# கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
#ஐம்புல சாராம்ச நிலை
மங்கையிடத்திலோ..!!
கண்டேன் விழிவழி பருகிட
கயல் விழியசைவை
மீனெனதுள்ளக் கண்டேன் ..
அவள் கண்ணசைவிலே..
செவிவழி இன்பத் தென்றலாக
வளையசைவில் கிங்கினி
நாதமிசைக்க கேட்டேனோ
வளையல் சத்தங்களாய்
அவள் கரவழி கீதத்தை..
இதழ் கனிச்சுவையை
பருகியே பசியாறி
மகிழ்ந்தினிக்கவே
அவள் மெல்லிய..
இதழ் விரிப்புகள்..
சுவாசங்கள் முழுவதும்
அவள் மேனி நறுமணத்தை
உள்ளிழுத்து உயிர் கொண்டு
வாழலாம் நெடுநாட்கள்..
தீண்டல் இதுவே காதலின்
விளைச்சல் நிலம்...
மங்கையிடத்தில் மட்டுமே
கிடைக்கும் அதியுயர்
மகரந்த துகள்களோ ..!!
கண்டு கேட்டு மோந்துண்டு
மகிழ ...
ஐவகை நிலவளமே
மங்கையிடத்தில்...!!