அத்தியாயம் - 33
ஏற்கனவே அர்ஜூனின் மனம் முழுவதும் திகில் மண்டியிருக்க இதில் காவலர் வேறு பிரசவ வலியில் திவ்யா துடிப்பதைப் பற்றிக் கூறவும் உடல் முழுவதும் மின்னல் போன்று ஒரு அதிர்ச்சி உணர்வு ஒவ்வொரு நரம்பிலும் ஓட, அவர் விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள் வீட்டின் முன் பக்கம் கதவை அடைந்திருந்த அர்ஜூன் கதவை உடைக்க முயற்சிக்க, கதவு பலமாக உடைக்கப் படும் சத்தத்தில் உறைந்து போனாள் மஹா....
கீழே உயிர் போகும் வலியில் தரையில் துடித்துக் கிடந்த திவ்யாவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுரணை தப்பவும், அவளின் கண்கள் சொறுகுவதைக் கண்ட மஹாவிற்கு இனியும் வேறு வழி தோன்றாமல் நடப்பது நடக்கட்டும் என்று மனதிற்குள் தைரியத்தை வர வழைத்துக் கொண்டவள் கதவை திறக்க எழவும், அர்ஜூனின் குரல் கேட்கவும் சரியாக இருக்க, வந்திருப்பது தன் அண்ணன் தான் என்று அறிந்த மகிழ்ச்சியில் அலறி அடித்துக் கொண்டு ஓடியவள் கதவை திறக்க,
கதவை திறந்த தன் தங்கையைக் கண்ட அர்ஜூன் பதற்றத்தோடு அவளை இறுக்கக் கட்டி அணைத்தவனின் கண்கள் மஹாவிற்குப் பின்னால் தரையில் துடித்துக் கொண்டிருந்த தன் மனையாளின் மீது பதிந்தது....
பதிந்த கண்களும், தன் மனைவியின் நிலையை உணர்ந்த மூளையும், அவளின் கதறலைக் கேட்டுக் கொண்டிருந்த இதயமும் ஒரு சில விநாடிகள் இரத்த ஓட்டம் தடைப் பட்டதுப் போல் ஒரே சமயத்தில் உறைய....
மீண்டும் திவ்யாவின் "அம்மா" என்று கதறலில் தன்னிலை இழுத்துப் பிடித்தவன் திவீஈஈஈஈஈ" என்று அலறிக் கொண்டு அவள் அருகில் ஓடியவன் அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து அவள் தலையைத் தன் கைகளில் ஏந்த, உயிர் போகும் வலியில் இருந்தவளுக்குத் தன் கணவனின் குரல் கேட்கவும் அந்த வலியிலும் நிம்மதி பெரு மூச்சு வந்தது...
தன்னந்தனியாகக் கட்டாந்தரையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியின் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தவளின் பரிதாப நிலைமை அர்ஜூனின் இதயத்தை வாள் கொண்டு இரண்டாக அறுத்துப் பிளந்தது போல் வலித்தது என்றால்...
"என்னங்க.........." என்று ஏதோ சொல்ல வந்தவளை தன் இரு கைகளாலும் தூக்க முயற்சித்தவனின் உடலும் உள்ளமும் சகலமும் அடங்க விரைத்துப் போனான் அவளின் புடவை முழுவதும் நனைந்து ஈரமாக இருப்பதை உணர்ந்ததும்...
அதற்குள் அருணும், வினோத்தும், மற்ற காவலர்களுடன் கமிஷனரும் வீட்டிற்குள் நுழைந்திருக்க, காவலர்கள் ஒவ்வொரு அறையாக நுழைந்து வேறு எவராவது எங்கேயாவது பதுங்கி இருக்கிறார்களா என்று தேட, அருணை நோக்கிய அர்ஜூனின் மனம் முழுவதும் விவரிக்க இயலாத நிலையில் கலங்கித் தவித்து இருக்க, அவனின் கலக்கத்தையும் தவிப்பையும் அப்பட்டமாக வெளிப்படுத்திய, சொல்ல முடியாத அளவிற்கு வலிகளைச் சுமந்த முகத்தோடும், குரலோடும்...
"அருண்... வாட்டர் ப்ரேக் ஆகிடுச்சு... கால் தி டாக்டர் [Call the doctor]" என்று அலறினான்....
கோகுல் திவ்யாவை கீழே தள்ளியதில் நிலைத் தடுமாறி அவள் தரையில் விழுந்த நிமிடமே அவளுக்குப் பிரசவத்தின் நேரம் துவங்கியிருந்தது... தன் நாத்தனாரைக் காப்பாற்றும் நோக்கில் தான் அவள் தன் வலியைக் கூட மறந்து மீண்டும் அவனிடம் போராடச் சென்றாள்... ஆனால் வலியின் உச்சியைக் கிட்டத்தட்ட அப்பொழுதே அடைந்துவிட்டிருந்தவளால் அதற்கு மேல் ஒரு நொடி கூட நிற்க முடியாமல் தான் மீண்டும் தரையில் சரிந்தது....
பிரசவத்தை, பேறு காலத்தின் வலியை அனுபவித்த பெண்களுக்குத் தான் தெரியும் அந்த இணையில்லாத வலியின் வேதனையும், அதன் கொடுமையும்....
மருத்துவருக்கு அழைத்த அருண் விஷயத்தைச் சொல்ல,
"ஆண்டி, திடீர்னு திவ்யா அண்ணிக்கு லேபர் பெயின் வந்திருச்சு... பட் நாங்க இப்போ வீட்டில் இல்லை... இந்த நிலைமையில இவங்களை உங்க ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு வர முடியும்னு தோணலை... வாட்டர் வேறு ப்ரேக் ஆகிடுச்சு" எனவும்...
அவனின் பதட்டத்தில் இருந்து ஏதோ நடக்கக்கூடாத அசம்பாவிதம் நடந்திருப்பதைப் புரிந்துக் கொண்டவர்...
"வாட்டர் ப்ரேக் ஆனாலும் பரவாயில்லை அருண்... நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க ஆம்புலன்ஸை அனுப்பி விடுறேன்...." என்றார்….
தாங்கள் இருக்கும் இடத்தை அருண் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மீண்டும் திவ்யாவை தன் கரங்களால் தூக்க முயற்சித்த அர்ஜூனின் கரம் பற்றியவள் பல்லைக் கடித்துக் கொண்டு வேண்டாம் என்று தலை அசைக்க, மனைவியின் செய்கையில் குழம்பியவன்...
"திவி... ஆம்புலன்ஸ் வர வரைக்கும் வெய்ட் பண்ண முடியாது... நம்ம காரில் ஹாஸ்பிட்டல் போவோம்... வர வழியில் ஆம்புலன்ஸில் உன்னை ட்ரான்ஸ்ஃபர் பண்ணலாம்" எனவும்,
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மெல்ல தலை அசைத்து தன் கணவனைத் தன் அருகில் வரச் சொன்னவள் அவனின் காதில் ஏதோ சொல்ல, அவள் சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ந்த அர்ஜூனிற்கு இதயம் தன் துடிப்பை சில நொடிகள் நிறுத்தியது போன்று இருந்தது...
அருணையும் கமிஷனரையும் திரும்பி பார்த்தவன்...
"ஐ தின்க் தி பேபி இஸ் ரெடி டு கம் [I think the baby is ready to come] " என்றவன் அதிர்ந்து கலங்கிய முகத்துடன் தன் மனையாளைப் பார்த்தது ஒரு சில விநாடிகள் தான்...
ஆழ்ந்த பெருமூச்சு விட்டவன் தன்னைச் சமன் படுத்திக் கொண்டு அருணிடம் அலை பேசியைக் கேட்டுக் கரத்தை நீட்டவும், அவனிடம் அலைப் பேசியைக் கொடுத்த அருண் நெஞ்சம் முழுவதும் திகில் சூழ்ந்திருக்க மஹாவையும் வினோத்தையும் திரும்பி பார்க்க, அதற்குள் அர்ஜூன் மருத்துவரிடம் பேசத் துவங்கி இருந்தான்....
"ஆண்டி... ஐ டோண்ட் திங் வி ஹாவ் இனாஃப் டைம்... [Aunty, I don't think we have enough time]" என்றவன் திவ்யாவின் மீது தன் அதிர்ந்த விழிகளைப் பதித்தவாறே அவளின் நிலைமையை எடுத்துரைக்க,
"சரி அர்ஜூன்... ஜஸ்ட் டோண்ட் பேனிக் [Just dont panic] நான் சொல்ல சொல்ல செய்... அது போதும்" என்றவர் பேசத் துவங்க...
அங்கு மருத்துவரோ, செவிலியர்களோ, மருத்துவ உபகரணங்களோ, மருத்துவ அனுபவமோ இல்லாத ஒரு பிரசவத்திற்குத் தயாரானான் அர்ஜூன்...
"அர்ஜூன்... வலியில் பாவம் சின்னப் பொண்ணு ரொம்பக் கத்துவா... பட் அவளுக்குப் பிரசவத்தைத் தாங்குற சக்தி வேணும்... இதில டாக்டர்ஸ் யாரும் இல்லாமல் டெலிவரி பார்க்கறதுல நிச்சயம் இன்னும் பயந்துப் போவா... அவளுக்கு முதல்ல ஆறுதல் சொல்லு... ஹான்.. அப்புறம் உன்கூட லேடிஸ் யாராவது இருக்காங்களா?"
"யெஸ் ஆண்டி... மஹா இஸ் ஹியர்..."
"ஓகே அர்ஜூன்... ஃபேஸ் டைம் [Face time] பண்ண சொல்லு... நான் திவ்யாவைப் பார்க்கனும்... இங்க இருந்தே கைட் பண்ணுறேன்..." என்றவர்...
"அர்ஜூன்... சில திங்க்ஸ் வேணும்... உங்களால ரெடி பண்ண முடியுமா?" எனவும்...
"யெஸ் ஆண்டி..." என்றவன் மஹாவிடம் அலைப் பேசியைக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்க,
தன் தங்கையின் அலறலிலும், அருண் மஹாவின் வெளிறிய முகத்தைப் பார்த்தும் அரண்டு போயிருந்த வினோத்தின் தோற்றத்தில் தெரிந்த கலவரத்தைக் கண்ட அர்ஜூன் தானும் ஒரு அண்ணனாக...
"வினோத்... உங்களுக்குப் பார்க்க கஷ்டமா இருக்கும்... வேணா வெளியில் இருங்க... தேவைப்பட்டா உங்களைக் கூப்புடுறேன்" என்றவனின் முகத்தைக் கண்களில் நீர் தளும்பப் பார்த்திருந்த வினோத்திற்குத் தன் செல்லத் தங்கையின் கதறல் உடல் முழுவதும் துடிக்க வைக்க, இருந்தும் அர்ஜூனின் தைரியத்தில், அவனின் புத்திக் கூர்மையில், எந்தச் சூழ்நிலையிலும் தன் நிதானத்தை சிதறவிடாத அவனின் சாமர்த்தியத்தில் நம்பிக்கை வைத்து திவ்யாவை திரும்பி திரும்பிப் பார்த்தவாறே வெளியில் செல்ல முனைந்தவன் அறையின் வாயிலை அடையும் முன் மீண்டும் திவ்யாவின் "அம்மா" என்ற அலறல் சத்தத்தில் அதிர்ந்து தடுமாறினான்…
பிறந்ததில் இருந்து தன் பெற்றோரிடம் கூடத் தன் மனம் விட்டு பேசாதவள், தன் காலையே சுற்றி சுற்றி வந்த தன் செல்ல தங்கையை இந்த நிலையில் விட்டு செல்ல மனம் இல்லாது திரும்பி வந்தவன்...
"இல்ல அத்தான்... நானும் இங்கேயே இருக்கேன்" என்றான்...
"சரி வினோத்... நீங்க டாக்டர் ஆண்டி சொல்ற திங்க்ஸ் எல்லாம் வீட்டில் எங்கேயாவது, எஸ்பெஷலி கிச்சனில் இருக்கான்னு பாருங்க" என்று தேடச் சொன்னவன் மற்ற காவலர்களை வெளியில் போகச் சொல்ல,
மருத்துவர் கேட்ட பொருட்களைத் தேடிச் சென்ற வினோத்திற்கு நல்ல நேரம், அனைத்தும் அந்தக் கெஸ்ட் ஹவுஸின் சமையல் அறையில் இருந்தது...
வினோத்திடம் இருந்து பொருட்களை வாங்கிய அர்ஜூன் திரும்பி அருணைப் பார்க்கவும், அவனின் அதிர்ந்து கலங்கிய முகத்தை வைத்து அவனின் எண்ண ஓட்டங்களைக் கணித்தவன்...
"அருண்... இவ உனக்கு இப்ப அண்ணி இல்ல... அம்மாவா நெனச்சுக்க... தயங்காம எனக்கு ஹெல்ப் பண்ணு.... பட் உனக்குக் கஷ்டமா இருந்தா நீ வெளியில் வெயிட் பண்ணு... அவசியம்னா கூப்புடுறேன்" என்ற அண்ணனின் கூற்றில் திவ்யாவைத் திரும்பி பார்த்த அருணிற்கு அங்குத் தன் அண்ணியின் முகத்தில் தன் அன்னையே தெரிய, ஒரு மகனாகத் தன் அண்ணிக்குச் செய்ய வேண்டிய கடமைக்குத் தயாரானான் அந்த இளம் கல்லூரி மாணவன்....
மனித நேயம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதனை அந்த இல்லத்தில் இருந்த அனைவரும் வெளிப்படுத்தி இருந்தார்கள் அவர்களின் குணாதிசயங்களில், செய்கைகளில்.....
"அர்ஜூன்... முதல்ல நீ ஸோப் இருந்தால் வெந்நீரில உன் கைகள முழங்கை வரை சுத்தம் பண்ணு... அப்புறம் நிறையச் சுத்தமான துணிகள் வேண்டும்... அதையும் ரெடிப் பண்ணு... " எனவும்...
சரி என்ற அர்ஜூன் சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்குத் துணி மணிகள் ஒன்றும் இல்லாததைக் கண்டு...
"அருண்... இங்க ஏதாவது ரூமில் கொஞ்சம் துணி இருக்கான்னு பாரு... பட் க்ளீன் க்ளோத்ஸா இருக்கனும்" எனவும்..
ஒவ்வொரு அறையாகச் சென்று தேடியவன் ஒரு வழியாகச் சில துணிகளை எடுத்து வர,
தன் சட்டையைக் கை முட்டி வரை மடித்து மருத்துவர் சொன்னது போல் குளியல் அறையில் வெந்நீரில் தன் கரங்களை முழுவதும் தேய்த்து கழுவிய அர்ஜூன், அருண் கொடுத்த துணிகளைத் திவ்யாவின் கீழ் போட்டவன் தன் மனைவியின் பிரசவத்திற்குத் தயாராக,
தன் அன்னையை அச்சத்தின், அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கும், வாழ்நாளில் எதற்கும் கலங்காத கடினமான இதயத்தைக் கொண்டிருக்கும் தன் தந்தையைப் பிறக்கும் பொழுதே கதி கலங்க அடித்திருக்கும், அர்ஜூன் திவ்யாவின் வாரிசு இந்தப் பூமியில் உதிக்கத் தன் முதல் முயற்சியைத் துவங்கினான்....
தங்களின் மகவு இந்தப் பூவுலகத்தில் அவதரிக்க எடுக்கும் முனைப்பில் திவ்யாவின் வலி உச்சக்கட்டத்தை அடைய, தன் மனைவியின் அலறல் சத்தம் அர்ஜூனின் உயிரின் வேர் வரை சென்று அவனை அச்சத்தில் நடுங்க வைக்கப் பிறந்ததில் இருந்து பயம் என்பதனையே அறியாதவன், எளிதில் ஒருவராலும் அசைக்க முடியாதவன், அஞ்சா நெஞ்சன் என்ற பெயர் எடுத்த அர்ஜூன் முதன் முறை பயம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்தவன் மனைவியின் கதறலில் முகம் வெளிறிப் போக அவள் கையை இன்னும் இறுக பற்றியவாறே....
"திவி, கொஞ்சம் பொறுத்துக்கோடி" என்றான் தவிப்புடன்...
மருத்துவர் அற்ற, மருத்துவமனையில் அல்லாத அதுவும் முதல் பிரசவம்.... உடலில் உள்ள அத்தனை எலும்புகளையும் ஒரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக நொறுக்கியது போல் வலி.... இதில் தன் குழந்தை எந்த ஆபத்தும் இல்லாமல் பிறக்க வேண்டுமே என்ற தாய்மையின் கலக்கம்....
வலியில் தன் கணவனின் கரத்தை இறுக பற்றித் தன்னருகில் இழுத்தவள் பற்களைக் கடித்துக் கொண்டு...
"என்னால முடியலைங்க.. செத்து போயிருவேன் போல இருக்கு..... " என்று கதற,
அவளிடம் இருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயற்சித்தவனால் அவளின் இறுக்கத்தைத் தளர்த்த இயலாமல் தன்னருகில் நின்றிருந்த அருணை நிமிர்ந்துப் பார்த்தவன் திவ்யாவின் கரத்தை தன் தம்பியிடம் நீட்ட,
திவ்யாவின் தலைப் பக்கம் சென்ற அருண், தன் அண்ணியின் தலையை ஒரு அன்னையாக மடி ஏந்தியவன் அவளின் கரத்தை இறுக்கப் பற்றிக் கொள்ள,
அந்த நேரத்திலும் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க, உயிர் போகும் வலியில் துடித்துக் கொண்டிருந்தவள் மெல்ல நிமிர்ந்து தன்னை மடி தாங்கிய கொழுந்தனையும், மனம் முழுவதும் அச்சமும் அதிர்ச்சியும் சூழ்ந்திருந்தாலும் தன் காலடியில் அழுத விழிகளுடனும் தவிக்கும் முகத்துடனும் தன் அண்ணனுக்கும் மருத்துவருக்கும் பாலமாக இருக்கும் நாத்தனாரையும், இந்தப் பூமியில் தான் உதித்த நேரத்தில் தன் பெற்றோரிடம் இருந்து தன்னை வாங்கித் தன் தோளில் சுமந்து தனக்கு அன்னைக்கு அன்னையாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருந்து, இன்று தன் காலுக்கருகில் தன் தங்கையின் மகவையும் கரங்களில் சுமக்க ஏக்கத்தோடும் பரிதவிப்புடன் நிற்கும் தன் தமையனையும்...
விதி வசத்தால் ஒரே இடத்தில் சந்திக்க நேர்ந்திருந்தாலும், திருமணம் என்ற பந்தத்தில் மனம் ஒவ்வாமல் இணைந்திருந்தாலும், தன் இதயத்தைக் காதல் என்ற நுண்ணுணர்வு என்று ஊடுருவி நுழைந்ததோ அன்றில் இருந்து தன் ஆணவம், அகம்பாவம், கர்வம், திமிர் என்ற அனைத்தையும் தன் மனையாளின் பாதத்தில் சமர்ப்பித்துவிட்ட தன் கணவன் இதோ பூமியில் இன்னும் சில நிமிடங்களில் அவதரிக்கப் போகும் தன் வாரிசை தன் கரங்களில் ஏந்த தன் காலடியில் தைரியத்துடனும் அதே சமயம் தவிப்புடனும் முழங்கால் இட்டு மண்டியிட்டு இருப்பதைக் கண்டவளுக்கு...
"என்ன தவம் செய்தேன் இறைவா இவர்கள் என் வாழ்வில் தோன்ற!!!!!" என்றே இருந்தது.....
"அர்ஜூன்... இட்ஸ் டைம் [It's time].... திவ்யாவை புஷ் பண்ணச் சொல்லு... நீயும் ரெடியா இரு... பேபி ஸ்லிப் ஆகாம இருக்கனும்..." என்று மருத்துவர் கூற...
அவர் பேசுவதைக் கேட்ட திவ்யா...
"இல்லங்க... என்னால முடியல" என்று கதற...
"திவி... ஐ கேன் ஸி தி பேபிஸ் ஹெட் [ I can see the baby's head ]... எனக்குக் குழந்தையைப் பார்க்க முடியுது... ப்ளீஸ்... கொஞ்சம் ட்ரைப் பண்ணுடி..." என்று ஆறுதல் படுத்தியவனின் மனம் முழுவதும் திகில் உச்சஸ்தாயியை அடைந்திருந்தாலும், தன்னவளின் கதறல் தன் ஆத்மாவையே துளைத்து ஊடுருவுவதைப் போல் வலியெடுக்கச் செய்திருந்தாலும், தங்கள் காதலின், ஆத்மார்த்தமான தாம்பத்தியத்தின் பரிசாகத் தன்னவளின் வயிற்றில் உதித்திருக்கும் தன் முதல் வாரிசு இந்தப் பிரபஞ்சத்திற்குள் பாதுகாப்பாக அடியெடுத்து வைக்க ஒரு தந்தையாக அவனைக் கரங்களில் ஏந்தத் தயாராகக் காத்திருக்க,
மீண்டும் மீண்டும் மருத்துவரும் தன் கணவனும் கூறுவதைப் போல் முயற்சி செய்தவள், வலி தாங்கும் அடி எல்லையைக் கடந்தவள் கிட்டத்தட்ட மயக்க நிலைக்குச் செல்ல,
"திவி" என்ற தன் கணவனின் குரலில் தன்னிலை இழுத்துப் பிடித்தவள் இறுதியில் தன் உயிரை இறுக பிடித்துக் கொண்டு, அருணின் கரத்தை உடையும் அளவிற்கு பற்றிக் கொண்டு கடைசி முயற்சியாகத் தன் குழந்தையை வெளிக் கொணர முனைந்ததில் தன் அன்னையை உடலாலும், தன் தந்தையை மனதாலும் தன்னால் இயன்ற மட்டும் கலங்கடித்து, ஊருக்கே ராஜாவாக, தன்னை சுற்றியிருக்கும் அனைவரையும் தன் உள்ளங்கைக்குள் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தன் தந்தையை விட, எதிர் காலத்தில் எதிராளிகளைக் கதி கலங்கடிக்கப் போகும் வேங்கைப் புலியாக, அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்க போகும் குட்டி அர்ஜூன் அதிரடியாக அவதரித்தான் இந்தப் பூமியில்...
தந்தையின் கரங்களில் விழுந்த அர்ஜூனின் மகவு வெளியே வந்ததும் வீறிட்டு அழ, எங்குக் குழந்தையைக் கீழே போட்டு விடுவோமோ என்று பயந்தவன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துப் புதிதாகத் துளிர்த்திருக்கும் தளிரின், தன்னவளின் ரத்தத்தில் தோய்ந்திருந்த, கர்ப்ப பையின் கசடுகளைப் பூசியிருந்த தலை உச்சியில் கொஞ்சமும் அருவருக்காமல் தன் முதல் முத்தத்தை மென்மையாகப் பதிக்க, தன் குழந்தையின் அழுகை சத்தமும், அவனின் மென்மையான ஸ்பரிசமும் இந்தப் பூ உலகத்தையே தன் காலடிகளுக்குள் கொண்டு வந்தது போல் இருந்தது அர்ஜூனிற்கு...
திருமணம் ஆன அன்றே தன் வாழ்க்கையில் இருந்து அவளை அகற்ற வேண்டும், தன் வாழ்க்கைப் பாதையில் அவளுடன் ஒருங்கே பயணிக்க முடியாது என்று உறுதியாக அவளை விவாகரத்துச் செய்ய வேண்டும், அவளின் முகம் கூடத் தன் மனதில் பதியக்கூடாது என்று வெறுத்து அவளைத் துடிக்க வைத்துத் தூரம் சென்றவன், தன்னவளின் இதயத்தில் ரண வேதனை உண்டாக்கியவன் இன்று தன் மனையாளுக்குத் தானே பிரசவம் பார்த்து, பூப் பொதியை கைகளில் ஏந்துவது போல் தன் கரங்களில் ஏந்திய தன் குழந்தையின் பிஞ்சு முகத்தைப் பார்த்தவனின் மனதில் சொல்ல முடியாத உணர்வுகளின் தாக்கம் வர, உடல் முழுவதும் சிலிர்த்தவன் முதன் முறை தன்னில் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான்....
தன் விழிகளில் ஈரம் படர்ந்திருப்பதை....
இதயத்தில், வார்த்தைகளில் சொல்ல முடியாத கிளர்ச்சி படப்படப்புடன் பரவி இருக்க, தன் நாடி நரம்புகளில் எல்லாம் உணர்வலைகள் சில்லிட்டு துடிப்புடன் படர்ந்திருக்க, ரோமங்கள் சிலிர்க்க உணர்ச்சிகளின் பேரொலியில் சிக்கியிருந்த அர்ஜூனின் விழிகளில் நீர் கோத்திருந்ததில் அதிசயம் இல்லையே...
"அர்ஜூன்... கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க... லெட் தி ப்ளெஸண்டா கம் அவுட் ஃப்புல்லி... அதே போல் அம்பிளிக்கல் கார்ட (umbilical cord / தொப்புள் கொடியை) நீ கட் பண்ணாம இருக்கிறது தான் நல்லது... பட் நீங்க இருக்கிற தூரத்தைப் பார்த்தால் நிச்சயம் நீங்க ஹாஸ்பிட்டல் வருவதற்கோ அல்லது ஆம்புலன்ஸ் உங்க இடத்திற்கு வருவதுக்கோ ரொம்ப நேரம் ஆகும் போல தெரியுது... ஸோ ஒரு டூ டு பைஃவ் மினிட்ஸ் வெயிட் பண்ணிட்டு தென் அம்பிளிக்கல் கார்டின் இரண்டு முனைகளையும் க்ளீன் க்ளோத் இருந்தால் க்ளாம்ப் போடுவது போல இறுக்கி கட்டிட்டு தென் ஸ்டெரிலைஸ் பண்ணின நைஃப் ஆர் சிஸர்ஸ் வைத்து நடுவில் கட் பண்ணு..... உடனே கட் பண்ணிடாத, அதே போல் ரொம்ப நேரமும் விட்டுறாத...." என்ற மருத்துவர் குழந்தையைச் சுத்த படுத்தும் முறைகளையும் சொன்னவர் திவ்யாவை சிறிது நேரம் அசைக்காமல் இருக்கச் சொல்லி, பின் ஆம்புலன்ஸில் அவளை ஏற்றி மருத்துவமனைக்கு வரப் பணித்தார்...
குழந்தையைக் கரங்களில் ஏந்தியவன் அவர் சொன்னது போல் தொப்புள் கொடியையும் வெட்டி விட்டு சுற்றும் முற்றும் பார்க்க, தங்கையின் வீறிடலில் உடல் முழுவதும் நடுங்கித் துடித்து நின்றிருந்தாலும், அவளின் மகவின் அழுகையில் சிலிர்த்துப் போன வினோத் தன் இரு கரங்களையும் நீட்ட, வினோத்தின் அருகிலேயே நின்றிருந்த மஹா தன் சுடிதாரின் துப்பட்டாவை வினோத்தின் கரங்களில் போட, தன் மச்சினனும் தங்கையும் நின்றிருந்த தோற்றத்தில் அவர்களின் செய்கைகளில் மனம் கிளர்ந்த அர்ஜூன் பஞ்சுப் பொதி போல் குழந்தையைக் கொடுக்க,
தங்கையை ஏந்திய கரங்களில் அவளின் வாரிசையும் ஏந்திய வினோத்தின் உடலில் மயிற்கால்கள் கூச்செறிந்தது என்றால்.....
வாழ்க்கையில் முதன் முதலாக, இரும்பு மனம் படைத்தவன், அதிகாரம், ஆணவம், கர்வம் என்று அனைத்தையும் ஒருங்கே கொண்ட தன் அண்ணனின் கண்களில் நீர் தளும்பி இருந்ததைப் பார்த்த மஹாவிற்குத் தாய்மையின் பூரிப்பு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு மட்டும் சொந்தமல்ல... அந்தக் குழந்தைக்குத் தன் உயிரைக் கொடுத்து வாழ்நாள் முழுவதும் அதனைத் தன் மனதில் சுமந்து கொண்டிருக்கும் தந்தைக்கும் சொந்தமே என்றே தோன்றியது....
பிரசவத்தில் அதிகமாக இரத்தப் போக்கு ஏற்பட்டதில் அந்த நொடியே திவ்யாவின் கண்களை இருட்டச் செய்ய, ஆனால் அதற்குள் தன் குழந்தையைப் பற்றி அறிந்துவிட வேண்டும் என்ற உந்துதலில் தன் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த வலுவையும் சேர்த்து தலையை மெல்ல தூக்க முடியாமல் தூக்கியவள் தன் கணவனைப் பார்க்கவும், அவளின் எண்ணங்களையும் எதிர்பார்ப்பையும் புரிந்துக் கொண்டவன்....
"ஆண் குழந்தை திவி.... பேபி இஸ் ஃபைன் [Baby is fine]" என்று இதழ் விரித்துப் புன்னகைத்தவாறே கூற...
கணவனின் கூற்றில், போன உயிர் மீண்டு வந்தது போல் ஆழ பெருமூச்சுவிட்டவள் அதிகப்பட்ச வலியினால் தவித்து இருந்ததினால் உடல் முழுவதும் மரத்துப் போனது போல் இருக்க அதுவரை தன் கணவனிற்காகவும், தான் பெற்றெடுக்க வேண்டிய தங்களின் மகவிற்காகவும் உச்சியில் இருந்து உயிர் நாடி வரை சுண்டி இழுத்துக் கொண்டிருந்த வலியைப் பற்களைக் கடித்துப் பொறுத்துக் கொண்டவள் தன் கடமை முடிந்தது என்பது போல் மீண்டும் தன் கொழுந்தனின் மடியில் தலை சாய்த்தவள் மெல்ல விழிகளை மூட...
மஹாவுடனும், வினோத்துடனும் சேர்ந்து குழந்தையைச் சுத்த படுத்திய அர்ஜூன் மீண்டும் வினோத்திடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு திவ்யாவிற்கு அருகில் அமர, வலியில் கிட்டத்தட்ட தன் சுய நினைவை இழந்துக் கொண்டிருந்தவளைக் கண்டவனிற்குத் தன் மனையாளின் நிலைக் கண்டு பகீரென்று இருந்தது...
அப்பொழுது தான் அதிகமான அவளின் இரத்தப் போக்கு அர்ஜூனின் நினைவிற்கு வர, அது வரை குழந்தையை வெளிக் கொணறுவதில் மட்டுமே மனம் நிலைத்து இருந்ததினால் தன்னவளின் நிலையைப் புரிந்துக்கொள்ளாமல் தடுமாறியிருந்தவன்....
அருணின் மடியில் இருந்த தன்னவளின் தலையைத் தன் மடிக்கு மாற்றித் தன் இரு கரங்களாலும் தாங்கி பிடித்திருந்தவனின் முகம் முழுவதும் திகில் அப்பியிருக்க, குரலும் தன் கரங்களும் வெளிப்படையாக நடுங்க...
"திவி.. கண்ணை முழிச்சிப் பாருடி...ப்ளீஸ்" என்று குரல் நடுங்க, உள்ளம் தடுமாற இறைஞ்சினான்....
இருபது வயதே ஆன சிறு பெண், நிறை மாதக் கர்ப்பிணி என்றும் பாராமல் அவளைக் கடத்தி, ஈவு இரக்கம் அற்ற ஒரு மிருகத்தின் கரங்களில் சிக்கி, கீழே தள்ளப்பட்டுப் பல மணி நேரங்களாகப் பேறு கால வலியில் துடித்து, ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் மருத்துவ வசதி எதுவுமே இல்லாமல் தன் கணவனாலேயே பிரசவம் பார்க்கப் பட்டு, இறுதியில் வலியினால் ஏற்பட்ட மயக்கத்தினால் கண்கள் மூட,
என்ன தான் அந்த நிமிடம் வரை அர்ஜூன் தன் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இழக்காமல் அவளுக்குப் பிரசவம் பார்த்திருந்தாலும் தன் மனைவி தன் கண்களை மூடிய அந்த நிமிடம் அச்சத்தின், அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றவன் பதற்றத்துடன்....
"அருண்... ஆம்புலன்ஸ் எங்க வந்திட்டு இருக்குன்னு செக் பண்ணு.... இல்லைன்னா திவ்யாவை காரில் தூக்கிட்டு போகலாம்..." என்று கலக்கத்துடன் சொல்லவும் ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது…
வினோத் குழந்தையைச் சுமந்திருக்க, தன் இரு கைகளாலும் திவ்யாவை தூக்கிய அர்ஜூன் ஆம்புலன்ஸில் இருந்த ஸ்ட்ரெச்சரில் அவளைப் படுக்க வைத்தவன், மஹாவைத் திவ்யாவின் தலைமாட்டில் அமர செய்து, வினோத்திடம் இருந்த தன் குழந்தையைத் தன் கரங்களில் ஏந்திக் கொள்ள, அருணும் வினோத்தும் அர்ஜூனின் காரில் வர, கமிஷனரின் கார் அவர்களைப் பின் தொடரவும், அசுர வேகத்தில் மருத்துவமனையை நோக்கி பறந்தது ஆம்புலன்ஸ்.....
திவ்யா வழக்கமாகப் பரிசோதனை செய்யும் மருத்துவமனை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெகுத் தொலைவில் இருந்ததால் அவளின் மருத்துவர் சொன்னது போல் அவர்களுக்கு சிறிது தூரத்தில் இருந்த ஒரு மருத்துவமனையை ஆம்புலன்ஸ் அடைந்ததும், வேகமாக இறங்கிய அர்ஜூன் தங்களுக்குப் பின்னால் காரில் இருந்து இறங்கிய வினோத்தையும், அருணையும் பார்த்து....
"அருண், நீ போய் டாக்டர்ஸ கூப்பிடு" என்று தன் ஒட்டு மொத்த சத்தத்தையும் சேர்த்து கத்த.....
சில நிமிடங்களில் மருத்துவக் குழு வரவும் திவ்யாவையும், குழந்தையையும் அவசரப் பிரிவுக்குள் எடுத்துச் சென்றவர்கள் அர்ஜூனை வெளியே நிற்க சொல்ல, தன் உடல், பொருள், ஆவி என்று அனைத்துமாக ஆகிப் போன தன் மனைவியின் கரத்தை இறுக்கப் பற்றியவாறே நின்று இருந்தவனைக் கண்ட அங்கு வந்த முதன்மை நர்ஸ் அவனின் தோளை தொட்டவர்...
"டாக்டர் தேவி எல்லாத்தையும் சொன்னாங்க... நீங்க பயப்படாதீங்க.... எங்க டாக்டர் இப்போ வந்திடுவாங்க... இஃப் யூ வாண்ட், யூ கேன் கம் இன் [If you want, you can come in]" என்றார்...
விழிகளில் நீர் தளும்பி நிற்க, அவருக்கு நன்றி சொன்னவன் திவ்யாவுடன் அறைக்குள் நுழைய, அதே சமயம் மருத்துவரும் வர, திவ்யாவை பரிசோதித்தவர் குழந்தைப் பிறந்த அசதியிலும் அதிகப்படியான ரத்தப் போக்கினாலும் அவள் மயக்கத்தில் இருக்கிறாள் என்றும், பிரசவத்திற்குப் பிறகு மருத்துவர் செய்ய வேண்டிய பணிகளையும் எடுத்துக் கூறியவர் அவனை வெளியே நிற்கச் சொல்லி தன் மருத்துவ குழுவுடன் சேர்ந்து திவ்யாவிற்கான சிகிச்சையைத் துவங்கினார்....
ஐ.சி.யுவிற்கு வெளியே நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் அர்ஜூனிற்கு நெருப்பில் நிற்பது போல் இருக்க, அவனை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் அருணும், மஹாவும், வினோத்தும் மௌனமாக நிற்க, திவ்யாவின் சிகிச்சை முடிந்து ஐ.சி.யுவை விட்டு வெளியே வந்த மருத்துவர்....
"ட்ரீட்மெண்ட் முடிஞ்சுடுச்சு... சூச்சர்ஸ் போட்டுருக்கோம்... ஆண்ட் பல்ஸ் ரேட்டும் நார்மலாகிடுச்சு... இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க வைஃப் கண்ணு முழுச்சிருவாங்க... " எனவும்...
ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு அர்ஜூன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுதே குழந்தைகள் மருத்துவர் குழந்தையின் பரிசோதனையும் முடிந்தது எனவும்,
மருத்துவர் சொற்படி அர்ஜூன் குழந்தை பிறந்தவுடனேயே சுத்த படுத்திவிட்டதாலும், குழந்தையும் தன் தந்தையின் அவஸ்தையின் வலியை மேலும் அதிகரிக்காமல் பிறந்தவுடனே அழுததால் சுவாசிப்பதிலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமலும் ஆரோக்கியமாக இருக்க, இன்னும் சட்டை முழுவதும் தன்னவளின் உதிரத்தை சுமந்து நின்று இருந்தவனை வேறு சட்டை அணியச் சொல்லவும், தன் காரில் எப்பொழுதும் வைத்திருக்கும் மாற்று சட்டையை அருணை விட்டு எடுத்து வரச் சொன்னவன் அணிந்த பிறகு தன் மகவை தன் கரங்களில் மீண்டும் ஏந்தினான்....
மறுபடியும் தன் தந்தையின் கரங்களில் ஏந்தப் பட்டதால் தன் தந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்ததாலோ என்னவோ குட்டி அர்ஜூன் தனது சிறிய உடலை சிலிர்த்து முறிக்க, அஞ்சிய அர்ஜூன் தன் மகவை மென்மையாக அணைக்கவும் குழந்தையின் வாசம் அர்ஜூனின் மனதை ஊடுருவி செல்ல, சிலிர்த்தவன் இளம் முறுவலுடன் தன்னைப் போன்றே உரித்து வைத்துப் பிறந்திருந்த தன் குழந்தையின் தலையில் மீண்டும் முத்தத்தைப் பதித்தான்...
வினோத், மஹா, அருண் என்று சிறியவர்கள் அனைவரும் தங்கள் உதவியால் இந்தப் பூமியில் அவதரித்த அந்தச் சின்னத் தளிரை பேருவகையுடனும், பெருத்த நிம்மதியுடனும் பார்த்துக் கொண்டிருக்க, பல மணி நேரங்களாக அடித்துக் கொண்டு இருந்த அலை பேசியை அது வரை இருந்திருந்த மன நிலையில் கவனிக்க இயலாத சின்னவர்கள் அப்பொழுது தான் கவனித்தார்கள்...
அலை பேசியில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்த அருண் அழைத்தது தன் தந்தை தான் என்றும், அவர் ஏற்கனவே பல முறை அழைத்தும் திவ்யாவின் பிரசவ பதட்டத்தில் அலை பேசியை கவனிக்கவில்லை என்பது புரிந்ததும், தந்தையின் அழைப்பை எடுத்தவன் நடந்த அனைத்தையும் சொல்லாமல் திவ்யாவிற்கு ஆண் குழந்தைப் பிறந்திருப்பதை மட்டும் சொன்னவன், மஹாவும் திவ்யாவும் பத்திரமாக இருப்பதையும், தாங்கள் அனைவரும் இப்பொழுது இருப்பது மருத்துவமனையில் தான் என்றும், அவருக்கு மருத்துவமனையின் விலாசத்தையும் சொல்ல,
அருண் தங்கள் இருப்பிடத்தைத் தெரியப்படுத்திய அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையை அடைந்திருந்தார்கள் திவ்யாவின் பெற்றோரும், அர்ஜூனின் பெற்றோரும்...
அர்ஜூனும், அருணும், வினோத்தும் கமிஷனருடன் சென்றதில் இருந்து அவர்களை அழைத்துக் களைத்துப் போன பாலா கமிஷனருக்கு அழைத்திருக்க, திவ்யாவின் பிரசவ அலறல் சத்தம் வீட்டிற்கு வெளியேயும் கேட்டிருந்ததால் அவரும் பாலாவின் அழைப்பை எடுக்காதிருக்க, பதற்றமடைந்திருந்த பாலா மருத்துவமனையை அடைந்தவர் ஓட்டமும் நடையுமாக ஸ்ரீயுடனும், கலா, சிவசுப்ரமணியத்துடனும் அலறி அடித்து வர,
மஹாவின் அருகில் வந்த ஸ்ரீ அவளைக் கட்டி அணைத்துக் கொண்டவர்....
"மஹா... ஆர் யூ ஆல்ரைட்? (Are you alright?) " என்றவரின் கண்கள் ஒரு அன்னையாகக் கடத்தப்பட்டிருந்த தங்களின் மகளை ஆராய்ச்சியுடன் பார்க்கவும் அவரின் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களைப் புரிந்துக் கொண்டவள்...
"மாம்... எனக்கு ஒன்னும் இல்லை... நீங்க பயப்படாதீங்க... ஆனால் அண்ணி தான் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க" எனவும்...
ஐ. சி. யுவின் வாயிலில் தன் குழந்தையை அணைவாகக் கரங்களில் ஏந்தியிருந்த தங்களின் மூத்த மகனின் களைத்த முகத்தையும், கலங்கிய கண்களையும் பார்த்த ஸ்ரீக்கு, திவ்யாவும் மஹாவும் கடத்தப்பட்டதில் இருந்து இந்த நிமிடம் நடந்தது வரை அனைத்தையும் தன் கணவரின் மூலமாகத் தெரிந்துக் கொண்டவருக்கு, மனைவியின் பிரசவத்தின் போது அருகில் இருந்து அவள் மறு ஜென்மம் எடுப்பதைப் பார்ப்பது என்பது எத்தனை துணிவுள்ள ஆண் பிள்ளையானாலும் அவனையும் கலங்கடித்து விடும் என்று உணர்த்த....
கனிவுடன் அவனைப் பார்த்தவருக்குத் தெரியாது அவன் தன் மனைவியின் பிரசவத்தை அருகில் நின்று மட்டும் பார்க்கவில்லை...
எந்த நிமிடம் தன்னவளிடம் " உன் டெலிவரி டைம்ல நான் உன் கூடத் தான் இருப்பேன்.... குழந்தைப் பிறக்குற வரைக்கும் நான் உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட நகர மாட்டேன்" என்று சொன்னானோ அவன் வாக்குப் பலிப்பது போல், அவள் அருகில் அவன் இருந்தது மட்டுமல்லவே...
மலரினும் மெல்லிய அவன் மனையாள் ஈன்றெடுத்த அவர்களின் மகவு இந்தப் பிரபஞ்சத்திற்குள் தனது முதல் சுவடை எடுத்து வைக்க விழுந்ததே அவனது கரங்களில் தானே....
அவன் அருகில் வந்தவர் பேரக்குழந்தையின் பிறப்பை அறிந்த பூரிப்பில், உள்ளம் முழுவதும் அக்களிப்பில் துள்ள, தங்களின் அடுத்தத் தலைமுறையின் முதல் வாரிசை, தலைச்சன் பேரனைத் தூக்க ஆசையுடன் கைகளை நீட்ட, தன் குழந்தையின் மீதே பார்வையைப் பதித்த படியே தன் அன்னையிடம் குழந்தையை அணைத்தவாறே மெல்லக் கொடுத்த அர்ஜூன் அவனையும் அறியாமல்..
"மாம், கேர்ஃபுல் (careful) " என்றான்...
மகனின் பதட்டத்தையும், அவன் தன் குழந்தையின் மீது வைத்திருக்கும் விழிகளை வேறு எங்கும் திருப்பாமல் பார்த்திருப்பதையும் கண்டு தானும் ஒரு அன்னையாகத் தன் மகனை ரசித்துப் பார்த்து சிரித்தவர்....
"எனக்கும் குழந்தையைத் தூக்கத் தெரியும் அர்ஜூன்" எனவும்,
"ஸாரி மாம், ஹி இஸ் வெரி டைனி... ஐ ஆம் ஜஸ்ட் ஸ்கேர்ட் [Sorry mom, he is very tiny.. I am just scared]" என்றான் ஒரு தந்தையாக முகம் கொள்ளாத பெருமிதத்துடனும், மனம் முழுவதும் நிறைந்திருந்த பூரிப்புடனும்...
மூன்று கிலோ மலர் பந்தை கரங்களில் சுமந்திருப்பதைப் போன்று உணர்ந்த ஸ்ரீ குழந்தையைப் பார்க்க, குறைந்தது ஆறடிக்கு மேல் வளருவான் என்பது போல் நீளமான குழந்தை...
பிரமிக்க வைக்கும் வகையில் அழகிய, களையான, செக்கச்செவேலென்ற முகம், கருகருவென்று மென்மையான முடி, கூர்மையான மூக்கு, சிவந்த அதரங்கள்.... வழக்கமாகக் கன்னத்தில் குழியோடு பிறக்கும் குழந்தைகளுக்கு முகத்தில் சதைப் பற்று அதிகமாகும் பொழுது தான் குழிகள் தெரிய ஆரம்பிக்கும்... ஆனால் வெகு சில குழந்தைகளுக்கே பிறந்த அன்றே குழிகள் ஆழமாக தென்படும்.... அதில் நம் குட்டி அர்ஜூனும் ஒருவன்...
ஜனித்த அன்றே அழகிய கன்னக் குழிகள் தோன்றியதில் அவன் சிறிதே புன்னகைத்தாலும் யாரையும் வசீகரிக்கும் தன்மை பெறுவான் என்பது ஊர்ஜிதமாவது போல் தன் பாட்டி தூக்கியதும் முறுவலிக்க, குழந்தையின் அழகு பேரழகாகப் பல மடங்கு அதிகரித்து, பார்ப்பவர் எவரின் மனதையும் குடைந்து உள்ளே சென்று வீற்றிருக்கும் வகையில் அத்தனை அழகாயிருந்தான் நமது மனதைக் கவர்ந்துவிட்ட அர்ஜூன் திவ்யா தம்பதியரின் குட்டி வாரிசு....
ஸ்ரீ குழந்தையின் பேரழகை ரசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கலாவும் அவர்களின் அருகில் வர, அவரிடம் ஸ்ரீ குழந்தையைக் கொடுக்கவும் அர்ஜூன் தன்னிச்சையாக அவர் அருகில் போய் நிற்க மருமகனின் பதற்றத்தை பார்த்த கலா புன்னகைத்தவர்...
"மாப்பிள்ளை... கொஞ்ச நேரம் என் பேரனைக் கொஞ்சிட்டு அப்புறம் உங்கக்கிட்டேயே கொடுத்துடுறேன்" எனவும்...
தன் மாமியாரிடம் முதன் முறையாகத் தன் இதழ்கள் பிரித்துச் சிரித்தவனின் முகத்தில் வெட்கம் படர, இருந்தும் அவன் தன் குழந்தையை விட்டு வேறு பக்கம் நகர்ந்தான் இல்லை....
சிவசுப்ரமணியம், பாலா என்று ஒவ்வொருவராகக் குழந்தையைக் கொஞ்ச, அதற்குள் திவ்யாவின் மகப்பேறு மருத்துவரான தேவியும் வந்து சேர, வேக நடை வைத்து அர்ஜூனின் அருகில் வந்து அவனைக் கட்டி அணைத்தவர், மஹாவையும், அருணையும், வினோத்தையும் அழைத்து அவர்களின் கரங்களையும் பற்றிக் கொண்டவர்...
"ஐ ஆம் ஸோ ப்ரவுட் ஆஃப் யூ ஆல் [I am so proud you all] .... இந்தச் சின்ன வயசில... வாவ்!!! எத்தனை நிதானம், தெளிவு, தைரியம்..." என்றவர் மீண்டும் அர்ஜூனின் கரம் பற்றி...
"அர்ஜூன்... மை ஆல்ஃபா மேல்! [ My Alpha Male] யூ நெவர் ஸீஸ் டு அமேஸ் மி! [You never cease to amaze me! ] " என்று வியந்தவரை திருதிருவென்று விழித்துப் பார்த்திருந்த பெரியவர்களைக் கண்டவருக்குப் புரிந்து போனது அவர்களுக்கு நடந்தவற்றை இளையவர்கள் இன்னும் தெரியப்படுத்தவில்லை என்று...
பின் அனைத்தையும் தெளிவாக அவர்களுக்கு விளக்கியவர், அர்ஜூன் எவ்வாறு துணிவுடனும், தெளிவுடனும், அதே சமயம் அந்தக் கொடிய, இக்கட்டான மனம் பதைபதைத்து, திகைத்து ,தவித்து இருக்கும் சூழ்நிலையில் கூடத் தன் மனைவியைத் தைரியப்படுத்திக் கொண்டு, குழந்தையையும் அவள் வெளிக் கொணற பிரமிக்க வைக்கும் வகையில் வெகு நிதானமாகவும், ஸ்திரமாகவும் போராடியதை விவரித்தவர், வினோத்தும், மஹாவும், அருணும் எவ்வாறு இந்தச் சின்ன உயிரையும் பெரிய உயிரையும் காப்பாற்ற அர்ஜூனிற்கு உறுதுணையாக இருந்து உதவிப் புரிந்தார்கள் என்று விளக்கமாக எடுத்துரைக்க,
கேட்டுக் கொண்டிருந்த பெற்றோர்களின் பார்வை தங்களின் பிள்ளைகள் மேல் நிலைத்தது நிலைத்த படியே இருந்தது...
கலா தன் விழிகளில் வழிந்த நீரைத் துடைக்கக் கூட மறந்து சிலையாக நின்றார் என்றால்,
அர்ஜூனை நிமிர்ந்து பார்த்த ஸ்ரீ சில விநாடிகள் அவனை உற்று நோக்கியவரின் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் கரை புரண்டோட, அவரின் கண்களில் தெரிந்தது தன் மகனைப் பற்றிய பெருமையா? அல்லது தன் மகனின் ஜனனத்தையும் தனது மனையாளின் மறு ஜனனத்தையும், அவன் கரங்களில் ஏந்தி தாங்கியிருந்ததை நினைத்து பிரமிப்பா? தெரியவில்லை..
"மாப்பிள்ளை... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை... சொல்லப் போனா பேச கூட வாய் வரலை" என்று அர்ஜூனின் கரத்தைப் பற்றிய சிவசுப்ரமணியம் கண்களில் நீர் தளும்ப கூற,
"அன்கில்... திவ்யா என்னோட வைஃப்... இது என்னோட குழந்தை... " என்று மட்டும் சொன்னவன் வழக்கம் போல் தான் செய்ததை இதற்கு மேலும் பெருமை படப் பேச வேண்டாம், இதனோடு இந்தப் பேச்சை முடித்துக் கொள்ளலாம் என்பது போல் மருத்துவரிடம் திரும்பியவன்...
"ஆண்டி... இன்னும் திவ்யா கண்ணு முழிக்கலை..." என்றான் கவலைத் தோய்ந்த குரலில்...
"கமான் அர்ஜூன்... வா திவ்யாவைப் பார்க்கலாம்" என்று அழைத்தவர் முன்னே நடக்க, அவரைத் தொடர்ந்து அவர் பின்னே சென்றவன், அடி எடுத்து வைக்கும் முன் குழந்தையை ஒரு முறை திரும்பி பார்க்க,
சில நிமிடங்களுக்கு முன் அவன் தன் அருகில் நின்று அவன் குழந்தையைப் பார்த்திருக்கும் பொழுது இருந்த ஸ்ரீயின் மனநிலைக்கும், இப்பொழுது அவன் மீண்டும் திரும்பி தன் குழந்தையைப் பார்க்கும் பொழுது அவருக்கு இருந்த மனநிலைக்கும் அநேக வித்தியாசங்கள் இருந்தது...
மருத்துவர் சொன்னது போல் உண்மையில் தங்களின் மகன் ஒரு "ஆல்ஃபா மேல்" [Alpha Male] என்றே தோன்றியதில் பெற்றவர்களின் கண்களில் கர்வமும், பிரமிப்பும் வழிந்தது...
ஐ.சி.யுவிற்குள் மருத்துவருடன் நுழைந்த அர்ஜூன் அங்கு இன்னும் கண் விழிக்காத தொய்ந்துப் போன தோற்றத்துடன் விழிகள் மூடி படுத்திருக்கும் தன் மனைவியைக் கண்டவனின் இதயம் மீண்டும் தளற துவங்க,
"ஆண்டி, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் திவ்யா முழிப்பதற்கு??" என்றான் தவிப்புடன்....
"அர்ஜூன்.... டெலிவரி ஆனவுடனே சிலருக்கு இந்த மாதிரி மயக்கம் வரது காமன் ... ப்ளஸ் திவ்யா ப்ளட் வேற ரொம்ப லூஸ் பண்ணிருக்கா... அண்ட் ஆஸ் யு நோ ஷி ஹேட் அ டெரிபிள் எக்ஸ்பீரியன்ஸ்... [And as you know she had a terrible experience]... ரொம்ப நேரமா பெயின்ல இருந்திருக்கா... அதனால தான் இந்த மயக்கம்... சீக்கிரம் நார்மலா ஆகிடுவா... அவளுக்கு நாமளும் கொஞ்சம் டைம் கொடுக்கனும்... " என்றவர் அங்கு இருந்த மருத்துவரிடம் திவ்யாவிற்கு அவர்கள் செய்திருந்த சிகிச்சைகளைப் பற்றிக் கேட்க, சிகிச்சைகள் அனைத்தும் முடிந்து இன்னும் சிறிது நேரத்தில் அவளை "ரெகுலர் ரூமிற்கு" மாற்றப் போகிறோம் என்று கூற, அவர்களின் சொற்களிற்குக் கூர்ந்து செவிமடுத்திருந்தாலும்....
"ஓகே ஆண்டி" என்றவனின் விழிகள் மட்டும் யோசனையுடனும் கவலையுடனும் தன் மனைவியையே பார்த்திருந்தது...
சில நிமிடங்களில் திவ்யாவை சாதாரண அறைக்கு மாற்ற, அவளைக் கண்ட கலாவிற்கும், சிவ சுப்ரமணியத்திற்கும் பெற்ற மனம் துடித்தது என்றால், ஸ்ரீக்கும் பாலாவிற்கும் மனம் தவியாய்த் தவித்தது சின்னப் பெண் என்ன பாடுபட்டிருக்கிறாள் என்று...
அவர்கள் அனைவரும் திவ்யாவை சுற்றி நின்றிருக்க, தன் மனையாளின் மீதே கண்களைப் பதித்திருந்தவன்...
"நான் கொஞ்ச நேரம் திவ்யாவோடு தனியா இருக்கனும்... ஐ ஜஸ்ட் வாண்டு பி வித் ஹெர் அலோன் [I just want to be with her alone]... என்றதும் அவனைத் திரும்பி பார்த்த ஸ்ரீ தன் மகனின் கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளுணர்வுகளைப் புரிந்துக் கொண்டவராக "சரி அர்ஜூன்" என்றவர் மற்றவர்களைப் பார்த்து தலை அசைக்க, அவர்கள் அனைவரும் வெளியே சென்றதும், ஸ்ரீ தானும் வெளியேறி அவர் கதவை சாத்தியதும்,
தன் மனையாளின் கட்டிலிற்கு அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு நெருங்கி அமர்ந்து அவளின் வலதுக் கரத்தை, தன் வலது கரத்திற்குள் மென்மையாக பற்றிக் கொண்ட அர்ஜூன் தன் இடது கரத்தால் அவளின் களைத்து, தொய்ந்துப் போன முகத்தில் படர்ந்திருந்த முடிக் கற்றைகளை மெல்ல ஒதுக்கி அவள் முகத்தையே மௌனமாகப் பார்த்திருந்தவனின் மனதில் பல நூறு சிந்தனைகள்....
அவளைத் திருமணம் முடித்த அன்றிலிருந்து சில மணி நேரங்களுக்கு முன் தரையில் தன்னந்தனியாகப் பிரசவ வலியில் கதறித் துடித்துக் கொண்டிருந்தவளைக் கண்ட நிமிடங்கள் வரை சடுதியில் அவன் மனதில் ஓட, அர்ஜூனின் உணர்ச்சிகளின் மையப்புள்ளியாக அவளின் துடிப்பும், கதறலும், அலறொலியும் அவனின் உள்ளத்தை இன்னும் அதிரச் செய்ய, அவன் உடலில் நடுக்கம் ஒன்று ஒரு கணம் ஊடுருவி பாய்ந்தது...
நினைவுகள் நிலைகுலைந்து எங்கெங்கோ ஓடிக் கொண்டிருக்க, நடுக்கத்தைக் கண்மூடிக் கண்திறக்கும் நேரத்தில் உதறிவிட்டவன் அவளின் கரத்தைப் பற்றியிருந்த தன் கரத்தில் தன்னையும் அறியாமல் அழுத்தத்தைக் கூட்டியவனின் சித்தத்தில் மெல்ல சினம் தலைத்தூக்க துவங்க, முகத்தில் கனிவு இருந்த இடத்தில் இப்பொழுது ருத்ரம் ஆக்கிரமித்துக் கொண்டது...
தலையை அழுந்த கோதி தன் முகத்தில் இருந்த உணர்வுகளைத் துடைத்தெறிந்தவன், அறையை விட்டு வெளியே வரவும், உணர்ச்சிகள் சிறிதுமற்ற ஆனால் எதிரில் இருப்பவர்களை வதம் செய்யும், ஊடுருவும் கூர்மையைச் சுமந்திருந்த அவனின் கண்களைப் பார்த்திருந்த அவன் குடும்பத்தினருக்கு அர்ஜூனின் இந்த முகம் சொல்லும் அர்த்தம் புரிந்ததால் தன்னிச்சையாக அவன் பாதையில் இருந்து நகர்ந்தார்கள்...
அவர்களிடம் இருந்த தன் பார்வையைத் திருப்பியவன் வெளியே செல்ல எத்தனிக்க, அவன் கரத்தை சட்டென்று இழுத்த ஸ்ரீ....
"அர்ஜூன்... உன் கோபம் எனக்குப் புரியுது... இத யாரு செஞ்சதுன்னும் நீ கண்டு பிடிச்சிடுச்சிடுவ... பட் பி கேர்ஃபுல் அர்ஜூன்... எதுவும் பெரிசா பண்ணிறாத" என்று அவனின் குணம் தெரிந்த அன்னையாகக் கூற,
வழக்கமாக மனிதர்களுக்கு அதீத கோபத்தில் முகம் சிவக்கும், உதடுகள் கூடத் துடிக்கும்... அவர்களின் ஒவ்வொரு செயலும் அவர்கள் உள்ளத்தில் இருக்கும் சினத்தை வெளிப்படுத்தும்.... அவர்களை எதிர்த்து எதிரில் இருப்பவர்களுக்குத் தங்களின் நிலை புரிந்துவிடும்...
ஆனால் மிருகத்திற்கும் கீழாக நடந்திருந்த, இந்த நிமிடம் யாரென்றே தெரியாத தன் கண்ணெதிரில் இல்லாத கொடியவனை நினைத்து மனம் முழுவதும் அக்னி மலையாக கொதித்திருந்தும், சீற்றம் எல்லையைக் கடந்து தன்னை மீறித் திமிறிக் கொண்டிருந்தும், கோபவெறிக்கு ஆளான அர்ஜூனின் முகத்தில் சினத்திற்குப் பதில் அளப்பரிய அமைதியும், நிதானத்தை இழக்காத தோற்றமும், உதடுகளின் இடது கடை ஓரத்தில் நெளிந்த சிறிய புன்னகையும் ஸ்ரீயின் நெஞ்சத்தைத் திகிலால் அதிரச் செய்ய, அவனின் இந்தப் புதிய முகத்தைப் பார்த்தவர் விருட்டென்று இரண்டு அடிகள் எடுத்து பின்னால் நகர்ந்தார்..
