அத்தியாயம் - 21
அங்கு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அர்ஜூனின் மனதில் மீண்டும் மீண்டும் திவ்யாவின் கடிதமே அலைஅலையாய் மோதிக் கொண்டிருந்தது.
காரில் அமர்ந்து இருந்தவன் தன்னிச்சையாக அவளின் கடிதத்தை எடுத்து பார்க்க, கடிதத்தில் அங்கிங்கு அவளின் கண்ணீர் துளிகள் பட்டுக் காய்ந்திருந்த இடம் அவளின் அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் பின்னால் மறைந்து கொண்டிருந்த ஆத்மார்த்தமான அன்பையும், அவளின் அதிர்ந்து மருண்ட விழிகளுக்குள் தன் மேல் துளிர்த்து ஒளிந்து கொண்டிருந்த காதலையும் உணர்த்தியது.
திருமணம் நடந்தேறி இரு நாட்களிலேயே தான் அவள் இருக்கும் இடத்தில் இருக்க விரும்பாமல் தூரம் தள்ளி போயிருந்த போதும், பின் அவளைத் தன்னவளாக முழுவதும் அடைய காத்திருந்த நாளில் தன்னை அவள் நிராகரித்துவிட்டாள் என்ற ஆவேசத்தில் வெளிநாடு போயிருந்த பொழுதும் தோன்றாத வலி இதயத்தில் இப்பொழுது ஆழமாகத் தோன்றி குத்தி கிழித்தது.
அவளை விட்டு தான் விரும்பி சென்ற பொழுது தன்னைத் தாக்காத மனப் பாரம், அவளைத் தவிக்க விட்டு அவள் விழிகளில் வழியும் நீரை பார்த்த வண்ணம் தான் பயணித்த பொழுது ஏற்படாத மனக்கிலேசம், அவள் தன்னை விட்டு சென்றுவிட்டாள் என்றவுடன் அவன் உள்ளத்தையே அடி வரை ஆழ அழுத்தி அவனின் இதயம் தன் துடிப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்வது போல் இருந்தது.
அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் மஹாவை அழைத்து வர முடிவு செய்தவன் அலை பேசியில் அவளை அழைத்து.
"மஹா, ஐ ஆம் கமிங் டு பிக் யூ அப் இன் தேர்டி மினிட்ஸ். [Maha, I am coming to pick you up in thirty minutes]" என்று மட்டும் சொன்னவன் வேறு ஒன்றும் சொல்லவில்லை.
மற்ற அனைவரின் பார்வையிலும் அவன் ஏதோ ஒரு குற்றவாளிப் போலவும் எதிரியைப் போலவும் தென்படுவதில் அவன் மனமும் அடிபட்டுத் தான் போனது. தன்னையும் அறியாமல் முதல் முறை தன் தங்கையிடம் ஆறுதலைத் தேடிச் சென்றான்.
அங்கு வகுப்பறையில் அமர்ந்திருந்த மஹாவிற்கோ முதலில் அலை பேசியில் அர்ஜூனின் எண்ணை பார்த்ததுமே அடி வயிறு கலங்கியது.
ஏனெனில் வீட்டில் நேருக்குநேராகப் பேச நேரிடும் பொழுதே தன் தங்கையிடம் கூட வார்த்தைகளை அளந்து பேசுபவன்.
அப்பேற்பட்ட அர்ஜூன் அண்ணன் அழைக்கிறார் என்று திகைத்து போய் அழைப்பை எடுத்தவளின் அதிர்ச்சியைப் பன்மடங்கு அதிகரிப்பது போல் இன்னும் அரை மணி நேரத்தில் கல்லூரிக்கு வருகிறேன் என்று சொன்னால்!!!!!
"அர்ஜூன் அண்ணா நம்மைப் பிக்கப் செய்ய வருகிறார்களா? அதுவும் இந்த நேரத்திலா?" என்று வெலவெலத்து போனாள்.
குரல் தடுமாற. "என்னாச்சு அண்ணா? ஏதாவது பிரச்சனையா?" எனவும், "நத்திங் மஹா. யூ ஜஸ்ட் பி ரெடி [Nothing Maha. You just be ready]" என்றான்.
'எதற்கு வருகிறார்? அதுவும் காலேஜிற்கே. ஒரு வேளை அன்று மொட்டை மாடியில் வினோத் என்னிடம் நடந்து கொண்டதை யாராவது பார்த்து அண்ணனிடம் சொல்லி இருப்பார்களோ?' என்ற நினைப்பே அவளுக்குக் கதி கலங்கியது.
'ஐயோ! அர்ஜூன் அண்ணனுக்கு மட்டும் அந்த விஷயம் தெரிந்து இருந்தால் அவ்வளவு தான். அண்ணியின் அண்ணன் என்று கூடப் பார்க்க மாட்டாரே. இதில் ஏற்கனவே அண்ணியின் மேல் கோபமாக இருப்பவர். இப்பொழுது இது வேறு தெரிந்தால் வேறு வினையே வேண்டாம்' என்று கலங்கியவள் உலகில் உள்ள எல்லாக் கடவுள்களிடமும் வேண்டிக் கொண்டு அர்ஜூனிற்காகக் கல்லூரியின் வாயிலில் வந்து காத்திருக்க.
இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று அவள் வகுப்பு நேரத்தில் கல்லூரியின் நுழை வாயிலில் யாருக்காகவோ காத்திருப்பது தன் தோழர்களின் மூலம் கோகுலின் செவிகளுக்குப் போக, 'அவள் யாருக்காகக் காத்திருக்கிறாள்? ஒரு வேளை அவளுடைய பாய் ஃப்ரெண்டா? அது எப்படி எனக்குத் தெரியாமல் அவளுக்குப் பாய் ஃப்ரெண்ட்' என்று மண்டைக்குள் குடைய, வேகமாகத் தன் வகுப்பறையை விட்டு வந்தவனுக்கு அங்கு அவள் தனித்துக் காத்திருப்பதைப் பார்த்ததும் கோபத்தில் முகம் விகாரமாக மாறியது.
'இத்தனை நாள் காத்திருந்தவனை விட்டு நேற்று வந்தவனைத் தேடுகிறாளோ?. அப்போ நான் என்ன இலவு காத்த கிளியா?' என்று உள்ளம் ஆத்திரத்தில் கொந்தளிக்க அவளுக்குத் தெரியாமல் மறைந்து நின்று கவனித்தான்.
அவள் வகுப்பறையை விட்டு திடீரென்று வெளியே சென்றதும் அவளைத் தொடர்ந்து வந்த தோழிகளும், "என்னடி, யாருக்காகடி வெயிட் பண்ற? எங்களுக்குச் சொல்லவேயில்லேயே?" என்று கிண்டல் செய்ய, அவர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல மஹா வாயைத் திறக்கும் முன்னே அதி வேகமாகக் காரை ஓட்டி வந்த அர்ஜூன் தன் தங்கைக்கு அருகில் வந்து நிறுத்தினான்.
அர்ஜூனின் காரைப் பார்த்ததுமே மஹாவின் கை கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.
'நிச்சயம் இது வினோத் சம்மந்தப்பட்ட விஷயமாகத் தான் இருக்க வேண்டும். அவர் காரை ஓட்டி வந்த விதமும், சடாரென்று ப்ரேக் போட்டு என் அருகில் காரை நிறுத்திய வேகமுமே சொல்லியதே அவரின் கோபத்தை' என்று கதிகலங்கியவள் காரையே பார்த்திருக்க,
காரின் கருப்பு கண்ணாடியை இறக்கி விட்டவன் அவளைப் பார்த்தவாறே ஏறு என்பது போல் கதவை திறக்க, அது வரை அவளுடன் நின்றிருந்த அவளின் தோழிகள் ஸன் க்ளாஸ் போட்டு கம்பீரமாகவும் ஆணழகனாகவும் ஆளுமையுடனும் இருந்த அவனின் அழகை பார்த்து நிலைக்குலைந்தவர்கள் படபடப்புடன்.
"ஹே மஹா, யாருடி இந்த ஹேண்ட்ஸம்????" என்று அலறினார்கள்.
"டீ, அது என் அண்ணன் டீ.." என்று அவர்களிடம் கத்தியவள் காரில் ஏறப் போக அவளின் கையை இழுத்த அவளின் தோழிகளின் ஒருத்தி.
"ஏண்டி, இப்படி ஹீரோ மாதிரி ஒரு அண்ணன் இருப்பதா சொல்லவே இல்லைடி.. ஏன்? நாங்க சைட் அடிக்கக் கூடாதுன்னு மறைச்சிட்டியா????" எனவும், கிழிஞ்சது போ, இது மட்டும் அர்ஜூன் அண்ணா காதில் விழுந்ததோ தொலைந்தோம் என்று நினைத்தவள்.
"விடுங்கடி, நாளைக்குப் பேசுறேன். எங்க அண்ணனே காலேஜுக்கு வந்திருக்காங்கன்னா ஏதோ பெரிய பிரச்சனைன்னு அர்த்தம்.. ப்ளீஸ் நாளைக்குப் பார்க்கலாம்" என்றவள் காரில் ஏறினாள்.
அர்ஜூனைப் பார்த்ததும் அவளுடைய பாய் ஃப்ரெண்டாகத் தான் இருக்கும் என்று நினைத்த கோகுலுக்கு அவனின் அழகும் கம்பீரமும் நிச்சயம் தனக்கு இல்லை என்று உரைக்க,
"அவன் எப்படி இருந்தால் என்னடி, நீ எனக்குத் தான்" என்று பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தவன், மஹா தன் தோழிகளிடம் "அர்ஜூன் என் அண்ணா" என்று சொன்னதுமே ஒரு பக்கம் நிம்மதி அடைந்தாலும், அர்ஜூன் வந்த வேகமும், அவனின் கம்பீர தோரணையும் அவன் மனதில் கிலி உண்டாக்க தவறவில்லை.
