அத்தியாயம் -19
வீட்டிற்குள் நுழைந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த பெற்றோரையும், மற்றும் அருண், மஹாவைப் பார்த்தவன் அவர்களுடன் பேசாமல் மாடிக்கு ஏற, அவனின் கலைந்த தோற்றத்தையும் களைத்த முகத்தையும் பார்த்த பாலா தான் அவனை அழைத்தார்....
"அர்ஜூன், இங்க வந்து கொஞ்சம் உட்காருப்பா..... உன்னுடன் கொஞ்சம் பேசனும்"
தன் அறைக்குச் செல்ல படிகளில் ஏறிக் கொண்டிருந்தவன் அவரின் அழைப்பில் திரும்பி பார்த்து....
"டாட்.... ஐ ஆம் வெரி டயர்ட் டுடே... ஷேல் வி டாக் லேட்டர் [I am very today, shall we talk later?] " என்ற மகனை வாஞ்சையுடன் பார்த்த ஸ்ரீ,
"கொஞ்சம் நேரம் இங்க உட்கார் அர்ஜூன்" என்றார்.....
ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் நடக்க இருக்கும் களேபரம் தெரியாமல்.....
தன் அன்னை சொன்னதும் மறுக்க முடியாமல் மெதுவே கீழ் இறங்கி வந்தவன் தொப்பென்று ஸோஃபாவில் சாய்ந்து அமர, அவன் அமர்ந்த விதத்திலேயே ஸ்ரீக்கு தெரிந்து போனது தங்கள் மகனின் களைப்பும், அவன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளும்.....
அமர்ந்தவன் எதுவும் பேசாமல் தலையைப் பிடித்தவாறே ஸோஃபாவில் சாய்ந்து இருக்க, ஒரு அன்னையாக மகனின் மன சஞ்சலத்தையும், வேதனையும் அறிந்தவருக்கு உள்ளம் கலங்கி போனது....
அவருக்குத் தெரியும் அர்ஜூனின் இப்பொழுதைய நிலைமை அவனின் தொழிற்களினால் வந்தது இல்லை என்று....
அவனை அறியாமலேயே அவன் மனமும் புத்தியும் தன்னுடைய திருமண வாழ்க்கையில் அடிப்பட்டுத் தோற்றுவிட்டதாகப் போட்டிப் போட்டுக் கொண்டு அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதனை அவரும் ஆழ்ந்து உணர்ந்திருந்தார்...
பின் இந்த உலகத்திலேயே அர்ஜூனை நன்கு புரிந்துக் கொண்டவர், அவனின் ஒவ்வொரு செயல்களுக்கும், பார்வைக்கும், சொல்லிற்கும் முழுமையான, உண்மையான அர்த்தங்களை உணர்ந்து இருப்பவர் அவர் ஒருவரே அல்லவா!!!!
அவருக்குத் தெரியாதா இந்த நிமிடத்தில் அவனின் அடி மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் என்னெவென்பது....
அவனின் கஷ்டத்தை உணர்ந்த ஸ்ரீ சமையல் அறையின் பக்கம் திரும்பி...
"அல்லி, கொஞ்சம் டீ போட்டுக் கொண்டு வாம்மா" என்றார்....
திவ்யா சமையல் அறைக்குள் அல்லியோடு தான் இருந்தாள்...
ஆனால் அர்ஜூன் இருக்கும் இந்த நிலைமையில், விவாகரத்து பற்றி வேறு அவன் பேசி இருக்கும் இந்த நாளில் திவ்யா அவன் முன் வந்தால் நிச்சயம் ஏற்கனவே வெம்பி போய் வேதனையில் இருக்கும் அந்தச் சின்னப் பெண்ணை ஈட்டி போன்ற வார்த்தைகளில் குத்தி கிழித்துவிடுவான் என்று தான் அவர் திவ்யாவை அழைக்காமல் அல்லியை அழைத்திருந்தார்.....
ஆனால் விதியுடன் போட்டியிட்டு யாரால் ஜெயிக்க முடியும்?? விதி முழுப் பலத்துடன் திவ்யாவின் வாழ்க்கையில் அவளுடன்
போராடத் துவங்கியிருந்தது....
ஸ்ரீ அழைக்கும் பொழுது அல்லி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்ததால், திவ்யாவைத் திரும்பி பார்க்க....
"நீ வேலையைப் பாரு அல்லி.... நான் கொண்டு போறேன்" என்றவள் தன் மாமியார் தன் கணவனுக்குத் தான் தேநீர் போட சொல்கிறார் என்று தெரியாமல் "இந்நேரத்தில், இராத்திரி சாப்பிடற நேரத்தில் எதற்கு டீ?" என்று யோசித்தவள் காலையில் இருந்து ஸ்ரீயின் முகம் சரியில்லாததால் அவருக்காகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு தேநீர் போட துவங்கினாள்...
முதலில் தன் மாமியாருக்கு மட்டும் போட ஆரம்பித்தவள் பின்னர் எதற்கும் இருக்கட்டுமே என்று மாமனாருக்கும், கொழுந்தனாருக்கும் சேர்த்து தேநீர் தயாரித்தவள் ஒரு தட்டில் தேநீர் கோப்பைகளை வைத்து எடுத்து வர அப்பொழுது தான் கவனித்தாள் தன் கணவன் அங்கு அமர்ந்திருப்பதை...
கடந்த சில வாரங்களாகத் திவ்யாவின் பெயரைக் கேட்டாலே மகிழ்ச்சியில் தத்தளித்த அவனது காதல் மனது, திவ்யாவின் கொலுசுகளின் கீர்த்தனைகளைக் கேட்டாலே அதன் இசையில் கட்டவிழ்த்து சிலிர்த்து எழுந்த உணர்வுகள், அவளின் எழில் முகத்தைக் கண்டதும் விழிகளிலும் இதயத்திலும் புரண்டு எழுந்திருந்த பரவசம்....
அத்தனையும் இன்று அவளைத் தேநீர் கோப்பைகளுடன் கண்டப் பொழுது சென்ற இடம் தெரியாமல் காணாமல் போனது....
அவளைப் பார்த்த அந்த விநாடி கோபத்தில் உடல் சிலிர்க்க, எந்நேரமும் வெடிக்கும் அக்கினி மலையின் நிலையில் இருந்த மனதை தன்னால் முடிந்த மட்டும் கட்டுக்குள் வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.....
இத்தனைக்கும் அவள் அப்படி ஒன்றும் தவறு செய்துவிடவில்லை....
ஆனால் அர்ஜுனின் சூழ்நிலை, அவனுக்கு இன்றும் நேற்றும் அலுவலகத்தில் நடந்திருந்த தடங்கல்கள், எப்பொழுதுமே ஒரு அளவோடு பார்ட்டி போன்ற நேரங்களில் மது அருந்தி பழகியிருந்தவன் நேற்று விடிய விடிய அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்ததால் தலையே வெடித்துவிடும் அளவிற்கு இருந்த வலி....
இதில் தன் மனைவியின் ஒதுக்கமும் அவமதிப்பும் போட்டிப்போட்டிக் கொண்டு அவனை உலுக்கி எடுக்கச் சீற்றம் அவன் கண்களை மறைத்து இருந்தது.....
அர்ஜூனின் மன நிலை இவ்வாறு இருந்தது என்றால் திவ்யாவின் நிலைமையோ சொற்களுக்கு அப்பாற்பட்டு இருந்தது...
மாமியார், மாமனார் மற்றும் கொழுந்தனாரை மட்டும் எதிர்பார்த்திருந்தவளுக்குத் தன் கணவனையும் அங்குக் கண்டதும் சொல்லி வைத்தார் போல உடல் முழுவதும் உதறலெடுக்க ஆரம்பித்தது...
இதில் அவன் தன்னைக் கண்டதும் அவன் முகத்தில் தெரிந்த மாற்றமும், ருத்ரமும் அவளின் கால்களை மரத்துப் போகச் செய்யச் சில விநாடிகள் நின்ற இடத்திலேயே நிற்க அவளின் தடுமாற்றத்தைக் கண்டவன் "ம்ப்ச்" என்று சலித்துக் கொண்டு தன் இடது கையை ஸோஃபாவின் கைப்பிடியில் ஊன்றியிருந்தவாறே மேலும் தலையை அழுத்தி பிடித்தவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டான்...
கணவனின் இந்தச் செய்கையில் அவன் மனதில் குடியிருந்த வெறுப்பின் உயரம் தெரிய பரிதாபமாக ஸ்ரீயைத் திரும்பி பார்க்க அவளின் நிலையை உணர்ந்தவர் "வா" என்பது போல் தலை அசைத்தார்....
"வேறு வழியில்லை.... கொண்டு வந்த டீயை அவர்களுக்குக் கொடுத்து தான் ஆக வேண்டும்... ஆனால் கால்கள் மரத்துப் போய், கைகள் வேறு இந்த நடுங்கு நடுங்குகிறதே... இதில் கீழே போடாமல் டீயை அவரிடம் கொடுக்க வேண்டுமே" என்ற எண்ணம் வர, அந்த எண்ணமே அவள் கைகளின் நடுக்கத்தை மேலும் அதிகரித்தது....
மனதில் இருந்த கலக்கத்தையும் மீறி கால்களின் தடுமாற்றத்தை சிரமத்துடன் மறைக்க முயற்சி செய்தவாறே மெல்ல நடந்து வந்தவள் அர்ஜூனின் அருகில் வரும் பொழுது விதி தன் கரத்தை அழுத்தமாக அவளின் மேல் பதித்தது போல் சரியாக அவளின் புடவை தடுக்க, அப்படியே வைத்திருந்த தேநீர் தட்டை அவன் மீது தவற விட்டாள் இந்த நிமிடத்தில் அவன் மனதில் வெறுப்பை மட்டுமே கிளறியிருந்த அவன் மனைவி....
ஏற்கனவே கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளம், சமாதானமற்ற புத்தி, உள்ளே எழுந்த உணர்ச்சிகளின் விளைவாக உள்ளூர அவமானத்தால் குன்றிக் கொண்டிருந்த மனம் இதில் சூடான தேநீர் வேறு ஊற்றியதால் இகழ்ச்சியும் ஆத்திரமும் கலந்த பார்வையை ஒரு விநாடி அவள் மீது வீசியவன் தன் பொறுமையை இழந்து தன்னிலை மறந்தான்....
திவ்யா தேநீரை அவன் மீது தவறவிட்ட அந்த விநாடியே ஸ்ரீயும் மற்றவர்களும் ஸோஃபாவில் இருந்து எழுந்திருக்க, அதற்குள் "பளார்" என்ற சத்தம் மட்டும் கேட்டது....
இடி இறங்கியது போல் அர்ஜூனின் கை திவ்யாவின் கன்னத்தைப் பதம் பார்க்க, விழுந்த அறையில் தளிர் மேனியவள் நிலைத் தடுமாறி கன்னத்தைப் பிடித்துக் கொண்டே தொப்பென்று அருகில் இருந்த ஸோஃபாவில் விழுந்தாள்.
சத்தத்தில் அல்லியும் சமையல் அறையில் இருந்து வெளிவந்து எட்டிப் பார்க்க, அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் திவ்யா உட்பட நடந்து முடிந்த சம்பவம் புரிய ஒரு சில விநாடிகள் பிடித்தது...
புரிந்ததும் அவனின் வலுவான கரத்தின் பலத்தால் கன்னம் விண்விண்ணென்று வலிக்க, தன் மாமனார், கொழுந்தனார் முன் தன் கணவன் தன்னை அறைந்ததைத் தாங்க இயலாதவளாக விழிகளில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்க, மேனி நடுங்க தலை குனிந்து அமர்ந்திருந்தவளுக்கு, தன் பாதத்தின் அடியில் இருந்த பூமி அப்படியே தன்னை உள்ளிழுத்துக் கொள்ளாதா என்றிருந்தது.....
தன் மீது என்ன தான் தவறு இருந்தாலும் அதற்காக இப்படியா? அதுவும் இத்தனை பேருக்கு முன்னா? என்று ஸ்தம்பித்துச் சிலையென அமர்ந்திருந்தவள் அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் தன் அறைக்குப் போக எத்தனிக்க....
"எங்கடி போற?" என்று சிங்கம் போல் கர்ஜித்தவனின் குரல் அவளின் கால்களை இறுக்கக் கட்டி வைத்தது போல் அதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்க விடவில்லை.....
அதிர்ச்சியான இந்த நிகழ்வு நடந்து சில நிமிடங்கள் ஆன நிலையில் நிலைமையின் விபரீதம் புரிந்த ஸ்ரீ...
"அர்ஜூன், என்ன இது? மிருகத்தனமா நடந்துக்கிற!!!" என்று கத்த....
அர்ஜூனின் வாயில் இருந்த வந்த அந்த அதிர்ச்சிகரமான சொற்கள் திவ்யாவை மூர்ச்சையுற்று மயங்கிப் போகும் நிலைக்குக் கொண்டு சென்றது....
"மாம்.... இதெல்லாம் உங்களால வந்தது..... உங்க ஃப்ரெண்ட் பொண்ணுன்ன உடனே என் வாழ்க்கை பாழானாலும் பரவாயில்லை என்று இதோ, இவளுக்கு வாழ்க்கை கொடுக்கனும்னு யோசிச்சீங்களே..... கொஞ்சமாவது என்னைப் பத்தி யோசிச்சீங்களா? இவள கட்டிக்கிற அளவுக்கு அப்படி என்ன என் ஸ்டேட்டஸ் தாழ்ந்து போயிடுச்சு..... இவளுக்கும் கோடிஸ்வர மாப்பிள்ளைக் கிடைச்சதும் தாலி கட்ட வந்தவன் விட்டுட்டு போன வருத்தம் கூட இல்லாமல் உடனே என்னைய கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சுட்டா... இதுவே ஒரு வேளை நான் இவ்வளவு வசதியா இல்லாமல் இருந்தா என் கையால தாலி வாங்க சம்மதிச்சு இருப்பாளா?" என்று ஏதோ எரிமலைக்குள்ளிருந்து வெடித்துக் கிளம்பும் அக்கினித் துண்டுகளைப் போலவே வெளிவந்தன அவன் உதிர்த்த ஒவ்வொரு சொற்களும்....
நெஞ்சை பிளக்கும் வார்த்தைகளை அவன் உதிர்த்த பொழுது உடல் ஒரு முறை உணர்ச்சியால் நடுங்க, அதிர்ச்சி தரும் அவனின் வார்த்தைகள் சத்தமில்லாத மின்னல் போன்று மௌனமாக அவளின் மெல்லிய உள்ளத்தில் குத்தி இறங்க, அவன் கன்னத்தில் அறைந்ததே தெறித்து வலித்துக் கொண்டிருக்க, இப்பொழுது வார்த்தைகளால் மலரினும் மெல்லியவளின் பூப் போன்ற இதயத்தை ரணமாக்கிக் கொண்டிருந்தான் அவளின் காதல் கணவன்....
சரமாரியாய் தாக்கிய அவனின் வார்த்தை தாக்குதலில் உள்ளமும் உடலும் அடிப்பட்ட புழுவைப் போல் துடித்தவளின் கண்களில் மட்டும் நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது....
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழியைப் போல் பிடித்தமில்லாமலேயே தாலியில் மூன்றாவது முடிச்சையும் தானே போட்டு தன் வாழ்க்கையைச் சரி பாதியாகப் பிரித்துக் கொடுத்த அவள் கணவன் தன் இதயத் துடிப்பே தன் மனையாள் தான் என்று இந்த நிமிடம் உணராமல் அவளைத் துடிக்க வைத்தான் மேலும் அவன் கக்கிய அனலைப் போன்ற வார்த்தைகளால்....
"வேலைக்காரியா வச்சுக்க வேண்டியவள எனக்குச் சமமா நினைச்சு மருமகளா கொண்டு வந்தீங்க... என்னோட தகுதிக்கு உங்களால இவளத் தான் என்னோட மனைவியா கொண்டு வர முடிஞ்சுதா? அப்படி நான் என்ன தரம் தாழ்ந்து போய்ட்டேன்..... எத்தனை தடவை சொன்னேன்... இந்தக் கல்யாணம் வேண்டாம் வீட்டுக்கு போயிடலாம்னு... கேட்டீங்களா? இவள் இந்த வீட்டில் காலடி எடுத்து வச்சதிலிருந்து என்னோட நிம்மதி பறிப்போயிடுச்சு.... இனியும் இவ இங்க இருந்தான்னா அப்புறம் நீங்க என்னைய மறந்து விட வேண்டியது தான்.... அருண் உங்க எல்லாப் பிஸினஸையும் பார்த்துக்கட்டும்.... என்னைய ஆள விட்டுருங்க" என்றவன் திரும்பியும் பார்க்காமல் மாடிப்படியின் அருகில் நின்றிருந்தவளின் மீது எங்குத் தன் உடல் உரச நேரிடுமோ என்பது போல் ஒதுங்கி படிகளில் ஏறியவன் அந்த வீடே அதிரும்படி படாரென்று தன் அறைக் கதவை சாத்தினான்.
அவன் சென்று விட்டான்... ஆனால் அவனின் கொடிய பாம்பின் விஷம் போன்ற வார்த்தைகள் இன்னும் அங்கு எதிரொலித்துக் கொண்டே இருப்பது போல் இருந்தது திவ்யாவிற்கு......
உணர்ச்சி அற்ற கல்லாகச் சிறிது நேரம் படிகளின் அருகில் நின்றிருந்தவளுக்கு மூச்சு அடைத்து மயங்கி விழுந்துவிடுவது போல் இருக்க, எதுவும் சொல்லாமல் தன் அறைக்குச் செல்ல படிகளில் ஏற...
"திவ்யா, ப்ளீஸ் டா... கொஞ்சம் இரு.... போகாத..." என்று தடுத்த ஸ்ரீயின் வார்த்தைகளில் அவள் நடை நின்றது...
அவளின் அருகே வந்தவர்....
"திவ்யா..... அவன் ஏதோ கோபத்தில பேசிட்டான்... அவனுக்கு உன் மேல கோபம் இல்லைடா... இரண்டு நாளா ஆஃபிஸில் அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனை... அதத் தான் இப்படி உன் கிட்ட காட்டிட்டு போய்ட்டான்" என்று அவர் சொன்ன வார்த்தைகளில் எதுவுமே அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை.....
அவரைத் திரும்பி பார்த்தவளின் கண்களில் வலிக்க வலிக்கத் தன் கணவன் வார்த்தைகளால் தன் இதயத்தில் அடித்த வலியே தெரிந்தது... அத்தனை துக்கத்திலும் ஒரு விரக்தி புன்னகை மட்டுமே சிந்தியவள் மெதுவே படிகளில் ஏறி தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்....
ஸ்ரீக்கும் தெரியும் அவளின் புன்சிரிப்பு அவள் புறத்தில் பட்ட வலியினால் வந்த வேதனையால் அல்ல, அவளது இதயத்தின் பட்ட வலியினால் வந்தது என்று....
அவளின் கலங்கிய முகமும் நீர் நிறைந்த பார்வையும் தன்னை ஏதோ குற்றம் சாட்டுவது போல் உணர்த்த முதன் முறையாகத் தான் செய்தது தவறோ என்று ஸ்ரீ துடித்து உணர்ந்த அந்த நொடி அவரின் நெஞ்சில் நெருஞ்சி முள் போல் எதுவோ சுருக்கென்று குத்தியது...
இந்தத் திருமணம் எதிர்பாராத விதமாக நடந்திருந்தாலும் எப்படியும் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் வரும்... இருவரும் மகிழ்ச்சியாக வாழப் போகிறார்கள் என்று அவர் கட்டியிருந்த கனவுக் கோட்டை தன் கண்முன்னே தரை மட்டமாகி கொண்டு இருப்பதைக் கண்டவரின் இதயத்தில் தாங்கமுடியாத ஒரு வலி தோன்றியது....
ஏற்கனவே அர்ஜூனின் அராஜகத்தாலும் கொடிய வார்த்தைகளாலும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அருணும், பாலாவும், மஹாவும் அதுவரை எதற்கும் கலங்காத, சாமான்யமாக எந்த விஷயத்திற்கும் மனம் நெகிழாதவரான ஸ்ரீயின் கண்களிலும் நீரித்துளிகள் பளபளத்ததைக் கண்டு கலங்கி போயினர்...
ஒருவருக்கும் இரவு உணவு அருந்த கூடத் தோன்றாமல் அவரவர்களின் அறைக்குச் செல்ல, தன் அறைக்கு வந்த ஸ்ரீ தன் கணவரிடம் கூடப் பேசாமல் அமைதியாக இருந்தவர் தலை சாய்ந்து தலையணையில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார்...
மனைவியின் இந்த அமைதி பாலாவிற்கு அச்சத்தையே கிளறியது....
ஸ்ரீயின் அருகில் அமர்ந்தவர்,
"என்னம்மா.... என்னாச்சு?" எனவும்,
கண்களைத் திறந்துப் பார்த்தவர்,
"நான் தப்பு பண்ணிட்டேங்க.... இரண்டு சின்னச் சிறுசுங்க வாழ்க்கைய வீணாக்கிட்டேன்…" என்றார் கலங்கிய கண்களுடன்...
அவரைத் தன் தோளில் சாய்த்துக் கொண்ட பாலா,
"இல்லம்மா, நீ ஒன்னும் தப்பு பண்ணலை.... நீ திவ்யாவிடம் சொன்ன மாதிரி இரண்டு நாளா அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்... அவன் பிஸினஸில் எத்தனையோ பிரச்சனைகளை ஃபேஸ் பண்ணியிருக்கான்... அத கொஞ்சம் கூடப் பயமோ தயக்கமோ இல்லாமல் தனியாளா நின்னு சரி பண்ணியிருக்கான்.... ஆனால் அந்த மாதிரி நேரங்களில் அவன் சில சமயம் வீட்டிற்கே கூட வராமல் இருந்திருக்கான்.... அது உனக்கே தெரியும்... அப்படியே வந்தாலும் அவன் தனிமையில் தானே இருப்பான்.... பிரச்சனைகளை யார்கிட்டேயும் ஷேர் பண்ணாம தானே தீர்க்கப் பார்ப்பான்... அது தானே நம்ம அர்ஜூன்? இன்னைக்கு ஏதோ மனைவிங்கிற உரிமையில திவ்யாவிடம் தன் கோபத்தைக் காட்டிட்டான்... நான் நாளைக்கு அவனிடம் பேசிறேன்... அவன் எல்லாவற்றையும் தன் தோளில் தானே சுமக்கனும்னு அவசியம் இல்லை.... நாமெல்லாம் எதுக்கு இருக்கோம்.... நீ மனச போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் படுத்து தூங்கு…" என்று சொன்னவர்,
தன் மனைவியின் தலையைக் கோதி விட, கண்களை மூடியிருந்த ஸ்ரீயின் நினைவில் அதிர்ந்த முகத்துடனும், சொல்லொண்ணா வலியுடனும், ஊற்றாகப் பெருக்கெடுத்த நீருடனும் திவ்யா அவரைப் பார்த்திருந்த காட்சியே அலை போல் வந்து கொண்டிருந்தது.
அங்குத் தன் அறைக்கு வந்த திவ்யாவிற்கோ தன் கணவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பேரொலியாகச் செவிகளில் கேட்டு அவளின் மென்மையான இதயத்தை நெருப்பாகச் சுட்டுப் பொசுக்கி கொண்டிருந்தது...
அவனின் தேள் கொட்டிய வார்த்தைகளில்....
"நான் வசதியாக இருந்ததால் தான் என்னைத் திருமணம் செய்துகொண்டாயோ?" என்ற கேள்வியும்,
"வீட்டில் வேலைக்காரியாக இருக்க வேண்டியவள்.... என் தகுதிக்குக் கொஞ்சம் கூடத் தகுதியில்லாதவள்" என்ற வார்த்தைகளும் திரும்பத் திரும்ப எதிரொலிக்க, மஹா அறைக்குள் நுழையவும் சட்டென்று குளியல் அறைக்குள் சென்றவள் வாயை இறுக்க மூடிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.....
திவ்யாவின் நிலைமையை நன்கு புரிந்து கொண்ட மஹாவும் அவளைத் தொந்தரவு செய்யாமல் அவளின் வரவிற்காகக் காத்திருக்க நீண்ட நேரம் சென்று குளியல் அறையில் இருந்து வெளியே வந்த அண்ணியைப் பரிதாபமாகப் பார்த்தவள் அவளிடம் கேள்வி எதுவும் கேட்காமல், பேச்சும் கொடுக்காமல் படுத்துக் கொண்டாள்..
தன் அருகே தனக்கு முதுகு காட்டி படுத்திருந்த திவ்யாவின் உடல் அழுகையால் குலுங்கியதைக் கண்டவளுக்கு இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது...
ஏனெனில் திவ்யா அந்த வீட்டிற்கு வந்திருந்த இந்த ஐந்து ஆறு மாதங்களில் அத்தனை பேருடைய மனதையும் தன் அன்பாலும், அமைதியான குணத்தாலும் அவ்வளவு கவர்ந்திருந்தாள்....
அது நாள் வரை பெண் வாசமே என்ன என்று அறியாதிருந்த, முழுவதும் கல்லைப் போல் இரும்பாயிருந்த அவளின் கணவனின் இதயத்தை உட்பட....
இரவு முழுவதும் உறங்காமல் மௌனமான அழுகையில் கரைந்துக் கொண்டிருந்தவள் விடிந்ததும் வழக்கம் போல் எழுந்து பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வாசலில் கோலம் போட்டு முடித்து, காலை உணவு செய்யச் சமையல் அறைக்குள் நுழைந்தவள் அதற்குப் பின்னர் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரவில்லை...
காலை உணவை உண்ண அர்ஜூனைத் தவிர மற்ற அனைவரும் டைனிங் டேபிளுக்கு வந்த பிறகும் கூட அனைத்தையும் ஸ்ரீயிடம் கொடுத்துவிட்டாளே தவிர அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவள் வெளியில் வர மறுத்துவிட்டாள்...
ஒரு வழியாக அருணும் மஹாவும் கல்லூரிக்கு கிளம்பிச் செல்ல அர்ஜூன் வேகமாகக் கீழே இறங்கி வந்தவன் ஒருவர் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் காலை உணவும் அருந்தாமல் விறுவிறுவென்று வெளியில் சென்றவன் தன் காரைக் கிளப்பிச் சென்றுவிட்டான்....
இரவு நடந்திருந்த களேபரத்திற்குப் பிறகு வெகு நேரம் வரை உறங்காமல் விழித்திருந்த பாலா காலை அர்ஜூனிடம் எப்படியும் இதனைப் பற்றிப் பேசிவிட வேண்டும், திவ்யா அர்ஜூன் பிரச்சனைக்கு ஒரு தந்தையாக நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று காத்திருந்தவருக்கு அவன் அதிவேகமாகக் கீழே வந்த வேகத்திலேயே தன் காரில் சென்றுவிட்டான் என்று தெரிந்ததும் மனம் கசந்தது.....
ஸ்ரீயோ அல்லது தானோ இதில் நிச்சயம் தலையிட வேண்டும்... பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தவருக்கு அவன் சொல்லாமல் சென்று விட்டது வருத்தத்தையே தர, அவர் ஸ்ரீயிடம் அர்ஜூனை அவனுடைய அலுவலகத்திலேயே போய்ச் சந்திப்பதாகக் கூறினார்....
ஒரு வழியாகத் தன் மாமியாரைத் தவிர வீட்டினர் அனைவரும் வெளியே சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட திவ்யா தன் அறைக்கு வந்தவள் பாரமான இதயத்துடனும், தளர்ந்த மனதுடனும் இனி தன் திருமண வாழ்க்கைக்கு விமோச்சனமில்லை என்று தீர்மானித்து அந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்தாள்.
பிரியுமுள்ள அத்தைக்குத் திவ்யா எழுதிக் கொள்வது.
இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு முதலில் நீங்கள் என்னை மன்னிக்கவும்.... என் அம்மா ஸ்தானத்தில் இருக்கும் உங்களிடம் நான் சொல்லிவிட்டு சென்று இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்... ஆனால் நான் சொல்லியிருந்தால் நிச்சயம் நீங்கள் என்னைப் போகவிட்டு இருக்க மாட்டீர்கள்.... அதனால் வேறு வழியில்லாமல் தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நேற்று நடந்ததற்காக நான் இந்த வீட்டையோ, அல்லது உங்களையோ விட்டு செல்லவில்லை.... என் கணவருக்கு என்னிடம் கோபப்பட முழு உரிமை இருக்கிறது... ஆனால் அவருக்கு மனைவியாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதா? என்ற கேள்வியே என்னை வெளியே செல்ல தூண்டியது.
அவர் சொன்னது போல் அவருக்கு வேலைக்காரியாக இருக்கக் கூடத் தகுதியில்லாதவள் மனைவியாக இருக்க ஆசைப்படலாமா? அவருக்கும் ஒரு வேலைக்காரி கழுத்தில் தாலி கட்டிவிட்டோமே என்ற எண்ணமே அவரின் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும்.... நான் எந்த ஜென்மத்தில் யாருக்கு செய்த பாவமோ, மணமேடை வரை வந்தவர் தாலி கட்டாமல் விட்டுச் சென்றார்.
இனி தெரிந்தும் நான் பாவம் செய்ய விரும்பவில்லை.... என்னால் இனி உங்கள் மகனுக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது.... நான் அவரின் பாதையை விட்டு விலகி செல்கிறேன்.
ஆனால் ஒன்று மட்டும் அவருக்குப் புரிய வைக்க விரும்புகிறேன்... வாழ்க்கையில் அன்று தான் உங்கள் மகனை முதல் முதலில் பார்த்தேன்.... ஏற்கனவே திருமணம் நின்று விட்ட அதிர்ச்சியில் தற்கொலை வரை போனவளுக்கு அவர் வசதியானவரா? அவருக்கு நான் தகுதியானவளா? என்று பார்க்க தெளிவான மனநிலையோ சிந்தனையோ இல்லை.
என் அம்மாவின் முகத்தில், நான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பே இருந்தது.... அதுவே தான் என்னை இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கவும் வைத்தது.
ஆனால் அப்பொழுது உங்கள் மகனைப் பற்றிய எண்ணமோ, அவரது அந்தஸ்தோ, இல்லை அவர் எப்படிப் பட்டவர், நான் அவருக்குத் தகுதியானவளா என்று எண்ணங்களோ எனக்கு இல்லை.... ஒரு வேளை நான் அவருடைய இடத்தில் இருந்து சிந்தித்துப் பார்த்திருந்தால், நிச்சயம் இந்தத் திருமணத்திற்கு நான் சம்மதம் தெரிவித்து இருக்க மாட்டேன்.
ஒரு நல்ல பெற்றோருக்கு தன் பெண் வசதியான வீட்டில் வாழ்க்கைப் பட வேண்டும் என்ற ஆசையை விட அவள் தன் புகுந்த வீட்டில் எல்லோருடனும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற விருப்பமே இருக்கும்.
அதுவும் உங்கள் தோழியைப் பற்றி உங்களுக்கு நான் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.... நான் கலா வளர்த்த பெண்.... ஏழை தான், படிக்காத கிராமத்துப் பெண் தான், ஆனால் என்றுமே பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவள் கிடையாது.
எந்த நிமிடத்தில் என் கழுத்தில் அவர் தாலி கட்டினாரோ அன்றே இது என் குடும்பம், அவர் என் கணவர் என்று தான் நினைத்திருந்தேன்.... ஆனால் அன்றே அவர் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை.
இனி ஒரே வீட்டில் அவருடன் இருந்து அவரின் நிம்மதியை நான் மேலும் கெடுக்க விரும்பவில்லை.... அதே போல் அவருடைய வாழ்க்கையில் இருந்து நான் விலகுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்யட்டும்.
அவர் சொன்னது போல் விவாகரத்திற்கு நான் முழுமனதுடன் சம்மதிக்கிறேன்... எங்கு, எப்பொழுது கையெழுத்து போட வேண்டுமோ அங்கு நான் கையெழுத்துப் போடுகிறேன்.
நிச்சயம் அவருக்குப் பிடித்தது போல் அவருடைய தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றார் போல் அவருக்குப் பெண் கிடைத்து அவர் சந்தோஷமாக வாழ வேண்டும்.
இப்படிக்கு உங்களைப் பிரிய மனமில்லாமல் பிரியும்,
உங்கள் மகள் திவ்யா.
நடுங்கும் விரல்களுடன் கடிதத்தை எழுதி முடித்தவள் ஆறாகப் பெருக்கெடுத்த விழி நீரை துடைத்துக் கொண்டு முடிந்த அளவு பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்து விட்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்...
"நான் வெளியே செல்வது என் கணவரைத் தவிர மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கும்.... சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பியதினால் என் மீது வெறுப்பு கூட வரும்... ஆனால் அதற்காக இனியும் அவருக்கு நான் தொல்லை கொடுக்க விரும்பவில்லை.... அதிலும் அம்மாவிற்கு நான் அத்தையிடம் சொல்லாமல் வந்துவிட்டேன் என்று தெரிந்தால் நிச்சயம் பேரதிர்ச்சியாகவும் கோபமாகவும் இருக்கும்"
என்று மனம் போன போக்கில் எண்ணிக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் பின்னோக்கி சென்று தன் திருமண நாளில் வந்து நின்றது...
"என்னுடைய வாழ்க்கையில் ஏன் அப்படி ஒரு நாள் வந்தது? நான் என் அம்மா, அப்பா, அண்ணா என்று இருந்திருக்கக் கூடாதா? ஏன் என் கண்முன்னே அவரைக் கொண்டு வந்தது விதி? ஏன் என் கழுத்தில் தாலி கட்ட வைத்தது? இப்பொழுது என் மீது ஏன் இந்த அளவிற்கு வெறுப்பு வந்தது?" என்று நெஞ்சு உடைந்துவிடும் அளவிற்குச் சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு எவ்வளவு முயன்றும் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை...
விம்மி அழுதவள் முடிவில் உணர்ச்சி மிகுதியால் மூர்ச்சித்து விழும் அளவிற்கு மூச்சை அடைக்க ஆரம்பிக்க இனி ஒரு நொடி நேரம் கூட இங்கு இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தவள் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு முகத்தைக் கழுவி வேறு புடவை அணிந்து கீழே எட்டிப் பார்க்க, அங்கு ஒருவரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டவள் மெதுவே இறங்கி வந்தாள்...
ஸ்ரீ அவர் அறையில் படுத்திருக்க, அல்லியும் தெய்வானையும் சமையல் அறையினுள் இருக்க, வீட்டில் நிலவிய நிசப்தமான சூழ்நிலை வேறு அவளின் திகிலை அதிகப்படுத்த கையில் இருந்த கடிதத்தை ஹாலில் போடப்பட்டிருந்த மேஜையில் வைத்தவள் வெளியே ட்ரைவர் முருகனோ அல்லது தோட்டக்காரர்களோ யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு விடுவிடுவென்று சத்தம் இல்லாமல் வெளியேறினாள்...
வாயிலைத் தாண்டவும் அவளின் அழகிய கோலம் அவளைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பது போல் தோன்றியது....
அங்குத் தானே அன்று தான் புடைவையைத் தூக்கி சொறுகி கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது தன் கணவன் தன்னை அத்தனை ஆர்வத்துடன் பார்த்திருந்தான்....
அந்த நினைவே இதயத்தைக் கலங்கடிக்கப் பெருமூச்செறிந்தவாறே ஒரு முறை திரும்பி வீட்டைப் பார்த்தவளுக்குத் தன் திருமண நாள் அன்று தன் கணவன் ஆரத்தி தட்டை தட்டிவிட்டுச் சென்றது ஞாபகம் வர, விழி நீரால் பார்வை மறைத்தது...
ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க மூச்சு திணறுவது போல் இருக்க, ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் சாலைக்கு வந்தவள் அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையத்திற்குப் போகச் சொன்னாள்...
பள்ளி வாழ்க்கை முடிந்தவுடன் கல்லூரிக்கு கூடச் செல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாது இருந்தவளுக்கு இன்று இவ்வளவு பெரிய சென்னையில் தனியே பேருந்து நிலையம் வரை போவது மிகுந்த அச்சத்தைக் கொடுக்க, ஆனால் இனி ஒரு நிமிடம் அந்த வீட்டில் இருந்தால் கூட நிச்சயம் மூச்சு விடமுடியாமல் செத்துவிடுவோம் என்று நினைத்தவளுக்கு...
"போதும்பா முருகா.... இந்த அதிர்ச்சிகள் போதும்... இதுக்கு மேல் எதுவும் தாங்கிக்கிற சக்தி இல்லை…" என்று வேண்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது.
தன் வாழ்க்கை அர்ஜூனோடு துவங்கிய அன்று வேண்டிய அதே வார்த்தைகள்...
மத்திய பேருந்தில் கடலூர் செல்லும் பேருந்தைக் கண்டுப்பிடித்து ஏறி அமர்ந்தவளுக்கு எத்தனை முயன்றும் தன் கணவனின் நினைவை தவிர்க்க முடியவில்லை...
"சில நாட்களாக அவரின் நடவடிக்கைகளும், பார்வையும் அவருக்கு என் மேல் இருந்த காதலைத் தானே வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.... ஒரு வேளை அது காதல் இல்லையோ? வெறும் ஆசையோ? ஆனால் காதல் இல்லாமல் என் மேல் எப்படி ஆசை மட்டும் வரும்?" என்று குழம்பியவளுக்கு விடை ஒன்றும் புரிபடவில்லை..
இத்தனை நாள் என்னை வெறுத்த கணவன் இப்பொழுது தானே என்னை விரும்ப ஆரம்பித்து இருந்தார்... ஒரு வேளை நான் அவர் அழைத்த அன்று அவரின் அறைக்குப் போயிருந்தால் அவருக்கு என் மேல் இத்தனை வெறுப்பு வந்திருக்காதோ? ஆனால் எத்தனை தான் வெறுப்பு இருந்தாலும் அவரின் மனதில் உள்ள எண்ணங்கள் தானே வார்த்தைகளாக நேற்று வெடித்து இருக்கிறது...
அப்படி என்றால் என்ன தான் அவர் என்னை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்தாலும் நான் அவருக்குத் தகுதி அற்றவள் என்ற நினைப்பு அவரின் ஆழ் மனதில் பதிந்து இருந்திருக்கிறது என்று தானே அர்த்தம்... இனி அவரின் வாழ்க்கையில் நான் எக்காரணம் கொண்டும் தலை இடக்கூடாது...
இத்தனை பெரிய பிஸினஸ் பண்ணுகிறவர், பெரிய கோடீஸ்வரர், இத்தனை நாள் என்னை அவர் வீட்டில் விட்டு வைத்திருந்ததே பெரிது என எண்ணியவள் வழிந்த கண்ணீரை யாரும் பார்க்காதவாறு துடைத்துக் கொண்டு தன் அன்னையைச் சமாளிக்கத் தயாரானாள்...
ஆனால் பாவம் தன் கணவனின் கோபத்திற்குத் தன் மேல் உள்ள அதிகக் காதலே காரணம் என்று அறியவில்லை அந்தப் பேதை...
ஒரு வேளை அவள் அன்று அவனின் அறைக்குப் போயிருந்தால் தான் வாங்கி வந்திருந்த பரிசினை அவளுக்குக் கொடுத்துவிட்டு காதலை சொல்லியிருப்பானோ!!
அது தான் அவனின் திட்டமும் கூட, ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை அவள் அவனுக்குக் கொடுக்கவே இல்லையே... யாரை குறை சொல்வது என்று விதியே குழம்பி நின்றது.
காலையில் திவ்யாவை சந்தித்த பிறகு விடிய விடிய அழுததினால் வீங்கி வாடிப்போயிருந்த அவளின் முகத்தைப் பார்த்ததில் இருந்து அதே நினைவில் தன் அறைக்கு வந்து படுத்த ஸ்ரீக்கு இன்னமும் அதே வலி நெஞ்சில் குறையாமல் இருந்தது...
தன் நெஞ்சை அழுத்தி தேய்த்துக் கொண்டவருக்குச் சிறிது நேரம் ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் போல் தோன்ற, இருந்தும் திவ்யாவை நினைத்துத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு "பாவம் சின்னப் பெண் ரொம்ப நொந்துப் போயிருக்கிறாள், நாமும் அவளுடன் அருகில் இல்லை என்றால் சரி இல்லை…" என்று நினைத்தவர் கீழே இறங்கி வந்தார்...
சமையல் அறைக்குள் வந்தவர் அங்குத் தெய்வானையும் அல்லியும் மட்டும் இருக்கவே திவ்யா எங்கே என்று கேட்க, அவர்கள் அவள் தன் அறைக்குச் செல்வதாகக் கூறியதை சொன்னதும் அல்லியிடம் அவளின் அறையில் போய்ப் பார்க்க சொன்னார்...
திவ்யா அறையில் இல்லை என்பதை உறுதி செய்த அல்லி...
"அம்மா, திவ்யாம்மா ரூமில இல்ல.... இருங்க தோட்டத்தில் இருக்காங்களான்னு பார்த்துட்டு வர்றேன்" என்றவள் தோட்டத்திலேயும் அவள் இல்லை என்று உறுதி படுத்திக் கொண்டு ட்ரைவர் முருகனிடமும் தோட்டக்காரர்களிடமும் விசாரித்தாள்...
யாரும் அவளைப் பார்க்கவில்லை என்று உறுதியாகக் கூறியதும் அவளைப் பயம் தழுவ வேகமாக ஸ்ரீயிடம் ஓடி வந்தவள் திவ்யா எங்கும் இல்லை என்று கூற, ஸ்ரீக்கு மீண்டும் சுளீரென்று நெஞ்சில் வலி எடுத்தது...
ஹாலில் வந்து அமர்ந்தவர் காலையில் உணவு உண்டவுடன் அவளைத் தனியாக விட்ட தன் மடத்தனத்தை மனதிற்குள் திட்டியவர் அப்பொழுது தான் கவனித்தார் அந்தக் கடிதத்தை...
கடிதத்தைக் கண்டவுடனே அவரின் மனம் பதற ஆரம்பித்தது....
பிரித்துப் படிக்க ஆரம்பித்தவர் கடிதத்தின் வரிகளுக்கிடையே நீர் துளிகளைப் பார்த்ததுமே தெரிந்து போனது திவ்யா விழிகளில் நீரோடு இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறாள் என்று....
மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அடி வயிற்றில் புளியைக் கரைக்க ஒவ்வொரு வரியாகப் படித்தவர், படித்து முடிக்கும் முன் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தார்...
