அத்தியாயம் - 17
விடியும் வரை பெருமளவு குழப்பத்திலும், மலை அளவு அவமானத்திலும், கட்டுக்கடங்காத கோபத்திலும் உள்ளம் உலையாகக் கொதித்துக் கொண்டு இருந்ததால் உறக்கம் என்பதே இல்லாது சிந்தித்துக் கொண்டிருந்த அர்ஜூன் விடிந்ததும் எழுந்தவன் குளியல் அறைக்குள் சென்றான்...
மனதில் மண்டியிருந்த உஷ்ணம் உடல் முழுவதும் கனலாக வீசியதோ குளிர்ந்த நீரில் நீண்ட நேரம் நின்றிருந்தவனின் மனமும் குளிரவில்லை, உடலின் சூடும் தணியவில்லை....
இரு முறை தன் மனைவியை எதிர்பார்த்து அடைந்த ஏமாற்றம் அவனின் உள்ளத்தில் மனக்கசப்பை ஏற்படுத்த அதனால் விளைந்த வெறுப்புணர்ச்சியினால் சினம் துளிர்த்து இரவு முழுவதும் நெஞ்சத்தில் தகிப்பும் சீற்றமும் கொண்டு உறங்காது இருந்த கணவனைத் திவ்யா அறிந்திருந்தால், அவனின் கோபத்தைக் கண்கூடாகக் கண்டிருந்தால் நிச்சயம் வெலவெலத்து போயிருப்பாள்....
தன் பெற்றோரும் தமையனும் ஊருக்கு கிளம்ப உதவி செய்தவளின் பார்வை நொடிக்கொரு தரம் மாடியில் இருக்கும் தன் கணவனின் அறைக் கதவையே நோக்கியிருக்க எந்த அரவமும் இல்லாது இருந்த அறையின் நிசப்தம் மனதில் திக்திக்கென்ற உணர்வைத் தர, அவன் கதவு திறக்கப்படவும் இல்லை, அவன் கீழே இறங்கி வருவதாயும் தெரியவில்லை....
கணவனை நெருங்கவும் தைரியம் இல்லாமல் அவனின் கோபத்தையும் தாங்க சக்தி இல்லாமல் பரிதவித்துப் போய் இருந்தாள் அந்தச் சின்னத் தளிர்.....
பெற்றோருடன் கிளம்பிய வினோத்தின் கண்களும் தன் தங்கையைப் போலவே வீட்டை விட்டு கிளம்பும் வரையிலும் தன்னவளையே தேடி அலைமோத, எந்தச் சந்தடியும் இல்லாமல் தன் அறைக்குள்ளே அடைந்து இருந்தவள் அவன் ஊருக்கு கிளம்புவது தெரிந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மறந்தும் வெளியில் தலைக் காட்டவில்லை....
அண்ணனும் தங்கையும் அவர் அவர்களின் குணாதியங்களுக்கு ஏற்ப தங்கள் துணையை நினைத்து விடியும் வரையில் இதயம் கனத்து உள்ளம் புகைந்து மன ஆற்றாமையுடன் தூங்காமல் இருந்து தங்களின் மனம் கவர்ந்தவர்களின் மனதை அறுக்கும் அளவிற்குச் சித்திரவதை செய்து கொண்டு இருந்தனர்...
செல்வதற்கு முன் மஹாவின் அழகிய முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா, தான் கிளம்பும் பொழுது சென்ற முறை செய்தது போல் தலையை மட்டுமாவது அசைத்து தன் கோபத்தை மறந்து தனக்கு விடைத் தர மாட்டாளா? என்று ஏங்கியவாறே வினோத் காத்திருக்க....
அவள் வெளியே வரும் சுவடே இல்லாததால் வேறு வழியில்லாமல் டாக்ஸியில் ஏறியவன் மீண்டும் ஒரு முறை ஏக்கத்துடன் வீட்டை திரும்பி பார்க்க, ஒரு வேளை நேற்று போல் மொட்டை மாடியில் இருப்பாளோ? என்ற ஆசையில் மொட்டை மாடியையும் பார்க்க அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.....
அவனின் அழகிய ராட்ஷசி, செல்ல ரௌடி உள்ளம் முழுவதும் காதலை சுமந்திருந்தாலும் அவனின் அடாவடிச் செயலில் மனம் கலங்கி தன் இதயத்தைக் கடினமாக மாற்றிக் கொண்டு அறைக்குள்ளே அடைந்துக் கிடந்தாள்....
ஒரு வழியாகக் கலாவின் குடும்பத்தினரின் டாக்ஸி சென்றவுடன் உள்ளே வந்த ஸ்ரீக்கு இன்று என்ன நடக்குமோ? அர்ஜூனின் கோபம் எந்த எல்லையைத் தாண்டப் போகிறதோ என்று வயிற்றில் புளியை கரைக்க, மருமகளைத் திரும்பி பார்த்தவருக்கு அவளின் கலங்கிய முகமே பறைசாற்றியது அவளின் மனதில் சூழ்ந்திருந்த அச்சத்தை....
அவனைப் பெற்றவள் எனக்கே சில நேரங்களில் அவனைக் கண்டால் உதறல் எடுக்கிறது...
அவன் தந்தையாகட்டும் அல்லது நானாகட்டும் அவனுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்தால் எங்களிடம் அவன் சீறும் விதத்தில் நாங்கள் இருவருமே நடுநடுங்கி போய்க் கலங்கியிருப்போம்....
இதில் அருணைப் பற்றியோ மஹாவைப் பற்றியோ சொல்லவும் வேண்டாம்....
அவன் முன் சாதாரணமாக நின்று பேசுவதற்கே பயந்து உடல் வெடவெடக்க நிற்பார்கள்....
அதிலும் அவர்கள் அவனுக்கு எதிராக எதையாவது செய்துவிட்டுப் பின் அவனிடம் மன்னிப்பு இறைஞ்சும் பொழுதும் கூட அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் அவன் முன் தலை கவிழ்ந்து நிற்கும் போது ஸ்ரீக்கே பாவமாக இருக்கும்....
அந்த அளவிற்கு அவன் தன் குடும்பத்தையும், தொழிற்களையும் தன் தாத்தாவைப் போல் தன் உள்ளங்கைக்குள் வைத்து இருந்தான்...
அப்படி இருக்கப் பத்தொன்பது வயதே ஆன சின்னப் பெண் இவள், என்ன செய்வாள்? பாவம்!!!
அவனைக் கண்டாலே பயந்து நடுங்கி ஓடி ஒளிகிறவள்...
அவன் அவளை ஒவ்வொரு முறை திரும்பி பார்க்கும் பொழுதும் அவனுடைய கூர்மையான விழிகளை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி ஒடுங்குகிறவள்...
அவன் இன்று என்ன ருத்ர தாண்டவம் ஆடப் போகிறானோ?
இவள் அவனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறாளோ?.....
என்று திவ்யாவின் பரிதாப நிலையை நினைத்துப் பார்த்தவருக்கு அவளின் மேல் இரக்கமே வர அவளுடன் சேர்ந்து அவரும் தன் மகனின் வருகைக்காக அச்சத்துடன் காத்திருக்க ஆரம்பித்தார்...
ஆனால் கலா குடும்பம் சென்றும் அவன் கீழ் இறங்கி வருவதாயில்லை...
சில நேரங்களில் ஏதோ ஒரு காரணத்தால் நாம் நமக்குப் பிரியமான ஒருவரின் கோபத்திற்கு ஆளாகியிருப்போம்.... அவர்களின் சீற்றம், கோபம் வெளி வரும் நொடிகளை எண்ணிக் காத்திருப்போம்....
அந்த நேரங்களில், ஒவ்வொரு நிமிடமும் மனதிற்குள் ஒரு கலக்கத்தைக் கொண்டு வரும்... ஒவ்வொரு விநாடியும் பல யுகங்கள் போல் தோன்றும்...
அந்தக் கலக்கத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அவர்களின் கோபம் கூடப் பெரிய அளவில் நம்மைப் பாதிக்காது.... ஆனால் அந்த நிமிடங்கள் நம்மைக் கதிகலங்க வைக்கும்...
அதே போன்ற ஒரு மனநிலையில் இருந்தனர் ஸ்ரீயும், திவ்யாவும்....
நேரம் ஆக ஆக அடி வயிற்றுக்குள் ஒரு உருளை உருளுவது போல் மனம் திகைத்துப் போய்ச் செயலற்று இருக்க, அவர்களின் அதிர்ச்சியை மேலும் கூட்டுமாறு சிறிது நேரத்தில் குளித்து முடித்துக் கீழே இறங்கி வந்தவன் ஒன்றும் பேசாமல் ஷூவைப் போட, அவனின் அமைதி சூறாவளிக்கு முன்னர் வரும் மயான அமைதியைப் போன்று கொடியதாக இருந்தது அவனின் மனையாளுக்கும், அவன் அன்னைக்கும்....
அவனின் அசாதாரணமான மௌனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவன் மனதில் ஓடிக் கொண்டு இருக்கும் எண்ணங்களையும் அறியும் பொருட்டு அவன் அருகில் தயங்கிவாறே வந்தார் ஸ்ரீ.....
"என்ன அர்ஜூன், அதற்குள் கிளம்பிட்ட... சாப்பிடலையா?"
அவரின் கேள்வியில் ஷூவைப் போட்டுக் கொண்டு இருந்தவன் அவரை நிமிர்ந்தும் பார்க்காமல்....
"ஒரு அர்ஜென்ட் விஷயமா கதிர் கால் பண்ணியிருக்கான்.... உடனே கிளம்பனும்" என்றவன் மறந்தும் தன் மனைவியைத் தேடவில்லை...
அது போல் கதிரும் அவனை அழைத்திருக்கவில்லை.... அவனுக்குத் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பின் பிடியில் இருப்பது போலவே இருந்தது....
இரவு முழுவதும் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு எழுந்தவுடன் வந்த நினைவே....
"தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் நடக்கும் இந்தப் பிரச்சனையை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினால் தன் தரம் தான் தாழ்ந்து போகும்.... மனைவியிடம் வாய்விட்டு அவளிடம் தாம்பத்தியத்தை யாசித்தானா அர்ஜூன் என்று அசிங்கமாகும்.... போயும் போயும் ஒரு பெண்ணுக்காகக் காத்திருந்தான் என்ற கேவலமான பேச்சு வரும்" என்று தப்புத் தப்பாக நினைத்தவன் அடங்காத கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே சென்றவன்,
காரை புயல் போல் சீறிக் கிளப்பிக் கொண்டு சென்ற வேகத்திலேயே தெரிந்தது அவனின் சினத்தின் ஆழம்....
தன் மகன் தன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் பதில் கூறிவிட்டுப் போனதில் ஸ்ரீயின் மனம் சுக்கல் சுக்கலாக உடைந்து போனது.....
அவனுக்குத் தன் மனம் விட்டு தன் காதலைச் சொல்ல தெரியாது....
தன் இதயத்தைத் திறந்து தன் ஆசையை, மனதில் ஆடும் எண்ணங்களைத் தெளிவு படுத்த இயலாது....
ஏனெனில் அவன் மற்ற ஆண்களைப் போல் அல்ல....
தன் குடும்பத்தார் மீது அளவுக் கடந்த பாசமும் அன்பும் அவன் வைத்திருந்தாலும் அதனை என்றுமே அவன் வெளிக்காட்டியதில்லை...
இது அவர்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.... இது நிச்சயம் திவ்யாவிற்கும் தெரிந்து தான் இருக்க வேண்டும்....
இத்தனை மாதங்கள் அவனோடு ஒரே இல்லத்தில், அவன் குடும்பத்தாரோடு இருந்திருக்கிறாள்....
இது கூடத் தெரியவில்லை என்றால் எப்படி?
ஸ்ரீயின் மனதில் தோன்றிய எண்ணங்களே இவை....
இந்தப் பிரச்சனையை இனியும் இப்படியே விட்டு விடக்கூடாது என்று எண்ணியவராகத் திவ்யாவைப் பார்க்க, தன் கணவன் வீட்டில் இருந்து வெளி சென்றும் இன்னும் அவன் சென்ற வழியின் மேலே விழி வைத்துக் கண்ணீரில் கரைந்துக் கொண்டிருந்தவளை நெருங்கியவர்....
"திவ்யா, உன் கூடக் கொஞ்சம் பேசனும்டா.... என் கூட வா" என்றார்...
நேற்று தன் கணவன் ஆசையுடன் தன்னை அணைத்து தன் விருப்பத்தை எடுத்து சொல்லியும் தான் அவரின் அறைக்குச் செல்லாதது நிச்சயம் அதீத கோபத்தில் அவரைத் தள்ளியிருக்கும்...
தன் வீட்டார் ஊருக்கு கிளம்பும் வரை வேண்டுமானால் பொறுமையோடு இருப்பார்.... அதற்குப் பின் தான் தெரியும் அவரின் கோபத்தின் அளவு....
காலையிலேயே வெடித்துத் தன்னை வேரோடு சாய்க்க போகிறார் என்று அஞ்சிக் கொண்டு இருந்தவளுக்கு அவன் ஒன்றும் பேசாமல் தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் அலுவலகத்திற்குச் சென்றது திகிலை அடி வயிற்றில் உறையச் செய்தது...
மயிற்கூச்செரியும் அளவிற்கு உடலில் உதறல் எடுத்திருக்க, அமைதி கலந்த ஒரு வித கிலி சூழ்ந்திருக்கத் தன் இதயம் இரண்டாக வெட்டப்பட்டுப் பிளந்தது போல் வலியெடுக்கச் செய்தது அவனின் பாராமுகத்தால்....
ஆனால் அந்த நிமிடம் அவன் அமைதியாகச் சென்று இருந்தாலும் அவன் மனம் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையைப் போல் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறது என்பதனை இந்தச் சின்னப் பேதை அறியவில்லை...
மாமியார் தன்னை அழைக்கவும் சுயநினைவிற்கு வந்தவள் அவரின் பின்னரே செல்ல, அவளைக் கீழே இருக்கும் விருந்தினர்கள் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று கதவை சாத்திவிட்டு அவளைக் கட்டிலில் அமரச் செய்த ஸ்ரீ அவளின் தலையை மென்மையாகக் கோதிவிட்டுக் கொண்டே...
"திவ்யா.... நேத்து நைட் எல்லோரும் சாப்பிட்டுட்டு இருக்கும் போது அர்ஜூன் கிட்சனில் உன்னிடம் ஏதாவது சொன்னானா?" என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்....
"ஐயோ! அது எப்படி இவருக்குத் தெரியும்?" என்று யோசித்தவள் கலக்கத்துடன் அவரைப் பார்க்க,
சட்டென்று மாறிய அவள் முகமும், நிற்காமல் வழிந்தோடும் கண்ணீரும் அவரின் கேள்விக்குப் பதிலை சொல்லாமல் சொல்லியது....
அவளின் முக மாற்றத்தை வைத்தே நடந்ததை யூகித்தவர்....
"திவ்யா... நானும் உன்னை மாதிரி ஒரு வீட்டிற்குப் புதுப் பொண்ணா போயிருக்கேன்.... மூன்று பிள்ளைகளைப் பெற்றிருக்கிறேன்... அதனால் எனக்கு எப்படி இது தெரியும்ன்னு நினைக்காத" என்றார் கனிவாக.....
அதே சமயம் அவரின் குரலில் அழுத்தமும் இருந்தது...
அமைதியான முகத்தோடு சன்னமான குரலில் அவர் பேசினாலும் அவரின் வார்த்தைகளில் சிறிது கடுமையும் சேர்ந்திருப்பதாகவே திவ்யாவிற்குத் தோன்றியது...
அதை உணர்ந்த நொடி அவளின் கண்களில் மேலும் கண்ணீர் பெருக, அவளின் நிலை உணர்ந்தவர் முடியை கோதிவிட்டவாறே...
"சொல்லுடா, என்ன சொன்னான் அர்ஜூன்?" என்றார்.
என்னதான் பெண்ணாக இருந்தாலும் தன் மாமியாரிடம் எப்படித் தன் கணவன் தன்னை அணைத்ததை, தன் அறைக்குத் தன்னை அழைத்ததைச் சொல்வது என்று சில விநாடிகள் தயங்கியவள் தன் மாமியாரின் விழிகள் தன்னையே கூர்ந்து பார்த்திருப்பதை உணர்ந்து வேறு வழியின்றிப் பாதியை மறைத்து....
"அத்தை... என்ன நேத்து அவங்க ரூமிற்கு வரச் சொன்னாங்க…" என்றாள்...
அதை ஏற்கனவே யூகித்திருந்த ஸ்ரீ,
"சரி, அப்போ ஏன் நேத்து உன் அம்மா கூடத் தூங்கின?" என்றார்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று திவ்யாவின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது....
என்ன தான் ஸ்ரீ ஒரு நல்ல மாமியாராகவும், தன் அன்னையின் நெருங்கிய தோழியாகவும் இருந்தாலும் இது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் அந்தரங்கம்...
"அதுவும் தன்னுடன் தாம்பத்ய உறவை தன் கணவன் எதிர்பார்க்கிறார் என்றும், அவரை பார்த்தாலே நடுங்கும் தான் எப்படி அவருடன்.....????" என்றும் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்க ஆனால் ஸ்ரீ விடுவதாக இல்லை....
"திவ்யா... உன்னைத் தாண்டா கேட்கிறேன்.... சொல்லு... அவன் கூப்பிட்டும் நீ ஏன் அவன் ரூமிற்குப் போகலை?" எனவும்....
தயக்கத்துடனும், கலக்கத்துடனும் ஒவ்வொரு வார்த்தையாக....
"இல்லத்த.... எனக்கு அ.... அவங்கள பார்த்தாலே பயத்தில வெட வெடங்குது.... இதுல அவங்கக்கூட அவங்க ரூமுல எ... எப்படித்த?" என்றவள் அதற்கு மேல் பேசாமல் தலை குனிய,
"திவ்யா... ரிஷப்ஷன் அன்னைக்கு நைட் அவனோட அவனுடைய ரூமில் தான படுத்திருந்த.... அப்ப அவன் உன்னை எதுவும் செஞ்சானா? இல்ல உன்னை எதுவும் கஷ்டப்படுத்திற மாதிரி பேசினானா? அப்படி எதுவும் நடந்த மாதிரி எனக்குத் தெரியலையே....." என்றவர் சில விநாடிகள் தயங்கி பின் தொடர்ந்தார்.....
"திவ்யா.... எனக்கு நீ வேற, மஹா வேற இல்லை.... உன் இடத்தில் மஹா இருந்திருந்தாலும் நான் இப்படித் தான் பேசியிருப்பேன்... பொண்ணா பிறந்தா இதெல்லாம் ஏத்துகிட்டு தான் ஆகனும்... கல்யாணம்னு ஒன்னு ஆனா புருஷனுடன் இப்படி எல்லாம் இருக்கனும்னு உனக்குச் சொல்லி தெரிய வேண்டியதில்லையே..... இதெல்லாம் தெரிஞ்சு தான நீ அந்தப் பையன கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்ச?" எனவும், இதை எதிர்பார்க்காத திவ்யா அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்க்க.....
"என்னாடா, திடீர்னு அத்தை பழைய கதையெல்லாம் பேசுறேன்னு நினைக்காதடா..... நான் அவன பத்தி பேசலை.... என் பையனப் பத்தி தான் பேச போறேன்.... எனக்குப் புரியுது.... உங்கள் கல்யாணம் ஏற்கனவே நாங்க எல்லாம் பார்த்து பேசி நடந்ததில்லைன்னு... ஆனால் அதே சமயம் அர்ஜூனோட நீ இத்தனை நாள் ஒரே வீட்டில் இருந்திருக்க.... அவனோட மனமாற்றத்தை பத்தி நான் சொல்ல வேண்டியதில்ல...." என்றவரின் கண்கள் ஒரு அன்னையாகத் தன் மகனை நினைத்து கலங்கியிருந்ததோ....
இது வரை தன் தோழியின் மகளாக, தன் மருமகளாகத் திவ்யாவிடம் பேசிக் கொண்டிருந்தவர், இப்பொழுது முதன் முறையாகத் தன் மகனுக்காகவும் பேச துவங்கினார்.....
"அர்ஜூன் கொஞ்சம் கடுமையானவன் தான் திவ்யா..... அவன் மத்தவங்க போல் இல்லை.... ரொம்பவே முரட்டுக் குணம் உள்ளவன் தான்.... நான் இல்லைன்னு மறுக்கலை.... ஆனால் அதே சமயம் அவனும் மனுஷன் தான் திவ்யா..... உங்க கல்யாணம் அவனுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சின்னு உன்னை விடப் பெத்தவ எனக்குத் தான் தெரியும்.... இப்போ கூட அவன் எப்படி உங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சான்?? எப்படி எதுவும் பேசாம அமைதியா உன் கழுத்தில் தாலி கட்டினான்னு ஒவ்வொரு நாளும் நான் நினைச்சுப் பார்த்திருக்கேன்.... ஆனால் அவனே இவ்வளவு சீக்கிரம் மனசு மாறுவான்னு நான் எதிர்பார்க்கலை..... கல்யாணத்தன்னைக்கே டிவோர்ஸ் பத்தி பேசினவன் அவன்..... ஒரு முறை முடிவெடுத்தா அந்தக் கடவுளே வந்து சொன்னாலும் தன் முடிவ மாத்திக்க மாட்டாண்டா...."
"ஆனால் இப்போ அவனே உன்னைத் தேடுறானா அவனோட மனச புரிஞ்சுக்கத் திவ்யா.... இதுக்கு மேல உன் வாழ்க்கைய சிக்கல் ஆக்கிக்காத...... அவனோட கோபம் இப்போ அளவிட முடியாத அளவுள்ள இருக்குங்கிறது காலையில் அவன் முகத்தைப் பார்த்தே தெரிஞ்சிக்கிட்டேன்......அவன் என் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கலை... இது வரைக்கும் அவன் என்ன எதிர்த்து எதுவும் பண்ணினதில்ல.... ஆனா உன் விஷயத்தில என் பேச்சுக் கூடக் கேட்க மாட்டானோன்னு பயமா இருக்குது திவ்யா....."
"என்னடா திடீர்னு அத்தை நிஜ மாமியார் போல் ஆகீட்டாங்கன்னு நினைக்காதடா..... எனக்கு அர்ஜூன் என்னை எதிர்க்கிறத பத்தி கவலை இல்லை... ஆனால் எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்... நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும்.... நீ புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்" என்றவர்,
அதற்கு மேல் ஒன்றும் பேசுவதிற்கில்லை என்பது போல் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவர் அறையை விட்டு செல்ல,
"இத்தனை நாளாய் தன் கணவனிடத்தில் எதிர்பார்த்திருந்த காதல் இப்பொழுது கிடைத்தும் கோட்டை விட்டு விட்டோமோ? இனி அவர் என்னை விட்டு தூரப் போய்விடுவாரா? எனக்கு அவர் கிடைக்கவேமாட்டாரா?" என்று திவ்யாவின் ஊமை மனது கிடந்து அலறி அரற்றியது.....
ஆனால் காலம் கடந்து!!!!!!
தன் மாமியார் அறையை விட்டு சென்றும் ஒன்றும் செய்வதறியாது சிலைப் போல் கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள் மலரினும் மெல்லிய திவ்யா....
அதிகாலையில் அலுவலகத்திற்கு வந்த அர்ஜூனிற்கு அங்கு இன்னமும் ஊழியர்கள் ஒருவரும் வராதிருக்கவே தன்னுடைய கோபத்தைச் சமன் படுத்த வேலையில் கவனம் செலுத்துவதே சரியான வழி என்று எண்ணி கதிருக்கு அழைத்தான்...
மறு முனையில் அலை பேசியை யாரும் எடுக்காததால் ஆத்திரத்தில் அலை பேசியைத் தூக்கி மேஜையில் எரிந்தவன் தன் சேரில் தலை சாய்த்து இரு கரங்களையும் தன் தலைக்குப் பின் வைத்து யோசிக்கத் துவங்கியவனுக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது அவமானத்தில்....
தன் மனைவியின் இகழ்ச்சியில், அவமதிப்பில், புறக்கணிப்பில்.....
எதுவும் செய்யத் தோன்றாமல் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு கணினியை உயிர்பூட்டி வேலையில் மூழ்க ஆரம்பிக்கக் கதிரிடமிருந்து அழைப்பு வந்தது.....
அர்ஜூன் அழைப்பு எந்த நிமிடம் வந்தாலும் கதிர் அவனின் அழைப்பை எடுத்துவிடுவான்.... அது நள்ளிரவாக இருந்தாலும் சரி...
ஆனால் இன்று தன் MD அழைக்கும் பொழுது அலை பேசியை வீட்டின் ஹாலில் வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றிருந்ததால் அலை பேசியின் அழைப்பு அவனது செவிகளுக்கு எட்டவில்லை...
குளித்து முடித்து வந்தவன் அர்ஜூனின் அழைப்பை கண்டவுடன்....
"ஐயோ! போச்சு!! காலங்காத்தாலே கூப்பிட்டு இருக்காரு... என்ன அவசரமோ? தொலைஞ்சோம்" என்று பதறியவன் அர்ஜூனிற்கு அழைத்து.....
"சார்... சாரி சார்.... நீங்க போன் பண்ணிய போது குளிச்சிட்டு இருந்தேன்.... அதான் உங்கள் கால அட்டெண்ட் பண்ண முடியலை..... என்ன சார்? இவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டு இருக்கீங்க... எனி ப்ராப்ளம்?" என்றான்...
"கதிர்... ஐ நீட் யூ ஹியர்.... [I need you here] உடனே ஆஃபிஸிற்கு வாங்க?" என்ற M D யிடம் அதற்கு மேல் கேள்வி கேட்டுப் பழக்கம் இல்லாததால் சட்டென்று சரி என்றவன் சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்தான்..
அலை பேசியில் அர்ஜூனின் குரலில் தெரிந்த அடக்கப்பட்ட கோபமும், அளவுக்கதிகமான அமைதியும் கதிருக்கு ஏதோ பெரிய விபரீதம் நடக்க இருக்கிறது என்பதை உணர்த்த விரைவாக அவன் அறைக்கு வந்தவன் கதவை மெதுவாகத் தட்டி விட்டு அர்ஜூனின் கட்டளையை எதிர்பார்த்து காத்து இருந்தான்...
உள்ளே இருந்து எந்தச் சத்தமும் வராமல் போகவும் மீண்டும் கொஞ்சம் சத்தமாகத் தட்ட,
"கம் இன்" என்ற குரல் கேட்டவுடன் உள்ளே சென்றவனுக்குத் தன் M D யின் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்தில் இருந்து எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை...
இது தான் அர்ஜூன்....
அவனின் உணர்வுகள், உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவன் நினைத்தால் மட்டுமே அவர்களுக்குத் தன்னை, தன் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துவான்......
இல்லை என்றால் அவனுடைய முகத்தில் இருந்து அவனின் மனநிலையை, அவன் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதை ஒருவராலும் கண்டறிய முடியாது.....
அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, வருத்தமாக இருந்தாலும் சரி, இல்லை இப்பொழுது போல் கட்டுக்கடங்காத கோபமாக இருந்தாலும் சரி.....
தன் தந்தை ருத்ரமூர்த்தியிடம் இருந்து தன் மகனுக்கு வந்த பல குணங்களில் இதுவும் ஒன்று என்று ஸ்ரீ அடிக்கடி சொல்லுவது உண்டு.....
ஆனால் இதே குணம் அர்ஜூனின் தொழில் சாம்ராஜ்யத்தில் அவனுக்குப் பல நேரங்களில் உதவி இருக்கிறது....
இதைத் தான் ஆங்கிலத்தில "இமோஷனல் இன்டெலிஜன்ஸ்" [Emotional Intelligence] என்பார்கள்...
தன்னுடைய உணர்வுகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்களின் உணர்வுகளை நன்றாகக் கண்டறியும் சாமர்த்தியமும் பெற்றவர்கள் இவர்கள்...
எந்த அளவிற்குத் தங்கள் சொந்த உணர்ச்சிகளைத் தங்களின் கைகளுக்குள் அடக்கி வைத்திருக்கிறார்களோ அதே அளவிற்குத் தன் எதிராளிகளின் உணர்ச்சிகளையும் அடையாளம் கண்டு அவர்களின் உணர்வுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நிர்வகிக்கும் திறன் பெற்றவர்கள் இவர்கள்...
இது பல நேரங்களில் ஒருவராலும் தீர்க்க முடியாத பலவித சிக்கல்களையும் தீர்க்க உதவும் ஒரு உணர்வுசார் நுண்ணறிவு....
இவர்களைப் போன்றவர்களை வெல்வது என்பது மிக மிகக் கடினம்!!!
அர்ஜூனின் முகத்தில் இருந்து எந்த உணர்வையும் கண்டு அறிய முடியாவிட்டாலும், கதிரின் மனதில் எதுவோ உணர்த்த...
"இஸ் எவிரித்திங் ஆல்ரைட் சார்? [Is everything alright sir?] " என்றான் தயங்கியவாறே....
"கதிர்... இன்று என்னோட ஷெடியூல்ஸ் என்ன?"
தன்னுடைய டேப்லட்டில் இருந்து அன்றைய நாளுக்கான வாடிக்கையாளர் பிரதிநிதிகளுடன் சந்திக்கும் மீட்டிங்ஸ், அலுவலக ஊழியர்களுடன் கூட்டங்கள், மற்ற அலுவல்களுக்கான அட்டவணை அனைத்தையும் சொன்னவன்,
"சார், உங்களுக்கு வேண்டும் என்றால் நான் எல்லாத்தையும் ரீ ஷெடியூல் பண்றேன்" என்றான்...
"உங்களிடம் நான் சொன்னேனா? ரீ ஷெடியூல் பண்ண சொல்லி..." என்று புருவங்களைச் சுருக்கி கதிரைக் கூர்ந்து பார்த்து அர்ஜூன் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,
அர்ஜூனின் கோபத்தில் சகலமும் அடங்கிப் போன கதிர்...
"சாரி, சார்" என்றவன் அதற்கு மேல் ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை.
நேரம் செல்ல செல்ல மற்ற ஊழியர்களும் வர துவங்க, வேலையிலும் மீட்டிங்குகளிலும் தன் நேரத்தை அர்ஜூன் செலவிட அப்பொழுது தான் அவனுக்கு அந்தத் தொலை பேசி அழைப்பு வந்தது தன்னுடைய "இன்ஃபார்மர்" இடமிருந்து...
"சார்... இன்னைக்கு நம்ம கம்பெனிக்கு இன்கம்டாக்ஸ் ரைட் வராங்க சார்"
தொழில் சம்பந்தப்பட்ட எந்தச் சூழ்நிலைகளிலும் அதிர்ச்சியோ பதற்றமோ ஆகாத அர்ஜூன் நிதானமாக ஆனால் யோசனையுடன்....
"என்ன திடீர்னு?" என்று கேட்க,
"சார், எனக்கு வந்த தகவலின் படி ராம் இன்டஸ்ட்ரீஸிலிருந்து தான் ஏதோ ஹிண்ட் போயிருக்கும்னு தோனுது சார்…" என்றான் இன்ஃபார்மர்....
"ஓகே.... ஐ வில் டேக் கேர் ஆஃப் இட் [Ok i will take care of it] " என்றவன் கதிரை நோக்கி...
"உடனே நம்ம லாயர்ஸையும், ஆடிட்டர் கரனையும் வரச் சொல்லுங்க" எனவும்,
கதிருக்கு புரிந்து போனது இன்று என்ன நடக்கப் போகிறது என்று.
மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் என்பது போல் விடுவிடுவென ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்து எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் வருமான வரி சோதனைக்குத் தயாராகவும், வருமான வரித் துறையில் இருந்து அதிகாரிகள் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது....
அவர்களிடம் இருந்து அவர்களின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த அர்ஜூன் சோதனைக்கான உத்தரவையும் கவனமாகப் படித்தவன் வக்கீலிடம் கொடுக்க அவரும் படித்துவிட்டு சோதனைக்குச் சம்மதம் தெரிவித்தார்.
அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகவும் கவனமாகவும் பதிலளித்துக் கொண்டிருந்தவனின் மனதில்....
"எதற்காக இந்த ரைடு? ராம் இன்டஸ்ட்ரீஸில் இருந்து என்ன ஹிண்ட் போயிருக்கும்?" என்ற எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட இரவு வரை நீடித்த சோதனையில் ஊழியர்கள் ஒருவரையும் வெளியே விடாது அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்திருக்க அனைவருக்கும் ஒரு வித பயமும் அசதியுமே இருந்தது...
இறுதியாக அனைத்து ஆவணங்களையும் பார்த்தவர்கள் ஒன்றும் கண்டுப்பிடிக்க முடியாமல்....
"சாரி ஃபார் தி ட்ரபிள் மிஸ்டர் அர்ஜூன் கிருஷ்ணா [ Sorry for the trouble Mr Arjun Krishna] " என்றவர்கள் ஒரு வழியாக வெளியே செல்ல,
அர்ஜூன் உழன்று கொண்டிருந்த தன் நினைவுகளில் இருந்து இன்னமும் வெளியில் வரவில்லை.
சில நிமிடங்கள் அமைதியாக ஏதோ யோசனையில் இருந்தவன் சட்டென்று கதிரை ஆழ்ந்து நோக்கி ...
"கதிர்... எனக்கு உடனே ராம் இன்டஸ்ட்ரீஸின் கரெண்ட் அண்ட் ஃப்யூச்சர் ப்ராஜட்ஸ் எல்லாவற்றைப் பற்றியும் கம்ப்ளீட் டீடெய்ல்ஸ் வேண்டும்... அவர்கள் என்ன மாதிரியான விளைவுகளை இந்த ரைடில் எதிர்பார்த்தாங்கன்னும் தெரியுனும்... யார் நம்ம கம்பெனி பற்றி, என்ன மாதிரியான தகவல்களை இன்கம் டாக்ஸ் ஆஃபிஸிற்குச் சொன்னார்கள் என்றும் தெரியனும்... இந்த எல்லா டீடெய்ல்ஸும் எனக்கு நாளைக்குள்ள என் டேபிளில் இருக்கனும்" என்றவன் புயல் வேகத்தில் வேகமாக வெளியேற,
கதிரின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது....
அது அர்ஜூனை பற்றியோ அல்லது தன்னைப் பற்றியோ பயத்தினாலோ இல்லை...
"ஐயோ! ராமா! புலி வால பிடிச்சிட்டியே.... இனி கடவுள் கூட உன்னைய காப்பாற்ற முடியாது" என்று ராம் இன்டஸ்ட்ரீஸின் M D ராமச்சந்திரனை நினைத்து தான்.
ஏனெனில் அர்ஜுனின் கோப வட்டத்திற்குள் விழுந்தவர்களை அது எந்த எல்லை வரை கொண்டு போகும் என்பதை ஸ்ரீக்கு பிறகு நன்கு தெரிந்தவன் இவன் ஒருவனே...
பல நேரங்களில் அதைத் திகிலோடு கண் கூடாகப் பார்க்க நேர்ந்ததும் உண்டு....
ஆனால் அப்பொழுதெல்லாம் அர்ஜூனின் அதிரடியான ஆட்டங்களைப் பார்த்து பயந்து போனாலும் தன் MD -ஐ எதிர்த்து முன்னாள் சேர்மனான அவரின் அன்னையோ அல்லது இன்னாள் சேர்மனான அவரின் தந்தையோ கூட எதிர்த்து பேசாதது கண்டு வாய் மூடி ஆச்சரியப்பட்டு இருக்கிறான்....
மனதிற்குள் "என்ன தில்லுப்பா இவருக்கு... அதுவும் இந்தச் சின்ன வயசிலேயே" என்று ஒருவித திகிலான நிலையில் இருந்திருக்கிறான்...
ஆனால் தொழிலிலேயே அப்படிப்பட்டவன் அர்ஜூன் என்றால் அவனின் கோபத்திற்குப் புதிதாக ஆளான திவ்யாவின் நிலைமை என்னவோ?
தொடரும்..
விடியும் வரை பெருமளவு குழப்பத்திலும், மலை அளவு அவமானத்திலும், கட்டுக்கடங்காத கோபத்திலும் உள்ளம் உலையாகக் கொதித்துக் கொண்டு இருந்ததால் உறக்கம் என்பதே இல்லாது சிந்தித்துக் கொண்டிருந்த அர்ஜூன் விடிந்ததும் எழுந்தவன் குளியல் அறைக்குள் சென்றான்...
மனதில் மண்டியிருந்த உஷ்ணம் உடல் முழுவதும் கனலாக வீசியதோ குளிர்ந்த நீரில் நீண்ட நேரம் நின்றிருந்தவனின் மனமும் குளிரவில்லை, உடலின் சூடும் தணியவில்லை....
இரு முறை தன் மனைவியை எதிர்பார்த்து அடைந்த ஏமாற்றம் அவனின் உள்ளத்தில் மனக்கசப்பை ஏற்படுத்த அதனால் விளைந்த வெறுப்புணர்ச்சியினால் சினம் துளிர்த்து இரவு முழுவதும் நெஞ்சத்தில் தகிப்பும் சீற்றமும் கொண்டு உறங்காது இருந்த கணவனைத் திவ்யா அறிந்திருந்தால், அவனின் கோபத்தைக் கண்கூடாகக் கண்டிருந்தால் நிச்சயம் வெலவெலத்து போயிருப்பாள்....
தன் பெற்றோரும் தமையனும் ஊருக்கு கிளம்ப உதவி செய்தவளின் பார்வை நொடிக்கொரு தரம் மாடியில் இருக்கும் தன் கணவனின் அறைக் கதவையே நோக்கியிருக்க எந்த அரவமும் இல்லாது இருந்த அறையின் நிசப்தம் மனதில் திக்திக்கென்ற உணர்வைத் தர, அவன் கதவு திறக்கப்படவும் இல்லை, அவன் கீழே இறங்கி வருவதாயும் தெரியவில்லை....
கணவனை நெருங்கவும் தைரியம் இல்லாமல் அவனின் கோபத்தையும் தாங்க சக்தி இல்லாமல் பரிதவித்துப் போய் இருந்தாள் அந்தச் சின்னத் தளிர்.....
பெற்றோருடன் கிளம்பிய வினோத்தின் கண்களும் தன் தங்கையைப் போலவே வீட்டை விட்டு கிளம்பும் வரையிலும் தன்னவளையே தேடி அலைமோத, எந்தச் சந்தடியும் இல்லாமல் தன் அறைக்குள்ளே அடைந்து இருந்தவள் அவன் ஊருக்கு கிளம்புவது தெரிந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மறந்தும் வெளியில் தலைக் காட்டவில்லை....
அண்ணனும் தங்கையும் அவர் அவர்களின் குணாதியங்களுக்கு ஏற்ப தங்கள் துணையை நினைத்து விடியும் வரையில் இதயம் கனத்து உள்ளம் புகைந்து மன ஆற்றாமையுடன் தூங்காமல் இருந்து தங்களின் மனம் கவர்ந்தவர்களின் மனதை அறுக்கும் அளவிற்குச் சித்திரவதை செய்து கொண்டு இருந்தனர்...
செல்வதற்கு முன் மஹாவின் அழகிய முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா, தான் கிளம்பும் பொழுது சென்ற முறை செய்தது போல் தலையை மட்டுமாவது அசைத்து தன் கோபத்தை மறந்து தனக்கு விடைத் தர மாட்டாளா? என்று ஏங்கியவாறே வினோத் காத்திருக்க....
அவள் வெளியே வரும் சுவடே இல்லாததால் வேறு வழியில்லாமல் டாக்ஸியில் ஏறியவன் மீண்டும் ஒரு முறை ஏக்கத்துடன் வீட்டை திரும்பி பார்க்க, ஒரு வேளை நேற்று போல் மொட்டை மாடியில் இருப்பாளோ? என்ற ஆசையில் மொட்டை மாடியையும் பார்க்க அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.....
அவனின் அழகிய ராட்ஷசி, செல்ல ரௌடி உள்ளம் முழுவதும் காதலை சுமந்திருந்தாலும் அவனின் அடாவடிச் செயலில் மனம் கலங்கி தன் இதயத்தைக் கடினமாக மாற்றிக் கொண்டு அறைக்குள்ளே அடைந்துக் கிடந்தாள்....
ஒரு வழியாகக் கலாவின் குடும்பத்தினரின் டாக்ஸி சென்றவுடன் உள்ளே வந்த ஸ்ரீக்கு இன்று என்ன நடக்குமோ? அர்ஜூனின் கோபம் எந்த எல்லையைத் தாண்டப் போகிறதோ என்று வயிற்றில் புளியை கரைக்க, மருமகளைத் திரும்பி பார்த்தவருக்கு அவளின் கலங்கிய முகமே பறைசாற்றியது அவளின் மனதில் சூழ்ந்திருந்த அச்சத்தை....
அவனைப் பெற்றவள் எனக்கே சில நேரங்களில் அவனைக் கண்டால் உதறல் எடுக்கிறது...
அவன் தந்தையாகட்டும் அல்லது நானாகட்டும் அவனுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்தால் எங்களிடம் அவன் சீறும் விதத்தில் நாங்கள் இருவருமே நடுநடுங்கி போய்க் கலங்கியிருப்போம்....
இதில் அருணைப் பற்றியோ மஹாவைப் பற்றியோ சொல்லவும் வேண்டாம்....
அவன் முன் சாதாரணமாக நின்று பேசுவதற்கே பயந்து உடல் வெடவெடக்க நிற்பார்கள்....
அதிலும் அவர்கள் அவனுக்கு எதிராக எதையாவது செய்துவிட்டுப் பின் அவனிடம் மன்னிப்பு இறைஞ்சும் பொழுதும் கூட அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் அவன் முன் தலை கவிழ்ந்து நிற்கும் போது ஸ்ரீக்கே பாவமாக இருக்கும்....
அந்த அளவிற்கு அவன் தன் குடும்பத்தையும், தொழிற்களையும் தன் தாத்தாவைப் போல் தன் உள்ளங்கைக்குள் வைத்து இருந்தான்...
அப்படி இருக்கப் பத்தொன்பது வயதே ஆன சின்னப் பெண் இவள், என்ன செய்வாள்? பாவம்!!!
அவனைக் கண்டாலே பயந்து நடுங்கி ஓடி ஒளிகிறவள்...
அவன் அவளை ஒவ்வொரு முறை திரும்பி பார்க்கும் பொழுதும் அவனுடைய கூர்மையான விழிகளை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி ஒடுங்குகிறவள்...
அவன் இன்று என்ன ருத்ர தாண்டவம் ஆடப் போகிறானோ?
இவள் அவனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறாளோ?.....
என்று திவ்யாவின் பரிதாப நிலையை நினைத்துப் பார்த்தவருக்கு அவளின் மேல் இரக்கமே வர அவளுடன் சேர்ந்து அவரும் தன் மகனின் வருகைக்காக அச்சத்துடன் காத்திருக்க ஆரம்பித்தார்...
ஆனால் கலா குடும்பம் சென்றும் அவன் கீழ் இறங்கி வருவதாயில்லை...
சில நேரங்களில் ஏதோ ஒரு காரணத்தால் நாம் நமக்குப் பிரியமான ஒருவரின் கோபத்திற்கு ஆளாகியிருப்போம்.... அவர்களின் சீற்றம், கோபம் வெளி வரும் நொடிகளை எண்ணிக் காத்திருப்போம்....
அந்த நேரங்களில், ஒவ்வொரு நிமிடமும் மனதிற்குள் ஒரு கலக்கத்தைக் கொண்டு வரும்... ஒவ்வொரு விநாடியும் பல யுகங்கள் போல் தோன்றும்...
அந்தக் கலக்கத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அவர்களின் கோபம் கூடப் பெரிய அளவில் நம்மைப் பாதிக்காது.... ஆனால் அந்த நிமிடங்கள் நம்மைக் கதிகலங்க வைக்கும்...
அதே போன்ற ஒரு மனநிலையில் இருந்தனர் ஸ்ரீயும், திவ்யாவும்....
நேரம் ஆக ஆக அடி வயிற்றுக்குள் ஒரு உருளை உருளுவது போல் மனம் திகைத்துப் போய்ச் செயலற்று இருக்க, அவர்களின் அதிர்ச்சியை மேலும் கூட்டுமாறு சிறிது நேரத்தில் குளித்து முடித்துக் கீழே இறங்கி வந்தவன் ஒன்றும் பேசாமல் ஷூவைப் போட, அவனின் அமைதி சூறாவளிக்கு முன்னர் வரும் மயான அமைதியைப் போன்று கொடியதாக இருந்தது அவனின் மனையாளுக்கும், அவன் அன்னைக்கும்....
அவனின் அசாதாரணமான மௌனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவன் மனதில் ஓடிக் கொண்டு இருக்கும் எண்ணங்களையும் அறியும் பொருட்டு அவன் அருகில் தயங்கிவாறே வந்தார் ஸ்ரீ.....