மறைந்து நின்றவன் அர்ஜுனின் கண்களில் படாதவாறு மேலும் தன்னை மறைத்துக் கொண்டான்..
காரில் ஏறியதில் இருந்து அர்ஜூன் ஏதாவது பேசுவான் என்று அவன் முகத்தையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு மஹா வர, ஆனால் அவன் வாய்த் திறப்பதாகத் தெரியவில்லை.
அதற்கு மேல் பொறுக்க மாட்டாது ஒரு வழியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
"என்னாச்சு அண்ணா? ஏன் திடீர்னு, என்னன்னு சொல்லுங்கண்ணா.. எனக்கு என்னமோ நீங்க அமைதியா வரதப் பார்த்தா பயமா இருக்கு" எனவும், "ஒன்னும் இல்ல.. பேசாம வா" என்றான்.
மீண்டும் நிசப்தம்.
அச்சத்தில் படப்படப்பு வர, இதயம் வேறு அதற்கு ஏற்றார் போல் தன் துடிப்பை பல மடங்கு அதிகரிக்கச் சிறிது நேரம் அமைதியாக வந்தவளால் அதற்கு மேல் மௌனமாக இருக்க இயலவில்லை..
காரினுள் குடிக்கொண்டிருந்த அமைதியை கிழிக்கத் திவ்யாவை பற்றிப் பேசத் துவங்கினாள்.
அர்ஜூன் எதிர்பார்த்ததும் அது தானே.
ஒற்றை விரல் அசைவில் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் கர்ஜிக்கும் சிங்கம் இன்று சிறு பிள்ளை போல் தன் சின்னத் தங்கையிடம் ஆறுதலை தேடி வந்திருக்கிறது..
ஆனால் அவனின் இயற்கையான குணம் தன் மனதில் இருப்பதை வாய் திறந்து வெளிப்படையாகச் சொல்ல விடவில்லை..
"ஏன் அண்ணா, நேத்து அப்படி நடந்துக்கிட்டீங்க. பாவம் அண்ணா திவ்யா அண்ணி.. ஏற்கனவே ரொம்பப் பயந்த சுபாவம் அவங்க. இதுல நீங்க நடந்து கொண்ட விதத்தில் பாவம் ரொம்ப மனசு கஷ்டப்பட்டுட்டாங்க. நேத்து ராத்திரி முழுதும் தூங்கவே இல்லை. அழுதுகிட்டே இருந்தாங்க தெரியுமா? நீங்களும் ஒன்னு புரிஞ்சுக்கனும்.. அவங்களுக்குப் பத்தொன்பது வயது தான் ஆகுது.. நம்ம எல்லாத்தையும் விட ரொம்பச் சின்னப் பெண்தான்னு.. ஆனால் எனக்கு நல்லா தெரியும் உங்களுக்கு அவங்கள எவ்வளவு பிடிக்கும்னு. இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க. இது யாருக்கு, ஏன் திவ்யா அண்ணிக்கே தெரியுமோ தெரியாதோ தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும்" என்று கூற அவளைத் திரும்பி பார்த்தவன் ஒன்றும் பேசாமல் காரை ஓட்டுவதிலேயே கவனம் ஆக இருக்க,
இதற்கு மேல் ஒரு அண்ணனிடம் ஒரு தங்கை எப்படி விளக்குவது என்று அவளுக்குத் தெரியவில்லை.
அருணோடு கூட அவள் கொஞ்சம் மனம் விட்டு பேசி விடுவாள்... ஆனால் அர்ஜுனிடம் இவ்வளவு பேசியதே அதிசயம்.
வாழ்க்கையில் இரண்டாவது முறையாக அதுவும் அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை, திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறாள்..
அவனும் இத்தனை நேரம் அவள் பேசியதற்குக் கோபப்படாமல் அமைதியாக இருந்ததே அவனின் குணத்திற்கு மாறு பட்டது என்று நினைத்தவள் தானும் மௌனமாகி விட, அடுத்த அரை மணி நேரப் பயணத்தில் காரை மருத்துவமனை வாயிலில் நிறுத்தினான் அர்ஜூன்..
தன்னை மறந்து யோசனையில் வந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவன் காரை நிறுத்தி இருப்பது மருத்துவமனையில் என்று.
அது வரை வினோத்தை மட்டுமே நினைத்து பயந்து கொண்டு வந்தவளை வேறு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்ற திகில் கவ்வி கொள்ள, ஒரு வேளை நேற்று அண்ணா அப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில் அண்ணிக்கு தான் ஏதோ ஆகிவிட்டதோ என்று நினைத்தவள் அர்ஜூனின் கையைப் பற்ற, அவளின் கையை அழுத்திக் கொடுத்தவன் "இறங்கு" என்றான்.
"அண்ணா, எனக்குப் பயமா இருக்கு, யாருக்கு? என்னாச்சு?"
பிடித்திருந்த அவள் கரத்தில் அழுத்தத்தைக் கூட்டியவன்.. "வா' என்று மட்டும் சொல்லி முன்னால் நடக்க.
ஒன்றும் புரியாமல் மனக் கலக்கத்துடன் விறுவிறுவென்று அவன் பின்னேயே வேகமாக நடந்தவள், அவசர சிகிச்சை பிரிவின் அருகில் அமர்ந்திருந்த அருணையும் தந்தையையும் பார்த்து ஓடிச் சென்று என்ன என்று விசாரிக்க,
"ஒன்னும் இல்லடா, மாம்க்கு மைல்ட் அட்டாக். பட் கரெக்டான நேரத்தில ஹாஸ்பிட்டலில் சேர்த்ததால இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று சொன்னார் பாலா.
அதிர்ந்தவள் ஓடிச் சென்று ஐ.சி.யுவின் கதவின் வழியே தன் அன்னையைப் பார்த்தவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது..
அவளை இறுக்கி அணைத்து பாலாவும் அருணும் ஆறுதல் சொல்ல சிறிது நேரத்தில் கண் விழித்த ஸ்ரீ மஹா வந்திருப்பதை அறிந்தவர் அவளுடன் உரையாடிவிட்டு அர்ஜூனை தேட, ஆனால் அதற்குள் அவன் மருத்துவமனையை விட்டுச் சென்றிருந்தான்.
மஹாவிடம் திவ்யாவின் கடிதத்தைப் பற்றியும் அவள் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதையும் ஸ்ரீ மூச்சு வாங்க எடுத்துரைக்க..
அர்ஜூனிற்குத் தன் மனைவியின் மீது அரும்பியிருந்த காதலையும், அதனை அவன் வெளிப்படுத்துவதில் ஏற்பட்டிருந்த தடுமாற்றத்தையும் முதல் முறை தன் அன்னைக்குத் தெளிவுபடுத்தினாள் மஹா.
கடினமான பாறையில் இருந்து கூட நீர் எடுத்துவிடலாம் ஆனால் தன் மகனின் இதயத்தில் இருந்து காதலா? தன் காதுகளையே அவரால் நம்ப முடியவில்லை.
அவன் தன் மனைவியை ரசிப்பதை அவரும் தான் கண்டிருந்தார். அவன் கண்கள் அவளை அதீத ஆர்வத்துடன் தேடுவதை அவரும் கண்கூடாகப் பார்த்திருந்தார்..
ஆனால் நேற்று அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட விதம், திவ்யாவின் மெல்லிய இதயத்தைக் குத்தி கிழித்த அவனின் கூரிய ஈட்டி போன்ற வார்த்தைகள், அவள் வீட்டை விட்டுச் சென்றுவிட்டது தெரிந்தும் பதறாமல் நிதானமாக இருக்கும் அவனின் நிலை என்று அவரின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாகச் சிதற அடித்திருந்தான் அர்ஜூன்.
"மாம், அர்ஜூன் அண்ணனைப் பத்தி எனக்கு மட்டும் தான் மாம் தெரியும்.. அவங்க எந்த அளவுக்கு அண்ணிய லவ் பண்ணுறாங்கன்னு" என்று மஹா தொடர, ஸ்ரீயால் நம்ப முடியவில்லை..
"அப்படி அவளை லவ் பண்றவன் ஏன் அந்த மாதிரி நடந்து கொண்டான்? என்று வேதனையுடன் கேள்வி எழுப்ப, "அது தான் எனக்கும் புரியலை மாம். ஆனால் எனக்கு நல்லா தெரியும். அண்ணா எப்பவோ திவ்யா அண்ணிய வைஃப்பா ஏத்துக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு. ஹி இஸ் இன் லவ் வித் ஹெர் [He is in love with her] " என்றாள் உறுதியாக.
ஸ்ரீக்கும் புரிந்தது. ஆனால் சிக்கலை உருவாக்கிய அவனே அதனைத் தீர்க்கவும் வேண்டும்.. அதற்கு அவன் தன் மனைவியைத் தானே தேடி செல்ல வேண்டும்.
அது வரை நாம் பொறுத்திருந்து தான் ஆக வேண்டும் என்று முடி வெடுத்தார்.
அன்று இரவு வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கிவிட்டவன் மறுநாள் மாலை வரை மருத்துவமனையில் தன் அன்னையுடன் கழித்துவிட்டு இரவு நெருங்கவும் வீட்டிற்குக் கிளம்பக் காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் மனதில் மஹா சொன்ன வார்த்தைகளே திரும்பத் திரும்ப ஒலித்தது.
