டாக்டர். உதயகுமார், அமெரிக்காவில் வாழும் ஒரு கால்நடை மருத்துவர். தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் மூவரிருந்தாளி என்ற குக்கிராமத்தில் பிறந்து, 50 ஆண்டுகளுக்கு மேலாக வெளியூர்களிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்தாலும், தன் மண்வாசனையையும் ஊர் வழக்கு மொழியையும் ஊரையும் உள்ளத்துக்குள் அடைகாத்து வந்ததாலும், நிறைய கதைகள் வாசித்ததாலும், தன் ஊர் நிகழ்வுகளைக் கற்பனை கலந்த எழுத்தாக மாற்றி 'ஆலமரத்துப் பறவைகள்' என்ற தன் முதல் நாவலை எழுதி, ஜனவரி 10, 2020 ல் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டார். இது ஒரு சமூக நாவல்.ஆண் பெண் உறவை மையமாகக் கொண்டதோடு ஊரில் எதிர்பாராமல் நடக்கும் ஒரு கொலையின் மர்மத்தையும் சேர்த்து விறுவிறுப்பு குறையாமல் எழுதப்பட்ட புதினம்.
இவரின் பிற படைப்புகள்
1.Ticket to the moon - Collection of Short Stories என்ற ஆங்கில சிறுகதைகள் தொகுப்பு.
இவரின் இந்த நூல், பவுன்சிங் பால் புக்ஸ் கம்பனி, டம்பா எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றதால் அவர்களே இதை வெளியிடவும் செய்தார்கள்.இதே நூலுக்கு ஃபுளோரிடா புத்தக விருதுப் (Florida book award) போட்டியில் வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.
2.'ஜெயமோகனின் யானை டாக்டர் 'என்ற கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு.
இவரின் பிற படைப்புகள்
1.Ticket to the moon - Collection of Short Stories என்ற ஆங்கில சிறுகதைகள் தொகுப்பு.
இவரின் இந்த நூல், பவுன்சிங் பால் புக்ஸ் கம்பனி, டம்பா எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றதால் அவர்களே இதை வெளியிடவும் செய்தார்கள்.இதே நூலுக்கு ஃபுளோரிடா புத்தக விருதுப் (Florida book award) போட்டியில் வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.
2.'ஜெயமோகனின் யானை டாக்டர் 'என்ற கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு.