அத்தியாயம் - 15
அர்ஜூன் மறுக்காததால் (அவன் மறுத்தாலும் இந்த அம்மா விடப் போவதில்லை!) ஸ்ரீ மறுநாளே கலாவை அழைத்தவர் தாலி பெருக்கி கட்டுவதைப் பற்றிப் பேசி ஒரு நல்ல நாள் குறிக்கச் சொன்னார்....
"ஸ்ரீ..... இப்ப தான் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கார்னு சொல்ற.... அதுக்குள்ளேயுமாடி தாலி பெருக்கிக் கட்டறத செய்யனும்..." என்று கலா இழுக்க...
"கலா.... திவ்யா இன்னும் கயிறுதாண்டி போட்டிருக்கா.... கல்யாணம் பண்ணி இவ்வளவு நாளாச்சு.... எங்க முறைப்படி தாலிக் கொடி தான் போடனும்.... நீ ஒரு நல்ல நாள் பாரு.... விஷேஷத்தை எங்க வீட்டிலேயே வச்சுக்கலாம்" என்று முடித்தார் ஸ்ரீ...
அதற்கு மேல் கலாவால் ஒன்றும் பேச முடியவில்லை....
என்ன தான் ஸ்ரீ தன் தோழியாக இருந்தாலும் இப்பொழுது திவ்யாவின் மாமியார்... அவர் சொற்படி அவர்களின் முறைகளைக் கடைப் பிடித்துத் தான் ஆக வேண்டும்..
தன்னுடைய வீட்டிலேயே விஷேஷத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பாலாவிடம் சொன்னவர் அர்ஜூனிடமும் சொல்ல உடனே ஒத்துக்கொண்டால் அவன் அர்ஜூன் இல்லையே...
"ஏன் மாம்? இப்போ தான் ரிஷப்ஷன் வச்சீங்க.... இப்போ இது எதுக்கு?"...
"அர்ஜூன்... ரிஷப்ஷன் வச்சு ரெண்டு மாசத்திற்கு மேல் ஆச்சு.... இதுக்கும் ரிஷப்ஷனுக்கும் என்ன சம்பந்தம்? அது மட்டுமில்லாமல் திவ்யா வெறும் கயிறு தான் போட்டிருக்கா? நம்ம முறையின் படி தாலியை செயின்ல மாட்டனும்... திவ்யாவின் அப்பாவிற்கும் வினோத்திற்கும் லீவுக் கிடைக்கிறத பொறுத்து கலா ஒரு நல்ல நாள் பார்க்கிறேன்னு சொல்லியிருக்கா.... தயவு செஞ்சு நீ வீட்டுல இருக்கிற மாதிரி பார்த்துக்க…"
திவ்யாவின் தாலியைப் பற்றிச் சொன்னதும் அர்ஜூனிற்கு அவர்களின் திருமண நாள் நியாபகத்தில் வந்தது.....
இரண்டு முடிச்சு போட்டவன் மூன்றாவது முடிச்சு போடுவதற்குள் திவ்யாவின் அருகில் இருந்து யாரோ மூன்றாவது முடிச்சை போட தாலிக் கயிறை வாங்க கையை நீட்ட, என்ன தான் அந்தத் திருமணத்தை அவன் அந்த நிமிடம் அறவே வெறுத்திருந்தாலும், ஆங்காரத்திலும் அவமானத்திலும் அப்பொழுது சுழன்று கொண்டு இருந்தாலும் மனதில் என்னவோ உந்த, தானே மூன்றாவது முடிச்சையும் போட்டு முடித்தான்....
மனதிற்குப் பிடிக்காவிட்டாலும் ஒரு வேளை அவள் தான் இனி நம் வாழ்க்கை என்று அப்பொழுதே அவனின் ஆழ் மனதில் பதிந்திருந்ததோ!!!!!
நினைத்துப் பார்த்தவனுக்கு இந்த நிமிடமே தன்னவளிடம் தன் காதலை சொல்லமாட்டாமோ என்று மனம் ஆர்ப்பரித்தது...
தாலிப் பெருக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கத் தன் மகனின் மனம் வேறு எதனையோ சிந்தித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த ஸ்ரீ...
"அர்ஜூன்..." என்றழைக்க...
சுயநினைவிற்கு வந்தவன் வழக்கம் போல் தன் அன்னையின் பேச்சிற்கு மறு பேச்சு பேச ஸ்ரீக்கு அவனை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்று குழப்பமாக இருந்தது....
ஆனாலும் விடாப்பிடியாக....
"அர்ஜூன்... இதை நாம் செஞ்சு தான் ஆகனும்... கலாவிடமும் ஏற்கனவே பேசியாச்சு.... நான் சொல்ற நாள் நீ வீட்டில் இரு.... அது போதும்"
"மாம், இது லேடீஸ் விஷயம்..... இதுல என்னைய எதுக்கு எதிர்பார்க்கிறீங்கன்னே எனக்குப் புரியலை…." என்று அவன் மேலும் சலித்துக் கொள்ள,
"ம்ம்ம்.. ஏன்னா தாலி மாத்திக்கட்டப் போறது உன்னோட மனைவிக்கு…" என்றவர் அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர்க்க விருப்பம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்...
வெளியே தன் திருமணம் சம்பந்தமான, தன் மனைவிக்கு உசிதமான எந்த விஷயத்தையும் அவன் பிடிக்காதது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவனுக்குமே இது பிடிக்கத் தான் செய்தது...
திருமணம் தான் எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது.... இது போன்ற விஷேஷங்களாவது நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நினைத்தவன் தன் காதலை சொல்லவும் அந்த நாளையே தேர்ந்தெடுத்தான்....
தாலி கட்டிய அன்றுதான் மனதில் காதல் இல்லாது வெறுப்பை மட்டுமே சுமந்திருந்தேன்....
தாலியை மாற்றும் அன்றாவது என் சித்தத்தில் கலந்திருக்கும் காதலை என் இதயத்தில் சுமந்திருக்கும் என்னவளுக்கு வெளிப்படுத்தி அவளை என்னவளாக முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும்.......
அந்த இனிமையான நாளிலேயே தன்னுடைய பரிசு பொருளையும் அவளுக்குக் கொடுக்க முடிவு செய்தான்...
நல்ல நாளை முடிவு செய்து நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்த ஸ்ரீ பாக்யத்தை மட்டும் அழைக்கவில்லை...
அவருக்கு நன்றாகத் தெரியும், அவள் வந்தால் தாலி பெருக்கி கட்டும் போது நிச்சயம் ஏதாவது அபசகுனமாகப் பேசுவாள் என்று.
நாள் குறித்து முடிந்ததும் அர்ஜூனிடம் அதனைப் பற்றிப் பேச...
ஆனால் அர்ஜூனின் நேரம் அன்று அவன் தங்களின் மிகப் பெரிய க்ளையண்டுகள் சிலரை சந்திக்க வேண்டி பெங்களூர் செல்ல வேண்டியிருந்தது....
"டாட்.... நான் சில க்ளையண்ட்ஸ மீட் பண்றதுக்காகப் பெங்களூர் போறேன்.... ஏற்கனவே ஷெடியூல் பண்ணியாச்சு.... நான் இந்த ஃபங்ஷனுக்கு ரெண்டு நாள் முன்னாடியே கிளம்புகிறேன்.... அன்னைக்கு நான் எங்கிருப்பேன் என்று இப்போ என்னால கண்டிப்பா சொல்ல முடியாது…"
"என்ன அர்ஜூன்... எப்பவோ உன் கிட்ட இதைப் பற்றிப் பேசியாச்சு... திரும்பவும் இப்படிச் சொன்னால் எப்படி?
ஸ்ரீக்கு அர்ஜூன் இந்த விஷேஷத்தில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் வேண்டும் என்றே தான் பெங்களூர் போவதாகத் தோன்றியது....
ஆனால் அர்ஜூன் சொன்னது போல் உண்மையிலேயே இது அவன் தவிர்க்க முடியாத தொழில் சம்பந்தப்பட்ட மீட்டிங்...
இவர்கள் இதனைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்க, அவர்களின் விவாதங்களைக் கவனித்துக் கொண்டு இருந்த திவ்யாவின் மனம் மேலும் அடிப்பட்டுக் காயம் கண்டது....
வெளி நாட்டில் இருந்து வந்ததில் இருந்து அர்ஜூனை அவள் அடிக்கடி காணும் சந்தர்ப்பம் அமையாவிட்டாலும், அவனும் அவன் அலுவலகமே கதியென்று கிடந்திருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத அமைதி அவள் மனதில் உலவி கொண்டு தான் இருந்தது....
ஒரு வேளை இத்தனை நாட்கள் பிரிந்திருந்த கணவன் வீடு வந்து சேர்ந்ததில் வந்த நிம்மதியோ அல்லது அவ்வப்பொழுதாவது அவனைப் பார்க்க முடிகிறதே என்ற சந்தோஷமோ...
அப்படி இருக்க அத்தையும் மாமாவும் இவ்வளவு எடுத்து சொல்லியும் அவருக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை போல் என்று நினைத்தவளின் இதயத்தில் புதிதாக அரும்பிய மொட்டுத் தீயில் பட்டுக் கருகியது போல் இருந்தது..
"அவருக்குப் பிரியமில்லாத காரியத்தை ஏன் அத்தையும் இந்த அம்மாவும் செய்கிறார்கள்? இந்தச் சூழலில் அவசியம் தாலி மாற்றிக் கட்ட வேண்டுமா?" என்று மனதிற்குள் எண்ணியவள் தன் விழிநீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொள்ள, அது அவளருகில் இருந்த மஹாவின் கண்களிலிருந்து தப்பவில்லை...
"என் வயது ஒத்தவர் தான் திவ்யா அண்ணி... இன்னும் சொல்ல போனால் என்னை விடச் சின்னவர்.... இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரோ இல்லையோ ஆனால் பாவம் நிம்மதியாக இல்லை...."
என்று மனம் வெதும்பியவள் தன் ஒட்டு மொத்த தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு தன் அண்ணிக்காகப் பேச முதன் முறை அர்ஜூனின் அறைக் கதவை தட்டினாள்....
"கம் இன்…" என்று அவன் பணிக்கவும் உள்ளே சென்றவள் சில விநாடிகள் தயங்க அவளைக் கூர்ந்து பார்த்தவாறே....
"வாட் மஹா? எனி ப்ராப்ளம்?" என்றான்....
மஹா கலாட்டா பண்ணுவது, கதை அளப்பது எல்லாம் அருணிடம் மட்டும் தான்.... அர்ஜூனிடம் அதெல்லாம் செல்லுபடி ஆகாது....
ஏன்? என்ன? எதற்கு? அவ்வளவு தான்... கேள்விகளும் சரி பதில்களும் சரி அனைத்துமே ஒற்றை வரியிலேயே முடிந்துவிடும்...
அவனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல் "வீராப்பாக வந்தாச்சு, இனி பேசாமல் போக முடியாது" என்று நினைத்தவள் மெதுவாக...
"அண்ணா.... நான் கொஞ்சம் உங்கள் கூடப் பேசனும்" என்றாள்...
அவளின் அருகில் வந்தவன் கதவை சாத்திவிட்டு அவளை நோக்கி புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல் பார்க்க,
மனதிற்குள் ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்திருந்த கேள்விகளைச் சடசடவெனக் கேட்டுவிட்டாள்....
"ஏன் அண்ணா இப்படி இருக்கிறீங்க? எதுக்கு ஒரு சின்னப் பெண்ணை இவ்வளவு ஹெர்ட் பண்றீங்க? அவங்க பாவமில்லை?"
அவள் திவ்யாவை பற்றித் தான் பேசுகிறாள் என்று புரிந்துக் கொண்டவன் மென்மையாகப் புன்னகைத்தவாறே....
"அவ உனக்குச் சின்னப் பெண்ணா?" என்று கேட்க..
"ஆமாம் என்னைய விட அண்ணி மூனு வயசு சின்னவங்க தானே…" என்றவள் இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற கலக்கத்துடனேயே தொடர்ந்தாள்...
"ஆனால் இதைப் பற்றிப் பேச எனக்கும் வயசில்ல தான்.... அதே சமயம் என்னால பேசாமலும் இருக்க முடியலைண்ணா..... உங்க ரெண்டு பேர் கல்யாணமும் நடந்த விதம் சரியில்லாமல் இருக்கலாம்..... இட்ஸ் நாட் ஃபேர் பார் போத் ஆஃப் யூ [Its not fair for both of you"] , உங்களோட மனநிலை எப்படி இருந்திருக்குமோ அப்படித் தான் அண்ணியோட மன நிலையும் இருந்திருக்கும்..... அதுக்காக நீங்களும் அண்ணியும் ஒன்னுன்னு நான் சொல்ல வரலை.... நீங்க வேற அண்ணி வேற தான்..... ஆனால் அதே சமயம் ஒரு பெண்ணா அவங்க என்ன மன நிலையோட அப்போ இருந்திருப்பாங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியும்..... ரெண்டு பேர் மேலேயும் தப்பு இல்லைங்கிற போது இப்படி அவங்கள எதுக்கெடுத்தாலும் ஹெர்ட் பண்றது சரியில்லைண்ணா..... அவங்க ரொம்ப இன்னசண்ட்...... பாவம்ண்ணா..... உங்களுக்கு அவங்கள பிடிக்கலைன்னா கூடப் பரவாயில்லை.... ஆனால் எனக்குத் தெரியும் உங்களுக்கு அவங்கள பிடிச்சிருக்குன்னு"
என்று அவள் கூறும் பொழுது அவளை உற்று நோக்கியவன் பதில் எதுவும் கூறாமல் அவளையே பார்த்திருக்க...
அவனின் கழுகு பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பேச்சு தொண்டையிலேயே சிக்கிக் கொள்ள விக்கித்துப் போய் நின்றாள்....
ஆனால் அவன் மேலே பேசு என்பது போல் தலையை அசைத்துச் சைகை செய்ய, வேறு வழியின்றி அவளே தொடர்ந்தாள்...
"இது எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்கிறீங்களா? அவங்களுக்குச் சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கிறதும், நீங்க அண்ணிய பார்க்குற பார்வையுமே சொல்லுதே.." என்றவள் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் குனிந்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்..
"அதனால ப்ளீஸ்.... இத இப்படியே இழுக்கறத விட்டுட்டு போய் உங்க லவ்வ சொல்லுங்க…" என்றவள் சொன்னதும் தான் புரிந்தது இது நாம ரிகர்ஸல் பார்த்த வார்த்தைகளே இல்லையே என்று....
ஏதோ ஒரு ஆர்வத்தில் கூறிவிட.... "ஐய்யய்யோ!! போச்சு, திட்டு விழப் போகுது" என்று அஞ்சிக் கொண்டு அவனையே பார்த்திருக்க, அவனோ...
"அடிப்பாவி! என்ன பேச்சு பேசுகிறாள்?" என்பது போல் மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை....
இதற்கு மேல் என்ன பேசுவது என்று மஹாவிற்கும் தெரியாமல் சலிப்புடன் தன் அறைக்குத் திரும்பினாள்...
காரை ஓட்டிக்கொண்டு தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த அர்ஜூனிற்கு மனமெல்லாம் மஹா சொன்னதிலேயே நிலைத்து இருந்தது...
திவ்யாவை தான் திருமணம் செய்த நாளை நினைத்தவன், தன் அன்னை திவ்யாவிடம் தன்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்ட பொழுது தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்காது கலாவைப் பார்த்தது...
பின் திருமணச் சடங்கின் போது மிகுந்த அச்சத்தோடு தலை குனிந்தவாறே தன் அருகில் அமர்ந்து இருந்தது... சென்னைக்கு வந்ததற்குப் பிறகு தன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஓடி ஒளிந்தது..... அந்த மழை நாளில் தன்னைக் கிண்டல் செய்த வாலிபர்களைப் பார்த்து பயந்து தன்னிடம் ஒண்டிக் கொண்டது...... உடை மாற்றும் பொழுது தன்னைப் பார்த்து பயந்து நடுங்கியது.....
பின் தான் யூ.எஸ் செல்ல கிளம்பிய பொழுது கலங்கிய முகத்துடனும் அழுத விழிகளுடனும் தன்னை மௌனமாக வழி அனுப்பியது என்று ஒன்றன் பின் ஒன்றாக மனதிற்குள் ஓட அந்தக் கணம் இத்தனை நாளாய் தான் இழந்தது என்ன என்பதை உணர்ந்தவன் எப்பொழுதோ தன் இதயத்தில் அழுத்தமாகக் காலடியை எடுத்து வைத்திருந்த காதலை தன் மனம் கவர்ந்த மனையாளிடம் சொல்வதற்குத் தயாரானான்...
"எப்படியும் திவ்யாவின் தாலிப் பெருக்கிற்குள் திரும்பி வந்துவிட வேண்டும்" என்று முடிவெடுத்தவன் விஷேஷத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பெங்களூருக்கு கிளம்ப இத்தனை சொல்லியும் கிளம்புகிறாரே என்று நினைத்த திவ்யாவிற்குத் தான் மனம் தவித்துப் போனது...
ஆனால் அவள் கணவன் தன் உள்ளத்திற்குள் புதைத்து வைத்து இருந்த தன்னவளின் மீது இருந்த அளவுக்கடந்த காதல் அவளுக்குப் புரிய வாய்ப்பில்லையே..
கலா குறித்திருந்த தேதியிலே தாலி பெருக்கிற்கு ஏற்பாடு செய்ய, தாலி பெருக்கு அன்று நெருங்கிய சொந்தங்கள் வர ஆரம்பிக்க வீடு களை கட்டியது.
திருமணப் பட்டு புடவையில் அழகுற தேவதைப் போன்று நின்று இருந்த தன் மகளின் அருகே வந்த கலாவிற்கு அவள் கண்களில் தெரிந்த சோகம் எதனையோ உணர்த்த நெருங்கி வந்தவர்,
"எங்கம்மா, மாப்பிள்ளைய காணோம்?" என்றார்..
"இல்லம்மா, அவங்க திடீர்னு பெங்களூருக்கு போற வேலை வந்திடுச்சு.... பிஸினஸ் விஷயமா போயிருக்காங்க... அவங்களுக்குப் பிஸினஸ் தான் முதல் மனைவி…" என்று சிரித்தபடியே கூற,
அவளின் உயிரோட்டமில்லாத புன்னகையைப் பார்த்த கலாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது..... ஆக இன்னும் இவர்களுக்குள் ஒரு இணக்கம் வரவில்லை....
மனம் கனக்க....
"நீ சந்தோஷமா இருக்கியா திவ்யா?"
"எனக்கு என்னம்மா குறைச்சல்? அத்த, மாமா, மஹா அண்ணி, அருண் அத்தான் எல்லோரும் என்கிட்ட பாசமா இருக்காங்க..... நான் என்றால் இவங்க அத்தனை பேருக்கும் அவ்வளவு பிரியம்" என்றவள் மறந்தும் கூடத் தன் கணவனைப் பற்றிக் குறிப்பிடவில்லை....
பெற்றவளுக்குப் புரிந்து போனது.... மற்ற அனைவரையும் கூறியவள் வேண்டும் என்றே தான் தன் கணவனைப் பற்றிச் சொல்லவில்லை என்று...
சந்தோஷமாக விஷேஷத்திற்கு வந்தவருக்கு மகளின் கலங்கிய முகமும் பேச்சும் மனதிற்குள் பாரமாக இருக்க அவளின் தலையைத் தடவிவிட்டவர் ஒன்றும் பேசாமல் மௌனமாகவே இருக்க, அதற்குள் கீழே இருந்து ஸ்ரீ அழைத்தார்....
திவ்யாவின் அருகில் வந்த ஸ்ரீ....
"கலா, பார்த்தியா? என் மருமகளை.... எவ்வளவு அழகா இருக்கான்னு?" என்றவரின் முகம் பெருமையில் வழிந்தாலும் இந்த அழகினை அனுபவிக்க வேண்டிய தன் மகன் இவ்வாறு தள்ளி இருக்கிறானே என்று உள்ளுக்குள் வருந்தவும் தவறவில்லை....
