப்பை தர, உமாவின் மற்ற இரு தங்கைகளும் சந்தோஷத்திலும் ஆச்சர்யத்திலும் வாயை பிளந்தனர்.
சிவனுக்கு அளவில்லா சந்தோஷம். வாசலில் நின்று கொண்டிருந்த இன்னோவாவும், ஹோண்டா காரும் இவர்களது பண செழுமையை முரசு கொட்ட 'பார்த்தாயா 'என்று தன் மனைவியை கண்களால் கேட்டார் சிவன். அவர் மனைவி சிரிப்பை தொலைத்து, வந்தவர்களுடன் பேசிக்கொண்டிருக்க சாம்பிராதாயங்கள் ஆரம்பிக்கும் முன் அருணாச்சலம் அன்னம் இருவரிடமும் தனித்து பேச விரும்பினாள் பெண்.

முதலில் மறுத்த சிவன் பின், வந்தவர்களிடம் மகளின் ஆசையை சொல்ல வந்த அவர்கள் தரப்பு உறவினர் ஒருவருடன் ஒருவர் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
அன்னம் அருணாச்சலம் இருவரும் பெண்ணின் அறைக்குள் நுழைய சட்டென்று கதிரையில் இருந்து எழுந்து அவர்கள் இருவருக்கும் வணக்கம்தெரிவித்த உமாவை இருவருக்கும் பிடித்து விட்டது.

உமா அவர்களிடம் நேரடியாக விஷயத்தை சொல்லி விட்டாள். நீங்க என் குடும்பத்துல இருக்குற மத்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் கூட வாழ்க்கைக்கு வழி பண்ணி கொடுக்கிறதாக சொல்லி இருக்கீங்களாம். இது என்னோட வேண்டுகோளுனு வச்சுக்கோங்க... என்னோட தங்கச்சி ரத்னா இப்போ பண்ணண்டாவது படிக்கிறா. இன்னும் ரெண்டு மாசத்துல தேர்வு அவளுக்கு பதினெட்டு வயசு ஆகிடுச்சு. என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி அவளுக்கும் கல்யாணத்துக்கு பார்த்து முடிச்சிடலாம். அதுக்கு உங்களுடைய தயவு வேணும். எங்க அப்பாகிட்ட நீங்கதான் இதை பத்தி பேசணும். என்றவளை வினோதமாக பார்த்தார்கள் இருவரும்.
' அப்ப எங்க மேல நம்பிக்கை இல்லையாம்மா உனக்கு என்று கேட்டார் அருணாச்சலம்.
உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லீங்க. சீக்கிரமா என்னோட தங்கச்சிக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டா நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன் என்ற உமாவை விளக்கம் போறாது என்று பார்த்தார்கள் அருணாச்சலம் அன்னம் தம்பதியர். விஷயத்தை உடைத்து சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்த உமாவும், எனக்கு உங்க பையனுடைய நடத்தை தெளிவா தெரியும். தேவையில்லாம கல்யாணமாகாத தங்கச்சியை வைச்சுட்டு ரிஸ்க் எடுக்க எனக்கு இஷ்டம் இல்லை. அதனால முதல்ல ரத்னாவுக்கு கல்யாணத்துக்கு பார்க்கலாம். அவ கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்துல நான் உங்க பையனுக்கு மனைவியாகி உங்க வீட்டுக்கு வந்துடறேன். இதுக்கு மட்டும் ஒத்துக்கோங்க...
தயவுசெய்து என்று அழுதவளை தேற்றும் வகை தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள் இருவரும். அவள் சொல்வதில் இருக்கும் உண்மை சுட்டது அவர்களை. சரி என்பதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. ஒப்பு தாம்புலம் மாற்ற பட்டது. திருமண தேதி பின்பு ஜோசியரை கேட்டு முடிவு செய்து கொள்வதை உறுதி செய்யப்பட்டது.

அடுத்த நாள் வேலைக்கு வந்த சிவனிடம்,அருணாச்சலம் முதலில் ரத்னாவுக்கு நல்ல வரன் பார்க்கும் படி அறிவுறுத்தினார். இது உமாவின் வேலைதான் என்பது சிவனுக்கும் புரிந்தது. அவரின் கண்கள் கலங்கின.
என்னதான் மனிதர்கள் ஆயிரம் முடிவு எடுத்தாலும் நடக்கும் நிகழ்வுகள் எப்போதுமே
கைமீறியவைதான்.
ரத்னாவின் திருமண வரனை தேட தொடங்கினார் சிவன்.

மீண்டும் அடுத்த பதிவுடன் சந்திப்போம்.









வீட்டுக்கு வந்த சிவனின் மனம் முழுவதும் எப்படி ஆரம்பித்து, எதை
மனைவியிடம் பேசுவது என்றே ஓடிக் கொண்டிருந்தது.

சாப்பிடும் பொழுது வாய்ப்பு தானாகவே அமைந்து வந்தது. மூன்று பெண்களையும் தனது கணவரையும் அமரவைத்து உணவு பரிமாறிய சிவனின் மனைவி பாறுக்குட்டி உணவு பாத்திரத்தில் உள்ள பதார்த்தங்களை எல்லாம் கணவனுக்கு மக்களுக்கும் இட்டுவிட்டு தனக்கு வெறும் சோற்றில் மோர் ஊற்றி உப்பிட்டு கரைத்துக் குடித்து விட்டாள். மூன்று மகள்களும் தனது தாயின் இவ்வாறான உணவு பழக்கத்தை இன்றுவரை அறிந்து கொண்டதில்லை.
அவ்வளவு திறமையாக கையாண்டு கொண்டிருக்கிறாள்
பாறுக்குட்டி .
சில சமயங்களில் சிவனின் கண்களிலும் இது படுவதுதான். ஆனால் கணவனையும் சமாளிக்கும் சாமர்த்தியசாலி பார்வதி.
இன்று சிவன் இதையே ஒரு சாக்காக வைத்து இரவு தனிமையில் தன் மனைவியிடம் மூத்த மகளின் திருமணம் பற்றி பேச்சை எடுத்துவிட்டார். சிவன் வீட்டில் மூன்று வேளையும் தவறாது உணவு உண்டு. ஆனால் சிவனின் மனைவி தனது மூன்று மகள்களுக்கும் படிக்க வைத்து திருமணம் செய்து வைப்பதற்காக வெகுவாக சிக்கனம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பெரும்பாலான நடுத்தர வர்க்க பெண்மணிகளிடம் காணப்படும் பொதுவான குணங்கள் என்று சில உண்டு. கணவனுக்காக, பெற்ற மக்களுக்காக அதிலும் மகளாக பிறந்து விட்டால் அந்த மக்களுக்கு திருமணத்திற்காக சேர்க்க வேண்டும் என்று வேறு நம் இந்தியப் பெண்களின் சிக்கனத்திற்கு காரணங்கள் ஏராளம். சொந்த குடும்பத்தை பொருத்தவரை அந்தப் பெண்களின் மனம் தாராளம். பாறுக்குட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல.

சிவன் மெதுவாக, ஆரம்பித்தார். அவர் மனம் முழுக்க நாம் எடுக்கும் இந்த முடிவு சரியா தவறா என்ற பட்டிமன்றம் வேறு நடந்து கொண்டிருக்கிறது. அவராலேயே நிர்ணயம் செய்ய முடியாத ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு முடிக்க வேறு பார்க்கிறார்.

' பாறு... உன்கிட்ட ஒன்னு பேசணும்.

ம்ம்ம்...சொல்லுங்க...

நம்ம உமாவுக்கு ஒரு நல்ல
வரன் ஒன்னு அமையும் போல இருக்குடி. பையன் நல்ல பெரிய இடம். சல்லிக்காசு வரதட்சணை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சரியா சொல்லனும்னா நாம கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரிய இடம். இது அமைந்தால் நம்ம குடும்பத்துக்கு அதிர்ஷ்டம்.
சட்டென்று விஷயத்தை போட்டு உடைத்துவிட்டு மௌனத்தை கையில் ஏந்திக் கொண்டார் சிவம்.

அதுவரை படுத்துக் கொண்டே இருந்தவள் கணவனின் பேச்சைக் கேட்டவுடன் சடக்கென்று எழுந்து அமர்ந்து கொண்டாள்.
அது யாருங்க அவ்வளவு பெரிய இடம்? இந்த காலத்துல ஏழை வீட்டு பொண்ணுன்னு வரதட்சனை வாங்காமல் கல்யாணம் செஞ்சிருக்காங்க?

அவள் கேள்வியில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை மீறி பயம் தொனித்தது.
மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் இது போன்று யாரையும் நம்பி நம் பெண் கொடுத்தால்... என்ற மறைமுக செய்தி சொன்னாள் தன் கணவருக்கு.
மனைவி சொல்வது சிவனுக்கு புரியாமல் இல்லை. அதே நடுக்கம் தானே அவரும் கொண்டிருப்பது.

இல்ல பாறு...நமக்கு ரொம்ப தெரிஞ்ச பெரிய இடம் தான். பெரிய
இடம்னா பைசாவில் மட்டும் இல்லடி, மனசால யும் பெரியவங்க தான். நம்ம குடும்பத்துக்கு எவ்வளவோ செஞ்சிருக்காங்க... இன்னைக்கு வரைக்கும் நம்ம குடும்பத்துக்கு படி
அளக்குறாங்க. கேரளாவில் இங்க தமிழ் நாட்டுக்கு, கையில காசு பணம் ஒன்னும் இல்லாம நாம மூன்று பெண் குழந்தைகளை கூட்டிட்டு வந்த போது நம்ம குடும்பத்திற்கான ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுத்தவங்க அவங்க.
அதுக்கு நன்றியாத்தான்... என்று நிறுத்தி விட்டார் சிவன்.

அவர் மனைவி சட்டென்று திக்பிரமை பிடித்தது போல் அமர்ந்துவிட்டாள்.

யாருக்காக தன் பெண்ணை கேட்கிறார்கள் என்பது அவளுக்கு இப்பொழுது தெள்ளத் தெளிவாக புரிகிறது. நன்றிக்காக எவ்வளவோ செய்யலாம். தவறில்லை. உயிரை கூட கொடுக்கலாம். ஆனால் தெரிந்தே பெற்ற மகளை பாழும் கிணற்றில் தள்ளுவது என்பது எந்த விதத்தில் சரியாகும்?
அந்த குரு சிறுவயதிலிருந்தே
பாறுவுக்கு நன்கு
தெரிந்தவன்தான். முன்பெல்லாம் நாள் கிழமைகளில் அன்னபூரணி,
பாருவையும் சிவனின் மூன்று மகள்களையும் வீட்டிற்கு கூப்பிட்டு விருந்து வைத்து, தாம்பூலம் வைத்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், சமீபகாலங்களில் ஒரு நான்கைந்து வருடங்களாக குருவின் நடவடிக்கைகள் சரியில்லை என்று கேள்வியுற்ற பார்வதி அன்னபூரணி அழைக்கும் சமயங்களில், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கொண்டு பெண்களை வீட்டில் விட்டுவிட்டு தான் மட்டும் சென்று தாம்பூலம் வாங்கி வருவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டாள். பூங்குவளையில் மட்டுமல்லாது சுற்றியுள்ள வட்டாரங்களிலும் குருவின் பழக்க வழக்கங்கள் பிரசித்தமாகி விட்டிருந்தது. குருவுக்கு பெண்ணை கொடுத்தால் யாரும் நம்மை பார்த்து பொறாமைப்பட போடுவதில்லை. எல்லோரும் நம் மீது பரிதாபம் தான் படப் போகிறார்கள், என்பதெல்லாம் பாறுவின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

''அப்ப நீங்க முடிவு பண்ணிட்டீங்களா நம்ம பொண்ண பலி கொடுக்கிறதா?"பாருவை மீறிக்கொண்டு அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து வெளியில் விழுந்துவிட்டது.
மனைவியின் சொற்கள் சரியாக குறி பார்த்து தாக்க,தன்னை சுதாரித்துக் கொள்ள சிவனுக்கு சற்று நேரம் தேவைப்பட்டது. மனைவி கேட்கும் கேள்வி நிச்சயம் சாட்டையடி.

எப்படியும் மனைவியையும் மகளையும் சம்மதிக்க வைத்து விடுவது என்பதேயே குறிக்கோளாக வைத்திருந்து அருணாச்சலத்தின் வீட்டு கணக்குப் பிள்ளையாக பேசிக் கொண்டிருந்தார் சிவன். நன்றி உணர்ச்சி அவரை குருவுக்காக பேச வைத்தது.

இப்படி எல்லாம் பேசாத பாறு... பெத்த மகளை பலி கொடுக்குற அளவுக்கு நான் ஒன்னும் மோசமான அப்பன் இல்ல. நம்ம பொண்ணுங்களோட வளமான வருங்கால வாழ்க்கைக்காக நான் இவ்வளவு தூரம் யோசிக்கிறேன். என்ன இவ்வளவு சுயநலமாக உருவகப்படுத்தி பேசுறியே பாறு ... சிவனின் வார்த்தைகளில் உண்மையான வலி இருந்தது. தன் மகள் மகாராணியாக வாழவேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது?
உண்மையான விசுவாசி யாகவும், பொறுப்புள்ள தகப்பனாகவும் சிவன் பாடு திண்டாட்டம் தான். ஆனால் அவர் சொல்வதையெல்லாம் ஒப்புக் கொள்ளும் மனநிலையில் பாரும் கண்டிப்பாக இல்லை.
'இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேங்க... என் பொண்ணு அரை வயத்துக்கு சாப்பிட்டா கூட பரவாயில்லை... ஆனா சந்தோசமா நிம்மதியா இறங்கணும் சோறு. பணக்கார வீட்டில் பஞ்சாமிர்தம் சாப்பிடுவது இல்லைங்க வாழ்க்கை. கட்டின புருஷன் சரியா இல்ல நான் வெளியில இருக்குற சோறு வீணுங்க. இனிய வரைக்கும் நீங்க எனக்கு நல்ல புருஷனா நடந்துகிட்டு இருக்கீங்க. நம்ம பொண்ணுக்கு மட்டும் போக்கிய கல்யாணம் பண்ணி வைக்கணுமா?
அவளின் கேள்வி சிவனை அசைத்து பார்த்தது. அதே சமயம் மற்ற இரு பெண்களுக்கும் கூட திருமணம் நல்ல இடங்களில் செய்து வைப்பதாக அன்னபூரணியின் வார்த்தைகள் அவரைப் பின் வாங்க சம்மதிக்கவில்லை.
' இதைப் பற்றி நாம் முடிவெடுக்க வேண்டாம் பாறு. நான் அம்மா கிட்ட சொல்றேன். பேசுவேன் அவ என்ன சொல்றாளோ அதுதான் முடிவு என்று முடிக்க பார்த்தார் சிவம்.

' அவ அனுபவமில்லாத சின்ன பொண்ணுங்க அவ கிட்ட கேட்டா அவ என்ன சொல்ல முடியும்? ஒன்னு நீங்க சொல்ற ஆசை வார்த்தையில் மயங்கி ஒத்துக்கணும்... இல்லாட்டி குடும்ப சூழ்நிலையை நினைத்து ஒத்துக்கணும். எப்படியும் சம்மதிக்கணும் அவ. இதுதானே உங்களுடைய தீர்மானம்?எக்கேடோ கெட்டுப் போன்னு விட்டுத்தள்ள இது ஒன்னும் கடை சரக்கு வாங்கும் சமாச்சாரம் இல்லீங்க. என் பொண்ணோட வாழ்க்கை. அவள் வார்த்தைகள் விம்மலுடன் வெளிப்பட்டது. அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் மறுக்கமுடியாத உண்மை. ஆனாலும் ஏதோ ஒன்று அவரை உந்தித் தள்ள மேற்கொண்டு விவாதிக்க விரும்பாமல் கண்களை மூடிக்கொண்டு விட்டார். அவர் உறங்கவில்லை என்பது அவர் மனைவிக்கும் தெரியும். அவள் இரவு முழுவதும் கண்ணீரில்
கழிய,சிவன் அவராலும் உறங்க முடியவில்லை.
பாறுவுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. கணவர் இந்த விஷயத்தை அருணாச்சலத்தின் மகனுக்கு சாதகமாகத்தான் முடிக்க போகிறார். தடுக்கும் வழி புலப்படாமல் அந்த தாய் சோர்ந்து போனாள்.

மூன்றாம் ஆண்டு படிக்கும் தனது மூத்த மகளை மட்டும் காலையில் எழுந்தவுடன், ' அம்மாடி உன் கூட கொஞ்சம் பேசணும். இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு வீட்ல இரு'. என்ற அப்பாவின் வார்த்தைகள் அவளுக்குள் பயப்பந்தை அவள் வயிற்றில் உருளச் செய்தது.
'சரிங்கப்பா ' என்றுவிட்டு வீட்டு வேலைகளில் உன் அம்மாவுக்கு உதவி செய்ய அடுக்களைக்குள் சென்று விட்டாள். மற்ற இரு பெண்களும் பள்ளிக்கு கிளம்பும் வரை சிவனிடமிருந்து எந்த வார்த்தைகளும் வெளிவரவில்லை. அம்மாவின் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. விஷயம் ஏதோ பெரியதுதான் என்பதுவரை உமாவுக்கு. புரிந்துவிட்டது.

பத்து மணி அளவில் சிவன் அன்னபூரணிக்கு தொலைபேசியில் அழைத்து இன்று குரு உடனான திருமணம் பற்றி தன் மனைவி மகளிடம் பேச போவதாகவும் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்து விட்டார். அருணாசலத்திற்கு இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்த உடன்பாடு இப்போது இல்லை. நடத்தையை முழுக்க முழுக்க அறிந்தவர் அவர். எந்தப் பெண்ணாக இருந்தாலும் தன் மகனுக்கு திருமணம் ஆனால் சரி என்று யோசிக்க இப்பொழுது அவருக்கு மனம் வரவில்லை. தனக்கு ஒரு பெண் இருந்தால், எப்படிப்பட்ட நிலையிலும் இதுபோன்ற வரனுக்கு திருமணம் செய்து வைப்போமா என்ற கேள்வி அவரை குடைந்தது.மனைவியின் பிடிவாதத்திற்கு முன் அவரால் ஒன்றும் சொல்வதற்கும் செய்வதற்கும் முடியவில்லை.

உமாவை அழைத்துக் கொண்டு தனியாக மலைக்கோட்டை கோவிலுக்கு வந்தவர் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, யாரும் அதிகம் வராத இடமாய் பார்த்து அமர்ந்து கொண்டார்கள் தகப்பனும் மகளும்.

மனைவியிடம் காட்டிய தயக்கம் மகளிடம் அவர் காட்டவில்லை. சட்டென விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த உமாவுக்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பேருந்து நிலையத்தில் நடந்தது அவர் கண்முன்னே படமாய் விரிந்தது.

உமா கல்லூரி விடுமுறை நாளொன்றில் தனது தோழிகளுடன், இரண்டு தங்கைகளையும் கூட கூட்டிக்கொண்டு சினிமாவிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாள். தான் எங்கு சென்றாலும், இரண்டு தங்கைகளையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. அவர்களுக்கும் அக்காவுடன் அக்காவின் தோழிகளுடன் செல்வது பிடித்தமான ஒன்று. வீட்டிலும் பாறுவுக்கும் சிவனுக்கும் மூன்று மகள்களும் ஒருவருடன் ஒருவர் துணை என்பது வரை நிம்மதிதான்.

பேருந்து நிலையத்தில்
கா த்துக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்து நின்று கொண்டிருந்த ஒரு ஜீப்பில் குரு ஆன் தோழர்களுடன் இருந்தான். போதை நிறைந்த அவன் மற்றும் அவனது தோழர்களின் விழிகள் அங்கிருந்து ஒவ்வொரு பெண்ணும் கூசும் பார்வை பார்த்தன. அவர்கள் சிறு பெண்ணான சாந்தாவை கூட விட்டுவைக்கவில்லை என்பது தான் கொடுமை.
அவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுதே உமாவின் முகம் அப்பட்டமாய் அருவருப்பை காட்ட மகளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தெளிவாக சிவனுக்கு புரிந்துவிட்டது.

'உனக்கு இஷ்டம் இல்லைன்னா
விட்டுடுமா... மூணு பொண்ணுங்களோட அப்பன் மா நானு. உங்க மூணு பேரையும் நல்லபடியா நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுக்கருது தான் என்னுடைய பெரிய கடமை. அருணாச்சலம் ஐயாவும் அன்னபூரணி அம்மாவும் உன்னோட கல்யாணம் குருபரனோட நல்லவிதமாக முடிஞ்சா மத்த ரெண்டு பேருக்கும் கூட நல்ல இடத்துல நல்லவிதமாக கல்யாணம் முடிச்சு வைக்கிறதா சொல்லி இருக்காங்க. இந்த கல்யாணம் மட்டும் முடிந்தால் நீயும் பணக்கார வீட்டுல ராணி ஆயிடுவ. எங்கள மாதிரி அன்னக்காவடியா நீ கஷ்டப்பட வேண்டாம். என் பொண்ணு ஒசந்தா இடத்துல வாக்கப்பட்டு வாழணும்னு எனக்கும் ஆசை உண்டு மா. இந்த குடும்பத்தோட வருங்காலம் உன் கையில தான் இருக்கு தாயி' என்று நீண்ட சினிமா
டயலாக்கை மூச்சுவிடாமல் பேசி முடித்தார் சிவம்.

