அத்தியாயம் 21
அவன் அருகில் சிதம்பரமும் சங்கீதாவும் நிற்க, அங்கு ஒரு அழகான மணமேடை அலங்கரிக்கப்பட்டு ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஏற்பாடாகியிருக்க, நடப்பதை, நடக்க போவதை ஒரு நொடியில் புரிந்து கொண்ட அனைவரும் கனிகாவை திரும்பி பார்க்க, ஸ்தம்பித்து இமைகளை கூட சிமிட்டாமல் நின்றிருந்தவளின் அருகில் அழுத்தமான காலடிகளுடன் வந்தான் ஹர்ஷா.
அவன் அருகில் வரவும் சட்டென்று திரும்பி நடக்க முயன்றவளின் வலக்கரத்தை இறுக்க பற்றியவன், "கனி, உன்னுடன் கொஞ்சம் தனியா பேசணும், வா..." என்றான்.
அவன் தன் கரத்தை இறுக்க பற்றியிருந்த விதத்திலேயே அவள் வராவிட்டால் நடப்பதே வேறு என்ற தொனி தெரிய வேறு வழியில்லாமல் படபடக்கும் இதயத்துடனும் அச்சத்துடனும் அவளை பின் தொடர்ந்தாள்.
அவளைப் பிடித்திருந்த அவளின் கரத்தின் நடுக்கத்தில் அவள் எந்த அளவிற்கு பயந்திருக்கிறாள் என்று உணர்ந்துக் கொண்டவன், 'உன்னோட இந்த பயம் தாண்டி என்னோட பலமே..' என்று மனதிற்கு நினைத்துக் கொண்டு புன்முறுவல் பூத்தவன் யாரும் இல்லாத அந்த வெற்றிடத்திற்கு வந்ததும் அவள் கையில் தான் வைத்திருந்த ஒரு பையை நீட்டினான்.
என்ன என்று விழித்தவளை கண்டு சிரித்தவன்,
"இதில் சில்க் ஸாரி, ஜ்வெல்ஸ் எல்லாம் இருக்கு... போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா..." என்றான்.
திடுக்கென்று இருக்க அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு எத்தனை எத்தனை முறை தன் இதயம் அடிபட்டு வலியால் துடிக்கிறது, அதன் வலியை இவர் உணரவே மாட்டாரா? அல்ல உணர்ந்தும் திருந்தவில்லையா? என்பது போல் இருக்க மனம் அதீத சோர்வடைந்தது.
.
இருந்தும் இத்திருமணத்தை நடத்த விடக்கூடாது என்று முடிவெடுத்தவள் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "எதற்கு?" என்றாள்.
"ம்ம்ம்ம், இன்னைக்கு நமக்கு கல்யாணம்... போ, எதுவும் கேள்வி கேட்டுட்டு இருக்காம போய் சொன்னதை செய்..."
"இல்லை, எனக்கு இதில் சம்மதம் இல்லை... நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேன் இல்லை, நீங்க வேற ஒரு பொண்ண..." என்று முடிக்கவில்லை, அவளை பிடித்திருந்த கரத்தை சுண்டி இழுக்க அவன் மேல் மோதி தடுமாறியவள் அவன் சட்டையை பிடித்து தன்னை நிலைக்கு கொண்டு வந்தவள் அவன் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தை பார்த்து குலை நடுங்கி போனாள்.
"கனி, இன்னொரு தடவை வேற பொண்ணு அப்படி இப்படின்னு பேசினா அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.... இங்க பாரு.. ஏற்கனவே உங்க அப்பாக்கிட்ட பேசியாச்சு, எல்லாரும் தெரிஞ்சு தான் இங்க வந்திருக்காங்க... இன்னக்கு நமக்கு கல்யாணம்... நான் உயிரோடு இருக்கும் வரை இனி நீ என் கூடத் தான் இருக்கணும்.. என்னோட மனைவியா... உன்னை முதன் முதலா பார்த்த அன்னைக்கே எனக்கு நானே சத்தியம் பண்ணிக்கிட்டேன், வாழ்ந்தால் உன் கூடத் தான் வாழணும்னு... இப்பவும் அந்த சத்தியத்தை காப்பாத்தத் தான் இவ்வளவு போராடிக்கிட்டு இருக்கேன்... எல்லோருக்கும் முன்னாடி என்னையும் நம் குடும்பத்தையும் அவமானப்படுத்திவிடாத...." என்றவன் அவளை மேலும் இறுக்கி,
"உனக்கு என்னோட பிடிவாதம் நல்லா தெரியும்... நீ இப்போ இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கலைன்னா இங்க என்ன நடக்கும்னு என்னால சொல்ல முடியாது..." என்று ஒவ்வொரு வார்த்தையாகக் கடித்து துப்பியவன் அவளின் கைகளில் பையை திணிக்க, ஏற்கனவே சிவந்த அவன் முகம் கோபத்தில் இன்னும் சிவந்திருப்பதைக் கண்டு நடுங்கியவள் சிலையாக நிற்க, எரிச்சல் அடைந்தவன் வேறு வழியில்லாமல் அகிலின் அலைபேசிக்கு அழைத்தான்.
அவர்களிடம் வந்த அகிலிற்கு அவர்கள் நின்றிருந்த விதமே சூழ்நிலையை விளக்கியது.
அவனுக்கு கனிகாவின் மன நிலையும் புரியும், ஹர்ஷாவின் நிலமையும் புரியும்... ஆனால் ஹர்ஷா இல்லை எனில் இவளுக்கு வாழ்க்கை இல்லை... நிச்சயம் ஹர்ஷாவை மறந்துவிட்டு இவளால் வாழ முடியாது.
அதனை இந்த மூன்று வருடங்களில் கண்கூடாகப் பார்த்தவனாயிற்றே.
அதே சமயம் ஹர்ஷாவின் பிடிவாத குணமும், ஆளுமையும் இன்னொரு ஏமாற்றத்தை தாங்கி கொள்ளாது... ஒரு வேளை இவள் சம்மதிக்காத கோபத்தில் இவளை விட்டு மீண்டும் தூர சென்று விட்டால் இவளின் நிலைமை.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் இன்று திருமணம் நடக்காவிட்டால் அது கனிகாவிற்கு ஒரு பெரும் இழப்பை கொண்டு வரும் என்று தவித்தான்.
இவர்களின் காதல் விளையாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு சிக்கலிலும் இவர்கள் அறியாமல் இவனையும் இழுத்து விட்டு விதி வேடிக்கை பார்க்கின்றதே.
இனியும் அவனால் கனிகா படும் துன்பத்தை பார்க்க முடியாது.. ஒரு முடிவோடும் அதே சமயம் கனிவுடன் கனிகாவை நோக்கிய அகில்.
"கனிகா, உனக்கு இது அதிர்ச்சியா தான் இருக்கும்னு எனக்கு தெரியும்... ஆனால் உன்னோட நிலைமையை மட்டும் நினைச்சுக்கிட்டு முடியாதுன்னு சொல்லிடாத... எங்களை எல்லாம் பாரு... உங்க அம்மா இருந்தவரை உன் அப்பா எப்படி இருந்தார்னு உனக்கு தெரியும், ஆனால் அவங்க இறந்த பிறகு அவரு தான் குடிக்கறதையே விட்டுட்டு நீ மட்டும் தான் உலகம்னு மாறிட்டார்... நீ தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்சப்ப அவரு எனக்கு தான் ஃபோன் பண்ணினாரு... அப்போ அவரு எவ்வளவு துடிச்சு போனாரு தெரியுமா..."
"உன் மனசில் என்ன இருக்குன்னே தெரிஞ்சுக்க முடியாம அவரு தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும்... இப்போ உனக்கும் ஹர்ஷாவிற்கும் கல்யாணம் அரேஞ்ச் பண்ணிருக்கோம்னு சொன்னவுடனே அவருக்கு அவ்வளவு நிம்மதி... ப்ளீஸ் கனிகா அவரையும் நினைச்சு பாரு... ஹர்ஷாவோட பேரெண்ட்ஸையும் நினைச்சு பாரு... அங்க எல்லோரும் உன் ஒருத்தியோட முடிவுக்காக ஆவலோடு காத்துட்டுருக்காங்க... ஏமாத்திடாத... ஹர்ஷா உன்னை நிச்சயம் நல்லா பார்த்துக்குவாரு... புரிஞ்சுக்கோ.... போய் ட்ரெஸ் மாத்திட்டு வா..." என்றான்.
அகிலின் ஒவ்வொரு சொல்லும் அவளை வேரோடு சாய்த்தது... மனதில் இருந்த ஏமாற்றம், ஏக்கம், தன் சுயமரியாதை தவிடு பொடியாகிறதே என்ற தவிப்பு, தன்னை இன்னும் ஒருவரும் புரிந்துக் கொள்ளவில்லையே என்ற கழிவிரக்கம், என்று அத்தனை வலிகளுக்கும் இலக்காகித் துடித்த தன் மனதின் ரணத்தை கண்களில் கொண்டு வந்தவள், கலங்கிய விழிகளோடு,
"நீங்களுமா அத்தான்?" என்றாள்.
பிரளயம் வந்தது போல் வெடிக்கும் இதயத்துடன், பொங்கிப் பெருகிய கண்ணீருடன், வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில், மிக மிக தாளாமாட்டாத சமயங்களில், தன்னால் இனி செய்ய கூடியது ஒன்றும் இல்லை என்பது போன்ற நேரங்களில், தோன்றுமே ஒரு பரிதவிப்பு.
அதே தவிப்புடன் ஹர்ஷாவை திரும்பி பார்த்தவள், நீங்கள் இன்னும் என்னை புரிந்துக் கொள்ளவில்லை என்பதுப் போல் அவன் கரத்திலிருந்த பையை வாங்கியவள் புடவை மாற்ற சென்றாள்.
அவளின் கலங்கிய தோற்றம் ஹர்ஷாவிற்கு அவள் மேல் கனிவை வர வழைத்தது என்றாலும் அவளை இதற்கு மேல் தனித்து விட அவன் விரும்பவில்லை.
அவளை மருத்துவமனையில் பார்த்த அந்த நிமிடங்கள் மீண்டும் அலை அலையாக மனக்கண்களின் முன் வந்து போனது... வேரொடிந்த கிளை போல் அவனின் கனி கிடந்த நிலை இன்னும் அவன் இதயத்தில் இரத்தத்தை கசிய வைத்துக் கொண்டிருந்தது.