இதனைப் பார்த்தவாறே வந்த வினோத் திவ்யாவிடம் வந்தவன் அர்ஜூனைப் பற்றிக் கேட்க, திவ்யா சொன்ன பதிலை கலா அவனிடம் சொல்ல, கேட்டுக் கொண்டிருந்தவனின் கண்கள் சட்டென்று மாடிப் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த மஹாவின் மேல் நிலைத்தது...
அழகு தேவதை என மெல்ல அசைந்து படிகளில் இறங்கி வந்து கொண்டு இருந்தவள் அதே நேரம் அவனைப் பார்க்க அவனின் விழுங்கிவிடும் பார்வையில் தன் விழிகளைத் தாழ்த்தியவள்....
"பார்க்கிறதுக்குத் தான் இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமான்னு இருக்கு... ஆனா பார்வை மட்டும் கரெக்டா நம்ம மேல விழுது" என்று நினைத்துக் கொண்டு கலாவின் அருகில் வந்தவள், தான் அணிந்திருந்த புடவையைக் காண்பித்தவள்.....
"எப்படி இருக்கு அத்தை?" என்றாள்...
பார்வை என்னவோ கலாவைப் பார்த்து தான் ஆனால் கேள்வி தன் மனம் கவர்ந்தவனுக்கே என்பது போல் இருந்தது அவள் கேட்ட விதமும் முகப் பாவனையும்...
ஒரு முறை பேச்சு வாக்காகத் திவ்யா அவளிடம் சொல்லி இருக்கிறாள் வினோத்திற்குச் சிட்டி பெண்களின் நாகரிக உடைகள் சுத்தமாகப் பிடிக்காது என்று...
அதனாலேயே அவள் திவ்யாவிடம் நாசுக்காக வினோத்திற்கு என்ன நிறம் பிடிக்கும் என்று விசாரித்து ஏகப்பட்ட கடைகளில் ஏறி இறங்கி அலைந்து திரிந்து இந்தப் புடவையை வாங்கி இருந்தாள்.....
எந்த விஷேஷத்திற்கும் சுடிதார், டாப்ஸ், ஜீன்ஸ் என்று அணியும் மகள் திடீரென்று இன்று புடவை அணிந்திருப்பதைக் கண்ட ஸ்ரீக்கு கூட மிகுந்த ஆச்சரியம்.
அவளின் நிறத்திற்கு அவள் அணிந்திருந்த பச்சை நிற பட்டுப் புடவையும் அதில் அடர்ந்த பிங்க் நிற கரையும் அத்தனை எடுப்பாக இருந்தது.
"மாம், நான் எப்படி இருக்கேன்?" என்று சிறிது சத்தமாகவே கூறவே,
வேறு எங்கோ பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்த வினோத் சட்டென்று இவளை திரும்பி பார்க்க, அவனைப் பார்க்காதது போல் சென்றவளைப் பார்த்தவன்,
"ராட்சஷி, என்னம்மா கத்தறா" என்று நினைத்துக் கொண்டவன் அவளின் அழகில் மயங்கவும் தவறவில்லை.
அர்ஜுனைப் போன்று நல்ல சிவந்த நிறம்.... வரைந்து வைத்த ஓவியம் போன்று அபாரமான அழகு.... சிலைப் போன்ற உடல்வாகு... அழகான புருவங்களுடன் கூடிய விழிகள், அழகான வடிவான இதழ்கள் என்று சர்வ லட்ஷணமாய் இருந்தவளைப் பார்க்க பார்க்க அவனுக்குத் திகட்டவில்லை....
சுவற்றுக்கு முதுகு கொடுத்து சாய்ந்தவாறு நின்று அவனைப் பார்த்தவளை கண்டவனுக்கு அதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் யாரும் அறியாத வண்ணம் அவளின் அருகில் நெருங்கி நின்றவன் அவளின் விரல்களுக்குள் தன் விரல்களைக் கோர்க்க, அவன் தன் அருகில் வருவதைக் கண்டவுடனே இதயம் பலமாகத் துடிக்க ஆரம்பித்ததை உணர்ந்து இருந்தவளுக்கு அவன் தன் விரல்களைப் பிடிக்கவும் உதறல் எடுக்க ஆரம்பித்தது....
"என்ன தைரியத்தில் இத்தனை பேர் இருக்கும் பொழுது இவர் இப்படி என் கையைப் பிடிக்கிறார்? திவ்யா அண்ணி போல் இவர் பயந்த சுபாவம் இல்லை போல்... நான் சத்தம் போட மாட்டேன் என்கிற தைரியமோ???" என்று நினைத்துக் கொண்டவள் அவன் விரல்களில் இருந்து தன் விரல்களைப் பிரித்துக் கொள்ளப் போராட அவன் பிடியோ உடும்பு பிடியாக இருந்தது....
அவனது அகலமான வலுவான கரத்திற்குள் அவளின் பஞ்சு விரல்களை அனைத்தையும் அழுத்தி கோர்த்துக் கொண்டவன் அவளின் பக்கம் திரும்பாமலே புன்னகைத்துக் கொண்டு இருக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள் மெல்லிய குரலில்...
"ப்ளீஸ் விடுங்க... யாராவது பார்த்திறப் போறாங்க…" என்று கெஞ்ச...
அவளின் முகப் பாவனையில் தன்னைத் தொலைத்தவன் ஒரு முறை கரத்தை அழுத்திப் பிடித்துப் பின் விடுவிக்க, விட்டால் போதும் என்று ஓடிச் சென்று திவ்யாவின் அருகே நின்றுக் கொண்டாள் வினோத்திற்கு மட்டுமே உரிய அவனின் அழகிய ராட்ஷசி....
திவ்யாவை அங்குப் போடப்பட்டிருந்த மனையில் அமர செய்தவர்கள் நல்ல நேரம் பார்த்து தாலி மாற்றும் சடங்கை துவங்கினர்....
நேரம் ஆக ஆக அவளின் மெல்லிய மனம் அங்குத் தன் கணவனின் இல்லாமையை நினைத்து வருந்த எத்தனை முயற்சித்தும் அவளால் தன் உள்ளத்தில் ஓடும் சிந்தனைகளை அகற்ற முடியாமல் அவளின் அழகிய முகம் அவள் உணர்வுகளை அப்பட்டமாக வெளிக் கொண்டு வந்திருந்தது....
அவளின் புன்முறுவலில் கூட ஏதோ ஒரு வலி தெரிவது போல் இருக்க, அவள் அருகில் வந்த ஸ்ரீ அவளின் பட்டுக் கன்னத்தில் சந்தனம் பூசிவிட்டவர்,
"திவ்யா... மனசுக்குள்ள எதையாவது போட்டு குழம்பிக்காதடா.... எல்லாம் நல்ல படியா நடக்கும்" என்றவாறே உச்சி வகிட்டில் குங்குமம் வைத்தவர் சுமங்கலிப் பெண்களைத் தாலிக் கயிறை மாற்ற அழைக்கத் திவ்யாவின் இதயத்தை மகிழ்ச்சியில் பூரிக்கச் செய்வது போல் சரியாக வீட்டிற்குள் நுழைந்தான் அர்ஜூன்..
மனையில் அமர்ந்திருந்தவள் அர்ஜூன் உள்ளே நுழைந்ததும் எதிர்பாராதவிதமாகத் தன் கணவனை அங்குக் கண்டவளுக்கு மனதிற்குள் சில்லென்று ஒரு இனிமையான உணர்வு தாக்கி உடலில் மயிற்கால்கள் சிலிர்க்க தன்னையும் அறியாமல் எழ முற்பட, அவளைப் பார்த்து புன்னகைத்தவன் வேண்டாம் என்று சைகை மட்டும் செய்துவிட்டு அவளைப் பார்த்தவாறே மாடி ஏறினான்...
மருமகனின் வருகை கலாவிற்கு நிம்மதியாகவும் பாலாவிற்கும் ஸ்ரீக்கும் ஆச்சரியமாகவும் இருந்தது...
அன்று அவ்வளவு எடுத்து சொல்லியும் முடியாது என்று போனவன், இன்று சொல்லாமலே வந்திருக்கிறான்...
"ஒரு வேளை அவன் சென்ற வேலை முடிந்ததோ?" என்று யோசித்துக் கொண்டு இருந்த ஸ்ரீ திவ்யாவை பார்க்க, உள்ளத்தில் இருந்த மகிழ்ச்சி முகத்தில் அப்பட்டமாகத் தெரிய தன் கணவனின் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்தாள் அந்தச் சின்னப் பெண்...
கடவுளே இந்தப் பெண்ணின் மகிழ்ச்சிக்காகவாவது தன் மகன் இந்த விஷேஷத்திற்குத் தான் வந்தேன் என்று கூற வேண்டுமே என்று மனதார வேண்டிக் கொண்டார் ஸ்ரீ...
தன் அறைக்குள் சென்று சிறிது நேரத்தில் குளித்து முடித்து வெள்ளை நிற முழுக்கை சட்டையும், அடர் நீல நிற ஜீன்ஸும் அணிந்து, முழுக்கை சட்டையை முழங்கை வரை மேலே ஏற்றி மடித்துக் கொண்டே சிறு புன்சிரிப்புடன் மாடிப் படிகளில் விடுவிடுவென்று இறங்கிக் கொண்டிருந்த மகனை பெருமிதத்துடன் அவன் அன்னை பார்த்தார் என்றால், அவனின் அழகில் மதி மயங்கி அவனை அள்ளி பருகுவதைப் போல் அவனின் மனையாள் பார்த்துக் கொண்டிருந்தாள்.....
"அண்ணி பார்த்து, அண்ணனை சைட் அடிச்சதுப் போதும்....." என்று மஹா காதுக்கருகில் நெருங்கி கிசுகிசுப்பாகச் சொன்னவுடன் தான் சுய உணர்வுக்கு வந்த திவ்யா, அர்ஜூன் அவளின் எதிரில் போட்டிருந்த சேரில் அமர, சடக்கென்று வழக்கம் போல் தலையைக் குனிந்துக் கொண்டாள்.
அவள் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததையும் கண்டவன், இப்பொழுது அவள் எதிரில் அமர்ந்ததும் முகத்தில் வெட்கமும் கூச்சமும் அதே சமயம் வழக்கம் போல் அவனைக் கண்டதும் வரும் அச்சமும் கலந்து தலை கவிழ்ந்து இருப்பதையும் கண்டவனுக்கு அத்தனை கர்வமாக இருந்தது தன்னவளின் அழகும் தன்னைக் கண்டதும் தோன்றிய அவளின் நாணமும்...
வெளிநாட்டில் இருந்து அவன் திரும்பி வந்ததற்குப் பிறகு இந்தச் சில நாட்களாக அவளுடன் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் அமையாது போக அவனுக்கு எதிரே வர அவளும் அஞ்சி ஓடி ஒளிந்து இருக்க, அவளின் அழகிய முகத்தை உரிமையுடன் பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக இன்று அவளுக்கு நேருக்கு நேர் அமர்ந்து இருப்பது அத்தனை இன்பமாக இருந்தது அர்ஜூனிற்கு...
அவளின் உச்சி வகிட்டில் அதிகமாகக் குங்கும் வைக்கப் பட்டிருந்ததால் அது சிறிதே சிதறி அவளின் முகத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பட்டிருக்க, தன் கணவன் தன் எதிரே அமர்ந்து தன்னை ஊடுருவும் பார்வைப் பார்த்திருப்பதை அவளின் உள்ளுணர்வு எடுத்துச் சொல்லியிருந்ததால் முகத்தில் சிதறி இருக்கும் குங்குமத்தின் நிறத்திற்குப் போட்டி போடுவது போல் அவளின் குழைந்த முகம் சிவந்திருக்க....
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த அர்ஜூனோ மேனகையிடம் தோற்ற விசுவாமித்ரன் நிலையில் இருந்தான்.....
வாழ்க்கையில் பயம் என்பதையே அறியாதவன்.... ஒற்றை வார்த்தையிலேயே தன்னைச் சுற்றி இருப்பவர்களை ஆட்டிப் படைப்பவன்...
ஆனால் இன்றோ இந்தச் சின்னப் பெண்ணிடம் எப்படித் தன் காதலை சொல்லுவது என்று மனதிற்குள் ஆயிரமாவது தடவையாக ஒத்திகைப் பார்த்துக் கொண்டான்...
அனைவரும் சடங்குகளை முடித்தவுடன், வந்திருந்த விருந்தினர்களில் ஒரு வயதான சுமங்கலி பெண் அர்ஜூனைப் பார்த்து,
"நீ வாப்பா, வந்து தாலியில் மஞ்சளும் குங்குமமும் வைத்துவிடு" என்று கூற, இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத திவ்யாவிற்குத் திக்கென்றதில் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது....
"ஏற்கனவே அத்தையும் மாமாவும் அத்தனை எடுத்து சொல்லியும் முக்கிய வேலை இருக்கிறது என்று வெளியூருக்கு போனவர், சென்ற வேலை முடிந்ததோ என்னவோ அதிசயமாக இன்றே வந்திருக்கிறார்...."
"வந்தவர் வேறு எங்கும் செல்லாமல் இப்படி அமைதியாக மற்றவர்களுடன் சேர்ந்து அமர்ந்திருப்பதே பெரிசு... இதில் இது வேறையா?" என்று கலங்கியவளுக்குத் தன் கணவன் என்ன சொல்லப் போகிறானோ என்று திகிலாக இருந்தது.....
ஆனால் திவ்யாவும் அவன் பெற்றோரும் உடன் பிறப்புகளும் வியப்பில் மூக்கில் விரல் வைப்பது போல் அவன் இளம் முறுவலுடன் எழவும், அதனைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத திவ்யாவிற்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்ததில் கை கால் உதறல் எடுக்கத் துவங்கியது.....
மெதுவாக எழுந்தவன் அழுத்தமான காலடிகளுடன் அவளை நோக்கி நடந்து வர, அவள் இதயம் படபடவென்று வேகமாகத் துடிக்க ஆரம்பித்ததில் எங்கே இதயமே வெளியே வந்து விழுந்து விடுமோ என்பது போல் இருக்க அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் கண்களில் தெரிந்த விஷம சிரிப்பு அவளை நாணத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது...
அவளின் அருகே வந்தவன் அவளுக்கு அருகில் ஒரு காலை மடித்து மண்டியிட்டவாறு தன்னை மஞ்சள் குங்குமம் வைக்கச் சொன்ன பெண்மணியைத் திரும்பி பார்க்க, அவர் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்...
முதலில் சந்தனத்தை எடுத்து அவளின் கன்னங்களில் பூச சொல்ல, தன் மனையாளை பார்வையிலேயே பருகியவாறு கிண்ணத்தில் இருந்து சந்தனத்தைக் கையில் எடுத்தவன் குனிந்து அவளுக்கு வலிக்குமோ என்பது போல் மென்மையாக அவளின் பட்டுக் கன்னத்தில் தடவ....
அவளுக்குக் கணவனின் தொடுகையில் அதுவும் கன்னத்தில் அவனின் மென்மையான தடவலில் சங்கடமும் சிலிர்ப்பும் மாற்றி மாற்றித் தோன்ற சித்தத்தின் சுழற்சியில் ஆட்கொண்டிருந்தவள் அவன் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் விழிகளைத் தாழ்த்தினாள்....
அவளின் நாணத்தை ரசித்தவாறே அவளை இறுக்கி அணைத்துக் கொள்ளத் தூண்டிய உணர்வுகளை மிகுந்த சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அடுத்து அவர்கள் செய்யச் சொன்னதில் அவன் கட்டுப்பாடுக்களைத் தகர்த்து எறிந்தான்....
திவ்யாவின் தாலியில் மஞ்சளையும் குங்குமத்தையும் அந்தப் பெண்மணி பூச சொல்ல, திவ்யாவை மீண்டும் கூர்ந்து பார்த்தவன் வேண்டும் என்றே தன் இடது கையை அவளின் மார்பில் வைத்து அழுத்தி லேசாகத் தாலியை தூக்கி, மெல்ல தன் வலது கையில் மஞ்சளை எடுத்து பூச, மார்பில் ஆழ அழுத்தி புதைந்திருந்த அவன் கையினால் ஏற்கனவே திக்திக் என்று இருந்தவளுக்கு இப்பொழுது மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது....
அவனின் இந்த அழுத்தமான தொடுதல் அதிர்ச்சியையும் கூச்சத்தையும் கொடுக்க, சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தவளின் இதயத்தைத் தன்னுடைய காதல் சொட்டும் பார்வையில் தடம் புரளச் செய்த அந்தக் காதல் கயவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, அவளின் முகம் நாணத்தில் அதிகாலை சூரியனைப் போல் அத்தனை இரத்த சிகப்பாய் மாறியது...
ஒருவருக்கொருவர் வெகு அருகில் இருந்த பொழுதும், இத்தனை காதலை இதயம் முழுவதும் சுமந்திருந்த பொழுதும் தன் கணவனின் மீது இருந்த அதிகப்பட்ச அச்சத்தால் அவள் விலகியிருக்க, தன் காதலை சொல்ல தடுமாறி அவன் தவித்து இருக்க, இவர்களின் மனங்கள் மட்டும் மௌனமாக ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு இருந்தது....
தனது தொடுகையும், தான் கண் சிமிட்டியதால் அவளின் முகம் சிவந்ததையும், அகல விரிந்த கண்களில் தெரிந்த அவளின் காதலையும் பார்த்தவன், அடி வயிற்றில் இருந்து இதயத்திற்கு ஊடுருவி சென்ற இந்த உணர்வு அவனின் சித்தத்தைத் தடுமாறச் செய்ய, உணர்ச்சி கொந்தளிப்பின் சுழலில் சிக்கியவனுக்குத் தன் கரத்தை அவளின் மார்பில் இருந்து எடுக்க முடியாமல் போனது....
சுற்றி இருந்தவர்களின் களுக்கென்ற சிரிப்புச் சத்தம் தன் நிலையை உணர்த்த இவ்வுலத்திற்குத் திரும்பி வந்தவனின் முகத்தில் தோன்றிய நாணம் ஆண்களுக்குக் கூட வெட்கம் வருமோ என்பது போல் அத்தனை அழகாக அம்சமாக இருந்தது....
சூழ்நிலை புரிந்த அடுத்த நொடி சட்டென்று அங்கிருந்து எழுந்தவன் புன் சிரிப்புடன் மற்றவர்களை நோக்கி விட்டு தன் இடத்தில் சென்று அமர திவ்யா தலை குனிந்தவள் குனிந்தவள் தான்....
விஷேஷம் முடியும் வரை அவள் தன் கணவனை நிமிர்ந்து பார்க்கவில்லை....
இவர்களின் பார்வை பரிமாற்றத்தைக் கவனித்திருந்த மஹா தன்னிச்சையாகத் தன் மனம் கவர்ந்தவனைப் பார்க்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனும் அவளின் எண்ணம் புரிந்து அவளைப் பார்த்துக் கண் சிமிட்ட,
"அடப்பாவி, அவங்க இரண்டு பேரும் கல்யாணம் ஆனவங்க... அதனால் அண்ணா அண்ணியைப் பார்த்து கண்ணடிக்கிறாரு... இவருக்கு என்ன இத்தனை துணிச்சல்? அதுவும் இத்தனை பேரு இருக்கும் போது.... இது தான் கிராமத்துத் தைரியம் என்பதா?" என்று நினைத்தவள் சட்டென்று தன் பார்வையைத் திருப்பிக் கொள்ள அவனுக்குத் தான் மனம் சிறகு விரித்துப் பறக்க ஆரம்பித்தது...
அந்த விநாடி மஹாவின் வசதி அவன் கண்களுக்குத் தெரியவில்லை.... தன்னுடைய நிலை அவன் கண்களுக்குத் தெரியவில்லை..... தெரிந்தது எல்லாம் தன்னவளின் காதல் கொண்ட விழிகளும், வெட்கத்தில் சிவந்திருக்கும் முகமுமே....
அவளின் வெட்கத்தைத் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்த வினோத் இன்றே அவளைத் தனிமையில் சந்திக்க முடிவு செய்தான்...
ஒரே வீட்டில் இரு ஆண்கள் தங்களின் இணையிடம் தங்கள் காதலை, உள்ளத்தை வெளிப்படுத்த தக்க நேரம், சூழ்நிலை பார்த்து காத்திருந்தனர்......
அர்ஜூன், வினோத்..... இருவரும் தங்கள் மனம் கவர்ந்த பெண்களிடம் தங்கள் இதயத்தைத் திறப்பார்களா?
அர்ஜூன் மறுக்காததால் (அவன் மறுத்தாலும் இந்த அம்மா விடப் போவதில்லை!) ஸ்ரீ மறுநாளே கலாவை அழைத்தவர் தாலி பெருக்கி கட்டுவதைப் பற்றிப் பேசி ஒரு நல்ல நாள் குறிக்கச் சொன்னார்....
"ஸ்ரீ..... இப்ப தான் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கார்னு சொல்ற.... அதுக்குள்ளேயுமாடி தாலி பெருக்கிக் கட்டறத செய்யனும்..." என்று கலா இழுக்க...
"கலா.... திவ்யா இன்னும் கயிறுதாண்டி போட்டிருக்கா.... கல்யாணம் பண்ணி இவ்வளவு நாளாச்சு.... எங்க முறைப்படி தாலிக் கொடி தான் போடனும்.... நீ ஒரு நல்ல நாள் பாரு.... விஷேஷத்தை எங்க வீட்டிலேயே வச்சுக்கலாம்" என்று முடித்தார் ஸ்ரீ...
அதற்கு மேல் கலாவால் ஒன்றும் பேச முடியவில்லை....
என்ன தான் ஸ்ரீ தன் தோழியாக இருந்தாலும் இப்பொழுது திவ்யாவின் மாமியார்... அவர் சொற்படி அவர்களின் முறைகளைக் கடைப் பிடித்துத் தான் ஆக வேண்டும்..
தன்னுடைய வீட்டிலேயே விஷேஷத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பாலாவிடம் சொன்னவர் அர்ஜூனிடமும் சொல்ல உடனே ஒத்துக்கொண்டால் அவன் அர்ஜூன் இல்லையே...
"ஏன் மாம்? இப்போ தான் ரிஷப்ஷன் வச்சீங்க.... இப்போ இது எதுக்கு?"...
"அர்ஜூன்... ரிஷப்ஷன் வச்சு ரெண்டு மாசத்திற்கு மேல் ஆச்சு.... இதுக்கும் ரிஷப்ஷனுக்கும் என்ன சம்பந்தம்? அது மட்டுமில்லாமல் திவ்யா வெறும் கயிறு தான் போட்டிருக்கா? நம்ம முறையின் படி தாலியை செயின்ல மாட்டனும்... திவ்யாவின் அப்பாவிற்கும் வினோத்திற்கும் லீவுக் கிடைக்கிறத பொறுத்து கலா ஒரு நல்ல நாள் பார்க்கிறேன்னு சொல்லியிருக்கா.... தயவு செஞ்சு நீ வீட்டுல இருக்கிற மாதிரி பார்த்துக்க…"
திவ்யாவின் தாலியைப் பற்றிச் சொன்னதும் அர்ஜூனிற்கு அவர்களின் திருமண நாள் நியாபகத்தில் வந்தது.....
இரண்டு முடிச்சு போட்டவன் மூன்றாவது முடிச்சு போடுவதற்குள் திவ்யாவின் அருகில் இருந்து யாரோ மூன்றாவது முடிச்சை போட தாலிக் கயிறை வாங்க கையை நீட்ட, என்ன தான் அந்தத் திருமணத்தை அவன் அந்த நிமிடம் அறவே வெறுத்திருந்தாலும், ஆங்காரத்திலும் அவமானத்திலும் அப்பொழுது சுழன்று கொண்டு இருந்தாலும் மனதில் என்னவோ உந்த, தானே மூன்றாவது முடிச்சையும் போட்டு முடித்தான்....
மனதிற்குப் பிடிக்காவிட்டாலும் ஒரு வேளை அவள் தான் இனி நம் வாழ்க்கை என்று அப்பொழுதே அவனின் ஆழ் மனதில் பதிந்திருந்ததோ!!!!!
நினைத்துப் பார்த்தவனுக்கு இந்த நிமிடமே தன்னவளிடம் தன் காதலை சொல்லமாட்டாமோ என்று மனம் ஆர்ப்பரித்தது...
தாலிப் பெருக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கத் தன் மகனின் மனம் வேறு எதனையோ சிந்தித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த ஸ்ரீ...
"அர்ஜூன்..." என்றழைக்க...
சுயநினைவிற்கு வந்தவன் வழக்கம் போல் தன் அன்னையின் பேச்சிற்கு மறு பேச்சு பேச ஸ்ரீக்கு அவனை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்று குழப்பமாக இருந்தது....
ஆனாலும் விடாப்பிடியாக....
"அர்ஜூன்... இதை நாம் செஞ்சு தான் ஆகனும்... கலாவிடமும் ஏற்கனவே பேசியாச்சு.... நான் சொல்ற நாள் நீ வீட்டில் இரு.... அது போதும்"
"மாம், இது லேடீஸ் விஷயம்..... இதுல என்னைய எதுக்கு எதிர்பார்க்கிறீங்கன்னே எனக்குப் புரியலை…." என்று அவன் மேலும் சலித்துக் கொள்ள,
"ம்ம்ம்.. ஏன்னா தாலி மாத்திக்கட்டப் போறது உன்னோட மனைவிக்கு…" என்றவர் அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர்க்க விருப்பம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்...
வெளியே தன் திருமணம் சம்பந்தமான, தன் மனைவிக்கு உசிதமான எந்த விஷயத்தையும் அவன் பிடிக்காதது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவனுக்குமே இது பிடிக்கத் தான் செய்தது...
திருமணம் தான் எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது.... இது போன்ற விஷேஷங்களாவது நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நினைத்தவன் தன் காதலை சொல்லவும் அந்த நாளையே தேர்ந்தெடுத்தான்....
தாலி கட்டிய அன்றுதான் மனதில் காதல் இல்லாது வெறுப்பை மட்டுமே சுமந்திருந்தேன்....
தாலியை மாற்றும் அன்றாவது என் சித்தத்தில் கலந்திருக்கும் காதலை என் இதயத்தில் சுமந்திருக்கும் என்னவளுக்கு வெளிப்படுத்தி அவளை என்னவளாக முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும்.......
அந்த இனிமையான நாளிலேயே தன்னுடைய பரிசு பொருளையும் அவளுக்குக் கொடுக்க முடிவு செய்தான்...
நல்ல நாளை முடிவு செய்து நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்த ஸ்ரீ பாக்யத்தை மட்டும் அழைக்கவில்லை...
அவருக்கு நன்றாகத் தெரியும், அவள் வந்தால் தாலி பெருக்கி கட்டும் போது நிச்சயம் ஏதாவது அபசகுனமாகப் பேசுவாள் என்று.
நாள் குறித்து முடிந்ததும் அர்ஜூனிடம் அதனைப் பற்றிப் பேச...
ஆனால் அர்ஜூனின் நேரம் அன்று அவன் தங்களின் மிகப் பெரிய க்ளையண்டுகள் சிலரை சந்திக்க வேண்டி பெங்களூர் செல்ல வேண்டியிருந்தது....
"டாட்.... நான் சில க்ளையண்ட்ஸ மீட் பண்றதுக்காகப் பெங்களூர் போறேன்.... ஏற்கனவே ஷெடியூல் பண்ணியாச்சு.... நான் இந்த ஃபங்ஷனுக்கு ரெண்டு நாள் முன்னாடியே கிளம்புகிறேன்.... அன்னைக்கு நான் எங்கிருப்பேன் என்று இப்போ என்னால கண்டிப்பா சொல்ல முடியாது…"
"என்ன அர்ஜூன்... எப்பவோ உன் கிட்ட இதைப் பற்றிப் பேசியாச்சு... திரும்பவும் இப்படிச் சொன்னால் எப்படி?
ஸ்ரீக்கு அர்ஜூன் இந்த விஷேஷத்தில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் வேண்டும் என்றே தான் பெங்களூர் போவதாகத் தோன்றியது....
ஆனால் அர்ஜூன் சொன்னது போல் உண்மையிலேயே இது அவன் தவிர்க்க முடியாத தொழில் சம்பந்தப்பட்ட மீட்டிங்...
இவர்கள் இதனைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்க, அவர்களின் விவாதங்களைக் கவனித்துக் கொண்டு இருந்த திவ்யாவின் மனம் மேலும் அடிப்பட்டுக் காயம் கண்டது....
வெளி நாட்டில் இருந்து வந்ததில் இருந்து அர்ஜூனை அவள் அடிக்கடி காணும் சந்தர்ப்பம் அமையாவிட்டாலும், அவனும் அவன் அலுவலகமே கதியென்று கிடந்திருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத அமைதி அவள் மனதில் உலவி கொண்டு தான் இருந்தது....
ஒரு வேளை இத்தனை நாட்கள் பிரிந்திருந்த கணவன் வீடு வந்து சேர்ந்ததில் வந்த நிம்மதியோ அல்லது அவ்வப்பொழுதாவது அவனைப் பார்க்க முடிகிறதே என்ற சந்தோஷமோ...
அப்படி இருக்க அத்தையும் மாமாவும் இவ்வளவு எடுத்து சொல்லியும் அவருக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை போல் என்று நினைத்தவளின் இதயத்தில் புதிதாக அரும்பிய மொட்டுத் தீயில் பட்டுக் கருகியது போல் இருந்தது..
"அவருக்குப் பிரியமில்லாத காரியத்தை ஏன் அத்தையும் இந்த அம்மாவும் செய்கிறார்கள்? இந்தச் சூழலில் அவசியம் தாலி மாற்றிக் கட்ட வேண்டுமா?" என்று மனதிற்குள் எண்ணியவள் தன் விழிநீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொள்ள, அது அவளருகில் இருந்த மஹாவின் கண்களிலிருந்து தப்பவில்லை...
"என் வயது ஒத்தவர் தான் திவ்யா அண்ணி... இன்னும் சொல்ல போனால் என்னை விடச் சின்னவர்.... இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரோ இல்லையோ ஆனால் பாவம் நிம்மதியாக இல்லை...."
என்று மனம் வெதும்பியவள் தன் ஒட்டு மொத்த தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு தன் அண்ணிக்காகப் பேச முதன் முறை அர்ஜூனின் அறைக் கதவை தட்டினாள்....
"கம் இன்…" என்று அவன் பணிக்கவும் உள்ளே சென்றவள் சில விநாடிகள் தயங்க அவளைக் கூர்ந்து பார்த்தவாறே....