தொடரும்..
ஏற்கனவே அர்ஜூனின் மனம் முழுவதும் திகில் மண்டியிருக்க இதில் காவலர் வேறு பிரசவ வலியில் திவ்யா துடிப்பதைப் பற்றிக் கூறவும் உடல் முழுவதும் மின்னல் போன்று ஒரு அதிர்ச்சி உணர்வு ஒவ்வொரு நரம்பிலும் ஓட, அவர் விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள் வீட்டின் முன் பக்கம் கதவை அடைந்திருந்த அர்ஜூன் கதவை உடைக்க முயற்சிக்க, கதவு பலமாக உடைக்கப் படும் சத்தத்தில் உறைந்து போனாள் மஹா....
கீழே உயிர் போகும் வலியில் தரையில் துடித்துக் கிடந்த திவ்யாவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுரணை தப்பவும், அவளின் கண்கள் சொறுகுவதைக் கண்ட மஹாவிற்கு இனியும் வேறு வழி தோன்றாமல் நடப்பது நடக்கட்டும் என்று மனதிற்குள் தைரியத்தை வர வழைத்துக் கொண்டவள் கதவை திறக்க எழவும், அர்ஜூனின் குரல் கேட்கவும் சரியாக இருக்க, வந்திருப்பது தன் அண்ணன் தான் என்று அறிந்த மகிழ்ச்சியில் அலறி அடித்துக் கொண்டு ஓடியவள் கதவை திறக்க,
கதவை திறந்த தன் தங்கையைக் கண்ட அர்ஜூன் பதற்றத்தோடு அவளை இறுக்கக் கட்டி அணைத்தவனின் கண்கள் மஹாவிற்குப் பின்னால் தரையில் துடித்துக் கொண்டிருந்த தன் மனையாளின் மீது பதிந்தது....
பதிந்த கண்களும், தன் மனைவியின் நிலையை உணர்ந்த மூளையும், அவளின் கதறலைக் கேட்டுக் கொண்டிருந்த இதயமும் ஒரு சில விநாடிகள் இரத்த ஓட்டம் தடைப் பட்டதுப் போல் ஒரே சமயத்தில் உறைய....
மீண்டும் திவ்யாவின் "அம்மா" என்று கதறலில் தன்னிலை இழுத்துப் பிடித்தவன் திவீஈஈஈஈஈ" என்று அலறிக் கொண்டு அவள் அருகில் ஓடியவன் அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து அவள் தலையைத் தன் கைகளில் ஏந்த, உயிர் போகும் வலியில் இருந்தவளுக்குத் தன் கணவனின் குரல் கேட்கவும் அந்த வலியிலும் நிம்மதி பெரு மூச்சு வந்தது...
தன்னந்தனியாகக் கட்டாந்தரையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியின் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தவளின் பரிதாப நிலைமை அர்ஜூனின் இதயத்தை வாள் கொண்டு இரண்டாக அறுத்துப் பிளந்தது போல் வலித்தது என்றால்...
"என்னங்க.........." என்று ஏதோ சொல்ல வந்தவளை தன் இரு கைகளாலும் தூக்க முயற்சித்தவனின் உடலும் உள்ளமும் சகலமும் அடங்க விரைத்துப் போனான் அவளின் புடவை முழுவதும் நனைந்து ஈரமாக இருப்பதை உணர்ந்ததும்...
அதற்குள் அருணும், வினோத்தும், மற்ற காவலர்களுடன் கமிஷனரும் வீட்டிற்குள் நுழைந்திருக்க, காவலர்கள் ஒவ்வொரு அறையாக நுழைந்து வேறு எவராவது எங்கேயாவது பதுங்கி இருக்கிறார்களா என்று தேட, அருணை நோக்கிய அர்ஜூனின் மனம் முழுவதும் விவரிக்க இயலாத நிலையில் கலங்கித் தவித்து இருக்க, அவனின் கலக்கத்தையும் தவிப்பையும் அப்பட்டமாக வெளிப்படுத்திய, சொல்ல முடியாத அளவிற்கு வலிகளைச் சுமந்த முகத்தோடும், குரலோடும்...
"அருண்... வாட்டர் ப்ரேக் ஆகிடுச்சு... கால் தி டாக்டர் [Call the doctor]" என்று அலறினான்....
கோகுல் திவ்யாவை கீழே தள்ளியதில் நிலைத் தடுமாறி அவள் தரையில் விழுந்த நிமிடமே அவளுக்குப் பிரசவத்தின் நேரம் துவங்கியிருந்தது... தன் நாத்தனாரைக் காப்பாற்றும் நோக்கில் தான் அவள் தன் வலியைக் கூட மறந்து மீண்டும் அவனிடம் போராடச் சென்றாள்... ஆனால் வலியின் உச்சியைக் கிட்டத்தட்ட அப்பொழுதே அடைந்துவிட்டிருந்தவளால் அதற்கு மேல் ஒரு நொடி கூட நிற்க முடியாமல் தான் மீண்டும் தரையில் சரிந்தது....
பிரசவத்தை, பேறு காலத்தின் வலியை அனுபவித்த பெண்களுக்குத் தான் தெரியும் அந்த இணையில்லாத வலியின் வேதனையும், அதன் கொடுமையும்....
மருத்துவருக்கு அழைத்த அருண் விஷயத்தைச் சொல்ல,
"ஆண்டி, திடீர்னு திவ்யா அண்ணிக்கு லேபர் பெயின் வந்திருச்சு... பட் நாங்க இப்போ வீட்டில் இல்லை... இந்த நிலைமையில இவங்களை உங்க ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு வர முடியும்னு தோணலை... வாட்டர் வேறு ப்ரேக் ஆகிடுச்சு" எனவும்...
அவனின் பதட்டத்தில் இருந்து ஏதோ நடக்கக்கூடாத அசம்பாவிதம் நடந்திருப்பதைப் புரிந்துக் கொண்டவர்...
"வாட்டர் ப்ரேக் ஆனாலும் பரவாயில்லை அருண்... நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க ஆம்புலன்ஸை அனுப்பி விடுறேன்...." என்றார்….
தாங்கள் இருக்கும் இடத்தை அருண் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மீண்டும் திவ்யாவை தன் கரங்களால் தூக்க முயற்சித்த அர்ஜூனின் கரம் பற்றியவள் பல்லைக் கடித்துக் கொண்டு வேண்டாம் என்று தலை அசைக்க, மனைவியின் செய்கையில் குழம்பியவன்...
"திவி... ஆம்புலன்ஸ் வர வரைக்கும் வெய்ட் பண்ண முடியாது... நம்ம காரில் ஹாஸ்பிட்டல் போவோம்... வர வழியில் ஆம்புலன்ஸில் உன்னை ட்ரான்ஸ்ஃபர் பண்ணலாம்" எனவும்,
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மெல்ல தலை அசைத்து தன் கணவனைத் தன் அருகில் வரச் சொன்னவள் அவனின் காதில் ஏதோ சொல்ல, அவள் சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ந்த அர்ஜூனிற்கு இதயம் தன் துடிப்பை சில நொடிகள் நிறுத்தியது போன்று இருந்தது...
அருணையும் கமிஷனரையும் திரும்பி பார்த்தவன்...
"ஐ தின்க் தி பேபி இஸ் ரெடி டு கம் [I think the baby is ready to come] " என்றவன் அதிர்ந்து கலங்கிய முகத்துடன் தன் மனையாளைப் பார்த்தது ஒரு சில விநாடிகள் தான்...
ஆழ்ந்த பெருமூச்சு விட்டவன் தன்னைச் சமன் படுத்திக் கொண்டு அருணிடம் அலை பேசியைக் கேட்டுக் கரத்தை நீட்டவும், அவனிடம் அலைப் பேசியைக் கொடுத்த அருண் நெஞ்சம் முழுவதும் திகில் சூழ்ந்திருக்க மஹாவையும் வினோத்தையும் திரும்பி பார்க்க, அதற்குள் அர்ஜூன் மருத்துவரிடம் பேசத் துவங்கி இருந்தான்....
"ஆண்டி... ஐ டோண்ட் திங் வி ஹாவ் இனாஃப் டைம்... [Aunty, I don't think we have enough time]" என்றவன் திவ்யாவின் மீது தன் அதிர்ந்த விழிகளைப் பதித்தவாறே அவளின் நிலைமையை எடுத்துரைக்க,
"சரி அர்ஜூன்... ஜஸ்ட் டோண்ட் பேனிக் [Just dont panic] நான் சொல்ல சொல்ல செய்... அது போதும்" என்றவர் பேசத் துவங்க...
அங்கு மருத்துவரோ, செவிலியர்களோ, மருத்துவ உபகரணங்களோ, மருத்துவ அனுபவமோ இல்லாத ஒரு பிரசவத்திற்குத் தயாரானான் அர்ஜூன்...
"அர்ஜூன்... வலியில் பாவம் சின்னப் பொண்ணு ரொம்பக் கத்துவா... பட் அவளுக்குப் பிரசவத்தைத் தாங்குற சக்தி வேணும்... இதில டாக்டர்ஸ் யாரும் இல்லாமல் டெலிவரி பார்க்கறதுல நிச்சயம் இன்னும் பயந்துப் போவா... அவளுக்கு முதல்ல ஆறுதல் சொல்லு... ஹான்.. அப்புறம் உன்கூட லேடிஸ் யாராவது இருக்காங்களா?"
"யெஸ் ஆண்டி... மஹா இஸ் ஹியர்..."
"ஓகே அர்ஜூன்... ஃபேஸ் டைம் [Face time] பண்ண சொல்லு... நான் திவ்யாவைப் பார்க்கனும்... இங்க இருந்தே கைட் பண்ணுறேன்..." என்றவர்...
"அர்ஜூன்... சில திங்க்ஸ் வேணும்... உங்களால ரெடி பண்ண முடியுமா?" எனவும்...
"யெஸ் ஆண்டி..." என்றவன் மஹாவிடம் அலைப் பேசியைக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்க,
தன் தங்கையின் அலறலிலும், அருண் மஹாவின் வெளிறிய முகத்தைப் பார்த்தும் அரண்டு போயிருந்த வினோத்தின் தோற்றத்தில் தெரிந்த கலவரத்தைக் கண்ட அர்ஜூன் தானும் ஒரு அண்ணனாக...
"வினோத்... உங்களுக்குப் பார்க்க கஷ்டமா இருக்கும்... வேணா வெளியில் இருங்க... தேவைப்பட்டா உங்களைக் கூப்புடுறேன்" என்றவனின் முகத்தைக் கண்களில் நீர் தளும்பப் பார்த்திருந்த வினோத்திற்குத் தன் செல்லத் தங்கையின் கதறல் உடல் முழுவதும் துடிக்க வைக்க, இருந்தும் அர்ஜூனின் தைரியத்தில், அவனின் புத்திக் கூர்மையில், எந்தச் சூழ்நிலையிலும் தன் நிதானத்தை சிதறவிடாத அவனின் சாமர்த்தியத்தில் நம்பிக்கை வைத்து திவ்யாவை திரும்பி திரும்பிப் பார்த்தவாறே வெளியில் செல்ல முனைந்தவன் அறையின் வாயிலை அடையும் முன் மீண்டும் திவ்யாவின் "அம்மா" என்ற அலறல் சத்தத்தில் அதிர்ந்து தடுமாறினான்…
பிறந்ததில் இருந்து தன் பெற்றோரிடம் கூடத் தன் மனம் விட்டு பேசாதவள், தன் காலையே சுற்றி சுற்றி வந்த தன் செல்ல தங்கையை இந்த நிலையில் விட்டு செல்ல மனம் இல்லாது திரும்பி வந்தவன்...
"இல்ல அத்தான்... நானும் இங்கேயே இருக்கேன்" என்றான்...
"சரி வினோத்... நீங்க டாக்டர் ஆண்டி சொல்ற திங்க்ஸ் எல்லாம் வீட்டில் எங்கேயாவது, எஸ்பெஷலி கிச்சனில் இருக்கான்னு பாருங்க" என்று தேடச் சொன்னவன் மற்ற காவலர்களை வெளியில் போகச் சொல்ல,
மருத்துவர் கேட்ட பொருட்களைத் தேடிச் சென்ற வினோத்திற்கு நல்ல நேரம், அனைத்தும் அந்தக் கெஸ்ட் ஹவுஸின் சமையல் அறையில் இருந்தது...
வினோத்திடம் இருந்து பொருட்களை வாங்கிய அர்ஜூன் திரும்பி அருணைப் பார்க்கவும், அவனின் அதிர்ந்து கலங்கிய முகத்தை வைத்து அவனின் எண்ண ஓட்டங்களைக் கணித்தவன்...
"அருண்... இவ உனக்கு இப்ப அண்ணி இல்ல... அம்மாவா நெனச்சுக்க... தயங்காம எனக்கு ஹெல்ப் பண்ணு.... பட் உனக்குக் கஷ்டமா இருந்தா நீ வெளியில் வெயிட் பண்ணு... அவசியம்னா கூப்புடுறேன்" என்ற அண்ணனின் கூற்றில் திவ்யாவைத் திரும்பி பார்த்த அருணிற்கு அங்குத் தன் அண்ணியின் முகத்தில் தன் அன்னையே தெரிய, ஒரு மகனாகத் தன் அண்ணிக்குச் செய்ய வேண்டிய கடமைக்குத் தயாரானான் அந்த இளம் கல்லூரி மாணவன்....
மனித நேயம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதனை அந்த இல்லத்தில் இருந்த அனைவரும் வெளிப்படுத்தி இருந்தார்கள் அவர்களின் குணாதிசயங்களில், செய்கைகளில்.....
"அர்ஜூன்... முதல்ல நீ ஸோப் இருந்தால் வெந்நீரில உன் கைகள முழங்கை வரை சுத்தம் பண்ணு... அப்புறம் நிறையச் சுத்தமான துணிகள் வேண்டும்... அதையும் ரெடிப் பண்ணு... " எனவும்...
சரி என்ற அர்ஜூன் சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்குத் துணி மணிகள் ஒன்றும் இல்லாததைக் கண்டு...
"அருண்... இங்க ஏதாவது ரூமில் கொஞ்சம் துணி இருக்கான்னு பாரு... பட் க்ளீன் க்ளோத்ஸா இருக்கனும்" எனவும்..
ஒவ்வொரு அறையாகச் சென்று தேடியவன் ஒரு வழியாகச் சில துணிகளை எடுத்து வர,
தன் சட்டையைக் கை முட்டி வரை மடித்து மருத்துவர் சொன்னது போல் குளியல் அறையில் வெந்நீரில் தன் கரங்களை முழுவதும் தேய்த்து கழுவிய அர்ஜூன், அருண் கொடுத்த துணிகளைத் திவ்யாவின் கீழ் போட்டவன் தன் மனைவியின் பிரசவத்திற்குத் தயாராக,
தன் அன்னையை அச்சத்தின், அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கும், வாழ்நாளில் எதற்கும் கலங்காத கடினமான இதயத்தைக் கொண்டிருக்கும் தன் தந்தையைப் பிறக்கும் பொழுதே கதி கலங்க அடித்திருக்கும், அர்ஜூன் திவ்யாவின் வாரிசு இந்தப் பூமியில் உதிக்கத் தன் முதல் முயற்சியைத் துவங்கினான்....
