#குறள் 545
# இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
கோன் உயரக் குடியுர கண்டிங்க
நீதி நெறியுடைத்து அரசாள..
வந்திங்க உதித்த மன்னவனால்
விளைந்த விளைநிலமே சாட்சி
மன்னவனின் செங்கோல் முறையகளா
உதித்திருக்கும் அறநிலையே..
வான் முட்டும் சிவ கோபுரமும்
அவன் பக்தி மேலிட
கனி முட்டும் மர சாலையும்
பசி பிணியற்ற நிலமேன
நஞ்சை புஞ்சையின்
பச்சை நிறமே பறைசாற்றும்
இக் கோமகன் குடியாட்சி
சிறந்த முறையென..
பருவகாலங்கள் இம்மன்னனோடு
பயணித்து வழிவிட..
எங்கும் வசந்தமே வந்திங்கு
தங்கிட...
பூச்சரங்களே கோமகனுக்கு
சாமரம் வீசிட
அறவளி அறிஞர்களின்
அறிவுரை கேட்டிட
இவனல்லவோ இந்நாட்டின்..
கோலோச்சும் சிறந்த
தலைமகன்...
நம் உதயேந்திரவர்மன்
நாமம் வாழ்க வாழ்கவே..!!