"வாட் மஹா? எனி ப்ராப்ளம்?" என்றான்....
மஹா கலாட்டா பண்ணுவது, கதை அளப்பது எல்லாம் அருணிடம் மட்டும் தான்.... அர்ஜூனிடம் அதெல்லாம் செல்லுபடி ஆகாது....
ஏன்? என்ன? எதற்கு? அவ்வளவு தான்... கேள்விகளும் சரி பதில்களும் சரி அனைத்துமே ஒற்றை வரியிலேயே முடிந்துவிடும்...
அவனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல் "வீராப்பாக வந்தாச்சு, இனி பேசாமல் போக முடியாது" என்று நினைத்தவள் மெதுவாக...
"அண்ணா.... நான் கொஞ்சம் உங்கள் கூடப் பேசனும்" என்றாள்...
அவளின் அருகில் வந்தவன் கதவை சாத்திவிட்டு அவளை நோக்கி புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல் பார்க்க,
மனதிற்குள் ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்திருந்த கேள்விகளைச் சடசடவெனக் கேட்டுவிட்டாள்....
"ஏன் அண்ணா இப்படி இருக்கிறீங்க? எதுக்கு ஒரு சின்னப் பெண்ணை இவ்வளவு ஹெர்ட் பண்றீங்க? அவங்க பாவமில்லை?"
அவள் திவ்யாவை பற்றித் தான் பேசுகிறாள் என்று புரிந்துக் கொண்டவன் மென்மையாகப் புன்னகைத்தவாறே....
"அவ உனக்குச் சின்னப் பெண்ணா?" என்று கேட்க..
"ஆமாம் என்னைய விட அண்ணி மூனு வயசு சின்னவங்க தானே…" என்றவள் இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற கலக்கத்துடனேயே தொடர்ந்தாள்...
"ஆனால் இதைப் பற்றிப் பேச எனக்கும் வயசில்ல தான்.... அதே சமயம் என்னால பேசாமலும் இருக்க முடியலைண்ணா..... உங்க ரெண்டு பேர் கல்யாணமும் நடந்த விதம் சரியில்லாமல் இருக்கலாம்..... இட்ஸ் நாட் ஃபேர் பார் போத் ஆஃப் யூ [Its not fair for both of you"] , உங்களோட மனநிலை எப்படி இருந்திருக்குமோ அப்படித் தான் அண்ணியோட மன நிலையும் இருந்திருக்கும்..... அதுக்காக நீங்களும் அண்ணியும் ஒன்னுன்னு நான் சொல்ல வரலை.... நீங்க வேற அண்ணி வேற தான்..... ஆனால் அதே சமயம் ஒரு பெண்ணா அவங்க என்ன மன நிலையோட அப்போ இருந்திருப்பாங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியும்..... ரெண்டு பேர் மேலேயும் தப்பு இல்லைங்கிற போது இப்படி அவங்கள எதுக்கெடுத்தாலும் ஹெர்ட் பண்றது சரியில்லைண்ணா..... அவங்க ரொம்ப இன்னசண்ட்...... பாவம்ண்ணா..... உங்களுக்கு அவங்கள பிடிக்கலைன்னா கூடப் பரவாயில்லை.... ஆனால் எனக்குத் தெரியும் உங்களுக்கு அவங்கள பிடிச்சிருக்குன்னு"
என்று அவள் கூறும் பொழுது அவளை உற்று நோக்கியவன் பதில் எதுவும் கூறாமல் அவளையே பார்த்திருக்க...
அவனின் கழுகு பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பேச்சு தொண்டையிலேயே சிக்கிக் கொள்ள விக்கித்துப் போய் நின்றாள்....
ஆனால் அவன் மேலே பேசு என்பது போல் தலையை அசைத்துச் சைகை செய்ய, வேறு வழியின்றி அவளே தொடர்ந்தாள்...
"இது எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்கிறீங்களா? அவங்களுக்குச் சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கிறதும், நீங்க அண்ணிய பார்க்குற பார்வையுமே சொல்லுதே.." என்றவள் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் குனிந்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்..
"அதனால ப்ளீஸ்.... இத இப்படியே இழுக்கறத விட்டுட்டு போய் உங்க லவ்வ சொல்லுங்க…" என்றவள் சொன்னதும் தான் புரிந்தது இது நாம ரிகர்ஸல் பார்த்த வார்த்தைகளே இல்லையே என்று....
ஏதோ ஒரு ஆர்வத்தில் கூறிவிட.... "ஐய்யய்யோ!! போச்சு, திட்டு விழப் போகுது" என்று அஞ்சிக் கொண்டு அவனையே பார்த்திருக்க, அவனோ...
"அடிப்பாவி! என்ன பேச்சு பேசுகிறாள்?" என்பது போல் மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை....
இதற்கு மேல் என்ன பேசுவது என்று மஹாவிற்கும் தெரியாமல் சலிப்புடன் தன் அறைக்குத் திரும்பினாள்...
காரை ஓட்டிக்கொண்டு தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த அர்ஜூனிற்கு மனமெல்லாம் மஹா சொன்னதிலேயே நிலைத்து இருந்தது...
திவ்யாவை தான் திருமணம் செய்த நாளை நினைத்தவன், தன் அன்னை திவ்யாவிடம் தன்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்ட பொழுது தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்காது கலாவைப் பார்த்தது...
பின் திருமணச் சடங்கின் போது மிகுந்த அச்சத்தோடு தலை குனிந்தவாறே தன் அருகில் அமர்ந்து இருந்தது... சென்னைக்கு வந்ததற்குப் பிறகு தன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஓடி ஒளிந்தது..... அந்த மழை நாளில் தன்னைக் கிண்டல் செய்த வாலிபர்களைப் பார்த்து பயந்து தன்னிடம் ஒண்டிக் கொண்டது...... உடை மாற்றும் பொழுது தன்னைப் பார்த்து பயந்து நடுங்கியது.....
பின் தான் யூ.எஸ் செல்ல கிளம்பிய பொழுது கலங்கிய முகத்துடனும் அழுத விழிகளுடனும் தன்னை மௌனமாக வழி அனுப்பியது என்று ஒன்றன் பின் ஒன்றாக மனதிற்குள் ஓட அந்தக் கணம் இத்தனை நாளாய் தான் இழந்தது என்ன என்பதை உணர்ந்தவன் எப்பொழுதோ தன் இதயத்தில் அழுத்தமாகக் காலடியை எடுத்து வைத்திருந்த காதலை தன் மனம் கவர்ந்த மனையாளிடம் சொல்வதற்குத் தயாரானான்...
"எப்படியும் திவ்யாவின் தாலிப் பெருக்கிற்குள் திரும்பி வந்துவிட வேண்டும்" என்று முடிவெடுத்தவன் விஷேஷத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பெங்களூருக்கு கிளம்ப இத்தனை சொல்லியும் கிளம்புகிறாரே என்று நினைத்த திவ்யாவிற்குத் தான் மனம் தவித்துப் போனது...
ஆனால் அவள் கணவன் தன் உள்ளத்திற்குள் புதைத்து வைத்து இருந்த தன்னவளின் மீது இருந்த அளவுக்கடந்த காதல் அவளுக்குப் புரிய வாய்ப்பில்லையே..
கலா குறித்திருந்த தேதியிலே தாலி பெருக்கிற்கு ஏற்பாடு செய்ய, தாலி பெருக்கு அன்று நெருங்கிய சொந்தங்கள் வர ஆரம்பிக்க வீடு களை கட்டியது.
திருமணப் பட்டு புடவையில் அழகுற தேவதைப் போன்று நின்று இருந்த தன் மகளின் அருகே வந்த கலாவிற்கு அவள் கண்களில் தெரிந்த சோகம் எதனையோ உணர்த்த நெருங்கி வந்தவர்,
"எங்கம்மா, மாப்பிள்ளைய காணோம்?" என்றார்..
"இல்லம்மா, அவங்க திடீர்னு பெங்களூருக்கு போற வேலை வந்திடுச்சு.... பிஸினஸ் விஷயமா போயிருக்காங்க... அவங்களுக்குப் பிஸினஸ் தான் முதல் மனைவி…" என்று சிரித்தபடியே கூற,
அவளின் உயிரோட்டமில்லாத புன்னகையைப் பார்த்த கலாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது..... ஆக இன்னும் இவர்களுக்குள் ஒரு இணக்கம் வரவில்லை....
மனம் கனக்க....
"நீ சந்தோஷமா இருக்கியா திவ்யா?"
"எனக்கு என்னம்மா குறைச்சல்? அத்த, மாமா, மஹா அண்ணி, அருண் அத்தான் எல்லோரும் என்கிட்ட பாசமா இருக்காங்க..... நான் என்றால் இவங்க அத்தனை பேருக்கும் அவ்வளவு பிரியம்" என்றவள் மறந்தும் கூடத் தன் கணவனைப் பற்றிக் குறிப்பிடவில்லை....
பெற்றவளுக்குப் புரிந்து போனது.... மற்ற அனைவரையும் கூறியவள் வேண்டும் என்றே தான் தன் கணவனைப் பற்றிச் சொல்லவில்லை என்று...
சந்தோஷமாக விஷேஷத்திற்கு வந்தவருக்கு மகளின் கலங்கிய முகமும் பேச்சும் மனதிற்குள் பாரமாக இருக்க அவளின் தலையைத் தடவிவிட்டவர் ஒன்றும் பேசாமல் மௌனமாகவே இருக்க, அதற்குள் கீழே இருந்து ஸ்ரீ அழைத்தார்....
திவ்யாவின் அருகில் வந்த ஸ்ரீ....
"கலா, பார்த்தியா? என் மருமகளை.... எவ்வளவு அழகா இருக்கான்னு?" என்றவரின் முகம் பெருமையில் வழிந்தாலும் இந்த அழகினை அனுபவிக்க வேண்டிய தன் மகன் இவ்வாறு தள்ளி இருக்கிறானே என்று உள்ளுக்குள் வருந்தவும் தவறவில்லை....
இதனைப் பார்த்தவாறே வந்த வினோத் திவ்யாவிடம் வந்தவன் அர்ஜூனைப் பற்றிக் கேட்க, திவ்யா சொன்ன பதிலை கலா அவனிடம் சொல்ல, கேட்டுக் கொண்டிருந்தவனின் கண்கள் சட்டென்று மாடிப் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த மஹாவின் மேல் நிலைத்தது...
