அத்தியாயம் - 23
வார்த்தைகளில் தன் காதலை சொல்லாவிட்டாலும் உன் மேல் மனதில் எந்த அளவிற்கு ஆசை வைச்சிருக்கிறேன் பாருடி என்று காட்டுவது போல் இருந்தது அர்ஜூனின் ஆழ்ந்த முத்தம்...
அந்தக் கணம் அவன் தன் அந்தஸ்தை பற்றி யோசிக்கவில்லை... தன் வசதி பற்றி நினைக்கவில்லை... அவளின் படிப்போ, ஏழ்மை நிலையோ அவன் முன் தோன்றவில்லை....
அவனின் நினைவில் இருந்ததெல்லாம் அவள், அவள், அவள் மட்டுமே.
பத்தொன்பது வயதே ஆன அந்தச் சின்னஞ்சிறு சிட்டு அவனின் விவாகரத்து விஷயத்தில் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், அவனின் மென்மையான இதழ் முற்றுகையில் உடல் துவள, அவளின் தளிர் மேனியில் அவனின் ஸ்பரிசத்தால் எழுந்த சிலிர்ப்பை உணர்ந்தவன் இத்தனை நாளாய் தான் இழந்தது என்ன என்பதை உணர்ந்தான்...
நீண்ட நேரம் நீடித்த அந்த முதல் இதழ் முத்தத்தில் அவளுக்கு மூச்சிரைக்க, அவளின் திண்டாட்டத்தை உணர்ந்தவன் அவளது இதழ்களைத் தனது இதழ்களிடம் இருந்து விடுவித்தவன் அவளது கழுத்திற்கு இறங்கவும், அவனின் கைகள் அவளின் இடையை அழுத்தமாகப் பிடித்துத் தன்னுடன் இறுக்கி அணைத்ததில் அவளின் மார்பு அவன் நெஞ்சில் அழுத்தவும் தனது சுயநிலையை அடியோடு இழந்தான் அர்ஜூன்....
தீனமான குரலில் "வேண்டாம்" என்று அவள் கெஞ்சினாலும் திமிறாமல் தனக்குள் அடங்கியிருந்த தன் மனையாளுக்குத் தன் காதலையும் அதன் வேகத்தையும் இன்றே உணர்த்திவிடும் எண்ணத்தில் அர்ஜூனின் கரங்கள் அத்துமீற துவங்க, அவள் கழுத்திற்குள் ஆழ புதைந்திருந்த அவனின் இதழ்கள் கீழிறங்குவதை மேலும் தொடர, அவனின் தொடுகையும், அவனின் முரட்டு இதழ்களின் ஸ்பரிசமும் அவளைத் திக்குமுக்காட வைத்த அதே நேரத்தில் வீட்டின் முன் பக்க கதவு தட்டப்பட்டது....
ஒற்றை இதழொற்றலிலும், சில நிமிடங்கள் ஸ்பரிசத்திலும் அடங்கி விடக் கூடியதா அவனின் தாபமும் மோகமும்????
மேலும் மேலும் அவளில் மூழ்க துடிக்க இத்தனை நாள் இளம் மனைவி அருகில் இருந்தும் அவளை அடையாத ஏக்கம் அவனில் வெறியைக் கூட்ட, கதவு தட்டப்படும் ஓசைக் கூட அவனின் செவிகளில் இறங்கவில்லை...
ஆனால் அவளோ அவனின் உடல் வலிமையில் புள்ளி மான் வேட்டைக்காரனிடம் அடங்கியிருப்பது போல் அடங்கி அவனைத் தள்ள இயலாதவளாக நிற்க, மேலும் கதவு தட்டப்படத் தவித்தவள் தடுமாறியவாறே மெல்லிய குரலில்...
"எ... என்னங்க, அம்மா வந்துட்டாங்க போல... ப்ளீஸ் விடுங்க... கதவை திறக்கனும்" என்றாள்...
அவளின் வார்த்தைகள் காதலிலும் மோகத்திலும் கட்டுண்டு இருந்த அவனின் செவிகளுக்கு எட்டினால் தானே...
கணவனின் கரங்கள் மேலும் மேலும் இறுக்கியதில் தன்னை விடுவிக்கும் எண்ணமே அவனுக்கு இல்லை என்பதை உணர்ந்தவள் மீண்டும் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு...
"ஏங்க, ப்ளீஸ்ங்க... விடுங்க" என்று கூறி அவள் விலக முயற்சிக்க,
இதுவரை தன்னுடயை வலுவான அணைப்பிற்கு அடங்கித் திமிராமல் இருந்தவள் இப்பொழுது அவனை விட்டு விலகுவதை அறிந்து பல நாட்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு பொருள் கிட்டத்தட்ட கைகூடும் நேரத்தில் நம்மிடம் இருந்து பிடுங்கப்படும் பொழுது வருமே ஒரு கோபம்...
அதே போன்றதொரு கோபமும்....
தாபம் வழிந்தோடும் உடலின் உணர்வுகள் சட்டென்று தடைப்பட்டு அறுந்ததில் ஆண் மகன்களுக்கே ஆன தன் உரிமை பறிக்கப்பட்டதும் வரும் எரிச்சலும் தோன்ற...
வேட்கை வழியும் பார்வையில் தன்னவளின் அழகின் பரிணாமங்களை உணர்ந்திட துடித்த தன்னுடைய தவிப்பையும் மனையாளுக்கு உணர்த்தும் வகையில் அவளை ஏறிட்டு பார்த்தவன் என்ன நினைத்தானோ சட்டென்று விலகினான்...
என்னதான் முதலில் தான் அவனை விட்டு விலக முயற்சித்து இருந்தாலும் அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவன் விருட்டென்று விலகியதில் அவளின் அலங்கோல நிலை அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகத் தென்பட,
தன் மனையாளை அந்தத் தோற்றத்தில் கண்டவன் உணர்ச்சிகளுக்கு மீண்டும் அடிமையாக, தத்தளித்துத் தவித்த தன் மனதை இறுக்கி பிடித்துக் கட்டுப்படுத்த முயற்சி செய்தவன் அவளை விட்டு இரண்டு அடிகள் தள்ளி நிற்க,
அவனின் விழிகள் தன் பூவுடலில் படிந்திருக்கும் இடத்தினைக் கண்டவள் சட்டென்று தன் புடவையை இழுத்து தன் மார்பை மூட, அவளின் அவசரத்தில் புன் முறுவலை தவழவிட்டவன்...
"முடியையும் அட்ஜஸ்ட் பண்ணு" என்றானே பார்க்கலாம்...
முகம் முழுவதும் பூரிப்புடன் அவன் சொன்னதும், சட்டென்று தலை முடியையும் சரி செய்தவளின் கண்கள் வெட்கத்துடன் அவன் கண்களைச் சந்திக்க, தன் விரல்களால் அவளின் பட்டுக் கன்னங்களைத் தடவியவன்...
"போ.. போய்க் கதவத் திற" எனவும்...
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெட்கம் பிடுங்கி திங்க,
வேகமாகத் தன் அறைக் கதவை திறந்தவள் வெளியே செல்லவும் தன் தலையை அழுந்த கோதி தன்னிலையை அடக்கியவன் அவளைப் பின் தொடர்ந்தான்.
கதவை தட்டி இவ்வளவு நேரம் மகள் கதவை திறக்காததில் இருந்தே ஊகித்து இருந்த கலா "சே சிவ பூஜையில் கரடி மாதிரி வந்திட்டோம் போல" என்று கணவரின் காதுகளில் சொல்ல, திவ்யா கதவைத் திறந்தாள்...
கணவனுடனான மனத்தாங்கலினால் வீட்டை விட்டு வந்திருந்த இந்த இரண்டு நாட்களும் அழுது கரைந்திருந்த மகளின் முகத்தில் இப்பொழுது தோன்றும் இந்த வெட்கமும், நாணத்தால் செந்நிறமாய்ச் சிவந்திருந்த அவளின் முகமும் கணவன் மனைவிக்குள் நடந்தேறிய சல்லாப விளையாட்டுக்களைப் பெற்றவர்களுக்கு உணர்த்த,
தங்களின் வரவால் தம்பதியினரின் பொன்னான நேரங்கள் தடைப்பட்டதை உணர்ந்தவர்கள் குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்தவாறே வீட்டிற்குள் நுழைந்து...
"திவ்யா... மாப்பிள்ளைக்குச் சாப்பிட எதுனா கொடுத்தியா?" என்று அர்ஜூனைப் பார்த்துக் கொண்டே கேட்க,
தன் மனையாளைப் பார்த்தவாறே....
"இல்லை ஆண்டி... நாங்க சீக்கிரம் கிளம்பனும்" என்றான்...
அவன் கஷ்டம் அவனுக்கு...
இத்தனை நாட்கள் தன்னை ஏக்கத்துடன் காத்திருக்க வைத்த தன் மனைவி, தான் இவ்வளவு கடுஞ்சொற்கள் பேசி அவளைத் தூற்றி அவமானப்படுத்தியும் தன்னை ஒரு சொல் கூடக் கேட்காது தன்னை எதிர்க்கவும் செய்யாது தனக்குள் அடங்கியிருந்தவளைக் கண்டவன்....
தான் அவளைத் தன் மனையாளாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை எதிர்பார்த்துத் தங்கள் வீட்டிற்கு எப்பொழுது செல்வோம் என்று காத்திருக்க, இதில் உணவு முக்கியமா? என்ன?...
அவன் கூறியதும் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்குச் சற்று நேரத்திற்கு முன் அவன் தன்னிடம் வாங்கியிருந்த கையெழுத்து நியாபகம் வர, அது மட்டும் அல்லாமல் அவளைத் தன்னுடன் அழைத்துப் போக அவன் கூறிய காரணமும் புத்தியில் அடித்தது போல் கண்முன் தோன்ற,
மீண்டும் தன்னையும் அறியாமல் அச்சம் தொற்றிக் கொள்ளச் சிலைப் போல் தயங்கி நின்றவளின் அருகில் வந்த வினோத்...
"ஏன் திவ்யா, அதான் அத்தானே நேர உன்ன கூட்டிட்டு போக வந்திருக்கும் போது ஏன் இப்படித் தயங்குற??" என்றான்...
திரும்பி தன் அண்ணனைப் பார்த்தவள் ஒன்றும் பேசாமல் நிற்க, அவள் அருகே வந்த சிவ சுப்ரமணியம்...
"திவ்யா, எந்தப் பிரச்சனையா இருந்தாலும் அத உங்களுக்குள்ளே தீர்த்துக்கனும்டா..... இப்படி வெளியே வரக் கூடாது, போ.... போய்க் கிளம்பு" என்றார்...
அவளின் உணர்வுகள் அர்ஜூனிற்கு நன்றாகப் புரிந்தது...
காதல் கொண்ட தன்னவளின் மனதிற்கு அணைப்பும் வேண்டும் அதே சமயம் காயம் கண்ட அவளது மனதிற்கு ஆறுதலும் வேண்டும்...
இரண்டுக்குமே மருந்து தான் தான் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?
அவளின் அச்சத்தையும், கலக்கத்தையும், தவிப்பையும் போக்கும் பொருட்டு அவளின் வெகு அருகே நெருங்கி வந்தவன் காதிற்கருகில் குனிந்து,
"இப்போ மட்டும் நீ என் கூட வரலை, உன்னைத் தூக்கி கார்ல போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்" என்றான்...
நிமிர்ந்துப் பார்த்தவளின் மனதில் சற்று முன் நடந்தது நினைவு வர, அவளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தைப் பார்த்தவன் மற்றவர்கள் அவளையே பார்ப்பதையும், ஒருவரும் தன்னைப் பார்க்காததையும் உறுதி செய்து கொண்டவன் அவளைப் பார்த்துக் கண் சிமிட்ட,
அதில் அவன் முகம் காண முடியாமல் அவள் சட்டென்று தலை குனிந்து நின்ற தோற்றம் அவனுக்குச் சிரிப்பை வரவழைக்க,
"சரி அன்கில், அப்ப நாங்க கிளம்புகிறோம்" என்றான் இளம் முறுவலுடன்...
அவள் தன்னறைக்குத் தன் பெட்டியை எடுக்கச் சென்றதும் அர்ஜூனின் அருகில் வந்த சிவ சுப்ரமணியம்....
"மாப்பிள்ளை, திவ்யா சின்னப் பொண்ணு... வெளி உலகம் தெரியாதவள்.... பயந்த சுபாவம்.... ஆனால் ரொம்பப் பொறுமைசாலி.... இதை நான் அவ என் பொண்ணுங்கறதுக்காகச் சொல்லலை... அவள் அவங்க அம்மா மாதிரி.... என்ன சொன்னாலும் கேட்டுப்பா.... அவ ஏதாவது தப்பு பண்ணியிருந்தா நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்" என்று சொல்ல,
"ஆமாம், மாப்பிள்ளை.... அவள் வந்தவுடன் நான் ஸ்ரீயிடம் பேசுறேன்னு தான் சொன்னேன்.... அவ தான் விடாப்படியா கூடாதுன்னு சொல்லிட்டா.... ஸ்ரீயிடமும் நாங்க மன்னிப்புக் கேட்டதா சொல்லுங்க" எனவும்...
அப்பொழுது தான் அர்ஜூனிற்குப் புரிந்தது தன் அன்னை மருத்துவமனையில் இருப்பது இவர்கள் யாருக்கும் தெரியாது என்று...
அதனால் தான் திவ்யா தன்னிடம் தன் அன்னையைப் பற்றியும் விசாரிக்கவில்லையோ என்று தோன்ற இவர்களிடம் சொல்லலாமா என்று யோசித்தவன்...
"இப்பொழுது சொன்னால் திவ்யாவும் பயந்து விடுவாள்... அதனால் நாளைக்கு மாமை விட்டே இவங்கக் கிட்ட பேச சொல்லனும்" என்று நினைத்துக் கொண்டான்..
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே திவ்யா வர, பெற்றோரிடமும், தமையனிடமும் சொல்லிவிட்டு அவர்கள் காரை நோக்கி செல்ல, தன் அண்ணனை திரும்பி பார்க்கவும் அவளின் அருகில் வந்த வினோத் கண்கள் கலங்க...
"எனக்கு ஃபோன் பண்ணுடா" என்றான்...
அவர்களின் அன்பை பார்த்த அர்ஜூனிற்குத் தான் எப்பொழுதும் மஹாவிடம் தன்னுடைய பாசத்தை வெளிக்காட்டியதே இல்லையே என்று நினைக்க,
தன் வாழ்க்கைக்குள் வந்த இந்தச் சின்னப் பெண் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அவனால் உருகாமலும் இருக்க முடியவில்லை..
அவர்களின் கார் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உள்ளே வந்ததும் சிவ சுப்ரமணியம்....
"மாப்பிள்ளை நல்ல வசதின்னு தெரியும்... ஆனால் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா இருப்பார்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கவில்லை கலா.... எனக்கு என்னமோ இன்னும் அதிகமா பயம் வந்திருக்கு.... திவ்யா எந்தக் குறையும் இல்லாமல் இருக்கனும்"
"ஏங்க, மாப்பிள்ளை நம்ம ஸ்ரீக்கும் பாலா அண்ணனுக்கும் பிறந்தவர்.... நிச்சயம் நம்ம பொண்ண நல்லா வச்சுப்பாரு... இல்லைன்னா அவ இப்படிக் கிளம்பி வந்தாலும் அவரா வந்து கூட்டிக்கொண்டு போவாரா? என்றார்..
வினோத்திற்கோ...
"மஹாவை எப்படி நமக்குத் திருமணம் செய்து கொடுப்பாங்க? நமக்கும் அவங்களுக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள உயரம் ஆச்சே" என்று கலங்கிப் போய் இருந்தான்.
அவன் கவலை அவனுக்கு!!!!
தொழில் வட்டாரத்தில், வெளி உலகத்தில் எத்தனை எத்தனையோ போட்டிகளையும், இன்னல்களையும், வலிகளையும் சந்தித்திருந்த அர்ஜூனிற்கு, அவற்றில் எண்ணிலடங்கா ஏற்றங்களையும் வெற்றிகளையும் கண்டவனுக்கு அப்பொழுதெல்லாம் வராத அக்களிப்பு மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு தன்னருகில் அமர்ந்திருக்கும் தன்னவளின் எழில் முகத்தைத் திரும்பி பார்த்ததும் வந்தது...
சாதிக்க முடியாத, முடியாது என்று நினைத்து மருங்கி ஒடுங்கி இருந்த ஒரு காரியத்தில் ஒருவரும் எதிர்பாராது திடீரென்று வெற்றி ஏற்படும் பொழுது வருமே ஒரு இறுமாப்பு... மகிழ்ச்சி... பூரிப்பு...
அதைப் போன்ற உணர்வுகளில் சிக்கி இருந்தான் அர்ஜூன்...
மதியம் அலுவலகத்தில் இருந்து கடலூருக்கு அவன் கிளம்பும் பொழுது கூட அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.... தன் மனைவி எந்தவித மறுப்பும் சொல்லாமல் தன்னை எதிர்க்காமல் இப்படித் தன்னுடன் திரும்பி வருவாள் என்று...
அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவளைத் தூக்கிக் கொண்டாவது வருவேன் என்று தன் மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் எதிர்ப்பைக் காட்டாது இவ்வாறு அமைதியாக வருவது மனதிற்கு அத்தனை இதமாக இருந்தது...
சில நேரங்களில் கிடைப்பதற்கரிய வைரங்கள் நமக்கு எந்தப் போராட்டமும் இல்லாமல் கிடைக்கும் பொழுது அதன் அருமை தெரியாமல் அதனைத் தூர எறிந்துவிடுவோம்....
அருமை தெரியவரும் பொழுது அது நம்மை விட்டு எட்ட முடியாத தூரம் போயிருக்கும்... அதைப் போன்ற சூழ்நிலைகளில் ஒரு வேளை நாமே எதிர்பார்க்காமல் அந்த வைரங்கள் நம்மிடம் திரும்பி வந்து சேர்ந்தால்?????
பாதியில் நின்றிருந்த தன் மனையாளுடனான காதல் களியாட்டத்தைத் தொடர அதிவேகமாகக் காரை செலுத்திக் கொண்டிருந்த அர்ஜூனின் மனதில் ஊர்ந்து கொண்டிருந்த குதூகலத்தைத் தடுப்பது போல் அலறியது அவனது அலை பேசி...
அழைத்தது கதிர் தான்...
அலுவல் விஷயமாகப் பேசிக் கொண்டே, வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வரும் மனைவியையும் ரசித்துக் கொண்டே வந்தவன் எதிர்பாராமல் பேச்சு பல நிமிடங்கள் தொடர திரும்பிப் பார்த்த பொழுது அவனது அழகிய மனையாள் சிறு பிள்ளைப் போல் காரின் கண்ணாடி ஜன்னலில் தலை சாய்த்து தேவதை போல் உறங்கிக் கொண்டிருந்தாள்...
பேச வேண்டிய விஷயங்களைப் பேசி முடித்த பின்...
"ஓகே கதிர், ஐ வில் ஸீ யூ டுமாரோ [I will see you tomorrow]"
என்று அழைப்பை துண்டித்தவனுக்குத் தன்னவளுடன் தனித்து, அதுவும் தூங்கும் அவளை இடையறாது ரசிக்க ஏதுவாக இருந்த இந்த நீண்ட முதல் பயணம் முத்தான பயணமாக அமைவது போல் இருந்தது காரினுள் வழிந்த அந்த இனிமையான இசையில், மறைந்த திரு. நா முத்துகுமார் அவர்கள் எழுதிய பாடல் ஒலித்த பொழுது....
அர்ஜூனின் மனதிற்கும் ஏக்கத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற மாதிரி இருந்த அந்தப் பாடல்.....
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டில் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதைக் கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்
கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்கக் கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே
அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்துக் கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தே அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரை ஒன்று தெரிந்தது
எதிரினிலே முகமுடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா
சுனாமி போன்று வாழ்க்கையில் எத்தனை பெரிய சம்பவங்களோ அல்லது சூழ்நிலைகளோ மனதை சுழற்றி அடித்துக் கொண்டிருந்தாலும், அமைதியான சூழலில், அதுவும் தன் மனதிற்கு நெருங்கியவர்கள் அருகில் இருக்க, இது போன்ற மெல்லிசையைக் கேட்பது உள்ளத்திற்கு அமைதியை அளிப்பது மட்டும் இல்லாமல் நம் உயிரின் வேர் வரை சென்று இதயத்தையும் பரவசப்படுத்தும்...
அதைப் போன்ற ஒரு உணர்வில் இருந்தான் அர்ஜூன்....
அருகருகே இருந்த போதும், மனம் கொள்ளா காதல் இருந்த போதும், உள்ளங்கள் இரண்டும் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை... ஆனால் வார்த்தைகளால் சொன்னால் தான் காதலா????....
கணவனைப் பிரிந்து வந்த இந்த இரண்டு இரவுகள் முழுவதும் அழுகையில் கரைந்ததினால் வராத தூக்கத்தினாலோ, அல்லது தன் கணவனின் அருகாமை அளித்த நிம்மதியினாலோ, அல்லது சில மணித் துளிகளுக்கு முன் அவனின் இறுக்கிய அணைப்பினால் வந்த சுகத்தினாலோ என்னவோ தூக்கம் திவ்யாவை அழுத்த,
தன் தலையைக் கார் இருக்கையில் சாய்த்து தூங்க ஆரம்பித்தவள் சிறிது நேரத்தில் தன்னையும் அறியாமல் தன்னவனின் தோள் சாய்ந்தாள்.
அவள் தலை தன் தோளில் பட்டதும் திரும்பி பார்த்தவன், அந்த இருட்டிலும் வெளியில் இருந்து வந்த சிறு வெளிச்சத்தில் அவளின் முகம் முழுமதி போல் தோன்ற அந்தப் பாடலின் வரிகளில் வருவது போல் முழுமதி அவளது முகமாகும், மல்லிகை அவளின் மணமாகும் என்பது போல் இருக்க மெதுவாக விசில் அடித்துக் கொண்டு காரை செலுத்தியவனுக்கு உலகமே அழகாகத் தெரிந்தது...
காரின் வேகத்தை அவன் மேலும் அதிகரிக்க அவள் தலை கீழே சாய்வது போல் இருக்க, சட்டென்று அவளை நெருங்கி அமர்ந்தவன் இடது கையைக் கியர் பாக்ஸிற்கும் அவளின் தலைக்கும் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டு காரை ஓட்டியவனின் மனம் மகிழ்ச்சியில் சிறகு விரித்துப் பறந்து கொண்டிருந்தது...
குடும்பத்தினருக்கும், தொழில் வட்டாரத்திலும், வெளி உலகத்தினருக்கும் தெரிந்த அர்ஜூன் தொழிலில் ஒரு அரக்கன்....
எதிராளியை மட்டும் அல்ல, அவனின் கிளைகளையும் கூட உருத் தெரியாமல் அழித்துவிடுபவன் என்று பேரெடுத்து இருப்பவன்
எந்த உணர்வுகளுக்கும் ஆட்படாத அந்த அஞ்சா நெஞ்சனின் நெஞ்சில் கூடக் காதலை சுரக்க செய்த தன் மனையாளுடனான இந்தப் பயணம் சுகமாக இருக்க, அவளைத் திரும்பி பார்த்தவன் அவளின் நெற்றியில் சிலும்பிய முடியை ஒதுக்கி மென்மையாக முத்தமிட்டான்...
மனம் இலகுவாகக் காரை வேறு விரைவாகச் செலுத்திக் கொண்டு வந்ததால் மருத்துவமனையைச் சீக்கிரம் அடைய, காரை நிறுத்தியவன் தன் தோளில் அழுந்த முகம் வைத்து உறங்கிக் கொண்டிருந்தவளை சில நொடிகள் ரசித்துப் பார்த்துப் பின்...
"திவ்யா" என்று அழைக்க,
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் விழித்தால் தானே...
அவன் அழைக்கவும் அந்தச் சத்தத்தில் தன் முகத்தைத் தன் கணவனின் தோளில் திருப்பி லேசாகத் தேய்த்துக் கொண்டவள் தன்னையும் அறியாமல் தனது இடது கரத்தை அவன் நெஞ்சில் வைத்து அவன் சட்டையை இறுக்கி பற்றித் தன் தூக்கத்தைத் தொடர, மனம் தடுமாறிப் போனான் அர்ஜூன்...
தன்னவளின் அருகாமையில் குழந்தைத்தனமான அவளின் செயலில் கணவனாகக் கர்வம் கொண்டவன் மெல்ல அவளின் இடது கன்னத்தில் தனது வலது கையை வைத்து தன் கட்டை விரலால் அவளின் மலரிதழ்களை மென்மையாகத் தடவ, அவனின் தொடுகையில் உதடுகள் கூச அத்தனை நேரம் அசந்து தூங்கிக் கொண்டு வந்தவள் கண் விழிக்கவும் அப்பொழுது தான் கவனித்தாள் தான் தன் கணவனின் தோளில் சாய்ந்து இருப்பதையும், அவனின் விரல்கள் தன் இதழ்களில் கவி பாடிக் கொண்டிருப்பதையும்....
சட்டென்று நகர்ந்தவளின் முகத்தில் நாணம் படர அந்த இரவு நேரத்தின் இருட்டிலும் அவளின் வெட்கத்தில் சிவந்த முகத்தைப் பார்த்தவன் இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்று தன் அன்னையைச் சந்தித்த பிறகு விரைவில் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து...
"இறங்கு" என்றான்...
இறங்கியவள் சுற்றும் முற்றும் பார்க்க சில விநாடிகள் கழித்தே புரிந்தது அவர்கள் இருப்பது மருத்துவமனை என்று...
இங்கு எதற்கு வந்திருக்கிறோம் என்று அவள் அவனைக் கேள்வியாகப் பார்த்தவள் மனம் படப்படக்க,
"யாருக்கு? என்னாச்சுங்க? ஏன் இங்க வந்திருக்கிறோம்? என்று கேட்க,
ஒன்றும் பேசாமல் காரை பூட்டியவன் "வா" என்பது போல் தலையை அசைத்துவிட்டு நடக்கவும் குழப்பத்துடன் தன் கணவனைப் பின் தொடர்ந்தாள்...
வாசலில் இருந்த காவலாளி...
"சார் மணி பதினொன்னாகுது... விசிட்டர்ஸ் டைம் முடிஞ்சிட்டுது.... நீங்க நாளைக்கு வாங்க" என்று சொல்ல,
அது வரை இருந்த ரம்மியமான மனநிலை மாறி அர்ஜூனின் கோபம் மீண்டும் தலை தூக்கியது...
அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே மருத்துவமனையின் இயக்குனர் சுந்தருக்கு அழைத்தவன்,
"அன்கில்... கேன் யூ ஆஸ்க் தி செக்யூரிட்டி டு லெட் மி இன்? [Uncle... Can you ask the security to let me in?] " என்றான்...
அவர் மறுமுனையில் என்ன சொன்னாரோ அலை பேசியை காவலாளியிடம் நீட்ட, வாங்கிக் காதில் வைத்த காவலாளி "சரி சார்" என்றவன் அலை பேசியை அர்ஜூனின் கையில் திருப்பிக் கொடுத்து "சாரி சார்" என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்துவிட்டான்.
"இவர் என்ன செய்தாலும் மாறப் போவதில்லை... செக்யூரிட்டி அவர் வேலை செய்கிறார்... அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?" என்று நினைத்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தவள் அவன் சென்று நின்ற அறையைப் பார்த்ததும் அவனை நிமிர்ந்து பார்க்க...
"உள்ள போ" என்றான்...
என்ன? யாருக்கு? என்ன உடம்புக்கு? என்று பதற்றத்துடன் அவனை நோக்கியவாறே அறைக்குள் சென்றவள் அங்குத் தன் மாமியாரை படுக்கையில் கண்டதும் அதிர்ச்சியில் அவரின் அருகில் ஓடியவள்...
"அத்த, என்னாச்சுத்த? எனவும்...
திவ்யாவை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத ஸ்ரீக்கு அவளை விட அதிர்ச்சியாக இருந்தது...
"நீ எப்போ திவ்யா வந்த?"
"உங்களுக்கு என்னாச்சு அத்த? அத சொல்லுங்க முதல்ல"
அங்குத் தூங்கிக் கொண்டிருந்த மஹாவும் திவ்யாவின் குரலில் எழுந்து விட, திவ்யாவை பின் தொடர்ந்து வந்த அர்ஜூனைப் பார்த்ததும் ஸ்ரீயின் குழப்பத்திற்கு விடை கிடைத்தது...
அர்ஜூன் தான் திவ்யாவை வர வழைத்து இருக்கிறான் என்று.
ஆனால் அர்ஜூன் நேரே சென்றது அவருக்குத் தெரிய வழியில்லையே...
திவ்யா ஸ்ரீயிடம்...
"அத்த சொல்லுங்கத்த... என்னாச்சு உங்க உடம்புக்கு?" என்று கண்கள் கலங்க கேட்க,
"ஏம்மா வீட்ட விட்டு போன? அதுவும் என் கிட்ட கூடச் சொல்லாம லெட்டர் எழுதி வச்சுட்டு?" என்றார் பரிதவிப்புடன் குரலும் வார்த்தைகளும் நடுங்க...
கம்பீரமாக அத்தனை தொழிற்களையும் ஒற்றையாளாக, வழிகளில் எதிர்பட்ட ஒவ்வொரு எதிராளிகளையும் போட்டியாளர்களையும் எளிதில் வென்று வெற்றிக் கொடிய நாட்டிய தன் அன்னை இன்று தன் மனையாளைப் பார்த்ததும் விழிகள் கலங்க குரலிலும் நடுக்கம் தெரிய கலக்கத்துடன் அவள் கரங்களை இறுக்கப் பற்றிக் கேட்ட பொழுது அர்ஜூனிற்குப் புரிந்து போனது தன்னவளின் மலரினும் மெல்லிய மனதின் பேரழகு...
தன் மாமியார் கலக்கத்துடன் கேட்டதும் தன்னையும் அறியாமல் தன் கணவனைத் திரும்பி பார்த்தவள் அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பதைக் கண்டு ஒன்றும் சொல்லாமல் தலை குனிய,
"அண்ணி, நீங்க வீட்டை விட்டுப் போனது தெரிஞ்சதும் அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு... நல்ல வேளை உடனே கொண்டு வந்து ஹாஸ்பிட்டலில் சேர்த்துட்டாங்க" என்று மஹா கூறியதும் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் உடலில் பாய்ந்தது போல் உணர்ந்து அதிர்ந்தாள் திவ்யா...
"ஐயோ! என்னாலயா? அத்த என்ன மன்னிச்சுடுங்க அத்த... நான் சத்தியமா இந்த மாதிரி நடக்கும்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை... தெரிஞ்சிருந்தா நிச்சயம் உங்கள விட்டுட்டு போயே இருக்க மாட்டேன்" என்று கண்களில் நீர் ஆறாகப் பெருக்கெடுக்க வெடித்துக் கதறினாள்...
அவளை இழுத்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்ட ஸ்ரீ,
"எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் வீட்டை விட்டுப் போகக் கூடாது திவ்யா... அது ரொம்பத் தப்பு.... உன் பக்கமே நியாயம் இருக்கட்டும்... ஆனால் அத பேசித் தான் தீர்த்துக்கனுமே தவிர இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்கக் கூடாது.... அதுவும் ஒரு சின்னப் பொண்ணு... ஊர் பேர் தெரியாத ஊர்ல இருந்து தனியா இப்படி வீட்டை விட்டுப் போறதெல்லாம் ரொம்பத் தப்பு... ஏதாவது ஏடா கூடமா ஆனா என்ன பண்ணுவ? எனவும்,
"கடவுளே! இப்பொழுது கூட என்னால் தான் உடம்பு முடியாமல் போனதை நினைக்காமல் என்னைப் பத்தி கவலை படுறாங்க... அவங்களுக்குப் போய் இவ்வளவு கஷ்டம் கொடுத்திட்டேனே" என்று மனமுருக உள்ளுக்குள் கதறியவள்...
"இனி உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டேன் அத்த" என்றாள்.
"சரி அது இருக்கட்டும்.... நீ எப்படி, எப்போ வந்த?"
அவரின் கேள்வியில் மீண்டும் தலை கவிழ்ந்தவள் மெல்லிய குரலில்....
"அவங்க தான் அத்த வந்து கூப்பிட்டுட்டு வந்தாங்க" என்றதும் ஸ்ரீயின் முகத்திலும் மஹாவின் முகத்திலும் ஆச்சரியம் டன் டன்னாக வழிந்தது...
என்னது? அர்ஜூன் போய்க் கூட்டிட்டு வந்தானா என்று ஸ்ரீ மஹாவைப் பார்க்க, சொன்னேன் இல்லையா அண்ணாவுக்கு அண்ணிய ரொம்பப் பிடிக்கும் என்று, என்று உள்ளர்த்தத்துடன் மஹா ஸ்ரீயை பார்க்க, இவங்க ஆச்சரியப்படுவதைப் பார்த்தால் இப்போதைக்கு எங்களை விட மாட்டாங்க போல இருக்கே, இங்க இருந்து இப்போ இவளை எப்படிக் கூட்டிட்டுப் போறது? என்று அர்ஜூன் யோசனையில் ஆழ்ந்தான்...
ஆனால் அவன் அர்ஜூன் ஆயிற்றே!! இதற்கெல்லாம் கூச்ச படுபவனா என்ன?
"ஓகே மாம், அப் அன்ட் டௌன் ட்ரைவிங் பண்ணியது எக்ஸ்ட்ரீம்லி டைர்டா [ Ok Mom...Up and Down driving extremely tired] இருக்கு, வீ வில் கம் போக் டுமாரோ [We will come back tomorrow]" என்றவன் திவ்யாவைப் பார்த்து வா என்பது போல் தலை அசைக்க,
ஏற்கனவே இன்ப அதிர்ச்சியில் இருந்தவர்களுக்கு மேலும் மேலும் அவன் ஆச்சர்யத்தைக் கொடுக்க,
"போதும்டா அர்ஜூனா... ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்த உடம்பு... இதற்கு மேல் தாங்காது" என்பது போல் அவனைப் பார்த்தவர்...
"சரி நீங்க கிளம்புங்கப்பா... நாளைக்குப் பார்க்கலாம்" என்றார்...
அவன் பாதி ஆங்கிலத்தில் சொன்னது புரியாமல் திவ்யா அமர்ந்திருக்க அவளைத் திரும்பி பார்த்தவன் தான் வா என்று தலை அசைத்தும் திருதிருவென்று முழித்தவளைப் பார்த்து புன்னகைத்தவன்...
"கிளம்பு" என்றான்...
ஆனால் திவ்யாவிற்குத் தான் மனம் வரவில்லை... வீட்டிற்குச் சென்றால் என்ன நடக்கும் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்...
இத்தனை தூரம் தன்னை வந்து அழைத்துக் கொண்டு வந்தவர் நிச்சயம் கணவனின் உரிமையைத் தன்னிடம் எதிர்ப்பார்ப்பார்.
இனி அதை மறுக்க முடியாது... மறுத்தாலும் விடமாட்டார்... ஆனால் தன்னால் இப்படி இருதய நோய் வந்து அத்தை இருக்கும் பொழுது தான் மட்டும் சந்தோஷமாக இருப்பது பெரும் பாவம் இல்லையா? என்று யோசித்தவள்...
"நான் இன்னைக்கு நைட் இங்கேயே அத்தைக் கூட இருக்கேன்" என்றாள் தன் கணவன் என்ன சொல்வானோ என்ற பரிதவிப்புடன்...
ஆனால் ஸ்ரீக்கோ மனம் வரவில்லை... இத்தனை தடங்கல்களுக்குப் பிறகு, மனஸ்தாபங்களுக்குப் பிறகு சின்னஞ்சிறுசுகள் ஒன்று சேரப் போகிறார்கள்... இந்த நாளுக்காகத் தானே அவரும் காத்திருந்தது... அவர்களின் பொக்கிஷமான இரவை தன்னால் இழக்கப் போவதை உணர்ந்தவர்...
"இல்ல திவ்யா, அதான் மஹா இருக்கால்ல... நீ போய்ட்டு நாளைக்கு வா" எனவும்...
"எப்படி அத்தை இந்த நிலைமையில் உங்களைப் பார்த்திட்டு விட்டுட்டு போறது?" என்றாள்...
அவளின் இடத்தில் இருந்து பார்த்தால் அவள் சொல்வது சரியே...
மீண்டும் தன் கணவனை நிமிர்ந்து பார்த்தவளின் முக மாற்றங்களை கண்டவன் அவளின் எண்ணங்களையும் புரிந்து கொண்ட ஒரு நல்ல கணவனாக....
"ஓகே மாம், அப்ப நாளைக்கு வரேன்..." என்றான்...
பேசிக் கொள்ளாமலே ஒருவொருக்கொருவரின் எண்ணங்களைப் புரிந்துக் கொண்டவர்களைப் பார்த்த ஸ்ரீக்கு, இவர்களின் நேற்றைய பிரிவு இன்றைய மனம் ஒற்றுதலை கொடுத்திருக்கிறது என்று உணர்ந்தவராக..
"சரிப்பா, அப்போ எதுக்கு இரண்டு பேர் இங்க? நீ மஹாவக் கூட்டிட்டு போப்பா" என்றார்
சரி என்றவன் மஹாவுடன் கிளம்ப, என்ன தான் தான் வரவில்லை என்று கூறி விட்டாலும் அவனைப் பிரிவது மனதில் அழுத்தமான ஒரு வித வலியைக் கொடுக்க, அவனை நிமிர்ந்துப் பார்த்தவளின் கண்களில் தெரிந்த ஏக்கத்தைப் பார்த்தவனுக்கு உள்ளம் பூரித்துத் தான் போனது...
"நாம் ஒன்று சேர்வதற்கு இன்னும் ஒரு நாள் இருக்கு போல டி" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அவளைப் பார்த்து தலையை மட்டும் அசைத்து விடை பெற்று செல்ல, அவன் சென்ற பிறகும் வாயிலையே பார்த்திருந்த மருமகளைப் பார்த்தவர்...
"நாளை எப்படியும் இவர்களுக்கு நல்ல நாளாகவே விடிய வேண்டும்" என்று மனதிற்குள் பிராத்தனை செய்து கொண்டார்...
அர்ஜூன் திவ்யாவின் சங்கமத்திற்கு இன்னும் ஒரு நாள்... ஒரே ஒரு நாள் காத்திருப்போம்...
