Janani Naveen
Well-known member
இரண்டு வாரங்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஆதி யசோ தங்கள் மழலை செல்வங்களோடு நிற்க வள்ளியம்மை அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். ருத்ரன் தன் தம்பி தங்கையோடு மிக சந்தோஷமாக பொழுதை கழித்தான். ஏற்கனவே வளைகாப்பு செய்யாத காரணத்தால் யசோவின் உடல் நன்கு தேறிய பின் பெயர் சூட்டும் விழாவை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டு இருந்தான். விழாவிற்கு மலரின் பெற்றோரை அழைத்திருந்தான். தன் தாய் வழி உறவுகளை அழைக்க மறுத்து விட்டான். பின் யசோ தான் ஆதியை ஒருவாறு சம்மதிக்க வைத்தாள். விழாவிற்கு ஒரு வாரம் முன்னதாக மலரின் பெற்றோர் வந்து விட்டனர். பேச்சியம்மாள் இன்னும் அவரால் தன் மகள் இடத்தில் யசோதாவை வைத்து பார்க்க முடியவில்லை. அவரும் ஒரு சராசரி தாய் அல்லவா அதுவும் தான் தவமிருந்து பெற்ற மகள் நன்கு வாழ வேண்டிய வயதில் இவ்வுலகை விட்டுச் சென்றதை அவரால் ஏற்க முடியவில்லை. ஆனால் பழைய குத்தல் பேச்சு எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தார். யசோ தான் எங்கே தன் மகன் மீீ்ண்டும் தன்னை தள்ளி நிறுத்துவானோ என்று தவித்து சற்று கூடுதலாக கவனித்தாள். ருத்ரனிடம் யசோ காட்டும் அன்பை பார்த்து கொண்டிருந்தார்.ஆனால் அவரே யசோதாவை தான் பெறாத மகளாக ஏற்கும் நாளும் வந்தது. விழா நாள் மிக அழகாக விடிந்தது. தாய் தந்தை இருவரும் தங்கள் மூத்த மகவை அழைத்து தன் தம்பி தங்கை பெயரை அவர்கள் காதில் சொல்ல சொன்னார்கள். அவனும் முறையே மலரஞ்சன் மற்றும் மதுமலர் என்று மூன்று முறை கூறினான். மலர் என்ற பெயரை கேட்ட நொடி பெரியவர்கள் இருவரும் நெகிழ்ந்து போயினர். அவர்கள் மனதில் யசோ சற்று உயர்ந்து நின்றாள். விழாவிற்கு வேதநாயகியும் வந்திருந்தார். சிறிதும் மாற்றமில்லை எப்பொழுதும் போல் நொடித்துக் கொண்டு இருந்தார். ஆனால் அதை மனதிற்குள் நினைத்துக் கொண்டார். எங்கே மகன்கள் வெளியே அனுப்பி விடுவார்களோ என்று பயந்து வாய் திறக்கவில்லை. ஒரு சிலரை திருத்த முடியாது. ஏற்கனவே மனம் சற்று நெகிழ்ந்து இருந்த பேச்சியம்மாள் என்ன தான் ருத்ரன் குழந்தைகள் உடன் சந்தோஷமாக இருந்தாலும் யசோவிடம் மட்டும் சிறிது ஒதுக்கம் காட்டுவதை கண்டு கொண்டார். எனவே தன் பேரனின் மனதில் தான் ஏற்றிய நஞ்சு வார்த்தைகளை தானே அகற்ற நினைத்தார். அதன்படி ஊருக்கு கிளம்ப தயாராக இருந்தவர் ருத்ரனை அருகில் வைத்துக் கொண்டு யசோதாவை அழைத்தார். இதுவரை நடந்த விஷயங்களை மனசுல வைச்சுகாதே மா. உன் நல்ல மனசிற்கு ஒரு குறையும் வராது மா. நான் தான் உன்னை தப்பா நினைச்சுட்டேன் என்று கூூறி தன் கையில் இருந்த பூவை யசோவின் தலையில் சூடி ஆசிர்வதித்தார். இன்ப அதிர்ச்சியில் யசோ அம்மா என்று கட்டிக் கொண்டாள். ருத்ரனுக்கு என்ன புரிந்ததோ அவனும் இருவரையும் கட்டிக் கொண்டான். இதை பார்த்த ஆதி தன் மொபைலில் புகைப்படங்கள் எடுத்து சேமித்துக் கொண்டான். சிறிது நேரம் கழித்து யசோ பேச்சியம்மாளிடம் அம்மா இப்போ இந்த வீட்டில் இரண்டு மலர் இருக்காங்க அவங்களுக்கு பாட்டி தாத்தா வா நீங்க தான் கூட இருந்து பார்த்துக்கணும் என்று அன்பு கட்டளை விதித்து குழந்தைகளை அவர்கள் கையில் கொடுத்தாள். அங்கே இன்னொரு மகளதிகாரம் இனிதே தொடங்கியது. அந்த இரு ரோஜா குவியல்களையும் தங்கள் கையில் மாறி மாறி முத்த மழை பொழிந்தனர் என்பதை சொல்லவும் வேண்டுமோ. அங்கேயே இருக்க சம்மதித்தனர். இதை எல்லாம் சற்று தள்ளி இருந்து பார்த்துக் கொண்டிருந்த வள்ளியம்மை மனதார கடவுளுக்கு நன்றி செலுத்தினார். உண்மையை வெளியே சொல்லவும் முடியாமல் யசோவின் மனத் துயரத்தையும் காண முடியாமல் தவித்தவர் அல்லவா. அங்கே இந்த புகைப்பட சட்டத்துக்குள் இருந்து பவதியும் மலரினி நாச்சியாரும் சிரித்துக் கொண்டு இருந்தனர். இன்னைக்கு தான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அத்து. மலருக்கு நியாயம் செய்து விட்டதாக எண்ணி ஆனந்த கண்ணீர் விட்டாள். பெண்ணவள் கண்ணீர் விட்டதும் அது ஆனந்த வெளிப்பாடே ஆயினும் அதை துடைத்த மன்னவன் போதும் யது மா இனி நீ எதுக்கும் அழக்கூடாது. சந்தோஷம் மட்டும் தான் இருக்கனும் எனக் கூறி அணைத்துக் கொண்டான். இனி வரும் காலங்களிலும் ருத்ரன் மனதில் குழப்பம் வந்தாலும் ஒர் தாயாக அதையும் தன் அன்பால் மாற்றி தெவிட்டாத சுவையாக என்றும் அவன் மனதில் நிறைந்து இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் நாமும் அவர்களிடமிருந்து விடை பெறுவோம். சுபம்.
|