Srinithya
Guest
View attachment 282
ஆழியும் நம் மனமும் ஒன்று...
வெளியில் ஆர்பாட்டமாய்..
உள்ளுக்குள் அமைதியாய்..
ஆழியும் நம் மனமும் ஒன்று...
அகத்தே ஆயிரமாயிரம் ரகசியங்கள் கொண்டு...
ஆழியும் நம் மனமும் ஒன்று...
ஆழி சுழலோ எண்ண சுழலோ மீள்வது கடினம்..
ஆழியும் நம் மனமும் ஒன்று...
சிப்பிக்குள் மறைத்திருக்கும் முத்தைப் போல்
கோபத்திற்குள் மறைத்திருக்கும் மாசிலா அன்பைக் கொண்டு..
ஆழியும் நம் மனமும் ஒன்று...
ஆசைகள் ஆயிரம் அலை போல் எழுந்தாலும் அமைதியாய் அடங்கிவிடும் தன்மை கொண்டு..
ஆழியும் நம் மனமும் ஒன்று...
அலையாடும் நாவாய் போல் மனமாடும் எண்ணங்களும் தேடுவது கலங்கரை விளக்கமே...
ஆழியின் மரக்கலமோ மனதின் எண்ணமோ சேருமிடம் செலுத்துபவர் கைகளில்...
ஆழியும் நம் மனமும் ஒன்று...
வெளியில் ஆர்பாட்டமாய்..
உள்ளுக்குள் அமைதியாய்..
ஆழியும் நம் மனமும் ஒன்று...
அகத்தே ஆயிரமாயிரம் ரகசியங்கள் கொண்டு...
ஆழியும் நம் மனமும் ஒன்று...
ஆழி சுழலோ எண்ண சுழலோ மீள்வது கடினம்..
ஆழியும் நம் மனமும் ஒன்று...
சிப்பிக்குள் மறைத்திருக்கும் முத்தைப் போல்
கோபத்திற்குள் மறைத்திருக்கும் மாசிலா அன்பைக் கொண்டு..
ஆழியும் நம் மனமும் ஒன்று...
ஆசைகள் ஆயிரம் அலை போல் எழுந்தாலும் அமைதியாய் அடங்கிவிடும் தன்மை கொண்டு..
ஆழியும் நம் மனமும் ஒன்று...
அலையாடும் நாவாய் போல் மனமாடும் எண்ணங்களும் தேடுவது கலங்கரை விளக்கமே...
ஆழியின் மரக்கலமோ மனதின் எண்ணமோ சேருமிடம் செலுத்துபவர் கைகளில்...
Last edited: