அத்தியாயம் - 10
அர்ஜூன் காரின் கதவை திறந்தும் ஏறாமல் நின்ற திவ்யா ஒரு சில நிமிடங்கள் ஸ்ரீயின் முகத்தையும் காரையும் மாற்றி மாற்றிப் பார்க்க, அங்குப் பொறுமை இழந்து கொண்டு இருந்தான் அர்ஜூன்...
வழக்கமான அவனின் அகங்காரம் தலை தூக்க, லேசாக இடது பக்கமாகத் தலையைச் சாய்த்து திவ்யாவைப் பார்க்க அதில் அவள் நெஞ்சுக் கூடு சில்லிட சட்டென்று காரில் ஏறியவள் மறந்தும் தன் கணவனின் பக்கம் திரும்பவில்லை...
அர்ஜூன் கதவைத் திறக்கவும், பின் திவ்யா அதில் ஏறாமல் நிற்க அவளைக் கூர்ந்து பார்த்ததையும், அதில் மின்னல் போல் காரில் ஏறிய திவ்யா அர்ஜூன் அருகில் அமர்ந்ததையும் கண்ட மஹாவிற்கும் அருணிற்கும் நடப்பது கனவா? இல்லை நினைவா? என்று தோன்ற ஆச்சரியத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...
அருண் மஹாவிடம் "இங்க என்ன நடக்குது?" எனவும்...
"ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா? இல்லை எல்லாம் என்னோட மேக்கப்போட மாயமா?" என்று மஹா அளக்க...
"அடியே... ஏதோ ஒரு நாள் அதுவும் ஏற்கனவே அழகா இருக்கிற அண்ணிக்கு மேக்கப் போட்டுவிட்டு ஏண்டி இப்படி அளப்பரை பண்ற" என்றான்...
"உங்களுக்குத் தான் என் திறமையைப் பார்த்துப் பொறாமை" என்று உதட்டை சுளித்தவாறே கிசுகிசுத்தவள் திரும்பிப் பார்க்க அங்கு வினோத் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க, "ஐயோ! இவங்க இப்படிப் பார்ப்பதை யாராவது பார்த்தால் என்ன ஆகும்??" என்று மனதிற்குள் நினைத்தாலும் அதுவும் அவளுக்குப் பிடித்துத் தான் இருந்தது.
திவ்யா காரில் அமர்ந்ததும் அர்ஜூன் காரை கிளப்ப, மற்ற அனைவரும் வேறு வேறு காரில் கிளம்பினார்கள்...
தனித்த இரவு, சப்தமேதுமற்ற சூழ்நிலை, காதலுக்கும் காமத்திற்கும் ஏற்ற வயதுடைய இருவர், உரிமையுள்ள உறவு....
இயற்கையின் வேகம் மெள்ள ஆட்கொள்ள இம்சையும் இன்பமும் கலந்த உணர்வில் தாக்கப்பட்டு அர்ஜூன் இருந்தானென்றால் காரில் ஏறியதில் இருந்து ஒவ்வொரு நொடியும் திவ்யாவின் நிலை விவாரணத்திற்கு அப்பாற்பட்டதாயிருந்தது...
உணர்ச்சிகள் கரைக்கடக்கும் ஆவலில் திமிறிக் கொண்டு, இருக்கத் தன் வெகு அருகில் அமர்ந்து இருந்தவளை உரிமையுடன் திரும்பி பார்க்க, அழகெல்லாம் திரண்டது போலும் இருளைக் கிழித்துக் கொண்டு வந்த நிலவைப் போலும் அவன் மனைவி அவனை வசீகரிக்க, அவள் தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூக்களில் இருந்து வந்த சுகந்தம் அவன் நாசியைக் கவர்ந்து மயக்கத்தை விளைவிக்கத் திண்டாடிப் போனான் அர்ஜூன்...
வெளி உலகத்தில் அவன் அழுத்தமான காலடிச் சுவடுகளின் சத்தத்திற்கே எழுந்து நிற்கும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள்....
தொழில் வட்டாரங்களில் எதற்கும் அஞ்சாத சிங்கம் என்றும், தன் கூரிய பார்வையிலேயே எதிராளியை வென்றுவிடுபவன் என்றும் பேர் எடுத்தவன்...
அப்பேற்பட்ட அர்ஜூனிற்கே இந்த நிலைமை என்றால் பத்தொன்பது வயதே ஆன, தன் கணவனின் ஒரு பார்வையிலேயே சகலமும் நடுங்கி நிற்கும் திவ்யாவின் நிலையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்...
அவன் தன்னைத் திரும்பி பார்ப்பதை அவன் பக்கம் திரும்பாமலே தெரிந்துக் கொண்டவள் நாணத்தை மறைக்க முடிந்த அளவிற்கு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வர, அவளின் நாணத்தையும் சங்கடத்தையும் மிகைப் படுத்தி வேதனையை அளிக்கும் வகையில் அவன் தன் இடது கையைக் கியர் பாக்ஸில் வைத்து இருக்க, அதில் அவன் கரம் அவளின் தொடையில் லேசாக உரச, தன்னிச்சையாக நகர்ந்து கதவோரம் ஒட்டி அமர்ந்தாள்...
அவளின் செய்கையைச் சாலையில் பார்வையைப் பதிய வைத்துக் கொண்டே கண்டு கொண்டவன் இதழ்களில் தவழ்ந்த புன்னைகையுடன் கண்களில் விஷமச் சிரிப்புடன் காரை செலுத்திக் கொண்டு இருக்க அரவமேதும் இல்லாத அந்த நிசப்தமான சூழ்நிலையில் அர்ஜூனின் அலை பேசி அலறி திவ்யாவிற்குத் தூக்கி போட செய்தது...
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து அலை பேசியை எடுத்தவன் அதில் அழைத்திருந்தவரின் எண்ணைப் பார்க்க அவன் அன்னையே அழைத்திருந்தார்...
அவர் இந்தத் திருமண வரவேற்பை ஏற்பாடு செய்திருந்ததே அவனுக்கு விருப்பம் இல்லை... அதிலும் வாழ்த்துக்களும் கூச்சல்களும் இளவட்டங்களின் அட்டகாசங்களும் அவனுக்குக் கிட்டத்தட்ட ஒரு வித எரிச்சல் மனப்பான்மையே உருவாக்கியிருந்தது...
இதில் அவர் மீண்டும் அழைக்கவும் இன்னும் என்ன மிச்சம் வைத்திருக்கிறார் என்று எண்ணியவன் அழைப்பை எடுக்காமல் அலை பேசியை மீண்டும் பாக்கெட்டில் வைத்து காரை ஓட்டுவதில் கவனத்தைச் செலுத்த, மீண்டும் மீண்டும் அலறிக் கொண்டு இருந்த அலை பேசி சற்று நேரம் இடைவெளிவிட்டு சிணுங்கத் துவங்கியது...
ஆனால் இந்த முறை சிணுங்கியது அர்ஜூனின் அலை பேசியல்ல... திவ்யாவினுடையது.....
அர்ஜூனை திரும்பி பார்த்தவள் வேறு வழியில்லாமல் அழைப்பை எடுக்க.....
"என்னடா, அர்ஜுன் செல்லிற்குக் கூப்பிட்டேன்... அவன் எடுக்கல... யார்கிட்டயாவது பேசிட்டு இருக்கானா?" என்றார் ஸ்ரீ...
அவருக்கு நன்றாகத் தெரியும்... யாரிடமாவது அவன் பேசிக் கொண்டு இருந்தால் அலை பேசியில் அழைப்பு சென்று இருக்காது...
அவர் மகன் வேண்டும் என்றே தான் அலை பேசியை எடுக்கவில்லை என்று....
தெரிந்திருந்தும் அவர் திவ்யாவிற்கு அழைத்தவர்...
"திவ்யா... ஃபோன கொஞ்சம் அர்ஜூன் கிட்ட கொடுக்கிறியா? நான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்" எனவும்...
ஏற்கனவே அவனுக்கு அருகில் தனியாக அமர்ந்து வருவது அவளுக்குக் காரில் இருந்த ஏசியையும் மீறி வியர்த்துக் கொட்டுகிறது...
"இதுல இப்போ அவங்க கிட்ட போன வேற கொடுக்கனுமா.... ஐயோ!" என்றிருந்தது திவ்யாவிற்கு...
ஆனால் அர்ஜூனிற்கு நன்கு தெரியும் திவ்யாவின் அலை பேசியில் அழைத்ததும் தன் அன்னை தான் என்று...
அன்னைக்கும் மகனிற்கும் இடையில் நடக்கும் மௌன போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது இன்னமும்...
தன் மனைவியின் பால் அவன் உள்ளம் சரிந்திருந்தது உண்மை தான்... அதனை அவனும் உணர்ந்தே இருந்தான்...
அந்த ஒரு காரணத்தினால் தான் அவன் இந்தத் திருமண வரவேற்பை தடுத்து நிறுத்தவில்லை...
ஆனால் அதற்காக அவன் தன் அன்னையை மன்னித்துவிட்டான் என்று அர்த்தம் இல்லை... அவரின் மீது இன்னும் வெறுப்பும் கோபமும் இருக்கத் தான் செய்தது...
ஆதலால் இனி அவர் கேட்கப் போகும் அல்லது சொல்லப் போகும் எதனையும் தான் காதில் வாங்கப் போவதில்லை என்று முடிவெடுத்து இருந்ததினாலேயே அவன் அவரின் அழைப்பை நிராகரித்து இருந்தான்...
ஆனால் அவர் திவ்யாவையும் அழைக்கவும், அவளிடம் என்ன சொன்னாரோ அவள் அவனைத் திரும்பி பார்க்கவும் அவனுக்குப் புரிந்து போனது...
தன்னிடம் காரியம் சாதிக்க நினைக்கும் தன் அன்னை இன்று தன் மனைவியைப் பயன்படுத்த பார்க்கிறார் என்று..
ஆனாலும் தன் நிலையில் இருந்து அவன் இனி சிறிதும் கீழ் இறங்கி வருவதாயில்லை....
தன் கணவனின் உள்ளத்திற்குள் நடக்கும் போராட்டத்தை அறியாமல் ஒரு வழியாகத் தனக்குள்ளே தைரியத்தை வர வழைத்துக் கொண்டவள் தயங்கியவாறே...
"அத்த உங்ககிட்ட பேசனும்னு சொல்றாங்க" என்று மெதுவாகக் கூற,
அவளைத் திரும்பிப் பார்த்தவனின் பார்வையைத் தாங்க இயலாமல் "பேசாமல் காரில் இருந்து குதித்து விடுவோமா?" என்றே இருந்தது அவளுக்கு.....
அவளைச் சில விநாடிகளே பார்த்தவன் மௌனமாக மீண்டும் சாலையில் கண்களைப் பதிக்க, இப்போழுது என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பிப் போனாள் திவ்யா....
மீண்டும் தன்னைச் சமன்படுத்திக் கொண்டவள்.....
"அத்தக்கிட்ட நான் என்ன சொல்லட்டும்? இன்னும் லைன்ல தான் இருக்காங்க" என்று மெல்லிய குரலில் கூற ஒன்றும் பேசாமல் அவளிடம் இருந்து அலை பேசியை வாங்கியவன் மீண்டும் சாலையில் கண் பதித்து "வாட் மாம்?" என்றான்.
ஸ்ரீக்கு அவனது கடினமான குரலில் இருந்தே தெரிந்தது அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று...
இதில் இந்த விஷயத்தை வேற சொல்லனுமா என்றிருக்க ஆனால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இதை விட நல்ல ஒரு சந்தர்ப்பம் அமையாது என்று ஒரு நல்ல அன்னையாக, தன் மனம் கவர்ந்த மருமகளின் நலனிற்காக அவர் அதனைச் செய்தே ஆக வேண்டும் என்று முடிவோடு இருந்தார்...
அவருக்கும் தன் மகனை நினைத்து அடி வயிற்றில் புளியை கரைக்கவே செய்தது... இருந்தும் மனதிற்குள் துணிவை வர வழைத்துக் கொண்டவர் மெல்ல...
"அர்ஜூன்... இன்றைக்குத் திவ்யாவோட சொந்தக்காரர்கள் சில பேரும், நம்ம சொந்தக்காரங்கள் சிலரும் நம் வீட்டிலேயே தங்குறாங்க..... ஏற்கனவே உங்க அத்தை அவ பொண்ண உனக்கு எடுக்கலையேன்னு கோபத்துல இருக்கா.... இதுல அவ நீயும் திவ்யாவும் தனித் தனியா படுக்கிறதப் பார்த்தா அதுக்குக் கண்ணு காது மூக்குன்னு வச்சு பேச ஆரம்பிச்சிடுவா..... அது நம்ம குடும்பத்திற்குக் கெட்ட பேரத் தான் கொண்டு வரும்...." என்றவர் சில விநாடிகள் தயங்கி ஊரில் உள்ள கடவுள்களிடம் எல்லாம் மன்றாடி மெதுவாக அதைக் கேட்டேவிட்டார்...
"அதனால ப்ளீஸ்... அவ இங்கிருந்து போற வரைக்கும் மட்டும் திவ்யாவை உன் ரூம்ல தங்க வச்சிக்கிறியா?"
இதனைக் கேட்பதற்குள் ஸ்ரீக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது....
இதைக் கேட்டதும் மறு பக்கதில் அர்ஜூன் கோபத்தில் கத்த போகிறான் என்று ஸ்ரீ நினைத்துக் கொண்டு இருக்க அவனோ எதுவும் பேசாமல் இருந்ததைப் பார்த்து குழம்பி போன ஸ்ரீ...
"அர்ஜூன், என்னப்பா? லைன்ல தான் இருக்கியா?" என்றார்.
"யெஸ் மாம்" என்றவனுக்கு அவரின் எண்ணம் புரிந்தது...
காதலோ, காமமோ, தாபமோ அவை ஒரு மனிதனின் சொந்த விஷயங்கள்... அது அவனுக்கும் அவன் மனைவிக்கும் மட்டுமே உரிய அந்தரங்க உறவு.... தன்னவளுடன் தான் கூடும் தருணத்தைக் கூட அவனும் அவளும் மட்டும் தான் முடிவெடுக்க வேண்டும்...
இதில் தலையிட இவ்வுலகில் ஒருவருக்கும் அதிகாரம் கிடையாது என்று நினைத்திருந்தவனுக்கு அவன் அன்னையின் இப்போதைய வேண்டுகோள் மேலும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் கிளப்பியது....
அந்த இரவு அவர்கள் இருவரும் இணையும் இரவாகக் கூட இருந்திருக்கலாம்... அவர்களின் வாழ்கையின் காதல் கலந்த காம இன்பத்தையும், நேசம் கலந்த தாம்பத்தியத்தின் சுகத்தையும் சுமந்து வரும் முதல் இரவாக அமைந்திருக்கலாம்...
அவன் உடலில் மண்டியிருந்த உணர்ச்சிகளின் சுழற்சியை, தாபத்தின் தகிப்பை, காமத்தின் வேட்கையை, பெண்ணவளும் தனது இதய வாசலைத் திறந்து தனது லாவண்யத்தை அவனுக்கு அள்ளி வழங்கி கணவனின் தேடலைப் பூர்த்திச் செய்து அவன் பிரம்மச்சரியத்தை உடைத்த இரவாக இருந்திருக்கலாம்...
ஆனால் இந்த நிமிடம் அவனின் மனதில் மண்டியிருந்த விரக்தி எல்லாம் மீண்டும் மீண்டும் தன் வாழ்க்கையின் போக்கை, கணங்களை நிர்ணயிக்கும் தன் அன்னையை நினைத்து தான் இருந்தது...
அதில் அவனுக்குள் அடங்கியிருந்த வேதாளம் மெல்ல வெளி வர ஆரம்பித்தது....
சில நொடிகள் சிந்தித்தவன் மீண்டும் வார்தைகளைக் கொட்ட ஆரம்பித்தான்... ஆனால் தன் மனைவிக்குப் புரியக் கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில்.....
"மாம், என்ன ப்ளான் பண்றீங்க? எனக்கு ஒன்றும் புரியவில்லை... ப்ளீஸ் டோண்ட் ட்ரீட் மீ லைக் அச் சைல்ட்.... [Please don't treat me like a child]... லெட் மீ டேக் தோஸ் டிஷிஷன்ஸ் மாம்... let me take those decisions mom..." என்றான்....
அழுத்தமான குரலில் கிட்டதட்ட கர்ஜிக்கும் தோரணையில் அவன் ஒவ்வொரு வார்த்தையையும் பல்லைக் கடித்துக் கொண்டு பேசியதிலேயே ஸ்ரீக்குப் புரிந்தது அவனுக்குத் தன் மேல் இருக்கும் அடங்காத கோபத்தின் அளவை.....
ஒரு வேளை அவன் திவ்யாவைப் பார்க்கும் பார்வையின் அர்த்தத்தை நாம் தான் தவறாகப் புரிந்துக் கொண்டோமோ என்ற எண்ணம் கூடச் சடுதியில் தோன்றி மறைந்தது....
ஆனால் அதே சமயம் அவருக்கு நன்றாகத் தெரியும்...
அர்ஜூனிற்கு யாரும் அவன் அறைக்கு வருவது பிடிக்காது என்று...
அப்படிப்பட்டவன் திவ்யாவை எப்படித் தன்னுடன் தங்க அனுமதிப்பான்? ஆனால் திவ்யா அவன் மனைவி.... யாருக்கு உரிமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவன் மனைவிக்கு உரிமை இருக்கிறது... இப்பொழுது அதைச் சொன்னால் தாம் தூம் என்று குதிப்பான்....
ஆனால் அவர் ஒன்று மட்டும் மறந்து போனார்.... அவன் உண்மையில் அவரின் எதிர்பார்ப்பை வெறுத்திருந்தால் ஆங்கிலத்தில் பேசியிருக்க மாட்டான்....
தன்னவளின் மனம் புண்படுவதில் அவனுக்கு விருப்பம் இல்லை...
ஸ்ரீயும் இதோடு இந்த விவாத்தை விட்டு இருக்கலாம்... ஆனால் திவ்யாவிற்கு நல்லது செய்வதாக நினைத்து அவனது ஆத்திரத்தை கிளறிவிட்டுக் கொண்டு இருந்தார்...
"இல்ல அர்ஜூன்... நீ சொல்றது எனக்குப் புரியுது.... அவங்க எல்லோரும் இங்க தங்கப் போறாங்கன்னே எனக்கு இப்போ தான் தெரியும்.... இருக்கிறேன்னு சொல்றவங்கள போன்னு எப்படிச் சொல்றது?"
"பட் அதுக்கு நீங்க சொல்ற மாதிரி என்னால இருக்க முடியாது"
"அர்ஜூன் ப்ளீஸ்.... புரிஞ்சுக்க... இந்த ஒரே ஒரு உதவி மட்டும் செய்.... அப்புறம் உன் விருப்பப்படியே நான் எல்லாத்தையும் செய்றேன்" என்றார்....
அதற்கு மேல் அர்ஜூனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
அவனுக்குத் தன் மனைவி தன்னுடன் ஒரே அறையில் தங்குவதில் விருப்பம் தான்...
ஆனால் அவளைத் தான் எடுத்துக் கொள்ளும் அந்த அழகிய கணம் அவனவள் அவளாக அவளை அவனிடம் ஒப்புவிக்கும் தருணமாகத் தான் இருக்க வேண்டும்...
அதனால் அவனின் கொந்தளிப்பு அதனை முடிவு செய்த அவன் அன்னையின் மீது தான்....
"ஓகே மாம்" என்று அழைப்பை துண்டித்தவன் திவ்யாவின் பக்கம் திரும்பாமலே அலை பேசியை நீட்ட, அமைதியாக அலை பேசியை வாங்கியவள் அவனின் ஆத்திரத்தில் கலங்கி போய் இருந்ததால் அதன் பிறகு மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை...
அமைதியாக ஆனால் மெதுவாகவே அவன் காரை செலுத்திக் கொண்டிருக்க வெகு நேரம் சென்றே வீட்டை அடைந்தவர்களுக்கு ஆரத்தி சுற்றுவதற்குச் சில பெண்கள் வாசலில் காத்திருக்க, அர்ஜூனுக்குத் தங்கள் திருமண நாள் நியாபகத்தில் வந்தது....
அவனுக்கு இருக்கும் கோபத்திற்கு எங்கே அவன் அன்று போல் ஆரத்தி தட்டை மீண்டும் தட்டி விடுவானோ என்று ஸ்ரீ அஞ்சிக் கொண்டிருந்தார்...
ஆனால் அதே சமயம் இத்தனை பேர் இருக்கும் போது அப்படிச் செய்ய மாட்டான் என்று சிறிது தைரியமும் இருந்தது...
ஆனால் அது அர்ஜூன் ஆகிற்றே....
அவன் எந்தக் காலத்தில் யாரைப் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறான்.....
ஆனால் அவர் பயந்ததற்கு மாறாகக் காரை விட்டு இறங்கியவுடன் ஸ்ரீ மற்றும் சில பெண்கள் ஆரத்தி எடுக்க ஒன்றும் பேசாமல் திவ்யாவுடன் உள்ளே சென்ற மகனை விழி விரிய ஆச்சரியத்துடன் பார்த்திருந்தார் ஸ்ரீ...
சிறிது நேரத்திற்கு முன் தன்னிடம் கர்ஜித்த அர்ஜூனா இது என்று....
வீட்டிற்குள் நுழைந்த அர்ஜூன் நேரே தன் அறைக்குச் செல்ல, திவ்யா தன் உடைகளை மாற்றிவிட்டு தன் சுற்றத்திடனும் தன் அம்மாவுடனும் பேசிக் கொண்டிருக்க அவளருகே வந்த ஸ்ரீ சன்னமான குரலில்.....
"திவ்யா, நீ அர்ஜூனோட ரூமுக்கு போடா" என்றார்.... (ஆனால் இந்த அம்மாவுக்கு இவ்வளவு பிடிவாதம் இருக்கக் கூடாது)
"என்னது!!!! அவரோடு ரூமிற்கு நான் போறதா????" நினைத்த மாத்திரத்தில் திவ்யாவிற்கு மயக்கமே வந்தது....
அவள் திருதிருவென்று முழிக்க,
"நான் அர்ஜூன் கிட்ட பேசிட்டேண்டா..... இவங்க எல்லோரும் கிளம்பும் வரை நீ அவன் ரூம்ல தான் தங்கனும்" என்று அவள் காதில் கிசுகிசுக்க,
"ஐயோ!!! என்ன அத்த சொல்றீங்க?" என்று கிட்டதட்ட அலறினாள்....
இவள் இப்படி எல்லாம் சொன்னால் சரி பட்டு வரமாட்டாள் என்ற நினைத்தவர் சத்தமாக,
"சரிடா... நீ மாடிக்கு போ அர்ஜூன் காத்திட்டு இருப்பான்" என்று கூற...
அவர்களுக்கு அருகில் இருந்த அனைவரும் சிரிக்கத் திவ்யாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது.......
ஸ்ரீ சத்தமாகச் சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் தன் மாமியாரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே மாடி ஏறிய திவ்யாவைப் பார்த்த ஸ்ரீ...
"இந்தப் பெண்ணை ரூமுக்குள்ள என்ன பாடுபடுத்த போறானோ தெரியலையே?" என்று திகைக்கவும் செய்தார்....
ஆனால் அதே சமயம் அவங்க அப்பா அம்மா இங்க இருக்கிற வரை கொஞ்சம் பொறுமையாகத் தான் இருப்பான் என்ற நம்பிக்கையும் இருந்தது அவருக்கு..
"இந்த விஷயத்தைத் தான் அத்தை அவங்ககிட்ட கார்ல பேசினாங்களா? அவங்க பதிலுக்கு இங்கிலீஷில் தான பேசினாங்க.... அப்போ எனக்குப் புரியக் கூடாதுன்னு தான் பேசி இருப்பாங்க போல இருக்கு... போச்சு இப்போ எவ்வளவு கோபத்தில இருப்பாங்களோ?? நான் செத்தேன்.... அப்பா முருகா, ஏன்பா என்ன இப்படி மீண்டும் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்குற??" என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே அவள் அவன் அறையை அடைந்திருந்தாள்....
அறையின் வாயிலில் ஒரு சில நிமிடங்கள் நின்று இருந்தவளுக்கு இதில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரு வழியும் தெரியவில்லை...
உள்ளே அறையில் சிம்ம சொப்பனமாகத் தன் கணவன்... கீழே அந்தச் சிங்கத்தைப் பெற்றெடுத்த அதை விட சக்தி வாய்ந்த மாமியார்...
"இவர்கள் இருவருக்கும் இடையில் என்னை மாட்டிவிட்டு விளையாடுறியே முருகா" என்று தயங்கி நின்று இருந்தவள் மெதுவாக அவன் அறைக் கதவைத் தட்ட உள்ளிருந்து ஒரு சத்தமும் வரவில்லை....
மீண்டும் தட்ட, "கம் இன் [Come in]" என்ற கம்பீரமான குரல் கேட்க, உச்சி முதல் உள்ளங்கால் வரை உதறல் எடுத்தது...
கலங்கி போனவளாக மெதுவாகவே கதவை திறந்தாள்.....
இப்பொழுது தான் அவள் தன் கணவனின் அறைக்குள் முதன் முதலாக நுழைவது.... அதுவும் அவன் அங்கு இருக்கும் பொழுது...
முதல் முறை அவள் அன்னை வந்திருந்த பொழுது கூட அவள் அவன் அறையின் வெளியே தான் நின்றிருந்தாள்...
மெல்ல அறைக்குள் வந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்கும் துணிவு இல்லாமல் தலை குனிந்தே நின்று இருக்க, கட்டிலில் கரங்கள் இரண்டையும் தன் தலைக்குப் பின் கொடுத்து படுத்திருந்தவனுக்கு அவள் தலை கவிழ்ந்து நிற்பதை பார்க்க, அவளின் அச்சத்தின் அளவு நன்கு புரிந்தது...
அவள் அவ்வாறு சிறு பெண் போல் நிற்பதைக் கண்டவனுக்குத் தன்னை அறியாமல் சிரிப்பு வர, சத்தம் இடாமல் இதழ் விரித்துச் சிறிதாகப் புன்னகைத்தவன் வேறு ஒன்றும் சொல்லாமல் கட்டிலில் இருந்து எழுந்து பால்கனிக்கு போய்விட,
"ஐயோ! இப்பொழுது என்ன செய்வது.... அவர் கட்டிலில் உட்கார்வதா? இல்லை அந்த ஸோஃபாவில் உட்கார்வதா?" என்று குழம்பிப் போய்க் கடைசியில் அந்த அறையின் மூலையில் தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்தவாறு தன் முழங்காலில் தலையை வைத்து அவன் வருவதற்காகக் காத்திருந்தாள்....
அவள் எந்த அளவிற்குப் பயந்திருக்கிறாள் என்று ஒரு கணவனாக அவனுக்குப் புரிந்தே இருந்தது...
இப்பொழுது தான் அவளை நெருங்கினாலும் அச்சத்தினால் வேண்டுமானால் அவள் தன்னை அவனுக்குக் கொடுப்பாள்... ஆனால் அதில் நிச்சயம் காதல் இருக்காது...
அவளின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு காதல் இல்லாது காமம் மட்டும் பிரவாகிக்கும் உறவில் ஈடுபட அவனுக்கு விருப்பமில்லை...
அதனாலேயே ஒரு நல்ல கணவனாக அவளுக்குத் தனிமைக் கொடுப்பதற்கே அவன் வெளியே சென்றது....
ஆனால் அவள் கவலை அவளுக்கு....
"ஏதாவது ஒரு பெட்ஷீட் கொடுத்துவிட்டு போயிருந்தாலாவது நாம பாட்டுக்கு சிவனேன்னு தரையில படுத்துத் தூங்கியிருக்கலாம்.... இப்போ என்ன பண்றது? ஆமா அப்படியே கொடுத்துட்டாலும்" என்று எண்ணியவள் சுவற்றில் தலை சாய்க்க....
சிறிது நேரத்தில் அசதியினால் அவளையும் அறியாமல் உறங்கிப் போனவள் தூக்கத்தில் வெற்று தரையிலேயே படுக்க அப்பொழுது தான் அர்ஜூன் உள்ளே வந்தான்..
உள்ளே வந்தவன் அவளைக் காணாமல் தேட அறையின் மூலையில் தரையில் படுத்திருப்பவளை, அவள் படுத்திருந்த விதத்தைப் பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் மனதில் என்னவோ செய்ய, அவளருகில் மண்டிப் போட்டு அமர்ந்தவன் அவளை உற்றுப் பார்த்தான்...
முதல் முறையாகத் தன் மனையாளை இவ்வளவு அருகில் இத்தனை நிதானமாக இப்பொழுது தான் பார்க்கிறான்.....
அழகான முகம், சின்ன நெற்றி, அதில் கீழே படுத்திருந்ததால் கற்றையாக முடி முகத்தில் விழுந்து அது கூட அவளுக்கு அழகாகத் தான் இருந்தது.
கூரிய சின்ன அழகான மூக்கு அதில் ஒற்றைக் கல் மூக்குத்தி, கீழே வரைந்து வைத்தது போல் செம்பவள அதரங்கள் என்று ஒரு பெண்ணோவியமாக இருந்தவள் அவனின் இதயத்தைப் பிளந்து உள்ளே நுழைந்தாள்......
அர்ஜூனைப் போன்ற மனிதர்களுக்கு, வாழ்கையில் தொழில், லட்சியம், பணம் என்று ஓடுபவர்களுக்குக் காதல் என்பது அர்த்தமற்ற ஒரு மூன்று எழுத்து சொல்...
காதலின் பின் ஒளிந்திருப்பது தன்னை வெளிப்படுத்த விரும்பாத இருட்டியதற்குப் பின் திருட்டுத்தனமாக வெளி வரும் காமம்...
அது மட்டுமே காதலின் அர்த்தம் என்று இருந்தவனின் உள்ளத்தில் கூடத் தன் அழகிய மனதால், அப்பழுக்கற்ற குணத்தால் காதலை ஊற்றெடுக்கச் செய்துவிட்டாள் இந்தச் சின்னப் பெண்...
அவனின் மனம் கவர்ந்த அவனுக்கு மட்டுமே உரிய அவனின் மனையாள்...
அர்ஜூனின் மனம் நிறைந்து இருந்தது....
அவளின் கலைந்த அவள் எழில் முகத்தில் புரண்டு கொண்டிருந்த முடிக் கற்றையை அவள் முகத்தில் இருந்து ஒதுக்க அவன் தன் கைக் கொண்டு போக,
தன் கணவன் தன் அருகில் மண்டியிட்டுத் தன்னை ரசித்துக் கொண்டு இருப்பதைத் தூக்கத்திலும் உணர்ந்தாளோ அல்லது பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் உள்ளுணர்வு உந்தியதாலோ அவள் திரும்பி படுக்க, அவள் தன்னைப் பார்த்து விடக் கூடாதே என்று எண்ணியவன் அவளைத் தொடாமல் வெடுக்கென்று எழுந்து கட்டிலில் போய்ச் சாய்ந்து அமர்ந்தான்.
