JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

சதுரங்கம் 5

Subageetha

Well-known member
"சில சமயங்களில் நாம் தேடிப் போகும் விஷயங்கள் நல்லவைகளாக இராது. ஆனால் காலப்போக்கில் சமூகரீதியில் அதை சரியானதாக விஷயங்களாக பார்க்கப் பழகிக் கொள்கிறோம்."

இப்பொழுது, அருணாச்சலம் அரசியலில் தொபுக்கடீர் என்று குதித்துள்ளது நல்லவைக்கா இல்லை கெட்டவைக்கா என்பது குறித்து எனக்கு மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது.

மனைவியிடம் பொறுப்புகளை கொடுத்து சொத்து விவகாரங்களில் கவனிக்க சொல்வதும் சரிதான். ஆனால் வயது வந்த மகனை கண்டுகொள்ளாமல் தன் அரசியல் பாதையில் செப்பனிடும் வேலை செய்வது எந்த விதத்தில் சரியாகும்?
அருணாச்சலம் செய்து கொண்டிருப்பது அதைத்தான். அன்று காலையில், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் அருணாச்சலம் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதற்காக சில கட்சிக்காரர்கள் வீடு ஏறி வந்திருக்க, அவர்களுடன் உரையாடிக்கொண்டே அவர்களுக்கும் காலை நேர உணவை பரிமாறும்படிக்கு மனைவியிடம் சொன்னவர், சாப்பிடும் பொழுது, வெகு நாட்களாய் வீடு வந்து சேராத மகன் வந்து நிற்க, அதை சிறிது கூட கண்டுகொள்ளாத பாவனையில் தனது பேச்சை தொடர்ந்தார் அருணாச்சலம்.மகன்
இத்தனை நாள் எங்கு தங்கி இருந்தான், என்ன செய்து கொண்டிருந்தான் என்பது பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனிடம் கேட்கவும் இல்லை.

சிவனிடம் சொல்லி குருபரனை கண்காணிப்பதற்கு வைத்திருக்கிறார் அருணாச்சலம். ஆனால் இதுபற்றியெல்லாம் குருவுக்கு ஒன்றும் தெரியாது.