தொடரும்..
வார்த்தைகளில் தன் காதலை சொல்லாவிட்டாலும் உன் மேல் மனதில் எந்த அளவிற்கு ஆசை வைச்சிருக்கிறேன் பாருடி என்று காட்டுவது போல் இருந்தது அர்ஜூனின் ஆழ்ந்த முத்தம்...
அந்தக் கணம் அவன் தன் அந்தஸ்தை பற்றி யோசிக்கவில்லை... தன் வசதி பற்றி நினைக்கவில்லை... அவளின் படிப்போ, ஏழ்மை நிலையோ அவன் முன் தோன்றவில்லை....
அவனின் நினைவில் இருந்ததெல்லாம் அவள், அவள், அவள் மட்டுமே.
பத்தொன்பது வயதே ஆன அந்தச் சின்னஞ்சிறு சிட்டு அவனின் விவாகரத்து விஷயத்தில் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், அவனின் மென்மையான இதழ் முற்றுகையில் உடல் துவள, அவளின் தளிர் மேனியில் அவனின் ஸ்பரிசத்தால் எழுந்த சிலிர்ப்பை உணர்ந்தவன் இத்தனை நாளாய் தான் இழந்தது என்ன என்பதை உணர்ந்தான்...
நீண்ட நேரம் நீடித்த அந்த முதல் இதழ் முத்தத்தில் அவளுக்கு மூச்சிரைக்க, அவளின் திண்டாட்டத்தை உணர்ந்தவன் அவளது இதழ்களைத் தனது இதழ்களிடம் இருந்து விடுவித்தவன் அவளது கழுத்திற்கு இறங்கவும், அவனின் கைகள் அவளின் இடையை அழுத்தமாகப் பிடித்துத் தன்னுடன் இறுக்கி அணைத்ததில் அவளின் மார்பு அவன் நெஞ்சில் அழுத்தவும் தனது சுயநிலையை அடியோடு இழந்தான் அர்ஜூன்....
தீனமான குரலில் "வேண்டாம்" என்று அவள் கெஞ்சினாலும் திமிறாமல் தனக்குள் அடங்கியிருந்த தன் மனையாளுக்குத் தன் காதலையும் அதன் வேகத்தையும் இன்றே உணர்த்திவிடும் எண்ணத்தில் அர்ஜூனின் கரங்கள் அத்துமீற துவங்க, அவள் கழுத்திற்குள் ஆழ புதைந்திருந்த அவனின் இதழ்கள் கீழிறங்குவதை மேலும் தொடர, அவனின் தொடுகையும், அவனின் முரட்டு இதழ்களின் ஸ்பரிசமும் அவளைத் திக்குமுக்காட வைத்த அதே நேரத்தில் வீட்டின் முன் பக்க கதவு தட்டப்பட்டது....
ஒற்றை இதழொற்றலிலும், சில நிமிடங்கள் ஸ்பரிசத்திலும் அடங்கி விடக் கூடியதா அவனின் தாபமும் மோகமும்????
மேலும் மேலும் அவளில் மூழ்க துடிக்க இத்தனை நாள் இளம் மனைவி அருகில் இருந்தும் அவளை அடையாத ஏக்கம் அவனில் வெறியைக் கூட்ட, கதவு தட்டப்படும் ஓசைக் கூட அவனின் செவிகளில் இறங்கவில்லை...
ஆனால் அவளோ அவனின் உடல் வலிமையில் புள்ளி மான் வேட்டைக்காரனிடம் அடங்கியிருப்பது போல் அடங்கி அவனைத் தள்ள இயலாதவளாக நிற்க, மேலும் கதவு தட்டப்படத் தவித்தவள் தடுமாறியவாறே மெல்லிய குரலில்...
"எ... என்னங்க, அம்மா வந்துட்டாங்க போல... ப்ளீஸ் விடுங்க... கதவை திறக்கனும்" என்றாள்...
அவளின் வார்த்தைகள் காதலிலும் மோகத்திலும் கட்டுண்டு இருந்த அவனின் செவிகளுக்கு எட்டினால் தானே...
கணவனின் கரங்கள் மேலும் மேலும் இறுக்கியதில் தன்னை விடுவிக்கும் எண்ணமே அவனுக்கு இல்லை என்பதை உணர்ந்தவள் மீண்டும் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு...
"ஏங்க, ப்ளீஸ்ங்க... விடுங்க" என்று கூறி அவள் விலக முயற்சிக்க,
இதுவரை தன்னுடயை வலுவான அணைப்பிற்கு அடங்கித் திமிராமல் இருந்தவள் இப்பொழுது அவனை விட்டு விலகுவதை அறிந்து பல நாட்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு பொருள் கிட்டத்தட்ட கைகூடும் நேரத்தில் நம்மிடம் இருந்து பிடுங்கப்படும் பொழுது வருமே ஒரு கோபம்...
அதே போன்றதொரு கோபமும்....
தாபம் வழிந்தோடும் உடலின் உணர்வுகள் சட்டென்று தடைப்பட்டு அறுந்ததில் ஆண் மகன்களுக்கே ஆன தன் உரிமை பறிக்கப்பட்டதும் வரும் எரிச்சலும் தோன்ற...
வேட்கை வழியும் பார்வையில் தன்னவளின் அழகின் பரிணாமங்களை உணர்ந்திட துடித்த தன்னுடைய தவிப்பையும் மனையாளுக்கு உணர்த்தும் வகையில் அவளை ஏறிட்டு பார்த்தவன் என்ன நினைத்தானோ சட்டென்று விலகினான்...
என்னதான் முதலில் தான் அவனை விட்டு விலக முயற்சித்து இருந்தாலும் அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவன் விருட்டென்று விலகியதில் அவளின் அலங்கோல நிலை அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகத் தென்பட,
தன் மனையாளை அந்தத் தோற்றத்தில் கண்டவன் உணர்ச்சிகளுக்கு மீண்டும் அடிமையாக, தத்தளித்துத் தவித்த தன் மனதை இறுக்கி பிடித்துக் கட்டுப்படுத்த முயற்சி செய்தவன் அவளை விட்டு இரண்டு அடிகள் தள்ளி நிற்க,
அவனின் விழிகள் தன் பூவுடலில் படிந்திருக்கும் இடத்தினைக் கண்டவள் சட்டென்று தன் புடவையை இழுத்து தன் மார்பை மூட, அவளின் அவசரத்தில் புன் முறுவலை தவழவிட்டவன்...
"முடியையும் அட்ஜஸ்ட் பண்ணு" என்றானே பார்க்கலாம்...
முகம் முழுவதும் பூரிப்புடன் அவன் சொன்னதும், சட்டென்று தலை முடியையும் சரி செய்தவளின் கண்கள் வெட்கத்துடன் அவன் கண்களைச் சந்திக்க, தன் விரல்களால் அவளின் பட்டுக் கன்னங்களைத் தடவியவன்...
"போ.. போய்க் கதவத் திற" எனவும்...
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெட்கம் பிடுங்கி திங்க,
வேகமாகத் தன் அறைக் கதவை திறந்தவள் வெளியே செல்லவும் தன் தலையை அழுந்த கோதி தன்னிலையை அடக்கியவன் அவளைப் பின் தொடர்ந்தான்.
கதவை தட்டி இவ்வளவு நேரம் மகள் கதவை திறக்காததில் இருந்தே ஊகித்து இருந்த கலா "சே சிவ பூஜையில் கரடி மாதிரி வந்திட்டோம் போல" என்று கணவரின் காதுகளில் சொல்ல, திவ்யா கதவைத் திறந்தாள்...
கணவனுடனான மனத்தாங்கலினால் வீட்டை விட்டு வந்திருந்த இந்த இரண்டு நாட்களும் அழுது கரைந்திருந்த மகளின் முகத்தில் இப்பொழுது தோன்றும் இந்த வெட்கமும், நாணத்தால் செந்நிறமாய்ச் சிவந்திருந்த அவளின் முகமும் கணவன் மனைவிக்குள் நடந்தேறிய சல்லாப விளையாட்டுக்களைப் பெற்றவர்களுக்கு உணர்த்த,
தங்களின் வரவால் தம்பதியினரின் பொன்னான நேரங்கள் தடைப்பட்டதை உணர்ந்தவர்கள் குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்தவாறே வீட்டிற்குள் நுழைந்து...
"திவ்யா... மாப்பிள்ளைக்குச் சாப்பிட எதுனா கொடுத்தியா?" என்று அர்ஜூனைப் பார்த்துக் கொண்டே கேட்க,
தன் மனையாளைப் பார்த்தவாறே....
"இல்லை ஆண்டி... நாங்க சீக்கிரம் கிளம்பனும்" என்றான்...
அவன் கஷ்டம் அவனுக்கு...
இத்தனை நாட்கள் தன்னை ஏக்கத்துடன் காத்திருக்க வைத்த தன் மனைவி, தான் இவ்வளவு கடுஞ்சொற்கள் பேசி அவளைத் தூற்றி அவமானப்படுத்தியும் தன்னை ஒரு சொல் கூடக் கேட்காது தன்னை எதிர்க்கவும் செய்யாது தனக்குள் அடங்கியிருந்தவளைக் கண்டவன்....
தான் அவளைத் தன் மனையாளாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை எதிர்பார்த்துத் தங்கள் வீட்டிற்கு எப்பொழுது செல்வோம் என்று காத்திருக்க, இதில் உணவு முக்கியமா? என்ன?...
அவன் கூறியதும் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்குச் சற்று நேரத்திற்கு முன் அவன் தன்னிடம் வாங்கியிருந்த கையெழுத்து நியாபகம் வர, அது மட்டும் அல்லாமல் அவளைத் தன்னுடன் அழைத்துப் போக அவன் கூறிய காரணமும் புத்தியில் அடித்தது போல் கண்முன் தோன்ற,
மீண்டும் தன்னையும் அறியாமல் அச்சம் தொற்றிக் கொள்ளச் சிலைப் போல் தயங்கி நின்றவளின் அருகில் வந்த வினோத்...