அங்கிருந்தப்படியே அவளைப் பார்க்க அவள் குளிருக்கு குறுகிப் படுக்கப் போர்வை கொடுப்போமா என்று ஒரு விநாடி நேரம் நினைத்தவன் தன் மனதை மாற்றிக் கொண்டு எழுந்து அந்த அறையின் ஏஸியின் அளவை குறைத்தவன் அவளைப் பார்த்தபடியே சிறிது நேரத்தில் தானும் துங்கிப் போனான்.
பொழுது புலர்ந்தும் தன்னை அறியாமல் அசதியில் தூங்கிக் கொண்டிருந்த திவ்யா விழித்ததும் தான் எங்கு இருக்கிறோம் என்று யோசித்தவள் தான் படுத்திருப்பது தன் கணவனின் அறை என்று தெரிந்த அந்த விநாடியே விருட்டென்று அடித்துப் பிடித்து எழுந்தவள் கட்டிலில் பார்க்க, அங்கு அவளின் மணாளன் வலது கையைத் தலையில் வைத்துக் கண்களை மறைத்துக் கொண்டு அழகாகத் தூங்கி கொண்டு இருந்தான்.
அமைதியாக உறங்கி கொண்டிருந்த கணவனை ஆசையோடு பார்த்தவள் அவனைத் தன் கண்களின் வழியே ஆழ உள் வாங்கிக் கொண்டவள், பின் அவன் எழுந்து விடப் போகிறானோ என்ற பயத்தில் மெதுவாக வெளியெறினாள்.....
மஹாவின் அறைக்குள் சென்றவள் சிறிது நேரத்தில் குளித்து விட்டு கீழே இறங்க....
ஆனால் அதற்குள் ஏற்கனவே விழித்துவிட்டிருந்த தன் அன்னையும் மாமியாரும் ஹாலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் அருகில் போய்...
"காபி போடவா அத்தை?" என்றாள்...
நேற்று இரவு அவளை அர்ஜூனின் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவன் இந்தப் பெண்ணின் மனம் நோகும் படி எதுவும் பேசியிருப்பானோ? அல்லது அவளை வெளியில் விரட்டி அடித்திருப்பானோ என்று கலக்கத்தில் இருந்த ஸ்ரீ, திவ்யாவின் குரல் கேட்டதும் விலுக்கென்று அவளைத் திருப்பிப் பார்க்க அங்கு அமைதியான முகத்துடன் தலைக் குளித்து எழிலோடு நின்று கொண்டிருந்தாள் அவர் மருமகள்..
அவருக்குச் சடுதியில் இந்த எண்ணம் தோன்றி மறைந்தது... நேற்று தன் மகன் திவ்யாவை தன் மனைவியாக எடுத்துக் கொண்டு இருப்பானோ???
ஆனால் தோன்றிய வேகத்திலேயே அது மறைந்தும் போனது...
இவ்வளவு சீக்கிரமாவது தன் மகன் திருந்திவிடுவதாவது என்று நினைத்துக் கொண்டவர் அவளின் கரத்தைப் பற்றி அழைத்துத் தன் அருகில் அமர வைத்துக் கொண்டார்...
"காபி எல்லாம் கொஞ்ச நேரம் கழித்துக் குடிக்கலாம்.... நீ இப்போ இங்க உட்காரு" என்றவர் அவள் உட்கார்ந்தவுடன்,
"திவ்யா, நேத்தே சொல்லனும்னு நினைச்சேன்..... நேத்து நீ ரொம்ப ரொம்ப அழகா இருந்தடா.... அந்த மயில் கழுத்துக் கலர் புடவை உன் கலருக்கு ரொம்ப எடுப்பா இருந்தது.... என் கண்ணே பட்டுடும் போல இருந்தது" என்றார்...
மாமியாரின் புகழ்ச்சியில் வெட்கம் கொண்டவள் தலை குனிந்து சிரிக்க, அங்கு வந்த அல்லி கோல மாவுடன் வர,
"இங்க குடு அல்லி, நானே போடுறேன்" என்றாள்....
'இல்லம்மா, நீங்க பேசிக்கிட்டு இருந்தீங்க..... அதனால தான் உங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு.."
"பரவாயில்ல அல்லி, கொடு... நானே போடுறேன்" என்று கோலப் பொடியை வாங்கியவள் வாசல் தெளித்துக் கோலம் போட ஆரம்பித்தவளின் மனம் முழுவதும் அவள் கணவனே ஆக்கிரமித்து இருந்தான்...
நேற்று தன் கணவன் அவளைத் தன் அறையில் உறங்க அனுமதிப்பான் என்று அவள் கனவிலும் நினைத்து இருக்கவில்லை...
அவன் ரிஷப்ஷன் முடிந்து காரில் தன் அன்னையிடம் சினத்துடன் பேசிக் கொண்டு வந்ததைக் கவனித்துக் கொண்டு வந்ததில் இருந்து, ஸ்ரீயின் அலை பேசி அழைப்புக்குப் பின் அவன் திவ்யாவை திரும்பியும் பார்க்காது எரிச்சல் கலந்த முகத்துடன் வேண்டும் என்றே நிதானமாகக் காரை செலுத்திக் கொண்டு சென்றதில் இருந்து அவளைத் தன் அறையில் படுக்க வைப்பதில் அவனுக்கு எத்தனை வெறுப்பு என்று நினைத்திருந்தாள்...
ஆனால் நேற்று இரவு அவன் அவளை வெளியில் அனுப்பாதது மட்டும் இல்லை தான் உள்ளே நுழைந்ததும் அவன் ஒன்றும் சொல்லாமல் அறையை விட்டு வெளியேறியதும் அவளை வியப்பில் ஆழ்த்தியிருந்தது....
அதனை நினைத்துக் கொண்டே இதயம் முழுவதும் சிலிர்த்து இருக்க மனதின் பூரிப்புக் கைகளில் அழகிய கோலமாக உருமாறியிருந்தது....
கண்களைக் கவரும் வகையில் அழகிய பெரிய கோலத்தை அவள் கிட்டத்தட்ட போட்டு முடிக்கவும், ட்ராக் சூட் போட்டுக் கொண்டு ஜாக்கிங் போக அர்ஜூன் வெளியே வரவும் சரியாக இருந்தது.....
வேகமாக வெளியில் வந்தவனின் கால்கள் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த மனையாளைக் கண்டதும் தாமாகத் தயங்கி நின்றது....
காலையில் தலை குளித்துத் தலையில் இன்னும் அவிழ்க்கப் படாத துண்டுடன் அந்தக் காலை வேளையிலிலும் சூரியன் சுட்டுக் கொண்டு இருந்ததால் நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பியிருக்க, வியர்வை லேசாக வழிந்து உச்சி வகிட்டில் வைத்து இருந்த குங்குமம் சிறிதாகக் கலைந்து வியர்வையோடு வழிந்து இருக்க அர்ஜூனின் கரங்கள் அதற்கு மேல் குங்குமத்தை வழியவிடாது துடைக்கப் பேராவல் கொண்டது.....
எளிமையான பருத்தி புடவையிலும் எழிலோடு அழகிய சிற்பம் போல் குனிந்து கோலம் போட்டுக் கொண்டு இருந்ததால் கழுத்தில் ஆடிய தாலிக் கயிறு வெளியில் வந்து விழுந்து அவள் மார்பில் தவழ்ந்து கொண்டிருக்கக் கோலத்தைப் போட்டவள் திருப்தியோடு புன்னகைக்க அவளின் செழித்த கன்னங்களில் அவள் முறுவல் காட்டிய பொழுது விழுந்த குழிகள் அவனை மயக்கத்தில் ஆழ்த்த தன்னை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றான் அர்ஜூன்......
தன் கணவன் வீட்டின் வாயில் கதவிற்கு அருகில் நின்று தன்னை அங்குலம் அங்குலமாக ரசித்து, சிலிர்த்து எழும் தன் தாபத்தை இறுக்கி பிடித்துக் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்பதை உணராமல் கர்ம சிரத்தையாகக் கோலத்தைப் போட்டுக் கொண்டிருந்தவள் அவன் வாயிலைத் தாண்டி நடக்கவும் தன் ஷூ லேஸ் அவிழ்ந்திருந்தப்பதை கவனித்து ஒரு காலை குத்துக்காலிட்டு மறு காலின் லேஸை கட்ட....
அவனின் அசைவில் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தவள் எதிர்பாராதவிதமாகத் தன் கணவனைக் கண்டவுடன் விருட்டென்று வேகமாக எழ, அப்பொழுது தான் கவனித்தான் அர்ஜூன்.....
கோலம் போடுவதற்கு ஏதுவாகத் தன்னுடைய புடவையைத் தூக்கி அவள் இடுப்பில் சொறுகியிருந்ததை...
கீழே அமர்ந்து இருந்தவனின் கண்களுக்கு நேராக வெகு அருகில் அவள் கால்கள் இரண்டும் வாழைத் தண்டு போல் அழகாகப் பளிச்சென்று தெரிய அதில் மெல்லிதான வெள்ளி கொலுசுகள் பளபளக்க, அவன் பார்வை போகும் இடத்தைக் கண்டவள் பட்டென்று புடவையை இழுத்து விட்டவளின் கண்களில் வெட்கம் பொங்கி வழிந்தாலும் அதில் அச்சமும் கலந்து நின்றது...
அவளின் அபாரமான அழகு விழிகளில் தன் விஷம விழிகளைப் படரவிட்டவன் ஒரு நொடி நேரம் தயங்கி பின் எழுந்து தன்னுடைய ஜாக்கிங் வேலையைத் தொடர்ந்தான்....
"ஐயோ! கடவுளே! இப்படியா புடவையை இழுத்து சொறுகிட்டு அதுவும் அவங்க கீழ உட்கார்ந்துக்கிட்டு நான் நின்னுக்கிட்டு... சே.... ஒரு வேளை நம்மளை தப்பா நினைத்திருப்பாங்களோ? சிட்டில பொண்ணுங்கல்லாம் இப்படியா புடவைய தூக்கிக் கட்டிட்டு ரோட்டுல நிக்கிறாங்க திவ்யா.... சே, சரியான பட்டிக்காடு டி நீ??" என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள்...
"நான் எங்க ரோட்டுலயா நிக்கிறேன்.... இங்க வீட்டுக்கு முன்னாடி தான் நிக்கிறேன்..... ஆனால் அவங்க பார்த்த பார்வையே சரியில்லை... இன்னிக்கு என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோ? இல்லை எல்லாரும் போனப்புறம் வச்சிக்கலாம்னு இருக்கிறாங்களான்னு தெரியலையே" என்று ஒருவழியாக முடிந்தவரை தன்னைக் குழப்பி உள்ளே சென்றாள்.
