வேம்பு
பச்சையில் இத்தனை நிறங்களா என வியக்க வைத்த பாவையிவள்..
துளிர்க்கும் தளிராய் சின்னஞ்சிறு காம்பாய் காய் கனியென அப்பப்பா..
"வேப்பமரத்து உச்சியில்"சொல்லாடை
மீறி தனி பாசம் இவள் வாசனை நுகர்ந்தால்..
வளரும் இடத்தை தூய தென்றலாய் வருடும் நன்செய் உயிரிவள்..
மரமென நினையாது மக்கள் தொழும் ஆலயத்தில் மருந்தென மலர்பவள்..
நம் சுவாசங்களை சீராக்க முற்றத்தில்
நிழல் பரப்பும் பதுமையிவள்..
உச்சி முதல் நுனி வரை எல்லையில்லா பயன்கள் தரும் தன்னலமில்லா காமதேனு..
நிலவின் காதலியாய் வேம்பின் சகியாய்
நிலவேம்பு நீர் அருந்த வேண்டிய தருணமிது...
வாருங்கள் இயற்கையை போற்றுவோம் அதன் மேன்மையை உணர்வோம்!!!!
பச்சையில் இத்தனை நிறங்களா என வியக்க வைத்த பாவையிவள்..
துளிர்க்கும் தளிராய் சின்னஞ்சிறு காம்பாய் காய் கனியென அப்பப்பா..
"வேப்பமரத்து உச்சியில்"சொல்லாடை
மீறி தனி பாசம் இவள் வாசனை நுகர்ந்தால்..
வளரும் இடத்தை தூய தென்றலாய் வருடும் நன்செய் உயிரிவள்..
மரமென நினையாது மக்கள் தொழும் ஆலயத்தில் மருந்தென மலர்பவள்..
நம் சுவாசங்களை சீராக்க முற்றத்தில்
நிழல் பரப்பும் பதுமையிவள்..
உச்சி முதல் நுனி வரை எல்லையில்லா பயன்கள் தரும் தன்னலமில்லா காமதேனு..
நிலவின் காதலியாய் வேம்பின் சகியாய்
நிலவேம்பு நீர் அருந்த வேண்டிய தருணமிது...
வாருங்கள் இயற்கையை போற்றுவோம் அதன் மேன்மையை உணர்வோம்!!!!