அவள் வரவிற்காக முழுக்க முழுக்க காதலை மட்டுமே சுமந்த உள்ளத்துடன் காத்திருந்தான் அந்த இளம் காதலன்.
அருகில் இருந்த அறைக்கு சென்று புடவை மாற்ற ஆரம்பித்தவளின் மனம் முழுக்க குழப்பமும் கலக்கமும்... தான் என்ன நினைக்கின்றோம்? என்ன செய்கின்றோம்? என்று கூட அவளுக்கு புரியவில்லை.
'எப்பவும் அவர் விருப்பம் தான் நிறைவேற வேண்டுமா? எனக்கென்று ஒரு மனம் இல்லையா?' என்று மனம் கலங்கினாலும் கை அதன் போக்கில் தன் வேலையை செய்தது.
பட்டு புடவையைக் கட்டியவள் அவன் கொடுத்த நகைகளை அணியாமல் வெளியே வர, அது வரை அவள் மீண்டும் ஏதாவது பிரச்சனை செய்தால் என்ன செய்வது என்ற கலக்கத்துடன் காத்திருந்த ஹர்ஷாவின் இதயம், சிலை போல் வெளியில் வந்த தன்னவளை கண்டதும் தடுமாற ஆரம்பித்தது.
அவளின் அருகில் வேகமாக வந்தவன் அவள் நகைகளை அணியாமல் இருப்பதை பார்த்து நகை பெட்டகத்தை தன் கையில் வாங்கியவன் அதில் இருந்த வைர நெக்லஸை எடுத்து அணிவிக்க முயற்சிக்க, "எ..எ...எனக்கு இதெல்லாம் வே....வேண்டாம்..." என்று தடுமாறியவாறே மறுத்தாள்.
"உனக்கு பிடிக்கலைன்னாலும் எனக்காக நீ போட்டு தான் ஆகணும்..."
"அப்போ எனக்குன்னு எதுவும் விருப்பு வெறுப்பு இருக்க கூடாதா?....உங்களுக்கு பிடிச்ச மாதிரி, நீங்க சொல்ற மாதிரி தான் எல்லாம் நடக்கணுமா?"
கண்களில் நீர் சூழ்ந்திருக்க கேட்டவளின் முகத்தை உற்று நோக்கியவன் ஒன்றும் பேசாமல் அழகாக பின்னி மல்லிகை சரத்தை சூடியிருந்த சடையை முன் விட்டு நெக்லஸை போட ஆரம்பித்தான்.
மீதம் இருந்த நகைகளை கைகளில் கொடுத்தவன் "சீக்கிரம் போட்டுட்டு வா... முகூர்த்த நேரம் தாண்டிட போகுது..." என்றவன் அவள் நகைகளை போட்டு முடிக்கும் வரை அங்கிருந்து நகரவில்லை.
ஒரு வழியாக அவள் தயாரானதும் கரம் பற்றி அழைத்து வந்தான் மணமேடையை நோக்கி.
மௌனமாக தலை கவிழ்ந்து நடந்து வந்தவளுக்கு தன் நிலை புரிந்து கொள்ள இயலவில்லை... முழு மனதோடு இந்த திருமணத்திற்கு நான் சம்மதம் தெரிவிக்கவில்லை, ஆனால் அவர் அழைத்ததும் எதிர்ப்பை தெரிவிக்காமல் அவருடன் சேர்ந்து இதோ மணவறை வரை வந்துவிட்டேன்.
எத்தனை முறை வலிக்க வலிக்க தன் இதயம் அடிபட்டும், இத்தனை கசப்பான நிகழ்ச்சிகள் நடந்ததற்கு பிறகும், காந்தத்தைக் கண்ட இரும்பு துண்டு போல் மனம் தன்னை அறியாமல் இவரிடமே தஞ்சம் அடைய விரும்புகிறதே என்று தன் மேலேயே கோபம் வந்தது.
பொங்கி பெருகிய கண்ணீருடன், மருண்டு கலங்கிய மனதுடன், மனம் குமுற தலை குனிந்து நடந்து வந்துக் கொண்டு இருந்தவளுக்கு தன் இதயத்தின் ஆழத்தில் பொதிந்து இருந்த ஹர்ஷாவின் மீதான காதல் "அவன் தனக்கு வேண்டும்" என்று அரற்றி கொண்டு இருந்த போதிலும், தன் மானத்தை சந்தேகித்தவரிடம் தன் வாழ்க்கையை பணயம் வைப்பதில் பெருத்த தடுமாற்றமும் இருந்தது.
அவளை மணவறையில் அமர சொன்ன ஐய்யர் மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்க, அதன் பின் காரியங்கள் மளமளவென்று நடந்தேறியது.
"கெட்டி மேளம்...கெட்டி மேளம்..." என்று ஐய்யர் குரல் கொடுக்க, நாதஸ்வரம் மங்கள இசையை முழங்க, ஹர்ஷா மங்கல நாணை தன்னவளின் கழுத்தில் அணிவித்து அவளுக்கும் தனக்கும் பிரிக்க முடியாத பந்ததை உறுதி செய்தவன் அவள் காதிற்கருகில் குனிந்து,
"நான் மூணு வருஷத்திற்கு முன்னாடி சொன்ன மாதிரி நீ எனக்கு தான்....எனக்கு மட்டும் தான்....அது உனக்கு பிடிச்சாலும் சரி பிடிக்கவில்லை என்றாலும் சரி..." என்றான் அக்கறையும் பெருமையும் நிறைந்த குரலில்.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தவளை பார்த்து கண்ணடித்தவன் அகிலை பார்த்து தன் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, அன்று கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் தன்னிடம் அவன் சொன்ன வார்த்தைகள் அலை போல் மனதில் அடித்து ஓய்ந்தது கனிகாவிற்கு.
"ஃப்ரம் டுடே....அதாவது இன்றையில் இருந்து, நீ, நான் சொல்றத மட்டும் தான் கேட்கணும்.. நான் சொல்றத மட்டும் தான் செய்யணும்.. மத்தவங்க சொல்றத இல்லை..." என்ற வார்த்தைகள்.... தலை கவிழ்ந்து பார்த்தவளின் கண்களில் பளீரென்று பட்டது புத்தம் புது மஞ்சள் கயிறில் கோர்க்க பட்டிருந்த தாலி.
சடங்குகள் முடிந்ததும் மணமக்கள் ஹர்ஷாவின் பெற்றோரிடமும், சுந்தரத்திடமும், கணேசன் மாலதியிடமும் ஆசிர்வாதம் பெற ஹர்ஷாவைக் கட்டி அணைத்துக் கொண்டான் அகில்.
அவனுக்கு கனிகாவின் இன்றைய மன நிலை புரியும், ஆனால் இனியும் கனிகாவின் வாழ்கையில் காயங்கள் வரக் கூடாது... அந்த ஒரே நினைவில் ஹர்ஷாவின் இந்த முடிவை ஏற்றுக் கொண்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும்.
நிகிலா கனிகாவின் அருகிலேயே நின்றவள் "கனிகா, ஏன்டி, இத்தனை அழகானவரையே நீ வேண்டாம் என்று சொன்ன?" என்று விழி அகல கிசுகிசுப்பாக கேட்க, அகிலிடம் மனதில் உள்ளவற்றை பகிர்ந்துக் கொள்வது போல் நிகிலாவிடம் அவ்வளவாக எதுவும் கனிகா சொல்ல விரும்பியது கிடையாது.
ஏனெனில் நிகிலாவால் மனதிற்குள் எதையும் வைத்துக் கொள்ள முடியாது.... லொடலொடவென்று எல்லாவற்றையும் மாலதியிடம் சொல்லிவிடுபவள்.... ஆதலால் நடந்த சம்பவங்கள் எதுவுமே அவளுக்கு தெரியாது... அதனால் தான் ஹர்ஷாவை பற்றி புரிந்துக் கொள்ளாமல் பேசுகிறாள் என்று நினைத்த கனிகா அவளை பார்த்து ஒரு புன்னகை மட்டும் சிந்தினாள்.
பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்த ஹர்ஷா தன் மனையாளை திரும்பி பார்த்தவன் அவளை நோக்கி நடந்து வர, அவர்களுக்கு தனிமை கொடுத்து நிகிலா நகர்ந்தாள்.
அகலக் கரையிட்ட அரக்கு நிற தங்க சரிகையிட்ட காஞ்சிபுரத்து பட்டு புடவையில், கால் விரல்களில் வெள்ளி மெட்டியும், கழுத்தில் ரோஜாப்பூ மாலையும், வைர நகைகளுடன் மஞ்சள் நூலில் கோர்க்கப்பட்ட தங்க தாலி மின்ன, தலை நிறைய மல்லிகைப் பூவும், நெற்றியில் வட்டக் குங்குமப் பொட்டும், உச்சி வகிட்டில் ஹர்ஷா இட்ட குங்குமமும் மிளிர, தேவதையென தெரிந்த தன் மனையாளின் மேல் காதல் பெருக அவள் அருகில் சென்றவன் அவள் விரல்களுக்குள் தன் விரல்களை நுழைத்தான்.
அவனின் திடீர் செய்கையால் நிலை குலைந்தவள் அவன் கரத்தில் இருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ள போராட ஆனால் அவன் விட்டால் தானே.
மேலும் விரல்களில் அழுத்தத்தை கூட்ட வலியினால் முகம் சுண்டியவள் அவன் முகத்தை அண்ணாந்து பார்க்க, அவளை நோக்கியவன் குனிந்து.
"இனி எப்போதும் என் கைக்குள்ள தான் நீ இருக்கணும்..." என்றான், சிரித்த முகத்துடன் ஆனால் கைகளில் உடும்பின் பிடியுடன்.
அவனின் பிடியில் இருந்து விலக முடியாமல் பலி ஆடு போல் நின்றிருந்தவள் அவனை மருண்ட மானின் மிரட்சியுடன் பார்க்க, கண்களை இமைக்காது அவளின் விழிகளுக்கு ஊடுருவது போல் பார்த்தவனின் பார்வையில் தெரிந்த ஒளி இனி அவனிடம் இருந்த தான் விலகுவது சாத்தியமற்றது என்பதை அவளுக்கு அப்பட்டமாக உணர்த்தியது.