வரும் வழியெல்லாம் தன்னவளின் நினைவுகளே அவனை அலைக்கழித்துக் கொண்டிருக்க, சுனாமியாய் ஆர்ப்பரிக்கும் தன் மனதை அடக்கவும் தெரியாமல், கொந்தளித்துக் கொண்டு இருக்கும் தன் உள்ளத்தை ஒருவரிடமும் வெளிப்படுத்தவும் முடியாமல், வீட்டிற்குப் போகவும் விருப்பம் இல்லாமல் காரிலேயே சுற்றியவன் வெகு நேரம் கழித்தே வீட்டிற்குச் சென்றான்.
காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையும் முன் அவன் கண்களில் முதலில் பட்டது திவ்யா நேற்று காலையில் வீட்டை விட்டுச் செல்வதற்கு முன் வாசலில் போட்டிருந்த அழகிய கோலம்.
மனமுழுவதும் கவலைகளையும் வேதனைகளையும் சுமந்திருந்தாலும் இதுவே தான் கடைசியாக இந்த வீட்டின் வாயிலில் போடும் கோலம் என்று ஏற்கனவே அவளாக முடிவெடுத்திருந்தாலும் சிறிதும் கசங்கி சிதறாத பிரமிக்கதக்க வகையில் அவள் போட்டிருந்த கோலம் அர்ஜூனிற்கு அவன் மனையாளின் பொறுமையையும் மென்மையான மனதையுமே உணர்த்தியது.
அன்று ஒரு நாள் அவள் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது தான் எதேச்சையாக வந்து விட, அவனைக் கவனிக்காதவள் புடவையை நன்கு இழுத்து சொறுகி கோலம் போடுவதில் கவனமாக இருக்க,
தன் இதயத்தைக் கலங்கடித்த அவளின் எழில் தோற்றமும், கணவனாகக் கர்வத்துடன் தான் ரசித்த அவளின் மார்பில் தவழ்ந்து ஊசலாடிக் கொண்டிருந்த தாலிக் கயிறும், வாழைத் தண்டு போல் பளபளத்த கால்களும், அதில் அவள் அணிந்திருந்த மெல்லிய வெள்ளி கொலுசுகளும் கண்களின் முன் தோன்ற, பிரமை தட்டிய நிலையில் சில நிமிடங்கள் வாயிலிலேயே நின்றவன் பின் தன் தலையைச் சிலுப்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்..
வீட்டிற்குள் நுழைத்தவனின் கண்கள் தன்னையும் அறியாமல் டைனிங் டேபிளுக்கும் சமையல் அறைக்கும் பயணிக்க, சிறு பெண் போல் வீட்டில் வளைய வந்த தன் மனையாளின் அழகிய தோற்றமும், குழந்தைத்தனத்துடன் அவள் கலகலத்து சிரிக்கும் பொழுது ஆழ விழும் கன்னக்குழிகளும் இன்று நிழலாய் தோன்ற,
நிழல் மட்டும் தொடர்ந்து வந்த
நிலமை மாறி போனதே
நிஜம் உன்னை நெருங்கி நிற்க
வயது கோலம் போடுதே
என்று அவளின் நிஜத்தைத் தேடி மனம் கனத்துப் போய்ப் பிசைய, தன்னிச்சையாக அவனின் கால்கள் அவனைச் சமையல் அறைக்குள் இட்டுச் சென்றது.
அங்கு மலரினும் மெல்லிய அவளின் மென்மையான இடையைத் தழுவியதும், அதனால் அவள் ஸ்தம்பித்துப் போய்க் கண்களை இறுக்க மூடி நின்றதும் அவளின் மென்மையான உடல் அவன் மீது தவழ்ந்து ஏற்பட்ட உணர்ச்சிகளும் கிளர்ச்சியைக் கிளப்பி அவன் சித்தத்தைத் தடுமாறச் செய்தது..
அவளின் மென்மையான ஸ்பரிசமும், எப்பொழுதும் மல்லிகை சூடியிருப்பதால் அதன் நறுமணம் கலந்த அவளின் பிரத்யேக வாசமும் வேட்கையைத் தூண்ட, தடுமாறிய மனமே உணர்த்தியது அவளின் மேல் உள்ள அளவுக் கடந்த காதலையும் தன் மனைவியின் அருகாமையைத் தேடும் தன் இதயத்தின் தவிப்பையும்.
அவளின் களங்கம் இல்லாத வெகுளித்தனமான உள்ளமும், தன்னைக் கண்ட ஒவ்வொரு நாளும் பதற்றத்துடன் தலை கவிழ்ந்த நிமிடங்களும், தான் அகன்றதும் தன் முதுகையே ஏக்கத்துடன் வெறித்துப் பார்த்திருந்த அவளின் விழிகளும் அர்ஜூனிற்கு நிமிடத்திற்கு ஒரு தரம் அவளில்லாத நிதர்சனத்தை உணர்த்தியது.
தன் அறைக்கு வந்தவன் மனதை இறுக்கி பிடித்துத் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு ஆழ்ந்த பெரு மூச்சைவிட்டவன் அப்படியே கட்டிலில் சாய்ந்தான்..
இதுவே நிதர்சனம். இதுவே யதார்த்தம்..
தன் குடும்பத்தாருடன் விவரம் தெரிந்த நாள் முதலே தள்ளி இருந்தவன். ஒருவரிடமும் மனம் விட்டு பேசியிராதவன்.. உள்ளம் திறந்து யாரிடமும் வெளிப்படையாகக் கலந்திராதவன்..
தன்னை சுற்றி ஒரு இரும்பு கோட்டைச் சுவரைக் கட்டி அதனை அனைத்து பக்கங்களிலும் இறுக்கப் பூட்டி தன் உள்ளத்தைத் தனக்குள்ளே சிறை வைத்து இருபத்தி ஏழு வயது வரை கடினமான இருதயத்துடனும், தொழிற்கள் மட்டுமே தன் உலகம் என்ற வெறியுடனும் வாழ பழகியிருந்தவன்.
அப்படிப் பட்ட அர்ஜூனின் இதயத்தில், புத்தியில், உணர்வில் நுழைந்து கலந்தவள் அவனை முதன் முதலில் கவர்ந்த திவ்யா..
இரும்பாகி இருந்த உள்ளத்தில் ஆத்மாவையே ஊடுருவிப் பிரவாகம் செய்து முளைத்தெழுந்த காதலை மலரச் செய்து அவனின் இதயத்தைத் தன் வசமாக்கியவள்.
மனையாளின் நினைவுகள் கலங்கடிக்கத் திணறிக் கொண்டிருந்தவன் பீரோவை திறந்து வெளியில் எடுத்தான் அவளுக்கு முதன் முதலாகத் தான் வாங்கிய பரிசினை.
அது வைரகற்களும் ரூபிக்களும் பதித்து ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒரு நகை செட்.
தங்க சங்கிலியில் ஐந்து ரோஜாப் பூக்கள் கொத்தாக இருப்பது போல் உள்ள ஒரு கழுத்துப் பதக்கம் (பெண்டெண்ட்).. ரோஜாப் பூக்கள் ரூபியிலும் ஆங்கங்கே வைரக்கற்களும் பதிக்கப் பட்டிருந்தது பார்ப்பவர்களின் கண்களை அத்தனை கவர்வதாக இருந்தது.
அதே டிசைனில் தோடுகளும், ஒற்றை ரோஜா உள்ள மோதிரமும், அழகாக வரிசையாக ரோஜா பூக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போல் டிசைன் செய்யப்பட்ட வளையல்களும் அவனின் முதல் பார்வையிலே கொள்ளை கொள்வதாக இருக்க, அமெரிக்காவில் இருந்து கிளம்பும் நேரம் தன்னவளுக்காகவே என்று வாங்கி வந்திருந்தான்.
கட்டிலில் தலையணையை நிமிர்த்தி வைத்து அதில் சாய்ந்தவாறு படுத்தவன் நகைகளைக் கையில் தடவிப் பார்த்தவனின் மனது அவளையே வண்ணத்துப்பூச்சியாய் சுற்றி சுற்றி வர மனம் கரைந்து காதலில் உருகத்தான் செய்தது..
இத்தனை காதல் எனக்கு இருக்கும் பொழுது உனக்கு மட்டும் ஏண்டி என் மேல் ஆசை இல்லாமல் போனது. உன் உள்ளம் சொல்லவில்லையா நான் உன்னை விரும்ப ஆரம்பித்து இருக்கிறேன் என்று.
பின் ஏன் நான் பார்க்கும் பொழுதெல்லாம் உன் முகம் செவ்வானமாய்ச் சிவந்தது..
என் பார்வையின் அர்த்தம் புரியாதவளுக்கு உன் வெட்கத்தின் அர்த்தம் கூடவா புரியவில்லை?
இத்தனை நாட்கள் பொறுத்திருந்தவளுக்கு நான் அழைத்த அன்று மட்டும் என் அறைக்கு வந்திருந்தால் என் மனதின் ஆசையை வெளிப்படுத்தி இருப்பேனே.
இது வரை தன் மன உணர்வுகளை யாரிடமும் வெளிப்படுத்தாமல் தனக்குள் அடக்கப் பழகியவனுக்கு முதல் முறை காதல் என்று மெல்லிய சுகமான உணர்வு தோன்றியும் வெளிப்படுத்தத் தெரியாமல் தவிக்கிறேனே...
எந்த பெண்ணிடமும் நெருங்கி பழகியிராதவனுக்குக் காதலை சொல்வது அத்தனை எளிதல்ல என்று விளக்கியிருப்பேனே..
ஏன் இப்படி என்னை விட்டு சென்றாய்? என்னிடம் வந்து விடுடி.. என்று உள்ளுக்குள் புலம்பியவனுக்கு அவன் உடலின் வேர் வரை ஊடுருவி அலை அலையாக அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த உணர்வு அவனுக்குப் புதிது.
இதுவரை அனுபவித்திராத அந்த உணர்வும் ஒரு வித உவகையே தர கம்பீரமான, எதற்கும் அசையாத அந்த ஆண்மகனையே அது அசைத்து தான் பார்த்தது..
அலைப் போல் பாய்ந்த தன் உள்ளத்தினை ஒரு முகப்படுத்தி எந்த ஒரு பெண்ணிடமும் சிக்காத தன் மனதை எப்படி இப்படி ஆட்டி படைக்கிறாள் தன் மனைவி என்று ஆராய்ந்தவன் அந்த நிமிடமே தன்னிடம் அவள் வரமாட்டாளா என்று ஏங்க ஆரம்பித்தான்..
அருகில் இல்லாத பொழுதும் அவன் கல் மனதை சுழல்காற்று போல் சுழற்றி அடித்த பூங்காற்றானவள் தன் கணவனின் உடலும் உள்ளமும் தன் இதயத்தை, தன் காதலை, தன் அருகாமையை, தன் அணைப்பை தேட செய்தாள்.
பணிவன்பு உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.. அவர்கள் உணர்ச்சிகள் மேம்படும் போது அவற்றின் வேகத்திற்கு இடம் கொடுக்காது சற்றே நிதானித்துத் தன் சுவாதீனத்தை இழக்காமல் தக்க வைத்துக் கொள்கிறார்கள்..
தங்களின் உணர்வுகளைத் தங்கள் வசப்படுத்திக் கொள்கிறார்கள்.
இதுவரை தன் மனைவியுடனான தன் இல்லற வாழ்க்கையில் தன் பண்பைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருந்தவன் "நான் பண்புள்ளவனா? பண்பில்லாதவனா? என் மனைவியை நான் எடுத்துக் கொள்ளப் பண்பு ஏதும் தேவை இருப்பதாகத் தெரியவில்லையே..”
“அவள் வரவில்லை என்றால் என்ன? அவளை என்னிடம் இழுத்து வருவதற்குக் கூட எனக்கு முழு உரிமை இருக்கிறது” என்று நினைத்தவன் நாளையே அவளை அழைக்கச் செல்வது என்று முடிவெடுத்தான்..
அவளாக வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றாலும் அவளைத் தூக்கி வருவது என்று நினைத்தவனின் முகத்தில் இளமுறுவல் தோன்ற, அதன் பின்னரே உறக்கமும் அவனை ஆரத்தழுவியது.
மறு நாள் விடிந்தும் விடியாமலும் வழக்கத்தை விடச் சீக்கிரமாக அலுவலகத்திற்குச் சென்றவன் அன்று செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் அதி விரைவாக முடித்தவன் கதிரை அழைத்தான்.
"கதிர், இன்னைக்கு வெளியில் போக வேண்டும். எப்படியும் திரும்ப வருவதற்கு நைட் ஆகிடும்.. அதனால இன்றைக்கு ஏதாவது முக்கிய மீட்டிங்ஸ் இல்லன்னா காண்டிராக்ட்ஸ் ஏதாவது சைன் பண்ணனும்மான்னு சீக்கிரம் செக் பண்ணி சொல்லுங்க.."
"யெஸ் சார், இதோ செக் பண்ணிடுறேன், சார். ஸ்ரீ மேடம் இப்போ எப்படி இருக்காங்க?"
"ஷீ இஸ் கெட்டிங் பெட்டர் [She is getting better] " என்றவன் மற்ற அலுவல்களைப் பற்றிச் சிறிது நேரம் விவாதித்தவன் கதிரை செல்ல அனுமதிக்க.
அதுவரை வேலைகளிலும், தான் செய்ய வேண்டிய அன்றைய அலுவல்களைப் பற்றி விவரிப்பதிலும் மூழ்கியிருந்த தன் MD யின் முகத்தில் சட்டென்று தோன்றிய பரவசத்தைப் பார்த்த கதிருக்கு ஏனோ அர்ஜூனின் முகத்தில் திடீரென்று புலப்பட்ட இந்த மகிழ்ச்சி ஆச்சரியத்தைக் கொடுத்ததே..
ஒரு வேளை ஸ்ரீ மேடத்தின் உடல் நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் சொன்னதினால் வந்த சந்தோஷமா அல்லது நமக்குத் தெரியாத அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் வேறு எதுவும் அவரைப் பரவசப்படுத்தியதால் வந்த மனமகிழ்ச்சியா?
இல்லை நமக்குத் தெரியாமல் ஏதாவது மிகப் பெரிய க்ளையண்ட்ஸோ அல்லது யாருக்குமே எளிதில் கிடைக்காத ப்ராஜக்ட் சக்ஸஸோ கிடைத்ததினால் வந்த உவகையோ.
மூளையே சூடாகும் வரை யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அர்ஜூனின் முகத்தில் தெரிந்த மாறுதல்களுக்கு எந்த ஒரு காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கேட்டால் சத்தம் போடுவார். கேட்காமலும் இருக்கமுடியவில்லை.. தன்னை அடக்க முடியாமல் மனதில் தோன்றியதைக் கேட்டும் விட்டான்.
"Anything special today sir?"
கணினியில் கண்களைப் பதித்திருந்த அர்ஜூன் அவனை நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் இல்லை என்று தலையை ஆட்டியவன் மறுபடியும் கணினியில் கண்களைப் பதித்தான்.
"அதானே, இவராவது அவர் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதாவது" என்று எண்ணிய கதிர் அதற்கு மேல் அங்கு நிற்பதற்கு வழியில்லாமல், அப்படியே நின்றாலும் அதற்கும் இவரிடம் இருந்து ஒரு முறைப்பே பரிசாகக் கிடைக்கும் என்று யோசித்தவாறே அறையை விட்டு வெளியேற.
அவன் சென்றதும் அவனை நிமிர்ந்து பார்த்த அர்ஜூனின் இதழ்களில் இள நகை விரிந்தது..
எத்தனை தான் அர்ஜூன் தனக்கு முன் மலைப் போல் குவிந்திருந்த அலுவல்களை விரைவாக முடிக்க முயற்சித்தாலும் அன்று மதியம் வரை வேலைகள் அவனை இழுத்துக்கொள்ள அவன் எதிர்பார்த்தது போல் உடனடியாகத் திவ்யாவின் ஊருக்கு கிளம்ப இயலவில்லை.
ஒரு வழியாக மதியத்திற்கு மேல் கிளம்பியவன் தன் தந்தையை அழைத்துத் தான் நேரம் சென்றே இன்று மருத்துவமனைக்கு வரமுடியும் என்றான். ஆனால் தான் திவ்யாவின் ஊருக்கு செல்வதையோ அல்லது அவளை அழைத்து வரப் போவதையோ பாலாவிடம் சொல்லாமல் வேண்டுமென்றே மறைத்து விட்டான்..
ஏனெனில் அருண் திவ்யா கடலூருக்கு சென்றிருக்கிறாள் என்று சொன்னதை வைத்து அவள் அங்குத் தான் இருப்பாள் என்று தெரியும் ஆனால் திவ்யாவின் நிலைமை அவனுக்கு இன்னும் புலப்படவில்லை..
அவளுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவளுடன் தான் இன்று சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்று உள்ளூர உறுதி எடுத்துக் கொண்டாலும் அவளை அழைத்து வரும் வரை ஒருவரிடமும் சொல்லாமல் செல்வதே சிறந்தது என்று முடிவெடுத்திருந்தான்.
காரைக் கிளப்பியவனின் உள்ளத்திலும் உடம்பிலும் புதுத் தெம்பு ஊற, மனம் பாரம் குறைந்து இலகுவாக உணர, தன் மனையாளை சந்திக்கும் ஆர்வத்துடன் இதயம் முழுவதும் நிரம்பி ததும்பி வழியும் காதலை சுமந்திருந்தவன் மூன்றாவது முறையாகத் தன்னிலை தாழ்ந்து தன்னவளின் தஞ்சம் தேடி சென்று கொண்டிருந்தான்.
முதல் முறை தன் பார்வையால், தன் விழிகளில் வழியும் காதலால் தன் தேடலை தன் மனம் கவர்ந்தவளுக்கு உணர்த்தியிருந்தான்..
இரண்டாம் முறை தன் மனம் திறந்து, தன் ஸ்பரிசத்தால், தன் அணைப்பால், தன் வாய் திறந்து அவளின் அருகாமையை இறைஞ்சியிருந்தான்.
இதோ மூன்றாம் முறை அவளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள, அவளை முழுவதுமாகத் தன் வசப்படுத்த, தன் கர்வம், ஆளுமை, அதிகாரம், அந்தஸ்து அனைத்தையும் அவளிடம் சமர்ப்பித்து அவளைத் தன்னுடன் அழைத்து வர நேரில் சென்று கொண்டிருக்கிறான்..
தன் கணவனின் மனதை, அவன் இதயத்தில் ஆர்ப்பரிக்கும் திரை கடலெனத் திரண்டிருந்த காதலை புரிந்து அவன் மனையாள் அவனுடன் இணைந்து வாழ வருவாளா??
இரண்டு முறை தன் கணவனின் அருகாமைக்கு அஞ்சி அவனின் ஆழ்ந்த நம்பிக்கையைக் குலைத்தவள், தன் அச்சத்தினாலும் கலக்கத்தினாலும் அவனை நிராகரித்தவள் இந்த முறை அவனின் கனவை நிறைவேற்றுவாளா?
ஆனால் இன்று தன் கணவன் தன்னுடனான இல்லற வாழ்க்கைக்கு, தங்களின் தாம்பத்தியத்திற்கு அச்சாரம் போடாமல் விடப்போவதில்லை என்ற முடிவோடு வந்து கொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லை அந்தப் பேதை.
தொடரும்..
அங்கு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அர்ஜூனின் மனதில் மீண்டும் மீண்டும் திவ்யாவின் கடிதமே அலைஅலையாய் மோதிக் கொண்டிருந்தது.
காரில் அமர்ந்து இருந்தவன் தன்னிச்சையாக அவளின் கடிதத்தை எடுத்து பார்க்க, கடிதத்தில் அங்கிங்கு அவளின் கண்ணீர் துளிகள் பட்டுக் காய்ந்திருந்த இடம் அவளின் அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் பின்னால் மறைந்து கொண்டிருந்த ஆத்மார்த்தமான அன்பையும், அவளின் அதிர்ந்து மருண்ட விழிகளுக்குள் தன் மேல் துளிர்த்து ஒளிந்து கொண்டிருந்த காதலையும் உணர்த்தியது.
திருமணம் நடந்தேறி இரு நாட்களிலேயே தான் அவள் இருக்கும் இடத்தில் இருக்க விரும்பாமல் தூரம் தள்ளி போயிருந்த போதும், பின் அவளைத் தன்னவளாக முழுவதும் அடைய காத்திருந்த நாளில் தன்னை அவள் நிராகரித்துவிட்டாள் என்ற ஆவேசத்தில் வெளிநாடு போயிருந்த பொழுதும் தோன்றாத வலி இதயத்தில் இப்பொழுது ஆழமாகத் தோன்றி குத்தி கிழித்தது.
அவளை விட்டு தான் விரும்பி சென்ற பொழுது தன்னைத் தாக்காத மனப் பாரம், அவளைத் தவிக்க விட்டு அவள் விழிகளில் வழியும் நீரை பார்த்த வண்ணம் தான் பயணித்த பொழுது ஏற்படாத மனக்கிலேசம், அவள் தன்னை விட்டு சென்றுவிட்டாள் என்றவுடன் அவன் உள்ளத்தையே அடி வரை ஆழ அழுத்தி அவனின் இதயம் தன் துடிப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்வது போல் இருந்தது.
அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் மஹாவை அழைத்து வர முடிவு செய்தவன் அலை பேசியில் அவளை அழைத்து.
"மஹா, ஐ ஆம் கமிங் டு பிக் யூ அப் இன் தேர்டி மினிட்ஸ். [Maha, I am coming to pick you up in thirty minutes]" என்று மட்டும் சொன்னவன் வேறு ஒன்றும் சொல்லவில்லை.
மற்ற அனைவரின் பார்வையிலும் அவன் ஏதோ ஒரு குற்றவாளிப் போலவும் எதிரியைப் போலவும் தென்படுவதில் அவன் மனமும் அடிபட்டுத் தான் போனது. தன்னையும் அறியாமல் முதல் முறை தன் தங்கையிடம் ஆறுதலைத் தேடிச் சென்றான்.
அங்கு வகுப்பறையில் அமர்ந்திருந்த மஹாவிற்கோ முதலில் அலை பேசியில் அர்ஜூனின் எண்ணை பார்த்ததுமே அடி வயிறு கலங்கியது.
ஏனெனில் வீட்டில் நேருக்குநேராகப் பேச நேரிடும் பொழுதே தன் தங்கையிடம் கூட வார்த்தைகளை அளந்து பேசுபவன்.
அப்பேற்பட்ட அர்ஜூன் அண்ணன் அழைக்கிறார் என்று திகைத்து போய் அழைப்பை எடுத்தவளின் அதிர்ச்சியைப் பன்மடங்கு அதிகரிப்பது போல் இன்னும் அரை மணி நேரத்தில் கல்லூரிக்கு வருகிறேன் என்று சொன்னால்!!!!!
"அர்ஜூன் அண்ணா நம்மைப் பிக்கப் செய்ய வருகிறார்களா? அதுவும் இந்த நேரத்திலா?" என்று வெலவெலத்து போனாள்.
குரல் தடுமாற. "என்னாச்சு அண்ணா? ஏதாவது பிரச்சனையா?" எனவும், "நத்திங் மஹா. யூ ஜஸ்ட் பி ரெடி [Nothing Maha. You just be ready]" என்றான்.
'எதற்கு வருகிறார்? அதுவும் காலேஜிற்கே. ஒரு வேளை அன்று மொட்டை மாடியில் வினோத் என்னிடம் நடந்து கொண்டதை யாராவது பார்த்து அண்ணனிடம் சொல்லி இருப்பார்களோ?' என்ற நினைப்பே அவளுக்குக் கதி கலங்கியது.
'ஐயோ! அர்ஜூன் அண்ணனுக்கு மட்டும் அந்த விஷயம் தெரிந்து இருந்தால் அவ்வளவு தான். அண்ணியின் அண்ணன் என்று கூடப் பார்க்க மாட்டாரே. இதில் ஏற்கனவே அண்ணியின் மேல் கோபமாக இருப்பவர். இப்பொழுது இது வேறு தெரிந்தால் வேறு வினையே வேண்டாம்' என்று கலங்கியவள் உலகில் உள்ள எல்லாக் கடவுள்களிடமும் வேண்டிக் கொண்டு அர்ஜூனிற்காகக் கல்லூரியின் வாயிலில் வந்து காத்திருக்க.
இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று அவள் வகுப்பு நேரத்தில் கல்லூரியின் நுழை வாயிலில் யாருக்காகவோ காத்திருப்பது தன் தோழர்களின் மூலம் கோகுலின் செவிகளுக்குப் போக, 'அவள் யாருக்காகக் காத்திருக்கிறாள்? ஒரு வேளை அவளுடைய பாய் ஃப்ரெண்டா? அது எப்படி எனக்குத் தெரியாமல் அவளுக்குப் பாய் ஃப்ரெண்ட்' என்று மண்டைக்குள் குடைய, வேகமாகத் தன் வகுப்பறையை விட்டு வந்தவனுக்கு அங்கு அவள் தனித்துக் காத்திருப்பதைப் பார்த்ததும் கோபத்தில் முகம் விகாரமாக மாறியது.
'இத்தனை நாள் காத்திருந்தவனை விட்டு நேற்று வந்தவனைத் தேடுகிறாளோ?. அப்போ நான் என்ன இலவு காத்த கிளியா?' என்று உள்ளம் ஆத்திரத்தில் கொந்தளிக்க அவளுக்குத் தெரியாமல் மறைந்து நின்று கவனித்தான்.
அவள் வகுப்பறையை விட்டு திடீரென்று வெளியே சென்றதும் அவளைத் தொடர்ந்து வந்த தோழிகளும், "என்னடி, யாருக்காகடி வெயிட் பண்ற? எங்களுக்குச் சொல்லவேயில்லேயே?" என்று கிண்டல் செய்ய, அவர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல மஹா வாயைத் திறக்கும் முன்னே அதி வேகமாகக் காரை ஓட்டி வந்த அர்ஜூன் தன் தங்கைக்கு அருகில் வந்து நிறுத்தினான்.
அர்ஜூனின் காரைப் பார்த்ததுமே மஹாவின் கை கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.
'நிச்சயம் இது வினோத் சம்மந்தப்பட்ட விஷயமாகத் தான் இருக்க வேண்டும். அவர் காரை ஓட்டி வந்த விதமும், சடாரென்று ப்ரேக் போட்டு என் அருகில் காரை நிறுத்திய வேகமுமே சொல்லியதே அவரின் கோபத்தை' என்று கதிகலங்கியவள் காரையே பார்த்திருக்க,
காரின் கருப்பு கண்ணாடியை இறக்கி விட்டவன் அவளைப் பார்த்தவாறே ஏறு என்பது போல் கதவை திறக்க, அது வரை அவளுடன் நின்றிருந்த அவளின் தோழிகள் ஸன் க்ளாஸ் போட்டு கம்பீரமாகவும் ஆணழகனாகவும் ஆளுமையுடனும் இருந்த அவனின் அழகை பார்த்து நிலைக்குலைந்தவர்கள் படபடப்புடன்.
"ஹே மஹா, யாருடி இந்த ஹேண்ட்ஸம்????" என்று அலறினார்கள்.
"டீ, அது என் அண்ணன் டீ.." என்று அவர்களிடம் கத்தியவள் காரில் ஏறப் போக அவளின் கையை இழுத்த அவளின் தோழிகளின் ஒருத்தி.
"ஏண்டி, இப்படி ஹீரோ மாதிரி ஒரு அண்ணன் இருப்பதா சொல்லவே இல்லைடி.. ஏன்? நாங்க சைட் அடிக்கக் கூடாதுன்னு மறைச்சிட்டியா????" எனவும், கிழிஞ்சது போ, இது மட்டும் அர்ஜூன் அண்ணா காதில் விழுந்ததோ தொலைந்தோம் என்று நினைத்தவள்.
"விடுங்கடி, நாளைக்குப் பேசுறேன். எங்க அண்ணனே காலேஜுக்கு வந்திருக்காங்கன்னா ஏதோ பெரிய பிரச்சனைன்னு அர்த்தம்.. ப்ளீஸ் நாளைக்குப் பார்க்கலாம்" என்றவள் காரில் ஏறினாள்.
அர்ஜூனைப் பார்த்ததும் அவளுடைய பாய் ஃப்ரெண்டாகத் தான் இருக்கும் என்று நினைத்த கோகுலுக்கு அவனின் அழகும் கம்பீரமும் நிச்சயம் தனக்கு இல்லை என்று உரைக்க,
"அவன் எப்படி இருந்தால் என்னடி, நீ எனக்குத் தான்" என்று பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தவன், மஹா தன் தோழிகளிடம் "அர்ஜூன் என் அண்ணா" என்று சொன்னதுமே ஒரு பக்கம் நிம்மதி அடைந்தாலும், அர்ஜூன் வந்த வேகமும், அவனின் கம்பீர தோரணையும் அவன் மனதில் கிலி உண்டாக்க தவறவில்லை.
மறைந்து நின்றவன் அர்ஜுனின் கண்களில் படாதவாறு மேலும் தன்னை மறைத்துக் கொண்டான்..
காரில் ஏறியதில் இருந்து அர்ஜூன் ஏதாவது பேசுவான் என்று அவன் முகத்தையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு மஹா வர, ஆனால் அவன் வாய்த் திறப்பதாகத் தெரியவில்லை.
அதற்கு மேல் பொறுக்க மாட்டாது ஒரு வழியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
"என்னாச்சு அண்ணா? ஏன் திடீர்னு, என்னன்னு சொல்லுங்கண்ணா.. எனக்கு என்னமோ நீங்க அமைதியா வரதப் பார்த்தா பயமா இருக்கு" எனவும், "ஒன்னும் இல்ல.. பேசாம வா" என்றான்.
மீண்டும் நிசப்தம்.
அச்சத்தில் படப்படப்பு வர, இதயம் வேறு அதற்கு ஏற்றார் போல் தன் துடிப்பை பல மடங்கு அதிகரிக்கச் சிறிது நேரம் அமைதியாக வந்தவளால் அதற்கு மேல் மௌனமாக இருக்க இயலவில்லை..
காரினுள் குடிக்கொண்டிருந்த அமைதியை கிழிக்கத் திவ்யாவை பற்றிப் பேசத் துவங்கினாள்.
அர்ஜூன் எதிர்பார்த்ததும் அது தானே.
ஒற்றை விரல் அசைவில் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் கர்ஜிக்கும் சிங்கம் இன்று சிறு பிள்ளை போல் தன் சின்னத் தங்கையிடம் ஆறுதலை தேடி வந்திருக்கிறது..
ஆனால் அவனின் இயற்கையான குணம் தன் மனதில் இருப்பதை வாய் திறந்து வெளிப்படையாகச் சொல்ல விடவில்லை..
"ஏன் அண்ணா, நேத்து அப்படி நடந்துக்கிட்டீங்க. பாவம் அண்ணா திவ்யா அண்ணி.. ஏற்கனவே ரொம்பப் பயந்த சுபாவம் அவங்க. இதுல நீங்க நடந்து கொண்ட விதத்தில் பாவம் ரொம்ப மனசு கஷ்டப்பட்டுட்டாங்க. நேத்து ராத்திரி முழுதும் தூங்கவே இல்லை. அழுதுகிட்டே இருந்தாங்க தெரியுமா? நீங்களும் ஒன்னு புரிஞ்சுக்கனும்.. அவங்களுக்குப் பத்தொன்பது வயது தான் ஆகுது.. நம்ம எல்லாத்தையும் விட ரொம்பச் சின்னப் பெண்தான்னு.. ஆனால் எனக்கு நல்லா தெரியும் உங்களுக்கு அவங்கள எவ்வளவு பிடிக்கும்னு. இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க. இது யாருக்கு, ஏன் திவ்யா அண்ணிக்கே தெரியுமோ தெரியாதோ தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும்" என்று கூற அவளைத் திரும்பி பார்த்தவன் ஒன்றும் பேசாமல் காரை ஓட்டுவதிலேயே கவனம் ஆக இருக்க,
இதற்கு மேல் ஒரு அண்ணனிடம் ஒரு தங்கை எப்படி விளக்குவது என்று அவளுக்குத் தெரியவில்லை.
அருணோடு கூட அவள் கொஞ்சம் மனம் விட்டு பேசி விடுவாள்... ஆனால் அர்ஜுனிடம் இவ்வளவு பேசியதே அதிசயம்.
வாழ்க்கையில் இரண்டாவது முறையாக அதுவும் அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை, திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறாள்..
அவனும் இத்தனை நேரம் அவள் பேசியதற்குக் கோபப்படாமல் அமைதியாக இருந்ததே அவனின் குணத்திற்கு மாறு பட்டது என்று நினைத்தவள் தானும் மௌனமாகி விட, அடுத்த அரை மணி நேரப் பயணத்தில் காரை மருத்துவமனை வாயிலில் நிறுத்தினான் அர்ஜூன்..
தன்னை மறந்து யோசனையில் வந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவன் காரை நிறுத்தி இருப்பது மருத்துவமனையில் என்று.
அது வரை வினோத்தை மட்டுமே நினைத்து பயந்து கொண்டு வந்தவளை வேறு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்ற திகில் கவ்வி கொள்ள, ஒரு வேளை நேற்று அண்ணா அப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில் அண்ணிக்கு தான் ஏதோ ஆகிவிட்டதோ என்று நினைத்தவள் அர்ஜூனின் கையைப் பற்ற, அவளின் கையை அழுத்திக் கொடுத்தவன் "இறங்கு" என்றான்.
"அண்ணா, எனக்குப் பயமா இருக்கு, யாருக்கு? என்னாச்சு?"
பிடித்திருந்த அவள் கரத்தில் அழுத்தத்தைக் கூட்டியவன்.. "வா' என்று மட்டும் சொல்லி முன்னால் நடக்க.
ஒன்றும் புரியாமல் மனக் கலக்கத்துடன் விறுவிறுவென்று அவன் பின்னேயே வேகமாக நடந்தவள், அவசர சிகிச்சை பிரிவின் அருகில் அமர்ந்திருந்த அருணையும் தந்தையையும் பார்த்து ஓடிச் சென்று என்ன என்று விசாரிக்க,
"ஒன்னும் இல்லடா, மாம்க்கு மைல்ட் அட்டாக். பட் கரெக்டான நேரத்தில ஹாஸ்பிட்டலில் சேர்த்ததால இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று சொன்னார் பாலா.
அதிர்ந்தவள் ஓடிச் சென்று ஐ.சி.யுவின் கதவின் வழியே தன் அன்னையைப் பார்த்தவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது..
அவளை இறுக்கி அணைத்து பாலாவும் அருணும் ஆறுதல் சொல்ல சிறிது நேரத்தில் கண் விழித்த ஸ்ரீ மஹா வந்திருப்பதை அறிந்தவர் அவளுடன் உரையாடிவிட்டு அர்ஜூனை தேட, ஆனால் அதற்குள் அவன் மருத்துவமனையை விட்டுச் சென்றிருந்தான்.
மஹாவிடம் திவ்யாவின் கடிதத்தைப் பற்றியும் அவள் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதையும் ஸ்ரீ மூச்சு வாங்க எடுத்துரைக்க..
அர்ஜூனிற்குத் தன் மனைவியின் மீது அரும்பியிருந்த காதலையும், அதனை அவன் வெளிப்படுத்துவதில் ஏற்பட்டிருந்த தடுமாற்றத்தையும் முதல் முறை தன் அன்னைக்குத் தெளிவுபடுத்தினாள் மஹா.
கடினமான பாறையில் இருந்து கூட நீர் எடுத்துவிடலாம் ஆனால் தன் மகனின் இதயத்தில் இருந்து காதலா? தன் காதுகளையே அவரால் நம்ப முடியவில்லை.
அவன் தன் மனைவியை ரசிப்பதை அவரும் தான் கண்டிருந்தார். அவன் கண்கள் அவளை அதீத ஆர்வத்துடன் தேடுவதை அவரும் கண்கூடாகப் பார்த்திருந்தார்..
ஆனால் நேற்று அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட விதம், திவ்யாவின் மெல்லிய இதயத்தைக் குத்தி கிழித்த அவனின் கூரிய ஈட்டி போன்ற வார்த்தைகள், அவள் வீட்டை விட்டுச் சென்றுவிட்டது தெரிந்தும் பதறாமல் நிதானமாக இருக்கும் அவனின் நிலை என்று அவரின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாகச் சிதற அடித்திருந்தான் அர்ஜூன்.
"மாம், அர்ஜூன் அண்ணனைப் பத்தி எனக்கு மட்டும் தான் மாம் தெரியும்.. அவங்க எந்த அளவுக்கு அண்ணிய லவ் பண்ணுறாங்கன்னு" என்று மஹா தொடர, ஸ்ரீயால் நம்ப முடியவில்லை..
"அப்படி அவளை லவ் பண்றவன் ஏன் அந்த மாதிரி நடந்து கொண்டான்? என்று வேதனையுடன் கேள்வி எழுப்ப, "அது தான் எனக்கும் புரியலை மாம். ஆனால் எனக்கு நல்லா தெரியும். அண்ணா எப்பவோ திவ்யா அண்ணிய வைஃப்பா ஏத்துக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு. ஹி இஸ் இன் லவ் வித் ஹெர் [He is in love with her] " என்றாள் உறுதியாக.
ஸ்ரீக்கும் புரிந்தது. ஆனால் சிக்கலை உருவாக்கிய அவனே அதனைத் தீர்க்கவும் வேண்டும்.. அதற்கு அவன் தன் மனைவியைத் தானே தேடி செல்ல வேண்டும்.
அது வரை நாம் பொறுத்திருந்து தான் ஆக வேண்டும் என்று முடி வெடுத்தார்.
அன்று இரவு வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கிவிட்டவன் மறுநாள் மாலை வரை மருத்துவமனையில் தன் அன்னையுடன் கழித்துவிட்டு இரவு நெருங்கவும் வீட்டிற்குக் கிளம்பக் காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் மனதில் மஹா சொன்ன வார்த்தைகளே திரும்பத் திரும்ப ஒலித்தது.