தங்கைகளுக்கும் நல்ல வாழ்க்கை என்பது உமாவின் மனதில் நன்றாக வேலை செய்தது.
'ஏம்பா நீங்க அவங்க வீட்டுல உண்மையா
இத்தனை வருஷம் வேலை செஞ்சதுக்கு அவங்க உங்க பொண்ணுங்க கல்யாணத்துக்கு உதவி பண்ணலாம்ப்பா. அதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி இல்லையா?ஒரு வித மிரட்டல் இல்லை... பேரம்?
இது என்னோட வாழ்க்கைப்பா. உங்களை மாதிரியே ஒழுக்கமான ஒருத்தன் தான் என்னோட வாழ்க்கை துணையா வருவானுன்னு நெனச்சேன். நீ வழிய மூடுறீங்கப்பா. வார்த்தைகளில் உஷ்ணம் தெரிந்தது. ஆனால் சிவன் தன் முடிவில் உறுதியாய் இருக்க மகளும் சம்மதித்து விட்டாள். அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை.

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். சிவனின் முகமே, விஷயம் வெற்றி தான் என்பதை தெரிவிக்க அவர் மனைவி இன்முகம் களை இழந்து விட்டது. எப்படியும் மகள் சம்மதிக்க மாட்டாள் என்று பாறு தீர்மானமாய் நம்பி இருந்தாள்.

விஷயம் அருணாசலத்திற்கு தெரிவிக்கப்பட, தன் மனைவியிடம் இன்னொருமுறை யோசிச்சு பாரு அன்னம். இந்த கல்யாண ஏற்பாடு தேவையா? இது இன்னொரு பொண்ணோட வாழ்க்கை இல்லையா? என்று கேட்க அன்னமோ, 'என் பையனுக்கு கல்யாணம் ஆனா திருந்திடுவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க நடுவுல நின்னு நந்தி போல தடுக்காதீங்க... என்று கண்ணீர் சிந்தினாள். இத்தனை வருஷங்களில் அருணாச்சலம் மிகவும் வருந்துவதும், அஞ்சுவதும் மனைவியின் கண்ணீருக்கு தான். மனைவின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட பூமியில் விழக்கூடாது என்ற உறுதி கொண்டவர் அவர்.

அன்றே நல்ல நாள் என்று,அன்னம் அருணாச்சலத்திடம் தெரிவிக்க, அன்று மாலை பெண் பார்க்கும் படலம் அரங்கேறியது.
சிவனது வீட்டுக்கு பெரிய பெரிய தட்டுகளில் பழங்களும் பூக்களும் இனிப்புகளும் ஒப்பு தாம்பூலம் செய்து விடுவதற்காக அழகான ஒரு பட்டு புடவையும், அதற்கு பொருத்தமாக கழுத்துக்கு சிவப்பு வெள்ளை கற்கள் பதித்து நெக்லெசும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் அருணாச்சலம் -அன்னம் தம்பதியர்.அவர்களுடன் நெருங்கிய சொந்தங்கள் பத்து பேர் சாட்சிக்கு.
இன்னும் இந்த விஷயம் குருபரனுக்கு தெரிவிக்கப்படவில்லை. தெரிந்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்ளவெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டான்.

நல்ல பெண்ணாய் அமையும்போது மகனுக்கு திருமணத்தை முடித்துவிட வேண்டும். மேலும் மேலும் திருமணத்தை தள்ளிப்போட்டு கிடைத்திருக்கும்
பெண்ணையும் கை நழுவ விட அன்னம் தயாராய் இல்லை.