அவளின் கலக்கத்தை உணர்ந்தவன் போல் மீண்டும் அவள் முகத்தின் அருகே குனிந்தவன், மென் குரலில் மெல்லிய சிரிப்புடன் "கனி, இந்த ஜென்மம் மட்டும் இல்லை இனி நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு தான், எனக்கு மட்டும் தான்" என்றவனின் பார்வை அவளை அடைந்துவிட்ட இறுமாப்புடன் மனைவி என்ற உரிமையில் அவள் மேல் மேய, அவன் கிறக்கமான குரலிலும், தாபம் வழியும் பார்வையிலும் சட்டென் முகம் கறுத்தவள் அவனிடம் இருந்து திரும்பி வேறு புறம் பார்த்தாள்.
அவளின் செய்கையில் சிரித்துக் கொண்டவனின் பிடி மேலும் இறுகியது.. இரும்புப்பிடியாக.
திருமணம் முடிந்ததும் அருகில் இருந்த ஹோட்டலில் உணவு அருந்துவது என்றும், மதிய உணவு முடிந்ததும் மணமக்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வது என்றும் முடிவெடுத்த போது தான் அது வரை அமைதியாக அவனின் பிடியில் இருந்த கனிகா மெதுவாக பேச்சை எடுத்தாள்.
"அப்பா, நாம நம்ம வீட்டிற்கு போலாம்பா.."
அதிர்ந்த ஹர்ஷா திடுக்கிட்டு அவளை திரும்பி பார்த்திருக்க "என்ன கண்ணம்மா, இப்போ தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு, மாப்பிள்ளை வீட்டிற்கு போவது தானே முறை" என்றார் சுந்தரம்.
"இல்லைப்பா, ப்ளீஸ் பா, நம்ம வீட்டிற்கு போலாம்பா.... என்னோட கல்யாணத்தை தான் யாரும் என் கிட்ட பேசாம நடத்திட்டீங்க, இதுவாவது என் இஷ்டம் போல் செய்ங்க அப்பா...." என்றவள் கணவனின் விரல்களில் இருந்து மெல்ல தன் விரல்களை பிரித்தெடுத்தவள் அவனை விட்டு நன்றாகவே நகர்ந்து நிற்க, சுற்றியிருந்த அனைவரின் பார்வையும் தங்கள் மேல் இருந்ததால் ஹர்ஷாவால் அவள் விலகலை தடுக்க முடியவில்லை.
அவளின் அருகில் வந்த சங்கீதா அவள் கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டு,
"கனிகா, உனக்கு எங்க எல்லார் மேலேயும் கோபம் இருக்குதுன்னு தெரியுது... எங்க மேல் எந்த தப்பு இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்... ஆனால் இப்போ கல்யாணம் ஆச்சுடா... இனி நீ ஹர்ஷாவோடு இருக்கறது தான் முறை..." என்றார்.
அவர் மன்னிப்பு என்றதும் அவரை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்து நிற்காமல் நீர் அலை கடலென வழிந்தோடியது...
இருந்தும் தவிப்புடன், "இல்லை, நான் வரலை... நான் எங்க வீட்டிற்கு போறேன்..." என்று மீண்டும் கிளிப்பிள்ளை சொல்வது போல் சொல்ல, ஹர்ஷாவின் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.
"சை" என்று சலித்துக் கொண்டவன் அவள் அருகில் வந்து,
"என்னை ஏன்டி இப்படி பழிவாங்கிற? இன்னமும் ஏன் இந்த பிடிவாதம்? உங்க வீட்டிற்கு நீ தனியா போறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஏற்பாடெல்லாம் செஞ்சேன்..." என்று கத்த ஆரம்பிக்க சூழ்நிலை புரிந்து சிதம்பரம் முன் வந்தார்.
"ஹர்ஷா, ப்ளீஸ் பீ கொயட்.... கனிகாவோட மனச எனக்கு நல்ல புரிஞ்சுக்க முடியுது... நீயும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பா... உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.... இனி அதை யாரும் மாத்த முடியாது... லெட் ஹர் டேக் ஹெர் ஓன் டைம் [Let her take her own time] அவங்க வீட்டிற்கு போகட்டும்... கொஞ்ச நாளில எல்லாம் சரியாகிவிடும்....".
அவரை கண்களில் வலியோடு பார்த்தவன் கனிகாவை திரும்பியும் பார்க்காமல் தங்கள் கார் நிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி ஆக்ரோஷமாக விருட்டென்று செல்ல, பெரியவர்களுக்கும், அகிலிற்கும் இவர்களை எப்படி சேர்த்து வைப்பது என்று மலைப்பாக இருந்தது.
ஹர்ஷா அந்த இடத்தை விட்டு நகர்ந்ததுமே அவன் கொடுத்த வைர நகைகளை கழட்டியவள் சங்கீதாவிடம் கொடுத்து,
"அத்தை, எங்க வீட்டில் இவ்வளவு விலை உயர்ந்த நகைகளை வைத்திருக்க முடியாது... இத தயவு செஞ்சு நீங்களே எடுத்து போங்க..." என்றாள்.
அவள் நகைகளை கழட்டும் பொழுதே சங்கீதாவின் முகம் சுருங்கியது, இருந்தும் ஒன்றும் சொல்லாமல் எப்படியும் தங்கள் மகன் அவன் மனைவியின் மனதை மாற்றி அவளை தன் வழிக்கு கொண்டு வருவான் என்ற நம்பிக்கையில் நகைகளை வாங்கியவர்,
"நீ கூடிய சீக்கிரம் எங்க வீட்டிற்கு வரனும் கனிகா... நாங்க அந்த நாளை ஆவலாக எதிர்பார்த்திட்டு இருப்போம்..." என்றவர் மனம் கனக்க அவ்விடத்தில் இருந்து கிளம்பினார்.
அவரை தொடர்ந்து வந்த சிதம்பரம், சங்கீதாவிடம் கனிகா நகைகளை திருப்பி கொடுத்ததை ஹர்ஷாவிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே கோபத்தில் வெடித்துக் கொண்டு இருப்பவன் இப்பொழுது இது வேறு தெரிந்தால் ஆத்திரத்தில் என்ன செய்வான் என்று யாருக்கும் தெரியாது.... அது நிச்சயம் கனிகாவின் மீது தான் பாயும்.
அவர்கள் கிளம்பியதும் கணேசனிடம் வந்த கனிகா,
"மாமா, நீங்க எல்லோரும் கிளம்புங்க, நானும் அப்பாவும் பஸ் பிடிச்சு எங்க ஊருக்கு போறோம்..." என்றாள்.
அவளின் பேச்சில் கொந்தளித்து போனார் கணேசன்.
"என்ன கனிகா, இவ்வளவு பிடிவாதம் எதற்கு? அவங்க முன்னாடி உன்னை ஒண்ணும் பேசக் கூடாதுன்னு தான் பேசாமல் இருந்துட்டேன்.... நீ பண்றது ரொம்ப தப்பும்மா, மாப்பிள்ளை எவ்வளவு கோபத்தில் போயிருக்கிறார் பார்த்தியா? உன் மாமியார் எவ்வளவு நல்லவங்க பாத்தியா? உன் கிட்ட வயசு வித்தியாசம் பார்க்காம மன்னிப்பு கேட்கிறாங்க.... ஆனால் நீ அதைக்கூட கொஞ்சமும் பொருட்படுத்தாம சொன்னதையே சொல்லிட்டு இருக்கிற.... இப்ப என்னடான்னா எங்களையும் அனுப்ப பார்க்கிற.... நீ ரொம்ப சின்ன பொண்ணும்மா, உங்க இரண்டு பேருக்குள்ள என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெளிவா தெரியாது.... ஆனால் என்னமோ அவங்களை பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியா தெரியாது... எது செஞ்சாலும் யோசிச்சு செய்மா... இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு எல்லாத்தையும் நீயே முடிவு செய்யாத...." என்று முடித்துக் கொண்டார்.
ஏனெனில் அன்று மருத்துவமனையில் ஹர்ஷா தன் பெற்றோருடன் வந்த பொழுது மாலதியும், கணேசனும் மருத்துவமனை கேண்டினுக்கு சென்று இருந்தனர்... அகிலும், கணேசனிடம் இலைமறைவு காயாகத் தான் ஹர்ஷாவிற்கும் கனிகாவிற்கும் இடையில் நடந்ததை சொல்லியிருந்தான்.
அகில் அவரை சமாதானப்படுத்தும் விதமாக,
"அப்பா, நீங்க எல்லோரும் நம்ம காரில் ஊருக்கு போங்க, நான் கனிகாவோடும் மாமாவோடும் அவங்க ஊருக்கு போய் அவங்களை விட்டுவிட்டு வந்திடறேன்..."
"ஏன் அகில், எல்லோரும் ஒண்ணா நம்ம வீட்டிற்கு போகலாம், அப்புறம் அவங்க இரண்டு பேரும் ஒரு இரண்டு நாள் கழிச்சு வேப்பங்குடிக்கு போகட்டும்..."
கணேசனுக்கு இந்த இரண்டு நாட்களில் எப்படியும் கனிகாவின் மனதை மாற்ற முடியாதா என்று இருந்தது...
ஆனால் கனிகாவிற்கு சென்னையில் இருப்பதற்கே மனம் ஒப்பவில்லை.
"இல்லை மாமா, ப்ளீஸ், நாங்க வேப்பங்குடிக்கு போறோம்..." என்று கனிகா சொல்ல, அவருக்கு இதற்கு மேல் அவள் தலை விதி என்றே தோன்றியது.
கணேசனும் மாலதியும் நிகிலாவுடன் கிளம்ப, அகில் கனிகாவையும் சுந்தரத்தையும் வாடகை டாக்சியில் அழைத்துக் கொண்டு வேப்பங்குடிக்கு புறப்பட்டான்.
பயணம் அமைதியாகக் கழிய ஒரு இடத்தில் காபி அருந்துவதற்காக காரை நிறுத்தினர்.... ஓட்டுனர் அந்தப் பக்கம் சென்றதும் அது வரை பொறுத்திருந்த அகில் அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல் கனிகாவிடம் பொரிய ஆரம்பித்தான்.
"ஏன் கனிகா, இன்னும் மனசுக்குள்ள இவ்வளவு கோபத்தை வச்சிருக்க... ஹர்ஷா எவ்வளவோ ட்ரை பண்றாரு உன் மனசை மாத்த, ஆனால் நீ கொஞ்சம் கூட பிடி கொடுக்காமல் இருக்க, இது தப்பு கனிகா...."
