உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
கண்ணனும் குசேலனும்
குருகுல வாசம் கண்டு
நட்பு கொண்டனர்...
வாழ்வின் பிடியில்
இரு வேறு பாதை கண்டனர்..
துன்புற்ற வேளையிலும்
தம் நட்பின் பெயரில்
சுகிக்க துணியவில்லை குசேலன்...
வாசல் வரை வந்து கண்ணன் வரவேற்பது கண்டு
கொண்டு வந்த ஒரு பிடி
அவலையும் தர நாணி மறைத்திட
கண்டுகொண்ட கள்வனவன்
ஜாலம் பேசி பெற்றுக்கொண்டான்...
ஏதும் கேட்காமலே குசேலன் விடைபெற்றாலும்
நண்பன் துயர் சொல்லாமலே உணர்ந்து
துயர் துடைத்து நட்பின் வலு சேர்த்த மன்னவன் அவன்....
காவியத்தில் உருவான உயரிய நட்பு..
துயர் துடைக்கும் நட்புக்கு ஈடேது. ..