இயல்புளிக் கோலோச்சும் மன்னவன்
நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
குறள்:545
இயல்பில் ஆளுமையுடன்
நீதிநெறித் தவறா மன்னவனின்
செங்கோல் ஆட்சி
அங்கிருப்பின்
பருவம் தவறா
செழிப்பான மழையும்
குன்றா வளமாம்
விளைச்சல் தந்த
நிலமும் - அம் மன்னவனிடம்
அடங்கி அடிமைப்பட்டு
கிடக்குமாம்
என வள்ளுவன்
ஈரடியில் பாடிய
சொற்றொடர் போலே ;
இயல்பில்
தமக்கு தாமே கோலோச்சும்
நம்மால் ,
நம்நீதி தவறா
அறம் கொண்டு
வாழ்வோமெனில்
எல்லா பருவங்களிளும் நிம்மதியும்
தீராது அள்ள அள்ள குறையா வளமெனும் மகிழ்வுதனை
அள்ளித்தரும் வரமும்
அடிமையாகி போகுமோ
நமக்கும்