வரும் வழியெல்லாம் தன்னவளின் நினைவுகளே அவனை அலைக்கழித்துக் கொண்டிருக்க, சுனாமியாய் ஆர்ப்பரிக்கும் தன் மனதை அடக்கவும் தெரியாமல், கொந்தளித்துக் கொண்டு இருக்கும் தன் உள்ளத்தை ஒருவரிடமும் வெளிப்படுத்தவும் முடியாமல், வீட்டிற்குப் போகவும் விருப்பம் இல்லாமல் காரிலேயே சுற்றியவன் வெகு நேரம் கழித்தே வீட்டிற்குச் சென்றான்.
காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையும் முன் அவன் கண்களில் முதலில் பட்டது திவ்யா நேற்று காலையில் வீட்டை விட்டுச் செல்வதற்கு முன் வாசலில் போட்டிருந்த அழகிய கோலம்.
மனமுழுவதும் கவலைகளையும் வேதனைகளையும் சுமந்திருந்தாலும் இதுவே தான் கடைசியாக இந்த வீட்டின் வாயிலில் போடும் கோலம் என்று ஏற்கனவே அவளாக முடிவெடுத்திருந்தாலும் சிறிதும் கசங்கி சிதறாத பிரமிக்கதக்க வகையில் அவள் போட்டிருந்த கோலம் அர்ஜூனிற்கு அவன் மனையாளின் பொறுமையையும் மென்மையான மனதையுமே உணர்த்தியது.
அன்று ஒரு நாள் அவள் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது தான் எதேச்சையாக வந்து விட, அவனைக் கவனிக்காதவள் புடவையை நன்கு இழுத்து சொறுகி கோலம் போடுவதில் கவனமாக இருக்க,
தன் இதயத்தைக் கலங்கடித்த அவளின் எழில் தோற்றமும், கணவனாகக் கர்வத்துடன் தான் ரசித்த அவளின் மார்பில் தவழ்ந்து ஊசலாடிக் கொண்டிருந்த தாலிக் கயிறும், வாழைத் தண்டு போல் பளபளத்த கால்களும், அதில் அவள் அணிந்திருந்த மெல்லிய வெள்ளி கொலுசுகளும் கண்களின் முன் தோன்ற, பிரமை தட்டிய நிலையில் சில நிமிடங்கள் வாயிலிலேயே நின்றவன் பின் தன் தலையைச் சிலுப்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்..
வீட்டிற்குள் நுழைத்தவனின் கண்கள் தன்னையும் அறியாமல் டைனிங் டேபிளுக்கும் சமையல் அறைக்கும் பயணிக்க, சிறு பெண் போல் வீட்டில் வளைய வந்த தன் மனையாளின் அழகிய தோற்றமும், குழந்தைத்தனத்துடன் அவள் கலகலத்து சிரிக்கும் பொழுது ஆழ விழும் கன்னக்குழிகளும் இன்று நிழலாய் தோன்ற,
நிழல் மட்டும் தொடர்ந்து வந்த
நிலமை மாறி போனதே
நிஜம் உன்னை நெருங்கி நிற்க
வயது கோலம் போடுதே
என்று அவளின் நிஜத்தைத் தேடி மனம் கனத்துப் போய்ப் பிசைய, தன்னிச்சையாக அவனின் கால்கள் அவனைச் சமையல் அறைக்குள் இட்டுச் சென்றது.
அங்கு மலரினும் மெல்லிய அவளின் மென்மையான இடையைத் தழுவியதும், அதனால் அவள் ஸ்தம்பித்துப் போய்க் கண்களை இறுக்க மூடி நின்றதும் அவளின் மென்மையான உடல் அவன் மீது தவழ்ந்து ஏற்பட்ட உணர்ச்சிகளும் கிளர்ச்சியைக் கிளப்பி அவன் சித்தத்தைத் தடுமாறச் செய்தது..
அவளின் மென்மையான ஸ்பரிசமும், எப்பொழுதும் மல்லிகை சூடியிருப்பதால் அதன் நறுமணம் கலந்த அவளின் பிரத்யேக வாசமும் வேட்கையைத் தூண்ட, தடுமாறிய மனமே உணர்த்தியது அவளின் மேல் உள்ள அளவுக் கடந்த காதலையும் தன் மனைவியின் அருகாமையைத் தேடும் தன் இதயத்தின் தவிப்பையும்.
அவளின் களங்கம் இல்லாத வெகுளித்தனமான உள்ளமும், தன்னைக் கண்ட ஒவ்வொரு நாளும் பதற்றத்துடன் தலை கவிழ்ந்த நிமிடங்களும், தான் அகன்றதும் தன் முதுகையே ஏக்கத்துடன் வெறித்துப் பார்த்திருந்த அவளின் விழிகளும் அர்ஜூனிற்கு நிமிடத்திற்கு ஒரு தரம் அவளில்லாத நிதர்சனத்தை உணர்த்தியது.
தன் அறைக்கு வந்தவன் மனதை இறுக்கி பிடித்துத் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு ஆழ்ந்த பெரு மூச்சைவிட்டவன் அப்படியே கட்டிலில் சாய்ந்தான்..
இதுவே நிதர்சனம். இதுவே யதார்த்தம்..
தன் குடும்பத்தாருடன் விவரம் தெரிந்த நாள் முதலே தள்ளி இருந்தவன். ஒருவரிடமும் மனம் விட்டு பேசியிராதவன்.. உள்ளம் திறந்து யாரிடமும் வெளிப்படையாகக் கலந்திராதவன்..
தன்னை சுற்றி ஒரு இரும்பு கோட்டைச் சுவரைக் கட்டி அதனை அனைத்து பக்கங்களிலும் இறுக்கப் பூட்டி தன் உள்ளத்தைத் தனக்குள்ளே சிறை வைத்து இருபத்தி ஏழு வயது வரை கடினமான இருதயத்துடனும், தொழிற்கள் மட்டுமே தன் உலகம் என்ற வெறியுடனும் வாழ பழகியிருந்தவன்.
அப்படிப் பட்ட அர்ஜூனின் இதயத்தில், புத்தியில், உணர்வில் நுழைந்து கலந்தவள் அவனை முதன் முதலில் கவர்ந்த திவ்யா..
இரும்பாகி இருந்த உள்ளத்தில் ஆத்மாவையே ஊடுருவிப் பிரவாகம் செய்து முளைத்தெழுந்த காதலை மலரச் செய்து அவனின் இதயத்தைத் தன் வசமாக்கியவள்.
மனையாளின் நினைவுகள் கலங்கடிக்கத் திணறிக் கொண்டிருந்தவன் பீரோவை திறந்து வெளியில் எடுத்தான் அவளுக்கு முதன் முதலாகத் தான் வாங்கிய பரிசினை.
அது வைரகற்களும் ரூபிக்களும் பதித்து ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒரு நகை செட்.
தங்க சங்கிலியில் ஐந்து ரோஜாப் பூக்கள் கொத்தாக இருப்பது போல் உள்ள ஒரு கழுத்துப் பதக்கம் (பெண்டெண்ட்).. ரோஜாப் பூக்கள் ரூபியிலும் ஆங்கங்கே வைரக்கற்களும் பதிக்கப் பட்டிருந்தது பார்ப்பவர்களின் கண்களை அத்தனை கவர்வதாக இருந்தது.
அதே டிசைனில் தோடுகளும், ஒற்றை ரோஜா உள்ள மோதிரமும், அழகாக வரிசையாக ரோஜா பூக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போல் டிசைன் செய்யப்பட்ட வளையல்களும் அவனின் முதல் பார்வையிலே கொள்ளை கொள்வதாக இருக்க, அமெரிக்காவில் இருந்து கிளம்பும் நேரம் தன்னவளுக்காகவே என்று வாங்கி வந்திருந்தான்.
கட்டிலில் தலையணையை நிமிர்த்தி வைத்து அதில் சாய்ந்தவாறு படுத்தவன் நகைகளைக் கையில் தடவிப் பார்த்தவனின் மனது அவளையே வண்ணத்துப்பூச்சியாய் சுற்றி சுற்றி வர மனம் கரைந்து காதலில் உருகத்தான் செய்தது..
இத்தனை காதல் எனக்கு இருக்கும் பொழுது உனக்கு மட்டும் ஏண்டி என் மேல் ஆசை இல்லாமல் போனது. உன் உள்ளம் சொல்லவில்லையா நான் உன்னை விரும்ப ஆரம்பித்து இருக்கிறேன் என்று.
பின் ஏன் நான் பார்க்கும் பொழுதெல்லாம் உன் முகம் செவ்வானமாய்ச் சிவந்தது..
என் பார்வையின் அர்த்தம் புரியாதவளுக்கு உன் வெட்கத்தின் அர்த்தம் கூடவா புரியவில்லை?
இத்தனை நாட்கள் பொறுத்திருந்தவளுக்கு நான் அழைத்த அன்று மட்டும் என் அறைக்கு வந்திருந்தால் என் மனதின் ஆசையை வெளிப்படுத்தி இருப்பேனே.
இது வரை தன் மன உணர்வுகளை யாரிடமும் வெளிப்படுத்தாமல் தனக்குள் அடக்கப் பழகியவனுக்கு முதல் முறை காதல் என்று மெல்லிய சுகமான உணர்வு தோன்றியும் வெளிப்படுத்தத் தெரியாமல் தவிக்கிறேனே...
எந்த பெண்ணிடமும் நெருங்கி பழகியிராதவனுக்குக் காதலை சொல்வது அத்தனை எளிதல்ல என்று விளக்கியிருப்பேனே..
ஏன் இப்படி என்னை விட்டு சென்றாய்? என்னிடம் வந்து விடுடி.. என்று உள்ளுக்குள் புலம்பியவனுக்கு அவன் உடலின் வேர் வரை ஊடுருவி அலை அலையாக அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த உணர்வு அவனுக்குப் புதிது.
