அத்தியாயம் 14
கல்வி ஆண்டு இறுதியை நெருங்க, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நடக்கும் ஃபேர்வெல் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட அந்த நாளும் வந்தது.
அனைத்து மாணவிகளுக்கும் பிரசிடெண்ட் ஹர்ஷாவை பிரிவது அத்தனை சோகமாக இருந்தது... இறுதி ஆண்டு மாணவர்கள் யாவரும் ஃபேர்வெல் பார்ட்டியை சிறப்பாகக் கொண்டாட, அங்கு ஹர்ஷாவை பிரிய போவதை நினைத்துக் கரித்துக் கொண்டு வந்தது கனிகாவிற்கு..
ஏற்கனவே ஓரிரு தடவைகள் தான் வெளிநாடு செல்ல இருப்பதை அவன் கூறியிருந்தாலும் அவள் முகம் சுருங்குவதைப் பார்த்திருந்தவன் அவளிடம் மேற்கொண்டு அதைப் பற்றிப் பேசியிருக்கவில்லை.... ஆனால் இப்பொழுது அந்த நாளும் நெருங்கிவிட்டது.
அன்று மாலை அவளைச் சந்தித்தவன் அவள் முகம் சரியில்லாததைப் பார்த்து விசாரிக்க,
"நீங்க கண்டிப்பா வெளி நாடு போய்த் தான் ஆகணுமா?" என்றாள்...
அவள் தவிப்பு புரிந்தவன்,
"கனி... எனக்கு மட்டும் உன்னை விட்டு போகணும் என்று ஆசையா என்ன? இது எங்க டாட் உடைய விருப்பம்... அவருக்கு நான் பிஸ்னஸ்ல இறங்கனும் என்று விஷ்... பட் நான் கம்ப்யூட்டர் பற்றிப் படிக்கணும் என்று சொல்லிவிட்டேன்... அதற்கு அவர் மறுப்பு ஒன்றும் சொல்லவில்லை... பட் ஒரே ஒரு டீல், நான் MCA முடிந்தவுடன் அவர் விருப்பப்படி பிஸ்னஸ் மேனெஜ்மண்ட் படிக்கணும்... அதுவும் அப்ராட்ல... ஸோ ஐ ஹாவ் டு கீப் அப் மை வெர்ட் [So i have to keep up my word].. டு இயர்ஸ் தான்... அப்புறம் உன்னைத் தேடி ஓடி வந்து விடுவேன்..." என்றான்..
அவன் சொன்ன எந்த விளக்கமும் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை...
மாறாக அவன் வருவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் என்று சொன்னது மனதிற்குப் பாரமாக இருக்க, கண்கள் கலங்க அவனையே பார்த்திருந்தாள்..
"கனி ப்ளீஸ், நான் ஊருக்குப் போவதற்கு இன்னும் த்ரீ வீக்ஸ் இருக்கு... அதற்குள் ஏன் இத்தனை கவலை? லெட்ஸ் எஞ்சாய் எவ்ரி மொமண்ட் [Let's enjoy every moment]..." என்றவன் அதைப் பற்றி மேற்கொண்டு பேசாமல் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி அவள் மனதை மாற்ற முயற்சித்தான்.
ஆனால் அவள் மனமோ அவன் இன்னும் மூன்று வாரங்கள் தான் தன்னுடன் இருப்பான் என்பதிலேயே உழன்று கொண்டு இருந்தது..
தேர்வுகள் ஒரு வழியாக முடிய இன்னும் இரண்டு நாட்களில் தான் வெளிநாடு செல்லவிருப்பதால் கனிகாவை தினமும் தனிமையில் சந்தித்தான் ஹர்ஷா...
ஆனால் தான் வாக்குக் கொடுத்தது போல் தன் விரல் நுனி கூட அவள் மேல் படாமல் ஜாக்கிரதையாகவே இருந்தான்..
அன்று காலை வெளிநாடு பயணத்திற்கும், அவன் செல்லவிருந்த இடம் குளிர் பிரதேசமாக இருந்ததினால் அதற்கு ஏற்ற உடைகளை எடுப்பதற்கும் ஷாப்பிங் மாலிற்குச் செல்ல, எதிர்பாராதவிதமாக அதே மாலிற்கு அகிலுடன் வந்திருந்தாள் கனிகா.
அகில்,
"நீ எப்பவும் சேலை அல்லது பாவாடை தாவணி தானே கட்டிக் கொள்கிறாய், இன்று ஒரு ஜீன்ஸ், டாப்ஸ் அல்லது ஒரு சுடிதாராவது எடு, உனக்கு ரொம்ப எடுப்பாக இருக்கும்.." என்று சொன்னதை எவ்வளவோ மறுத்தும் அவளை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்..