தொடரும்..
அர்ஜூன் காரின் கதவை திறந்தும் ஏறாமல் நின்ற திவ்யா ஒரு சில நிமிடங்கள் ஸ்ரீயின் முகத்தையும் காரையும் மாற்றி மாற்றிப் பார்க்க, அங்குப் பொறுமை இழந்து கொண்டு இருந்தான் அர்ஜூன்...
வழக்கமான அவனின் அகங்காரம் தலை தூக்க, லேசாக இடது பக்கமாகத் தலையைச் சாய்த்து திவ்யாவைப் பார்க்க அதில் அவள் நெஞ்சுக் கூடு சில்லிட சட்டென்று காரில் ஏறியவள் மறந்தும் தன் கணவனின் பக்கம் திரும்பவில்லை...
அர்ஜூன் கதவைத் திறக்கவும், பின் திவ்யா அதில் ஏறாமல் நிற்க அவளைக் கூர்ந்து பார்த்ததையும், அதில் மின்னல் போல் காரில் ஏறிய திவ்யா அர்ஜூன் அருகில் அமர்ந்ததையும் கண்ட மஹாவிற்கும் அருணிற்கும் நடப்பது கனவா? இல்லை நினைவா? என்று தோன்ற ஆச்சரியத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...
அருண் மஹாவிடம் "இங்க என்ன நடக்குது?" எனவும்...
"ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா? இல்லை எல்லாம் என்னோட மேக்கப்போட மாயமா?" என்று மஹா அளக்க...
"அடியே... ஏதோ ஒரு நாள் அதுவும் ஏற்கனவே அழகா இருக்கிற அண்ணிக்கு மேக்கப் போட்டுவிட்டு ஏண்டி இப்படி அளப்பரை பண்ற" என்றான்...
"உங்களுக்குத் தான் என் திறமையைப் பார்த்துப் பொறாமை" என்று உதட்டை சுளித்தவாறே கிசுகிசுத்தவள் திரும்பிப் பார்க்க அங்கு வினோத் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க, "ஐயோ! இவங்க இப்படிப் பார்ப்பதை யாராவது பார்த்தால் என்ன ஆகும்??" என்று மனதிற்குள் நினைத்தாலும் அதுவும் அவளுக்குப் பிடித்துத் தான் இருந்தது.
திவ்யா காரில் அமர்ந்ததும் அர்ஜூன் காரை கிளப்ப, மற்ற அனைவரும் வேறு வேறு காரில் கிளம்பினார்கள்...
தனித்த இரவு, சப்தமேதுமற்ற சூழ்நிலை, காதலுக்கும் காமத்திற்கும் ஏற்ற வயதுடைய இருவர், உரிமையுள்ள உறவு....
இயற்கையின் வேகம் மெள்ள ஆட்கொள்ள இம்சையும் இன்பமும் கலந்த உணர்வில் தாக்கப்பட்டு அர்ஜூன் இருந்தானென்றால் காரில் ஏறியதில் இருந்து ஒவ்வொரு நொடியும் திவ்யாவின் நிலை விவாரணத்திற்கு அப்பாற்பட்டதாயிருந்தது...
உணர்ச்சிகள் கரைக்கடக்கும் ஆவலில் திமிறிக் கொண்டு, இருக்கத் தன் வெகு அருகில் அமர்ந்து இருந்தவளை உரிமையுடன் திரும்பி பார்க்க, அழகெல்லாம் திரண்டது போலும் இருளைக் கிழித்துக் கொண்டு வந்த நிலவைப் போலும் அவன் மனைவி அவனை வசீகரிக்க, அவள் தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூக்களில் இருந்து வந்த சுகந்தம் அவன் நாசியைக் கவர்ந்து மயக்கத்தை விளைவிக்கத் திண்டாடிப் போனான் அர்ஜூன்...
வெளி உலகத்தில் அவன் அழுத்தமான காலடிச் சுவடுகளின் சத்தத்திற்கே எழுந்து நிற்கும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள்....
தொழில் வட்டாரங்களில் எதற்கும் அஞ்சாத சிங்கம் என்றும், தன் கூரிய பார்வையிலேயே எதிராளியை வென்றுவிடுபவன் என்றும் பேர் எடுத்தவன்...
அப்பேற்பட்ட அர்ஜூனிற்கே இந்த நிலைமை என்றால் பத்தொன்பது வயதே ஆன, தன் கணவனின் ஒரு பார்வையிலேயே சகலமும் நடுங்கி நிற்கும் திவ்யாவின் நிலையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்...
அவன் தன்னைத் திரும்பி பார்ப்பதை அவன் பக்கம் திரும்பாமலே தெரிந்துக் கொண்டவள் நாணத்தை மறைக்க முடிந்த அளவிற்கு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வர, அவளின் நாணத்தையும் சங்கடத்தையும் மிகைப் படுத்தி வேதனையை அளிக்கும் வகையில் அவன் தன் இடது கையைக் கியர் பாக்ஸில் வைத்து இருக்க, அதில் அவன் கரம் அவளின் தொடையில் லேசாக உரச, தன்னிச்சையாக நகர்ந்து கதவோரம் ஒட்டி அமர்ந்தாள்...
அவளின் செய்கையைச் சாலையில் பார்வையைப் பதிய வைத்துக் கொண்டே கண்டு கொண்டவன் இதழ்களில் தவழ்ந்த புன்னைகையுடன் கண்களில் விஷமச் சிரிப்புடன் காரை செலுத்திக் கொண்டு இருக்க அரவமேதும் இல்லாத அந்த நிசப்தமான சூழ்நிலையில் அர்ஜூனின் அலை பேசி அலறி திவ்யாவிற்குத் தூக்கி போட செய்தது...
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து அலை பேசியை எடுத்தவன் அதில் அழைத்திருந்தவரின் எண்ணைப் பார்க்க அவன் அன்னையே அழைத்திருந்தார்...
அவர் இந்தத் திருமண வரவேற்பை ஏற்பாடு செய்திருந்ததே அவனுக்கு விருப்பம் இல்லை... அதிலும் வாழ்த்துக்களும் கூச்சல்களும் இளவட்டங்களின் அட்டகாசங்களும் அவனுக்குக் கிட்டத்தட்ட ஒரு வித எரிச்சல் மனப்பான்மையே உருவாக்கியிருந்தது...
இதில் அவர் மீண்டும் அழைக்கவும் இன்னும் என்ன மிச்சம் வைத்திருக்கிறார் என்று எண்ணியவன் அழைப்பை எடுக்காமல் அலை பேசியை மீண்டும் பாக்கெட்டில் வைத்து காரை ஓட்டுவதில் கவனத்தைச் செலுத்த, மீண்டும் மீண்டும் அலறிக் கொண்டு இருந்த அலை பேசி சற்று நேரம் இடைவெளிவிட்டு சிணுங்கத் துவங்கியது...
ஆனால் இந்த முறை சிணுங்கியது அர்ஜூனின் அலை பேசியல்ல... திவ்யாவினுடையது.....
அர்ஜூனை திரும்பி பார்த்தவள் வேறு வழியில்லாமல் அழைப்பை எடுக்க.....
"என்னடா, அர்ஜுன் செல்லிற்குக் கூப்பிட்டேன்... அவன் எடுக்கல... யார்கிட்டயாவது பேசிட்டு இருக்கானா?" என்றார் ஸ்ரீ...
அவருக்கு நன்றாகத் தெரியும்... யாரிடமாவது அவன் பேசிக் கொண்டு இருந்தால் அலை பேசியில் அழைப்பு சென்று இருக்காது...
அவர் மகன் வேண்டும் என்றே தான் அலை பேசியை எடுக்கவில்லை என்று....
தெரிந்திருந்தும் அவர் திவ்யாவிற்கு அழைத்தவர்...
"திவ்யா... ஃபோன கொஞ்சம் அர்ஜூன் கிட்ட கொடுக்கிறியா? நான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்" எனவும்...
ஏற்கனவே அவனுக்கு அருகில் தனியாக அமர்ந்து வருவது அவளுக்குக் காரில் இருந்த ஏசியையும் மீறி வியர்த்துக் கொட்டுகிறது...
"இதுல இப்போ அவங்க கிட்ட போன வேற கொடுக்கனுமா.... ஐயோ!" என்றிருந்தது திவ்யாவிற்கு...
ஆனால் அர்ஜூனிற்கு நன்கு தெரியும் திவ்யாவின் அலை பேசியில் அழைத்ததும் தன் அன்னை தான் என்று...
அன்னைக்கும் மகனிற்கும் இடையில் நடக்கும் மௌன போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது இன்னமும்...
தன் மனைவியின் பால் அவன் உள்ளம் சரிந்திருந்தது உண்மை தான்... அதனை அவனும் உணர்ந்தே இருந்தான்...
அந்த ஒரு காரணத்தினால் தான் அவன் இந்தத் திருமண வரவேற்பை தடுத்து நிறுத்தவில்லை...
ஆனால் அதற்காக அவன் தன் அன்னையை மன்னித்துவிட்டான் என்று அர்த்தம் இல்லை... அவரின் மீது இன்னும் வெறுப்பும் கோபமும் இருக்கத் தான் செய்தது...
ஆதலால் இனி அவர் கேட்கப் போகும் அல்லது சொல்லப் போகும் எதனையும் தான் காதில் வாங்கப் போவதில்லை என்று முடிவெடுத்து இருந்ததினாலேயே அவன் அவரின் அழைப்பை நிராகரித்து இருந்தான்...
ஆனால் அவர் திவ்யாவையும் அழைக்கவும், அவளிடம் என்ன சொன்னாரோ அவள் அவனைத் திரும்பி பார்க்கவும் அவனுக்குப் புரிந்து போனது...
தன்னிடம் காரியம் சாதிக்க நினைக்கும் தன் அன்னை இன்று தன் மனைவியைப் பயன்படுத்த பார்க்கிறார் என்று..
ஆனாலும் தன் நிலையில் இருந்து அவன் இனி சிறிதும் கீழ் இறங்கி வருவதாயில்லை....
தன் கணவனின் உள்ளத்திற்குள் நடக்கும் போராட்டத்தை அறியாமல் ஒரு வழியாகத் தனக்குள்ளே தைரியத்தை வர வழைத்துக் கொண்டவள் தயங்கியவாறே...
"அத்த உங்ககிட்ட பேசனும்னு சொல்றாங்க" என்று மெதுவாகக் கூற,
அவளைத் திரும்பிப் பார்த்தவனின் பார்வையைத் தாங்க இயலாமல் "பேசாமல் காரில் இருந்து குதித்து விடுவோமா?" என்றே இருந்தது அவளுக்கு.....