தங்களின் மகவு இந்தப் பூவுலகத்தில் அவதரிக்க எடுக்கும் முனைப்பில் திவ்யாவின் வலி உச்சக்கட்டத்தை அடைய, தன் மனைவியின் அலறல் சத்தம் அர்ஜூனின் உயிரின் வேர் வரை சென்று அவனை அச்சத்தில் நடுங்க வைக்கப் பிறந்ததில் இருந்து பயம் என்பதனையே அறியாதவன், எளிதில் ஒருவராலும் அசைக்க முடியாதவன், அஞ்சா நெஞ்சன் என்ற பெயர் எடுத்த அர்ஜூன் முதன் முறை பயம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்தவன் மனைவியின் கதறலில் முகம் வெளிறிப் போக அவள் கையை இன்னும் இறுக பற்றியவாறே....
"திவி, கொஞ்சம் பொறுத்துக்கோடி" என்றான் தவிப்புடன்...
மருத்துவர் அற்ற, மருத்துவமனையில் அல்லாத அதுவும் முதல் பிரசவம்.... உடலில் உள்ள அத்தனை எலும்புகளையும் ஒரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக நொறுக்கியது போல் வலி.... இதில் தன் குழந்தை எந்த ஆபத்தும் இல்லாமல் பிறக்க வேண்டுமே என்ற தாய்மையின் கலக்கம்....
வலியில் தன் கணவனின் கரத்தை இறுக பற்றித் தன்னருகில் இழுத்தவள் பற்களைக் கடித்துக் கொண்டு...
"என்னால முடியலைங்க.. செத்து போயிருவேன் போல இருக்கு..... " என்று கதற,
அவளிடம் இருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயற்சித்தவனால் அவளின் இறுக்கத்தைத் தளர்த்த இயலாமல் தன்னருகில் நின்றிருந்த அருணை நிமிர்ந்துப் பார்த்தவன் திவ்யாவின் கரத்தை தன் தம்பியிடம் நீட்ட,
திவ்யாவின் தலைப் பக்கம் சென்ற அருண், தன் அண்ணியின் தலையை ஒரு அன்னையாக மடி ஏந்தியவன் அவளின் கரத்தை இறுக்கப் பற்றிக் கொள்ள,
அந்த நேரத்திலும் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க, உயிர் போகும் வலியில் துடித்துக் கொண்டிருந்தவள் மெல்ல நிமிர்ந்து தன்னை மடி தாங்கிய கொழுந்தனையும், மனம் முழுவதும் அச்சமும் அதிர்ச்சியும் சூழ்ந்திருந்தாலும் தன் காலடியில் அழுத விழிகளுடனும் தவிக்கும் முகத்துடனும் தன் அண்ணனுக்கும் மருத்துவருக்கும் பாலமாக இருக்கும் நாத்தனாரையும், இந்தப் பூமியில் தான் உதித்த நேரத்தில் தன் பெற்றோரிடம் இருந்து தன்னை வாங்கித் தன் தோளில் சுமந்து தனக்கு அன்னைக்கு அன்னையாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருந்து, இன்று தன் காலுக்கருகில் தன் தங்கையின் மகவையும் கரங்களில் சுமக்க ஏக்கத்தோடும் பரிதவிப்புடன் நிற்கும் தன் தமையனையும்...
விதி வசத்தால் ஒரே இடத்தில் சந்திக்க நேர்ந்திருந்தாலும், திருமணம் என்ற பந்தத்தில் மனம் ஒவ்வாமல் இணைந்திருந்தாலும், தன் இதயத்தைக் காதல் என்ற நுண்ணுணர்வு என்று ஊடுருவி நுழைந்ததோ அன்றில் இருந்து தன் ஆணவம், அகம்பாவம், கர்வம், திமிர் என்ற அனைத்தையும் தன் மனையாளின் பாதத்தில் சமர்ப்பித்துவிட்ட தன் கணவன் இதோ பூமியில் இன்னும் சில நிமிடங்களில் அவதரிக்கப் போகும் தன் வாரிசை தன் கரங்களில் ஏந்த தன் காலடியில் தைரியத்துடனும் அதே சமயம் தவிப்புடனும் முழங்கால் இட்டு மண்டியிட்டு இருப்பதைக் கண்டவளுக்கு...
"என்ன தவம் செய்தேன் இறைவா இவர்கள் என் வாழ்வில் தோன்ற!!!!!" என்றே இருந்தது.....
"அர்ஜூன்... இட்ஸ் டைம் [It's time].... திவ்யாவை புஷ் பண்ணச் சொல்லு... நீயும் ரெடியா இரு... பேபி ஸ்லிப் ஆகாம இருக்கனும்..." என்று மருத்துவர் கூற...
அவர் பேசுவதைக் கேட்ட திவ்யா...
"இல்லங்க... என்னால முடியல" என்று கதற...
"திவி... ஐ கேன் ஸி தி பேபிஸ் ஹெட் [ I can see the baby's head ]... எனக்குக் குழந்தையைப் பார்க்க முடியுது... ப்ளீஸ்... கொஞ்சம் ட்ரைப் பண்ணுடி..." என்று ஆறுதல் படுத்தியவனின் மனம் முழுவதும் திகில் உச்சஸ்தாயியை அடைந்திருந்தாலும், தன்னவளின் கதறல் தன் ஆத்மாவையே துளைத்து ஊடுருவுவதைப் போல் வலியெடுக்கச் செய்திருந்தாலும், தங்கள் காதலின், ஆத்மார்த்தமான தாம்பத்தியத்தின் பரிசாகத் தன்னவளின் வயிற்றில் உதித்திருக்கும் தன் முதல் வாரிசு இந்தப் பிரபஞ்சத்திற்குள் பாதுகாப்பாக அடியெடுத்து வைக்க ஒரு தந்தையாக அவனைக் கரங்களில் ஏந்தத் தயாராகக் காத்திருக்க,
மீண்டும் மீண்டும் மருத்துவரும் தன் கணவனும் கூறுவதைப் போல் முயற்சி செய்தவள், வலி தாங்கும் அடி எல்லையைக் கடந்தவள் கிட்டத்தட்ட மயக்க நிலைக்குச் செல்ல,
"திவி" என்ற தன் கணவனின் குரலில் தன்னிலை இழுத்துப் பிடித்தவள் இறுதியில் தன் உயிரை இறுக பிடித்துக் கொண்டு, அருணின் கரத்தை உடையும் அளவிற்கு பற்றிக் கொண்டு கடைசி முயற்சியாகத் தன் குழந்தையை வெளிக் கொணர முனைந்ததில் தன் அன்னையை உடலாலும், தன் தந்தையை மனதாலும் தன்னால் இயன்ற மட்டும் கலங்கடித்து, ஊருக்கே ராஜாவாக, தன்னை சுற்றியிருக்கும் அனைவரையும் தன் உள்ளங்கைக்குள் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தன் தந்தையை விட, எதிர் காலத்தில் எதிராளிகளைக் கதி கலங்கடிக்கப் போகும் வேங்கைப் புலியாக, அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்க போகும் குட்டி அர்ஜூன் அதிரடியாக அவதரித்தான் இந்தப் பூமியில்...
தந்தையின் கரங்களில் விழுந்த அர்ஜூனின் மகவு வெளியே வந்ததும் வீறிட்டு அழ, எங்குக் குழந்தையைக் கீழே போட்டு விடுவோமோ என்று பயந்தவன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துப் புதிதாகத் துளிர்த்திருக்கும் தளிரின், தன்னவளின் ரத்தத்தில் தோய்ந்திருந்த, கர்ப்ப பையின் கசடுகளைப் பூசியிருந்த தலை உச்சியில் கொஞ்சமும் அருவருக்காமல் தன் முதல் முத்தத்தை மென்மையாகப் பதிக்க, தன் குழந்தையின் அழுகை சத்தமும், அவனின் மென்மையான ஸ்பரிசமும் இந்தப் பூ உலகத்தையே தன் காலடிகளுக்குள் கொண்டு வந்தது போல் இருந்தது அர்ஜூனிற்கு...
திருமணம் ஆன அன்றே தன் வாழ்க்கையில் இருந்து அவளை அகற்ற வேண்டும், தன் வாழ்க்கைப் பாதையில் அவளுடன் ஒருங்கே பயணிக்க முடியாது என்று உறுதியாக அவளை விவாகரத்துச் செய்ய வேண்டும், அவளின் முகம் கூடத் தன் மனதில் பதியக்கூடாது என்று வெறுத்து அவளைத் துடிக்க வைத்துத் தூரம் சென்றவன், தன்னவளின் இதயத்தில் ரண வேதனை உண்டாக்கியவன் இன்று தன் மனையாளுக்குத் தானே பிரசவம் பார்த்து, பூப் பொதியை கைகளில் ஏந்துவது போல் தன் கரங்களில் ஏந்திய தன் குழந்தையின் பிஞ்சு முகத்தைப் பார்த்தவனின் மனதில் சொல்ல முடியாத உணர்வுகளின் தாக்கம் வர, உடல் முழுவதும் சிலிர்த்தவன் முதன் முறை தன்னில் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான்....
தன் விழிகளில் ஈரம் படர்ந்திருப்பதை....
இதயத்தில், வார்த்தைகளில் சொல்ல முடியாத கிளர்ச்சி படப்படப்புடன் பரவி இருக்க, தன் நாடி நரம்புகளில் எல்லாம் உணர்வலைகள் சில்லிட்டு துடிப்புடன் படர்ந்திருக்க, ரோமங்கள் சிலிர்க்க உணர்ச்சிகளின் பேரொலியில் சிக்கியிருந்த அர்ஜூனின் விழிகளில் நீர் கோத்திருந்ததில் அதிசயம் இல்லையே...
"அர்ஜூன்... கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க... லெட் தி ப்ளெஸண்டா கம் அவுட் ஃப்புல்லி... அதே போல் அம்பிளிக்கல் கார்ட (umbilical cord / தொப்புள் கொடியை) நீ கட் பண்ணாம இருக்கிறது தான் நல்லது... பட் நீங்க இருக்கிற தூரத்தைப் பார்த்தால் நிச்சயம் நீங்க ஹாஸ்பிட்டல் வருவதற்கோ அல்லது ஆம்புலன்ஸ் உங்க இடத்திற்கு வருவதுக்கோ ரொம்ப நேரம் ஆகும் போல தெரியுது... ஸோ ஒரு டூ டு பைஃவ் மினிட்ஸ் வெயிட் பண்ணிட்டு தென் அம்பிளிக்கல் கார்டின் இரண்டு முனைகளையும் க்ளீன் க்ளோத் இருந்தால் க்ளாம்ப் போடுவது போல இறுக்கி கட்டிட்டு தென் ஸ்டெரிலைஸ் பண்ணின நைஃப் ஆர் சிஸர்ஸ் வைத்து நடுவில் கட் பண்ணு..... உடனே கட் பண்ணிடாத, அதே போல் ரொம்ப நேரமும் விட்டுறாத...." என்ற மருத்துவர் குழந்தையைச் சுத்த படுத்தும் முறைகளையும் சொன்னவர் திவ்யாவை சிறிது நேரம் அசைக்காமல் இருக்கச் சொல்லி, பின் ஆம்புலன்ஸில் அவளை ஏற்றி மருத்துவமனைக்கு வரப் பணித்தார்...
குழந்தையைக் கரங்களில் ஏந்தியவன் அவர் சொன்னது போல் தொப்புள் கொடியையும் வெட்டி விட்டு சுற்றும் முற்றும் பார்க்க, தங்கையின் வீறிடலில் உடல் முழுவதும் நடுங்கித் துடித்து நின்றிருந்தாலும், அவளின் மகவின் அழுகையில் சிலிர்த்துப் போன வினோத் தன் இரு கரங்களையும் நீட்ட, வினோத்தின் அருகிலேயே நின்றிருந்த மஹா தன் சுடிதாரின் துப்பட்டாவை வினோத்தின் கரங்களில் போட, தன் மச்சினனும் தங்கையும் நின்றிருந்த தோற்றத்தில் அவர்களின் செய்கைகளில் மனம் கிளர்ந்த அர்ஜூன் பஞ்சுப் பொதி போல் குழந்தையைக் கொடுக்க,
தங்கையை ஏந்திய கரங்களில் அவளின் வாரிசையும் ஏந்திய வினோத்தின் உடலில் மயிற்கால்கள் கூச்செறிந்தது என்றால்.....
வாழ்க்கையில் முதன் முதலாக, இரும்பு மனம் படைத்தவன், அதிகாரம், ஆணவம், கர்வம் என்று அனைத்தையும் ஒருங்கே கொண்ட தன் அண்ணனின் கண்களில் நீர் தளும்பி இருந்ததைப் பார்த்த மஹாவிற்குத் தாய்மையின் பூரிப்பு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு மட்டும் சொந்தமல்ல... அந்தக் குழந்தைக்குத் தன் உயிரைக் கொடுத்து வாழ்நாள் முழுவதும் அதனைத் தன் மனதில் சுமந்து கொண்டிருக்கும் தந்தைக்கும் சொந்தமே என்றே தோன்றியது....
பிரசவத்தில் அதிகமாக இரத்தப் போக்கு ஏற்பட்டதில் அந்த நொடியே திவ்யாவின் கண்களை இருட்டச் செய்ய, ஆனால் அதற்குள் தன் குழந்தையைப் பற்றி அறிந்துவிட வேண்டும் என்ற உந்துதலில் தன் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த வலுவையும் சேர்த்து தலையை மெல்ல தூக்க முடியாமல் தூக்கியவள் தன் கணவனைப் பார்க்கவும், அவளின் எண்ணங்களையும் எதிர்பார்ப்பையும் புரிந்துக் கொண்டவன்....
"ஆண் குழந்தை திவி.... பேபி இஸ் ஃபைன் [Baby is fine]" என்று இதழ் விரித்துப் புன்னகைத்தவாறே கூற...
கணவனின் கூற்றில், போன உயிர் மீண்டு வந்தது போல் ஆழ பெருமூச்சுவிட்டவள் அதிகப்பட்ச வலியினால் தவித்து இருந்ததினால் உடல் முழுவதும் மரத்துப் போனது போல் இருக்க அதுவரை தன் கணவனிற்காகவும், தான் பெற்றெடுக்க வேண்டிய தங்களின் மகவிற்காகவும் உச்சியில் இருந்து உயிர் நாடி வரை சுண்டி இழுத்துக் கொண்டிருந்த வலியைப் பற்களைக் கடித்துப் பொறுத்துக் கொண்டவள் தன் கடமை முடிந்தது என்பது போல் மீண்டும் தன் கொழுந்தனின் மடியில் தலை சாய்த்தவள் மெல்ல விழிகளை மூட...