இதுவரை அனுபவித்திராத அந்த உணர்வும் ஒரு வித உவகையே தர கம்பீரமான, எதற்கும் அசையாத அந்த ஆண்மகனையே அது அசைத்து தான் பார்த்தது..
அலைப் போல் பாய்ந்த தன் உள்ளத்தினை ஒரு முகப்படுத்தி எந்த ஒரு பெண்ணிடமும் சிக்காத தன் மனதை எப்படி இப்படி ஆட்டி படைக்கிறாள் தன் மனைவி என்று ஆராய்ந்தவன் அந்த நிமிடமே தன்னிடம் அவள் வரமாட்டாளா என்று ஏங்க ஆரம்பித்தான்..
அருகில் இல்லாத பொழுதும் அவன் கல் மனதை சுழல்காற்று போல் சுழற்றி அடித்த பூங்காற்றானவள் தன் கணவனின் உடலும் உள்ளமும் தன் இதயத்தை, தன் காதலை, தன் அருகாமையை, தன் அணைப்பை தேட செய்தாள்.
பணிவன்பு உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.. அவர்கள் உணர்ச்சிகள் மேம்படும் போது அவற்றின் வேகத்திற்கு இடம் கொடுக்காது சற்றே நிதானித்துத் தன் சுவாதீனத்தை இழக்காமல் தக்க வைத்துக் கொள்கிறார்கள்..
தங்களின் உணர்வுகளைத் தங்கள் வசப்படுத்திக் கொள்கிறார்கள்.
இதுவரை தன் மனைவியுடனான தன் இல்லற வாழ்க்கையில் தன் பண்பைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருந்தவன் "நான் பண்புள்ளவனா? பண்பில்லாதவனா? என் மனைவியை நான் எடுத்துக் கொள்ளப் பண்பு ஏதும் தேவை இருப்பதாகத் தெரியவில்லையே..”
“அவள் வரவில்லை என்றால் என்ன? அவளை என்னிடம் இழுத்து வருவதற்குக் கூட எனக்கு முழு உரிமை இருக்கிறது” என்று நினைத்தவன் நாளையே அவளை அழைக்கச் செல்வது என்று முடிவெடுத்தான்..
அவளாக வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றாலும் அவளைத் தூக்கி வருவது என்று நினைத்தவனின் முகத்தில் இளமுறுவல் தோன்ற, அதன் பின்னரே உறக்கமும் அவனை ஆரத்தழுவியது.
மறு நாள் விடிந்தும் விடியாமலும் வழக்கத்தை விடச் சீக்கிரமாக அலுவலகத்திற்குச் சென்றவன் அன்று செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் அதி விரைவாக முடித்தவன் கதிரை அழைத்தான்.
"கதிர், இன்னைக்கு வெளியில் போக வேண்டும். எப்படியும் திரும்ப வருவதற்கு நைட் ஆகிடும்.. அதனால இன்றைக்கு ஏதாவது முக்கிய மீட்டிங்ஸ் இல்லன்னா காண்டிராக்ட்ஸ் ஏதாவது சைன் பண்ணனும்மான்னு சீக்கிரம் செக் பண்ணி சொல்லுங்க.."
"யெஸ் சார், இதோ செக் பண்ணிடுறேன், சார். ஸ்ரீ மேடம் இப்போ எப்படி இருக்காங்க?"
"ஷீ இஸ் கெட்டிங் பெட்டர் [She is getting better] " என்றவன் மற்ற அலுவல்களைப் பற்றிச் சிறிது நேரம் விவாதித்தவன் கதிரை செல்ல அனுமதிக்க.
அதுவரை வேலைகளிலும், தான் செய்ய வேண்டிய அன்றைய அலுவல்களைப் பற்றி விவரிப்பதிலும் மூழ்கியிருந்த தன் MD யின் முகத்தில் சட்டென்று தோன்றிய பரவசத்தைப் பார்த்த கதிருக்கு ஏனோ அர்ஜூனின் முகத்தில் திடீரென்று புலப்பட்ட இந்த மகிழ்ச்சி ஆச்சரியத்தைக் கொடுத்ததே..
ஒரு வேளை ஸ்ரீ மேடத்தின் உடல் நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் சொன்னதினால் வந்த சந்தோஷமா அல்லது நமக்குத் தெரியாத அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் வேறு எதுவும் அவரைப் பரவசப்படுத்தியதால் வந்த மனமகிழ்ச்சியா?
இல்லை நமக்குத் தெரியாமல் ஏதாவது மிகப் பெரிய க்ளையண்ட்ஸோ அல்லது யாருக்குமே எளிதில் கிடைக்காத ப்ராஜக்ட் சக்ஸஸோ கிடைத்ததினால் வந்த உவகையோ.
மூளையே சூடாகும் வரை யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அர்ஜூனின் முகத்தில் தெரிந்த மாறுதல்களுக்கு எந்த ஒரு காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கேட்டால் சத்தம் போடுவார். கேட்காமலும் இருக்கமுடியவில்லை.. தன்னை அடக்க முடியாமல் மனதில் தோன்றியதைக் கேட்டும் விட்டான்.
"Anything special today sir?"
கணினியில் கண்களைப் பதித்திருந்த அர்ஜூன் அவனை நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் இல்லை என்று தலையை ஆட்டியவன் மறுபடியும் கணினியில் கண்களைப் பதித்தான்.
"அதானே, இவராவது அவர் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதாவது" என்று எண்ணிய கதிர் அதற்கு மேல் அங்கு நிற்பதற்கு வழியில்லாமல், அப்படியே நின்றாலும் அதற்கும் இவரிடம் இருந்து ஒரு முறைப்பே பரிசாகக் கிடைக்கும் என்று யோசித்தவாறே அறையை விட்டு வெளியேற.
அவன் சென்றதும் அவனை நிமிர்ந்து பார்த்த அர்ஜூனின் இதழ்களில் இள நகை விரிந்தது..
எத்தனை தான் அர்ஜூன் தனக்கு முன் மலைப் போல் குவிந்திருந்த அலுவல்களை விரைவாக முடிக்க முயற்சித்தாலும் அன்று மதியம் வரை வேலைகள் அவனை இழுத்துக்கொள்ள அவன் எதிர்பார்த்தது போல் உடனடியாகத் திவ்யாவின் ஊருக்கு கிளம்ப இயலவில்லை.
ஒரு வழியாக மதியத்திற்கு மேல் கிளம்பியவன் தன் தந்தையை அழைத்துத் தான் நேரம் சென்றே இன்று மருத்துவமனைக்கு வரமுடியும் என்றான். ஆனால் தான் திவ்யாவின் ஊருக்கு செல்வதையோ அல்லது அவளை அழைத்து வரப் போவதையோ பாலாவிடம் சொல்லாமல் வேண்டுமென்றே மறைத்து விட்டான்..
ஏனெனில் அருண் திவ்யா கடலூருக்கு சென்றிருக்கிறாள் என்று சொன்னதை வைத்து அவள் அங்குத் தான் இருப்பாள் என்று தெரியும் ஆனால் திவ்யாவின் நிலைமை அவனுக்கு இன்னும் புலப்படவில்லை..
அவளுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவளுடன் தான் இன்று சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்று உள்ளூர உறுதி எடுத்துக் கொண்டாலும் அவளை அழைத்து வரும் வரை ஒருவரிடமும் சொல்லாமல் செல்வதே சிறந்தது என்று முடிவெடுத்திருந்தான்.
காரைக் கிளப்பியவனின் உள்ளத்திலும் உடம்பிலும் புதுத் தெம்பு ஊற, மனம் பாரம் குறைந்து இலகுவாக உணர, தன் மனையாளை சந்திக்கும் ஆர்வத்துடன் இதயம் முழுவதும் நிரம்பி ததும்பி வழியும் காதலை சுமந்திருந்தவன் மூன்றாவது முறையாகத் தன்னிலை தாழ்ந்து தன்னவளின் தஞ்சம் தேடி சென்று கொண்டிருந்தான்.
முதல் முறை தன் பார்வையால், தன் விழிகளில் வழியும் காதலால் தன் தேடலை தன் மனம் கவர்ந்தவளுக்கு உணர்த்தியிருந்தான்..
இரண்டாம் முறை தன் மனம் திறந்து, தன் ஸ்பரிசத்தால், தன் அணைப்பால், தன் வாய் திறந்து அவளின் அருகாமையை இறைஞ்சியிருந்தான்.
இதோ மூன்றாம் முறை அவளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள, அவளை முழுவதுமாகத் தன் வசப்படுத்த, தன் கர்வம், ஆளுமை, அதிகாரம், அந்தஸ்து அனைத்தையும் அவளிடம் சமர்ப்பித்து அவளைத் தன்னுடன் அழைத்து வர நேரில் சென்று கொண்டிருக்கிறான்..
தன் கணவனின் மனதை, அவன் இதயத்தில் ஆர்ப்பரிக்கும் திரை கடலெனத் திரண்டிருந்த காதலை புரிந்து அவன் மனையாள் அவனுடன் இணைந்து வாழ வருவாளா??
இரண்டு முறை தன் கணவனின் அருகாமைக்கு அஞ்சி அவனின் ஆழ்ந்த நம்பிக்கையைக் குலைத்தவள், தன் அச்சத்தினாலும் கலக்கத்தினாலும் அவனை நிராகரித்தவள் இந்த முறை அவனின் கனவை நிறைவேற்றுவாளா?
ஆனால் இன்று தன் கணவன் தன்னுடனான இல்லற வாழ்க்கைக்கு, தங்களின் தாம்பத்தியத்திற்கு அச்சாரம் போடாமல் விடப்போவதில்லை என்ற முடிவோடு வந்து கொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லை அந்தப் பேதை.
தொடரும்..