அவளைச் சில விநாடிகளே பார்த்தவன் மௌனமாக மீண்டும் சாலையில் கண்களைப் பதிக்க, இப்போழுது என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பிப் போனாள் திவ்யா....
மீண்டும் தன்னைச் சமன்படுத்திக் கொண்டவள்.....
"அத்தக்கிட்ட நான் என்ன சொல்லட்டும்? இன்னும் லைன்ல தான் இருக்காங்க" என்று மெல்லிய குரலில் கூற ஒன்றும் பேசாமல் அவளிடம் இருந்து அலை பேசியை வாங்கியவன் மீண்டும் சாலையில் கண் பதித்து "வாட் மாம்?" என்றான்.
ஸ்ரீக்கு அவனது கடினமான குரலில் இருந்தே தெரிந்தது அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று...
இதில் இந்த விஷயத்தை வேற சொல்லனுமா என்றிருக்க ஆனால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இதை விட நல்ல ஒரு சந்தர்ப்பம் அமையாது என்று ஒரு நல்ல அன்னையாக, தன் மனம் கவர்ந்த மருமகளின் நலனிற்காக அவர் அதனைச் செய்தே ஆக வேண்டும் என்று முடிவோடு இருந்தார்...
அவருக்கும் தன் மகனை நினைத்து அடி வயிற்றில் புளியை கரைக்கவே செய்தது... இருந்தும் மனதிற்குள் துணிவை வர வழைத்துக் கொண்டவர் மெல்ல...
"அர்ஜூன்... இன்றைக்குத் திவ்யாவோட சொந்தக்காரர்கள் சில பேரும், நம்ம சொந்தக்காரங்கள் சிலரும் நம் வீட்டிலேயே தங்குறாங்க..... ஏற்கனவே உங்க அத்தை அவ பொண்ண உனக்கு எடுக்கலையேன்னு கோபத்துல இருக்கா.... இதுல அவ நீயும் திவ்யாவும் தனித் தனியா படுக்கிறதப் பார்த்தா அதுக்குக் கண்ணு காது மூக்குன்னு வச்சு பேச ஆரம்பிச்சிடுவா..... அது நம்ம குடும்பத்திற்குக் கெட்ட பேரத் தான் கொண்டு வரும்...." என்றவர் சில விநாடிகள் தயங்கி ஊரில் உள்ள கடவுள்களிடம் எல்லாம் மன்றாடி மெதுவாக அதைக் கேட்டேவிட்டார்...
"அதனால ப்ளீஸ்... அவ இங்கிருந்து போற வரைக்கும் மட்டும் திவ்யாவை உன் ரூம்ல தங்க வச்சிக்கிறியா?"
இதனைக் கேட்பதற்குள் ஸ்ரீக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது....
இதைக் கேட்டதும் மறு பக்கதில் அர்ஜூன் கோபத்தில் கத்த போகிறான் என்று ஸ்ரீ நினைத்துக் கொண்டு இருக்க அவனோ எதுவும் பேசாமல் இருந்ததைப் பார்த்து குழம்பி போன ஸ்ரீ...
"அர்ஜூன், என்னப்பா? லைன்ல தான் இருக்கியா?" என்றார்.
"யெஸ் மாம்" என்றவனுக்கு அவரின் எண்ணம் புரிந்தது...
காதலோ, காமமோ, தாபமோ அவை ஒரு மனிதனின் சொந்த விஷயங்கள்... அது அவனுக்கும் அவன் மனைவிக்கும் மட்டுமே உரிய அந்தரங்க உறவு.... தன்னவளுடன் தான் கூடும் தருணத்தைக் கூட அவனும் அவளும் மட்டும் தான் முடிவெடுக்க வேண்டும்...
இதில் தலையிட இவ்வுலகில் ஒருவருக்கும் அதிகாரம் கிடையாது என்று நினைத்திருந்தவனுக்கு அவன் அன்னையின் இப்போதைய வேண்டுகோள் மேலும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் கிளப்பியது....
அந்த இரவு அவர்கள் இருவரும் இணையும் இரவாகக் கூட இருந்திருக்கலாம்... அவர்களின் வாழ்கையின் காதல் கலந்த காம இன்பத்தையும், நேசம் கலந்த தாம்பத்தியத்தின் சுகத்தையும் சுமந்து வரும் முதல் இரவாக அமைந்திருக்கலாம்...
அவன் உடலில் மண்டியிருந்த உணர்ச்சிகளின் சுழற்சியை, தாபத்தின் தகிப்பை, காமத்தின் வேட்கையை, பெண்ணவளும் தனது இதய வாசலைத் திறந்து தனது லாவண்யத்தை அவனுக்கு அள்ளி வழங்கி கணவனின் தேடலைப் பூர்த்திச் செய்து அவன் பிரம்மச்சரியத்தை உடைத்த இரவாக இருந்திருக்கலாம்...
ஆனால் இந்த நிமிடம் அவனின் மனதில் மண்டியிருந்த விரக்தி எல்லாம் மீண்டும் மீண்டும் தன் வாழ்க்கையின் போக்கை, கணங்களை நிர்ணயிக்கும் தன் அன்னையை நினைத்து தான் இருந்தது...
அதில் அவனுக்குள் அடங்கியிருந்த வேதாளம் மெல்ல வெளி வர ஆரம்பித்தது....
சில நொடிகள் சிந்தித்தவன் மீண்டும் வார்தைகளைக் கொட்ட ஆரம்பித்தான்... ஆனால் தன் மனைவிக்குப் புரியக் கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில்.....
"மாம், என்ன ப்ளான் பண்றீங்க? எனக்கு ஒன்றும் புரியவில்லை... ப்ளீஸ் டோண்ட் ட்ரீட் மீ லைக் அச் சைல்ட்.... [Please don't treat me like a child]... லெட் மீ டேக் தோஸ் டிஷிஷன்ஸ் மாம்... let me take those decisions mom..." என்றான்....
அழுத்தமான குரலில் கிட்டதட்ட கர்ஜிக்கும் தோரணையில் அவன் ஒவ்வொரு வார்த்தையையும் பல்லைக் கடித்துக் கொண்டு பேசியதிலேயே ஸ்ரீக்குப் புரிந்தது அவனுக்குத் தன் மேல் இருக்கும் அடங்காத கோபத்தின் அளவை.....
ஒரு வேளை அவன் திவ்யாவைப் பார்க்கும் பார்வையின் அர்த்தத்தை நாம் தான் தவறாகப் புரிந்துக் கொண்டோமோ என்ற எண்ணம் கூடச் சடுதியில் தோன்றி மறைந்தது....
ஆனால் அதே சமயம் அவருக்கு நன்றாகத் தெரியும்...
அர்ஜூனிற்கு யாரும் அவன் அறைக்கு வருவது பிடிக்காது என்று...
அப்படிப்பட்டவன் திவ்யாவை எப்படித் தன்னுடன் தங்க அனுமதிப்பான்? ஆனால் திவ்யா அவன் மனைவி.... யாருக்கு உரிமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவன் மனைவிக்கு உரிமை இருக்கிறது... இப்பொழுது அதைச் சொன்னால் தாம் தூம் என்று குதிப்பான்....
ஆனால் அவர் ஒன்று மட்டும் மறந்து போனார்.... அவன் உண்மையில் அவரின் எதிர்பார்ப்பை வெறுத்திருந்தால் ஆங்கிலத்தில் பேசியிருக்க மாட்டான்....
தன்னவளின் மனம் புண்படுவதில் அவனுக்கு விருப்பம் இல்லை...
ஸ்ரீயும் இதோடு இந்த விவாத்தை விட்டு இருக்கலாம்... ஆனால் திவ்யாவிற்கு நல்லது செய்வதாக நினைத்து அவனது ஆத்திரத்தை கிளறிவிட்டுக் கொண்டு இருந்தார்...
"இல்ல அர்ஜூன்... நீ சொல்றது எனக்குப் புரியுது.... அவங்க எல்லோரும் இங்க தங்கப் போறாங்கன்னே எனக்கு இப்போ தான் தெரியும்.... இருக்கிறேன்னு சொல்றவங்கள போன்னு எப்படிச் சொல்றது?"
"பட் அதுக்கு நீங்க சொல்ற மாதிரி என்னால இருக்க முடியாது"
"அர்ஜூன் ப்ளீஸ்.... புரிஞ்சுக்க... இந்த ஒரே ஒரு உதவி மட்டும் செய்.... அப்புறம் உன் விருப்பப்படியே நான் எல்லாத்தையும் செய்றேன்" என்றார்....
அதற்கு மேல் அர்ஜூனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
அவனுக்குத் தன் மனைவி தன்னுடன் ஒரே அறையில் தங்குவதில் விருப்பம் தான்...
ஆனால் அவளைத் தான் எடுத்துக் கொள்ளும் அந்த அழகிய கணம் அவனவள் அவளாக அவளை அவனிடம் ஒப்புவிக்கும் தருணமாகத் தான் இருக்க வேண்டும்...
அதனால் அவனின் கொந்தளிப்பு அதனை முடிவு செய்த அவன் அன்னையின் மீது தான்....
"ஓகே மாம்" என்று அழைப்பை துண்டித்தவன் திவ்யாவின் பக்கம் திரும்பாமலே அலை பேசியை நீட்ட, அமைதியாக அலை பேசியை வாங்கியவள் அவனின் ஆத்திரத்தில் கலங்கி போய் இருந்ததால் அதன் பிறகு மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை...
அமைதியாக ஆனால் மெதுவாகவே அவன் காரை செலுத்திக் கொண்டிருக்க வெகு நேரம் சென்றே வீட்டை அடைந்தவர்களுக்கு ஆரத்தி சுற்றுவதற்குச் சில பெண்கள் வாசலில் காத்திருக்க, அர்ஜூனுக்குத் தங்கள் திருமண நாள் நியாபகத்தில் வந்தது....
அவனுக்கு இருக்கும் கோபத்திற்கு எங்கே அவன் அன்று போல் ஆரத்தி தட்டை மீண்டும் தட்டி விடுவானோ என்று ஸ்ரீ அஞ்சிக் கொண்டிருந்தார்...
ஆனால் அதே சமயம் இத்தனை பேர் இருக்கும் போது அப்படிச் செய்ய மாட்டான் என்று சிறிது தைரியமும் இருந்தது...
ஆனால் அது அர்ஜூன் ஆகிற்றே....
அவன் எந்தக் காலத்தில் யாரைப் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறான்.....