குருவுக்கு மனதில் அப்பா தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பது ஆத்திரம் ஒரு புறமும், வேதனை மறுபுறமுமாக அலைக்கழிக்க அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
மகனுக்கோ தன் அப்பாவிடம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம். முன்பெல்லாம் அப்பாவும் மகனும் காலை வேளையில், அன்னபூரணி உணவு பரிமாற சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுவார்கள். அவர் வேலையை கவனிப்பதற்கு செல்வதற்குமுன் மகனிடம் நேரம் செலவழிப்பதை ஒரு கட்டாயமாக்கி கொண்டிருந்தார். மகனும் பள்ளி கிளம்புவதற்கு முன் முதல் நாள் பள்ளியில் நடந்தது முதல் இன்று அவன் செய்யவிருப்பது வரை சொல்லிக் கொண்டிருப்பான். இருவருக்கும் தட்டில் உள்ள உணவு காலியாவதே தெரியாமல் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க அன்னபூரணியும் சளைக்காமல் தட்டில் உணவு போட்டுக் கொண்டே இருப்பார். அப்போதெல்லாம் குருபரன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தான். அம்மாவின் கைப்பக்குவம் அவனை நல்ல வளர்த்தியாக்கி விட்டிருந்தது. (இப்போ எப்படி இருக்கானு கேக்கப் படாது)சிறுவனின் மனம். பால் மனம் மாறவில்லை. அம்மாவின் தலைப்பில் ஒளிந்து கொள்ளும், அப்பாவின் சலுகைகளை எதிர்பார்க்கும் சராசரி ஒற்றை பிள்ளை அவன்.
பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும், அவனின் உலகம் அவனின் அப்பா அம்மாவை சுற்றி மட்டுமே இருந்தது. ஆனால் என்று ராமேஸ்வரம் அரசியல் என்ற கூர்மை மிக்க ஆயுதத்தை ஏந்தி அருணாச்சலத்துடன்
பேசிக்கொண்டிருந்தாரோ, அன்று மையம் கொள்ள ஆரம்பித்தது இவர்கள் வீட்டில் புயல். அன்னபூரணிக்கு தனது கணவன் அடுத்த நிலையை நோக்கி முன்னேறுவது பெருத்த மகிழ்ச்சி. கணவனுக்கு என்றும் துணை நிற்க அவர் தயார்.ஆனால் விடலை பருவத்தில் இருக்கும் தனையனுக்கு அப்பாவின் அருகாமை தான் மகிழ்ச்சி. அப்பாவின் பணம் பதவி தராத மகிழ்ச்சியை அவரின் உடனிருப்பு கொடுத்துக் கொண்டிருந்தது. அன்று வரை பெரிதாக நட்பு வட்டம் என்று சேர்த்துக் கொண்டு ஊர் சுற்றி அறியாதவன், தான் பணக்கார வீட்டுப் பிள்ளை எவ்வளவு செலவு செய்தாலும் தாங்கும் என்று யோசித்திராதவன், புதியதாக இம்முறை நட்புகள் என்று சேர்த்து கொண்டவர்கள் அனைவரும் தீய பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பவர்களாகவும் குருபரனின் பணத்தை வைத்து சொந்த கொண்டாட்டங்களை வைத்துக் கொண்டிருப்பாவராயும் அமைந்தது முழுக்க முழுக்க சாபக்கேடு. கரந்த பாலின் தூய்மையில் ஒரு சொட்டு நாக விஷம் சேரும்போது?
விஷ முறிவு சிகிச்சை செய்து அவனை திருத்த வேண்டிய,மகனை கண்டிக்க வேண்டிய தகப்பனும் தனது சுய முன்னேற்றத்தில் குறியாக இருக்கிறார். நாற்பதுகளில் இருக்கும் அருணாசலத்திற்கு திடீரென்று அரசியல் மோகம் அணை கடந்துவிட்டது.அதேபோல் மகனது விஷயங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தன் மனைவியின் காதுகளை எட்டவே கூடாது என்று வேறு போற்றிப் பாதுகாத்து வருகிறார் சிவனுடைய துணையுடன்.ஆனால் விஷயங்களின் அளவு கை மீறிப் போகும் போது எந்த ஒரு நபரும் இதை தடுக்க இயலாது.

நேரே உள்ளே வந்த குருபரன், சாப்பாட்டு மேசையின் மீது அமர்ந்து கொண்டு இருந்த மற்றவர்கள் முன்னால் பேசத் தயங்கியவாறே 'அப்பா'என்று அழைத்தான்.
'வா தம்பி இப்பதான் வீடு தெரிஞ்சதா' என்று குரலில் சிறிதாக நக்கலை கலந்து கோவத்தை மறைத்து கேட்க, அது புரியாத அளவுக்கு மட்டியல்ல குருபரன்.

