#வானவில்
மழையும் வெயிலும் சங்கமிக்கும் தருணம்
வண்ணங்களின் வில்லாய் வளையும் தோரணம்...
உன் முதல் நிறமே யான் பித்தாகி இப்படி கிறுக்க காரணம்...
ஊதா....உன் மேல் எப்பொழுது மையல் கொண்டேன் நானறியேன்..
சுகந்தமாய் நுரையீரல் நுகரும் திரவியம்
அழகாய் கண்களை கவரும் வயல்கள்
காயாகும் அறிகுறியாய் சிறு மொட்டுக்கள்..
காராமணி கத்திரிக்காய் மிகையாய் சேர்க்க நீ தனி காரணம்..
எனை நன்கு அறிந்தோருக்கு தெரியும் நீயும் நானும் ஒட்டிபிறக்காத இரட்டை பிறவிகளென...
என் பலமும் நீ பலவீனமும் நீ
நிறமாலையில் உனை விட்டு நீங்காத என் கண்களின் ஆய்வுகூட கணங்கள்
என்னை மொத்தமாய் சாய்க்கும் உள்ளிழுக்கும் ஒரே மந்திர திறவுகோள்
ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா