அத்தியாயம் - 12
இதற்கு மேல் தன் கணவனை எதிர்த்து பேசும் தைரியம் திவ்யாவிற்கு இல்லை....
ஒன்றும் பேசாமல் அமைதியாக வந்தவளுக்கு ஒரே குழப்பம் "இப்போ எங்க போகிறோம்? பழைய கடைக்கா? அல்லது வீட்டிற்கா? என்று..
ஏனெனில் என்ன தான் அவள் சென்னைக்குப் புதிது என்றாலும் தன் கணவன் தான் வந்த வழியில் திரும்பி காரை செலுத்தவில்லை என்பது நன்றாகப் புரிந்தது....
"வீட்டிற்கு என்றால் நிச்சயம் அத்தையும் யாரும் வந்திருக்கப் போவதில்லை..... அங்குப் போய் எப்படி இவருடன் தனியாக இருப்பது? ஒரு வேளை சமையல் அறையில் தெய்வானை அக்காவும் அல்லியும் இருந்தால் அவர்களுடன் இருந்து விட வேண்டியது தான்... ஆனால் கார் போகும் வழியைப் பார்த்தால் வீட்டிற்குப் போவது போலும் தெரியவில்லை..... அவர்கள் முன்னர்ச் சென்ற கடைக்குச் செல்வது மாதிரியும் தெரியவில்லை....."
அவளின் முகம் தெளிவில்லாமல் ஏதோ சிந்தனையில் இருப்பதைக் கண்டவனுக்கு அவள் மனதில் ஓடிய எண்ணங்கள் புரிந்து இருந்தது.... இருந்தும் தான் எங்குச் செல்கிறோம் என்று அவன் சொல்லவில்லை...
அவளின் குழப்பத்திற்கு விடை அளிப்பது போலவே அவன் ஒரு புதுச் சாலையில் காரை செலுத்தியவன் சிறிது நேரத்தில் வழியில் மற்றொரு கடை வாயிலில் நிறுத்தினான்.....
அவன் காரை நிறுத்தவும் இங்கு எதற்கு வந்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டே அவனைத் திரும்பி பார்க்க....
சாலையில் கண்களைப் பதித்துக் கொண்டே....
"ஐ ஹாவ் டு கெட் சம்திங்.... பட் ஐ கெனாட் பார்க் தி கார் ஹியர்.... ஐ வி ட்ராப் யூ... கேன் யூ வெயிட் ஃபார் மி அக்ராஸ் தி ரோட்? [I have to get something.... But I cannot park the car here... I will drop you...Can you wait for me across the road?]" என்றவன் அவளைத் திரும்பி பார்க்க, அவன் ஆங்கிலம் புரியாததால் திருதிருவென்று விழித்திருந்தாள் அவனின் அழகிய மனைவி.....
தான் மும்பையில் இருந்து திரும்பி வந்த அன்று ஆங்கிலம் தெரியுமா என்று கேட்க அவள் பட்டென்று தன் படிப்பைப் பற்றிச் சொன்ன நிமிடங்கள் அழகாக விழிகளின் முன் படர....
உதட்டில் வளைந்த சிரிப்பை மிகவும் சிரமப்பட்டுத் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பி அடக்கியவன் மீண்டும் அவள் புறம் திரும்பி....
"எனக்குக் கொஞ்சம் திங்ஸ் வாங்கனும்... ஆனால் இங்க கார் பார்க் பண்ண முடியாது.... நான் பார்க்கிங் லாட்ல கார பார்க் பண்ணிட்டு வரேன்.... அதனால நீ ரோட்ட கிராஸ் பண்ணி அந்தக் கடையில் போய் நில்லு.... நான் வந்திடுறேன்" என்றான்.
"ம்ம்ம்" என்றவள் இறங்க, அவன் காரை நிறுத்தும் இடத்தை நோக்கி வண்டியை செலுத்தினான்...
அவன் சொன்ன கடை சாலைக்கு மறு பக்கம் இருந்தது... அதற்குச் சிறிது தூரம் நடக்க வேண்டும்....
அது மட்டும் அல்லாமல் அது பெரிய பிரதான சாலை என்பதால் கூட்டமாக வேறு இருக்க, இரு பக்கமும் பார்த்துக் கொண்டே நின்றவளுக்கு எப்படி இதைக் கடக்கப் போகிறோம் என்றே கவலையாக இருந்தது...
சில நிமிடங்கள் அப்படியே நிற்க திடீரேன்று மழை வேறு தூர ஆரம்பித்தது....
பேசாமல் இந்தப் பக்கமே ஒரு கடையில் நின்றுக் கொள்வோமா என்று யோசித்தவளுக்கு எதிரே இருக்கும் அந்தக் கடையில் தானே நின்று இருக்கச் சொன்னார்... திரும்பி வந்து நாம் அங்கு இல்லையென்றால் வேறு வினையே வேண்டாம்.....
யோசித்தவள் வேறு வழியில்லாமல் மற்றவர்களுடன் சேர்ந்து சாலையைக் கடக்க அதற்குள் மழை வலுவாகப் பிடிக்க ஆரம்பிக்க விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தாள்...
என்ன தான் வேகமாக நடந்தாலும் சென்னையின் கூட்டத்தில் அவளால் மழை வலுப்பதற்குள் கடையை அடைய முடியவில்லை..
மழையில் முழுவதுமாக நனைந்து விட எதிரே இருந்த கடைக்குள் நுழைந்துக் கொள்ளலாமா என்று நினைத்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் தான் இருந்த நிலையை....
சட்டென்று அடித்த மழையில் அவள் கட்டியிருந்த வெளிர் ரோஜா நிற ஷிஃபான் புடவை ஒட்டுமொத்தமாக நனைந்திருக்க, மெலிதான புடவை அவளின் உடலோடு ஒட்டி அவள் உடலின் அங்கங்களைத் தெளிவாக எடுத்துக்காட்ட அவளுக்கு அந்த நிலமையில் கடைக்குள் செல்வதற்குக் கூச்சமாக இருந்தது...
ஆனால் அதே சமயம் அர்ஜூன் சென்ற திசையும் அவளுக்குப் புலப்படவில்லை....
வேறு வழியில்லாமல் புடவை முந்தானையை எடுத்து தன் மேல் போர்த்திக் கொண்டவள் அந்தக் கடையின் வாசலில் இருந்த கூடாரத்திற்குக் கீழ் மேலும் மழையில் நனையாதபடி நின்றுக் கொண்டாள்....
நின்றவள் சிறிது நேரம் சென்றே கவனித்தாள் அவள் அருகில் கூட்டத்திற்கிடையில் மூன்று வாலிபர்கள் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பதை.....
என்ன தான் தான் புடவையை இழுத்து மூடியிருந்தாலும் மழையில் நனைந்திருந்த மெலிதான ஷிஃபான் புடவை அவளின் இளமையை, அழகிய உடலின் நெளிவு சுளிவுகளை அப்பட்டமாக வெளிக் காட்டத் தவறவில்லை..
திவ்யாவை சாலையில் இறக்கிவிட்ட அர்ஜூன் கார் நிறுத்தும் இடத்திற்குச் செல்ல, பாதி வழியில் மழை வருவதைப் பார்த்து வீட்டிற்குத் திரும்ப நினைத்தவன் காரை திருப்ப எத்தனிக்க அப்பொழுது தான் கவனித்தான் அது ஒரு வழி சாலை என்று..
இப்பொழுது காரை சுற்றி எடுத்து சென்றால் திவ்யா இருக்கும் கடையை அடைய சிறிது நேரம் பிடிக்கும்....
அது வரை அவள் கடையில் தனியே இருக்க வேண்டும் என்று நினைத்தவன் காரை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பிக்க அவன் நல்ல நேரம் மழை நின்றிருந்தது...
சிறிது நேரத்திலேயே திவ்யா இருந்த கடையை அடைந்தவன் அவள் கடைக்குள் செல்லாமல் வாயிலிலேயே நிற்பதைப் பார்த்துக் குழப்பமாக "கடைக்குள் போவது தானே? எதுக்கு இங்கு நிற்கிறாள்"? என்று எண்ணிக் கொண்டே அவளை நோக்கி நடந்தான்...
அர்ஜூன் எந்த வழியில் வருவான் என்று தெரியாமல் திவ்யா அவனைத் தேடி அங்கும் இங்கும் பார்க்க,
அதற்குள் அவளையே வைத்த கண் வாங்காமல் அவளைக் கண்களாலேயே விழுங்கிவிடுவது போல் பார்த்திருந்த அந்த வாலிபர்கள்...
"டேய், அந்தப் பொண்ணு தனியா வரலைப் போல.... யாரையோ தேடுதுடா" என்றார்கள்....
ஏற்கனவே மழையில் நனைந்தது கூச்சமாக இருக்க, இதில் அந்த வாலிபர்களின் கிண்டல் வேறு.....
இதில் தன் கணவன் தன்னை இந்த நிலையில் பார்த்தால் என்ன செய்வது? என்று நினைத்தவளுக்கு அங்கு நின்றுக் கொண்டிருப்பதே நெருப்பில் இருப்பது போல் இருந்தது...
அவளை நீண்ட நேரம் காக்க வைக்காமல் அங்கு வந்த அர்ஜூன் அவளின் நிலையைச் சற்றும் கவனியாமல் "ஏன் உள்ளே போகலை?" என்று கூறியவன் அவள் அருகில் வந்ததும் தான் அவளைக் கவனித்தான்...
"ஷிட்.... அதுக்குள்ள இவ்வளவு நனைஞ்சிட்டியா?" என்றவன்,
"ஓகே... நீ இங்கேயே ஒரே ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு.... நான் இப்போ வந்திடுறேன்" என்று கூறியவன் கடைக்குள் சென்றான்.....
வெகு விரைவிலேயே திரும்பி வந்தவன் மழை மீண்டும் வலுக்க ஆரம்பிக்க,
"மழை திரும்பப் பிடிச்சிட்டது..... நீ ஏற்கனவே ரொம்ப நனைஞ்சிட்ட.... அதனால நீ இங்கேயே இரு,... நான் காரை எடுத்திட்டு வந்திடுறேன்" என்று நகர நினைக்க,
திவ்யா அவளையும் அறியாமல் சட்டென்று அவன் கரத்தைப் பிடித்து இழுத்தாள்...
நகர்ந்தவன் வெடுக்கென்று தன் கை இழுக்கப் பட என்னவென்று அவளைப் திரும்பிப் பார்த்தவன் அவள் பதட்டத்துடன் அவனைப் பார்த்திருக்க,
"என்ன?" என்று புருவத்தை உயர்த்திக் கேட்க அவளுக்கு எவ்வாறு தன் நிலையை எடுத்து சொல்வது என்று தவிப்பாக இருந்தது.....
அவன் அருகில் வந்தவள் கலக்கத்தைச் சுமந்திருந்த முகத்துடன் "நானும் உங்களோடேயே வரேனே" என்றாள்.....
"இந்த மழையிலையா? வேண்டாம்... நான் போய்க் கார எடுத்திட்டு வந்து வந்துடறேன்"
"இல்லைங்க.... அதான் ஏற்கனவே நனைஞ்சிட்டேனே.... அதனால உங்க கூடவே வரேன்"
அர்ஜூனிற்கு இதென்ன பிடிவாதம் என்று சலிப்பாக இருக்க "ம்ப்ச்" என்றவன் அவளின் முகத்தை உற்று நோக்கியவன் அப்பொழுது தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான்....
திவ்யா தன்னருகில் அஞ்சி நடுங்கிக் கொண்டு கோழிக் குஞ்சு போல் ஒன்றிக் கொண்டு இருப்பதை......
அர்ஜுனைக் கண்டாலே பயந்து ஒளிபவள்.... அவனின் கூரிய பார்வையின் வீரியத்தைத் தாங்க இயலாமல் தரையில் தலை புதையும் அளவிற்குக் குனிந்துக் கொள்பவள்...
அவன் அவளருகில் சிறிது நெருங்கினாலே கை கால் என உடல் முழுவதும் உதறல் எடுக்க வெளிப்படையாக நடுங்கி நிற்பவள்...
ஆனால் இன்று அவனுடன் வெகு அருகில் அவன் உடலோடு உடல் உரசும் அளவிற்கு ஒன்றிக் கொண்டு இருப்பது எதனால் என்று குழம்பியவன் அவளைப் பார்க்க, அவளோ தன்னை அறியாமல் லேசாகத் திரும்பி அந்த வாலிபர்களைப் பார்த்தவள் சட்டென்று தலையைக் குனிந்துக் கொண்டாள்...
முதலில் அவள் தனிமையில் சாலையைக் கடந்து வரவும் அவள் தனியாகத் தான் வந்திருப்பாள் என்று நினைத்து அவளைக் கிண்டல் பண்ணிய அந்த வாலிபர்கள் அவள் யாரையோ தேடுவதைப் பார்த்து அவள் யார் கூடவோ வந்திருப்பாள் போல என்று ஊகித்து இருந்தாலும் அவர்களின் வயது அவர்களின் கிண்டலைத் தொடர் செய்தது...
ஆனால் அர்ஜூன் வந்த பிறகு அவன் அவளிடம் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்த பிறகு அவனையும், அவன் உருவத்தையும், அவன் பணக்காரத் தோரணையையும் கண்டவர்கள் சட்டென்று அடங்கித் தான் போனார்கள்..
ஆனால் திவ்யாவிற்கோ எங்கே மீண்டும் தன் கணவன் தன்னைத் தனியே விட்டு சென்றுவிட்டால் அவர்கள் அவளை மறுபடியும் வம்பிழுப்பார்களே என்று பயமாக இருந்தது...
திவ்யா அவனின் கரத்தை இறுக்கி பிடித்தவாறு கலங்கிப் போய் இருக்க, அவளின் தவிப்பையும் கலக்கத்தையும் பார்த்த அர்ஜூன் அப்பொழுது தான் அந்தச் செயலை செய்தான்....
சட்டென்று அவளின் வெற்று இடையில் கை வைத்து அவளைத் தன்னருகில் இழுத்தவன் அவளை இறுக்க அணைத்தவாறே அவள் காதிற்கு அருகில் குனிந்து....
"அவங்களைப் பார்த்தா பயப்படுற... சின்னப் பசங்க... ஜஸ்ட் ஃபார் ஃபன்னுக்குத்தான் செய்றாங்க" என்றவன் அவர்களைத் திரும்பி பார்த்து தன் கூரிய ஈட்டி போன்ற பார்வையை அவர்கள் மேல் வீசவும் தவறவில்லை...
அதில் நடுநடுங்கி போன அந்த வாலிபர்கள் அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த மழையிலும் விட்டால் போதும் என்று அடித்துப் பிடித்துச் சாலையின் மறு பக்கத்தை ஓட்டமும் நடையுமாகக் கடந்து சென்று இருந்தார்கள்...
இங்குத் திவ்யாவின் நிலைமையோ சொற்களுக்கு அப்பார்பட்டதாக இருந்தது....
அது வரை மழையில் நனைந்ததினால் தான் இருந்த நிலைமையினாலும் அந்த வாலிபர்களின் கிண்டலினால் ஏற்பட்ட கூச்சத்தினாலும் தத்தளித்துத் தவித்து இருந்தவளுக்கு அர்ஜுன் அவளை அவ்வாறு இடைப் பிடித்து இழுத்தது வெட்கத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
வெற்று இடுப்பில் அவனது கரம் அழுந்த பட்டதும் திக்கென்று அதிர்ந்து தடுமாறியவளின் இதயம் தடதடக்க, கூச்சத்தில் மெல்ல நெளிந்தவள் அவன் கையைத் தன் இடையில் இருந்து விலக்க முயற்சிக்க அதை உணர்ந்தவன் அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து கையை எடுத்து "சரி வா" என்றான்...
என்ன தான் அந்த வாலிபர்கள் அவன் முறைத்த நிமிடமே அந்த இடத்தைக் காலி செய்திருந்தாலும் இனி அவளை, அதுவும் அந்தக் கோலத்தில் தனித்து விட அவனுக்கு மனம் இல்லை...
இருவரும் வேகமாக நடந்து கார் நிறுத்திய இடத்திற்குச் செல்வதற்குள் அர்ஜூனும் நன்றாக நனைந்து விட்டிருந்தான்..
காரில் ஏறியவன் தன் அன்னையின் அலை பேசிக்கு அழைத்து...
"மாம், இங்க ரொம்ப மழைப் பெய்யுது.... நாங்க இரண்டு பேரும் நனைஞ்சிட்டோம்... அதனால நாங்க வீட்டிற்குப் போகிறோம்" என்றான்...
அவர் சரி என்றவுடன் காரை செலுத்தும் முன் திரும்பி திவ்யாவைப் பார்க்க அவளோ குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.....
அதைக் கவனித்தவன் காரின் ஏஸியை குறைக்க, அதைக் கண்டவள் தன் கணவன் முதல் முறை தன் மேல் கரிசனம் காட்டியதால் பாகாய் உருகியவள் கனிவாய் அவனை நிமிர்ந்து பார்க்க, அதே சமயம் அவனும் திரும்பி பார்க்க, ஏற்கனவே அவனின் தொடுகையில் கரைந்து இருந்தவள் அதற்கு மேலும் தாங்க மாட்டாதவளாய் பார்வையை வெளிப்புறம் திருப்பினாள்....
தன் கணவன் தன்னுடன் இத்தனை நேரம் தனிமையில் இருந்திருக்கிறான்.... முதல் முறையாக அவளிடம் இந்த அளவிற்கு அதுவும் பொறுமையாக, நிதானமாகப் பேசியிருக்கிறான்..
இப்பொழுது அவளுக்காக அவளின் குளிர் அறிந்து பரிவுடன் நடந்து கொள்கிறான் என்று நினைத்தவளுக்கு அவன் அவளை அவனாக முதல் முறை தொட்டிருப்பது நினைவில் வர,
இத்தனை நாள் அவளின் அடி மனதில் அவளையும் அறியாமல் அடங்கி இருந்த காதல் கட்டவிழ்ந்து ஆர்ப்பரித்து மேல் எழும்ப, மதிமயங்கிய உள்ளத்தோடு உணர்ச்சிகள் ஊஞ்சலாட உன்மத்த நிலையில் இருந்த இதயம் தன் தாளத்தை அதிகரித்தது....
அர்ஜூனும் காரை செலுத்திக் கொண்டே அவளைப் பார்க்க, அவள் வெட்கத்தில் செந்தனலாய்ச் சிவந்திருந்த தன் முகத்தை அவனிடம் இருந்து மறைக்க மெல்ல கதவோரமாக ஒண்டி அமர்ந்தவள் ஒன்றும் பேசாது வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வர, அவனுக்கு அந்த நேரம் தன்னவளை ரசிப்பதற்கு ஏதுவாகவே இருந்தது...
மழையில் நனைந்திருந்ததால் மெலிதான வெளிர் நிற ஷிஃபான் புடவை அவளின் இளமை அங்கங்களை வெட்டவெளிச்சமாகக் காட்ட, நீண்ட கூந்தலில் மல்லிகைச் சூடி அதனை அழகாக முன் புறமாக விட்டிருக்க மல்லிகையின் நறுமணம் வேறு அங்கு ஒரு அசாதாரணச் சூழ்நிலையை உருவாக்கியது....
பூவைப் போலவே மிருதுவான கன்னங்கள், கூர்மையான மூக்கில் சிறு ஒற்றைக் கல் மூக்குத்தி, சங்கு கழுத்து, அதற்கும் கீழ் அளவோடு எழுந்திருந்த அவளின் பெண்மையும், மெல்லிய மேலாடை அவள் பெண்மையை மறைக்க முயன்று முடியாமல் அதுவே அவளின் எழில்களின் அழகினை உச்சத்திற்குக் கொண்டு போய் அலங்கரிக்க, அதற்குக் கீழ் குறுகிய இடையும் என்று அவள் உடல் முழுவதும் பருவத்தின் யவனம் விரவி கிடந்தது....
தன்னவளின் உச்சியில் இருந்து இடை வரை அங்குலம் அங்குலமாக ரசிக்க ஆரம்பித்தவன் அவளின் மோகனத்தில் தன்னையும் அறியாமல் தன்னைத் தொலைத்து போக இடை வரை ஊர்ந்த பார்வை அதற்கும் கீழ் என்று இறங்க தன்னிலையை இழுத்து பிடித்து வைத்தவன் "அர்ஜூன் கன்ட்ரோல் யுவர் செல்ஃப் [Arjun, control your self]" என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு தலையை அழுத்தமாகக் கோதி பார்வையை அவளிடமிருந்து வெகு பிரயாசை பட்டே திருப்பினான்...
அவள் தன் மனைவி... அவள் உள்ளத்தில் தன் மீது முதலில் காதல் வர வேண்டும்.... அதற்குப் பின் தான் மனைவி என்ற உரிமையை அவளிடம் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவனின் உறுதி சுக்கு நூறாக உடைய ஆரம்பித்து இருந்தது....
அவனது மனதிற்குள் பெரும் குழப்பம் விளைந்தது... அந்தக் குழப்பம் எதனால் விளைந்தது?
அவளைச் சில நிமிடங்களுக்கு முன் தீண்டியதால் வந்த இன்பத்தினாலா? அல்லது அவள் காதலைச் சொல்லாத பொழுது அவளை எடுத்துக் கொள்ள நினைத்து தறிகெட்டு அலையும் மனதினை அடக்க முடியாமல் வந்த சங்கடத்தினாலா?
தன் அருகில் தன் தேவதை அழகெல்லாம் திரண்டு தனித்து அமர்ந்திருக்க, செயலெதிலும் இறங்காத அவன் சிந்தை வேறு பல விஷயங்களைச் சிந்திக்க ஆரம்பித்தது....
கணவனின் மனதில் தான் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்ற தடுமாற்றத்தை, உணர்ச்சிகளின் கொந்தளிப்பை அறியாமல் அவனை விட்டு முடிந்தவரை தள்ளி அமர்ந்து கொண்டு வந்தவள் ஒரு வேளை தன் கணவன் தான் இருந்த நிலையில் மயங்கி தன்னை ஒவ்வொரு பாகமாக ரசித்துக் கொண்டிருப்பதை அவள் அறிந்திருந்தால் பின்னாளில் வரக் கூடிய பிரச்சனைகளை அவர்கள் தவிர்த்திருப்பார்களோ????