"ஏன் திவ்யா, அதான் அத்தானே நேர உன்ன கூட்டிட்டு போக வந்திருக்கும் போது ஏன் இப்படித் தயங்குற??" என்றான்...
திரும்பி தன் அண்ணனைப் பார்த்தவள் ஒன்றும் பேசாமல் நிற்க, அவள் அருகே வந்த சிவ சுப்ரமணியம்...
"திவ்யா, எந்தப் பிரச்சனையா இருந்தாலும் அத உங்களுக்குள்ளே தீர்த்துக்கனும்டா..... இப்படி வெளியே வரக் கூடாது, போ.... போய்க் கிளம்பு" என்றார்...
அவளின் உணர்வுகள் அர்ஜூனிற்கு நன்றாகப் புரிந்தது...
காதல் கொண்ட தன்னவளின் மனதிற்கு அணைப்பும் வேண்டும் அதே சமயம் காயம் கண்ட அவளது மனதிற்கு ஆறுதலும் வேண்டும்...
இரண்டுக்குமே மருந்து தான் தான் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?
அவளின் அச்சத்தையும், கலக்கத்தையும், தவிப்பையும் போக்கும் பொருட்டு அவளின் வெகு அருகே நெருங்கி வந்தவன் காதிற்கருகில் குனிந்து,
"இப்போ மட்டும் நீ என் கூட வரலை, உன்னைத் தூக்கி கார்ல போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்" என்றான்...
நிமிர்ந்துப் பார்த்தவளின் மனதில் சற்று முன் நடந்தது நினைவு வர, அவளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தைப் பார்த்தவன் மற்றவர்கள் அவளையே பார்ப்பதையும், ஒருவரும் தன்னைப் பார்க்காததையும் உறுதி செய்து கொண்டவன் அவளைப் பார்த்துக் கண் சிமிட்ட,
அதில் அவன் முகம் காண முடியாமல் அவள் சட்டென்று தலை குனிந்து நின்ற தோற்றம் அவனுக்குச் சிரிப்பை வரவழைக்க,
"சரி அன்கில், அப்ப நாங்க கிளம்புகிறோம்" என்றான் இளம் முறுவலுடன்...
அவள் தன்னறைக்குத் தன் பெட்டியை எடுக்கச் சென்றதும் அர்ஜூனின் அருகில் வந்த சிவ சுப்ரமணியம்....
"மாப்பிள்ளை, திவ்யா சின்னப் பொண்ணு... வெளி உலகம் தெரியாதவள்.... பயந்த சுபாவம்.... ஆனால் ரொம்பப் பொறுமைசாலி.... இதை நான் அவ என் பொண்ணுங்கறதுக்காகச் சொல்லலை... அவள் அவங்க அம்மா மாதிரி.... என்ன சொன்னாலும் கேட்டுப்பா.... அவ ஏதாவது தப்பு பண்ணியிருந்தா நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்" என்று சொல்ல,
"ஆமாம், மாப்பிள்ளை.... அவள் வந்தவுடன் நான் ஸ்ரீயிடம் பேசுறேன்னு தான் சொன்னேன்.... அவ தான் விடாப்படியா கூடாதுன்னு சொல்லிட்டா.... ஸ்ரீயிடமும் நாங்க மன்னிப்புக் கேட்டதா சொல்லுங்க" எனவும்...
அப்பொழுது தான் அர்ஜூனிற்குப் புரிந்தது தன் அன்னை மருத்துவமனையில் இருப்பது இவர்கள் யாருக்கும் தெரியாது என்று...
அதனால் தான் திவ்யா தன்னிடம் தன் அன்னையைப் பற்றியும் விசாரிக்கவில்லையோ என்று தோன்ற இவர்களிடம் சொல்லலாமா என்று யோசித்தவன்...
"இப்பொழுது சொன்னால் திவ்யாவும் பயந்து விடுவாள்... அதனால் நாளைக்கு மாமை விட்டே இவங்கக் கிட்ட பேச சொல்லனும்" என்று நினைத்துக் கொண்டான்..
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே திவ்யா வர, பெற்றோரிடமும், தமையனிடமும் சொல்லிவிட்டு அவர்கள் காரை நோக்கி செல்ல, தன் அண்ணனை திரும்பி பார்க்கவும் அவளின் அருகில் வந்த வினோத் கண்கள் கலங்க...
"எனக்கு ஃபோன் பண்ணுடா" என்றான்...
அவர்களின் அன்பை பார்த்த அர்ஜூனிற்குத் தான் எப்பொழுதும் மஹாவிடம் தன்னுடைய பாசத்தை வெளிக்காட்டியதே இல்லையே என்று நினைக்க,
தன் வாழ்க்கைக்குள் வந்த இந்தச் சின்னப் பெண் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அவனால் உருகாமலும் இருக்க முடியவில்லை..
அவர்களின் கார் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உள்ளே வந்ததும் சிவ சுப்ரமணியம்....
"மாப்பிள்ளை நல்ல வசதின்னு தெரியும்... ஆனால் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா இருப்பார்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கவில்லை கலா.... எனக்கு என்னமோ இன்னும் அதிகமா பயம் வந்திருக்கு.... திவ்யா எந்தக் குறையும் இல்லாமல் இருக்கனும்"
"ஏங்க, மாப்பிள்ளை நம்ம ஸ்ரீக்கும் பாலா அண்ணனுக்கும் பிறந்தவர்.... நிச்சயம் நம்ம பொண்ண நல்லா வச்சுப்பாரு... இல்லைன்னா அவ இப்படிக் கிளம்பி வந்தாலும் அவரா வந்து கூட்டிக்கொண்டு போவாரா? என்றார்..
வினோத்திற்கோ...
"மஹாவை எப்படி நமக்குத் திருமணம் செய்து கொடுப்பாங்க? நமக்கும் அவங்களுக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள உயரம் ஆச்சே" என்று கலங்கிப் போய் இருந்தான்.
அவன் கவலை அவனுக்கு!!!!
தொழில் வட்டாரத்தில், வெளி உலகத்தில் எத்தனை எத்தனையோ போட்டிகளையும், இன்னல்களையும், வலிகளையும் சந்தித்திருந்த அர்ஜூனிற்கு, அவற்றில் எண்ணிலடங்கா ஏற்றங்களையும் வெற்றிகளையும் கண்டவனுக்கு அப்பொழுதெல்லாம் வராத அக்களிப்பு மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு தன்னருகில் அமர்ந்திருக்கும் தன்னவளின் எழில் முகத்தைத் திரும்பி பார்த்ததும் வந்தது...
சாதிக்க முடியாத, முடியாது என்று நினைத்து மருங்கி ஒடுங்கி இருந்த ஒரு காரியத்தில் ஒருவரும் எதிர்பாராது திடீரென்று வெற்றி ஏற்படும் பொழுது வருமே ஒரு இறுமாப்பு... மகிழ்ச்சி... பூரிப்பு...
அதைப் போன்ற உணர்வுகளில் சிக்கி இருந்தான் அர்ஜூன்...
மதியம் அலுவலகத்தில் இருந்து கடலூருக்கு அவன் கிளம்பும் பொழுது கூட அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.... தன் மனைவி எந்தவித மறுப்பும் சொல்லாமல் தன்னை எதிர்க்காமல் இப்படித் தன்னுடன் திரும்பி வருவாள் என்று...
அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவளைத் தூக்கிக் கொண்டாவது வருவேன் என்று தன் மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் எதிர்ப்பைக் காட்டாது இவ்வாறு அமைதியாக வருவது மனதிற்கு அத்தனை இதமாக இருந்தது...
சில நேரங்களில் கிடைப்பதற்கரிய வைரங்கள் நமக்கு எந்தப் போராட்டமும் இல்லாமல் கிடைக்கும் பொழுது அதன் அருமை தெரியாமல் அதனைத் தூர எறிந்துவிடுவோம்....
அருமை தெரியவரும் பொழுது அது நம்மை விட்டு எட்ட முடியாத தூரம் போயிருக்கும்... அதைப் போன்ற சூழ்நிலைகளில் ஒரு வேளை நாமே எதிர்பார்க்காமல் அந்த வைரங்கள் நம்மிடம் திரும்பி வந்து சேர்ந்தால்?????
பாதியில் நின்றிருந்த தன் மனையாளுடனான காதல் களியாட்டத்தைத் தொடர அதிவேகமாகக் காரை செலுத்திக் கொண்டிருந்த அர்ஜூனின் மனதில் ஊர்ந்து கொண்டிருந்த குதூகலத்தைத் தடுப்பது போல் அலறியது அவனது அலை பேசி...
அழைத்தது கதிர் தான்...
அலுவல் விஷயமாகப் பேசிக் கொண்டே, வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வரும் மனைவியையும் ரசித்துக் கொண்டே வந்தவன் எதிர்பாராமல் பேச்சு பல நிமிடங்கள் தொடர திரும்பிப் பார்த்த பொழுது அவனது அழகிய மனையாள் சிறு பிள்ளைப் போல் காரின் கண்ணாடி ஜன்னலில் தலை சாய்த்து தேவதை போல் உறங்கிக் கொண்டிருந்தாள்...
பேச வேண்டிய விஷயங்களைப் பேசி முடித்த பின்...
"ஓகே கதிர், ஐ வில் ஸீ யூ டுமாரோ [I will see you tomorrow]"
என்று அழைப்பை துண்டித்தவனுக்குத் தன்னவளுடன் தனித்து, அதுவும் தூங்கும் அவளை இடையறாது ரசிக்க ஏதுவாக இருந்த இந்த நீண்ட முதல் பயணம் முத்தான பயணமாக அமைவது போல் இருந்தது காரினுள் வழிந்த அந்த இனிமையான இசையில், மறைந்த திரு. நா முத்துகுமார் அவர்கள் எழுதிய பாடல் ஒலித்த பொழுது....
அர்ஜூனின் மனதிற்கும் ஏக்கத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற மாதிரி இருந்த அந்தப் பாடல்.....
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டில் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதைக் கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்
கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்கக் கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே
அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்துக் கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தே அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரை ஒன்று தெரிந்தது
எதிரினிலே முகமுடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா
சுனாமி போன்று வாழ்க்கையில் எத்தனை பெரிய சம்பவங்களோ அல்லது சூழ்நிலைகளோ மனதை சுழற்றி அடித்துக் கொண்டிருந்தாலும், அமைதியான சூழலில், அதுவும் தன் மனதிற்கு நெருங்கியவர்கள் அருகில் இருக்க, இது போன்ற மெல்லிசையைக் கேட்பது உள்ளத்திற்கு அமைதியை அளிப்பது மட்டும் இல்லாமல் நம் உயிரின் வேர் வரை சென்று இதயத்தையும் பரவசப்படுத்தும்...
அதைப் போன்ற ஒரு உணர்வில் இருந்தான் அர்ஜூன்....
அருகருகே இருந்த போதும், மனம் கொள்ளா காதல் இருந்த போதும், உள்ளங்கள் இரண்டும் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை... ஆனால் வார்த்தைகளால் சொன்னால் தான் காதலா????....
கணவனைப் பிரிந்து வந்த இந்த இரண்டு இரவுகள் முழுவதும் அழுகையில் கரைந்ததினால் வராத தூக்கத்தினாலோ, அல்லது தன் கணவனின் அருகாமை அளித்த நிம்மதியினாலோ, அல்லது சில மணித் துளிகளுக்கு முன் அவனின் இறுக்கிய அணைப்பினால் வந்த சுகத்தினாலோ என்னவோ தூக்கம் திவ்யாவை அழுத்த,
தன் தலையைக் கார் இருக்கையில் சாய்த்து தூங்க ஆரம்பித்தவள் சிறிது நேரத்தில் தன்னையும் அறியாமல் தன்னவனின் தோள் சாய்ந்தாள்.
அவள் தலை தன் தோளில் பட்டதும் திரும்பி பார்த்தவன், அந்த இருட்டிலும் வெளியில் இருந்து வந்த சிறு வெளிச்சத்தில் அவளின் முகம் முழுமதி போல் தோன்ற அந்தப் பாடலின் வரிகளில் வருவது போல் முழுமதி அவளது முகமாகும், மல்லிகை அவளின் மணமாகும் என்பது போல் இருக்க மெதுவாக விசில் அடித்துக் கொண்டு காரை செலுத்தியவனுக்கு உலகமே அழகாகத் தெரிந்தது...
காரின் வேகத்தை அவன் மேலும் அதிகரிக்க அவள் தலை கீழே சாய்வது போல் இருக்க, சட்டென்று அவளை நெருங்கி அமர்ந்தவன் இடது கையைக் கியர் பாக்ஸிற்கும் அவளின் தலைக்கும் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டு காரை ஓட்டியவனின் மனம் மகிழ்ச்சியில் சிறகு விரித்துப் பறந்து கொண்டிருந்தது...
குடும்பத்தினருக்கும், தொழில் வட்டாரத்திலும், வெளி உலகத்தினருக்கும் தெரிந்த அர்ஜூன் தொழிலில் ஒரு அரக்கன்....
எதிராளியை மட்டும் அல்ல, அவனின் கிளைகளையும் கூட உருத் தெரியாமல் அழித்துவிடுபவன் என்று பேரெடுத்து இருப்பவன்
எந்த உணர்வுகளுக்கும் ஆட்படாத அந்த அஞ்சா நெஞ்சனின் நெஞ்சில் கூடக் காதலை சுரக்க செய்த தன் மனையாளுடனான இந்தப் பயணம் சுகமாக இருக்க, அவளைத் திரும்பி பார்த்தவன் அவளின் நெற்றியில் சிலும்பிய முடியை ஒதுக்கி மென்மையாக முத்தமிட்டான்...
மனம் இலகுவாகக் காரை வேறு விரைவாகச் செலுத்திக் கொண்டு வந்ததால் மருத்துவமனையைச் சீக்கிரம் அடைய, காரை நிறுத்தியவன் தன் தோளில் அழுந்த முகம் வைத்து உறங்கிக் கொண்டிருந்தவளை சில நொடிகள் ரசித்துப் பார்த்துப் பின்...
"திவ்யா" என்று அழைக்க,
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் விழித்தால் தானே...
அவன் அழைக்கவும் அந்தச் சத்தத்தில் தன் முகத்தைத் தன் கணவனின் தோளில் திருப்பி லேசாகத் தேய்த்துக் கொண்டவள் தன்னையும் அறியாமல் தனது இடது கரத்தை அவன் நெஞ்சில் வைத்து அவன் சட்டையை இறுக்கி பற்றித் தன் தூக்கத்தைத் தொடர, மனம் தடுமாறிப் போனான் அர்ஜூன்...
தன்னவளின் அருகாமையில் குழந்தைத்தனமான அவளின் செயலில் கணவனாகக் கர்வம் கொண்டவன் மெல்ல அவளின் இடது கன்னத்தில் தனது வலது கையை வைத்து தன் கட்டை விரலால் அவளின் மலரிதழ்களை மென்மையாகத் தடவ, அவனின் தொடுகையில் உதடுகள் கூச அத்தனை நேரம் அசந்து தூங்கிக் கொண்டு வந்தவள் கண் விழிக்கவும் அப்பொழுது தான் கவனித்தாள் தான் தன் கணவனின் தோளில் சாய்ந்து இருப்பதையும், அவனின் விரல்கள் தன் இதழ்களில் கவி பாடிக் கொண்டிருப்பதையும்....
சட்டென்று நகர்ந்தவளின் முகத்தில் நாணம் படர அந்த இரவு நேரத்தின் இருட்டிலும் அவளின் வெட்கத்தில் சிவந்த முகத்தைப் பார்த்தவன் இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்று தன் அன்னையைச் சந்தித்த பிறகு விரைவில் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து...
"இறங்கு" என்றான்...
இறங்கியவள் சுற்றும் முற்றும் பார்க்க சில விநாடிகள் கழித்தே புரிந்தது அவர்கள் இருப்பது மருத்துவமனை என்று...
இங்கு எதற்கு வந்திருக்கிறோம் என்று அவள் அவனைக் கேள்வியாகப் பார்த்தவள் மனம் படப்படக்க,
"யாருக்கு? என்னாச்சுங்க? ஏன் இங்க வந்திருக்கிறோம்? என்று கேட்க,
ஒன்றும் பேசாமல் காரை பூட்டியவன் "வா" என்பது போல் தலையை அசைத்துவிட்டு நடக்கவும் குழப்பத்துடன் தன் கணவனைப் பின் தொடர்ந்தாள்...
வாசலில் இருந்த காவலாளி...
"சார் மணி பதினொன்னாகுது... விசிட்டர்ஸ் டைம் முடிஞ்சிட்டுது.... நீங்க நாளைக்கு வாங்க" என்று சொல்ல,
அது வரை இருந்த ரம்மியமான மனநிலை மாறி அர்ஜூனின் கோபம் மீண்டும் தலை தூக்கியது...
அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே மருத்துவமனையின் இயக்குனர் சுந்தருக்கு அழைத்தவன்,
"அன்கில்... கேன் யூ ஆஸ்க் தி செக்யூரிட்டி டு லெட் மி இன்? [Uncle... Can you ask the security to let me in?] " என்றான்...
அவர் மறுமுனையில் என்ன சொன்னாரோ அலை பேசியை காவலாளியிடம் நீட்ட, வாங்கிக் காதில் வைத்த காவலாளி "சரி சார்" என்றவன் அலை பேசியை அர்ஜூனின் கையில் திருப்பிக் கொடுத்து "சாரி சார்" என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்துவிட்டான்.
"இவர் என்ன செய்தாலும் மாறப் போவதில்லை... செக்யூரிட்டி அவர் வேலை செய்கிறார்... அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?" என்று நினைத்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தவள் அவன் சென்று நின்ற அறையைப் பார்த்ததும் அவனை நிமிர்ந்து பார்க்க...
"உள்ள போ" என்றான்...
என்ன? யாருக்கு? என்ன உடம்புக்கு? என்று பதற்றத்துடன் அவனை நோக்கியவாறே அறைக்குள் சென்றவள் அங்குத் தன் மாமியாரை படுக்கையில் கண்டதும் அதிர்ச்சியில் அவரின் அருகில் ஓடியவள்...
"அத்த, என்னாச்சுத்த? எனவும்...
திவ்யாவை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத ஸ்ரீக்கு அவளை விட அதிர்ச்சியாக இருந்தது...
"நீ எப்போ திவ்யா வந்த?"
"உங்களுக்கு என்னாச்சு அத்த? அத சொல்லுங்க முதல்ல"
அங்குத் தூங்கிக் கொண்டிருந்த மஹாவும் திவ்யாவின் குரலில் எழுந்து விட, திவ்யாவை பின் தொடர்ந்து வந்த அர்ஜூனைப் பார்த்ததும் ஸ்ரீயின் குழப்பத்திற்கு விடை கிடைத்தது...
அர்ஜூன் தான் திவ்யாவை வர வழைத்து இருக்கிறான் என்று.
ஆனால் அர்ஜூன் நேரே சென்றது அவருக்குத் தெரிய வழியில்லையே...
திவ்யா ஸ்ரீயிடம்...
"அத்த சொல்லுங்கத்த... என்னாச்சு உங்க உடம்புக்கு?" என்று கண்கள் கலங்க கேட்க,
"ஏம்மா வீட்ட விட்டு போன? அதுவும் என் கிட்ட கூடச் சொல்லாம லெட்டர் எழுதி வச்சுட்டு?" என்றார் பரிதவிப்புடன் குரலும் வார்த்தைகளும் நடுங்க...
கம்பீரமாக அத்தனை தொழிற்களையும் ஒற்றையாளாக, வழிகளில் எதிர்பட்ட ஒவ்வொரு எதிராளிகளையும் போட்டியாளர்களையும் எளிதில் வென்று வெற்றிக் கொடிய நாட்டிய தன் அன்னை இன்று தன் மனையாளைப் பார்த்ததும் விழிகள் கலங்க குரலிலும் நடுக்கம் தெரிய கலக்கத்துடன் அவள் கரங்களை இறுக்கப் பற்றிக் கேட்ட பொழுது அர்ஜூனிற்குப் புரிந்து போனது தன்னவளின் மலரினும் மெல்லிய மனதின் பேரழகு...
தன் மாமியார் கலக்கத்துடன் கேட்டதும் தன்னையும் அறியாமல் தன் கணவனைத் திரும்பி பார்த்தவள் அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பதைக் கண்டு ஒன்றும் சொல்லாமல் தலை குனிய,
"அண்ணி, நீங்க வீட்டை விட்டுப் போனது தெரிஞ்சதும் அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு... நல்ல வேளை உடனே கொண்டு வந்து ஹாஸ்பிட்டலில் சேர்த்துட்டாங்க" என்று மஹா கூறியதும் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் உடலில் பாய்ந்தது போல் உணர்ந்து அதிர்ந்தாள் திவ்யா...
"ஐயோ! என்னாலயா? அத்த என்ன மன்னிச்சுடுங்க அத்த... நான் சத்தியமா இந்த மாதிரி நடக்கும்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை... தெரிஞ்சிருந்தா நிச்சயம் உங்கள விட்டுட்டு போயே இருக்க மாட்டேன்" என்று கண்களில் நீர் ஆறாகப் பெருக்கெடுக்க வெடித்துக் கதறினாள்...
அவளை இழுத்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்ட ஸ்ரீ,
"எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் வீட்டை விட்டுப் போகக் கூடாது திவ்யா... அது ரொம்பத் தப்பு.... உன் பக்கமே நியாயம் இருக்கட்டும்... ஆனால் அத பேசித் தான் தீர்த்துக்கனுமே தவிர இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்கக் கூடாது.... அதுவும் ஒரு சின்னப் பொண்ணு... ஊர் பேர் தெரியாத ஊர்ல இருந்து தனியா இப்படி வீட்டை விட்டுப் போறதெல்லாம் ரொம்பத் தப்பு... ஏதாவது ஏடா கூடமா ஆனா என்ன பண்ணுவ? எனவும்,
"கடவுளே! இப்பொழுது கூட என்னால் தான் உடம்பு முடியாமல் போனதை நினைக்காமல் என்னைப் பத்தி கவலை படுறாங்க... அவங்களுக்குப் போய் இவ்வளவு கஷ்டம் கொடுத்திட்டேனே" என்று மனமுருக உள்ளுக்குள் கதறியவள்...
"இனி உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டேன் அத்த" என்றாள்.
"சரி அது இருக்கட்டும்.... நீ எப்படி, எப்போ வந்த?"
அவரின் கேள்வியில் மீண்டும் தலை கவிழ்ந்தவள் மெல்லிய குரலில்....
"அவங்க தான் அத்த வந்து கூப்பிட்டுட்டு வந்தாங்க" என்றதும் ஸ்ரீயின் முகத்திலும் மஹாவின் முகத்திலும் ஆச்சரியம் டன் டன்னாக வழிந்தது...
என்னது? அர்ஜூன் போய்க் கூட்டிட்டு வந்தானா என்று ஸ்ரீ மஹாவைப் பார்க்க, சொன்னேன் இல்லையா அண்ணாவுக்கு அண்ணிய ரொம்பப் பிடிக்கும் என்று, என்று உள்ளர்த்தத்துடன் மஹா ஸ்ரீயை பார்க்க, இவங்க ஆச்சரியப்படுவதைப் பார்த்தால் இப்போதைக்கு எங்களை விட மாட்டாங்க போல இருக்கே, இங்க இருந்து இப்போ இவளை எப்படிக் கூட்டிட்டுப் போறது? என்று அர்ஜூன் யோசனையில் ஆழ்ந்தான்...
ஆனால் அவன் அர்ஜூன் ஆயிற்றே!! இதற்கெல்லாம் கூச்ச படுபவனா என்ன?
"ஓகே மாம், அப் அன்ட் டௌன் ட்ரைவிங் பண்ணியது எக்ஸ்ட்ரீம்லி டைர்டா [ Ok Mom...Up and Down driving extremely tired] இருக்கு, வீ வில் கம் போக் டுமாரோ [We will come back tomorrow]" என்றவன் திவ்யாவைப் பார்த்து வா என்பது போல் தலை அசைக்க,
ஏற்கனவே இன்ப அதிர்ச்சியில் இருந்தவர்களுக்கு மேலும் மேலும் அவன் ஆச்சர்யத்தைக் கொடுக்க,
"போதும்டா அர்ஜூனா... ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்த உடம்பு... இதற்கு மேல் தாங்காது" என்பது போல் அவனைப் பார்த்தவர்...
"சரி நீங்க கிளம்புங்கப்பா... நாளைக்குப் பார்க்கலாம்" என்றார்...
அவன் பாதி ஆங்கிலத்தில் சொன்னது புரியாமல் திவ்யா அமர்ந்திருக்க அவளைத் திரும்பி பார்த்தவன் தான் வா என்று தலை அசைத்தும் திருதிருவென்று முழித்தவளைப் பார்த்து புன்னகைத்தவன்...
"கிளம்பு" என்றான்...
ஆனால் திவ்யாவிற்குத் தான் மனம் வரவில்லை... வீட்டிற்குச் சென்றால் என்ன நடக்கும் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்...
இத்தனை தூரம் தன்னை வந்து அழைத்துக் கொண்டு வந்தவர் நிச்சயம் கணவனின் உரிமையைத் தன்னிடம் எதிர்ப்பார்ப்பார்.
இனி அதை மறுக்க முடியாது... மறுத்தாலும் விடமாட்டார்... ஆனால் தன்னால் இப்படி இருதய நோய் வந்து அத்தை இருக்கும் பொழுது தான் மட்டும் சந்தோஷமாக இருப்பது பெரும் பாவம் இல்லையா? என்று யோசித்தவள்...
"நான் இன்னைக்கு நைட் இங்கேயே அத்தைக் கூட இருக்கேன்" என்றாள் தன் கணவன் என்ன சொல்வானோ என்ற பரிதவிப்புடன்...
ஆனால் ஸ்ரீக்கோ மனம் வரவில்லை... இத்தனை தடங்கல்களுக்குப் பிறகு, மனஸ்தாபங்களுக்குப் பிறகு சின்னஞ்சிறுசுகள் ஒன்று சேரப் போகிறார்கள்... இந்த நாளுக்காகத் தானே அவரும் காத்திருந்தது... அவர்களின் பொக்கிஷமான இரவை தன்னால் இழக்கப் போவதை உணர்ந்தவர்...
"இல்ல திவ்யா, அதான் மஹா இருக்கால்ல... நீ போய்ட்டு நாளைக்கு வா" எனவும்...
"எப்படி அத்தை இந்த நிலைமையில் உங்களைப் பார்த்திட்டு விட்டுட்டு போறது?" என்றாள்...
அவளின் இடத்தில் இருந்து பார்த்தால் அவள் சொல்வது சரியே...
மீண்டும் தன் கணவனை நிமிர்ந்து பார்த்தவளின் முக மாற்றங்களை கண்டவன் அவளின் எண்ணங்களையும் புரிந்து கொண்ட ஒரு நல்ல கணவனாக....
"ஓகே மாம், அப்ப நாளைக்கு வரேன்..." என்றான்...
பேசிக் கொள்ளாமலே ஒருவொருக்கொருவரின் எண்ணங்களைப் புரிந்துக் கொண்டவர்களைப் பார்த்த ஸ்ரீக்கு, இவர்களின் நேற்றைய பிரிவு இன்றைய மனம் ஒற்றுதலை கொடுத்திருக்கிறது என்று உணர்ந்தவராக..
"சரிப்பா, அப்போ எதுக்கு இரண்டு பேர் இங்க? நீ மஹாவக் கூட்டிட்டு போப்பா" என்றார்
சரி என்றவன் மஹாவுடன் கிளம்ப, என்ன தான் தான் வரவில்லை என்று கூறி விட்டாலும் அவனைப் பிரிவது மனதில் அழுத்தமான ஒரு வித வலியைக் கொடுக்க, அவனை நிமிர்ந்துப் பார்த்தவளின் கண்களில் தெரிந்த ஏக்கத்தைப் பார்த்தவனுக்கு உள்ளம் பூரித்துத் தான் போனது...
"நாம் ஒன்று சேர்வதற்கு இன்னும் ஒரு நாள் இருக்கு போல டி" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அவளைப் பார்த்து தலையை மட்டும் அசைத்து விடை பெற்று செல்ல, அவன் சென்ற பிறகும் வாயிலையே பார்த்திருந்த மருமகளைப் பார்த்தவர்...
"நாளை எப்படியும் இவர்களுக்கு நல்ல நாளாகவே விடிய வேண்டும்" என்று மனதிற்குள் பிராத்தனை செய்து கொண்டார்...
அர்ஜூன் திவ்யாவின் சங்கமத்திற்கு இன்னும் ஒரு நாள்... ஒரே ஒரு நாள் காத்திருப்போம்...
தொடரும்..