மஹாவுடனும், வினோத்துடனும் சேர்ந்து குழந்தையைச் சுத்த படுத்திய அர்ஜூன் மீண்டும் வினோத்திடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு திவ்யாவிற்கு அருகில் அமர, வலியில் கிட்டத்தட்ட தன் சுய நினைவை இழந்துக் கொண்டிருந்தவளைக் கண்டவனிற்குத் தன் மனையாளின் நிலைக் கண்டு பகீரென்று இருந்தது...
அப்பொழுது தான் அதிகமான அவளின் இரத்தப் போக்கு அர்ஜூனின் நினைவிற்கு வர, அது வரை குழந்தையை வெளிக் கொணறுவதில் மட்டுமே மனம் நிலைத்து இருந்ததினால் தன்னவளின் நிலையைப் புரிந்துக்கொள்ளாமல் தடுமாறியிருந்தவன்....
அருணின் மடியில் இருந்த தன்னவளின் தலையைத் தன் மடிக்கு மாற்றித் தன் இரு கரங்களாலும் தாங்கி பிடித்திருந்தவனின் முகம் முழுவதும் திகில் அப்பியிருக்க, குரலும் தன் கரங்களும் வெளிப்படையாக நடுங்க...
"திவி.. கண்ணை முழிச்சிப் பாருடி...ப்ளீஸ்" என்று குரல் நடுங்க, உள்ளம் தடுமாற இறைஞ்சினான்....
இருபது வயதே ஆன சிறு பெண், நிறை மாதக் கர்ப்பிணி என்றும் பாராமல் அவளைக் கடத்தி, ஈவு இரக்கம் அற்ற ஒரு மிருகத்தின் கரங்களில் சிக்கி, கீழே தள்ளப்பட்டுப் பல மணி நேரங்களாகப் பேறு கால வலியில் துடித்து, ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் மருத்துவ வசதி எதுவுமே இல்லாமல் தன் கணவனாலேயே பிரசவம் பார்க்கப் பட்டு, இறுதியில் வலியினால் ஏற்பட்ட மயக்கத்தினால் கண்கள் மூட,
என்ன தான் அந்த நிமிடம் வரை அர்ஜூன் தன் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இழக்காமல் அவளுக்குப் பிரசவம் பார்த்திருந்தாலும் தன் மனைவி தன் கண்களை மூடிய அந்த நிமிடம் அச்சத்தின், அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றவன் பதற்றத்துடன்....
"அருண்... ஆம்புலன்ஸ் எங்க வந்திட்டு இருக்குன்னு செக் பண்ணு.... இல்லைன்னா திவ்யாவை காரில் தூக்கிட்டு போகலாம்..." என்று கலக்கத்துடன் சொல்லவும் ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது…
வினோத் குழந்தையைச் சுமந்திருக்க, தன் இரு கைகளாலும் திவ்யாவை தூக்கிய அர்ஜூன் ஆம்புலன்ஸில் இருந்த ஸ்ட்ரெச்சரில் அவளைப் படுக்க வைத்தவன், மஹாவைத் திவ்யாவின் தலைமாட்டில் அமர செய்து, வினோத்திடம் இருந்த தன் குழந்தையைத் தன் கரங்களில் ஏந்திக் கொள்ள, அருணும் வினோத்தும் அர்ஜூனின் காரில் வர, கமிஷனரின் கார் அவர்களைப் பின் தொடரவும், அசுர வேகத்தில் மருத்துவமனையை நோக்கி பறந்தது ஆம்புலன்ஸ்.....
திவ்யா வழக்கமாகப் பரிசோதனை செய்யும் மருத்துவமனை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெகுத் தொலைவில் இருந்ததால் அவளின் மருத்துவர் சொன்னது போல் அவர்களுக்கு சிறிது தூரத்தில் இருந்த ஒரு மருத்துவமனையை ஆம்புலன்ஸ் அடைந்ததும், வேகமாக இறங்கிய அர்ஜூன் தங்களுக்குப் பின்னால் காரில் இருந்து இறங்கிய வினோத்தையும், அருணையும் பார்த்து....
"அருண், நீ போய் டாக்டர்ஸ கூப்பிடு" என்று தன் ஒட்டு மொத்த சத்தத்தையும் சேர்த்து கத்த.....
சில நிமிடங்களில் மருத்துவக் குழு வரவும் திவ்யாவையும், குழந்தையையும் அவசரப் பிரிவுக்குள் எடுத்துச் சென்றவர்கள் அர்ஜூனை வெளியே நிற்க சொல்ல, தன் உடல், பொருள், ஆவி என்று அனைத்துமாக ஆகிப் போன தன் மனைவியின் கரத்தை இறுக்கப் பற்றியவாறே நின்று இருந்தவனைக் கண்ட அங்கு வந்த முதன்மை நர்ஸ் அவனின் தோளை தொட்டவர்...
"டாக்டர் தேவி எல்லாத்தையும் சொன்னாங்க... நீங்க பயப்படாதீங்க.... எங்க டாக்டர் இப்போ வந்திடுவாங்க... இஃப் யூ வாண்ட், யூ கேன் கம் இன் [If you want, you can come in]" என்றார்...
விழிகளில் நீர் தளும்பி நிற்க, அவருக்கு நன்றி சொன்னவன் திவ்யாவுடன் அறைக்குள் நுழைய, அதே சமயம் மருத்துவரும் வர, திவ்யாவை பரிசோதித்தவர் குழந்தைப் பிறந்த அசதியிலும் அதிகப்படியான ரத்தப் போக்கினாலும் அவள் மயக்கத்தில் இருக்கிறாள் என்றும், பிரசவத்திற்குப் பிறகு மருத்துவர் செய்ய வேண்டிய பணிகளையும் எடுத்துக் கூறியவர் அவனை வெளியே நிற்கச் சொல்லி தன் மருத்துவ குழுவுடன் சேர்ந்து திவ்யாவிற்கான சிகிச்சையைத் துவங்கினார்....
ஐ.சி.யுவிற்கு வெளியே நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் அர்ஜூனிற்கு நெருப்பில் நிற்பது போல் இருக்க, அவனை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் அருணும், மஹாவும், வினோத்தும் மௌனமாக நிற்க, திவ்யாவின் சிகிச்சை முடிந்து ஐ.சி.யுவை விட்டு வெளியே வந்த மருத்துவர்....
"ட்ரீட்மெண்ட் முடிஞ்சுடுச்சு... சூச்சர்ஸ் போட்டுருக்கோம்... ஆண்ட் பல்ஸ் ரேட்டும் நார்மலாகிடுச்சு... இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க வைஃப் கண்ணு முழுச்சிருவாங்க... " எனவும்...
ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு அர்ஜூன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுதே குழந்தைகள் மருத்துவர் குழந்தையின் பரிசோதனையும் முடிந்தது எனவும்,
மருத்துவர் சொற்படி அர்ஜூன் குழந்தை பிறந்தவுடனேயே சுத்த படுத்திவிட்டதாலும், குழந்தையும் தன் தந்தையின் அவஸ்தையின் வலியை மேலும் அதிகரிக்காமல் பிறந்தவுடனே அழுததால் சுவாசிப்பதிலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமலும் ஆரோக்கியமாக இருக்க, இன்னும் சட்டை முழுவதும் தன்னவளின் உதிரத்தை சுமந்து நின்று இருந்தவனை வேறு சட்டை அணியச் சொல்லவும், தன் காரில் எப்பொழுதும் வைத்திருக்கும் மாற்று சட்டையை அருணை விட்டு எடுத்து வரச் சொன்னவன் அணிந்த பிறகு தன் மகவை தன் கரங்களில் மீண்டும் ஏந்தினான்....
மறுபடியும் தன் தந்தையின் கரங்களில் ஏந்தப் பட்டதால் தன் தந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்ததாலோ என்னவோ குட்டி அர்ஜூன் தனது சிறிய உடலை சிலிர்த்து முறிக்க, அஞ்சிய அர்ஜூன் தன் மகவை மென்மையாக அணைக்கவும் குழந்தையின் வாசம் அர்ஜூனின் மனதை ஊடுருவி செல்ல, சிலிர்த்தவன் இளம் முறுவலுடன் தன்னைப் போன்றே உரித்து வைத்துப் பிறந்திருந்த தன் குழந்தையின் தலையில் மீண்டும் முத்தத்தைப் பதித்தான்...
வினோத், மஹா, அருண் என்று சிறியவர்கள் அனைவரும் தங்கள் உதவியால் இந்தப் பூமியில் அவதரித்த அந்தச் சின்னத் தளிரை பேருவகையுடனும், பெருத்த நிம்மதியுடனும் பார்த்துக் கொண்டிருக்க, பல மணி நேரங்களாக அடித்துக் கொண்டு இருந்த அலை பேசியை அது வரை இருந்திருந்த மன நிலையில் கவனிக்க இயலாத சின்னவர்கள் அப்பொழுது தான் கவனித்தார்கள்...
அலை பேசியில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்த அருண் அழைத்தது தன் தந்தை தான் என்றும், அவர் ஏற்கனவே பல முறை அழைத்தும் திவ்யாவின் பிரசவ பதட்டத்தில் அலை பேசியை கவனிக்கவில்லை என்பது புரிந்ததும், தந்தையின் அழைப்பை எடுத்தவன் நடந்த அனைத்தையும் சொல்லாமல் திவ்யாவிற்கு ஆண் குழந்தைப் பிறந்திருப்பதை மட்டும் சொன்னவன், மஹாவும் திவ்யாவும் பத்திரமாக இருப்பதையும், தாங்கள் அனைவரும் இப்பொழுது இருப்பது மருத்துவமனையில் தான் என்றும், அவருக்கு மருத்துவமனையின் விலாசத்தையும் சொல்ல,
அருண் தங்கள் இருப்பிடத்தைத் தெரியப்படுத்திய அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையை அடைந்திருந்தார்கள் திவ்யாவின் பெற்றோரும், அர்ஜூனின் பெற்றோரும்...
அர்ஜூனும், அருணும், வினோத்தும் கமிஷனருடன் சென்றதில் இருந்து அவர்களை அழைத்துக் களைத்துப் போன பாலா கமிஷனருக்கு அழைத்திருக்க, திவ்யாவின் பிரசவ அலறல் சத்தம் வீட்டிற்கு வெளியேயும் கேட்டிருந்ததால் அவரும் பாலாவின் அழைப்பை எடுக்காதிருக்க, பதற்றமடைந்திருந்த பாலா மருத்துவமனையை அடைந்தவர் ஓட்டமும் நடையுமாக ஸ்ரீயுடனும், கலா, சிவசுப்ரமணியத்துடனும் அலறி அடித்து வர,
மஹாவின் அருகில் வந்த ஸ்ரீ அவளைக் கட்டி அணைத்துக் கொண்டவர்....
"மஹா... ஆர் யூ ஆல்ரைட்? (Are you alright?) " என்றவரின் கண்கள் ஒரு அன்னையாகக் கடத்தப்பட்டிருந்த தங்களின் மகளை ஆராய்ச்சியுடன் பார்க்கவும் அவரின் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களைப் புரிந்துக் கொண்டவள்...
"மாம்... எனக்கு ஒன்னும் இல்லை... நீங்க பயப்படாதீங்க... ஆனால் அண்ணி தான் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க" எனவும்...
ஐ. சி. யுவின் வாயிலில் தன் குழந்தையை அணைவாகக் கரங்களில் ஏந்தியிருந்த தங்களின் மூத்த மகனின் களைத்த முகத்தையும், கலங்கிய கண்களையும் பார்த்த ஸ்ரீக்கு, திவ்யாவும் மஹாவும் கடத்தப்பட்டதில் இருந்து இந்த நிமிடம் நடந்தது வரை அனைத்தையும் தன் கணவரின் மூலமாகத் தெரிந்துக் கொண்டவருக்கு, மனைவியின் பிரசவத்தின் போது அருகில் இருந்து அவள் மறு ஜென்மம் எடுப்பதைப் பார்ப்பது என்பது எத்தனை துணிவுள்ள ஆண் பிள்ளையானாலும் அவனையும் கலங்கடித்து விடும் என்று உணர்த்த....
கனிவுடன் அவனைப் பார்த்தவருக்குத் தெரியாது அவன் தன் மனைவியின் பிரசவத்தை அருகில் நின்று மட்டும் பார்க்கவில்லை...
எந்த நிமிடம் தன்னவளிடம் " உன் டெலிவரி டைம்ல நான் உன் கூடத் தான் இருப்பேன்.... குழந்தைப் பிறக்குற வரைக்கும் நான் உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட நகர மாட்டேன்" என்று சொன்னானோ அவன் வாக்குப் பலிப்பது போல், அவள் அருகில் அவன் இருந்தது மட்டுமல்லவே...
மலரினும் மெல்லிய அவன் மனையாள் ஈன்றெடுத்த அவர்களின் மகவு இந்தப் பிரபஞ்சத்திற்குள் தனது முதல் சுவடை எடுத்து வைக்க விழுந்ததே அவனது கரங்களில் தானே....
அவன் அருகில் வந்தவர் பேரக்குழந்தையின் பிறப்பை அறிந்த பூரிப்பில், உள்ளம் முழுவதும் அக்களிப்பில் துள்ள, தங்களின் அடுத்தத் தலைமுறையின் முதல் வாரிசை, தலைச்சன் பேரனைத் தூக்க ஆசையுடன் கைகளை நீட்ட, தன் குழந்தையின் மீதே பார்வையைப் பதித்த படியே தன் அன்னையிடம் குழந்தையை அணைத்தவாறே மெல்லக் கொடுத்த அர்ஜூன் அவனையும் அறியாமல்..
"மாம், கேர்ஃபுல் (careful) " என்றான்...
மகனின் பதட்டத்தையும், அவன் தன் குழந்தையின் மீது வைத்திருக்கும் விழிகளை வேறு எங்கும் திருப்பாமல் பார்த்திருப்பதையும் கண்டு தானும் ஒரு அன்னையாகத் தன் மகனை ரசித்துப் பார்த்து சிரித்தவர்....
"எனக்கும் குழந்தையைத் தூக்கத் தெரியும் அர்ஜூன்" எனவும்,
"ஸாரி மாம், ஹி இஸ் வெரி டைனி... ஐ ஆம் ஜஸ்ட் ஸ்கேர்ட் [Sorry mom, he is very tiny.. I am just scared]" என்றான் ஒரு தந்தையாக முகம் கொள்ளாத பெருமிதத்துடனும், மனம் முழுவதும் நிறைந்திருந்த பூரிப்புடனும்...
மூன்று கிலோ மலர் பந்தை கரங்களில் சுமந்திருப்பதைப் போன்று உணர்ந்த ஸ்ரீ குழந்தையைப் பார்க்க, குறைந்தது ஆறடிக்கு மேல் வளருவான் என்பது போல் நீளமான குழந்தை...
பிரமிக்க வைக்கும் வகையில் அழகிய, களையான, செக்கச்செவேலென்ற முகம், கருகருவென்று மென்மையான முடி, கூர்மையான மூக்கு, சிவந்த அதரங்கள்.... வழக்கமாகக் கன்னத்தில் குழியோடு பிறக்கும் குழந்தைகளுக்கு முகத்தில் சதைப் பற்று அதிகமாகும் பொழுது தான் குழிகள் தெரிய ஆரம்பிக்கும்... ஆனால் வெகு சில குழந்தைகளுக்கே பிறந்த அன்றே குழிகள் ஆழமாக தென்படும்.... அதில் நம் குட்டி அர்ஜூனும் ஒருவன்...