அவர்களுக்கு வரப் போகும் அந்தப் பிரிவும் வராமல் இருந்திருக்குமோ???
வெகு பிரயாசைப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு வந்த அர்ஜூன் அதற்கு மேலும் காரில் இருந்த அந்த நிசப்தத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் மியூஸிக் ஸிஸ்டத்தை உயிர்பித்தவனின் புருவங்கள் தன்னை அறியாமல் ஆச்சரியத்தில் உயர்ந்தது...
சொல்லி வைத்தார் போன்று அவனின் மனதில் மண்டிக்கிடந்த ஆசைகளை, தன் மனைவியிடம் தான் சொல்ல விரும்பும் தன் ஏக்கங்களை அப்படியே எடுத்துரைத்தது போல் இருந்தது அந்தப் பாடல்....
சட்டெனத் தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
இதயம் என்பது எனக்கும் உண்டென
தெரிந்து கொண்டதே உன்னால் தான்
எதையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே
விரும்புகின்றதே நெஞ்சம் தான்
நிழல் மட்டும் தொடர்ந்து வந்த
நிலமை மாறி போனதே
நிஜம் உன்னை நெருங்கி நிற்க
வயது கோலம் போடுதே
இப்படியும் நான் ஆவேனா
மொத்தமும் மாறி போவேனா
கற்பனையும் நான் செய்வேனா
கண்டபடி பொய் சொல்வேனா
யாரை கேட்க, கைகள் கோர்க்க
நீ இல்லாமல் வாழ்வேனா
சட்டெனத் தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
உனது புன்னகை உரசிச் செல்கையில்
உதிருகின்றதே காயங்கள்
உனது மெல்லிய விரல்கள் தொட்டதும்
நிகழுகின்றதே மாயங்கள்
எதைக் கண்டும் பயந்ததில்லை
இதற்கு முன்பு நானுமே
உனை கண்டு பதட்டம் ஒன்று
வருவதென்ன நாளுமே
எத்தனை பெண்கள் நின்றாலும்
என் விழி உன்னைத் தேடுதடி
தந்தது போதும் என்றாலும்
இன்னமும் காதல் கேட்குதடி
அடியே எந்தன் ஆயுள் ரேகை
உந்தன் கைகளில் ஓடுதடி
நீண்ட நேரம் அந்தப் பாடலிலேயே மனம் லயித்து இருந்ததாலும், புத்தியும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததாலும், இருவரும் அவரவர் மன நிலைகளுக்கு ஏற்ப குழப்பத்தில் உழன்று கொண்டு இருந்ததாலும் அவர்களின் வீட்டை வெகு விரைவிலேயே அடைந்திருந்தனர்...
முதலில் வீட்டிற்குள் நுழைந்தவனிற்கு வீட்டில் வேலைக்காரர்கள் முதல் யாரும் இல்லை என்று தெரிய, எதுவும் பேசாமல் சமையல் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டவள் வியந்து போய் அவனிடம் தயங்கிவாறே...
"காபி போட்டுத் தரட்டுமா?" என்றாள்.....
அவளின் மென்மையான குரலில் அவளைத் திரும்பி பார்த்தவனுக்கு அவளை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஒரு நொடி மின்னி மறைய தன்னைக் கட்டுப்படுத்தியவன்...
"இல்ல... நீ போய் முதல்ல ட்ரெஸ்ஸ மாத்து" என்றான்.....
ஏனெனில் அவன் உணர்ச்சிகள் முற்றிவிட்டதால் தன் சுயநிலையை இழந்திருந்தவனுக்கு அடக்கமாட்டாத கிளர்ச்சி இதயத்தில் பாய அவனால் இன்னும் அவளின் அழகிய உடலை ஆசையுடன் சுற்றிக் கிடந்த தன் கண்களை அகற்ற முடியவில்லை... அதைத் தவிர்க்கவே அவன் சமையல் அறைக்குள் நுழைந்தது....
"நீங்களும் உங்க ட்ரெஸ் மாத்துங்க... ஈரமா இருக்கு... சளிப் பிடிச்சுக்கப் போகுது" என்றவளை திரும்பி பார்க்க, அவன் பார்வையின் தாக்கத்தைத் தாங்காதவள் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் மெதுவே மாடி ஏற ஆரம்பித்தாள்.....
அறையை அடைந்தவள் "ஈரமா இருக்கு சளிப் பிடிச்சுக்கப் போகுதுன்னு சொன்னா அதற்கெதுக்கு இந்த முறைப்பு? அப்படி என்ன நான் சொல்லிட்டேன்?" என்று நினைத்தவளுக்கு அவன் பார்வையில் தெரிந்தது கோபம் அல்ல, தாபம் என்று புரிந்திருக்க வேண்டும்.....
புரியாதது அவளின் கெட்ட நேரமோ? அல்லது அவனின் பரிதாப நேரமோ???
அதே சிந்தனையில் அறையின் கதவை தாள் போட மறந்தவள் உள்ளே நுழைந்து கட்டில் மேல் தன் பெட்டியை வைத்து அதிலிருந்து ஒரு புடவையையும், அதற்குண்டான ப்ளவுசையும் எடுத்தவள் புடவையைக் கட்டிலின் மேலே போட்டு விட்டு ப்ளவுசை அணிய முற்பட்டாள்....
அங்குக் கீழே சமையல் அறைக்குள் நுழைந்த அர்ஜூனின் நிலைமையோ பரிதாபத்தின் எல்லையைக் கடந்திருந்தது.... இன்னமும் தன் மனதை ஒரு நிலைப் படுத்த முடியாமல் தடுமாறியிருந்தது...
இதயம் கன்னாபின்னாவென்று துடிக்க அவளைப் பின் தொடர முற்பட்ட மனதை அடக்க வழி தெரியாமல் சில நிமிடங்கள் தவித்தவன் தனக்குத் தெரிந்தவரை காபியைப் போட்டு எடுத்துக் கொண்டு மாடி ஏற, சரியாக அவனது அலை பேசியில் கதிர் ஏதோ குறுந்தகவல் அனுப்பினான்.....
அதனைப் படித்துக் கொண்டே படிகளில் ஏறியவன் அவள் அறைக்குள் இருப்பதை மறந்து அறையின் கதவை தட்டாமல் திறக்க காலையில் தன் மனைவி தன்னைப் பார்த்த கிட்டத்தட்ட அதே கோலத்தில் இப்பொழுது அவன் அவளைப் பார்த்திருந்தான்...
ப்ளவுசை அணிந்து கொண்டு இருந்தவள் சற்றும் எதிர்பாராதவிதமாகக் கதவு திறந்து கொள்ள அங்கே தன் கணவனைக் கண்டவள் "ஐயோ!" என்ற ஒரு சின்ன அலறலுடன் கட்டிலில் இருந்த புடவை எடுக்க முற்படும் போது புடவையைத் தவற விட்டுவிட்டுப் பின் தரையில் கிடந்த புடவையைக் கொத்தாக அள்ளி அவசரமாய்த் தன் மார்பினை மூட, அங்கு அவன் கண்ட காட்சியில் அர்ஜூனின் உடலில் தாபத் தீ கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.....
சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி திரும்பியவள்.....
"அவசரத்தில கதவை தாள் போட மறந்திட்டேன்... கொஞ்சம் வெளியில் இருக்கிறீங்களா?" என்று நடுங்கும் குரலில் அவள் கூற,
அவளை அந்தக் கோலத்தில் கண்டு தடுமாறி சிந்தனை ஓட்டம் தடைப் பட்டு நின்றவனிற்கு அத்தனை விரைவில் தன் உணர்வுகளின் வீச்சுகளில் இருந்து வெளிவர இயலவில்லை...
அவன் இன்னமும் அதே இடத்தில் அசையாமல் நிற்பதையும் அவனின் விழிகள் தன் உடலில் எல்லை தாண்டி பிரயாணிக்கும் இடங்களை தன் அருகில் இருந்த கண்ணாடியில் அவனின் பிம்பத்தில் கண்டவளுக்குக் காதலை விட அச்சமே மேலோங்க அவளின் விழிகள் பீதியும் கலக்கமும் நிறைந்த பார்வையை வெளியிட கெஞ்சும் குரலில்....
"ப்ளீஸ்.... கொஞ்சம் வெளியில் நில்லுங்க" என்றாள்....
அவளின் கெஞ்சலில் தன் மனதை கண நேரத்தில் சமாளித்துக் கொண்டவன் அவளுக்கு எதிர்புறமாகத் திரும்பி "சாரி" என்று மட்டும் சொன்னவன் சட்டென்று அறையை விட்டு வெளியே வர, அவளுக்கு இதயம் தடதடத்ததில் மயக்கமே வருவது போல் இருந்தது....
"கதவைக் கூடத் தாள் போடாமல் அவர் ரூமிலேயே சாவகாசமாக ட்ரெஸ் மாற்றிக் கொண்டு... என்ன திவ்யா? அந்தக் கோலத்தில் அவர் முன்னாடி நின்னுட்டியே... சீசீ, உன்ன பத்தி என்ன நினைச்சிருப்பார்?" என்று எண்ணியவள் மறக்காமல் அவன் வெளியே சென்றவுடன் விருவிருவென்று அவன் பின் சென்று கதவை தாள் போட்டாள்.
வெளியே வந்த அர்ஜூனுக்கு அவள் அவனைத் தொடர்ந்து வேகமாக வந்து கதவை அடைத்தது குழப்பத்தைத் தான் வர வழைத்தது.....
அவள் அவனுடைய மனைவி..... அவளை அந்தக் கோலத்தில் பார்க்கும் உரிமை உள்ளவன் அவன் ஒருவனே...
வழக்கமாக அச்சத்தையும் கலக்கத்தையும் விரித்துக் காட்டும் அவளின் விழிகள் இன்று காலை காதலை வெளிப்படுத்தியிருந்ததே.....அப்படி இருக்க ஏன் இந்த ஒதுக்கம்?
அவனுக்கு அவள் நிலை புரியவில்லை... தன் நிலைப் புரியவில்லை... இறுதியில் மனம் கனக்கும் அளவிற்குத் திகைப்பு தான் மிஞ்சியது....
அவனும் ஈர உடையில் இருப்பதால் திவ்யா அவசரம் அவசரமாகப் புடவையை அணிந்தவள் வேகமாகக் கதவை திறக்க, அங்கு அவன் ஒரு கையில் காபியை பருகிக் கொண்டே அலை பேசியில் நோண்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிந்தனை அங்கு இல்லை என்பது அவன் அவளை நிமிர்ந்தும் பார்க்காததில் இருந்து புரிந்து போனது.....
அதற்கு மேல் அவன் முன் நிற்க கூச்சம் இடந்தராமல் தயங்கியவளாக...
"நீங்க ட்ரெஸ் மாத்துங்க" எனவும்...
அவளின் குரலை கேட்டவன் அவளை நிமிர்ந்துப் பார்க்க சற்று முன் நடந்ததை நினைத்தவளுக்கு முகம் செவ்வானமாகச் சிவக்க அதற்கு மேல் அவனைப் பார்க்கும் தைரியமில்லாமல் விருவிருவென்று கீழே இறங்கியவள் நேரே சமையல் அறைக்குள் நுழைந்தவளுக்குப் புரியாத ஒரு உணர்வு உடல் முழுவதும் மெல்லியதாகப் பரவ ஆரம்பித்தது...
சற்று நேரமே என்றாலும் தன் கணவன் தன்னைப் பார்த்திருந்ததைக் கண்டவளுக்கு அவன் பார்வையும், விழிகளின் போக்கும் இன்னமும் உடலில் நடுக்கத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்க மௌனமாகச் சமையல் அறையில் இருந்த மேஜையில் அமர்ந்தவளுக்குத் தன் இதயம் துடிக்கும் சத்தம் வெளியில் கேட்பது போல் இருந்தது....
அதற்கு மேல் தன் கணவனைக் காணும் தைரியம் அவளுக்கு இல்லையாதலால் மற்றவர்கள் வீட்டிற்குத் திரும்பி வரும் வரை சமையல் அறையை விட்டு வெளியில் வருவது இல்லை என்று முடிவெடுத்தவள் நேரத்தை போக்கவும், தடுமாறி இருந்த தன் மனதினை திடப்படுத்தவும் சமைக்க ஆரம்பித்தாள்...
இந்த மழை நேரத்தில் சாப்பிட ஆப்பமும் சொதியும் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள் அதையே செய்யத் துவங்க நேரம் போனதே தெரியவில்லை.....
அவள் சமையலை முடிக்கவும் அனைவரும் திரும்பி வரவும் அவர்கள் சத்தம் கேட்டு அர்ஜுன் கீழே இறங்கி வரவும் நேரம் சரியாக இருந்தது.....
அவர்களின் அரவம் கேட்டு சமையல் அறையை விட்டு வெளி வந்தவள் அங்கு அர்ஜூனைக் காண தலைக் குனிந்தவள் குனிந்தவளே... கிட்டத்தட்ட தரை பூமியில் புதைந்துவிடும் அளவிற்குக் குனிந்திருந்தவளை ஸ்ரீயின் கேள்வியே நிமிரச் செய்தது...
"என்னம்மா, அதே சுடிதார் கிடைச்சிச்சா?"
"இல்லத்த... ஆனா கிட்டத்தட்ட அதே மாதிரி வேற இருந்தது.... அத எடுத்து கொடுத்தாங்க" என்றவள் தப்பித் தவறியும் அர்ஜூனை பார்க்கவில்லை....
"வேறு ஏதாவது வாங்கினீங்களா?" என்று ஸ்ரீ கேட்க,
அவள் மனம் முழுவதும் சற்று முன் நடந்திருந்த சம்பவத்திலேயே நிலைக் கொண்டு இருந்ததால் அவரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் திருதிருவென்று முழித்திருந்தவளைக் கண்டவன் அவளைக் கூர்ந்து பார்த்து...
"யெஸ் மாம்...." என்றவன் அவளின் புறம் திரும்பி "ஸாரி (Saree) வாங்கினோம்" என்றான்...
"ஙே" என்று விழித்தவளுக்குத் தான் ஆடை மாற்றும் முன் அவன் வந்ததையே நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு அவன் புடவை என்றதும் சட்டென்று அந்த நினைப்பே வர,
"ஐயோ! இப்போ எதுக்கு எல்லோர் முன்னிலும் இவர் அதைப் பற்றிக் கேட்கிறார்” என்று குழம்ப அவள் முகம் நொடிக்கு ஒரு தரம் மாறுவதைக் கண்டவனுக்குப் புரிந்து போனது....
அவள் இன்னும் அந்த நிமிடங்களில் இருந்து வெளி வரவில்லை என்று... அவளின் தடுமாற்றம் புரிந்தவனாக....
"அதே ஸ்டோரில் ஒரு ஸாரி எடுத்தோமே..... அதைச் சொன்னேன்" என்றான்...
"அப்பாடி" என்றிருந்தது அவளுக்கு......
"சே, அவர் தெரியாமல் ரூமிற்குள் வந்துவிட்டார்.... அதற்காக அதனையேவா நினைத்துக் கொண்டு இருப்பது" என்று நாணியவாறே புடவையை எடுத்து வர எழுந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவர்கள் காரிலேயே வாங்கி வந்த பொருட்களை வைத்துவிட்டு வந்துவிட்டதை......
அவனை நோக்கி "அது கார்லேயே இருக்கு" என்று மெல்லிய குரலில் கூற,
சட்டென்று எழுந்தவன் தன் அறைக்குச் சென்று கார் சாவியை எடுத்து வந்தவன் அவளிடம் கொடுக்க....
"எனக்குக் கார திறக்க தெரியாது" என்றாள் கலக்கத்துடன்.....
அங்கு நடக்கும் அதிசயத்தை உலக அதிசயம் போலப் பார்த்திருந்தது எட்டு ஜோடி கண்கள்.... ஸ்ரீ, பாலா, மஹா, அருணின் கண்களே அவை....
"தி கிரேட் அர்ஜூன் புடவை எடுத்துக் கொடுத்திருக்கிறான்.... மனைவியைத் தனியே வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான்.... வீட்டிற்கு வரும் வழியில் காரில் என்ன நடந்ததோ வாங்கிய பொருட்களைக் கூடக் காரிலேயே மறந்து விட்டிருக்கிறார்கள்.... இப்பொழுது மனைவி சொன்னவுடனே மாடிக்கு சென்று தன் கார் சாவியை, அதுவும் தன் கார் அருகில் கூட யாரையும் அனுமதிக்காதவன் மனைவியிடம் சாவியைக் கொடுத்துப் பொருட்களை எடுத்து வரச் சொல்கிறான்"
அவர்களின் ஆச்சரியப் பார்வையைப் பார்த்தும் கண்டு கொள்ளாதவன் திவ்யாவின் அருகில் நெருங்கி வந்து அவளிடம் காரின் ரிமோட்டை கொடுத்து காரை எப்படித் திறப்பது என்று சொல்லிக் கொடுத்தான்.....
அவன் சொல்ல சொல்ல அவள் தலையை ஆம் என்றும், இல்லை என்றும் மாற்றி மாற்றி ஆட்ட அவளுக்கு ஒன்றும் புரியவில்லை என்று உணர்ந்தவன் மெல்லிய புன்னகை உதிர்த்து சரி வா என்று அழைத்து விட்டு வெளியே செல்ல, அவன் பின்னரே ஓடினாள்..
காருக்கு சென்றவன் திரும்பி பார்க்க, அங்குச் சிறு பெண் போல் ஓடி வரும் மனைவியைக் கண்டவன் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டவனாக அவள் வரும் வரை காத்திருந்து பின் தன்னுடைய காரின் ரிமோட்டை அவளிடம் கொடுத்து எப்படி அதை உபயோகப்படுத்துவது என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க அவளுக்கு அது மண்டையில் ஏறினால் தானே...
அவன் அவள் வெகு அருகில் நெருங்கி நிற்பதில் சகலமும் அடங்கி ஒடுங்க தன்னை மறந்து நின்று கொண்டிருந்தவளுக்குத் தன்னைச் சுற்றி நடக்கும் மற்ற விஷயங்கள் எல்லாம் எங்குத் தெரியப் போகுது?
அதை உணர்ந்தவன் போல்,
"திவ்யா" என்று அழைக்க,
"ஙே" என்று முழித்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க...
"இது தான் காரை அன்லாக் செய்வது... இதை அழுத்தினால் காரின் ட்ரன்க் தானாகத் திறந்து கொள்ளும்" என்று அவளின் விரல் மேலேயே தன்னுடைய விரலை வைத்து அழுத்த அவனின் தொடுகையில் சங்கடத்தில் நெளிந்தவளுக்கு நெஞ்சத்தில் அதிகப்படியான சஞ்சலமும் சலனமும் தோன்றியது....
மெல்லிய விகசிப்பு அவளது பூ முகம் முழுவதும் படர அவன் தீண்டலில் உடல் முழுவதும் நடுக்கம் பரவ, சட்டென்று கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டவள் தலை கவிழ்ந்து நிற்க, தன் ஸ்பரிசத்தால் தடுமாறி நிற்கும் தன் மனையாளை ரசித்தவன் காரில் இருந்து அவர்கள் வாங்கிய ஆடைகள் இருந்த பைகளைத் தானே எடுத்தான்...
அவள் இன்னமும் நடுக்கம் குறையாமல் தடுமாறி தவித்துக் காரின் ரிமோட்டையே பார்ப்பதை பார்த்தவன்....
"இங்கேயே நிற்க போறியா?? இல்லை வீட்டிற்குள் வரப் போறியா??" என்று கேட்டுக் கொண்டே நடக்க,
அவன் கேள்வியில் சுய உணர்வுக்கு வந்தவள் அவனைப் பின் தொடர, அவர்கள் வருகையை ஆவலுடன் பார்த்திருந்த ஸ்ரீ
"பைகளை இங்க கொடு அர்ஜூன்.... புடவையைப் பார்ப்போம்" என்றார்...
அவருக்குத் தன் மகன், அவன் மனைவிக்கு முதன் முதலாக எடுத்துக் கொடுத்த புடவையைப் பார்க்க வேண்டும் என்ற மகா ஆவல்.
புடவையைக் கொடுத்தவன் ஒரு நொடி திரும்பி திவ்யாவை பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் மாடிக்கு செல்ல, புடவையைப் பார்த்தவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்....
அனைவரின் கண்களையும் கவர்வதாக இருந்தது அந்த அழகிய பட்டுப் புடவை.
கலாவிற்கோ அதனின் விலையைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.....
"எதுக்குத் திவ்யா இவ்வளவு விலையில புடவை வாங்கியிருக்க? மாப்பிள்ளை என்ன நினைச்சிருப்பாரு?"
"இல்லம்மா... நான் புடவை எடுக்கும் போது விலையைப் பார்க்கல.... ஆனால் பில் போடும் போது பார்த்திட்டு புடவை வேண்டாம்னு தான் சொன்னேன்... அவங்க தான் கேட்கலை"
இவர்களின் உரையாடல்களைக் கவனித்த ஸ்ரீ....
"கலா.... அவனோட வைஃபுக்கு அவன் புடவை எடுத்துக் கொடுக்கிறான்... அது அவனோட இஷ்டம்.... நாம இதில் எல்லாம் ஒன்னும் சொல்லக் கூடாது" என்று கூறியவரின் மனதிலும் பூரிப்பே நிரம்பி வழிந்தது.....
தன் மகன் கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனைவியிடம் நெருங்குவதை நினைக்கும் பொழுது.....
ஆனால் தன் கணவனின் மனதை, அது தன்னிடம் தன் உரிமையை நிலைநாட்ட தத்தளித்துக் கொண்டு இருப்பதை, இதயத்தால் தன்னை மனைவியாக ஏற்றுக் கொண்டவனின் உள்ளம் உடலாலும் தன்னை ஏற்றுக்கொள்ளத் தவிப்பதை பெண்ணவள் புரிந்துக் கொள்வாளா????
அவள் புரிந்து கொள்ளும் வரை காலம் காத்திருக்குமா? அவள் கணவன் காத்திருப்பானா?
தொடரும்..
இதற்கு மேல் தன் கணவனை எதிர்த்து பேசும் தைரியம் திவ்யாவிற்கு இல்லை....
ஒன்றும் பேசாமல் அமைதியாக வந்தவளுக்கு ஒரே குழப்பம் "இப்போ எங்க போகிறோம்? பழைய கடைக்கா? அல்லது வீட்டிற்கா? என்று..
ஏனெனில் என்ன தான் அவள் சென்னைக்குப் புதிது என்றாலும் தன் கணவன் தான் வந்த வழியில் திரும்பி காரை செலுத்தவில்லை என்பது நன்றாகப் புரிந்தது....
"வீட்டிற்கு என்றால் நிச்சயம் அத்தையும் யாரும் வந்திருக்கப் போவதில்லை..... அங்குப் போய் எப்படி இவருடன் தனியாக இருப்பது? ஒரு வேளை சமையல் அறையில் தெய்வானை அக்காவும் அல்லியும் இருந்தால் அவர்களுடன் இருந்து விட வேண்டியது தான்... ஆனால் கார் போகும் வழியைப் பார்த்தால் வீட்டிற்குப் போவது போலும் தெரியவில்லை..... அவர்கள் முன்னர்ச் சென்ற கடைக்குச் செல்வது மாதிரியும் தெரியவில்லை....."
அவளின் முகம் தெளிவில்லாமல் ஏதோ சிந்தனையில் இருப்பதைக் கண்டவனுக்கு அவள் மனதில் ஓடிய எண்ணங்கள் புரிந்து இருந்தது.... இருந்தும் தான் எங்குச் செல்கிறோம் என்று அவன் சொல்லவில்லை...
அவளின் குழப்பத்திற்கு விடை அளிப்பது போலவே அவன் ஒரு புதுச் சாலையில் காரை செலுத்தியவன் சிறிது நேரத்தில் வழியில் மற்றொரு கடை வாயிலில் நிறுத்தினான்.....
அவன் காரை நிறுத்தவும் இங்கு எதற்கு வந்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டே அவனைத் திரும்பி பார்க்க....
சாலையில் கண்களைப் பதித்துக் கொண்டே....
"ஐ ஹாவ் டு கெட் சம்திங்.... பட் ஐ கெனாட் பார்க் தி கார் ஹியர்.... ஐ வி ட்ராப் யூ... கேன் யூ வெயிட் ஃபார் மி அக்ராஸ் தி ரோட்? [I have to get something.... But I cannot park the car here... I will drop you...Can you wait for me across the road?]" என்றவன் அவளைத் திரும்பி பார்க்க, அவன் ஆங்கிலம் புரியாததால் திருதிருவென்று விழித்திருந்தாள் அவனின் அழகிய மனைவி.....
தான் மும்பையில் இருந்து திரும்பி வந்த அன்று ஆங்கிலம் தெரியுமா என்று கேட்க அவள் பட்டென்று தன் படிப்பைப் பற்றிச் சொன்ன நிமிடங்கள் அழகாக விழிகளின் முன் படர....
உதட்டில் வளைந்த சிரிப்பை மிகவும் சிரமப்பட்டுத் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பி அடக்கியவன் மீண்டும் அவள் புறம் திரும்பி....
"எனக்குக் கொஞ்சம் திங்ஸ் வாங்கனும்... ஆனால் இங்க கார் பார்க் பண்ண முடியாது.... நான் பார்க்கிங் லாட்ல கார பார்க் பண்ணிட்டு வரேன்.... அதனால நீ ரோட்ட கிராஸ் பண்ணி அந்தக் கடையில் போய் நில்லு.... நான் வந்திடுறேன்" என்றான்.
"ம்ம்ம்" என்றவள் இறங்க, அவன் காரை நிறுத்தும் இடத்தை நோக்கி வண்டியை செலுத்தினான்...
அவன் சொன்ன கடை சாலைக்கு மறு பக்கம் இருந்தது... அதற்குச் சிறிது தூரம் நடக்க வேண்டும்....
அது மட்டும் அல்லாமல் அது பெரிய பிரதான சாலை என்பதால் கூட்டமாக வேறு இருக்க, இரு பக்கமும் பார்த்துக் கொண்டே நின்றவளுக்கு எப்படி இதைக் கடக்கப் போகிறோம் என்றே கவலையாக இருந்தது...
சில நிமிடங்கள் அப்படியே நிற்க திடீரேன்று மழை வேறு தூர ஆரம்பித்தது....
பேசாமல் இந்தப் பக்கமே ஒரு கடையில் நின்றுக் கொள்வோமா என்று யோசித்தவளுக்கு எதிரே இருக்கும் அந்தக் கடையில் தானே நின்று இருக்கச் சொன்னார்... திரும்பி வந்து நாம் அங்கு இல்லையென்றால் வேறு வினையே வேண்டாம்.....
யோசித்தவள் வேறு வழியில்லாமல் மற்றவர்களுடன் சேர்ந்து சாலையைக் கடக்க அதற்குள் மழை வலுவாகப் பிடிக்க ஆரம்பிக்க விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தாள்...
என்ன தான் வேகமாக நடந்தாலும் சென்னையின் கூட்டத்தில் அவளால் மழை வலுப்பதற்குள் கடையை அடைய முடியவில்லை..
மழையில் முழுவதுமாக நனைந்து விட எதிரே இருந்த கடைக்குள் நுழைந்துக் கொள்ளலாமா என்று நினைத்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் தான் இருந்த நிலையை....
சட்டென்று அடித்த மழையில் அவள் கட்டியிருந்த வெளிர் ரோஜா நிற ஷிஃபான் புடவை ஒட்டுமொத்தமாக நனைந்திருக்க, மெலிதான புடவை அவளின் உடலோடு ஒட்டி அவள் உடலின் அங்கங்களைத் தெளிவாக எடுத்துக்காட்ட அவளுக்கு அந்த நிலமையில் கடைக்குள் செல்வதற்குக் கூச்சமாக இருந்தது...
ஆனால் அதே சமயம் அர்ஜூன் சென்ற திசையும் அவளுக்குப் புலப்படவில்லை....
வேறு வழியில்லாமல் புடவை முந்தானையை எடுத்து தன் மேல் போர்த்திக் கொண்டவள் அந்தக் கடையின் வாசலில் இருந்த கூடாரத்திற்குக் கீழ் மேலும் மழையில் நனையாதபடி நின்றுக் கொண்டாள்....
நின்றவள் சிறிது நேரம் சென்றே கவனித்தாள் அவள் அருகில் கூட்டத்திற்கிடையில் மூன்று வாலிபர்கள் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பதை.....
என்ன தான் தான் புடவையை இழுத்து மூடியிருந்தாலும் மழையில் நனைந்திருந்த மெலிதான ஷிஃபான் புடவை அவளின் இளமையை, அழகிய உடலின் நெளிவு சுளிவுகளை அப்பட்டமாக வெளிக் காட்டத் தவறவில்லை..
திவ்யாவை சாலையில் இறக்கிவிட்ட அர்ஜூன் கார் நிறுத்தும் இடத்திற்குச் செல்ல, பாதி வழியில் மழை வருவதைப் பார்த்து வீட்டிற்குத் திரும்ப நினைத்தவன் காரை திருப்ப எத்தனிக்க அப்பொழுது தான் கவனித்தான் அது ஒரு வழி சாலை என்று..
இப்பொழுது காரை சுற்றி எடுத்து சென்றால் திவ்யா இருக்கும் கடையை அடைய சிறிது நேரம் பிடிக்கும்....
அது வரை அவள் கடையில் தனியே இருக்க வேண்டும் என்று நினைத்தவன் காரை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பிக்க அவன் நல்ல நேரம் மழை நின்றிருந்தது...
சிறிது நேரத்திலேயே திவ்யா இருந்த கடையை அடைந்தவன் அவள் கடைக்குள் செல்லாமல் வாயிலிலேயே நிற்பதைப் பார்த்துக் குழப்பமாக "கடைக்குள் போவது தானே? எதுக்கு இங்கு நிற்கிறாள்"? என்று எண்ணிக் கொண்டே அவளை நோக்கி நடந்தான்...
அர்ஜூன் எந்த வழியில் வருவான் என்று தெரியாமல் திவ்யா அவனைத் தேடி அங்கும் இங்கும் பார்க்க,
அதற்குள் அவளையே வைத்த கண் வாங்காமல் அவளைக் கண்களாலேயே விழுங்கிவிடுவது போல் பார்த்திருந்த அந்த வாலிபர்கள்...
"டேய், அந்தப் பொண்ணு தனியா வரலைப் போல.... யாரையோ தேடுதுடா" என்றார்கள்....
ஏற்கனவே மழையில் நனைந்தது கூச்சமாக இருக்க, இதில் அந்த வாலிபர்களின் கிண்டல் வேறு.....
இதில் தன் கணவன் தன்னை இந்த நிலையில் பார்த்தால் என்ன செய்வது? என்று நினைத்தவளுக்கு அங்கு நின்றுக் கொண்டிருப்பதே நெருப்பில் இருப்பது போல் இருந்தது...
அவளை நீண்ட நேரம் காக்க வைக்காமல் அங்கு வந்த அர்ஜூன் அவளின் நிலையைச் சற்றும் கவனியாமல் "ஏன் உள்ளே போகலை?" என்று கூறியவன் அவள் அருகில் வந்ததும் தான் அவளைக் கவனித்தான்...
"ஷிட்.... அதுக்குள்ள இவ்வளவு நனைஞ்சிட்டியா?" என்றவன்,
"ஓகே... நீ இங்கேயே ஒரே ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு.... நான் இப்போ வந்திடுறேன்" என்று கூறியவன் கடைக்குள் சென்றான்.....
வெகு விரைவிலேயே திரும்பி வந்தவன் மழை மீண்டும் வலுக்க ஆரம்பிக்க,
"மழை திரும்பப் பிடிச்சிட்டது..... நீ ஏற்கனவே ரொம்ப நனைஞ்சிட்ட.... அதனால நீ இங்கேயே இரு,... நான் காரை எடுத்திட்டு வந்திடுறேன்" என்று நகர நினைக்க,
திவ்யா அவளையும் அறியாமல் சட்டென்று அவன் கரத்தைப் பிடித்து இழுத்தாள்...
நகர்ந்தவன் வெடுக்கென்று தன் கை இழுக்கப் பட என்னவென்று அவளைப் திரும்பிப் பார்த்தவன் அவள் பதட்டத்துடன் அவனைப் பார்த்திருக்க,
"என்ன?" என்று புருவத்தை உயர்த்திக் கேட்க அவளுக்கு எவ்வாறு தன் நிலையை எடுத்து சொல்வது என்று தவிப்பாக இருந்தது.....
அவன் அருகில் வந்தவள் கலக்கத்தைச் சுமந்திருந்த முகத்துடன் "நானும் உங்களோடேயே வரேனே" என்றாள்.....
"இந்த மழையிலையா? வேண்டாம்... நான் போய்க் கார எடுத்திட்டு வந்து வந்துடறேன்"
"இல்லைங்க.... அதான் ஏற்கனவே நனைஞ்சிட்டேனே.... அதனால உங்க கூடவே வரேன்"
அர்ஜூனிற்கு இதென்ன பிடிவாதம் என்று சலிப்பாக இருக்க "ம்ப்ச்" என்றவன் அவளின் முகத்தை உற்று நோக்கியவன் அப்பொழுது தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான்....
திவ்யா தன்னருகில் அஞ்சி நடுங்கிக் கொண்டு கோழிக் குஞ்சு போல் ஒன்றிக் கொண்டு இருப்பதை......
அர்ஜுனைக் கண்டாலே பயந்து ஒளிபவள்.... அவனின் கூரிய பார்வையின் வீரியத்தைத் தாங்க இயலாமல் தரையில் தலை புதையும் அளவிற்குக் குனிந்துக் கொள்பவள்...
அவன் அவளருகில் சிறிது நெருங்கினாலே கை கால் என உடல் முழுவதும் உதறல் எடுக்க வெளிப்படையாக நடுங்கி நிற்பவள்...
ஆனால் இன்று அவனுடன் வெகு அருகில் அவன் உடலோடு உடல் உரசும் அளவிற்கு ஒன்றிக் கொண்டு இருப்பது எதனால் என்று குழம்பியவன் அவளைப் பார்க்க, அவளோ தன்னை அறியாமல் லேசாகத் திரும்பி அந்த வாலிபர்களைப் பார்த்தவள் சட்டென்று தலையைக் குனிந்துக் கொண்டாள்...
முதலில் அவள் தனிமையில் சாலையைக் கடந்து வரவும் அவள் தனியாகத் தான் வந்திருப்பாள் என்று நினைத்து அவளைக் கிண்டல் பண்ணிய அந்த வாலிபர்கள் அவள் யாரையோ தேடுவதைப் பார்த்து அவள் யார் கூடவோ வந்திருப்பாள் போல என்று ஊகித்து இருந்தாலும் அவர்களின் வயது அவர்களின் கிண்டலைத் தொடர் செய்தது...
ஆனால் அர்ஜூன் வந்த பிறகு அவன் அவளிடம் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்த பிறகு அவனையும், அவன் உருவத்தையும், அவன் பணக்காரத் தோரணையையும் கண்டவர்கள் சட்டென்று அடங்கித் தான் போனார்கள்..
ஆனால் திவ்யாவிற்கோ எங்கே மீண்டும் தன் கணவன் தன்னைத் தனியே விட்டு சென்றுவிட்டால் அவர்கள் அவளை மறுபடியும் வம்பிழுப்பார்களே என்று பயமாக இருந்தது...
திவ்யா அவனின் கரத்தை இறுக்கி பிடித்தவாறு கலங்கிப் போய் இருக்க, அவளின் தவிப்பையும் கலக்கத்தையும் பார்த்த அர்ஜூன் அப்பொழுது தான் அந்தச் செயலை செய்தான்....
சட்டென்று அவளின் வெற்று இடையில் கை வைத்து அவளைத் தன்னருகில் இழுத்தவன் அவளை இறுக்க அணைத்தவாறே அவள் காதிற்கு அருகில் குனிந்து....
"அவங்களைப் பார்த்தா பயப்படுற... சின்னப் பசங்க... ஜஸ்ட் ஃபார் ஃபன்னுக்குத்தான் செய்றாங்க" என்றவன் அவர்களைத் திரும்பி பார்த்து தன் கூரிய ஈட்டி போன்ற பார்வையை அவர்கள் மேல் வீசவும் தவறவில்லை...
அதில் நடுநடுங்கி போன அந்த வாலிபர்கள் அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த மழையிலும் விட்டால் போதும் என்று அடித்துப் பிடித்துச் சாலையின் மறு பக்கத்தை ஓட்டமும் நடையுமாகக் கடந்து சென்று இருந்தார்கள்...
இங்குத் திவ்யாவின் நிலைமையோ சொற்களுக்கு அப்பார்பட்டதாக இருந்தது....
அது வரை மழையில் நனைந்ததினால் தான் இருந்த நிலைமையினாலும் அந்த வாலிபர்களின் கிண்டலினால் ஏற்பட்ட கூச்சத்தினாலும் தத்தளித்துத் தவித்து இருந்தவளுக்கு அர்ஜுன் அவளை அவ்வாறு இடைப் பிடித்து இழுத்தது வெட்கத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
வெற்று இடுப்பில் அவனது கரம் அழுந்த பட்டதும் திக்கென்று அதிர்ந்து தடுமாறியவளின் இதயம் தடதடக்க, கூச்சத்தில் மெல்ல நெளிந்தவள் அவன் கையைத் தன் இடையில் இருந்து விலக்க முயற்சிக்க அதை உணர்ந்தவன் அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து கையை எடுத்து "சரி வா" என்றான்...
என்ன தான் அந்த வாலிபர்கள் அவன் முறைத்த நிமிடமே அந்த இடத்தைக் காலி செய்திருந்தாலும் இனி அவளை, அதுவும் அந்தக் கோலத்தில் தனித்து விட அவனுக்கு மனம் இல்லை...
இருவரும் வேகமாக நடந்து கார் நிறுத்திய இடத்திற்குச் செல்வதற்குள் அர்ஜூனும் நன்றாக நனைந்து விட்டிருந்தான்..
காரில் ஏறியவன் தன் அன்னையின் அலை பேசிக்கு அழைத்து...
"மாம், இங்க ரொம்ப மழைப் பெய்யுது.... நாங்க இரண்டு பேரும் நனைஞ்சிட்டோம்... அதனால நாங்க வீட்டிற்குப் போகிறோம்" என்றான்...
அவர் சரி என்றவுடன் காரை செலுத்தும் முன் திரும்பி திவ்யாவைப் பார்க்க அவளோ குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.....
அதைக் கவனித்தவன் காரின் ஏஸியை குறைக்க, அதைக் கண்டவள் தன் கணவன் முதல் முறை தன் மேல் கரிசனம் காட்டியதால் பாகாய் உருகியவள் கனிவாய் அவனை நிமிர்ந்து பார்க்க, அதே சமயம் அவனும் திரும்பி பார்க்க, ஏற்கனவே அவனின் தொடுகையில் கரைந்து இருந்தவள் அதற்கு மேலும் தாங்க மாட்டாதவளாய் பார்வையை வெளிப்புறம் திருப்பினாள்....
தன் கணவன் தன்னுடன் இத்தனை நேரம் தனிமையில் இருந்திருக்கிறான்.... முதல் முறையாக அவளிடம் இந்த அளவிற்கு அதுவும் பொறுமையாக, நிதானமாகப் பேசியிருக்கிறான்..
இப்பொழுது அவளுக்காக அவளின் குளிர் அறிந்து பரிவுடன் நடந்து கொள்கிறான் என்று நினைத்தவளுக்கு அவன் அவளை அவனாக முதல் முறை தொட்டிருப்பது நினைவில் வர,
இத்தனை நாள் அவளின் அடி மனதில் அவளையும் அறியாமல் அடங்கி இருந்த காதல் கட்டவிழ்ந்து ஆர்ப்பரித்து மேல் எழும்ப, மதிமயங்கிய உள்ளத்தோடு உணர்ச்சிகள் ஊஞ்சலாட உன்மத்த நிலையில் இருந்த இதயம் தன் தாளத்தை அதிகரித்தது....
அர்ஜூனும் காரை செலுத்திக் கொண்டே அவளைப் பார்க்க, அவள் வெட்கத்தில் செந்தனலாய்ச் சிவந்திருந்த தன் முகத்தை அவனிடம் இருந்து மறைக்க மெல்ல கதவோரமாக ஒண்டி அமர்ந்தவள் ஒன்றும் பேசாது வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வர, அவனுக்கு அந்த நேரம் தன்னவளை ரசிப்பதற்கு ஏதுவாகவே இருந்தது...
மழையில் நனைந்திருந்ததால் மெலிதான வெளிர் நிற ஷிஃபான் புடவை அவளின் இளமை அங்கங்களை வெட்டவெளிச்சமாகக் காட்ட, நீண்ட கூந்தலில் மல்லிகைச் சூடி அதனை அழகாக முன் புறமாக விட்டிருக்க மல்லிகையின் நறுமணம் வேறு அங்கு ஒரு அசாதாரணச் சூழ்நிலையை உருவாக்கியது....
பூவைப் போலவே மிருதுவான கன்னங்கள், கூர்மையான மூக்கில் சிறு ஒற்றைக் கல் மூக்குத்தி, சங்கு கழுத்து, அதற்கும் கீழ் அளவோடு எழுந்திருந்த அவளின் பெண்மையும், மெல்லிய மேலாடை அவள் பெண்மையை மறைக்க முயன்று முடியாமல் அதுவே அவளின் எழில்களின் அழகினை உச்சத்திற்குக் கொண்டு போய் அலங்கரிக்க, அதற்குக் கீழ் குறுகிய இடையும் என்று அவள் உடல் முழுவதும் பருவத்தின் யவனம் விரவி கிடந்தது....
தன்னவளின் உச்சியில் இருந்து இடை வரை அங்குலம் அங்குலமாக ரசிக்க ஆரம்பித்தவன் அவளின் மோகனத்தில் தன்னையும் அறியாமல் தன்னைத் தொலைத்து போக இடை வரை ஊர்ந்த பார்வை அதற்கும் கீழ் என்று இறங்க தன்னிலையை இழுத்து பிடித்து வைத்தவன் "அர்ஜூன் கன்ட்ரோல் யுவர் செல்ஃப் [Arjun, control your self]" என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு தலையை அழுத்தமாகக் கோதி பார்வையை அவளிடமிருந்து வெகு பிரயாசை பட்டே திருப்பினான்...
அவள் தன் மனைவி... அவள் உள்ளத்தில் தன் மீது முதலில் காதல் வர வேண்டும்.... அதற்குப் பின் தான் மனைவி என்ற உரிமையை அவளிடம் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவனின் உறுதி சுக்கு நூறாக உடைய ஆரம்பித்து இருந்தது....
அவனது மனதிற்குள் பெரும் குழப்பம் விளைந்தது... அந்தக் குழப்பம் எதனால் விளைந்தது?
அவளைச் சில நிமிடங்களுக்கு முன் தீண்டியதால் வந்த இன்பத்தினாலா? அல்லது அவள் காதலைச் சொல்லாத பொழுது அவளை எடுத்துக் கொள்ள நினைத்து தறிகெட்டு அலையும் மனதினை அடக்க முடியாமல் வந்த சங்கடத்தினாலா?
தன் அருகில் தன் தேவதை அழகெல்லாம் திரண்டு தனித்து அமர்ந்திருக்க, செயலெதிலும் இறங்காத அவன் சிந்தை வேறு பல விஷயங்களைச் சிந்திக்க ஆரம்பித்தது....
கணவனின் மனதில் தான் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்ற தடுமாற்றத்தை, உணர்ச்சிகளின் கொந்தளிப்பை அறியாமல் அவனை விட்டு முடிந்தவரை தள்ளி அமர்ந்து கொண்டு வந்தவள் ஒரு வேளை தன் கணவன் தான் இருந்த நிலையில் மயங்கி தன்னை ஒவ்வொரு பாகமாக ரசித்துக் கொண்டிருப்பதை அவள் அறிந்திருந்தால் பின்னாளில் வரக் கூடிய பிரச்சனைகளை அவர்கள் தவிர்த்திருப்பார்களோ????
அவர்களுக்கு வரப் போகும் அந்தப் பிரிவும் வராமல் இருந்திருக்குமோ???
வெகு பிரயாசைப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு வந்த அர்ஜூன் அதற்கு மேலும் காரில் இருந்த அந்த நிசப்தத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் மியூஸிக் ஸிஸ்டத்தை உயிர்பித்தவனின் புருவங்கள் தன்னை அறியாமல் ஆச்சரியத்தில் உயர்ந்தது...
சொல்லி வைத்தார் போன்று அவனின் மனதில் மண்டிக்கிடந்த ஆசைகளை, தன் மனைவியிடம் தான் சொல்ல விரும்பும் தன் ஏக்கங்களை அப்படியே எடுத்துரைத்தது போல் இருந்தது அந்தப் பாடல்....
சட்டெனத் தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
இதயம் என்பது எனக்கும் உண்டென
தெரிந்து கொண்டதே உன்னால் தான்
எதையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே
விரும்புகின்றதே நெஞ்சம் தான்
நிழல் மட்டும் தொடர்ந்து வந்த
நிலமை மாறி போனதே
நிஜம் உன்னை நெருங்கி நிற்க
வயது கோலம் போடுதே
இப்படியும் நான் ஆவேனா
மொத்தமும் மாறி போவேனா
கற்பனையும் நான் செய்வேனா
கண்டபடி பொய் சொல்வேனா
யாரை கேட்க, கைகள் கோர்க்க
நீ இல்லாமல் வாழ்வேனா
சட்டெனத் தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
உனது புன்னகை உரசிச் செல்கையில்
உதிருகின்றதே காயங்கள்
உனது மெல்லிய விரல்கள் தொட்டதும்
நிகழுகின்றதே மாயங்கள்
எதைக் கண்டும் பயந்ததில்லை
இதற்கு முன்பு நானுமே
உனை கண்டு பதட்டம் ஒன்று
வருவதென்ன நாளுமே
எத்தனை பெண்கள் நின்றாலும்
என் விழி உன்னைத் தேடுதடி
தந்தது போதும் என்றாலும்
இன்னமும் காதல் கேட்குதடி
அடியே எந்தன் ஆயுள் ரேகை
உந்தன் கைகளில் ஓடுதடி
நீண்ட நேரம் அந்தப் பாடலிலேயே மனம் லயித்து இருந்ததாலும், புத்தியும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததாலும், இருவரும் அவரவர் மன நிலைகளுக்கு ஏற்ப குழப்பத்தில் உழன்று கொண்டு இருந்ததாலும் அவர்களின் வீட்டை வெகு விரைவிலேயே அடைந்திருந்தனர்...
முதலில் வீட்டிற்குள் நுழைந்தவனிற்கு வீட்டில் வேலைக்காரர்கள் முதல் யாரும் இல்லை என்று தெரிய, எதுவும் பேசாமல் சமையல் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டவள் வியந்து போய் அவனிடம் தயங்கிவாறே...
"காபி போட்டுத் தரட்டுமா?" என்றாள்.....
அவளின் மென்மையான குரலில் அவளைத் திரும்பி பார்த்தவனுக்கு அவளை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஒரு நொடி மின்னி மறைய தன்னைக் கட்டுப்படுத்தியவன்...
"இல்ல... நீ போய் முதல்ல ட்ரெஸ்ஸ மாத்து" என்றான்.....
ஏனெனில் அவன் உணர்ச்சிகள் முற்றிவிட்டதால் தன் சுயநிலையை இழந்திருந்தவனுக்கு அடக்கமாட்டாத கிளர்ச்சி இதயத்தில் பாய அவனால் இன்னும் அவளின் அழகிய உடலை ஆசையுடன் சுற்றிக் கிடந்த தன் கண்களை அகற்ற முடியவில்லை... அதைத் தவிர்க்கவே அவன் சமையல் அறைக்குள் நுழைந்தது....
"நீங்களும் உங்க ட்ரெஸ் மாத்துங்க... ஈரமா இருக்கு... சளிப் பிடிச்சுக்கப் போகுது" என்றவளை திரும்பி பார்க்க, அவன் பார்வையின் தாக்கத்தைத் தாங்காதவள் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் மெதுவே மாடி ஏற ஆரம்பித்தாள்.....
அறையை அடைந்தவள் "ஈரமா இருக்கு சளிப் பிடிச்சுக்கப் போகுதுன்னு சொன்னா அதற்கெதுக்கு இந்த முறைப்பு? அப்படி என்ன நான் சொல்லிட்டேன்?" என்று நினைத்தவளுக்கு அவன் பார்வையில் தெரிந்தது கோபம் அல்ல, தாபம் என்று புரிந்திருக்க வேண்டும்.....
புரியாதது அவளின் கெட்ட நேரமோ? அல்லது அவனின் பரிதாப நேரமோ???
அதே சிந்தனையில் அறையின் கதவை தாள் போட மறந்தவள் உள்ளே நுழைந்து கட்டில் மேல் தன் பெட்டியை வைத்து அதிலிருந்து ஒரு புடவையையும், அதற்குண்டான ப்ளவுசையும் எடுத்தவள் புடவையைக் கட்டிலின் மேலே போட்டு விட்டு ப்ளவுசை அணிய முற்பட்டாள்....
அங்குக் கீழே சமையல் அறைக்குள் நுழைந்த அர்ஜூனின் நிலைமையோ பரிதாபத்தின் எல்லையைக் கடந்திருந்தது.... இன்னமும் தன் மனதை ஒரு நிலைப் படுத்த முடியாமல் தடுமாறியிருந்தது...
இதயம் கன்னாபின்னாவென்று துடிக்க அவளைப் பின் தொடர முற்பட்ட மனதை அடக்க வழி தெரியாமல் சில நிமிடங்கள் தவித்தவன் தனக்குத் தெரிந்தவரை காபியைப் போட்டு எடுத்துக் கொண்டு மாடி ஏற, சரியாக அவனது அலை பேசியில் கதிர் ஏதோ குறுந்தகவல் அனுப்பினான்.....
அதனைப் படித்துக் கொண்டே படிகளில் ஏறியவன் அவள் அறைக்குள் இருப்பதை மறந்து அறையின் கதவை தட்டாமல் திறக்க காலையில் தன் மனைவி தன்னைப் பார்த்த கிட்டத்தட்ட அதே கோலத்தில் இப்பொழுது அவன் அவளைப் பார்த்திருந்தான்...
ப்ளவுசை அணிந்து கொண்டு இருந்தவள் சற்றும் எதிர்பாராதவிதமாகக் கதவு திறந்து கொள்ள அங்கே தன் கணவனைக் கண்டவள் "ஐயோ!" என்ற ஒரு சின்ன அலறலுடன் கட்டிலில் இருந்த புடவை எடுக்க முற்படும் போது புடவையைத் தவற விட்டுவிட்டுப் பின் தரையில் கிடந்த புடவையைக் கொத்தாக அள்ளி அவசரமாய்த் தன் மார்பினை மூட, அங்கு அவன் கண்ட காட்சியில் அர்ஜூனின் உடலில் தாபத் தீ கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.....
சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி திரும்பியவள்.....
"அவசரத்தில கதவை தாள் போட மறந்திட்டேன்... கொஞ்சம் வெளியில் இருக்கிறீங்களா?" என்று நடுங்கும் குரலில் அவள் கூற,
அவளை அந்தக் கோலத்தில் கண்டு தடுமாறி சிந்தனை ஓட்டம் தடைப் பட்டு நின்றவனிற்கு அத்தனை விரைவில் தன் உணர்வுகளின் வீச்சுகளில் இருந்து வெளிவர இயலவில்லை...
அவன் இன்னமும் அதே இடத்தில் அசையாமல் நிற்பதையும் அவனின் விழிகள் தன் உடலில் எல்லை தாண்டி பிரயாணிக்கும் இடங்களை தன் அருகில் இருந்த கண்ணாடியில் அவனின் பிம்பத்தில் கண்டவளுக்குக் காதலை விட அச்சமே மேலோங்க அவளின் விழிகள் பீதியும் கலக்கமும் நிறைந்த பார்வையை வெளியிட கெஞ்சும் குரலில்....
"ப்ளீஸ்.... கொஞ்சம் வெளியில் நில்லுங்க" என்றாள்....
அவளின் கெஞ்சலில் தன் மனதை கண நேரத்தில் சமாளித்துக் கொண்டவன் அவளுக்கு எதிர்புறமாகத் திரும்பி "சாரி" என்று மட்டும் சொன்னவன் சட்டென்று அறையை விட்டு வெளியே வர, அவளுக்கு இதயம் தடதடத்ததில் மயக்கமே வருவது போல் இருந்தது....
"கதவைக் கூடத் தாள் போடாமல் அவர் ரூமிலேயே சாவகாசமாக ட்ரெஸ் மாற்றிக் கொண்டு... என்ன திவ்யா? அந்தக் கோலத்தில் அவர் முன்னாடி நின்னுட்டியே... சீசீ, உன்ன பத்தி என்ன நினைச்சிருப்பார்?" என்று எண்ணியவள் மறக்காமல் அவன் வெளியே சென்றவுடன் விருவிருவென்று அவன் பின் சென்று கதவை தாள் போட்டாள்.
வெளியே வந்த அர்ஜூனுக்கு அவள் அவனைத் தொடர்ந்து வேகமாக வந்து கதவை அடைத்தது குழப்பத்தைத் தான் வர வழைத்தது.....
அவள் அவனுடைய மனைவி..... அவளை அந்தக் கோலத்தில் பார்க்கும் உரிமை உள்ளவன் அவன் ஒருவனே...
வழக்கமாக அச்சத்தையும் கலக்கத்தையும் விரித்துக் காட்டும் அவளின் விழிகள் இன்று காலை காதலை வெளிப்படுத்தியிருந்ததே.....அப்படி இருக்க ஏன் இந்த ஒதுக்கம்?
அவனுக்கு அவள் நிலை புரியவில்லை... தன் நிலைப் புரியவில்லை... இறுதியில் மனம் கனக்கும் அளவிற்குத் திகைப்பு தான் மிஞ்சியது....
அவனும் ஈர உடையில் இருப்பதால் திவ்யா அவசரம் அவசரமாகப் புடவையை அணிந்தவள் வேகமாகக் கதவை திறக்க, அங்கு அவன் ஒரு கையில் காபியை பருகிக் கொண்டே அலை பேசியில் நோண்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிந்தனை அங்கு இல்லை என்பது அவன் அவளை நிமிர்ந்தும் பார்க்காததில் இருந்து புரிந்து போனது.....
அதற்கு மேல் அவன் முன் நிற்க கூச்சம் இடந்தராமல் தயங்கியவளாக...
"நீங்க ட்ரெஸ் மாத்துங்க" எனவும்...
அவளின் குரலை கேட்டவன் அவளை நிமிர்ந்துப் பார்க்க சற்று முன் நடந்ததை நினைத்தவளுக்கு முகம் செவ்வானமாகச் சிவக்க அதற்கு மேல் அவனைப் பார்க்கும் தைரியமில்லாமல் விருவிருவென்று கீழே இறங்கியவள் நேரே சமையல் அறைக்குள் நுழைந்தவளுக்குப் புரியாத ஒரு உணர்வு உடல் முழுவதும் மெல்லியதாகப் பரவ ஆரம்பித்தது...