ஆனால் அவர் பயந்ததற்கு மாறாகக் காரை விட்டு இறங்கியவுடன் ஸ்ரீ மற்றும் சில பெண்கள் ஆரத்தி எடுக்க ஒன்றும் பேசாமல் திவ்யாவுடன் உள்ளே சென்ற மகனை விழி விரிய ஆச்சரியத்துடன் பார்த்திருந்தார் ஸ்ரீ...
சிறிது நேரத்திற்கு முன் தன்னிடம் கர்ஜித்த அர்ஜூனா இது என்று....
வீட்டிற்குள் நுழைந்த அர்ஜூன் நேரே தன் அறைக்குச் செல்ல, திவ்யா தன் உடைகளை மாற்றிவிட்டு தன் சுற்றத்திடனும் தன் அம்மாவுடனும் பேசிக் கொண்டிருக்க அவளருகே வந்த ஸ்ரீ சன்னமான குரலில்.....
"திவ்யா, நீ அர்ஜூனோட ரூமுக்கு போடா" என்றார்.... (ஆனால் இந்த அம்மாவுக்கு இவ்வளவு பிடிவாதம் இருக்கக் கூடாது)
"என்னது!!!! அவரோடு ரூமிற்கு நான் போறதா????" நினைத்த மாத்திரத்தில் திவ்யாவிற்கு மயக்கமே வந்தது....
அவள் திருதிருவென்று முழிக்க,
"நான் அர்ஜூன் கிட்ட பேசிட்டேண்டா..... இவங்க எல்லோரும் கிளம்பும் வரை நீ அவன் ரூம்ல தான் தங்கனும்" என்று அவள் காதில் கிசுகிசுக்க,
"ஐயோ!!! என்ன அத்த சொல்றீங்க?" என்று கிட்டதட்ட அலறினாள்....
இவள் இப்படி எல்லாம் சொன்னால் சரி பட்டு வரமாட்டாள் என்ற நினைத்தவர் சத்தமாக,
"சரிடா... நீ மாடிக்கு போ அர்ஜூன் காத்திட்டு இருப்பான்" என்று கூற...
அவர்களுக்கு அருகில் இருந்த அனைவரும் சிரிக்கத் திவ்யாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது.......
ஸ்ரீ சத்தமாகச் சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் தன் மாமியாரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே மாடி ஏறிய திவ்யாவைப் பார்த்த ஸ்ரீ...
"இந்தப் பெண்ணை ரூமுக்குள்ள என்ன பாடுபடுத்த போறானோ தெரியலையே?" என்று திகைக்கவும் செய்தார்....
ஆனால் அதே சமயம் அவங்க அப்பா அம்மா இங்க இருக்கிற வரை கொஞ்சம் பொறுமையாகத் தான் இருப்பான் என்ற நம்பிக்கையும் இருந்தது அவருக்கு..
"இந்த விஷயத்தைத் தான் அத்தை அவங்ககிட்ட கார்ல பேசினாங்களா? அவங்க பதிலுக்கு இங்கிலீஷில் தான பேசினாங்க.... அப்போ எனக்குப் புரியக் கூடாதுன்னு தான் பேசி இருப்பாங்க போல இருக்கு... போச்சு இப்போ எவ்வளவு கோபத்தில இருப்பாங்களோ?? நான் செத்தேன்.... அப்பா முருகா, ஏன்பா என்ன இப்படி மீண்டும் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்குற??" என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே அவள் அவன் அறையை அடைந்திருந்தாள்....
அறையின் வாயிலில் ஒரு சில நிமிடங்கள் நின்று இருந்தவளுக்கு இதில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரு வழியும் தெரியவில்லை...
உள்ளே அறையில் சிம்ம சொப்பனமாகத் தன் கணவன்... கீழே அந்தச் சிங்கத்தைப் பெற்றெடுத்த அதை விட சக்தி வாய்ந்த மாமியார்...
"இவர்கள் இருவருக்கும் இடையில் என்னை மாட்டிவிட்டு விளையாடுறியே முருகா" என்று தயங்கி நின்று இருந்தவள் மெதுவாக அவன் அறைக் கதவைத் தட்ட உள்ளிருந்து ஒரு சத்தமும் வரவில்லை....
மீண்டும் தட்ட, "கம் இன் [Come in]" என்ற கம்பீரமான குரல் கேட்க, உச்சி முதல் உள்ளங்கால் வரை உதறல் எடுத்தது...
கலங்கி போனவளாக மெதுவாகவே கதவை திறந்தாள்.....
இப்பொழுது தான் அவள் தன் கணவனின் அறைக்குள் முதன் முதலாக நுழைவது.... அதுவும் அவன் அங்கு இருக்கும் பொழுது...
முதல் முறை அவள் அன்னை வந்திருந்த பொழுது கூட அவள் அவன் அறையின் வெளியே தான் நின்றிருந்தாள்...
மெல்ல அறைக்குள் வந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்கும் துணிவு இல்லாமல் தலை குனிந்தே நின்று இருக்க, கட்டிலில் கரங்கள் இரண்டையும் தன் தலைக்குப் பின் கொடுத்து படுத்திருந்தவனுக்கு அவள் தலை கவிழ்ந்து நிற்பதை பார்க்க, அவளின் அச்சத்தின் அளவு நன்கு புரிந்தது...
அவள் அவ்வாறு சிறு பெண் போல் நிற்பதைக் கண்டவனுக்குத் தன்னை அறியாமல் சிரிப்பு வர, சத்தம் இடாமல் இதழ் விரித்துச் சிறிதாகப் புன்னகைத்தவன் வேறு ஒன்றும் சொல்லாமல் கட்டிலில் இருந்து எழுந்து பால்கனிக்கு போய்விட,
"ஐயோ! இப்பொழுது என்ன செய்வது.... அவர் கட்டிலில் உட்கார்வதா? இல்லை அந்த ஸோஃபாவில் உட்கார்வதா?" என்று குழம்பிப் போய்க் கடைசியில் அந்த அறையின் மூலையில் தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்தவாறு தன் முழங்காலில் தலையை வைத்து அவன் வருவதற்காகக் காத்திருந்தாள்....
அவள் எந்த அளவிற்குப் பயந்திருக்கிறாள் என்று ஒரு கணவனாக அவனுக்குப் புரிந்தே இருந்தது...
இப்பொழுது தான் அவளை நெருங்கினாலும் அச்சத்தினால் வேண்டுமானால் அவள் தன்னை அவனுக்குக் கொடுப்பாள்... ஆனால் அதில் நிச்சயம் காதல் இருக்காது...
அவளின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு காதல் இல்லாது காமம் மட்டும் பிரவாகிக்கும் உறவில் ஈடுபட அவனுக்கு விருப்பமில்லை...
அதனாலேயே ஒரு நல்ல கணவனாக அவளுக்குத் தனிமைக் கொடுப்பதற்கே அவன் வெளியே சென்றது....
ஆனால் அவள் கவலை அவளுக்கு....
"ஏதாவது ஒரு பெட்ஷீட் கொடுத்துவிட்டு போயிருந்தாலாவது நாம பாட்டுக்கு சிவனேன்னு தரையில படுத்துத் தூங்கியிருக்கலாம்.... இப்போ என்ன பண்றது? ஆமா அப்படியே கொடுத்துட்டாலும்" என்று எண்ணியவள் சுவற்றில் தலை சாய்க்க....
சிறிது நேரத்தில் அசதியினால் அவளையும் அறியாமல் உறங்கிப் போனவள் தூக்கத்தில் வெற்று தரையிலேயே படுக்க அப்பொழுது தான் அர்ஜூன் உள்ளே வந்தான்..
உள்ளே வந்தவன் அவளைக் காணாமல் தேட அறையின் மூலையில் தரையில் படுத்திருப்பவளை, அவள் படுத்திருந்த விதத்தைப் பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் மனதில் என்னவோ செய்ய, அவளருகில் மண்டிப் போட்டு அமர்ந்தவன் அவளை உற்றுப் பார்த்தான்...
முதல் முறையாகத் தன் மனையாளை இவ்வளவு அருகில் இத்தனை நிதானமாக இப்பொழுது தான் பார்க்கிறான்.....
அழகான முகம், சின்ன நெற்றி, அதில் கீழே படுத்திருந்ததால் கற்றையாக முடி முகத்தில் விழுந்து அது கூட அவளுக்கு அழகாகத் தான் இருந்தது.
கூரிய சின்ன அழகான மூக்கு அதில் ஒற்றைக் கல் மூக்குத்தி, கீழே வரைந்து வைத்தது போல் செம்பவள அதரங்கள் என்று ஒரு பெண்ணோவியமாக இருந்தவள் அவனின் இதயத்தைப் பிளந்து உள்ளே நுழைந்தாள்......
அர்ஜூனைப் போன்ற மனிதர்களுக்கு, வாழ்கையில் தொழில், லட்சியம், பணம் என்று ஓடுபவர்களுக்குக் காதல் என்பது அர்த்தமற்ற ஒரு மூன்று எழுத்து சொல்...
காதலின் பின் ஒளிந்திருப்பது தன்னை வெளிப்படுத்த விரும்பாத இருட்டியதற்குப் பின் திருட்டுத்தனமாக வெளி வரும் காமம்...
அது மட்டுமே காதலின் அர்த்தம் என்று இருந்தவனின் உள்ளத்தில் கூடத் தன் அழகிய மனதால், அப்பழுக்கற்ற குணத்தால் காதலை ஊற்றெடுக்கச் செய்துவிட்டாள் இந்தச் சின்னப் பெண்...
அவனின் மனம் கவர்ந்த அவனுக்கு மட்டுமே உரிய அவனின் மனையாள்...
அர்ஜூனின் மனம் நிறைந்து இருந்தது....
அவளின் கலைந்த அவள் எழில் முகத்தில் புரண்டு கொண்டிருந்த முடிக் கற்றையை அவள் முகத்தில் இருந்து ஒதுக்க அவன் தன் கைக் கொண்டு போக,
தன் கணவன் தன் அருகில் மண்டியிட்டுத் தன்னை ரசித்துக் கொண்டு இருப்பதைத் தூக்கத்திலும் உணர்ந்தாளோ அல்லது பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் உள்ளுணர்வு உந்தியதாலோ அவள் திரும்பி படுக்க, அவள் தன்னைப் பார்த்து விடக் கூடாதே என்று எண்ணியவன் அவளைத் தொடாமல் வெடுக்கென்று எழுந்து கட்டிலில் போய்ச் சாய்ந்து அமர்ந்தான்.
