ஹாய் பிரண்ட்ஸ் நான் ரோஜா என்ன ஞாபகம் இருக்கா.? 2 மாசம் முன்ன ஒரு டீசர் போட்டுட்டுப் போனவ, வேற ஒரு கமிட்மென்ட்ல வசமா சிக்கிட்டேன், இப்போ அதே கதையோட.... டைட்டில் and கவர் பிக் மட்டும் change பண்ணிட்டுத் திரும்பவும் வந்திருக்கேன்
என்னோட அடுத்த கதையான யுவராஜ் மலர்விழியோட கதை... முதல் அத்தியாயம் நாளைக்கு வரும் பிரண்ட்ஸ்... இப்போதைக்கு டீசர் மட்டும் படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்கப்பா.
மலரே என்னிடம் மயங்கிவிடுடீஸர் :
மலர்விழியின் நேற்றைய மறுப்பில் என்றுமில்லாதளவு அவள் மேல் மித மிஞ்சிய கோபத்தில் இருந்தவனோ, சிறு வயதிலிருந்து அவளை விளையாட்டுக்குக் கூட அடித்திராதவன் மனையாளின் கண்ணத்தில் தன் ஐந்து விரல்களும் பதியும்படி இடி போல் ஒரு அடியை இறக்கினான் யுவா...
"அறிவிருக்காடி ஒரு எலக்ட்ரானிக் பொருள இப்டியா கேர்லெஸ்ஸா ஹாண்டில் பண்ணுவ? மொத அதோட வேல்யு என்னனு தெரியுமா உனக்கு?" என்று ஒரு ஏளனச் சிரிப்பை அவளிடம் சிந்தியவன்....
"ஹ்ம்ம் உனக்கு எப்டி அதெல்லாம் தெரியும் நீயே படிப்பறிவில்லாத கூமுட்ட தான" என்றவனோ கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடியவன் ...
"ஷிட் அதுல என்ன என்ன இருக்குன்னு உனக்குத் தெரியுமாடி, இப்ப நீ செஞ்ச காரியத்தால எனக்கு எவ்ளோ நஷ்டமாகும் தெரியுமா.?" என்று மீண்டும் அவளை நோக்கி கை ஓங்கியவனைப் பார்த்து விரைந்து வந்த நாச்சியோ...
"வேணாம் ராசா" என்று அவன் கையை பற்றியவரை தீயாய் முறைத்தவனோ
அவரிடம் "பாத்தியா... நீதான நாடகம்லா போட்டு இவள எனக்குக் கட்டி வச்ச, எதுக்கு.? ஒண்ணுமே தெரியாத முட்டாள வச்சு காலம் முழுக்க நான் கஷ்டபடணும்னா.? சொல்லு அப்பத்தா" என்று மலரின் முகத்தைக் கூடப் பாராமல் அப்பத்தாவிடம் சீரியவனின் அறையில் மலரின் கண்ணம் மிளகாய் அரைத்துப் பூசியது போல் எரிந்தும் கூட...
மடிக்கணினியை உடைத்தது தன் தவறுதானே என்று கண்ணீரை கண் சிமிட்டி உள்ளிழுத்துக் கொண்ட மலரோ, "எதுக்கு மாமா பெரியவங்ககிட்ட கோவப்படுறீங்க கைத்தவறி தெரியாம போட்டுட்டேன் மாமா, என்ன மன்னிச்..." என்று அவன் கையைப் பற்றியவள் முடிக்கும் முன்னே...
"ச்சீ " என்று அவள் கையை உதறித் தள்ளியவனோ, “ஆமாடி உனக்கு என்ன தான் தெரியும் திங்கிறது தூங்குறது அத தவிர உனக்கு யாருக்கு என்ன தேவன்னு தெரியுமா? உன் புருசனுக்கு என்ன தேவன்னு மொத உன்னால புரிஞ்சுக்க முடிஞ்சதா? சாவடிக்கிறடி... ஒவ்வொரு நிமிஷமும் ஏண்டா உன்ன கல்யாணம் பண்ணோம்ன்னு பீல் பண்ண வக்கிர. ஏதோ மாமன் பொண்ணுன்னு ஒன்பதாவது கூட முடிக்காத உன்னப் போய் கல்யாணம் கட்டிகிட்டேன் பாரு எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்" என்றவனின் தாபமடங்கா கோப வார்த்தைகளை ஜீரணிக்க முடியாத மலருக்கு...
யுவாவின் கோபம் வெறும் மடிக்கணினியை உடைத்ததற்காக மட்டும் அல்ல என்று நன்கு புரிபட...
"என் மாமனுக்கு பொண்ண ஒழுங்கா வழக்கத் துப்பிருக்கா.? ஒண்ணுத்துக்கும் ஒதவாத பட்டிக்காட்ட எந்தலைல கட்டி வச்சிட்டு" என்று இன்னும் நிறுத்தாது மலரின் அப்பாவையும் சேர்த்து பொரிந்து தள்ளிக் கொண்டிருந்த யுவராஜிடம்
"போதும் மாமா... போதும். என்னால முடியல" என்று விசும்பலுடன் அழுகையில் வெடித்த மலர்விழியோ.
"நீங்க சொல்றது சரி தான் மாமா, எனக்கு எதுவுமே தெரியாது, நா ஒரு படிக்காத முட்டாள்தே, பட்டிக்காட்டு கூமுட்டதே, நான் உங்களுக்குச் சரியானவ இல்ல மாமா, உங்க படிப்புக்கும், அறிவுக்கும், அழகுக்கும் நான் கொஞ்சம் கூட தகுதியானவ இல்ல, அது எனக்கே நல்லா தெரியுது மாமா. ஆனா அதுக்காக என்ன விவாகரத்து ஏதும் பண்ணிராதீக மாமா, நா இந்த வீட்ட விட்டு போனா பொணமா மட்டுந்தே போவேன்"
என்றவளின் வார்த்தையில் விலுக்கென்று நிமிர்ந்த யுவா "விழீ..." என்று அவளை நோக்கி எட்டு வைக்கும் முன்...
"இப்போ... இப்போதக்கி சா.. சா.. சாகுற அளவுக்கு எனக்குத் தைரியம் கூட இல்ல மாமா, அதனால இந்த வீட்லயே ஒரு ஓரமா வே.. வேலக்காரி போல இருந்துக்குறேன். நீங்... நீங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி வேற பொண்ண கல்யா... கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்களுக்கு நான் வேணாம்... மாமா, வேற கல்யாணம் பண்ணிக்கோ..." என்று
முடிக்கக் கூட முடியாமல் விம்மியவள் ஓடிச் சென்று தங்கள் அறைக்குள் நுழைந்து கொள்ள... தன் இதயத் தாமரையில் வீற்றிருப்பவளின் இதயத்தை தன் சொல்லீட்டியால் கீறியவனோ அவளின் வலி மிகுந்த வார்த்தைகளில் இருந்த செய்தியில் அசையக் கூடத் தோன்றாது உறைந்து நின்றான் அவளின் மாமன் யுவராஜ்.
என்னோட அடுத்த கதையான யுவராஜ் மலர்விழியோட கதை... முதல் அத்தியாயம் நாளைக்கு வரும் பிரண்ட்ஸ்... இப்போதைக்கு டீசர் மட்டும் படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்கப்பா.
மலரே என்னிடம் மயங்கிவிடுடீஸர் :
மலர்விழியின் நேற்றைய மறுப்பில் என்றுமில்லாதளவு அவள் மேல் மித மிஞ்சிய கோபத்தில் இருந்தவனோ, சிறு வயதிலிருந்து அவளை விளையாட்டுக்குக் கூட அடித்திராதவன் மனையாளின் கண்ணத்தில் தன் ஐந்து விரல்களும் பதியும்படி இடி போல் ஒரு அடியை இறக்கினான் யுவா...
"அறிவிருக்காடி ஒரு எலக்ட்ரானிக் பொருள இப்டியா கேர்லெஸ்ஸா ஹாண்டில் பண்ணுவ? மொத அதோட வேல்யு என்னனு தெரியுமா உனக்கு?" என்று ஒரு ஏளனச் சிரிப்பை அவளிடம் சிந்தியவன்....
"ஹ்ம்ம் உனக்கு எப்டி அதெல்லாம் தெரியும் நீயே படிப்பறிவில்லாத கூமுட்ட தான" என்றவனோ கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடியவன் ...
"ஷிட் அதுல என்ன என்ன இருக்குன்னு உனக்குத் தெரியுமாடி, இப்ப நீ செஞ்ச காரியத்தால எனக்கு எவ்ளோ நஷ்டமாகும் தெரியுமா.?" என்று மீண்டும் அவளை நோக்கி கை ஓங்கியவனைப் பார்த்து விரைந்து வந்த நாச்சியோ...
"வேணாம் ராசா" என்று அவன் கையை பற்றியவரை தீயாய் முறைத்தவனோ
அவரிடம் "பாத்தியா... நீதான நாடகம்லா போட்டு இவள எனக்குக் கட்டி வச்ச, எதுக்கு.? ஒண்ணுமே தெரியாத முட்டாள வச்சு காலம் முழுக்க நான் கஷ்டபடணும்னா.? சொல்லு அப்பத்தா" என்று மலரின் முகத்தைக் கூடப் பாராமல் அப்பத்தாவிடம் சீரியவனின் அறையில் மலரின் கண்ணம் மிளகாய் அரைத்துப் பூசியது போல் எரிந்தும் கூட...
மடிக்கணினியை உடைத்தது தன் தவறுதானே என்று கண்ணீரை கண் சிமிட்டி உள்ளிழுத்துக் கொண்ட மலரோ, "எதுக்கு மாமா பெரியவங்ககிட்ட கோவப்படுறீங்க கைத்தவறி தெரியாம போட்டுட்டேன் மாமா, என்ன மன்னிச்..." என்று அவன் கையைப் பற்றியவள் முடிக்கும் முன்னே...
"ச்சீ " என்று அவள் கையை உதறித் தள்ளியவனோ, “ஆமாடி உனக்கு என்ன தான் தெரியும் திங்கிறது தூங்குறது அத தவிர உனக்கு யாருக்கு என்ன தேவன்னு தெரியுமா? உன் புருசனுக்கு என்ன தேவன்னு மொத உன்னால புரிஞ்சுக்க முடிஞ்சதா? சாவடிக்கிறடி... ஒவ்வொரு நிமிஷமும் ஏண்டா உன்ன கல்யாணம் பண்ணோம்ன்னு பீல் பண்ண வக்கிர. ஏதோ மாமன் பொண்ணுன்னு ஒன்பதாவது கூட முடிக்காத உன்னப் போய் கல்யாணம் கட்டிகிட்டேன் பாரு எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்" என்றவனின் தாபமடங்கா கோப வார்த்தைகளை ஜீரணிக்க முடியாத மலருக்கு...
யுவாவின் கோபம் வெறும் மடிக்கணினியை உடைத்ததற்காக மட்டும் அல்ல என்று நன்கு புரிபட...
"என் மாமனுக்கு பொண்ண ஒழுங்கா வழக்கத் துப்பிருக்கா.? ஒண்ணுத்துக்கும் ஒதவாத பட்டிக்காட்ட எந்தலைல கட்டி வச்சிட்டு" என்று இன்னும் நிறுத்தாது மலரின் அப்பாவையும் சேர்த்து பொரிந்து தள்ளிக் கொண்டிருந்த யுவராஜிடம்
"போதும் மாமா... போதும். என்னால முடியல" என்று விசும்பலுடன் அழுகையில் வெடித்த மலர்விழியோ.
"நீங்க சொல்றது சரி தான் மாமா, எனக்கு எதுவுமே தெரியாது, நா ஒரு படிக்காத முட்டாள்தே, பட்டிக்காட்டு கூமுட்டதே, நான் உங்களுக்குச் சரியானவ இல்ல மாமா, உங்க படிப்புக்கும், அறிவுக்கும், அழகுக்கும் நான் கொஞ்சம் கூட தகுதியானவ இல்ல, அது எனக்கே நல்லா தெரியுது மாமா. ஆனா அதுக்காக என்ன விவாகரத்து ஏதும் பண்ணிராதீக மாமா, நா இந்த வீட்ட விட்டு போனா பொணமா மட்டுந்தே போவேன்"
என்றவளின் வார்த்தையில் விலுக்கென்று நிமிர்ந்த யுவா "விழீ..." என்று அவளை நோக்கி எட்டு வைக்கும் முன்...
"இப்போ... இப்போதக்கி சா.. சா.. சாகுற அளவுக்கு எனக்குத் தைரியம் கூட இல்ல மாமா, அதனால இந்த வீட்லயே ஒரு ஓரமா வே.. வேலக்காரி போல இருந்துக்குறேன். நீங்... நீங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி வேற பொண்ண கல்யா... கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்களுக்கு நான் வேணாம்... மாமா, வேற கல்யாணம் பண்ணிக்கோ..." என்று
முடிக்கக் கூட முடியாமல் விம்மியவள் ஓடிச் சென்று தங்கள் அறைக்குள் நுழைந்து கொள்ள... தன் இதயத் தாமரையில் வீற்றிருப்பவளின் இதயத்தை தன் சொல்லீட்டியால் கீறியவனோ அவளின் வலி மிகுந்த வார்த்தைகளில் இருந்த செய்தியில் அசையக் கூடத் தோன்றாது உறைந்து நின்றான் அவளின் மாமன் யுவராஜ்.