அகிலுடன் ஷாப்பிங் மாலிற்கு வந்த கனிகாவிற்கு அங்கு வந்த பின் தான் தெரிந்தது அங்கு இருக்கும் எந்த ஒரு பொருளையும் அவளால் வாங்க முடியாது என்று... ஏனெனில் அத்தனையும் அவ்வளவு விலை.
ஆனால் அவன் வற்புறுத்தியதற்காகத் தனக்கு ஒரு சுடிதார் மட்டும் எடுக்க ஒரு கடையில் நுழைந்தவள் எத்தனை தேடியும் தான் எதிர்பார்த்த குறைந்த விலையில் ஒரு சுடிதார் கூடக் கிடைக்காததால் வெளியே வர, அவள் பின்னாடியே வந்த அகில்.
"கனிகா...எங்க போற?" என்று வினவ,
"அத்தான்... எனக்கு ஒண்ணும் வேண்டாம் அத்தான்... ரொம்ப விலையா இருக்கு...." என்றாள்.
"என்ன, கனிகா...நான் தான் சொன்னேன்ல... விலை எதுவா இருந்தாலும் உனக்குப் பிடித்ததா அட் லீஸ்ட் ஒரு சுடியாவது எடுன்னு..." என்றவன் அவள் பின்புறம் வந்து அவளின் இரண்டு தோள்களின் மீதும் கை வைத்து கடையின் உள்ளே வலுகட்டாயாமாக அழைத்துச் சென்றான்.
அங்கு அதற்குள் தனக்கு வேண்டியவைகளை வாங்கிய ஹர்ஷா வீட்டிற்குக் கிளம்ப எத்தனிக்க ஒரு கடையின் வாயிலில் கனிகாவின் குரல் கேட்டதும் திரும்பி பார்க்க,
அங்கு அவன் கண்ட காட்சி அவன் பிபியை எகிற வைத்தது....
பயண நாள் நெருங்க நெருங்க ஏற்கனவே கனிகாவை தனியாக இரண்டு வருடங்கள் அகிலுடன் விட்டு செல்வதை நினைத்து பயந்து இருக்க, இப்பொழுது கண் எதிரே அவன் அவளிடம் இத்தனை நெருக்கமாக இருப்பதைப் பார்த்ததும் விதிர்த்து போனவன் வேகமாக அவர்கள் நுழைந்த கடைக்குள் தானும் நுழைந்தான்..
அகில் கனிகாவின் வெகு அருகில் நின்று ஒவ்வொரு சுடிதாராகக் காண்பிக்க அதன் விலையைப் பார்த்தவளின் தலையைத் தட்டியவன்,
"கனிகா, நீ இப்போ அட் லீஸ்ட் ஒரு சுடியாவது எடுக்கப் போறியா? இல்லையா?" என்று கூற,
"அவளுக்குத் தான் சுடிதார் பிடிக்காதே.... தென் வொய் ஆர் யூ ஃபோர்ஸிங் ஹெர்? [Then why are you forcing her]... " என்ற ஆளை அசத்தும் அமர்த்தலான குரலில் சட்டென்று திரும்பினார்கள் இருவரும்.
அங்கு அடக்கப்பட்ட கோபத்துடன் ஹர்ஷா நின்று கொண்டு இருக்க எதிர்பாராதவிதமாக ஹர்ஷாவை அங்குக் காணவும் அதிர்ச்சியில் உறைந்தாள் கனிகா.
அகில் அத்தானுடன் தான் வெளியில் வந்தது நிச்சயம் அவனுக்குப் பிடிக்காது என்று தெரியும்.... அதுவும் இப்பொழுது, தான் அகில் அத்தானுடன் இத்தனை நெருக்கத்தில் நின்றிருப்பதை வேறு பார்த்துவிட்டார் என்று நினைத்தவள் சட்டென்று ஒரு அடி அகிலை விட்டு நகர்ந்து நின்றவள் அச்சத்தில் ஹர்ஷாவையே பார்த்திருக்க,
"கனி, எப்பவுமே நீ ஸாரி ஆர் ஹாஃப் ஸாரி தான் கட்டுற, வேறு ஏதாவது ட்ரெஸ் போடக்கூடாதா?" என்று ஹர்ஷா எத்தனை முறையோ கேட்டிருக்கிறான்.
"அதெல்லாம் எனக்குப் பிடிக்காது..." என்று ஒரேடியாக அவள் மறுத்து இருக்கிறாள்.