"எது தப்பு அத்தான்? அத்தான் உங்களுக்கு தெரியும் அவரோட குணம் பத்தி... அது மட்டும் இல்லை... நான் அவரோட ஒரு வருஷம்...." என்று தயங்கியவள் தந்தையைப் பார்க்க அவரும் யோசனையுடன் அவளையே பார்த்திருந்தார்.... இருந்தும் தான் பேச வேண்டியது அவசியம் என்று தொடர்ந்தாள்.
"அவரோட கிட்டதட்ட ஒரு வருஷம் பழகியிருக்கேன்.... அவரைப் பார்த்தால் எனக்கு பயமாத் தான் அத்தான் இருக்கும்... அவருக்கு என் மேல ரொம்ப பிரியம் தான், இல்லைன்னு சொல்லலை... ஆனால் அதே சமயம் என் கூட அத்தனை நாட்கள் பழகியும் என்னை பத்தி நல்லா தெரிஞ்சு இருந்தும் ஒரு சின்ன விஷயத்திற்காக அவர் என் மேல் கோபப்பட்டு வெளிநாட்டிற்கு போய் ஆறு மாசம் வரை பேசாமல் இருந்தார்... சரி எப்படியும் அவர் கோபம் தணியும்னு நினைச்சிட்டு இருந்த சமயம் யாரோ ஏதோ ஒரு ஃபோட்டோவை அனுப்பியதை பார்த்து என்னை கொஞ்சம் கூட நம்பாம என்னைக் கேட்கக்கூடாத கேள்விகள் எல்லாம் கேட்டு என் இதயத்தையே மரத்து போக வச்சிட்டார்....."
"எப்படி அவ்வளவு நாள் பழகியும் ஒரு பொண்ணு மேல கொஞ்சம் கூட நம்பிக்கை வராமல் அப்படி சந்தேகம் பட முடியும்? சரி பேசிட்டார், அது போகட்டும்... ஆனால் அதுக்கப்புறமாவது என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கலாம் இல்லையா? ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமா தரக்குறைவா பேசிட்டோமேன்னு அவருக்கு கொஞ்சமாவது வருத்தம் இருந்திருந்தா என்கிட்ட ஒரு வார்த்தையாவது அதுக்கப்புறம் பேசியிருக்கலா மில்லையா?? இரண்டு வருஷம் நான் எப்படி இருக்கேன், இருக்கேனா? செத்துட்டேனான்னு கூட தெரிஞ்சுக்க விரும்பலை...".
பொங்கி வந்த கேவலை தொண்டைக்குள்ளே அடக்கியவள் "நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டேன்னு தெரிஞ்சவுடனே ஓடி வந்தாரே.... ஏன்? அப்ப புரிஞ்சிருக்கும்... இவ தப்பானவ இல்லைன்னு... ஒரு வேளை நான் தற்கொலை முயற்சி செய்யாம இப்படியே இருந்திருந்தா அவர் என்னை எட்டி கூட பார்த்திருக்க மாட்டாரு அத்தான்.... ஆக என்னை நிரூபிக்க நான் தற்கொலை செய்யணுமா? கொஞ்ச நாள் பழகினாலே ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்க முடியாதா?" என்று கதறியவள்,
"வேண்டாம் அத்தான்.... எனக்கு அவரு வேண்டாம்... நீங்க எல்லாம் அவரு திருந்திட்டாருன்னு சொல்றீங்க... ஆனால் எனக்கு என்னமோ இன்னும் அவரு மேலே நம்பிக்கை வரவில்லை... இப்ப சரின்னு அவரு கூட போய்ட்டேன்னா, அப்புறம் வேற யாராவது, எதையாவது சொன்னால் அதையும் நம்பி என்னை திருப்பி அனுப்பிச்சிருவாரு... அதுக்கு நான் இப்படியே எங்க வீட்டிலேயே இருந்துட்டு போறேன்.... யாரும் என்னை வற்புறுத்தாதீங்க..." என்று ஒரு பெரிய கேவலுடன் முடித்தாள்.
அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்தது...
ஆனால் அதே சமயம் ஹர்ஷா அந்த புகைப்படங்களை கனிகாவிடம் காட்டியதில்லை.
அது எப்படி தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது என்று அவளுக்கு தெரியாது.
அது மட்டும் அல்ல, தான் கனிகாவை காதலிப்பதாக ஒரு காலத்தில் சொன்னதும் ஹர்ஷாவின் மனதில் ஆழ புதைந்து இருக்கிறது, ஆக யாரைக் குறை சொல்வது என்று அகிலுக்கு புரியவில்லை.
அதற்கு பிறகு வீட்டிற்கு வந்து சேரும் வரை சுந்தரமோ அகிலோ அவளிடம் ஹர்ஷாவைப் பற்றி வாய் திறக்காமல் வர, வீட்டை அடைந்தவுடன் தன் அறைக்கு சென்று கதவைச் சாத்தியவளின் அழுகையும் கேவலுமே கேட்டுக் கொண்டிருக்க, அகிலின் மனது தாங்கவில்லை.
அவளின் அறைக் கதவை தட்டியவன் காத்திருக்க தன்னை திடப்படுத்திக் கொண்டு கதவை திறந்தவளின் முகத்தைப் பார்த்து அவளிடம் நெருங்கியவன் கனிவோடு,
"கனிகா, மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காத... உன் மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்... இப்படி அழுது உடம்பை கெடுத்துக்காத...."
"நல்லதாகவே நடக்குமா? எப்படி அத்தான்... முதல்ல அம்மா என்னை விட்டு போனாங்க.... அப்புறம் லவ் பண்றேன்னு மனசில ஆசையும் நம்பிக்கையும் வளர்த்துட்டு கடைசியில அம்போன்னு நட்டாத்துல விட்டுட்டு போனாங்க அவங்க... திரும்ப சந்தேகப் பட்டு நரகத்தில் தள்ளினாங்க... சரி காதலும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு வேலைக்கு போனால் அந்த ஓநாய் என்னை வே...." என்றவள் சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டு தலை குனிய,
அதிர்ந்த அகில் அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி அவள் கண்களைக் கூர்ந்துப் பார்த்தவன்,
"கனிகா... யாரந்த ஓநாய்? என்ன நடந்தது" என்று சீற்றத்துடன் ஆனால் சன்னமான குரலில் கேட்க,
கலங்கியவள் திக்கி திணறி நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்...
கேட்டுக் கொண்டிருந்த அகிலின் முக மாறுதல்களை கவனித்தவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
"அத்தான்... ப்ளீஸ்... தயவு செஞ்சு இதப் பத்தி யார்கிட்டேயும் சொல்லாதீங்க... என்னால என்னைய அவன்கிட்ட இருந்து அன்னைக்கு காப்பாத்திக்க முடிஞ்சது... ஆனால் எப்பவும் என்னால முடியுமாங்கிற பயத்தில தான் நான் தற்கொலை முடிவுக்கே போனேன்... அது மட்டுமில்ல... என்னால அவரை...." என்று சிறிதே தயங்கியவள் தலை கவிழ்ந்தவாறே மிகவும் மெல்லிய குரலில்,
"என்னால அவரில்லாமல் இருக்க முடியலை..." என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்,
"அப்போ இப்போ மட்டும் ஏன் ஹர்ஷாவை விட்டு வந்த?" என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் தெரிந்த வலியைத் தன் வலி போல் உணர்ந்தவன் அவளின் தலையைத் தடவி,
"சரி, எதைப் பத்தியும் யோசிக்காத... இதுவரை எப்படியோ... ஆனால் இனி உன் வாழ்க்கை நல்லபடியா தான் இருக்கும்... எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவன் கனிகாவிற்கு தெரியாமல் சுந்தரத்திடமும் சீக்கிரம் அவளின் மனம் மாறிவிடும்.. அவள் கழுத்தில் புத்தம் புதிதாக தொங்குகிறதே தாலி, அது நிச்சயம் தன்னுடைய மாயத்தை செய்துவிடும் என்ற நம்பிக்கையில் விட்டுப்பிடிப்பதே சிறந்தது என்று எடுத்துரைத்தவன் விடை பெற்றான்.
வழியெல்லாம் கனிகா சொன்ன விஷயங்களிலேயே மனம் அலை மோதியது.
திவாகரை அப்படியே விட்டுவைக்க கூடாது என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு இதை ஹர்ஷாவிடம் சொல்லிவிடுவோமா என்று கூட தோன்றியது.
'ஆனால் இன்றைய நிலையில் ஹர்ஷா கனிகாவின் மீது ஏற்கனவே கோபத்தில் இருக்கிறார்.... இப்பொழுது இதைப் பற்றி சொன்னோம் நிச்சயம் அவர் அடுத்த நிமிடமே இங்க இருப்பார்... முதலில் அவர்களுக்குள் பிரச்சனை சரியாகட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்'என்று எண்ணியவன்.
'அந்த திவாகர் கொஞ்சம் பெரிய கைப் போல் தெரிகிறது.... நிச்சயம் போலீஸ் என்று போனால் அது கனிகாவிற்கும் நல்லதல்ல... ஹர்ஷாவிடம் சொல்லி அவனுக்கு ஒரு வழி செய்ய வேண்டும் ஆனால் அதற்கு இது நல்ல சந்தர்ப்பம் இல்லை...' என்று முடிவெடுத்தான்.
சிதம்பரமும் சங்கீதாவும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் வேகத்தை குறைக்காமல் தன் கோபம் முழுவதையும் காரை ஓட்டுவதில் காட்டிய ஹர்ஷா புயல் போல் அதனை செலுத்தினான்.... அவர்கள் இருவருக்கும் தங்கள் மகனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்றே தெரியவில்லை.
வீட்டிற்கு வந்தவன் மாடிக்கு இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறியவன் படீரென்று தன் அறைக் கதவை சாத்தி பொத்தென்று கட்டிலில் அமர்ந்தான்.
இரண்டு கைகளாலும் தலையை தாங்கி பிடித்தவனுக்கு தன் மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை.... இதற்கு மேல் என்ன செய்வது? அவளைக் கைவிடாமல் கல்யாணம் வரை வந்தாகிவிட்டது... இன்னமும் என்ன தான் எதிர்பார்க்கிறாள்? என்று குழும்பியவன் அப்படியே கட்டிலில் சரிந்தான்.
தொடரும்...
அவன் அருகில் சிதம்பரமும் சங்கீதாவும் நிற்க, அங்கு ஒரு அழகான மணமேடை அலங்கரிக்கப்பட்டு ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஏற்பாடாகியிருக்க, நடப்பதை, நடக்க போவதை ஒரு நொடியில் புரிந்து கொண்ட அனைவரும் கனிகாவை திரும்பி பார்க்க, ஸ்தம்பித்து இமைகளை கூட சிமிட்டாமல் நின்றிருந்தவளின் அருகில் அழுத்தமான காலடிகளுடன் வந்தான் ஹர்ஷா.
அவன் அருகில் வரவும் சட்டென்று திரும்பி நடக்க முயன்றவளின் வலக்கரத்தை இறுக்க பற்றியவன், "கனி, உன்னுடன் கொஞ்சம் தனியா பேசணும், வா..." என்றான்.
அவன் தன் கரத்தை இறுக்க பற்றியிருந்த விதத்திலேயே அவள் வராவிட்டால் நடப்பதே வேறு என்ற தொனி தெரிய வேறு வழியில்லாமல் படபடக்கும் இதயத்துடனும் அச்சத்துடனும் அவளை பின் தொடர்ந்தாள்.
அவளைப் பிடித்திருந்த அவளின் கரத்தின் நடுக்கத்தில் அவள் எந்த அளவிற்கு பயந்திருக்கிறாள் என்று உணர்ந்துக் கொண்டவன், 'உன்னோட இந்த பயம் தாண்டி என்னோட பலமே..' என்று மனதிற்கு நினைத்துக் கொண்டு புன்முறுவல் பூத்தவன் யாரும் இல்லாத அந்த வெற்றிடத்திற்கு வந்ததும் அவள் கையில் தான் வைத்திருந்த ஒரு பையை நீட்டினான்.
என்ன என்று விழித்தவளை கண்டு சிரித்தவன்,
"இதில் சில்க் ஸாரி, ஜ்வெல்ஸ் எல்லாம் இருக்கு... போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா..." என்றான்.
திடுக்கென்று இருக்க அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு எத்தனை எத்தனை முறை தன் இதயம் அடிபட்டு வலியால் துடிக்கிறது, அதன் வலியை இவர் உணரவே மாட்டாரா? அல்ல உணர்ந்தும் திருந்தவில்லையா? என்பது போல் இருக்க மனம் அதீத சோர்வடைந்தது.
.
இருந்தும் இத்திருமணத்தை நடத்த விடக்கூடாது என்று முடிவெடுத்தவள் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "எதற்கு?" என்றாள்.
"ம்ம்ம்ம், இன்னைக்கு நமக்கு கல்யாணம்... போ, எதுவும் கேள்வி கேட்டுட்டு இருக்காம போய் சொன்னதை செய்..."
"இல்லை, எனக்கு இதில் சம்மதம் இல்லை... நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேன் இல்லை, நீங்க வேற ஒரு பொண்ண..." என்று முடிக்கவில்லை, அவளை பிடித்திருந்த கரத்தை சுண்டி இழுக்க அவன் மேல் மோதி தடுமாறியவள் அவன் சட்டையை பிடித்து தன்னை நிலைக்கு கொண்டு வந்தவள் அவன் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தை பார்த்து குலை நடுங்கி போனாள்.
"கனி, இன்னொரு தடவை வேற பொண்ணு அப்படி இப்படின்னு பேசினா அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.... இங்க பாரு.. ஏற்கனவே உங்க அப்பாக்கிட்ட பேசியாச்சு, எல்லாரும் தெரிஞ்சு தான் இங்க வந்திருக்காங்க... இன்னக்கு நமக்கு கல்யாணம்... நான் உயிரோடு இருக்கும் வரை இனி நீ என் கூடத் தான் இருக்கணும்.. என்னோட மனைவியா... உன்னை முதன் முதலா பார்த்த அன்னைக்கே எனக்கு நானே சத்தியம் பண்ணிக்கிட்டேன், வாழ்ந்தால் உன் கூடத் தான் வாழணும்னு... இப்பவும் அந்த சத்தியத்தை காப்பாத்தத் தான் இவ்வளவு போராடிக்கிட்டு இருக்கேன்... எல்லோருக்கும் முன்னாடி என்னையும் நம் குடும்பத்தையும் அவமானப்படுத்திவிடாத...." என்றவன் அவளை மேலும் இறுக்கி,
"உனக்கு என்னோட பிடிவாதம் நல்லா தெரியும்... நீ இப்போ இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கலைன்னா இங்க என்ன நடக்கும்னு என்னால சொல்ல முடியாது..." என்று ஒவ்வொரு வார்த்தையாகக் கடித்து துப்பியவன் அவளின் கைகளில் பையை திணிக்க, ஏற்கனவே சிவந்த அவன் முகம் கோபத்தில் இன்னும் சிவந்திருப்பதைக் கண்டு நடுங்கியவள் சிலையாக நிற்க, எரிச்சல் அடைந்தவன் வேறு வழியில்லாமல் அகிலின் அலைபேசிக்கு அழைத்தான்.
அவர்களிடம் வந்த அகிலிற்கு அவர்கள் நின்றிருந்த விதமே சூழ்நிலையை விளக்கியது.
அவனுக்கு கனிகாவின் மன நிலையும் புரியும், ஹர்ஷாவின் நிலமையும் புரியும்... ஆனால் ஹர்ஷா இல்லை எனில் இவளுக்கு வாழ்க்கை இல்லை... நிச்சயம் ஹர்ஷாவை மறந்துவிட்டு இவளால் வாழ முடியாது.
அதனை இந்த மூன்று வருடங்களில் கண்கூடாகப் பார்த்தவனாயிற்றே.
அதே சமயம் ஹர்ஷாவின் பிடிவாத குணமும், ஆளுமையும் இன்னொரு ஏமாற்றத்தை தாங்கி கொள்ளாது... ஒரு வேளை இவள் சம்மதிக்காத கோபத்தில் இவளை விட்டு மீண்டும் தூர சென்று விட்டால் இவளின் நிலைமை.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் இன்று திருமணம் நடக்காவிட்டால் அது கனிகாவிற்கு ஒரு பெரும் இழப்பை கொண்டு வரும் என்று தவித்தான்.
இவர்களின் காதல் விளையாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு சிக்கலிலும் இவர்கள் அறியாமல் இவனையும் இழுத்து விட்டு விதி வேடிக்கை பார்க்கின்றதே.
இனியும் அவனால் கனிகா படும் துன்பத்தை பார்க்க முடியாது.. ஒரு முடிவோடும் அதே சமயம் கனிவுடன் கனிகாவை நோக்கிய அகில்.
"கனிகா, உனக்கு இது அதிர்ச்சியா தான் இருக்கும்னு எனக்கு தெரியும்... ஆனால் உன்னோட நிலைமையை மட்டும் நினைச்சுக்கிட்டு முடியாதுன்னு சொல்லிடாத... எங்களை எல்லாம் பாரு... உங்க அம்மா இருந்தவரை உன் அப்பா எப்படி இருந்தார்னு உனக்கு தெரியும், ஆனால் அவங்க இறந்த பிறகு அவரு தான் குடிக்கறதையே விட்டுட்டு நீ மட்டும் தான் உலகம்னு மாறிட்டார்... நீ தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்சப்ப அவரு எனக்கு தான் ஃபோன் பண்ணினாரு... அப்போ அவரு எவ்வளவு துடிச்சு போனாரு தெரியுமா..."
"உன் மனசில் என்ன இருக்குன்னே தெரிஞ்சுக்க முடியாம அவரு தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும்... இப்போ உனக்கும் ஹர்ஷாவிற்கும் கல்யாணம் அரேஞ்ச் பண்ணிருக்கோம்னு சொன்னவுடனே அவருக்கு அவ்வளவு நிம்மதி... ப்ளீஸ் கனிகா அவரையும் நினைச்சு பாரு... ஹர்ஷாவோட பேரெண்ட்ஸையும் நினைச்சு பாரு... அங்க எல்லோரும் உன் ஒருத்தியோட முடிவுக்காக ஆவலோடு காத்துட்டுருக்காங்க... ஏமாத்திடாத... ஹர்ஷா உன்னை நிச்சயம் நல்லா பார்த்துக்குவாரு... புரிஞ்சுக்கோ.... போய் ட்ரெஸ் மாத்திட்டு வா..." என்றான்.
அகிலின் ஒவ்வொரு சொல்லும் அவளை வேரோடு சாய்த்தது... மனதில் இருந்த ஏமாற்றம், ஏக்கம், தன் சுயமரியாதை தவிடு பொடியாகிறதே என்ற தவிப்பு, தன்னை இன்னும் ஒருவரும் புரிந்துக் கொள்ளவில்லையே என்ற கழிவிரக்கம், என்று அத்தனை வலிகளுக்கும் இலக்காகித் துடித்த தன் மனதின் ரணத்தை கண்களில் கொண்டு வந்தவள், கலங்கிய விழிகளோடு,
"நீங்களுமா அத்தான்?" என்றாள்.
பிரளயம் வந்தது போல் வெடிக்கும் இதயத்துடன், பொங்கிப் பெருகிய கண்ணீருடன், வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில், மிக மிக தாளாமாட்டாத சமயங்களில், தன்னால் இனி செய்ய கூடியது ஒன்றும் இல்லை என்பது போன்ற நேரங்களில், தோன்றுமே ஒரு பரிதவிப்பு.
அதே தவிப்புடன் ஹர்ஷாவை திரும்பி பார்த்தவள், நீங்கள் இன்னும் என்னை புரிந்துக் கொள்ளவில்லை என்பதுப் போல் அவன் கரத்திலிருந்த பையை வாங்கியவள் புடவை மாற்ற சென்றாள்.
அவளின் கலங்கிய தோற்றம் ஹர்ஷாவிற்கு அவள் மேல் கனிவை வர வழைத்தது என்றாலும் அவளை இதற்கு மேல் தனித்து விட அவன் விரும்பவில்லை.
அவளை மருத்துவமனையில் பார்த்த அந்த நிமிடங்கள் மீண்டும் அலை அலையாக மனக்கண்களின் முன் வந்து போனது... வேரொடிந்த கிளை போல் அவனின் கனி கிடந்த நிலை இன்னும் அவன் இதயத்தில் இரத்தத்தை கசிய வைத்துக் கொண்டிருந்தது.