ஜனித்த அன்றே அழகிய கன்னக் குழிகள் தோன்றியதில் அவன் சிறிதே புன்னகைத்தாலும் யாரையும் வசீகரிக்கும் தன்மை பெறுவான் என்பது ஊர்ஜிதமாவது போல் தன் பாட்டி தூக்கியதும் முறுவலிக்க, குழந்தையின் அழகு பேரழகாகப் பல மடங்கு அதிகரித்து, பார்ப்பவர் எவரின் மனதையும் குடைந்து உள்ளே சென்று வீற்றிருக்கும் வகையில் அத்தனை அழகாயிருந்தான் நமது மனதைக் கவர்ந்துவிட்ட அர்ஜூன் திவ்யா தம்பதியரின் குட்டி வாரிசு....
ஸ்ரீ குழந்தையின் பேரழகை ரசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கலாவும் அவர்களின் அருகில் வர, அவரிடம் ஸ்ரீ குழந்தையைக் கொடுக்கவும் அர்ஜூன் தன்னிச்சையாக அவர் அருகில் போய் நிற்க மருமகனின் பதற்றத்தை பார்த்த கலா புன்னகைத்தவர்...
"மாப்பிள்ளை... கொஞ்ச நேரம் என் பேரனைக் கொஞ்சிட்டு அப்புறம் உங்கக்கிட்டேயே கொடுத்துடுறேன்" எனவும்...
தன் மாமியாரிடம் முதன் முறையாகத் தன் இதழ்கள் பிரித்துச் சிரித்தவனின் முகத்தில் வெட்கம் படர, இருந்தும் அவன் தன் குழந்தையை விட்டு வேறு பக்கம் நகர்ந்தான் இல்லை....
சிவசுப்ரமணியம், பாலா என்று ஒவ்வொருவராகக் குழந்தையைக் கொஞ்ச, அதற்குள் திவ்யாவின் மகப்பேறு மருத்துவரான தேவியும் வந்து சேர, வேக நடை வைத்து அர்ஜூனின் அருகில் வந்து அவனைக் கட்டி அணைத்தவர், மஹாவையும், அருணையும், வினோத்தையும் அழைத்து அவர்களின் கரங்களையும் பற்றிக் கொண்டவர்...
"ஐ ஆம் ஸோ ப்ரவுட் ஆஃப் யூ ஆல் [I am so proud you all] .... இந்தச் சின்ன வயசில... வாவ்!!! எத்தனை நிதானம், தெளிவு, தைரியம்..." என்றவர் மீண்டும் அர்ஜூனின் கரம் பற்றி...
"அர்ஜூன்... மை ஆல்ஃபா மேல்! [ My Alpha Male] யூ நெவர் ஸீஸ் டு அமேஸ் மி! [You never cease to amaze me! ] " என்று வியந்தவரை திருதிருவென்று விழித்துப் பார்த்திருந்த பெரியவர்களைக் கண்டவருக்குப் புரிந்து போனது அவர்களுக்கு நடந்தவற்றை இளையவர்கள் இன்னும் தெரியப்படுத்தவில்லை என்று...
பின் அனைத்தையும் தெளிவாக அவர்களுக்கு விளக்கியவர், அர்ஜூன் எவ்வாறு துணிவுடனும், தெளிவுடனும், அதே சமயம் அந்தக் கொடிய, இக்கட்டான மனம் பதைபதைத்து, திகைத்து ,தவித்து இருக்கும் சூழ்நிலையில் கூடத் தன் மனைவியைத் தைரியப்படுத்திக் கொண்டு, குழந்தையையும் அவள் வெளிக் கொணற பிரமிக்க வைக்கும் வகையில் வெகு நிதானமாகவும், ஸ்திரமாகவும் போராடியதை விவரித்தவர், வினோத்தும், மஹாவும், அருணும் எவ்வாறு இந்தச் சின்ன உயிரையும் பெரிய உயிரையும் காப்பாற்ற அர்ஜூனிற்கு உறுதுணையாக இருந்து உதவிப் புரிந்தார்கள் என்று விளக்கமாக எடுத்துரைக்க,
கேட்டுக் கொண்டிருந்த பெற்றோர்களின் பார்வை தங்களின் பிள்ளைகள் மேல் நிலைத்தது நிலைத்த படியே இருந்தது...
கலா தன் விழிகளில் வழிந்த நீரைத் துடைக்கக் கூட மறந்து சிலையாக நின்றார் என்றால்,
அர்ஜூனை நிமிர்ந்து பார்த்த ஸ்ரீ சில விநாடிகள் அவனை உற்று நோக்கியவரின் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் கரை புரண்டோட, அவரின் கண்களில் தெரிந்தது தன் மகனைப் பற்றிய பெருமையா? அல்லது தன் மகனின் ஜனனத்தையும் தனது மனையாளின் மறு ஜனனத்தையும், அவன் கரங்களில் ஏந்தி தாங்கியிருந்ததை நினைத்து பிரமிப்பா? தெரியவில்லை..
"மாப்பிள்ளை... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை... சொல்லப் போனா பேச கூட வாய் வரலை" என்று அர்ஜூனின் கரத்தைப் பற்றிய சிவசுப்ரமணியம் கண்களில் நீர் தளும்ப கூற,
"அன்கில்... திவ்யா என்னோட வைஃப்... இது என்னோட குழந்தை... " என்று மட்டும் சொன்னவன் வழக்கம் போல் தான் செய்ததை இதற்கு மேலும் பெருமை படப் பேச வேண்டாம், இதனோடு இந்தப் பேச்சை முடித்துக் கொள்ளலாம் என்பது போல் மருத்துவரிடம் திரும்பியவன்...
"ஆண்டி... இன்னும் திவ்யா கண்ணு முழிக்கலை..." என்றான் கவலைத் தோய்ந்த குரலில்...
"கமான் அர்ஜூன்... வா திவ்யாவைப் பார்க்கலாம்" என்று அழைத்தவர் முன்னே நடக்க, அவரைத் தொடர்ந்து அவர் பின்னே சென்றவன், அடி எடுத்து வைக்கும் முன் குழந்தையை ஒரு முறை திரும்பி பார்க்க,
சில நிமிடங்களுக்கு முன் அவன் தன் அருகில் நின்று அவன் குழந்தையைப் பார்த்திருக்கும் பொழுது இருந்த ஸ்ரீயின் மனநிலைக்கும், இப்பொழுது அவன் மீண்டும் திரும்பி தன் குழந்தையைப் பார்க்கும் பொழுது அவருக்கு இருந்த மனநிலைக்கும் அநேக வித்தியாசங்கள் இருந்தது...
மருத்துவர் சொன்னது போல் உண்மையில் தங்களின் மகன் ஒரு "ஆல்ஃபா மேல்" [Alpha Male] என்றே தோன்றியதில் பெற்றவர்களின் கண்களில் கர்வமும், பிரமிப்பும் வழிந்தது...
ஐ.சி.யுவிற்குள் மருத்துவருடன் நுழைந்த அர்ஜூன் அங்கு இன்னும் கண் விழிக்காத தொய்ந்துப் போன தோற்றத்துடன் விழிகள் மூடி படுத்திருக்கும் தன் மனைவியைக் கண்டவனின் இதயம் மீண்டும் தளற துவங்க,
"ஆண்டி, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் திவ்யா முழிப்பதற்கு??" என்றான் தவிப்புடன்....
"அர்ஜூன்.... டெலிவரி ஆனவுடனே சிலருக்கு இந்த மாதிரி மயக்கம் வரது காமன் ... ப்ளஸ் திவ்யா ப்ளட் வேற ரொம்ப லூஸ் பண்ணிருக்கா... அண்ட் ஆஸ் யு நோ ஷி ஹேட் அ டெரிபிள் எக்ஸ்பீரியன்ஸ்... [And as you know she had a terrible experience]... ரொம்ப நேரமா பெயின்ல இருந்திருக்கா... அதனால தான் இந்த மயக்கம்... சீக்கிரம் நார்மலா ஆகிடுவா... அவளுக்கு நாமளும் கொஞ்சம் டைம் கொடுக்கனும்... " என்றவர் அங்கு இருந்த மருத்துவரிடம் திவ்யாவிற்கு அவர்கள் செய்திருந்த சிகிச்சைகளைப் பற்றிக் கேட்க, சிகிச்சைகள் அனைத்தும் முடிந்து இன்னும் சிறிது நேரத்தில் அவளை "ரெகுலர் ரூமிற்கு" மாற்றப் போகிறோம் என்று கூற, அவர்களின் சொற்களிற்குக் கூர்ந்து செவிமடுத்திருந்தாலும்....
"ஓகே ஆண்டி" என்றவனின் விழிகள் மட்டும் யோசனையுடனும் கவலையுடனும் தன் மனைவியையே பார்த்திருந்தது...
சில நிமிடங்களில் திவ்யாவை சாதாரண அறைக்கு மாற்ற, அவளைக் கண்ட கலாவிற்கும், சிவ சுப்ரமணியத்திற்கும் பெற்ற மனம் துடித்தது என்றால், ஸ்ரீக்கும் பாலாவிற்கும் மனம் தவியாய்த் தவித்தது சின்னப் பெண் என்ன பாடுபட்டிருக்கிறாள் என்று...
அவர்கள் அனைவரும் திவ்யாவை சுற்றி நின்றிருக்க, தன் மனையாளின் மீதே கண்களைப் பதித்திருந்தவன்...
"நான் கொஞ்ச நேரம் திவ்யாவோடு தனியா இருக்கனும்... ஐ ஜஸ்ட் வாண்டு பி வித் ஹெர் அலோன் [I just want to be with her alone]... என்றதும் அவனைத் திரும்பி பார்த்த ஸ்ரீ தன் மகனின் கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளுணர்வுகளைப் புரிந்துக் கொண்டவராக "சரி அர்ஜூன்" என்றவர் மற்றவர்களைப் பார்த்து தலை அசைக்க, அவர்கள் அனைவரும் வெளியே சென்றதும், ஸ்ரீ தானும் வெளியேறி அவர் கதவை சாத்தியதும்,
தன் மனையாளின் கட்டிலிற்கு அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு நெருங்கி அமர்ந்து அவளின் வலதுக் கரத்தை, தன் வலது கரத்திற்குள் மென்மையாக பற்றிக் கொண்ட அர்ஜூன் தன் இடது கரத்தால் அவளின் களைத்து, தொய்ந்துப் போன முகத்தில் படர்ந்திருந்த முடிக் கற்றைகளை மெல்ல ஒதுக்கி அவள் முகத்தையே மௌனமாகப் பார்த்திருந்தவனின் மனதில் பல நூறு சிந்தனைகள்....
அவளைத் திருமணம் முடித்த அன்றிலிருந்து சில மணி நேரங்களுக்கு முன் தரையில் தன்னந்தனியாகப் பிரசவ வலியில் கதறித் துடித்துக் கொண்டிருந்தவளைக் கண்ட நிமிடங்கள் வரை சடுதியில் அவன் மனதில் ஓட, அர்ஜூனின் உணர்ச்சிகளின் மையப்புள்ளியாக அவளின் துடிப்பும், கதறலும், அலறொலியும் அவனின் உள்ளத்தை இன்னும் அதிரச் செய்ய, அவன் உடலில் நடுக்கம் ஒன்று ஒரு கணம் ஊடுருவி பாய்ந்தது...
நினைவுகள் நிலைகுலைந்து எங்கெங்கோ ஓடிக் கொண்டிருக்க, நடுக்கத்தைக் கண்மூடிக் கண்திறக்கும் நேரத்தில் உதறிவிட்டவன் அவளின் கரத்தைப் பற்றியிருந்த தன் கரத்தில் தன்னையும் அறியாமல் அழுத்தத்தைக் கூட்டியவனின் சித்தத்தில் மெல்ல சினம் தலைத்தூக்க துவங்க, முகத்தில் கனிவு இருந்த இடத்தில் இப்பொழுது ருத்ரம் ஆக்கிரமித்துக் கொண்டது...
தலையை அழுந்த கோதி தன் முகத்தில் இருந்த உணர்வுகளைத் துடைத்தெறிந்தவன், அறையை விட்டு வெளியே வரவும், உணர்ச்சிகள் சிறிதுமற்ற ஆனால் எதிரில் இருப்பவர்களை வதம் செய்யும், ஊடுருவும் கூர்மையைச் சுமந்திருந்த அவனின் கண்களைப் பார்த்திருந்த அவன் குடும்பத்தினருக்கு அர்ஜூனின் இந்த முகம் சொல்லும் அர்த்தம் புரிந்ததால் தன்னிச்சையாக அவன் பாதையில் இருந்து நகர்ந்தார்கள்...
அவர்களிடம் இருந்த தன் பார்வையைத் திருப்பியவன் வெளியே செல்ல எத்தனிக்க, அவன் கரத்தை சட்டென்று இழுத்த ஸ்ரீ....
"அர்ஜூன்... உன் கோபம் எனக்குப் புரியுது... இத யாரு செஞ்சதுன்னும் நீ கண்டு பிடிச்சிடுச்சிடுவ... பட் பி கேர்ஃபுல் அர்ஜூன்... எதுவும் பெரிசா பண்ணிறாத" என்று அவனின் குணம் தெரிந்த அன்னையாகக் கூற,
வழக்கமாக மனிதர்களுக்கு அதீத கோபத்தில் முகம் சிவக்கும், உதடுகள் கூடத் துடிக்கும்... அவர்களின் ஒவ்வொரு செயலும் அவர்கள் உள்ளத்தில் இருக்கும் சினத்தை வெளிப்படுத்தும்.... அவர்களை எதிர்த்து எதிரில் இருப்பவர்களுக்குத் தங்களின் நிலை புரிந்துவிடும்...
ஆனால் மிருகத்திற்கும் கீழாக நடந்திருந்த, இந்த நிமிடம் யாரென்றே தெரியாத தன் கண்ணெதிரில் இல்லாத கொடியவனை நினைத்து மனம் முழுவதும் அக்னி மலையாக கொதித்திருந்தும், சீற்றம் எல்லையைக் கடந்து தன்னை மீறித் திமிறிக் கொண்டிருந்தும், கோபவெறிக்கு ஆளான அர்ஜூனின் முகத்தில் சினத்திற்குப் பதில் அளப்பரிய அமைதியும், நிதானத்தை இழக்காத தோற்றமும், உதடுகளின் இடது கடை ஓரத்தில் நெளிந்த சிறிய புன்னகையும் ஸ்ரீயின் நெஞ்சத்தைத் திகிலால் அதிரச் செய்ய, அவனின் இந்தப் புதிய முகத்தைப் பார்த்தவர் விருட்டென்று இரண்டு அடிகள் எடுத்து பின்னால் நகர்ந்தார்..
தொடரும்..