தொடரும்..
வீட்டிற்குள் நுழைந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த பெற்றோரையும், மற்றும் அருண், மஹாவைப் பார்த்தவன் அவர்களுடன் பேசாமல் மாடிக்கு ஏற, அவனின் கலைந்த தோற்றத்தையும் களைத்த முகத்தையும் பார்த்த பாலா தான் அவனை அழைத்தார்....
"அர்ஜூன், இங்க வந்து கொஞ்சம் உட்காருப்பா..... உன்னுடன் கொஞ்சம் பேசனும்"
தன் அறைக்குச் செல்ல படிகளில் ஏறிக் கொண்டிருந்தவன் அவரின் அழைப்பில் திரும்பி பார்த்து....
"டாட்.... ஐ ஆம் வெரி டயர்ட் டுடே... ஷேல் வி டாக் லேட்டர் [I am very today, shall we talk later?] " என்ற மகனை வாஞ்சையுடன் பார்த்த ஸ்ரீ,
"கொஞ்சம் நேரம் இங்க உட்கார் அர்ஜூன்" என்றார்.....
ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் நடக்க இருக்கும் களேபரம் தெரியாமல்.....
தன் அன்னை சொன்னதும் மறுக்க முடியாமல் மெதுவே கீழ் இறங்கி வந்தவன் தொப்பென்று ஸோஃபாவில் சாய்ந்து அமர, அவன் அமர்ந்த விதத்திலேயே ஸ்ரீக்கு தெரிந்து போனது தங்கள் மகனின் களைப்பும், அவன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளும்.....
அமர்ந்தவன் எதுவும் பேசாமல் தலையைப் பிடித்தவாறே ஸோஃபாவில் சாய்ந்து இருக்க, ஒரு அன்னையாக மகனின் மன சஞ்சலத்தையும், வேதனையும் அறிந்தவருக்கு உள்ளம் கலங்கி போனது....
அவருக்குத் தெரியும் அர்ஜூனின் இப்பொழுதைய நிலைமை அவனின் தொழிற்களினால் வந்தது இல்லை என்று....
அவனை அறியாமலேயே அவன் மனமும் புத்தியும் தன்னுடைய திருமண வாழ்க்கையில் அடிப்பட்டுத் தோற்றுவிட்டதாகப் போட்டிப் போட்டுக் கொண்டு அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதனை அவரும் ஆழ்ந்து உணர்ந்திருந்தார்...
பின் இந்த உலகத்திலேயே அர்ஜூனை நன்கு புரிந்துக் கொண்டவர், அவனின் ஒவ்வொரு செயல்களுக்கும், பார்வைக்கும், சொல்லிற்கும் முழுமையான, உண்மையான அர்த்தங்களை உணர்ந்து இருப்பவர் அவர் ஒருவரே அல்லவா!!!!
அவருக்குத் தெரியாதா இந்த நிமிடத்தில் அவனின் அடி மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் என்னெவென்பது....
அவனின் கஷ்டத்தை உணர்ந்த ஸ்ரீ சமையல் அறையின் பக்கம் திரும்பி...
"அல்லி, கொஞ்சம் டீ போட்டுக் கொண்டு வாம்மா" என்றார்....
திவ்யா சமையல் அறைக்குள் அல்லியோடு தான் இருந்தாள்...
ஆனால் அர்ஜூன் இருக்கும் இந்த நிலைமையில், விவாகரத்து பற்றி வேறு அவன் பேசி இருக்கும் இந்த நாளில் திவ்யா அவன் முன் வந்தால் நிச்சயம் ஏற்கனவே வெம்பி போய் வேதனையில் இருக்கும் அந்தச் சின்னப் பெண்ணை ஈட்டி போன்ற வார்த்தைகளில் குத்தி கிழித்துவிடுவான் என்று தான் அவர் திவ்யாவை அழைக்காமல் அல்லியை அழைத்திருந்தார்.....
ஆனால் விதியுடன் போட்டியிட்டு யாரால் ஜெயிக்க முடியும்?? விதி முழுப் பலத்துடன் திவ்யாவின் வாழ்க்கையில் அவளுடன்
போராடத் துவங்கியிருந்தது....
ஸ்ரீ அழைக்கும் பொழுது அல்லி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்ததால், திவ்யாவைத் திரும்பி பார்க்க....
"நீ வேலையைப் பாரு அல்லி.... நான் கொண்டு போறேன்" என்றவள் தன் மாமியார் தன் கணவனுக்குத் தான் தேநீர் போட சொல்கிறார் என்று தெரியாமல் "இந்நேரத்தில், இராத்திரி சாப்பிடற நேரத்தில் எதற்கு டீ?" என்று யோசித்தவள் காலையில் இருந்து ஸ்ரீயின் முகம் சரியில்லாததால் அவருக்காகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு தேநீர் போட துவங்கினாள்...
முதலில் தன் மாமியாருக்கு மட்டும் போட ஆரம்பித்தவள் பின்னர் எதற்கும் இருக்கட்டுமே என்று மாமனாருக்கும், கொழுந்தனாருக்கும் சேர்த்து தேநீர் தயாரித்தவள் ஒரு தட்டில் தேநீர் கோப்பைகளை வைத்து எடுத்து வர அப்பொழுது தான் கவனித்தாள் தன் கணவன் அங்கு அமர்ந்திருப்பதை...
கடந்த சில வாரங்களாகத் திவ்யாவின் பெயரைக் கேட்டாலே மகிழ்ச்சியில் தத்தளித்த அவனது காதல் மனது, திவ்யாவின் கொலுசுகளின் கீர்த்தனைகளைக் கேட்டாலே அதன் இசையில் கட்டவிழ்த்து சிலிர்த்து எழுந்த உணர்வுகள், அவளின் எழில் முகத்தைக் கண்டதும் விழிகளிலும் இதயத்திலும் புரண்டு எழுந்திருந்த பரவசம்....
அத்தனையும் இன்று அவளைத் தேநீர் கோப்பைகளுடன் கண்டப் பொழுது சென்ற இடம் தெரியாமல் காணாமல் போனது....
அவளைப் பார்த்த அந்த விநாடி கோபத்தில் உடல் சிலிர்க்க, எந்நேரமும் வெடிக்கும் அக்கினி மலையின் நிலையில் இருந்த மனதை தன்னால் முடிந்த மட்டும் கட்டுக்குள் வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.....
இத்தனைக்கும் அவள் அப்படி ஒன்றும் தவறு செய்துவிடவில்லை....
ஆனால் அர்ஜுனின் சூழ்நிலை, அவனுக்கு இன்றும் நேற்றும் அலுவலகத்தில் நடந்திருந்த தடங்கல்கள், எப்பொழுதுமே ஒரு அளவோடு பார்ட்டி போன்ற நேரங்களில் மது அருந்தி பழகியிருந்தவன் நேற்று விடிய விடிய அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்ததால் தலையே வெடித்துவிடும் அளவிற்கு இருந்த வலி....
இதில் தன் மனைவியின் ஒதுக்கமும் அவமதிப்பும் போட்டிப்போட்டிக் கொண்டு அவனை உலுக்கி எடுக்கச் சீற்றம் அவன் கண்களை மறைத்து இருந்தது.....
அர்ஜூனின் மன நிலை இவ்வாறு இருந்தது என்றால் திவ்யாவின் நிலைமையோ சொற்களுக்கு அப்பாற்பட்டு இருந்தது...
மாமியார், மாமனார் மற்றும் கொழுந்தனாரை மட்டும் எதிர்பார்த்திருந்தவளுக்குத் தன் கணவனையும் அங்குக் கண்டதும் சொல்லி வைத்தார் போல உடல் முழுவதும் உதறலெடுக்க ஆரம்பித்தது...
இதில் அவன் தன்னைக் கண்டதும் அவன் முகத்தில் தெரிந்த மாற்றமும், ருத்ரமும் அவளின் கால்களை மரத்துப் போகச் செய்யச் சில விநாடிகள் நின்ற இடத்திலேயே நிற்க அவளின் தடுமாற்றத்தைக் கண்டவன் "ம்ப்ச்" என்று சலித்துக் கொண்டு தன் இடது கையை ஸோஃபாவின் கைப்பிடியில் ஊன்றியிருந்தவாறே மேலும் தலையை அழுத்தி பிடித்தவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டான்...
கணவனின் இந்தச் செய்கையில் அவன் மனதில் குடியிருந்த வெறுப்பின் உயரம் தெரிய பரிதாபமாக ஸ்ரீயைத் திரும்பி பார்க்க அவளின் நிலையை உணர்ந்தவர் "வா" என்பது போல் தலை அசைத்தார்....
"வேறு வழியில்லை.... கொண்டு வந்த டீயை அவர்களுக்குக் கொடுத்து தான் ஆக வேண்டும்... ஆனால் கால்கள் மரத்துப் போய், கைகள் வேறு இந்த நடுங்கு நடுங்குகிறதே... இதில் கீழே போடாமல் டீயை அவரிடம் கொடுக்க வேண்டுமே" என்ற எண்ணம் வர, அந்த எண்ணமே அவள் கைகளின் நடுக்கத்தை மேலும் அதிகரித்தது....
மனதில் இருந்த கலக்கத்தையும் மீறி கால்களின் தடுமாற்றத்தை சிரமத்துடன் மறைக்க முயற்சி செய்தவாறே மெல்ல நடந்து வந்தவள் அர்ஜூனின் அருகில் வரும் பொழுது விதி தன் கரத்தை அழுத்தமாக அவளின் மேல் பதித்தது போல் சரியாக அவளின் புடவை தடுக்க, அப்படியே வைத்திருந்த தேநீர் தட்டை அவன் மீது தவற விட்டாள் இந்த நிமிடத்தில் அவன் மனதில் வெறுப்பை மட்டுமே கிளறியிருந்த அவன் மனைவி....
ஏற்கனவே கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளம், சமாதானமற்ற புத்தி, உள்ளே எழுந்த உணர்ச்சிகளின் விளைவாக உள்ளூர அவமானத்தால் குன்றிக் கொண்டிருந்த மனம் இதில் சூடான தேநீர் வேறு ஊற்றியதால் இகழ்ச்சியும் ஆத்திரமும் கலந்த பார்வையை ஒரு விநாடி அவள் மீது வீசியவன் தன் பொறுமையை இழந்து தன்னிலை மறந்தான்....
திவ்யா தேநீரை அவன் மீது தவறவிட்ட அந்த விநாடியே ஸ்ரீயும் மற்றவர்களும் ஸோஃபாவில் இருந்து எழுந்திருக்க, அதற்குள் "பளார்" என்ற சத்தம் மட்டும் கேட்டது....
இடி இறங்கியது போல் அர்ஜூனின் கை திவ்யாவின் கன்னத்தைப் பதம் பார்க்க, விழுந்த அறையில் தளிர் மேனியவள் நிலைத் தடுமாறி கன்னத்தைப் பிடித்துக் கொண்டே தொப்பென்று அருகில் இருந்த ஸோஃபாவில் விழுந்தாள்.
சத்தத்தில் அல்லியும் சமையல் அறையில் இருந்து வெளிவந்து எட்டிப் பார்க்க, அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் திவ்யா உட்பட நடந்து முடிந்த சம்பவம் புரிய ஒரு சில விநாடிகள் பிடித்தது...
புரிந்ததும் அவனின் வலுவான கரத்தின் பலத்தால் கன்னம் விண்விண்ணென்று வலிக்க, தன் மாமனார், கொழுந்தனார் முன் தன் கணவன் தன்னை அறைந்ததைத் தாங்க இயலாதவளாக விழிகளில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்க, மேனி நடுங்க தலை குனிந்து அமர்ந்திருந்தவளுக்கு, தன் பாதத்தின் அடியில் இருந்த பூமி அப்படியே தன்னை உள்ளிழுத்துக் கொள்ளாதா என்றிருந்தது.....
தன் மீது என்ன தான் தவறு இருந்தாலும் அதற்காக இப்படியா? அதுவும் இத்தனை பேருக்கு முன்னா? என்று ஸ்தம்பித்துச் சிலையென அமர்ந்திருந்தவள் அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் தன் அறைக்குப் போக எத்தனிக்க....
"எங்கடி போற?" என்று சிங்கம் போல் கர்ஜித்தவனின் குரல் அவளின் கால்களை இறுக்கக் கட்டி வைத்தது போல் அதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்க விடவில்லை.....
அதிர்ச்சியான இந்த நிகழ்வு நடந்து சில நிமிடங்கள் ஆன நிலையில் நிலைமையின் விபரீதம் புரிந்த ஸ்ரீ...
"அர்ஜூன், என்ன இது? மிருகத்தனமா நடந்துக்கிற!!!" என்று கத்த....
அர்ஜூனின் வாயில் இருந்த வந்த அந்த அதிர்ச்சிகரமான சொற்கள் திவ்யாவை மூர்ச்சையுற்று மயங்கிப் போகும் நிலைக்குக் கொண்டு சென்றது....
"மாம்.... இதெல்லாம் உங்களால வந்தது..... உங்க ஃப்ரெண்ட் பொண்ணுன்ன உடனே என் வாழ்க்கை பாழானாலும் பரவாயில்லை என்று இதோ, இவளுக்கு வாழ்க்கை கொடுக்கனும்னு யோசிச்சீங்களே..... கொஞ்சமாவது என்னைப் பத்தி யோசிச்சீங்களா? இவள கட்டிக்கிற அளவுக்கு அப்படி என்ன என் ஸ்டேட்டஸ் தாழ்ந்து போயிடுச்சு..... இவளுக்கும் கோடிஸ்வர மாப்பிள்ளைக் கிடைச்சதும் தாலி கட்ட வந்தவன் விட்டுட்டு போன வருத்தம் கூட இல்லாமல் உடனே என்னைய கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சுட்டா... இதுவே ஒரு வேளை நான் இவ்வளவு வசதியா இல்லாமல் இருந்தா என் கையால தாலி வாங்க சம்மதிச்சு இருப்பாளா?" என்று ஏதோ எரிமலைக்குள்ளிருந்து வெடித்துக் கிளம்பும் அக்கினித் துண்டுகளைப் போலவே வெளிவந்தன அவன் உதிர்த்த ஒவ்வொரு சொற்களும்....
நெஞ்சை பிளக்கும் வார்த்தைகளை அவன் உதிர்த்த பொழுது உடல் ஒரு முறை உணர்ச்சியால் நடுங்க, அதிர்ச்சி தரும் அவனின் வார்த்தைகள் சத்தமில்லாத மின்னல் போன்று மௌனமாக அவளின் மெல்லிய உள்ளத்தில் குத்தி இறங்க, அவன் கன்னத்தில் அறைந்ததே தெறித்து வலித்துக் கொண்டிருக்க, இப்பொழுது வார்த்தைகளால் மலரினும் மெல்லியவளின் பூப் போன்ற இதயத்தை ரணமாக்கிக் கொண்டிருந்தான் அவளின் காதல் கணவன்....
சரமாரியாய் தாக்கிய அவனின் வார்த்தை தாக்குதலில் உள்ளமும் உடலும் அடிப்பட்ட புழுவைப் போல் துடித்தவளின் கண்களில் மட்டும் நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது....
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழியைப் போல் பிடித்தமில்லாமலேயே தாலியில் மூன்றாவது முடிச்சையும் தானே போட்டு தன் வாழ்க்கையைச் சரி பாதியாகப் பிரித்துக் கொடுத்த அவள் கணவன் தன் இதயத் துடிப்பே தன் மனையாள் தான் என்று இந்த நிமிடம் உணராமல் அவளைத் துடிக்க வைத்தான் மேலும் அவன் கக்கிய அனலைப் போன்ற வார்த்தைகளால்....
"வேலைக்காரியா வச்சுக்க வேண்டியவள எனக்குச் சமமா நினைச்சு மருமகளா கொண்டு வந்தீங்க... என்னோட தகுதிக்கு உங்களால இவளத் தான் என்னோட மனைவியா கொண்டு வர முடிஞ்சுதா? அப்படி நான் என்ன தரம் தாழ்ந்து போய்ட்டேன்..... எத்தனை தடவை சொன்னேன்... இந்தக் கல்யாணம் வேண்டாம் வீட்டுக்கு போயிடலாம்னு... கேட்டீங்களா? இவள் இந்த வீட்டில் காலடி எடுத்து வச்சதிலிருந்து என்னோட நிம்மதி பறிப்போயிடுச்சு.... இனியும் இவ இங்க இருந்தான்னா அப்புறம் நீங்க என்னைய மறந்து விட வேண்டியது தான்.... அருண் உங்க எல்லாப் பிஸினஸையும் பார்த்துக்கட்டும்.... என்னைய ஆள விட்டுருங்க" என்றவன் திரும்பியும் பார்க்காமல் மாடிப்படியின் அருகில் நின்றிருந்தவளின் மீது எங்குத் தன் உடல் உரச நேரிடுமோ என்பது போல் ஒதுங்கி படிகளில் ஏறியவன் அந்த வீடே அதிரும்படி படாரென்று தன் அறைக் கதவை சாத்தினான்.
அவன் சென்று விட்டான்... ஆனால் அவனின் கொடிய பாம்பின் விஷம் போன்ற வார்த்தைகள் இன்னும் அங்கு எதிரொலித்துக் கொண்டே இருப்பது போல் இருந்தது திவ்யாவிற்கு......
உணர்ச்சி அற்ற கல்லாகச் சிறிது நேரம் படிகளின் அருகில் நின்றிருந்தவளுக்கு மூச்சு அடைத்து மயங்கி விழுந்துவிடுவது போல் இருக்க, எதுவும் சொல்லாமல் தன் அறைக்குச் செல்ல படிகளில் ஏற...
"திவ்யா, ப்ளீஸ் டா... கொஞ்சம் இரு.... போகாத..." என்று தடுத்த ஸ்ரீயின் வார்த்தைகளில் அவள் நடை நின்றது...
அவளின் அருகே வந்தவர்....
"திவ்யா..... அவன் ஏதோ கோபத்தில பேசிட்டான்... அவனுக்கு உன் மேல கோபம் இல்லைடா... இரண்டு நாளா ஆஃபிஸில் அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனை... அதத் தான் இப்படி உன் கிட்ட காட்டிட்டு போய்ட்டான்" என்று அவர் சொன்ன வார்த்தைகளில் எதுவுமே அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை.....
அவரைத் திரும்பி பார்த்தவளின் கண்களில் வலிக்க வலிக்கத் தன் கணவன் வார்த்தைகளால் தன் இதயத்தில் அடித்த வலியே தெரிந்தது... அத்தனை துக்கத்திலும் ஒரு விரக்தி புன்னகை மட்டுமே சிந்தியவள் மெதுவே படிகளில் ஏறி தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்....
ஸ்ரீக்கும் தெரியும் அவளின் புன்சிரிப்பு அவள் புறத்தில் பட்ட வலியினால் வந்த வேதனையால் அல்ல, அவளது இதயத்தின் பட்ட வலியினால் வந்தது என்று....
அவளின் கலங்கிய முகமும் நீர் நிறைந்த பார்வையும் தன்னை ஏதோ குற்றம் சாட்டுவது போல் உணர்த்த முதன் முறையாகத் தான் செய்தது தவறோ என்று ஸ்ரீ துடித்து உணர்ந்த அந்த நொடி அவரின் நெஞ்சில் நெருஞ்சி முள் போல் எதுவோ சுருக்கென்று குத்தியது...
இந்தத் திருமணம் எதிர்பாராத விதமாக நடந்திருந்தாலும் எப்படியும் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் வரும்... இருவரும் மகிழ்ச்சியாக வாழப் போகிறார்கள் என்று அவர் கட்டியிருந்த கனவுக் கோட்டை தன் கண்முன்னே தரை மட்டமாகி கொண்டு இருப்பதைக் கண்டவரின் இதயத்தில் தாங்கமுடியாத ஒரு வலி தோன்றியது....
ஏற்கனவே அர்ஜூனின் அராஜகத்தாலும் கொடிய வார்த்தைகளாலும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அருணும், பாலாவும், மஹாவும் அதுவரை எதற்கும் கலங்காத, சாமான்யமாக எந்த விஷயத்திற்கும் மனம் நெகிழாதவரான ஸ்ரீயின் கண்களிலும் நீரித்துளிகள் பளபளத்ததைக் கண்டு கலங்கி போயினர்...
ஒருவருக்கும் இரவு உணவு அருந்த கூடத் தோன்றாமல் அவரவர்களின் அறைக்குச் செல்ல, தன் அறைக்கு வந்த ஸ்ரீ தன் கணவரிடம் கூடப் பேசாமல் அமைதியாக இருந்தவர் தலை சாய்ந்து தலையணையில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார்...
மனைவியின் இந்த அமைதி பாலாவிற்கு அச்சத்தையே கிளறியது....
ஸ்ரீயின் அருகில் அமர்ந்தவர்,
"என்னம்மா.... என்னாச்சு?" எனவும்,
கண்களைத் திறந்துப் பார்த்தவர்,
"நான் தப்பு பண்ணிட்டேங்க.... இரண்டு சின்னச் சிறுசுங்க வாழ்க்கைய வீணாக்கிட்டேன்…" என்றார் கலங்கிய கண்களுடன்...