"என்ன அர்ஜூன், அதற்குள் கிளம்பிட்ட... சாப்பிடலையா?"
அவரின் கேள்வியில் ஷூவைப் போட்டுக் கொண்டு இருந்தவன் அவரை நிமிர்ந்தும் பார்க்காமல்....
"ஒரு அர்ஜென்ட் விஷயமா கதிர் கால் பண்ணியிருக்கான்.... உடனே கிளம்பனும்" என்றவன் மறந்தும் தன் மனைவியைத் தேடவில்லை...
அது போல் கதிரும் அவனை அழைத்திருக்கவில்லை.... அவனுக்குத் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பின் பிடியில் இருப்பது போலவே இருந்தது....
இரவு முழுவதும் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு எழுந்தவுடன் வந்த நினைவே....
"தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் நடக்கும் இந்தப் பிரச்சனையை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினால் தன் தரம் தான் தாழ்ந்து போகும்.... மனைவியிடம் வாய்விட்டு அவளிடம் தாம்பத்தியத்தை யாசித்தானா அர்ஜூன் என்று அசிங்கமாகும்.... போயும் போயும் ஒரு பெண்ணுக்காகக் காத்திருந்தான் என்ற கேவலமான பேச்சு வரும்" என்று தப்புத் தப்பாக நினைத்தவன் அடங்காத கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே சென்றவன்,
காரை புயல் போல் சீறிக் கிளப்பிக் கொண்டு சென்ற வேகத்திலேயே தெரிந்தது அவனின் சினத்தின் ஆழம்....
தன் மகன் தன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் பதில் கூறிவிட்டுப் போனதில் ஸ்ரீயின் மனம் சுக்கல் சுக்கலாக உடைந்து போனது.....
அவனுக்குத் தன் மனம் விட்டு தன் காதலைச் சொல்ல தெரியாது....
தன் இதயத்தைத் திறந்து தன் ஆசையை, மனதில் ஆடும் எண்ணங்களைத் தெளிவு படுத்த இயலாது....
ஏனெனில் அவன் மற்ற ஆண்களைப் போல் அல்ல....
தன் குடும்பத்தார் மீது அளவுக் கடந்த பாசமும் அன்பும் அவன் வைத்திருந்தாலும் அதனை என்றுமே அவன் வெளிக்காட்டியதில்லை...
இது அவர்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.... இது நிச்சயம் திவ்யாவிற்கும் தெரிந்து தான் இருக்க வேண்டும்....
இத்தனை மாதங்கள் அவனோடு ஒரே இல்லத்தில், அவன் குடும்பத்தாரோடு இருந்திருக்கிறாள்....
இது கூடத் தெரியவில்லை என்றால் எப்படி?
ஸ்ரீயின் மனதில் தோன்றிய எண்ணங்களே இவை....
இந்தப் பிரச்சனையை இனியும் இப்படியே விட்டு விடக்கூடாது என்று எண்ணியவராகத் திவ்யாவைப் பார்க்க, தன் கணவன் வீட்டில் இருந்து வெளி சென்றும் இன்னும் அவன் சென்ற வழியின் மேலே விழி வைத்துக் கண்ணீரில் கரைந்துக் கொண்டிருந்தவளை நெருங்கியவர்....
"திவ்யா, உன் கூடக் கொஞ்சம் பேசனும்டா.... என் கூட வா" என்றார்...
நேற்று தன் கணவன் ஆசையுடன் தன்னை அணைத்து தன் விருப்பத்தை எடுத்து சொல்லியும் தான் அவரின் அறைக்குச் செல்லாதது நிச்சயம் அதீத கோபத்தில் அவரைத் தள்ளியிருக்கும்...
தன் வீட்டார் ஊருக்கு கிளம்பும் வரை வேண்டுமானால் பொறுமையோடு இருப்பார்.... அதற்குப் பின் தான் தெரியும் அவரின் கோபத்தின் அளவு....
காலையிலேயே வெடித்துத் தன்னை வேரோடு சாய்க்க போகிறார் என்று அஞ்சிக் கொண்டு இருந்தவளுக்கு அவன் ஒன்றும் பேசாமல் தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் அலுவலகத்திற்குச் சென்றது திகிலை அடி வயிற்றில் உறையச் செய்தது...
மயிற்கூச்செரியும் அளவிற்கு உடலில் உதறல் எடுத்திருக்க, அமைதி கலந்த ஒரு வித கிலி சூழ்ந்திருக்கத் தன் இதயம் இரண்டாக வெட்டப்பட்டுப் பிளந்தது போல் வலியெடுக்கச் செய்தது அவனின் பாராமுகத்தால்....
ஆனால் அந்த நிமிடம் அவன் அமைதியாகச் சென்று இருந்தாலும் அவன் மனம் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையைப் போல் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறது என்பதனை இந்தச் சின்னப் பேதை அறியவில்லை...
மாமியார் தன்னை அழைக்கவும் சுயநினைவிற்கு வந்தவள் அவரின் பின்னரே செல்ல, அவளைக் கீழே இருக்கும் விருந்தினர்கள் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று கதவை சாத்திவிட்டு அவளைக் கட்டிலில் அமரச் செய்த ஸ்ரீ அவளின் தலையை மென்மையாகக் கோதிவிட்டுக் கொண்டே...
"திவ்யா.... நேத்து நைட் எல்லோரும் சாப்பிட்டுட்டு இருக்கும் போது அர்ஜூன் கிட்சனில் உன்னிடம் ஏதாவது சொன்னானா?" என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்....
"ஐயோ! அது எப்படி இவருக்குத் தெரியும்?" என்று யோசித்தவள் கலக்கத்துடன் அவரைப் பார்க்க,
சட்டென்று மாறிய அவள் முகமும், நிற்காமல் வழிந்தோடும் கண்ணீரும் அவரின் கேள்விக்குப் பதிலை சொல்லாமல் சொல்லியது....
அவளின் முக மாற்றத்தை வைத்தே நடந்ததை யூகித்தவர்....
"திவ்யா... நானும் உன்னை மாதிரி ஒரு வீட்டிற்குப் புதுப் பொண்ணா போயிருக்கேன்.... மூன்று பிள்ளைகளைப் பெற்றிருக்கிறேன்... அதனால் எனக்கு எப்படி இது தெரியும்ன்னு நினைக்காத" என்றார் கனிவாக.....
அதே சமயம் அவரின் குரலில் அழுத்தமும் இருந்தது...
அமைதியான முகத்தோடு சன்னமான குரலில் அவர் பேசினாலும் அவரின் வார்த்தைகளில் சிறிது கடுமையும் சேர்ந்திருப்பதாகவே திவ்யாவிற்குத் தோன்றியது...
அதை உணர்ந்த நொடி அவளின் கண்களில் மேலும் கண்ணீர் பெருக, அவளின் நிலை உணர்ந்தவர் முடியை கோதிவிட்டவாறே...
"சொல்லுடா, என்ன சொன்னான் அர்ஜூன்?" என்றார்.
என்னதான் பெண்ணாக இருந்தாலும் தன் மாமியாரிடம் எப்படித் தன் கணவன் தன்னை அணைத்ததை, தன் அறைக்குத் தன்னை அழைத்ததைச் சொல்வது என்று சில விநாடிகள் தயங்கியவள் தன் மாமியாரின் விழிகள் தன்னையே கூர்ந்து பார்த்திருப்பதை உணர்ந்து வேறு வழியின்றிப் பாதியை மறைத்து....
"அத்தை... என்ன நேத்து அவங்க ரூமிற்கு வரச் சொன்னாங்க…" என்றாள்...
அதை ஏற்கனவே யூகித்திருந்த ஸ்ரீ,
"சரி, அப்போ ஏன் நேத்து உன் அம்மா கூடத் தூங்கின?" என்றார்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று திவ்யாவின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது....
என்ன தான் ஸ்ரீ ஒரு நல்ல மாமியாராகவும், தன் அன்னையின் நெருங்கிய தோழியாகவும் இருந்தாலும் இது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் அந்தரங்கம்...
"அதுவும் தன்னுடன் தாம்பத்ய உறவை தன் கணவன் எதிர்பார்க்கிறார் என்றும், அவரை பார்த்தாலே நடுங்கும் தான் எப்படி அவருடன்.....????" என்றும் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்க ஆனால் ஸ்ரீ விடுவதாக இல்லை....
"திவ்யா... உன்னைத் தாண்டா கேட்கிறேன்.... சொல்லு... அவன் கூப்பிட்டும் நீ ஏன் அவன் ரூமிற்குப் போகலை?" எனவும்....
தயக்கத்துடனும், கலக்கத்துடனும் ஒவ்வொரு வார்த்தையாக....
"இல்லத்த.... எனக்கு அ.... அவங்கள பார்த்தாலே பயத்தில வெட வெடங்குது.... இதுல அவங்கக்கூட அவங்க ரூமுல எ... எப்படித்த?" என்றவள் அதற்கு மேல் பேசாமல் தலை குனிய,
"திவ்யா... ரிஷப்ஷன் அன்னைக்கு நைட் அவனோட அவனுடைய ரூமில் தான படுத்திருந்த.... அப்ப அவன் உன்னை எதுவும் செஞ்சானா? இல்ல உன்னை எதுவும் கஷ்டப்படுத்திற மாதிரி பேசினானா? அப்படி எதுவும் நடந்த மாதிரி எனக்குத் தெரியலையே....." என்றவர் சில விநாடிகள் தயங்கி பின் தொடர்ந்தார்.....