'வாங்க தம்பி,வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க பிறகு பேசிக்கலாம்.' என்று பிறர் முன் மகனைக் கடிய இயலாது அப்புறம் பேசிக்கலாம் என்பதைப்பற்றி நாசுக்காக சொன்ன தந்தையை வெறித்த பார்வை பார்த்துவிட்டு, வெளில போயிட்டு வந்தது கசகசன்னு இருக்கு பா... இந்தா போய் குளிச்சிட்டு வரேன், நீங்க சாப்பிடுங்க'என்று விட்டு தன் அறையை நோக்கி சென்றான். குருபரன் மனதிற்குள் அப்படி ஒரு பேராழி அடித்துக் கொண்டிருந்தது. முன்புபோல் தன் தந்தை தன்னுடன் பேசிக் கொண்டிருப்பதில்லை. அதிகமாய் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த அம்மாவோ இப்போதெல்லாம் கணக்கு வழக்குகளை பார்ப்பதில் நேரம் குறைந்து அவதிப்படுகிறார்கள் என்று தெரிகிறது. என்னதான் பெண் சிநேகிதங்களும் நண்பர்களும் மாற்றி மாற்றி அவனை சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டிருந்தாலும் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் அப்பா -அம்மா என்ற உணர்வு அவ்வபோது தலைதூக்க தான் செய்கிறது. ஏக்கம் அவன் உள்ளே ஆழமாய் ரணமாய்.அவன் தேடி செல்லும் சமயம் அப்பா அம்மா இருவருமே கையில் அகப்படுவதில்லை. 'சை, என்ன வாழ்க்கை இது என்று மனதிற்குள் பொங்கினான் குருபரன். அவன் மன உணர்வுகளுக்கு வடிகால் இல்லை.ஆனால் பிறகும் தந்தை தன்னை கூப்பிட்டு பேசுவார் என்று எதிர்பார்த்தவனுக்கு மிஞ்சியது ஏமாற்றமே!
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதில் தொடங்கி, கவுன்சிலர் தேர்தலும் முடிந்து, அந்த பதவியை ஏற்றுக் கொண்ட பிறகு அருணாச்சலம் அவரது போக்கே மாறிவிட்டது. வேண்டுமென்றே செய்யவில்லை. ஆனாலும் அவரால் குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்க முடிவதில்லை. பொது வாழ்க்கை அவரை சுருட்டிக் கொண்டது என்பதே நிஜம்.
கணக்கு பிள்ளைகளின் துணையுடன் அன்னபூரணியே எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொண்டு விடுகிறாள்.அவருக்கு முழு நேரமும் அரசியல்... அரசியல்... அரசியல்! அதுவே தொழில் என்றாகிவிட்டது. எப்படியாவது, மாவட்ட செயலாளர் ஆகிவிடவேண்டும் கட்சி அளவில், அதே போல் எப்படியாவது எம்.எல்.ஏ ஆகிவிடும் வேகம் அவருக்குள்.குருபரனோ அந்த நேரம் பேச முடியாமல் தவித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
வெளியில் அவன் சீட்டாட்டம் சமயத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வாங்கி இருந்த கடன் தொகை பெரிது. தோற்றும் விட்டான்.அதை ஈடுகட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அப்பாவிடம் சொல்வது, இதற்குப்பிறகு சீட்டாட்டத்தில் நுழைவதில்லை என்று முடிவு செய்திருந்தவனுக்கு தனது அப்பாவின் பாராமுகம் ஆழமாய் கத்தி போன்று கீறியது. அம்மாவிடம் மனம் விட்டு பேசும் அளவுக்கு அவன் வயது இடம் தரவில்லை. பெத்த மகனுக்கே என்னென்னன்னு கேட்டு செய்ய தெரியலையாம், துப்பு இல்லையாம்.இந்த அழகுல இவரு சமூக சேவை செய்கிறாராம் சமூக சேவை.
இந்தாளுளேல்லாம் என்னத்த கிழிச்சு...****என்று மனதிற்குள் அப்பாவை திட்டிக்கொண்டே, ஜாடிக்கேத்த மூடி என்று கச்சிதமாய் தன் கணவருடன் பொருந்தியிருக்கும்,தன் மகனை பற்றி அதிகம் யோசிக்காமல் இருக்கும் அம்மா மீதும் அவனது மதிப்பு குறையலாயிற்று.' அவர்கள் செய்த பெரிய தவறு மகன் வளர்ந்து விட்டால் நல்லவற்றை சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம். இனி அவனே தன் வாழ்க்கையில் அவற்றை நடைமுறைப் படுத்திக் கொள்வான் என்று யோசித்து தான். அவன் பன்னிரண்டாம் வகுப்பு சறுக்கியது அருணாசலத்திற்கு ஒருவிதத்தில் அவமானமாக இருந்தாலும், அவனை மேற்கொண்டு படிப்பதற்கு ஓரிருமுறை வற்புறுத்தி பார்த்தவர் பிறகு விட்டுவிட்டார். அவனுக்கு பூர்வீக சொத்துக்களை கையாள்வதில் பரிச்சயம் ஏற்படுத்த வேண்டும் என்பது அவரின் யோசனை. அதைப்போல் சிவன் மூலம் அவன் கடன் வாங்கி இருந்தது பற்றியும் சீட்டு ஆட்டத்தில் தோற்றது பற்றியும் தெரிந்து கொண்டவர், மகன் இதை பற்றி தன்னிடம் நேரில் பேச வேண்டும். ஆனால் மெனக்கெட வேண்டும். அவனுக்கு நிலைமையின் விபரீதம் தெரிய வேணும்.பிறகு தான் அவனிடம் பேசுதல் என்று யோசனை பண்ணி வைத்திருந்தார். இருவருக்குள்ளும் மனதிற்குள் ஓடும் விஷயங்கள் மனதளவில் அவர்களிடையே ஒரு பிரிவை உண்டாக்கி விட்டது. இந்தப் பிரிவு பெரும் மதில்சுவர் ஆகும் நாள் அதிக தொலைவில் இல்லை.

