JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஸ்ரீநித்யா - திருக்குறள் 788

JLine

Moderator
Staff member

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

கண்ணனும் குசேலனும்
குருகுல வாசம் கண்டு
நட்பு கொண்டனர்...
வாழ்வின் பிடியில்
இரு வேறு பாதை கண்டனர்..
துன்புற்ற வேளையிலும்
தம் நட்பின் பெயரில்
சுகிக்க துணியவில்லை குசேலன்...
வாசல் வரை வந்து கண்ணன் வரவேற்பது கண்டு
கொண்டு வந்த ஒரு பிடி
அவலையும் தர நாணி மறைத்திட
கண்டுகொண்ட கள்வனவன்
ஜாலம் பேசி பெற்றுக்கொண்டான்...
ஏதும் கேட்காமலே குசேலன் விடைபெற்றாலும்
நண்பன் துயர் சொல்லாமலே உணர்ந்து
துயர் துடைத்து நட்பின் வலு சேர்த்த மன்னவன் அவன்....
காவியத்தில் உருவான உயரிய நட்பு..
துயர் துடைக்கும் நட்புக்கு ஈடேது. ..

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top