அங்கிருந்தப்படியே அவளைப் பார்க்க அவள் குளிருக்கு குறுகிப் படுக்கப் போர்வை கொடுப்போமா என்று ஒரு விநாடி நேரம் நினைத்தவன் தன் மனதை மாற்றிக் கொண்டு எழுந்து அந்த அறையின் ஏஸியின் அளவை குறைத்தவன் அவளைப் பார்த்தபடியே சிறிது நேரத்தில் தானும் துங்கிப் போனான்.
பொழுது புலர்ந்தும் தன்னை அறியாமல் அசதியில் தூங்கிக் கொண்டிருந்த திவ்யா விழித்ததும் தான் எங்கு இருக்கிறோம் என்று யோசித்தவள் தான் படுத்திருப்பது தன் கணவனின் அறை என்று தெரிந்த அந்த விநாடியே விருட்டென்று அடித்துப் பிடித்து எழுந்தவள் கட்டிலில் பார்க்க, அங்கு அவளின் மணாளன் வலது கையைத் தலையில் வைத்துக் கண்களை மறைத்துக் கொண்டு அழகாகத் தூங்கி கொண்டு இருந்தான்.
அமைதியாக உறங்கி கொண்டிருந்த கணவனை ஆசையோடு பார்த்தவள் அவனைத் தன் கண்களின் வழியே ஆழ உள் வாங்கிக் கொண்டவள், பின் அவன் எழுந்து விடப் போகிறானோ என்ற பயத்தில் மெதுவாக வெளியெறினாள்.....
மஹாவின் அறைக்குள் சென்றவள் சிறிது நேரத்தில் குளித்து விட்டு கீழே இறங்க....
ஆனால் அதற்குள் ஏற்கனவே விழித்துவிட்டிருந்த தன் அன்னையும் மாமியாரும் ஹாலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் அருகில் போய்...
"காபி போடவா அத்தை?" என்றாள்...
நேற்று இரவு அவளை அர்ஜூனின் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவன் இந்தப் பெண்ணின் மனம் நோகும் படி எதுவும் பேசியிருப்பானோ? அல்லது அவளை வெளியில் விரட்டி அடித்திருப்பானோ என்று கலக்கத்தில் இருந்த ஸ்ரீ, திவ்யாவின் குரல் கேட்டதும் விலுக்கென்று அவளைத் திருப்பிப் பார்க்க அங்கு அமைதியான முகத்துடன் தலைக் குளித்து எழிலோடு நின்று கொண்டிருந்தாள் அவர் மருமகள்..
அவருக்குச் சடுதியில் இந்த எண்ணம் தோன்றி மறைந்தது... நேற்று தன் மகன் திவ்யாவை தன் மனைவியாக எடுத்துக் கொண்டு இருப்பானோ???
ஆனால் தோன்றிய வேகத்திலேயே அது மறைந்தும் போனது...
இவ்வளவு சீக்கிரமாவது தன் மகன் திருந்திவிடுவதாவது என்று நினைத்துக் கொண்டவர் அவளின் கரத்தைப் பற்றி அழைத்துத் தன் அருகில் அமர வைத்துக் கொண்டார்...
"காபி எல்லாம் கொஞ்ச நேரம் கழித்துக் குடிக்கலாம்.... நீ இப்போ இங்க உட்காரு" என்றவர் அவள் உட்கார்ந்தவுடன்,
"திவ்யா, நேத்தே சொல்லனும்னு நினைச்சேன்..... நேத்து நீ ரொம்ப ரொம்ப அழகா இருந்தடா.... அந்த மயில் கழுத்துக் கலர் புடவை உன் கலருக்கு ரொம்ப எடுப்பா இருந்தது.... என் கண்ணே பட்டுடும் போல இருந்தது" என்றார்...
மாமியாரின் புகழ்ச்சியில் வெட்கம் கொண்டவள் தலை குனிந்து சிரிக்க, அங்கு வந்த அல்லி கோல மாவுடன் வர,
"இங்க குடு அல்லி, நானே போடுறேன்" என்றாள்....
'இல்லம்மா, நீங்க பேசிக்கிட்டு இருந்தீங்க..... அதனால தான் உங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு.."
"பரவாயில்ல அல்லி, கொடு... நானே போடுறேன்" என்று கோலப் பொடியை வாங்கியவள் வாசல் தெளித்துக் கோலம் போட ஆரம்பித்தவளின் மனம் முழுவதும் அவள் கணவனே ஆக்கிரமித்து இருந்தான்...
நேற்று தன் கணவன் அவளைத் தன் அறையில் உறங்க அனுமதிப்பான் என்று அவள் கனவிலும் நினைத்து இருக்கவில்லை...
அவன் ரிஷப்ஷன் முடிந்து காரில் தன் அன்னையிடம் சினத்துடன் பேசிக் கொண்டு வந்ததைக் கவனித்துக் கொண்டு வந்ததில் இருந்து, ஸ்ரீயின் அலை பேசி அழைப்புக்குப் பின் அவன் திவ்யாவை திரும்பியும் பார்க்காது எரிச்சல் கலந்த முகத்துடன் வேண்டும் என்றே நிதானமாகக் காரை செலுத்திக் கொண்டு சென்றதில் இருந்து அவளைத் தன் அறையில் படுக்க வைப்பதில் அவனுக்கு எத்தனை வெறுப்பு என்று நினைத்திருந்தாள்...
ஆனால் நேற்று இரவு அவன் அவளை வெளியில் அனுப்பாதது மட்டும் இல்லை தான் உள்ளே நுழைந்ததும் அவன் ஒன்றும் சொல்லாமல் அறையை விட்டு வெளியேறியதும் அவளை வியப்பில் ஆழ்த்தியிருந்தது....
அதனை நினைத்துக் கொண்டே இதயம் முழுவதும் சிலிர்த்து இருக்க மனதின் பூரிப்புக் கைகளில் அழகிய கோலமாக உருமாறியிருந்தது....
கண்களைக் கவரும் வகையில் அழகிய பெரிய கோலத்தை அவள் கிட்டத்தட்ட போட்டு முடிக்கவும், ட்ராக் சூட் போட்டுக் கொண்டு ஜாக்கிங் போக அர்ஜூன் வெளியே வரவும் சரியாக இருந்தது.....
வேகமாக வெளியில் வந்தவனின் கால்கள் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த மனையாளைக் கண்டதும் தாமாகத் தயங்கி நின்றது....
காலையில் தலை குளித்துத் தலையில் இன்னும் அவிழ்க்கப் படாத துண்டுடன் அந்தக் காலை வேளையிலிலும் சூரியன் சுட்டுக் கொண்டு இருந்ததால் நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பியிருக்க, வியர்வை லேசாக வழிந்து உச்சி வகிட்டில் வைத்து இருந்த குங்குமம் சிறிதாகக் கலைந்து வியர்வையோடு வழிந்து இருக்க அர்ஜூனின் கரங்கள் அதற்கு மேல் குங்குமத்தை வழியவிடாது துடைக்கப் பேராவல் கொண்டது.....
எளிமையான பருத்தி புடவையிலும் எழிலோடு அழகிய சிற்பம் போல் குனிந்து கோலம் போட்டுக் கொண்டு இருந்ததால் கழுத்தில் ஆடிய தாலிக் கயிறு வெளியில் வந்து விழுந்து அவள் மார்பில் தவழ்ந்து கொண்டிருக்கக் கோலத்தைப் போட்டவள் திருப்தியோடு புன்னகைக்க அவளின் செழித்த கன்னங்களில் அவள் முறுவல் காட்டிய பொழுது விழுந்த குழிகள் அவனை மயக்கத்தில் ஆழ்த்த தன்னை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றான் அர்ஜூன்......
தன் கணவன் வீட்டின் வாயில் கதவிற்கு அருகில் நின்று தன்னை அங்குலம் அங்குலமாக ரசித்து, சிலிர்த்து எழும் தன் தாபத்தை இறுக்கி பிடித்துக் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்பதை உணராமல் கர்ம சிரத்தையாகக் கோலத்தைப் போட்டுக் கொண்டிருந்தவள் அவன் வாயிலைத் தாண்டி நடக்கவும் தன் ஷூ லேஸ் அவிழ்ந்திருந்தப்பதை கவனித்து ஒரு காலை குத்துக்காலிட்டு மறு காலின் லேஸை கட்ட....
அவனின் அசைவில் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தவள் எதிர்பாராதவிதமாகத் தன் கணவனைக் கண்டவுடன் விருட்டென்று வேகமாக எழ, அப்பொழுது தான் கவனித்தான் அர்ஜூன்.....
கோலம் போடுவதற்கு ஏதுவாகத் தன்னுடைய புடவையைத் தூக்கி அவள் இடுப்பில் சொறுகியிருந்ததை...
கீழே அமர்ந்து இருந்தவனின் கண்களுக்கு நேராக வெகு அருகில் அவள் கால்கள் இரண்டும் வாழைத் தண்டு போல் அழகாகப் பளிச்சென்று தெரிய அதில் மெல்லிதான வெள்ளி கொலுசுகள் பளபளக்க, அவன் பார்வை போகும் இடத்தைக் கண்டவள் பட்டென்று புடவையை இழுத்து விட்டவளின் கண்களில் வெட்கம் பொங்கி வழிந்தாலும் அதில் அச்சமும் கலந்து நின்றது...
அவளின் அபாரமான அழகு விழிகளில் தன் விஷம விழிகளைப் படரவிட்டவன் ஒரு நொடி நேரம் தயங்கி பின் எழுந்து தன்னுடைய ஜாக்கிங் வேலையைத் தொடர்ந்தான்....
"ஐயோ! கடவுளே! இப்படியா புடவையை இழுத்து சொறுகிட்டு அதுவும் அவங்க கீழ உட்கார்ந்துக்கிட்டு நான் நின்னுக்கிட்டு... சே.... ஒரு வேளை நம்மளை தப்பா நினைத்திருப்பாங்களோ? சிட்டில பொண்ணுங்கல்லாம் இப்படியா புடவைய தூக்கிக் கட்டிட்டு ரோட்டுல நிக்கிறாங்க திவ்யா.... சே, சரியான பட்டிக்காடு டி நீ??" என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள்...
"நான் எங்க ரோட்டுலயா நிக்கிறேன்.... இங்க வீட்டுக்கு முன்னாடி தான் நிக்கிறேன்..... ஆனால் அவங்க பார்த்த பார்வையே சரியில்லை... இன்னிக்கு என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோ? இல்லை எல்லாரும் போனப்புறம் வச்சிக்கலாம்னு இருக்கிறாங்களான்னு தெரியலையே" என்று ஒருவழியாக முடிந்தவரை தன்னைக் குழப்பி உள்ளே சென்றாள்.
தொடரும்..