தன்னிடம் இருந்த நகைகளை விற்று, சீட்டாட்டக் கடன் தொகைகளை அடைத்தவன், பிறகு எதற்காகவும் அப்பா அம்மாவிடம் போய் நிற்க வில்லை. சிவனிடம் சொல்லி, அருணாச்சலம் தன் மகனிடம் ஒரு சில பொறுப்புகளை கொடுக்க, அவற்றை செவ்வனே செய்தவன், வருமானத்திலிருந்து ஒரு தொகையை தனக்கென்று ஒதுக்கி எடுத்து வைத்துக்கொள்ள தொடங்கினான். இதுபற்றி அருணாச்சலம் அறிந்திருந்தும், அவனுக்கும் பணத்தேவை இருக்குமென்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்பும் வரும். பணம் கையாளும் பொழுது அவற்றின் மதிப்பு என்ன என்று புரியும் என நம்பினார்.
ஆனால் நடந்தது வேற. வரும் பணத்தில், அவனது தீய பழக்கங்களும் பெருகிக் கொண்டுதான் வந்தது. யாரையும் எதிர்பார்க்காமல் அதிகமாய் சேரும் பணம் அவனது கெட்ட சகவாசம் மற்றும் கெட்ட பழக்கங்களையும் கூட சேர்த்து விட்டது. இளம் வயதில் சேரும் அதிக பணம் அதிக ஆபத்து... மது, மாது, சீட்டாட்டம்.இப்பொழுது போதை மருந்தும் கூட சேர்ந்து விட்டது அவனது லிஸ்டில்.
அருணாச்சலம் நினைத்தபடியே வேகமான முன்னேற்றம் அவர் அரசியல் வாழ்வில்.அடுத்தடுத்த பதவிகள் எல்லாம் அவரை தேடி வர அவர் யோசித்தபடி மாவட்ட செயலாளரும் ஆகிவிட்டார். வரும் சட்டசபை தேர்தலில் நிற்பதற்காக கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். வருடங்கள் நான்கு கடக்க அவரது வாழ்வில் ஏற்றம்... அவர் மகனது வாழ்வில் இறக்கம்.
அரசல்புரசலாக மகனின் நடவடிக்கைகள் பற்றி தெரிய வந்திருந்தது அன்னபூரணிக்கு.

திரும்பவும், தோப்பு வீட்டில் பெண்களுடன் அவன் கூத்து அடிக்கும் சமயம், எதிர்பாராதவிதமாக அன்னபூரணி குத்தகை விடுவதற்க்கு ஆளை வரச் சொல்லி தோப்புக்கு செல்ல,தனது செல்ல மகனின் எந்த கோலத்தை பார்க்கக்கூடாதோ அதை முழுதாக பார்த்து தன்னுள் நொருங்கினார் அன்னபூரணி. அவர் செல்லும் சமயம் வீரனும் அங்கு இல்லை. ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றிருந்தான்.

தான் கண்டது நிஜமல்ல பிரமைதான் என்று அவர் மனம் மீண்டும் மீண்டும் வாதிட்டது. தனது தாய் கண்டவற்றை மகனும் பார்த்துவிட அவனுக்குள் முதலில் சின்னதாக ஒரு குற்ற உணர்ச்சி. பிறகு அதையும் துடைத்துவிட்டான். அவனுக்கும் பார்த்த பார்க்கட்டுமே, என்றாகிலும் தெரியத்தானே போகிறது. இன்றே எனில் நல்லதே,என்ற அலட்சியம் தலை தூக்கியிருந்தது.

அதிர்ச்சியில் உறைந்த அன்னபூரணி, டிரைவரிடம் சொல்லி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.அருவருப்பில் உடல் குறுக தன்னிலை மறந்து விட்டத்தை வெறித்தவாறே கூடத்தின் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அந்த தாய்.ஆடிட்டர் அலுவலகம் சென்றுவிட்டு வந்த சிவம், அன்னபூரணியின் நிலைகண்டு தடுமாறிப் போனார். அன்னபூரணி 'தான் எதை பார்த்தோம்' என்று சிவனிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் தோப்புக்கு சென்று வந்ததை சிவம் அறிவார். அங்கு என்ன நடந்தது என்று தெரியாவிடினும், அங்கு நடந்தவை ஏதோ சரியாக இல்லை எனும்
ஊகம் அவருக்குள் உண்டு.
இப்போதெல்லாம் அருணாச்சலம் பெரும்பாலும் சென்னையில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு, அன்னபூரணி எவ்வாறு இருக்கிறாள் என்று சொல்லி விட்டார் சிவன். மெல்ல தனது தாடையை நீவி கொண்டவாரே 'நான் வந்து எல்லாத்தையும் பார்த்துக்குறேன் சிவம். என்ன நடந்ததுன்னு தெரியல,நீங்க நிலைமையைக் கட்டுக்குள் வைக்க பாருங்க'என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டார் அருணாச்சலம்.