அவள் வரவிற்காக முழுக்க முழுக்க காதலை மட்டுமே சுமந்த உள்ளத்துடன் காத்திருந்தான் அந்த இளம் காதலன்.
அருகில் இருந்த அறைக்கு சென்று புடவை மாற்ற ஆரம்பித்தவளின் மனம் முழுக்க குழப்பமும் கலக்கமும்... தான் என்ன நினைக்கின்றோம்? என்ன செய்கின்றோம்? என்று கூட அவளுக்கு புரியவில்லை.
'எப்பவும் அவர் விருப்பம் தான் நிறைவேற வேண்டுமா? எனக்கென்று ஒரு மனம் இல்லையா?' என்று மனம் கலங்கினாலும் கை அதன் போக்கில் தன் வேலையை செய்தது.
பட்டு புடவையைக் கட்டியவள் அவன் கொடுத்த நகைகளை அணியாமல் வெளியே வர, அது வரை அவள் மீண்டும் ஏதாவது பிரச்சனை செய்தால் என்ன செய்வது என்ற கலக்கத்துடன் காத்திருந்த ஹர்ஷாவின் இதயம், சிலை போல் வெளியில் வந்த தன்னவளை கண்டதும் தடுமாற ஆரம்பித்தது.
அவளின் அருகில் வேகமாக வந்தவன் அவள் நகைகளை அணியாமல் இருப்பதை பார்த்து நகை பெட்டகத்தை தன் கையில் வாங்கியவன் அதில் இருந்த வைர நெக்லஸை எடுத்து அணிவிக்க முயற்சிக்க, "எ..எ...எனக்கு இதெல்லாம் வே....வேண்டாம்..." என்று தடுமாறியவாறே மறுத்தாள்.
"உனக்கு பிடிக்கலைன்னாலும் எனக்காக நீ போட்டு தான் ஆகணும்..."
"அப்போ எனக்குன்னு எதுவும் விருப்பு வெறுப்பு இருக்க கூடாதா?....உங்களுக்கு பிடிச்ச மாதிரி, நீங்க சொல்ற மாதிரி தான் எல்லாம் நடக்கணுமா?"
கண்களில் நீர் சூழ்ந்திருக்க கேட்டவளின் முகத்தை உற்று நோக்கியவன் ஒன்றும் பேசாமல் அழகாக பின்னி மல்லிகை சரத்தை சூடியிருந்த சடையை முன் விட்டு நெக்லஸை போட ஆரம்பித்தான்.
மீதம் இருந்த நகைகளை கைகளில் கொடுத்தவன் "சீக்கிரம் போட்டுட்டு வா... முகூர்த்த நேரம் தாண்டிட போகுது..." என்றவன் அவள் நகைகளை போட்டு முடிக்கும் வரை அங்கிருந்து நகரவில்லை.
ஒரு வழியாக அவள் தயாரானதும் கரம் பற்றி அழைத்து வந்தான் மணமேடையை நோக்கி.
மௌனமாக தலை கவிழ்ந்து நடந்து வந்தவளுக்கு தன் நிலை புரிந்து கொள்ள இயலவில்லை... முழு மனதோடு இந்த திருமணத்திற்கு நான் சம்மதம் தெரிவிக்கவில்லை, ஆனால் அவர் அழைத்ததும் எதிர்ப்பை தெரிவிக்காமல் அவருடன் சேர்ந்து இதோ மணவறை வரை வந்துவிட்டேன்.
எத்தனை முறை வலிக்க வலிக்க தன் இதயம் அடிபட்டும், இத்தனை கசப்பான நிகழ்ச்சிகள் நடந்ததற்கு பிறகும், காந்தத்தைக் கண்ட இரும்பு துண்டு போல் மனம் தன்னை அறியாமல் இவரிடமே தஞ்சம் அடைய விரும்புகிறதே என்று தன் மேலேயே கோபம் வந்தது.
பொங்கி பெருகிய கண்ணீருடன், மருண்டு கலங்கிய மனதுடன், மனம் குமுற தலை குனிந்து நடந்து வந்துக் கொண்டு இருந்தவளுக்கு தன் இதயத்தின் ஆழத்தில் பொதிந்து இருந்த ஹர்ஷாவின் மீதான காதல் "அவன் தனக்கு வேண்டும்" என்று அரற்றி கொண்டு இருந்த போதிலும், தன் மானத்தை சந்தேகித்தவரிடம் தன் வாழ்க்கையை பணயம் வைப்பதில் பெருத்த தடுமாற்றமும் இருந்தது.
அவளை மணவறையில் அமர சொன்ன ஐய்யர் மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்க, அதன் பின் காரியங்கள் மளமளவென்று நடந்தேறியது.
"கெட்டி மேளம்...கெட்டி மேளம்..." என்று ஐய்யர் குரல் கொடுக்க, நாதஸ்வரம் மங்கள இசையை முழங்க, ஹர்ஷா மங்கல நாணை தன்னவளின் கழுத்தில் அணிவித்து அவளுக்கும் தனக்கும் பிரிக்க முடியாத பந்ததை உறுதி செய்தவன் அவள் காதிற்கருகில் குனிந்து,
"நான் மூணு வருஷத்திற்கு முன்னாடி சொன்ன மாதிரி நீ எனக்கு தான்....எனக்கு மட்டும் தான்....அது உனக்கு பிடிச்சாலும் சரி பிடிக்கவில்லை என்றாலும் சரி..." என்றான் அக்கறையும் பெருமையும் நிறைந்த குரலில்.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தவளை பார்த்து கண்ணடித்தவன் அகிலை பார்த்து தன் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, அன்று கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் தன்னிடம் அவன் சொன்ன வார்த்தைகள் அலை போல் மனதில் அடித்து ஓய்ந்தது கனிகாவிற்கு.
"ஃப்ரம் டுடே....அதாவது இன்றையில் இருந்து, நீ, நான் சொல்றத மட்டும் தான் கேட்கணும்.. நான் சொல்றத மட்டும் தான் செய்யணும்.. மத்தவங்க சொல்றத இல்லை..." என்ற வார்த்தைகள்.... தலை கவிழ்ந்து பார்த்தவளின் கண்களில் பளீரென்று பட்டது புத்தம் புது மஞ்சள் கயிறில் கோர்க்க பட்டிருந்த தாலி.
சடங்குகள் முடிந்ததும் மணமக்கள் ஹர்ஷாவின் பெற்றோரிடமும், சுந்தரத்திடமும், கணேசன் மாலதியிடமும் ஆசிர்வாதம் பெற ஹர்ஷாவைக் கட்டி அணைத்துக் கொண்டான் அகில்.
அவனுக்கு கனிகாவின் இன்றைய மன நிலை புரியும், ஆனால் இனியும் கனிகாவின் வாழ்கையில் காயங்கள் வரக் கூடாது... அந்த ஒரே நினைவில் ஹர்ஷாவின் இந்த முடிவை ஏற்றுக் கொண்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும்.
நிகிலா கனிகாவின் அருகிலேயே நின்றவள் "கனிகா, ஏன்டி, இத்தனை அழகானவரையே நீ வேண்டாம் என்று சொன்ன?" என்று விழி அகல கிசுகிசுப்பாக கேட்க, அகிலிடம் மனதில் உள்ளவற்றை பகிர்ந்துக் கொள்வது போல் நிகிலாவிடம் அவ்வளவாக எதுவும் கனிகா சொல்ல விரும்பியது கிடையாது.
ஏனெனில் நிகிலாவால் மனதிற்குள் எதையும் வைத்துக் கொள்ள முடியாது.... லொடலொடவென்று எல்லாவற்றையும் மாலதியிடம் சொல்லிவிடுபவள்.... ஆதலால் நடந்த சம்பவங்கள் எதுவுமே அவளுக்கு தெரியாது... அதனால் தான் ஹர்ஷாவை பற்றி புரிந்துக் கொள்ளாமல் பேசுகிறாள் என்று நினைத்த கனிகா அவளை பார்த்து ஒரு புன்னகை மட்டும் சிந்தினாள்.
பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்த ஹர்ஷா தன் மனையாளை திரும்பி பார்த்தவன் அவளை நோக்கி நடந்து வர, அவர்களுக்கு தனிமை கொடுத்து நிகிலா நகர்ந்தாள்.
அகலக் கரையிட்ட அரக்கு நிற தங்க சரிகையிட்ட காஞ்சிபுரத்து பட்டு புடவையில், கால் விரல்களில் வெள்ளி மெட்டியும், கழுத்தில் ரோஜாப்பூ மாலையும், வைர நகைகளுடன் மஞ்சள் நூலில் கோர்க்கப்பட்ட தங்க தாலி மின்ன, தலை நிறைய மல்லிகைப் பூவும், நெற்றியில் வட்டக் குங்குமப் பொட்டும், உச்சி வகிட்டில் ஹர்ஷா இட்ட குங்குமமும் மிளிர, தேவதையென தெரிந்த தன் மனையாளின் மேல் காதல் பெருக அவள் அருகில் சென்றவன் அவள் விரல்களுக்குள் தன் விரல்களை நுழைத்தான்.
அவனின் திடீர் செய்கையால் நிலை குலைந்தவள் அவன் கரத்தில் இருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ள போராட ஆனால் அவன் விட்டால் தானே.
மேலும் விரல்களில் அழுத்தத்தை கூட்ட வலியினால் முகம் சுண்டியவள் அவன் முகத்தை அண்ணாந்து பார்க்க, அவளை நோக்கியவன் குனிந்து.
"இனி எப்போதும் என் கைக்குள்ள தான் நீ இருக்கணும்..." என்றான், சிரித்த முகத்துடன் ஆனால் கைகளில் உடும்பின் பிடியுடன்.
அவனின் பிடியில் இருந்து விலக முடியாமல் பலி ஆடு போல் நின்றிருந்தவள் அவனை மருண்ட மானின் மிரட்சியுடன் பார்க்க, கண்களை இமைக்காது அவளின் விழிகளுக்கு ஊடுருவது போல் பார்த்தவனின் பார்வையில் தெரிந்த ஒளி இனி அவனிடம் இருந்த தான் விலகுவது சாத்தியமற்றது என்பதை அவளுக்கு அப்பட்டமாக உணர்த்தியது.
அவளின் கலக்கத்தை உணர்ந்தவன் போல் மீண்டும் அவள் முகத்தின் அருகே குனிந்தவன், மென் குரலில் மெல்லிய சிரிப்புடன் "கனி, இந்த ஜென்மம் மட்டும் இல்லை இனி நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு தான், எனக்கு மட்டும் தான்" என்றவனின் பார்வை அவளை அடைந்துவிட்ட இறுமாப்புடன் மனைவி என்ற உரிமையில் அவள் மேல் மேய, அவன் கிறக்கமான குரலிலும், தாபம் வழியும் பார்வையிலும் சட்டென் முகம் கறுத்தவள் அவனிடம் இருந்து திரும்பி வேறு புறம் பார்த்தாள்.
அவளின் செய்கையில் சிரித்துக் கொண்டவனின் பிடி மேலும் இறுகியது.. இரும்புப்பிடியாக.
திருமணம் முடிந்ததும் அருகில் இருந்த ஹோட்டலில் உணவு அருந்துவது என்றும், மதிய உணவு முடிந்ததும் மணமக்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வது என்றும் முடிவெடுத்த போது தான் அது வரை அமைதியாக அவனின் பிடியில் இருந்த கனிகா மெதுவாக பேச்சை எடுத்தாள்.
"அப்பா, நாம நம்ம வீட்டிற்கு போலாம்பா.."
அதிர்ந்த ஹர்ஷா திடுக்கிட்டு அவளை திரும்பி பார்த்திருக்க "என்ன கண்ணம்மா, இப்போ தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு, மாப்பிள்ளை வீட்டிற்கு போவது தானே முறை" என்றார் சுந்தரம்.
"இல்லைப்பா, ப்ளீஸ் பா, நம்ம வீட்டிற்கு போலாம்பா.... என்னோட கல்யாணத்தை தான் யாரும் என் கிட்ட பேசாம நடத்திட்டீங்க, இதுவாவது என் இஷ்டம் போல் செய்ங்க அப்பா...." என்றவள் கணவனின் விரல்களில் இருந்து மெல்ல தன் விரல்களை பிரித்தெடுத்தவள் அவனை விட்டு நன்றாகவே நகர்ந்து நிற்க, சுற்றியிருந்த அனைவரின் பார்வையும் தங்கள் மேல் இருந்ததால் ஹர்ஷாவால் அவள் விலகலை தடுக்க முடியவில்லை.
அவளின் அருகில் வந்த சங்கீதா அவள் கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டு,
"கனிகா, உனக்கு எங்க எல்லார் மேலேயும் கோபம் இருக்குதுன்னு தெரியுது... எங்க மேல் எந்த தப்பு இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்... ஆனால் இப்போ கல்யாணம் ஆச்சுடா... இனி நீ ஹர்ஷாவோடு இருக்கறது தான் முறை..." என்றார்.
அவர் மன்னிப்பு என்றதும் அவரை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்து நிற்காமல் நீர் அலை கடலென வழிந்தோடியது...
இருந்தும் தவிப்புடன், "இல்லை, நான் வரலை... நான் எங்க வீட்டிற்கு போறேன்..." என்று மீண்டும் கிளிப்பிள்ளை சொல்வது போல் சொல்ல, ஹர்ஷாவின் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.
"சை" என்று சலித்துக் கொண்டவன் அவள் அருகில் வந்து,
"என்னை ஏன்டி இப்படி பழிவாங்கிற? இன்னமும் ஏன் இந்த பிடிவாதம்? உங்க வீட்டிற்கு நீ தனியா போறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஏற்பாடெல்லாம் செஞ்சேன்..." என்று கத்த ஆரம்பிக்க சூழ்நிலை புரிந்து சிதம்பரம் முன் வந்தார்.
"ஹர்ஷா, ப்ளீஸ் பீ கொயட்.... கனிகாவோட மனச எனக்கு நல்ல புரிஞ்சுக்க முடியுது... நீயும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பா... உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.... இனி அதை யாரும் மாத்த முடியாது... லெட் ஹர் டேக் ஹெர் ஓன் டைம் [Let her take her own time] அவங்க வீட்டிற்கு போகட்டும்... கொஞ்ச நாளில எல்லாம் சரியாகிவிடும்....".
அவரை கண்களில் வலியோடு பார்த்தவன் கனிகாவை திரும்பியும் பார்க்காமல் தங்கள் கார் நிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி ஆக்ரோஷமாக விருட்டென்று செல்ல, பெரியவர்களுக்கும், அகிலிற்கும் இவர்களை எப்படி சேர்த்து வைப்பது என்று மலைப்பாக இருந்தது.
ஹர்ஷா அந்த இடத்தை விட்டு நகர்ந்ததுமே அவன் கொடுத்த வைர நகைகளை கழட்டியவள் சங்கீதாவிடம் கொடுத்து,
"அத்தை, எங்க வீட்டில் இவ்வளவு விலை உயர்ந்த நகைகளை வைத்திருக்க முடியாது... இத தயவு செஞ்சு நீங்களே எடுத்து போங்க..." என்றாள்.
அவள் நகைகளை கழட்டும் பொழுதே சங்கீதாவின் முகம் சுருங்கியது, இருந்தும் ஒன்றும் சொல்லாமல் எப்படியும் தங்கள் மகன் அவன் மனைவியின் மனதை மாற்றி அவளை தன் வழிக்கு கொண்டு வருவான் என்ற நம்பிக்கையில் நகைகளை வாங்கியவர்,
"நீ கூடிய சீக்கிரம் எங்க வீட்டிற்கு வரனும் கனிகா... நாங்க அந்த நாளை ஆவலாக எதிர்பார்த்திட்டு இருப்போம்..." என்றவர் மனம் கனக்க அவ்விடத்தில் இருந்து கிளம்பினார்.
அவரை தொடர்ந்து வந்த சிதம்பரம், சங்கீதாவிடம் கனிகா நகைகளை திருப்பி கொடுத்ததை ஹர்ஷாவிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே கோபத்தில் வெடித்துக் கொண்டு இருப்பவன் இப்பொழுது இது வேறு தெரிந்தால் ஆத்திரத்தில் என்ன செய்வான் என்று யாருக்கும் தெரியாது.... அது நிச்சயம் கனிகாவின் மீது தான் பாயும்.
அவர்கள் கிளம்பியதும் கணேசனிடம் வந்த கனிகா,
"மாமா, நீங்க எல்லோரும் கிளம்புங்க, நானும் அப்பாவும் பஸ் பிடிச்சு எங்க ஊருக்கு போறோம்..." என்றாள்.
அவளின் பேச்சில் கொந்தளித்து போனார் கணேசன்.
"என்ன கனிகா, இவ்வளவு பிடிவாதம் எதற்கு? அவங்க முன்னாடி உன்னை ஒண்ணும் பேசக் கூடாதுன்னு தான் பேசாமல் இருந்துட்டேன்.... நீ பண்றது ரொம்ப தப்பும்மா, மாப்பிள்ளை எவ்வளவு கோபத்தில் போயிருக்கிறார் பார்த்தியா? உன் மாமியார் எவ்வளவு நல்லவங்க பாத்தியா? உன் கிட்ட வயசு வித்தியாசம் பார்க்காம மன்னிப்பு கேட்கிறாங்க.... ஆனால் நீ அதைக்கூட கொஞ்சமும் பொருட்படுத்தாம சொன்னதையே சொல்லிட்டு இருக்கிற.... இப்ப என்னடான்னா எங்களையும் அனுப்ப பார்க்கிற.... நீ ரொம்ப சின்ன பொண்ணும்மா, உங்க இரண்டு பேருக்குள்ள என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெளிவா தெரியாது.... ஆனால் என்னமோ அவங்களை பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியா தெரியாது... எது செஞ்சாலும் யோசிச்சு செய்மா... இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு எல்லாத்தையும் நீயே முடிவு செய்யாத...." என்று முடித்துக் கொண்டார்.
ஏனெனில் அன்று மருத்துவமனையில் ஹர்ஷா தன் பெற்றோருடன் வந்த பொழுது மாலதியும், கணேசனும் மருத்துவமனை கேண்டினுக்கு சென்று இருந்தனர்... அகிலும், கணேசனிடம் இலைமறைவு காயாகத் தான் ஹர்ஷாவிற்கும் கனிகாவிற்கும் இடையில் நடந்ததை சொல்லியிருந்தான்.
அகில் அவரை சமாதானப்படுத்தும் விதமாக,
"அப்பா, நீங்க எல்லோரும் நம்ம காரில் ஊருக்கு போங்க, நான் கனிகாவோடும் மாமாவோடும் அவங்க ஊருக்கு போய் அவங்களை விட்டுவிட்டு வந்திடறேன்..."
"ஏன் அகில், எல்லோரும் ஒண்ணா நம்ம வீட்டிற்கு போகலாம், அப்புறம் அவங்க இரண்டு பேரும் ஒரு இரண்டு நாள் கழிச்சு வேப்பங்குடிக்கு போகட்டும்..."
கணேசனுக்கு இந்த இரண்டு நாட்களில் எப்படியும் கனிகாவின் மனதை மாற்ற முடியாதா என்று இருந்தது...
ஆனால் கனிகாவிற்கு சென்னையில் இருப்பதற்கே மனம் ஒப்பவில்லை.
"இல்லை மாமா, ப்ளீஸ், நாங்க வேப்பங்குடிக்கு போறோம்..." என்று கனிகா சொல்ல, அவருக்கு இதற்கு மேல் அவள் தலை விதி என்றே தோன்றியது.
கணேசனும் மாலதியும் நிகிலாவுடன் கிளம்ப, அகில் கனிகாவையும் சுந்தரத்தையும் வாடகை டாக்சியில் அழைத்துக் கொண்டு வேப்பங்குடிக்கு புறப்பட்டான்.
பயணம் அமைதியாகக் கழிய ஒரு இடத்தில் காபி அருந்துவதற்காக காரை நிறுத்தினர்.... ஓட்டுனர் அந்தப் பக்கம் சென்றதும் அது வரை பொறுத்திருந்த அகில் அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல் கனிகாவிடம் பொரிய ஆரம்பித்தான்.
"ஏன் கனிகா, இன்னும் மனசுக்குள்ள இவ்வளவு கோபத்தை வச்சிருக்க... ஹர்ஷா எவ்வளவோ ட்ரை பண்றாரு உன் மனசை மாத்த, ஆனால் நீ கொஞ்சம் கூட பிடி கொடுக்காமல் இருக்க, இது தப்பு கனிகா...."
"எது தப்பு அத்தான்? அத்தான் உங்களுக்கு தெரியும் அவரோட குணம் பத்தி... அது மட்டும் இல்லை... நான் அவரோட ஒரு வருஷம்...." என்று தயங்கியவள் தந்தையைப் பார்க்க அவரும் யோசனையுடன் அவளையே பார்த்திருந்தார்.... இருந்தும் தான் பேச வேண்டியது அவசியம் என்று தொடர்ந்தாள்.
"அவரோட கிட்டதட்ட ஒரு வருஷம் பழகியிருக்கேன்.... அவரைப் பார்த்தால் எனக்கு பயமாத் தான் அத்தான் இருக்கும்... அவருக்கு என் மேல ரொம்ப பிரியம் தான், இல்லைன்னு சொல்லலை... ஆனால் அதே சமயம் என் கூட அத்தனை நாட்கள் பழகியும் என்னை பத்தி நல்லா தெரிஞ்சு இருந்தும் ஒரு சின்ன விஷயத்திற்காக அவர் என் மேல் கோபப்பட்டு வெளிநாட்டிற்கு போய் ஆறு மாசம் வரை பேசாமல் இருந்தார்... சரி எப்படியும் அவர் கோபம் தணியும்னு நினைச்சிட்டு இருந்த சமயம் யாரோ ஏதோ ஒரு ஃபோட்டோவை அனுப்பியதை பார்த்து என்னை கொஞ்சம் கூட நம்பாம என்னைக் கேட்கக்கூடாத கேள்விகள் எல்லாம் கேட்டு என் இதயத்தையே மரத்து போக வச்சிட்டார்....."
"எப்படி அவ்வளவு நாள் பழகியும் ஒரு பொண்ணு மேல கொஞ்சம் கூட நம்பிக்கை வராமல் அப்படி சந்தேகம் பட முடியும்? சரி பேசிட்டார், அது போகட்டும்... ஆனால் அதுக்கப்புறமாவது என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கலாம் இல்லையா? ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமா தரக்குறைவா பேசிட்டோமேன்னு அவருக்கு கொஞ்சமாவது வருத்தம் இருந்திருந்தா என்கிட்ட ஒரு வார்த்தையாவது அதுக்கப்புறம் பேசியிருக்கலா மில்லையா?? இரண்டு வருஷம் நான் எப்படி இருக்கேன், இருக்கேனா? செத்துட்டேனான்னு கூட தெரிஞ்சுக்க விரும்பலை...".
பொங்கி வந்த கேவலை தொண்டைக்குள்ளே அடக்கியவள் "நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டேன்னு தெரிஞ்சவுடனே ஓடி வந்தாரே.... ஏன்? அப்ப புரிஞ்சிருக்கும்... இவ தப்பானவ இல்லைன்னு... ஒரு வேளை நான் தற்கொலை முயற்சி செய்யாம இப்படியே இருந்திருந்தா அவர் என்னை எட்டி கூட பார்த்திருக்க மாட்டாரு அத்தான்.... ஆக என்னை நிரூபிக்க நான் தற்கொலை செய்யணுமா? கொஞ்ச நாள் பழகினாலே ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்க முடியாதா?" என்று கதறியவள்,
"வேண்டாம் அத்தான்.... எனக்கு அவரு வேண்டாம்... நீங்க எல்லாம் அவரு திருந்திட்டாருன்னு சொல்றீங்க... ஆனால் எனக்கு என்னமோ இன்னும் அவரு மேலே நம்பிக்கை வரவில்லை... இப்ப சரின்னு அவரு கூட போய்ட்டேன்னா, அப்புறம் வேற யாராவது, எதையாவது சொன்னால் அதையும் நம்பி என்னை திருப்பி அனுப்பிச்சிருவாரு... அதுக்கு நான் இப்படியே எங்க வீட்டிலேயே இருந்துட்டு போறேன்.... யாரும் என்னை வற்புறுத்தாதீங்க..." என்று ஒரு பெரிய கேவலுடன் முடித்தாள்.
அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்தது...
ஆனால் அதே சமயம் ஹர்ஷா அந்த புகைப்படங்களை கனிகாவிடம் காட்டியதில்லை.
அது எப்படி தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது என்று அவளுக்கு தெரியாது.
அது மட்டும் அல்ல, தான் கனிகாவை காதலிப்பதாக ஒரு காலத்தில் சொன்னதும் ஹர்ஷாவின் மனதில் ஆழ புதைந்து இருக்கிறது, ஆக யாரைக் குறை சொல்வது என்று அகிலுக்கு புரியவில்லை.
அதற்கு பிறகு வீட்டிற்கு வந்து சேரும் வரை சுந்தரமோ அகிலோ அவளிடம் ஹர்ஷாவைப் பற்றி வாய் திறக்காமல் வர, வீட்டை அடைந்தவுடன் தன் அறைக்கு சென்று கதவைச் சாத்தியவளின் அழுகையும் கேவலுமே கேட்டுக் கொண்டிருக்க, அகிலின் மனது தாங்கவில்லை.
அவளின் அறைக் கதவை தட்டியவன் காத்திருக்க தன்னை திடப்படுத்திக் கொண்டு கதவை திறந்தவளின் முகத்தைப் பார்த்து அவளிடம் நெருங்கியவன் கனிவோடு,
"கனிகா, மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காத... உன் மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்... இப்படி அழுது உடம்பை கெடுத்துக்காத...."
"நல்லதாகவே நடக்குமா? எப்படி அத்தான்... முதல்ல அம்மா என்னை விட்டு போனாங்க.... அப்புறம் லவ் பண்றேன்னு மனசில ஆசையும் நம்பிக்கையும் வளர்த்துட்டு கடைசியில அம்போன்னு நட்டாத்துல விட்டுட்டு போனாங்க அவங்க... திரும்ப சந்தேகப் பட்டு நரகத்தில் தள்ளினாங்க... சரி காதலும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு வேலைக்கு போனால் அந்த ஓநாய் என்னை வே...." என்றவள் சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டு தலை குனிய,
அதிர்ந்த அகில் அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி அவள் கண்களைக் கூர்ந்துப் பார்த்தவன்,
"கனிகா... யாரந்த ஓநாய்? என்ன நடந்தது" என்று சீற்றத்துடன் ஆனால் சன்னமான குரலில் கேட்க,
கலங்கியவள் திக்கி திணறி நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்...
கேட்டுக் கொண்டிருந்த அகிலின் முக மாறுதல்களை கவனித்தவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
"அத்தான்... ப்ளீஸ்... தயவு செஞ்சு இதப் பத்தி யார்கிட்டேயும் சொல்லாதீங்க... என்னால என்னைய அவன்கிட்ட இருந்து அன்னைக்கு காப்பாத்திக்க முடிஞ்சது... ஆனால் எப்பவும் என்னால முடியுமாங்கிற பயத்தில தான் நான் தற்கொலை முடிவுக்கே போனேன்... அது மட்டுமில்ல... என்னால அவரை...." என்று சிறிதே தயங்கியவள் தலை கவிழ்ந்தவாறே மிகவும் மெல்லிய குரலில்,
"என்னால அவரில்லாமல் இருக்க முடியலை..." என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்,
"அப்போ இப்போ மட்டும் ஏன் ஹர்ஷாவை விட்டு வந்த?" என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் தெரிந்த வலியைத் தன் வலி போல் உணர்ந்தவன் அவளின் தலையைத் தடவி,
"சரி, எதைப் பத்தியும் யோசிக்காத... இதுவரை எப்படியோ... ஆனால் இனி உன் வாழ்க்கை நல்லபடியா தான் இருக்கும்... எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவன் கனிகாவிற்கு தெரியாமல் சுந்தரத்திடமும் சீக்கிரம் அவளின் மனம் மாறிவிடும்.. அவள் கழுத்தில் புத்தம் புதிதாக தொங்குகிறதே தாலி, அது நிச்சயம் தன்னுடைய மாயத்தை செய்துவிடும் என்ற நம்பிக்கையில் விட்டுப்பிடிப்பதே சிறந்தது என்று எடுத்துரைத்தவன் விடை பெற்றான்.
வழியெல்லாம் கனிகா சொன்ன விஷயங்களிலேயே மனம் அலை மோதியது.
திவாகரை அப்படியே விட்டுவைக்க கூடாது என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு இதை ஹர்ஷாவிடம் சொல்லிவிடுவோமா என்று கூட தோன்றியது.
'ஆனால் இன்றைய நிலையில் ஹர்ஷா கனிகாவின் மீது ஏற்கனவே கோபத்தில் இருக்கிறார்.... இப்பொழுது இதைப் பற்றி சொன்னோம் நிச்சயம் அவர் அடுத்த நிமிடமே இங்க இருப்பார்... முதலில் அவர்களுக்குள் பிரச்சனை சரியாகட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்'என்று எண்ணியவன்.
'அந்த திவாகர் கொஞ்சம் பெரிய கைப் போல் தெரிகிறது.... நிச்சயம் போலீஸ் என்று போனால் அது கனிகாவிற்கும் நல்லதல்ல... ஹர்ஷாவிடம் சொல்லி அவனுக்கு ஒரு வழி செய்ய வேண்டும் ஆனால் அதற்கு இது நல்ல சந்தர்ப்பம் இல்லை...' என்று முடிவெடுத்தான்.
சிதம்பரமும் சங்கீதாவும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் வேகத்தை குறைக்காமல் தன் கோபம் முழுவதையும் காரை ஓட்டுவதில் காட்டிய ஹர்ஷா புயல் போல் அதனை செலுத்தினான்.... அவர்கள் இருவருக்கும் தங்கள் மகனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்றே தெரியவில்லை.
வீட்டிற்கு வந்தவன் மாடிக்கு இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறியவன் படீரென்று தன் அறைக் கதவை சாத்தி பொத்தென்று கட்டிலில் அமர்ந்தான்.
இரண்டு கைகளாலும் தலையை தாங்கி பிடித்தவனுக்கு தன் மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை.... இதற்கு மேல் என்ன செய்வது? அவளைக் கைவிடாமல் கல்யாணம் வரை வந்தாகிவிட்டது... இன்னமும் என்ன தான் எதிர்பார்க்கிறாள்? என்று குழும்பியவன் அப்படியே கட்டிலில் சரிந்தான்.
தொடரும்...