#குறள் 45
# அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயணும் அது.
இல்லறம் இருவர் நிலை தொடுத்தே..!
கற்பு நெறி பெண்ணின்றி
ஆணுக்கும் வலுவான செயல்
அதுவே நல்யில்லறத்தின் விதை..
கருத்தொருமித்த காதல்
அதனோடு பிறக்கச் செய்யும்
அறநிலையையும்..
இருவழியாகக் கொண்டு
ஒருமித்த மனதாக..
உருவாகும் தாம்பத்ய நிலையே
வலுவாத அறவாழ்க்கையின்
நல் பயன்...
இங்கே பண்பும் பயனும்
தானே முன்னின்று...
இல்லற வாழ்க்கையை
சுவைபட நீதி ஒழுகாத
வழி சமைக்கும்..
இருவிரல் கோர்த்து
ஒருவழி பாதையில்
தடம்பதிக்கும்
இல்வாழ்க்கையின்
இனிய பயன்
அன்பு ஒழுகுதல்
ஒன்றேயாம்..