அவரைத் தன் தோளில் சாய்த்துக் கொண்ட பாலா,
"இல்லம்மா, நீ ஒன்னும் தப்பு பண்ணலை.... நீ திவ்யாவிடம் சொன்ன மாதிரி இரண்டு நாளா அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்... அவன் பிஸினஸில் எத்தனையோ பிரச்சனைகளை ஃபேஸ் பண்ணியிருக்கான்... அத கொஞ்சம் கூடப் பயமோ தயக்கமோ இல்லாமல் தனியாளா நின்னு சரி பண்ணியிருக்கான்.... ஆனால் அந்த மாதிரி நேரங்களில் அவன் சில சமயம் வீட்டிற்கே கூட வராமல் இருந்திருக்கான்.... அது உனக்கே தெரியும்... அப்படியே வந்தாலும் அவன் தனிமையில் தானே இருப்பான்.... பிரச்சனைகளை யார்கிட்டேயும் ஷேர் பண்ணாம தானே தீர்க்கப் பார்ப்பான்... அது தானே நம்ம அர்ஜூன்? இன்னைக்கு ஏதோ மனைவிங்கிற உரிமையில திவ்யாவிடம் தன் கோபத்தைக் காட்டிட்டான்... நான் நாளைக்கு அவனிடம் பேசிறேன்... அவன் எல்லாவற்றையும் தன் தோளில் தானே சுமக்கனும்னு அவசியம் இல்லை.... நாமெல்லாம் எதுக்கு இருக்கோம்.... நீ மனச போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் படுத்து தூங்கு…" என்று சொன்னவர்,
தன் மனைவியின் தலையைக் கோதி விட, கண்களை மூடியிருந்த ஸ்ரீயின் நினைவில் அதிர்ந்த முகத்துடனும், சொல்லொண்ணா வலியுடனும், ஊற்றாகப் பெருக்கெடுத்த நீருடனும் திவ்யா அவரைப் பார்த்திருந்த காட்சியே அலை போல் வந்து கொண்டிருந்தது.
அங்குத் தன் அறைக்கு வந்த திவ்யாவிற்கோ தன் கணவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பேரொலியாகச் செவிகளில் கேட்டு அவளின் மென்மையான இதயத்தை நெருப்பாகச் சுட்டுப் பொசுக்கி கொண்டிருந்தது...
அவனின் தேள் கொட்டிய வார்த்தைகளில்....
"நான் வசதியாக இருந்ததால் தான் என்னைத் திருமணம் செய்துகொண்டாயோ?" என்ற கேள்வியும்,
"வீட்டில் வேலைக்காரியாக இருக்க வேண்டியவள்.... என் தகுதிக்குக் கொஞ்சம் கூடத் தகுதியில்லாதவள்" என்ற வார்த்தைகளும் திரும்பத் திரும்ப எதிரொலிக்க, மஹா அறைக்குள் நுழையவும் சட்டென்று குளியல் அறைக்குள் சென்றவள் வாயை இறுக்க மூடிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.....
திவ்யாவின் நிலைமையை நன்கு புரிந்து கொண்ட மஹாவும் அவளைத் தொந்தரவு செய்யாமல் அவளின் வரவிற்காகக் காத்திருக்க நீண்ட நேரம் சென்று குளியல் அறையில் இருந்து வெளியே வந்த அண்ணியைப் பரிதாபமாகப் பார்த்தவள் அவளிடம் கேள்வி எதுவும் கேட்காமல், பேச்சும் கொடுக்காமல் படுத்துக் கொண்டாள்..
தன் அருகே தனக்கு முதுகு காட்டி படுத்திருந்த திவ்யாவின் உடல் அழுகையால் குலுங்கியதைக் கண்டவளுக்கு இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது...
ஏனெனில் திவ்யா அந்த வீட்டிற்கு வந்திருந்த இந்த ஐந்து ஆறு மாதங்களில் அத்தனை பேருடைய மனதையும் தன் அன்பாலும், அமைதியான குணத்தாலும் அவ்வளவு கவர்ந்திருந்தாள்....
அது நாள் வரை பெண் வாசமே என்ன என்று அறியாதிருந்த, முழுவதும் கல்லைப் போல் இரும்பாயிருந்த அவளின் கணவனின் இதயத்தை உட்பட....
இரவு முழுவதும் உறங்காமல் மௌனமான அழுகையில் கரைந்துக் கொண்டிருந்தவள் விடிந்ததும் வழக்கம் போல் எழுந்து பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வாசலில் கோலம் போட்டு முடித்து, காலை உணவு செய்யச் சமையல் அறைக்குள் நுழைந்தவள் அதற்குப் பின்னர் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரவில்லை...
காலை உணவை உண்ண அர்ஜூனைத் தவிர மற்ற அனைவரும் டைனிங் டேபிளுக்கு வந்த பிறகும் கூட அனைத்தையும் ஸ்ரீயிடம் கொடுத்துவிட்டாளே தவிர அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவள் வெளியில் வர மறுத்துவிட்டாள்...
ஒரு வழியாக அருணும் மஹாவும் கல்லூரிக்கு கிளம்பிச் செல்ல அர்ஜூன் வேகமாகக் கீழே இறங்கி வந்தவன் ஒருவர் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் காலை உணவும் அருந்தாமல் விறுவிறுவென்று வெளியில் சென்றவன் தன் காரைக் கிளப்பிச் சென்றுவிட்டான்....
இரவு நடந்திருந்த களேபரத்திற்குப் பிறகு வெகு நேரம் வரை உறங்காமல் விழித்திருந்த பாலா காலை அர்ஜூனிடம் எப்படியும் இதனைப் பற்றிப் பேசிவிட வேண்டும், திவ்யா அர்ஜூன் பிரச்சனைக்கு ஒரு தந்தையாக நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று காத்திருந்தவருக்கு அவன் அதிவேகமாகக் கீழே வந்த வேகத்திலேயே தன் காரில் சென்றுவிட்டான் என்று தெரிந்ததும் மனம் கசந்தது.....
ஸ்ரீயோ அல்லது தானோ இதில் நிச்சயம் தலையிட வேண்டும்... பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தவருக்கு அவன் சொல்லாமல் சென்று விட்டது வருத்தத்தையே தர, அவர் ஸ்ரீயிடம் அர்ஜூனை அவனுடைய அலுவலகத்திலேயே போய்ச் சந்திப்பதாகக் கூறினார்....
ஒரு வழியாகத் தன் மாமியாரைத் தவிர வீட்டினர் அனைவரும் வெளியே சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட திவ்யா தன் அறைக்கு வந்தவள் பாரமான இதயத்துடனும், தளர்ந்த மனதுடனும் இனி தன் திருமண வாழ்க்கைக்கு விமோச்சனமில்லை என்று தீர்மானித்து அந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்தாள்.
பிரியுமுள்ள அத்தைக்குத் திவ்யா எழுதிக் கொள்வது.
இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு முதலில் நீங்கள் என்னை மன்னிக்கவும்.... என் அம்மா ஸ்தானத்தில் இருக்கும் உங்களிடம் நான் சொல்லிவிட்டு சென்று இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்... ஆனால் நான் சொல்லியிருந்தால் நிச்சயம் நீங்கள் என்னைப் போகவிட்டு இருக்க மாட்டீர்கள்.... அதனால் வேறு வழியில்லாமல் தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நேற்று நடந்ததற்காக நான் இந்த வீட்டையோ, அல்லது உங்களையோ விட்டு செல்லவில்லை.... என் கணவருக்கு என்னிடம் கோபப்பட முழு உரிமை இருக்கிறது... ஆனால் அவருக்கு மனைவியாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதா? என்ற கேள்வியே என்னை வெளியே செல்ல தூண்டியது.
அவர் சொன்னது போல் அவருக்கு வேலைக்காரியாக இருக்கக் கூடத் தகுதியில்லாதவள் மனைவியாக இருக்க ஆசைப்படலாமா? அவருக்கும் ஒரு வேலைக்காரி கழுத்தில் தாலி கட்டிவிட்டோமே என்ற எண்ணமே அவரின் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும்.... நான் எந்த ஜென்மத்தில் யாருக்கு செய்த பாவமோ, மணமேடை வரை வந்தவர் தாலி கட்டாமல் விட்டுச் சென்றார்.
இனி தெரிந்தும் நான் பாவம் செய்ய விரும்பவில்லை.... என்னால் இனி உங்கள் மகனுக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது.... நான் அவரின் பாதையை விட்டு விலகி செல்கிறேன்.
ஆனால் ஒன்று மட்டும் அவருக்குப் புரிய வைக்க விரும்புகிறேன்... வாழ்க்கையில் அன்று தான் உங்கள் மகனை முதல் முதலில் பார்த்தேன்.... ஏற்கனவே திருமணம் நின்று விட்ட அதிர்ச்சியில் தற்கொலை வரை போனவளுக்கு அவர் வசதியானவரா? அவருக்கு நான் தகுதியானவளா? என்று பார்க்க தெளிவான மனநிலையோ சிந்தனையோ இல்லை.
என் அம்மாவின் முகத்தில், நான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பே இருந்தது.... அதுவே தான் என்னை இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கவும் வைத்தது.
ஆனால் அப்பொழுது உங்கள் மகனைப் பற்றிய எண்ணமோ, அவரது அந்தஸ்தோ, இல்லை அவர் எப்படிப் பட்டவர், நான் அவருக்குத் தகுதியானவளா என்று எண்ணங்களோ எனக்கு இல்லை.... ஒரு வேளை நான் அவருடைய இடத்தில் இருந்து சிந்தித்துப் பார்த்திருந்தால், நிச்சயம் இந்தத் திருமணத்திற்கு நான் சம்மதம் தெரிவித்து இருக்க மாட்டேன்.
ஒரு நல்ல பெற்றோருக்கு தன் பெண் வசதியான வீட்டில் வாழ்க்கைப் பட வேண்டும் என்ற ஆசையை விட அவள் தன் புகுந்த வீட்டில் எல்லோருடனும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற விருப்பமே இருக்கும்.
அதுவும் உங்கள் தோழியைப் பற்றி உங்களுக்கு நான் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.... நான் கலா வளர்த்த பெண்.... ஏழை தான், படிக்காத கிராமத்துப் பெண் தான், ஆனால் என்றுமே பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவள் கிடையாது.
எந்த நிமிடத்தில் என் கழுத்தில் அவர் தாலி கட்டினாரோ அன்றே இது என் குடும்பம், அவர் என் கணவர் என்று தான் நினைத்திருந்தேன்.... ஆனால் அன்றே அவர் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை.
இனி ஒரே வீட்டில் அவருடன் இருந்து அவரின் நிம்மதியை நான் மேலும் கெடுக்க விரும்பவில்லை.... அதே போல் அவருடைய வாழ்க்கையில் இருந்து நான் விலகுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்யட்டும்.
அவர் சொன்னது போல் விவாகரத்திற்கு நான் முழுமனதுடன் சம்மதிக்கிறேன்... எங்கு, எப்பொழுது கையெழுத்து போட வேண்டுமோ அங்கு நான் கையெழுத்துப் போடுகிறேன்.