"திவ்யா.... எனக்கு நீ வேற, மஹா வேற இல்லை.... உன் இடத்தில் மஹா இருந்திருந்தாலும் நான் இப்படித் தான் பேசியிருப்பேன்... பொண்ணா பிறந்தா இதெல்லாம் ஏத்துகிட்டு தான் ஆகனும்... கல்யாணம்னு ஒன்னு ஆனா புருஷனுடன் இப்படி எல்லாம் இருக்கனும்னு உனக்குச் சொல்லி தெரிய வேண்டியதில்லையே..... இதெல்லாம் தெரிஞ்சு தான நீ அந்தப் பையன கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்ச?" எனவும், இதை எதிர்பார்க்காத திவ்யா அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்க்க.....
"என்னாடா, திடீர்னு அத்தை பழைய கதையெல்லாம் பேசுறேன்னு நினைக்காதடா..... நான் அவன பத்தி பேசலை.... என் பையனப் பத்தி தான் பேச போறேன்.... எனக்குப் புரியுது.... உங்கள் கல்யாணம் ஏற்கனவே நாங்க எல்லாம் பார்த்து பேசி நடந்ததில்லைன்னு... ஆனால் அதே சமயம் அர்ஜூனோட நீ இத்தனை நாள் ஒரே வீட்டில் இருந்திருக்க.... அவனோட மனமாற்றத்தை பத்தி நான் சொல்ல வேண்டியதில்ல...." என்றவரின் கண்கள் ஒரு அன்னையாகத் தன் மகனை நினைத்து கலங்கியிருந்ததோ....
இது வரை தன் தோழியின் மகளாக, தன் மருமகளாகத் திவ்யாவிடம் பேசிக் கொண்டிருந்தவர், இப்பொழுது முதன் முறையாகத் தன் மகனுக்காகவும் பேச துவங்கினார்.....
"அர்ஜூன் கொஞ்சம் கடுமையானவன் தான் திவ்யா..... அவன் மத்தவங்க போல் இல்லை.... ரொம்பவே முரட்டுக் குணம் உள்ளவன் தான்.... நான் இல்லைன்னு மறுக்கலை.... ஆனால் அதே சமயம் அவனும் மனுஷன் தான் திவ்யா..... உங்க கல்யாணம் அவனுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சின்னு உன்னை விடப் பெத்தவ எனக்குத் தான் தெரியும்.... இப்போ கூட அவன் எப்படி உங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சான்?? எப்படி எதுவும் பேசாம அமைதியா உன் கழுத்தில் தாலி கட்டினான்னு ஒவ்வொரு நாளும் நான் நினைச்சுப் பார்த்திருக்கேன்.... ஆனால் அவனே இவ்வளவு சீக்கிரம் மனசு மாறுவான்னு நான் எதிர்பார்க்கலை..... கல்யாணத்தன்னைக்கே டிவோர்ஸ் பத்தி பேசினவன் அவன்..... ஒரு முறை முடிவெடுத்தா அந்தக் கடவுளே வந்து சொன்னாலும் தன் முடிவ மாத்திக்க மாட்டாண்டா...."
"ஆனால் இப்போ அவனே உன்னைத் தேடுறானா அவனோட மனச புரிஞ்சுக்கத் திவ்யா.... இதுக்கு மேல உன் வாழ்க்கைய சிக்கல் ஆக்கிக்காத...... அவனோட கோபம் இப்போ அளவிட முடியாத அளவுள்ள இருக்குங்கிறது காலையில் அவன் முகத்தைப் பார்த்தே தெரிஞ்சிக்கிட்டேன்......அவன் என் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கலை... இது வரைக்கும் அவன் என்ன எதிர்த்து எதுவும் பண்ணினதில்ல.... ஆனா உன் விஷயத்தில என் பேச்சுக் கூடக் கேட்க மாட்டானோன்னு பயமா இருக்குது திவ்யா....."
"என்னடா திடீர்னு அத்தை நிஜ மாமியார் போல் ஆகீட்டாங்கன்னு நினைக்காதடா..... எனக்கு அர்ஜூன் என்னை எதிர்க்கிறத பத்தி கவலை இல்லை... ஆனால் எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்... நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும்.... நீ புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்" என்றவர்,
அதற்கு மேல் ஒன்றும் பேசுவதிற்கில்லை என்பது போல் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவர் அறையை விட்டு செல்ல,
"இத்தனை நாளாய் தன் கணவனிடத்தில் எதிர்பார்த்திருந்த காதல் இப்பொழுது கிடைத்தும் கோட்டை விட்டு விட்டோமோ? இனி அவர் என்னை விட்டு தூரப் போய்விடுவாரா? எனக்கு அவர் கிடைக்கவேமாட்டாரா?" என்று திவ்யாவின் ஊமை மனது கிடந்து அலறி அரற்றியது.....
ஆனால் காலம் கடந்து!!!!!!
தன் மாமியார் அறையை விட்டு சென்றும் ஒன்றும் செய்வதறியாது சிலைப் போல் கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள் மலரினும் மெல்லிய திவ்யா....
அதிகாலையில் அலுவலகத்திற்கு வந்த அர்ஜூனிற்கு அங்கு இன்னமும் ஊழியர்கள் ஒருவரும் வராதிருக்கவே தன்னுடைய கோபத்தைச் சமன் படுத்த வேலையில் கவனம் செலுத்துவதே சரியான வழி என்று எண்ணி கதிருக்கு அழைத்தான்...
மறு முனையில் அலை பேசியை யாரும் எடுக்காததால் ஆத்திரத்தில் அலை பேசியைத் தூக்கி மேஜையில் எரிந்தவன் தன் சேரில் தலை சாய்த்து இரு கரங்களையும் தன் தலைக்குப் பின் வைத்து யோசிக்கத் துவங்கியவனுக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது அவமானத்தில்....
தன் மனைவியின் இகழ்ச்சியில், அவமதிப்பில், புறக்கணிப்பில்.....
எதுவும் செய்யத் தோன்றாமல் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு கணினியை உயிர்பூட்டி வேலையில் மூழ்க ஆரம்பிக்கக் கதிரிடமிருந்து அழைப்பு வந்தது.....
அர்ஜூன் அழைப்பு எந்த நிமிடம் வந்தாலும் கதிர் அவனின் அழைப்பை எடுத்துவிடுவான்.... அது நள்ளிரவாக இருந்தாலும் சரி...
ஆனால் இன்று தன் MD அழைக்கும் பொழுது அலை பேசியை வீட்டின் ஹாலில் வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றிருந்ததால் அலை பேசியின் அழைப்பு அவனது செவிகளுக்கு எட்டவில்லை...
குளித்து முடித்து வந்தவன் அர்ஜூனின் அழைப்பை கண்டவுடன்....
"ஐயோ! போச்சு!! காலங்காத்தாலே கூப்பிட்டு இருக்காரு... என்ன அவசரமோ? தொலைஞ்சோம்" என்று பதறியவன் அர்ஜூனிற்கு அழைத்து.....
"சார்... சாரி சார்.... நீங்க போன் பண்ணிய போது குளிச்சிட்டு இருந்தேன்.... அதான் உங்கள் கால அட்டெண்ட் பண்ண முடியலை..... என்ன சார்? இவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டு இருக்கீங்க... எனி ப்ராப்ளம்?" என்றான்...
"கதிர்... ஐ நீட் யூ ஹியர்.... [I need you here] உடனே ஆஃபிஸிற்கு வாங்க?" என்ற M D யிடம் அதற்கு மேல் கேள்வி கேட்டுப் பழக்கம் இல்லாததால் சட்டென்று சரி என்றவன் சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்தான்..
அலை பேசியில் அர்ஜூனின் குரலில் தெரிந்த அடக்கப்பட்ட கோபமும், அளவுக்கதிகமான அமைதியும் கதிருக்கு ஏதோ பெரிய விபரீதம் நடக்க இருக்கிறது என்பதை உணர்த்த விரைவாக அவன் அறைக்கு வந்தவன் கதவை மெதுவாகத் தட்டி விட்டு அர்ஜூனின் கட்டளையை எதிர்பார்த்து காத்து இருந்தான்...
உள்ளே இருந்து எந்தச் சத்தமும் வராமல் போகவும் மீண்டும் கொஞ்சம் சத்தமாகத் தட்ட,
"கம் இன்" என்ற குரல் கேட்டவுடன் உள்ளே சென்றவனுக்குத் தன் M D யின் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்தில் இருந்து எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை...
இது தான் அர்ஜூன்....
அவனின் உணர்வுகள், உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவன் நினைத்தால் மட்டுமே அவர்களுக்குத் தன்னை, தன் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துவான்......
இல்லை என்றால் அவனுடைய முகத்தில் இருந்து அவனின் மனநிலையை, அவன் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதை ஒருவராலும் கண்டறிய முடியாது.....
அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, வருத்தமாக இருந்தாலும் சரி, இல்லை இப்பொழுது போல் கட்டுக்கடங்காத கோபமாக இருந்தாலும் சரி.....
தன் தந்தை ருத்ரமூர்த்தியிடம் இருந்து தன் மகனுக்கு வந்த பல குணங்களில் இதுவும் ஒன்று என்று ஸ்ரீ அடிக்கடி சொல்லுவது உண்டு.....
ஆனால் இதே குணம் அர்ஜூனின் தொழில் சாம்ராஜ்யத்தில் அவனுக்குப் பல நேரங்களில் உதவி இருக்கிறது....
இதைத் தான் ஆங்கிலத்தில "இமோஷனல் இன்டெலிஜன்ஸ்" [Emotional Intelligence] என்பார்கள்...
தன்னுடைய உணர்வுகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்களின் உணர்வுகளை நன்றாகக் கண்டறியும் சாமர்த்தியமும் பெற்றவர்கள் இவர்கள்...
எந்த அளவிற்குத் தங்கள் சொந்த உணர்ச்சிகளைத் தங்களின் கைகளுக்குள் அடக்கி வைத்திருக்கிறார்களோ அதே அளவிற்குத் தன் எதிராளிகளின் உணர்ச்சிகளையும் அடையாளம் கண்டு அவர்களின் உணர்வுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நிர்வகிக்கும் திறன் பெற்றவர்கள் இவர்கள்...
இது பல நேரங்களில் ஒருவராலும் தீர்க்க முடியாத பலவித சிக்கல்களையும் தீர்க்க உதவும் ஒரு உணர்வுசார் நுண்ணறிவு....
இவர்களைப் போன்றவர்களை வெல்வது என்பது மிக மிகக் கடினம்!!!
அர்ஜூனின் முகத்தில் இருந்து எந்த உணர்வையும் கண்டு அறிய முடியாவிட்டாலும், கதிரின் மனதில் எதுவோ உணர்த்த...
"இஸ் எவிரித்திங் ஆல்ரைட் சார்? [Is everything alright sir?] " என்றான் தயங்கியவாறே....
"கதிர்... இன்று என்னோட ஷெடியூல்ஸ் என்ன?"
தன்னுடைய டேப்லட்டில் இருந்து அன்றைய நாளுக்கான வாடிக்கையாளர் பிரதிநிதிகளுடன் சந்திக்கும் மீட்டிங்ஸ், அலுவலக ஊழியர்களுடன் கூட்டங்கள், மற்ற அலுவல்களுக்கான அட்டவணை அனைத்தையும் சொன்னவன்,
"சார், உங்களுக்கு வேண்டும் என்றால் நான் எல்லாத்தையும் ரீ ஷெடியூல் பண்றேன்" என்றான்...
"உங்களிடம் நான் சொன்னேனா? ரீ ஷெடியூல் பண்ண சொல்லி..." என்று புருவங்களைச் சுருக்கி கதிரைக் கூர்ந்து பார்த்து அர்ஜூன் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,
அர்ஜூனின் கோபத்தில் சகலமும் அடங்கிப் போன கதிர்...
"சாரி, சார்" என்றவன் அதற்கு மேல் ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை.
நேரம் செல்ல செல்ல மற்ற ஊழியர்களும் வர துவங்க, வேலையிலும் மீட்டிங்குகளிலும் தன் நேரத்தை அர்ஜூன் செலவிட அப்பொழுது தான் அவனுக்கு அந்தத் தொலை பேசி அழைப்பு வந்தது தன்னுடைய "இன்ஃபார்மர்" இடமிருந்து...
"சார்... இன்னைக்கு நம்ம கம்பெனிக்கு இன்கம்டாக்ஸ் ரைட் வராங்க சார்"
தொழில் சம்பந்தப்பட்ட எந்தச் சூழ்நிலைகளிலும் அதிர்ச்சியோ பதற்றமோ ஆகாத அர்ஜூன் நிதானமாக ஆனால் யோசனையுடன்....
"என்ன திடீர்னு?" என்று கேட்க,
"சார், எனக்கு வந்த தகவலின் படி ராம் இன்டஸ்ட்ரீஸிலிருந்து தான் ஏதோ ஹிண்ட் போயிருக்கும்னு தோனுது சார்…" என்றான் இன்ஃபார்மர்....
"ஓகே.... ஐ வில் டேக் கேர் ஆஃப் இட் [Ok i will take care of it] " என்றவன் கதிரை நோக்கி...
"உடனே நம்ம லாயர்ஸையும், ஆடிட்டர் கரனையும் வரச் சொல்லுங்க" எனவும்,
கதிருக்கு புரிந்து போனது இன்று என்ன நடக்கப் போகிறது என்று.
மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் என்பது போல் விடுவிடுவென ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்து எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் வருமான வரி சோதனைக்குத் தயாராகவும், வருமான வரித் துறையில் இருந்து அதிகாரிகள் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது....
அவர்களிடம் இருந்து அவர்களின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த அர்ஜூன் சோதனைக்கான உத்தரவையும் கவனமாகப் படித்தவன் வக்கீலிடம் கொடுக்க அவரும் படித்துவிட்டு சோதனைக்குச் சம்மதம் தெரிவித்தார்.
அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகவும் கவனமாகவும் பதிலளித்துக் கொண்டிருந்தவனின் மனதில்....
"எதற்காக இந்த ரைடு? ராம் இன்டஸ்ட்ரீஸில் இருந்து என்ன ஹிண்ட் போயிருக்கும்?" என்ற எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட இரவு வரை நீடித்த சோதனையில் ஊழியர்கள் ஒருவரையும் வெளியே விடாது அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்திருக்க அனைவருக்கும் ஒரு வித பயமும் அசதியுமே இருந்தது...
இறுதியாக அனைத்து ஆவணங்களையும் பார்த்தவர்கள் ஒன்றும் கண்டுப்பிடிக்க முடியாமல்....
"சாரி ஃபார் தி ட்ரபிள் மிஸ்டர் அர்ஜூன் கிருஷ்ணா [ Sorry for the trouble Mr Arjun Krishna] " என்றவர்கள் ஒரு வழியாக வெளியே செல்ல,
அர்ஜூன் உழன்று கொண்டிருந்த தன் நினைவுகளில் இருந்து இன்னமும் வெளியில் வரவில்லை.
சில நிமிடங்கள் அமைதியாக ஏதோ யோசனையில் இருந்தவன் சட்டென்று கதிரை ஆழ்ந்து நோக்கி ...
"கதிர்... எனக்கு உடனே ராம் இன்டஸ்ட்ரீஸின் கரெண்ட் அண்ட் ஃப்யூச்சர் ப்ராஜட்ஸ் எல்லாவற்றைப் பற்றியும் கம்ப்ளீட் டீடெய்ல்ஸ் வேண்டும்... அவர்கள் என்ன மாதிரியான விளைவுகளை இந்த ரைடில் எதிர்பார்த்தாங்கன்னும் தெரியுனும்... யார் நம்ம கம்பெனி பற்றி, என்ன மாதிரியான தகவல்களை இன்கம் டாக்ஸ் ஆஃபிஸிற்குச் சொன்னார்கள் என்றும் தெரியனும்... இந்த எல்லா டீடெய்ல்ஸும் எனக்கு நாளைக்குள்ள என் டேபிளில் இருக்கனும்" என்றவன் புயல் வேகத்தில் வேகமாக வெளியேற,
கதிரின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது....
அது அர்ஜூனை பற்றியோ அல்லது தன்னைப் பற்றியோ பயத்தினாலோ இல்லை...
"ஐயோ! ராமா! புலி வால பிடிச்சிட்டியே.... இனி கடவுள் கூட உன்னைய காப்பாற்ற முடியாது" என்று ராம் இன்டஸ்ட்ரீஸின் M D ராமச்சந்திரனை நினைத்து தான்.
ஏனெனில் அர்ஜுனின் கோப வட்டத்திற்குள் விழுந்தவர்களை அது எந்த எல்லை வரை கொண்டு போகும் என்பதை ஸ்ரீக்கு பிறகு நன்கு தெரிந்தவன் இவன் ஒருவனே...
பல நேரங்களில் அதைத் திகிலோடு கண் கூடாகப் பார்க்க நேர்ந்ததும் உண்டு....
ஆனால் அப்பொழுதெல்லாம் அர்ஜூனின் அதிரடியான ஆட்டங்களைப் பார்த்து பயந்து போனாலும் தன் MD -ஐ எதிர்த்து முன்னாள் சேர்மனான அவரின் அன்னையோ அல்லது இன்னாள் சேர்மனான அவரின் தந்தையோ கூட எதிர்த்து பேசாதது கண்டு வாய் மூடி ஆச்சரியப்பட்டு இருக்கிறான்....
மனதிற்குள் "என்ன தில்லுப்பா இவருக்கு... அதுவும் இந்தச் சின்ன வயசிலேயே" என்று ஒருவித திகிலான நிலையில் இருந்திருக்கிறான்...
ஆனால் தொழிலிலேயே அப்படிப்பட்டவன் அர்ஜூன் என்றால் அவனின் கோபத்திற்குப் புதிதாக ஆளான திவ்யாவின் நிலைமை என்னவோ?
தொடரும்..