சற்று நேரமே என்றாலும் தன் கணவன் தன்னைப் பார்த்திருந்ததைக் கண்டவளுக்கு அவன் பார்வையும், விழிகளின் போக்கும் இன்னமும் உடலில் நடுக்கத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்க மௌனமாகச் சமையல் அறையில் இருந்த மேஜையில் அமர்ந்தவளுக்குத் தன் இதயம் துடிக்கும் சத்தம் வெளியில் கேட்பது போல் இருந்தது....
அதற்கு மேல் தன் கணவனைக் காணும் தைரியம் அவளுக்கு இல்லையாதலால் மற்றவர்கள் வீட்டிற்குத் திரும்பி வரும் வரை சமையல் அறையை விட்டு வெளியில் வருவது இல்லை என்று முடிவெடுத்தவள் நேரத்தை போக்கவும், தடுமாறி இருந்த தன் மனதினை திடப்படுத்தவும் சமைக்க ஆரம்பித்தாள்...
இந்த மழை நேரத்தில் சாப்பிட ஆப்பமும் சொதியும் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள் அதையே செய்யத் துவங்க நேரம் போனதே தெரியவில்லை.....
அவள் சமையலை முடிக்கவும் அனைவரும் திரும்பி வரவும் அவர்கள் சத்தம் கேட்டு அர்ஜுன் கீழே இறங்கி வரவும் நேரம் சரியாக இருந்தது.....
அவர்களின் அரவம் கேட்டு சமையல் அறையை விட்டு வெளி வந்தவள் அங்கு அர்ஜூனைக் காண தலைக் குனிந்தவள் குனிந்தவளே... கிட்டத்தட்ட தரை பூமியில் புதைந்துவிடும் அளவிற்குக் குனிந்திருந்தவளை ஸ்ரீயின் கேள்வியே நிமிரச் செய்தது...
"என்னம்மா, அதே சுடிதார் கிடைச்சிச்சா?"
"இல்லத்த... ஆனா கிட்டத்தட்ட அதே மாதிரி வேற இருந்தது.... அத எடுத்து கொடுத்தாங்க" என்றவள் தப்பித் தவறியும் அர்ஜூனை பார்க்கவில்லை....
"வேறு ஏதாவது வாங்கினீங்களா?" என்று ஸ்ரீ கேட்க,
அவள் மனம் முழுவதும் சற்று முன் நடந்திருந்த சம்பவத்திலேயே நிலைக் கொண்டு இருந்ததால் அவரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் திருதிருவென்று முழித்திருந்தவளைக் கண்டவன் அவளைக் கூர்ந்து பார்த்து...
"யெஸ் மாம்...." என்றவன் அவளின் புறம் திரும்பி "ஸாரி (Saree) வாங்கினோம்" என்றான்...
"ஙே" என்று விழித்தவளுக்குத் தான் ஆடை மாற்றும் முன் அவன் வந்ததையே நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு அவன் புடவை என்றதும் சட்டென்று அந்த நினைப்பே வர,
"ஐயோ! இப்போ எதுக்கு எல்லோர் முன்னிலும் இவர் அதைப் பற்றிக் கேட்கிறார்” என்று குழம்ப அவள் முகம் நொடிக்கு ஒரு தரம் மாறுவதைக் கண்டவனுக்குப் புரிந்து போனது....
அவள் இன்னும் அந்த நிமிடங்களில் இருந்து வெளி வரவில்லை என்று... அவளின் தடுமாற்றம் புரிந்தவனாக....
"அதே ஸ்டோரில் ஒரு ஸாரி எடுத்தோமே..... அதைச் சொன்னேன்" என்றான்...
"அப்பாடி" என்றிருந்தது அவளுக்கு......
"சே, அவர் தெரியாமல் ரூமிற்குள் வந்துவிட்டார்.... அதற்காக அதனையேவா நினைத்துக் கொண்டு இருப்பது" என்று நாணியவாறே புடவையை எடுத்து வர எழுந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவர்கள் காரிலேயே வாங்கி வந்த பொருட்களை வைத்துவிட்டு வந்துவிட்டதை......
அவனை நோக்கி "அது கார்லேயே இருக்கு" என்று மெல்லிய குரலில் கூற,
சட்டென்று எழுந்தவன் தன் அறைக்குச் சென்று கார் சாவியை எடுத்து வந்தவன் அவளிடம் கொடுக்க....
"எனக்குக் கார திறக்க தெரியாது" என்றாள் கலக்கத்துடன்.....
அங்கு நடக்கும் அதிசயத்தை உலக அதிசயம் போலப் பார்த்திருந்தது எட்டு ஜோடி கண்கள்.... ஸ்ரீ, பாலா, மஹா, அருணின் கண்களே அவை....
"தி கிரேட் அர்ஜூன் புடவை எடுத்துக் கொடுத்திருக்கிறான்.... மனைவியைத் தனியே வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான்.... வீட்டிற்கு வரும் வழியில் காரில் என்ன நடந்ததோ வாங்கிய பொருட்களைக் கூடக் காரிலேயே மறந்து விட்டிருக்கிறார்கள்.... இப்பொழுது மனைவி சொன்னவுடனே மாடிக்கு சென்று தன் கார் சாவியை, அதுவும் தன் கார் அருகில் கூட யாரையும் அனுமதிக்காதவன் மனைவியிடம் சாவியைக் கொடுத்துப் பொருட்களை எடுத்து வரச் சொல்கிறான்"
அவர்களின் ஆச்சரியப் பார்வையைப் பார்த்தும் கண்டு கொள்ளாதவன் திவ்யாவின் அருகில் நெருங்கி வந்து அவளிடம் காரின் ரிமோட்டை கொடுத்து காரை எப்படித் திறப்பது என்று சொல்லிக் கொடுத்தான்.....
அவன் சொல்ல சொல்ல அவள் தலையை ஆம் என்றும், இல்லை என்றும் மாற்றி மாற்றி ஆட்ட அவளுக்கு ஒன்றும் புரியவில்லை என்று உணர்ந்தவன் மெல்லிய புன்னகை உதிர்த்து சரி வா என்று அழைத்து விட்டு வெளியே செல்ல, அவன் பின்னரே ஓடினாள்..
காருக்கு சென்றவன் திரும்பி பார்க்க, அங்குச் சிறு பெண் போல் ஓடி வரும் மனைவியைக் கண்டவன் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டவனாக அவள் வரும் வரை காத்திருந்து பின் தன்னுடைய காரின் ரிமோட்டை அவளிடம் கொடுத்து எப்படி அதை உபயோகப்படுத்துவது என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க அவளுக்கு அது மண்டையில் ஏறினால் தானே...
அவன் அவள் வெகு அருகில் நெருங்கி நிற்பதில் சகலமும் அடங்கி ஒடுங்க தன்னை மறந்து நின்று கொண்டிருந்தவளுக்குத் தன்னைச் சுற்றி நடக்கும் மற்ற விஷயங்கள் எல்லாம் எங்குத் தெரியப் போகுது?
அதை உணர்ந்தவன் போல்,
"திவ்யா" என்று அழைக்க,
"ஙே" என்று முழித்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க...
"இது தான் காரை அன்லாக் செய்வது... இதை அழுத்தினால் காரின் ட்ரன்க் தானாகத் திறந்து கொள்ளும்" என்று அவளின் விரல் மேலேயே தன்னுடைய விரலை வைத்து அழுத்த அவனின் தொடுகையில் சங்கடத்தில் நெளிந்தவளுக்கு நெஞ்சத்தில் அதிகப்படியான சஞ்சலமும் சலனமும் தோன்றியது....
மெல்லிய விகசிப்பு அவளது பூ முகம் முழுவதும் படர அவன் தீண்டலில் உடல் முழுவதும் நடுக்கம் பரவ, சட்டென்று கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டவள் தலை கவிழ்ந்து நிற்க, தன் ஸ்பரிசத்தால் தடுமாறி நிற்கும் தன் மனையாளை ரசித்தவன் காரில் இருந்து அவர்கள் வாங்கிய ஆடைகள் இருந்த பைகளைத் தானே எடுத்தான்...
அவள் இன்னமும் நடுக்கம் குறையாமல் தடுமாறி தவித்துக் காரின் ரிமோட்டையே பார்ப்பதை பார்த்தவன்....
"இங்கேயே நிற்க போறியா?? இல்லை வீட்டிற்குள் வரப் போறியா??" என்று கேட்டுக் கொண்டே நடக்க,
அவன் கேள்வியில் சுய உணர்வுக்கு வந்தவள் அவனைப் பின் தொடர, அவர்கள் வருகையை ஆவலுடன் பார்த்திருந்த ஸ்ரீ
"பைகளை இங்க கொடு அர்ஜூன்.... புடவையைப் பார்ப்போம்" என்றார்...
அவருக்குத் தன் மகன், அவன் மனைவிக்கு முதன் முதலாக எடுத்துக் கொடுத்த புடவையைப் பார்க்க வேண்டும் என்ற மகா ஆவல்.
புடவையைக் கொடுத்தவன் ஒரு நொடி திரும்பி திவ்யாவை பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் மாடிக்கு செல்ல, புடவையைப் பார்த்தவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்....
அனைவரின் கண்களையும் கவர்வதாக இருந்தது அந்த அழகிய பட்டுப் புடவை.
கலாவிற்கோ அதனின் விலையைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.....
"எதுக்குத் திவ்யா இவ்வளவு விலையில புடவை வாங்கியிருக்க? மாப்பிள்ளை என்ன நினைச்சிருப்பாரு?"
"இல்லம்மா... நான் புடவை எடுக்கும் போது விலையைப் பார்க்கல.... ஆனால் பில் போடும் போது பார்த்திட்டு புடவை வேண்டாம்னு தான் சொன்னேன்... அவங்க தான் கேட்கலை"
இவர்களின் உரையாடல்களைக் கவனித்த ஸ்ரீ....
"கலா.... அவனோட வைஃபுக்கு அவன் புடவை எடுத்துக் கொடுக்கிறான்... அது அவனோட இஷ்டம்.... நாம இதில் எல்லாம் ஒன்னும் சொல்லக் கூடாது" என்று கூறியவரின் மனதிலும் பூரிப்பே நிரம்பி வழிந்தது.....
தன் மகன் கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனைவியிடம் நெருங்குவதை நினைக்கும் பொழுது.....
ஆனால் தன் கணவனின் மனதை, அது தன்னிடம் தன் உரிமையை நிலைநாட்ட தத்தளித்துக் கொண்டு இருப்பதை, இதயத்தால் தன்னை மனைவியாக ஏற்றுக் கொண்டவனின் உள்ளம் உடலாலும் தன்னை ஏற்றுக்கொள்ளத் தவிப்பதை பெண்ணவள் புரிந்துக் கொள்வாளா????
அவள் புரிந்து கொள்ளும் வரை காலம் காத்திருக்குமா? அவள் கணவன் காத்திருப்பானா?
தொடரும்..