அழகு தேவதை என மெல்ல அசைந்து படிகளில் இறங்கி வந்து கொண்டு இருந்தவள் அதே நேரம் அவனைப் பார்க்க அவனின் விழுங்கிவிடும் பார்வையில் தன் விழிகளைத் தாழ்த்தியவள்....
"பார்க்கிறதுக்குத் தான் இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமான்னு இருக்கு... ஆனா பார்வை மட்டும் கரெக்டா நம்ம மேல விழுது" என்று நினைத்துக் கொண்டு கலாவின் அருகில் வந்தவள், தான் அணிந்திருந்த புடவையைக் காண்பித்தவள்.....
"எப்படி இருக்கு அத்தை?" என்றாள்...
பார்வை என்னவோ கலாவைப் பார்த்து தான் ஆனால் கேள்வி தன் மனம் கவர்ந்தவனுக்கே என்பது போல் இருந்தது அவள் கேட்ட விதமும் முகப் பாவனையும்...
ஒரு முறை பேச்சு வாக்காகத் திவ்யா அவளிடம் சொல்லி இருக்கிறாள் வினோத்திற்குச் சிட்டி பெண்களின் நாகரிக உடைகள் சுத்தமாகப் பிடிக்காது என்று...
அதனாலேயே அவள் திவ்யாவிடம் நாசுக்காக வினோத்திற்கு என்ன நிறம் பிடிக்கும் என்று விசாரித்து ஏகப்பட்ட கடைகளில் ஏறி இறங்கி அலைந்து திரிந்து இந்தப் புடவையை வாங்கி இருந்தாள்.....
எந்த விஷேஷத்திற்கும் சுடிதார், டாப்ஸ், ஜீன்ஸ் என்று அணியும் மகள் திடீரென்று இன்று புடவை அணிந்திருப்பதைக் கண்ட ஸ்ரீக்கு கூட மிகுந்த ஆச்சரியம்.
அவளின் நிறத்திற்கு அவள் அணிந்திருந்த பச்சை நிற பட்டுப் புடவையும் அதில் அடர்ந்த பிங்க் நிற கரையும் அத்தனை எடுப்பாக இருந்தது.
"மாம், நான் எப்படி இருக்கேன்?" என்று சிறிது சத்தமாகவே கூறவே,
வேறு எங்கோ பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்த வினோத் சட்டென்று இவளை திரும்பி பார்க்க, அவனைப் பார்க்காதது போல் சென்றவளைப் பார்த்தவன்,
"ராட்சஷி, என்னம்மா கத்தறா" என்று நினைத்துக் கொண்டவன் அவளின் அழகில் மயங்கவும் தவறவில்லை.
அர்ஜுனைப் போன்று நல்ல சிவந்த நிறம்.... வரைந்து வைத்த ஓவியம் போன்று அபாரமான அழகு.... சிலைப் போன்ற உடல்வாகு... அழகான புருவங்களுடன் கூடிய விழிகள், அழகான வடிவான இதழ்கள் என்று சர்வ லட்ஷணமாய் இருந்தவளைப் பார்க்க பார்க்க அவனுக்குத் திகட்டவில்லை....
சுவற்றுக்கு முதுகு கொடுத்து சாய்ந்தவாறு நின்று அவனைப் பார்த்தவளை கண்டவனுக்கு அதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் யாரும் அறியாத வண்ணம் அவளின் அருகில் நெருங்கி நின்றவன் அவளின் விரல்களுக்குள் தன் விரல்களைக் கோர்க்க, அவன் தன் அருகில் வருவதைக் கண்டவுடனே இதயம் பலமாகத் துடிக்க ஆரம்பித்ததை உணர்ந்து இருந்தவளுக்கு அவன் தன் விரல்களைப் பிடிக்கவும் உதறல் எடுக்க ஆரம்பித்தது....
"என்ன தைரியத்தில் இத்தனை பேர் இருக்கும் பொழுது இவர் இப்படி என் கையைப் பிடிக்கிறார்? திவ்யா அண்ணி போல் இவர் பயந்த சுபாவம் இல்லை போல்... நான் சத்தம் போட மாட்டேன் என்கிற தைரியமோ???" என்று நினைத்துக் கொண்டவள் அவன் விரல்களில் இருந்து தன் விரல்களைப் பிரித்துக் கொள்ளப் போராட அவன் பிடியோ உடும்பு பிடியாக இருந்தது....
அவனது அகலமான வலுவான கரத்திற்குள் அவளின் பஞ்சு விரல்களை அனைத்தையும் அழுத்தி கோர்த்துக் கொண்டவன் அவளின் பக்கம் திரும்பாமலே புன்னகைத்துக் கொண்டு இருக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள் மெல்லிய குரலில்...
"ப்ளீஸ் விடுங்க... யாராவது பார்த்திறப் போறாங்க…" என்று கெஞ்ச...
அவளின் முகப் பாவனையில் தன்னைத் தொலைத்தவன் ஒரு முறை கரத்தை அழுத்திப் பிடித்துப் பின் விடுவிக்க, விட்டால் போதும் என்று ஓடிச் சென்று திவ்யாவின் அருகே நின்றுக் கொண்டாள் வினோத்திற்கு மட்டுமே உரிய அவனின் அழகிய ராட்ஷசி....
திவ்யாவை அங்குப் போடப்பட்டிருந்த மனையில் அமர செய்தவர்கள் நல்ல நேரம் பார்த்து தாலி மாற்றும் சடங்கை துவங்கினர்....
நேரம் ஆக ஆக அவளின் மெல்லிய மனம் அங்குத் தன் கணவனின் இல்லாமையை நினைத்து வருந்த எத்தனை முயற்சித்தும் அவளால் தன் உள்ளத்தில் ஓடும் சிந்தனைகளை அகற்ற முடியாமல் அவளின் அழகிய முகம் அவள் உணர்வுகளை அப்பட்டமாக வெளிக் கொண்டு வந்திருந்தது....
அவளின் புன்முறுவலில் கூட ஏதோ ஒரு வலி தெரிவது போல் இருக்க, அவள் அருகில் வந்த ஸ்ரீ அவளின் பட்டுக் கன்னத்தில் சந்தனம் பூசிவிட்டவர்,
"திவ்யா... மனசுக்குள்ள எதையாவது போட்டு குழம்பிக்காதடா.... எல்லாம் நல்ல படியா நடக்கும்" என்றவாறே உச்சி வகிட்டில் குங்குமம் வைத்தவர் சுமங்கலிப் பெண்களைத் தாலிக் கயிறை மாற்ற அழைக்கத் திவ்யாவின் இதயத்தை மகிழ்ச்சியில் பூரிக்கச் செய்வது போல் சரியாக வீட்டிற்குள் நுழைந்தான் அர்ஜூன்..
மனையில் அமர்ந்திருந்தவள் அர்ஜூன் உள்ளே நுழைந்ததும் எதிர்பாராதவிதமாகத் தன் கணவனை அங்குக் கண்டவளுக்கு மனதிற்குள் சில்லென்று ஒரு இனிமையான உணர்வு தாக்கி உடலில் மயிற்கால்கள் சிலிர்க்க தன்னையும் அறியாமல் எழ முற்பட, அவளைப் பார்த்து புன்னகைத்தவன் வேண்டாம் என்று சைகை மட்டும் செய்துவிட்டு அவளைப் பார்த்தவாறே மாடி ஏறினான்...
மருமகனின் வருகை கலாவிற்கு நிம்மதியாகவும் பாலாவிற்கும் ஸ்ரீக்கும் ஆச்சரியமாகவும் இருந்தது...
அன்று அவ்வளவு எடுத்து சொல்லியும் முடியாது என்று போனவன், இன்று சொல்லாமலே வந்திருக்கிறான்...
"ஒரு வேளை அவன் சென்ற வேலை முடிந்ததோ?" என்று யோசித்துக் கொண்டு இருந்த ஸ்ரீ திவ்யாவை பார்க்க, உள்ளத்தில் இருந்த மகிழ்ச்சி முகத்தில் அப்பட்டமாகத் தெரிய தன் கணவனின் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்தாள் அந்தச் சின்னப் பெண்...
கடவுளே இந்தப் பெண்ணின் மகிழ்ச்சிக்காகவாவது தன் மகன் இந்த விஷேஷத்திற்குத் தான் வந்தேன் என்று கூற வேண்டுமே என்று மனதார வேண்டிக் கொண்டார் ஸ்ரீ...
தன் அறைக்குள் சென்று சிறிது நேரத்தில் குளித்து முடித்து வெள்ளை நிற முழுக்கை சட்டையும், அடர் நீல நிற ஜீன்ஸும் அணிந்து, முழுக்கை சட்டையை முழங்கை வரை மேலே ஏற்றி மடித்துக் கொண்டே சிறு புன்சிரிப்புடன் மாடிப் படிகளில் விடுவிடுவென்று இறங்கிக் கொண்டிருந்த மகனை பெருமிதத்துடன் அவன் அன்னை பார்த்தார் என்றால், அவனின் அழகில் மதி மயங்கி அவனை அள்ளி பருகுவதைப் போல் அவனின் மனையாள் பார்த்துக் கொண்டிருந்தாள்.....
"அண்ணி பார்த்து, அண்ணனை சைட் அடிச்சதுப் போதும்....." என்று மஹா காதுக்கருகில் நெருங்கி கிசுகிசுப்பாகச் சொன்னவுடன் தான் சுய உணர்வுக்கு வந்த திவ்யா, அர்ஜூன் அவளின் எதிரில் போட்டிருந்த சேரில் அமர, சடக்கென்று வழக்கம் போல் தலையைக் குனிந்துக் கொண்டாள்.
அவள் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததையும் கண்டவன், இப்பொழுது அவள் எதிரில் அமர்ந்ததும் முகத்தில் வெட்கமும் கூச்சமும் அதே சமயம் வழக்கம் போல் அவனைக் கண்டதும் வரும் அச்சமும் கலந்து தலை கவிழ்ந்து இருப்பதையும் கண்டவனுக்கு அத்தனை கர்வமாக இருந்தது தன்னவளின் அழகும் தன்னைக் கண்டதும் தோன்றிய அவளின் நாணமும்...