பண்பாடு பற்றி மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்து அன்னபூரணி பிள்ளைக்காக யோசித்து கொண்டிருந்தவளுக்கு நெஞ்சு வலிப்பது போல் இருக்க, சிவன் மற்றும் இன்னும் இரண்டு வேலைக்காரர்கள் துணையுடன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
குருபரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவன் வரும் நிலையில் இல்லை.முழு போதையில் முழ்கி இருந்தான் . அவனை சுற்றியும் பெண்கள் கூட்டம். தாய் எனும் பெண் படும் துன்பத்தை விட, அவனுக்கு காம இன்பத்தை கொடுக்கும் பெண்கள் பெரியதாக பட்டதால் அவன் வரவில்லை. அதிர்ந்துபோன அருணாசலம் அன்று இரவே கிளம்பி மறுநாள் விடிகாலையில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.
ஒருவழியாக, உடல் தேறி அன்னபூரணி வீடு வந்து சேர, அவள் மனதிற்குள், மகனுக்கு எப்படியேனும் திருமணம் செய்து விட்டால் அவன் சரியாகி விடுவான் என்ற எண்ணம் உதிக்க, அவனுக்கு பெண் பார்ப்பது என்று முடிவு செய்து விட்டார். ஆனால் அவனது நடவடிக்கைகள் தெரிந்த யார் அவனுக்கு பெண் கொடுக்க முன்வருவார்?
பெண்ணைப் பெற்றவர்கள் பையனுக்கு சொத்து எவ்வளவு,படிப்பு இருக்கிறதா,என்பதுடன் சேர்த்து ஒழுக்கத்தையும் தானே பார்ப்பார்கள்?
அன்னபூரணிக்கு கண்ணை கட்டி விட்டது போலிருந்தது. அருணாச்சலம் இதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாது என்று எவ்வளவு சொல்லியும் ஏற்றுக்கொள்ள தாய் மனது தயாராக இல்லை. பக்கத்து ஊர்களில் இருக்கும் பெண்களையெல்லாம் பணம் அந்தஸ்து இவற்றை ஒதுக்கி பார்த்தாயிற்று. இவனது வரன் என்றாலே பெண்ணைப் பெற்றவர்கள் தலைதெறிக்க ஓட, கடைசியில் 'அன்னபூரணி சிவனிடம் அண்ணே, உங்க மூத்த பொண்ணை என்னுடைய பையனுக்கு கட்டி வைக்கிறீங்களா அண்ணே ' என்று கேட்க, உடைந்து போனார் சிவன். பணம் அந்தஸ்து இவற்றை மீறி, குருவை போன்ற ஒருவனுக்கு தனது செல்ல மகளை எவ்வாறு திருமணம் செய்து வைக்க முடியும் என்ற பதட்டம் மிக,அன்னபூரணி- அருணாச்சலம் முகத்தை பார்த்தவருக்கு எவ்வாறு மறுப்பது என்ற குழப்பம் மேலோங்க, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அருணாசலம், இவ்வளவு வருஷமா என்கிட்ட விசுவாசமா இருந்திருக்க சிவம். என் பையனுக்கு சேரவேண்டிய சொத்துல பாதி சொத்தை உன் பொண்ணு மேல எழுதி வைக்கறோம். எங்க பொண்ணாவே பாத்துக்குறோம். நீ நம்பி உன்னோட பொண்ண எம்பையனுக்கு கட்டி கொடு சிவம் 'என்க, மீதி வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களுக்கும் கூட நல்ல இடங்களில் சீர்செய்து திருமணம் செய்து வைப்பதாய் அருணாச்சலம் வாக்கு கொடுத்ததை நம்பி, தனது மூத்த மகளை திருமணம் குருவுக்கு செய்து வைக்க ஒப்புக்கொண்டார் சிவன். சிவனுக்கு இப்போது உள்ளூர உதறல் தான் எடுத்த முடிவு சரியா தவறா என்று. வீட்டில் மனைவி மகளை சம்மதிக்க செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு வேறு உள்ளதே!

எனக்கும் கூட அதே குழப்பம் தான். சில சமயங்களில் திருமணம் செய்து வைத்தால் எப்பேர்பட்டவர்களும் திருந்தி விடுவது வழக்கம் தான். அது போன்ற ஏதாவது ஒரு அதிசயம் நடப்பதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் நடக்கபோகும் விஷயங்கள்தான் சரி தவறு பற்றி முடிவெடுக்க முடியும்.
*****************************

தில்லியில் இரண்டு வருடங்களாக விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் வராமல் மனதிற்குள்
புழுங்கினால் சாதுர்யா.
அவளது நடன பயிற்சி அரங்கேற்றம் வரை வந்துவிட்டது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தமிழ்நாட்டில் ஆரம்பம் ஆகி விட்ட நிலையில் ரங்கன் தில்லி வருவது சாத்தியமில்லை என்ற விட்டான். ரேணுகா மட்டும் வந்து சென்றாள். இப்போதெல்லாம் ரங்கன் தன்னைவிட்டு தொலைதூரம் சென்று விட்டது போல ஒரு எண்ணம் சாதுர்யா மனதில்.

'நீ கொஞ்சம் அவளோட நட்பை குறைச்சாதான் அவ ஸ்ரீரங்கத்தை தவிர வேறு விஷயங்களில் ஈடுபடுவா ரங்கா' என்று சாதுர்யாவின் அம்மா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ரங்கன் இவ்வாறு விலகி நிற்கிறான். அவன் தோழியோ, இவனிடம் வெளிப்படும் ஒதுக்கத்தை எண்ணி தவிக்கிறாள்.

விடை தெரியாத பல கேள்விகளுடன் நானும் கூட காத்திருக்கிறேன்.


சுகீ.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top