இவர்கள் கொண்டு வந்த சீர் வரிசைகள் உமா -பாறு இருவருக்கும் வெறுப்பை தர, உமாவின் மற்ற இரு தங்கைகளும் சந்தோஷத்திலும் ஆச்சர்யத்திலும் வாயை பிளந்தனர்.
சிவனுக்கு அளவில்லா சந்தோஷம். வாசலில் நின்று கொண்டிருந்த இன்னோவாவும், ஹோண்டா காரும் இவர்களது பண செழுமையை முரசு கொட்ட 'பார்த்தாயா 'என்று தன் மனைவியை கண்களால் கேட்டார் சிவன். அவர் மனைவி சிரிப்பை தொலைத்து, வந்தவர்களுடன் பேசிக்கொண்டிருக்க சாம்பிராதாயங்கள் ஆரம்பிக்கும் முன் அருணாச்சலம் அன்னம் இருவரிடமும் தனித்து பேச விரும்பினாள் பெண்.

முதலில் மறுத்த சிவன் பின், வந்தவர்களிடம் மகளின் ஆசையை சொல்ல வந்த அவர்கள் தரப்பு உறவினர் ஒருவருடன் ஒருவர் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
அன்னம் அருணாச்சலம் இருவரும் பெண்ணின் அறைக்குள் நுழைய சட்டென்று கதிரையில் இருந்து எழுந்து அவர்கள் இருவருக்கும் வணக்கம்தெரிவித்த உமாவை இருவருக்கும் பிடித்து விட்டது.

உமா அவர்களிடம் நேரடியாக விஷயத்தை சொல்லி விட்டாள். நீங்க என் குடும்பத்துல இருக்குற மத்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் கூட வாழ்க்கைக்கு வழி பண்ணி கொடுக்கிறதாக சொல்லி இருக்கீங்களாம். இது என்னோட வேண்டுகோளுனு வச்சுக்கோங்க... என்னோட தங்கச்சி ரத்னா இப்போ பண்ணண்டாவது படிக்கிறா. இன்னும் ரெண்டு மாசத்துல தேர்வு அவளுக்கு பதினெட்டு வயசு ஆகிடுச்சு. என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி அவளுக்கும் கல்யாணத்துக்கு பார்த்து முடிச்சிடலாம். அதுக்கு உங்களுடைய தயவு வேணும். எங்க அப்பாகிட்ட நீங்கதான் இதை பத்தி பேசணும். என்றவளை வினோதமாக பார்த்தார்கள் இருவரும்.
' அப்ப எங்க மேல நம்பிக்கை இல்லையாம்மா உனக்கு என்று கேட்டார் அருணாச்சலம்.
உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லீங்க. சீக்கிரமா என்னோட தங்கச்சிக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டா நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன் என்ற உமாவை விளக்கம் போறாது என்று பார்த்தார்கள் அருணாச்சலம் அன்னம் தம்பதியர். விஷயத்தை உடைத்து சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்த உமாவும், எனக்கு உங்க பையனுடைய நடத்தை தெளிவா தெரியும். தேவையில்லாம கல்யாணமாகாத தங்கச்சியை வைச்சுட்டு ரிஸ்க் எடுக்க எனக்கு இஷ்டம் இல்லை. அதனால முதல்ல ரத்னாவுக்கு கல்யாணத்துக்கு பார்க்கலாம். அவ கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்துல நான் உங்க பையனுக்கு மனைவியாகி உங்க வீட்டுக்கு வந்துடறேன். இதுக்கு மட்டும் ஒத்துக்கோங்க...
தயவுசெய்து என்று அழுதவளை தேற்றும் வகை தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள் இருவரும். அவள் சொல்வதில் இருக்கும் உண்மை சுட்டது அவர்களை. சரி என்பதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. ஒப்பு தாம்புலம் மாற்ற பட்டது. திருமண தேதி பின்பு ஜோசியரை கேட்டு முடிவு செய்து கொள்வதை உறுதி செய்யப்பட்டது.

அடுத்த நாள் வேலைக்கு வந்த சிவனிடம்,அருணாச்சலம் முதலில் ரத்னாவுக்கு நல்ல வரன் பார்க்கும் படி அறிவுறுத்தினார். இது உமாவின் வேலைதான் என்பது சிவனுக்கும் புரிந்தது. அவரின் கண்கள் கலங்கின.
என்னதான் மனிதர்கள் ஆயிரம் முடிவு எடுத்தாலும் நடக்கும் நிகழ்வுகள் எப்போதுமே
கைமீறியவைதான்.
ரத்னாவின் திருமண வரனை தேட தொடங்கினார் சிவன்.

மீண்டும் அடுத்த பதிவுடன் சந்திப்போம்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top