வெளிநாட்டில் இருந்து அவன் திரும்பி வந்ததற்குப் பிறகு இந்தச் சில நாட்களாக அவளுடன் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் அமையாது போக அவனுக்கு எதிரே வர அவளும் அஞ்சி ஓடி ஒளிந்து இருக்க, அவளின் அழகிய முகத்தை உரிமையுடன் பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக இன்று அவளுக்கு நேருக்கு நேர் அமர்ந்து இருப்பது அத்தனை இன்பமாக இருந்தது அர்ஜூனிற்கு...
அவளின் உச்சி வகிட்டில் அதிகமாகக் குங்கும் வைக்கப் பட்டிருந்ததால் அது சிறிதே சிதறி அவளின் முகத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பட்டிருக்க, தன் கணவன் தன் எதிரே அமர்ந்து தன்னை ஊடுருவும் பார்வைப் பார்த்திருப்பதை அவளின் உள்ளுணர்வு எடுத்துச் சொல்லியிருந்ததால் முகத்தில் சிதறி இருக்கும் குங்குமத்தின் நிறத்திற்குப் போட்டி போடுவது போல் அவளின் குழைந்த முகம் சிவந்திருக்க....
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த அர்ஜூனோ மேனகையிடம் தோற்ற விசுவாமித்ரன் நிலையில் இருந்தான்.....
வாழ்க்கையில் பயம் என்பதையே அறியாதவன்.... ஒற்றை வார்த்தையிலேயே தன்னைச் சுற்றி இருப்பவர்களை ஆட்டிப் படைப்பவன்...
ஆனால் இன்றோ இந்தச் சின்னப் பெண்ணிடம் எப்படித் தன் காதலை சொல்லுவது என்று மனதிற்குள் ஆயிரமாவது தடவையாக ஒத்திகைப் பார்த்துக் கொண்டான்...
அனைவரும் சடங்குகளை முடித்தவுடன், வந்திருந்த விருந்தினர்களில் ஒரு வயதான சுமங்கலி பெண் அர்ஜூனைப் பார்த்து,
"நீ வாப்பா, வந்து தாலியில் மஞ்சளும் குங்குமமும் வைத்துவிடு" என்று கூற, இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத திவ்யாவிற்குத் திக்கென்றதில் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது....
"ஏற்கனவே அத்தையும் மாமாவும் அத்தனை எடுத்து சொல்லியும் முக்கிய வேலை இருக்கிறது என்று வெளியூருக்கு போனவர், சென்ற வேலை முடிந்ததோ என்னவோ அதிசயமாக இன்றே வந்திருக்கிறார்...."
"வந்தவர் வேறு எங்கும் செல்லாமல் இப்படி அமைதியாக மற்றவர்களுடன் சேர்ந்து அமர்ந்திருப்பதே பெரிசு... இதில் இது வேறையா?" என்று கலங்கியவளுக்குத் தன் கணவன் என்ன சொல்லப் போகிறானோ என்று திகிலாக இருந்தது.....
ஆனால் திவ்யாவும் அவன் பெற்றோரும் உடன் பிறப்புகளும் வியப்பில் மூக்கில் விரல் வைப்பது போல் அவன் இளம் முறுவலுடன் எழவும், அதனைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத திவ்யாவிற்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்ததில் கை கால் உதறல் எடுக்கத் துவங்கியது.....
மெதுவாக எழுந்தவன் அழுத்தமான காலடிகளுடன் அவளை நோக்கி நடந்து வர, அவள் இதயம் படபடவென்று வேகமாகத் துடிக்க ஆரம்பித்ததில் எங்கே இதயமே வெளியே வந்து விழுந்து விடுமோ என்பது போல் இருக்க அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் கண்களில் தெரிந்த விஷம சிரிப்பு அவளை நாணத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது...
அவளின் அருகே வந்தவன் அவளுக்கு அருகில் ஒரு காலை மடித்து மண்டியிட்டவாறு தன்னை மஞ்சள் குங்குமம் வைக்கச் சொன்ன பெண்மணியைத் திரும்பி பார்க்க, அவர் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்...
முதலில் சந்தனத்தை எடுத்து அவளின் கன்னங்களில் பூச சொல்ல, தன் மனையாளை பார்வையிலேயே பருகியவாறு கிண்ணத்தில் இருந்து சந்தனத்தைக் கையில் எடுத்தவன் குனிந்து அவளுக்கு வலிக்குமோ என்பது போல் மென்மையாக அவளின் பட்டுக் கன்னத்தில் தடவ....
அவளுக்குக் கணவனின் தொடுகையில் அதுவும் கன்னத்தில் அவனின் மென்மையான தடவலில் சங்கடமும் சிலிர்ப்பும் மாற்றி மாற்றித் தோன்ற சித்தத்தின் சுழற்சியில் ஆட்கொண்டிருந்தவள் அவன் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் விழிகளைத் தாழ்த்தினாள்....
அவளின் நாணத்தை ரசித்தவாறே அவளை இறுக்கி அணைத்துக் கொள்ளத் தூண்டிய உணர்வுகளை மிகுந்த சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அடுத்து அவர்கள் செய்யச் சொன்னதில் அவன் கட்டுப்பாடுக்களைத் தகர்த்து எறிந்தான்....
திவ்யாவின் தாலியில் மஞ்சளையும் குங்குமத்தையும் அந்தப் பெண்மணி பூச சொல்ல, திவ்யாவை மீண்டும் கூர்ந்து பார்த்தவன் வேண்டும் என்றே தன் இடது கையை அவளின் மார்பில் வைத்து அழுத்தி லேசாகத் தாலியை தூக்கி, மெல்ல தன் வலது கையில் மஞ்சளை எடுத்து பூச, மார்பில் ஆழ அழுத்தி புதைந்திருந்த அவன் கையினால் ஏற்கனவே திக்திக் என்று இருந்தவளுக்கு இப்பொழுது மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது....
அவனின் இந்த அழுத்தமான தொடுதல் அதிர்ச்சியையும் கூச்சத்தையும் கொடுக்க, சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தவளின் இதயத்தைத் தன்னுடைய காதல் சொட்டும் பார்வையில் தடம் புரளச் செய்த அந்தக் காதல் கயவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, அவளின் முகம் நாணத்தில் அதிகாலை சூரியனைப் போல் அத்தனை இரத்த சிகப்பாய் மாறியது...
ஒருவருக்கொருவர் வெகு அருகில் இருந்த பொழுதும், இத்தனை காதலை இதயம் முழுவதும் சுமந்திருந்த பொழுதும் தன் கணவனின் மீது இருந்த அதிகப்பட்ச அச்சத்தால் அவள் விலகியிருக்க, தன் காதலை சொல்ல தடுமாறி அவன் தவித்து இருக்க, இவர்களின் மனங்கள் மட்டும் மௌனமாக ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு இருந்தது....
தனது தொடுகையும், தான் கண் சிமிட்டியதால் அவளின் முகம் சிவந்ததையும், அகல விரிந்த கண்களில் தெரிந்த அவளின் காதலையும் பார்த்தவன், அடி வயிற்றில் இருந்து இதயத்திற்கு ஊடுருவி சென்ற இந்த உணர்வு அவனின் சித்தத்தைத் தடுமாறச் செய்ய, உணர்ச்சி கொந்தளிப்பின் சுழலில் சிக்கியவனுக்குத் தன் கரத்தை அவளின் மார்பில் இருந்து எடுக்க முடியாமல் போனது....
சுற்றி இருந்தவர்களின் களுக்கென்ற சிரிப்புச் சத்தம் தன் நிலையை உணர்த்த இவ்வுலத்திற்குத் திரும்பி வந்தவனின் முகத்தில் தோன்றிய நாணம் ஆண்களுக்குக் கூட வெட்கம் வருமோ என்பது போல் அத்தனை அழகாக அம்சமாக இருந்தது....
சூழ்நிலை புரிந்த அடுத்த நொடி சட்டென்று அங்கிருந்து எழுந்தவன் புன் சிரிப்புடன் மற்றவர்களை நோக்கி விட்டு தன் இடத்தில் சென்று அமர திவ்யா தலை குனிந்தவள் குனிந்தவள் தான்....
விஷேஷம் முடியும் வரை அவள் தன் கணவனை நிமிர்ந்து பார்க்கவில்லை....
இவர்களின் பார்வை பரிமாற்றத்தைக் கவனித்திருந்த மஹா தன்னிச்சையாகத் தன் மனம் கவர்ந்தவனைப் பார்க்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனும் அவளின் எண்ணம் புரிந்து அவளைப் பார்த்துக் கண் சிமிட்ட,
"அடப்பாவி, அவங்க இரண்டு பேரும் கல்யாணம் ஆனவங்க... அதனால் அண்ணா அண்ணியைப் பார்த்து கண்ணடிக்கிறாரு... இவருக்கு என்ன இத்தனை துணிச்சல்? அதுவும் இத்தனை பேரு இருக்கும் போது.... இது தான் கிராமத்துத் தைரியம் என்பதா?" என்று நினைத்தவள் சட்டென்று தன் பார்வையைத் திருப்பிக் கொள்ள அவனுக்குத் தான் மனம் சிறகு விரித்துப் பறக்க ஆரம்பித்தது...
அந்த விநாடி மஹாவின் வசதி அவன் கண்களுக்குத் தெரியவில்லை.... தன்னுடைய நிலை அவன் கண்களுக்குத் தெரியவில்லை..... தெரிந்தது எல்லாம் தன்னவளின் காதல் கொண்ட விழிகளும், வெட்கத்தில் சிவந்திருக்கும் முகமுமே....
அவளின் வெட்கத்தைத் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்த வினோத் இன்றே அவளைத் தனிமையில் சந்திக்க முடிவு செய்தான்...
ஒரே வீட்டில் இரு ஆண்கள் தங்களின் இணையிடம் தங்கள் காதலை, உள்ளத்தை வெளிப்படுத்த தக்க நேரம், சூழ்நிலை பார்த்து காத்திருந்தனர்......
அர்ஜூன், வினோத்..... இருவரும் தங்கள் மனம் கவர்ந்த பெண்களிடம் தங்கள் இதயத்தைத் திறப்பார்களா?