நிச்சயம் அவருக்குப் பிடித்தது போல் அவருடைய தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றார் போல் அவருக்குப் பெண் கிடைத்து அவர் சந்தோஷமாக வாழ வேண்டும்.
இப்படிக்கு உங்களைப் பிரிய மனமில்லாமல் பிரியும்,
உங்கள் மகள் திவ்யா.
நடுங்கும் விரல்களுடன் கடிதத்தை எழுதி முடித்தவள் ஆறாகப் பெருக்கெடுத்த விழி நீரை துடைத்துக் கொண்டு முடிந்த அளவு பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்து விட்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்...
"நான் வெளியே செல்வது என் கணவரைத் தவிர மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கும்.... சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பியதினால் என் மீது வெறுப்பு கூட வரும்... ஆனால் அதற்காக இனியும் அவருக்கு நான் தொல்லை கொடுக்க விரும்பவில்லை.... அதிலும் அம்மாவிற்கு நான் அத்தையிடம் சொல்லாமல் வந்துவிட்டேன் என்று தெரிந்தால் நிச்சயம் பேரதிர்ச்சியாகவும் கோபமாகவும் இருக்கும்"
என்று மனம் போன போக்கில் எண்ணிக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் பின்னோக்கி சென்று தன் திருமண நாளில் வந்து நின்றது...
"என்னுடைய வாழ்க்கையில் ஏன் அப்படி ஒரு நாள் வந்தது? நான் என் அம்மா, அப்பா, அண்ணா என்று இருந்திருக்கக் கூடாதா? ஏன் என் கண்முன்னே அவரைக் கொண்டு வந்தது விதி? ஏன் என் கழுத்தில் தாலி கட்ட வைத்தது? இப்பொழுது என் மீது ஏன் இந்த அளவிற்கு வெறுப்பு வந்தது?" என்று நெஞ்சு உடைந்துவிடும் அளவிற்குச் சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு எவ்வளவு முயன்றும் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை...
விம்மி அழுதவள் முடிவில் உணர்ச்சி மிகுதியால் மூர்ச்சித்து விழும் அளவிற்கு மூச்சை அடைக்க ஆரம்பிக்க இனி ஒரு நொடி நேரம் கூட இங்கு இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தவள் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு முகத்தைக் கழுவி வேறு புடவை அணிந்து கீழே எட்டிப் பார்க்க, அங்கு ஒருவரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டவள் மெதுவே இறங்கி வந்தாள்...
ஸ்ரீ அவர் அறையில் படுத்திருக்க, அல்லியும் தெய்வானையும் சமையல் அறையினுள் இருக்க, வீட்டில் நிலவிய நிசப்தமான சூழ்நிலை வேறு அவளின் திகிலை அதிகப்படுத்த கையில் இருந்த கடிதத்தை ஹாலில் போடப்பட்டிருந்த மேஜையில் வைத்தவள் வெளியே ட்ரைவர் முருகனோ அல்லது தோட்டக்காரர்களோ யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு விடுவிடுவென்று சத்தம் இல்லாமல் வெளியேறினாள்...
வாயிலைத் தாண்டவும் அவளின் அழகிய கோலம் அவளைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பது போல் தோன்றியது....
அங்குத் தானே அன்று தான் புடைவையைத் தூக்கி சொறுகி கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது தன் கணவன் தன்னை அத்தனை ஆர்வத்துடன் பார்த்திருந்தான்....
அந்த நினைவே இதயத்தைக் கலங்கடிக்கப் பெருமூச்செறிந்தவாறே ஒரு முறை திரும்பி வீட்டைப் பார்த்தவளுக்குத் தன் திருமண நாள் அன்று தன் கணவன் ஆரத்தி தட்டை தட்டிவிட்டுச் சென்றது ஞாபகம் வர, விழி நீரால் பார்வை மறைத்தது...
ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க மூச்சு திணறுவது போல் இருக்க, ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் சாலைக்கு வந்தவள் அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையத்திற்குப் போகச் சொன்னாள்...
பள்ளி வாழ்க்கை முடிந்தவுடன் கல்லூரிக்கு கூடச் செல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாது இருந்தவளுக்கு இன்று இவ்வளவு பெரிய சென்னையில் தனியே பேருந்து நிலையம் வரை போவது மிகுந்த அச்சத்தைக் கொடுக்க, ஆனால் இனி ஒரு நிமிடம் அந்த வீட்டில் இருந்தால் கூட நிச்சயம் மூச்சு விடமுடியாமல் செத்துவிடுவோம் என்று நினைத்தவளுக்கு...
"போதும்பா முருகா.... இந்த அதிர்ச்சிகள் போதும்... இதுக்கு மேல் எதுவும் தாங்கிக்கிற சக்தி இல்லை…" என்று வேண்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது.
தன் வாழ்க்கை அர்ஜூனோடு துவங்கிய அன்று வேண்டிய அதே வார்த்தைகள்...
மத்திய பேருந்தில் கடலூர் செல்லும் பேருந்தைக் கண்டுப்பிடித்து ஏறி அமர்ந்தவளுக்கு எத்தனை முயன்றும் தன் கணவனின் நினைவை தவிர்க்க முடியவில்லை...
"சில நாட்களாக அவரின் நடவடிக்கைகளும், பார்வையும் அவருக்கு என் மேல் இருந்த காதலைத் தானே வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.... ஒரு வேளை அது காதல் இல்லையோ? வெறும் ஆசையோ? ஆனால் காதல் இல்லாமல் என் மேல் எப்படி ஆசை மட்டும் வரும்?" என்று குழம்பியவளுக்கு விடை ஒன்றும் புரிபடவில்லை..
இத்தனை நாள் என்னை வெறுத்த கணவன் இப்பொழுது தானே என்னை விரும்ப ஆரம்பித்து இருந்தார்... ஒரு வேளை நான் அவர் அழைத்த அன்று அவரின் அறைக்குப் போயிருந்தால் அவருக்கு என் மேல் இத்தனை வெறுப்பு வந்திருக்காதோ? ஆனால் எத்தனை தான் வெறுப்பு இருந்தாலும் அவரின் மனதில் உள்ள எண்ணங்கள் தானே வார்த்தைகளாக நேற்று வெடித்து இருக்கிறது...
அப்படி என்றால் என்ன தான் அவர் என்னை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்தாலும் நான் அவருக்குத் தகுதி அற்றவள் என்ற நினைப்பு அவரின் ஆழ் மனதில் பதிந்து இருந்திருக்கிறது என்று தானே அர்த்தம்... இனி அவரின் வாழ்க்கையில் நான் எக்காரணம் கொண்டும் தலை இடக்கூடாது...
இத்தனை பெரிய பிஸினஸ் பண்ணுகிறவர், பெரிய கோடீஸ்வரர், இத்தனை நாள் என்னை அவர் வீட்டில் விட்டு வைத்திருந்ததே பெரிது என எண்ணியவள் வழிந்த கண்ணீரை யாரும் பார்க்காதவாறு துடைத்துக் கொண்டு தன் அன்னையைச் சமாளிக்கத் தயாரானாள்...
ஆனால் பாவம் தன் கணவனின் கோபத்திற்குத் தன் மேல் உள்ள அதிகக் காதலே காரணம் என்று அறியவில்லை அந்தப் பேதை...
ஒரு வேளை அவள் அன்று அவனின் அறைக்குப் போயிருந்தால் தான் வாங்கி வந்திருந்த பரிசினை அவளுக்குக் கொடுத்துவிட்டு காதலை சொல்லியிருப்பானோ!!
அது தான் அவனின் திட்டமும் கூட, ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை அவள் அவனுக்குக் கொடுக்கவே இல்லையே... யாரை குறை சொல்வது என்று விதியே குழம்பி நின்றது.
காலையில் திவ்யாவை சந்தித்த பிறகு விடிய விடிய அழுததினால் வீங்கி வாடிப்போயிருந்த அவளின் முகத்தைப் பார்த்ததில் இருந்து அதே நினைவில் தன் அறைக்கு வந்து படுத்த ஸ்ரீக்கு இன்னமும் அதே வலி நெஞ்சில் குறையாமல் இருந்தது...
தன் நெஞ்சை அழுத்தி தேய்த்துக் கொண்டவருக்குச் சிறிது நேரம் ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் போல் தோன்ற, இருந்தும் திவ்யாவை நினைத்துத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு "பாவம் சின்னப் பெண் ரொம்ப நொந்துப் போயிருக்கிறாள், நாமும் அவளுடன் அருகில் இல்லை என்றால் சரி இல்லை…" என்று நினைத்தவர் கீழே இறங்கி வந்தார்...
சமையல் அறைக்குள் வந்தவர் அங்குத் தெய்வானையும் அல்லியும் மட்டும் இருக்கவே திவ்யா எங்கே என்று கேட்க, அவர்கள் அவள் தன் அறைக்குச் செல்வதாகக் கூறியதை சொன்னதும் அல்லியிடம் அவளின் அறையில் போய்ப் பார்க்க சொன்னார்...
திவ்யா அறையில் இல்லை என்பதை உறுதி செய்த அல்லி...
"அம்மா, திவ்யாம்மா ரூமில இல்ல.... இருங்க தோட்டத்தில் இருக்காங்களான்னு பார்த்துட்டு வர்றேன்" என்றவள் தோட்டத்திலேயும் அவள் இல்லை என்று உறுதி படுத்திக் கொண்டு ட்ரைவர் முருகனிடமும் தோட்டக்காரர்களிடமும் விசாரித்தாள்...
யாரும் அவளைப் பார்க்கவில்லை என்று உறுதியாகக் கூறியதும் அவளைப் பயம் தழுவ வேகமாக ஸ்ரீயிடம் ஓடி வந்தவள் திவ்யா எங்கும் இல்லை என்று கூற, ஸ்ரீக்கு மீண்டும் சுளீரென்று நெஞ்சில் வலி எடுத்தது...
ஹாலில் வந்து அமர்ந்தவர் காலையில் உணவு உண்டவுடன் அவளைத் தனியாக விட்ட தன் மடத்தனத்தை மனதிற்குள் திட்டியவர் அப்பொழுது தான் கவனித்தார் அந்தக் கடிதத்தை...
கடிதத்தைக் கண்டவுடனே அவரின் மனம் பதற ஆரம்பித்தது....
பிரித்துப் படிக்க ஆரம்பித்தவர் கடிதத்தின் வரிகளுக்கிடையே நீர் துளிகளைப் பார்த்ததுமே தெரிந்து போனது திவ்யா விழிகளில் நீரோடு இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறாள் என்று....
மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அடி வயிற்றில் புளியைக் கரைக்க ஒவ்வொரு வரியாகப் படித்தவர், படித்து முடிக்கும் முன் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தார்...
தொடரும்..