#வானவில்
வானவில்லின்
ஏழு வண்ணங்களில்
எவருக்கும்
ஒவ்வொரு வண்ணம்
பிடித்தம் எனில்
யாவருக்கும்
பிடித்தமாய் வானவில்
நீ !!
உனை பிரித்து
தனி நிறம் பார்க்கவே
பிடித்தம் இல்லையே
எனக்கு !!
அழகுர அம்சமாய்
அருகருகே வளைந்து நின்று
பிரிந்தும்
பிரியாமலும்
இணைந்தும்
இணையாமலும்
கைக்கோர்த்தபடி
நீ !!
மழை கண்ட மகிழ்ச்சியில்
மயில் விரித்தாடும்
தோகைப் போலே
மழை பொழிந்த
மகிழ்ச்சியில்
வான் சூரியனின்
ஒளிகற்கள் கொண்டு
மேகங்கள் கொண்டாடி
விரித்தாடும்
அழகிய தோகை நீ
மழை கானும்
உவகையால்
மழலையென
மாறும்
மாக்கள் போலே
கொஞ்சி விளையாடும்
இயற்கை மழலையால்
ஓவியம் தீட்டிய
அழகிய வர்ண
புன்சிரிப்பு நீ
ஏழு வண்ணத்திலும்
ஒவ்வொரு இயலழகு
எனில்
ஒவ்வொரு மனிதனுக்கும்
தனித்துவ இயலழகாம்!!
ஓ ஆகையால் தானோ..
அருகருகே மனதில்
நிறுத்தி
கைக்கோர்க்கும்
வேலையிலே
சினேகம் எனும்
வானவில்
பிறக்கிறதோ !!