"அட் லீஸ்ட் சுடியாவது வாங்கித் தருகிறேன்...போட்டுக்கோ....உன் ஸ்ட்ரக்ச்சருக்கு ரொம்ப அழகா இருக்கும்" என்று சொல்ல, அப்பொழுதும்,
"இல்லைங்க, எனக்கு என்னமோ அது எல்லாம் போட பிடிக்காதுங்க...." என்று மறுத்துவிட அதற்கு மேல் அவனும் அவளை வற்புறுத்தினதில்லை.... ஏனெனில் புடவையிலும் தாவணியிலும் அவள் அத்தனை பாந்தமாகச் சிற்பம் போல இருப்பாள்..
ஆனால் தான் அத்தனை சொல்லியும் சுடிதார் வாங்காதவள் இன்று அகில் சொன்னதும் அவனுடன் சேர்ந்து கடைக்கு வந்திருப்பதைப் பார்த்தவனுக்கு ஆத்திரமும் எரிச்சலும் போட்டிக் போட்டுக் கொண்டு வர, அதற்குள் அகில் ஹர்ஷாவின் கேள்விக்குப் பதில் அளித்தான்.
"அவளுக்குப் பழக்கம் இல்லாததால் போட மாட்டேன் என்று சொல்கிறாள்... நான் எடுத்துக் கொடுத்தால் ஏன் வேண்டாம் என்று சொல்லப் போகிறாள்?"
அகிலின் பதிலில் திடுக்கிட்டவள் அகிலை திரும்பி பார்த்தவளுக்கு இன்று செம்மையாக மாட்டினோம் என்று இருந்தது... ஹர்ஷாவின் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்தவள், "அத்..." என்று ஆரம்பித்தவளுக்கு ஹர்ஷா ஏற்கனவே அத்தான் பொத்தான் என்று அவனை அழைக்கக்கூடாது என்று சொன்னது ஞாபகம் வர,
"எனக்குச் சுடிதார் வேண்டாம்...போகலாம் வாங்க..." என்றவள் வார்த்தைகள் அகிலை நோக்கி இருந்தாலும் பார்வை எல்லாம் ஹர்ஷாவிடமே இருந்தது.
அவள் கரத்தை பற்றி இழுத்த ஹர்ஷா அகிலை முறைத்தவாறே அவளை வெளியே இழுத்துச் செல்ல, அவன் சட்டென்று அவ்வாறு இழுக்கவும் நிலை குலைந்தவள் ஹர்ஷாவின் தோளில் மோத, அவளின் தோள் மீது கை வைத்து இறுக பற்றியவன் நேரே தன் காருக்கு அழைத்துச் சென்றான்...
ஹர்ஷாவின் செயலில் அதிர்ந்த அகில் கடைகளில் இருப்பவர்கள் அனைவரும் தங்களையே பார்த்திருக்க வேறு வழியில்லாமல் தானும் வெளியே வந்தவன் அங்குக் கார் பார்க்கிங்கில் ஹர்ஷா கனிகாவை ஏற்றிவிட்டு தானும் அமர்ந்து காரை சீறிக் கிளப்ப, ஹர்ஷாவை நினைத்து பயந்தவன் அதே சமயம் அவன் கனிகா மேல் காட்டிய உரிமையையும் நினைத்து வியந்தான்.
காரில் ஏறியதுமே கனிகா ஹர்ஷாவை திரும்பி பார்க்க, அவள் தன்னையே பார்ப்பதை அறிந்தவன் இருந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை.
காரை கடற்கரையை நோக்கி செலுத்தியவன் கடற்கரையை அடைந்ததும் எதுவும் பேசாமல் தான் மட்டும் இறங்கி கடலை நோக்கி நடக்க, அவன் பின்னால் ஓடியவள் அவன் அருகில் சென்றதும் அவன் இடது கரத்தினுள் தன் இரு கைகளையும் நுழைத்து, "என்னங்க...கோபமா?" என்றாள்.
சிறிது தூரம் சென்றவன் தன் இரு கைகளையும் ஜீன்ஸ் பேண்டின் பாக்கட்டில் விட்டு நிமிர்ந்து கடலையே வெறித்துப் பார்க்க, "
அகில் அத்தான் தான் நான் எவ்வளவு சொல்லியும் வற்புறுத்தி கூட்டி வந்தாங்க.." என்றாள்..
அவள் அத்தான் என்றதுமே அவளைத் திரும்பி பார்த்தவன் அவள் விழிகளை ஊடுருவதைப் போல் பார்த்தவாறே,
"அப்போ அவன் வற்புறுத்தி சொன்னால் எதுவேனா செய்துவிடுவியா?" என்றான்..
அவன் அமைதியாகத் தான் அந்தக் கேள்வியைக் கேட்டான்.
ஆனால் அதில் உள்ள அர்த்தம் அவள் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அதிர செய்தது
.
இரு கண்களிலும் கண்ணீர் துளிகள் ஊற்றெடுக்க அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளை பார்த்தவன் மறுபடியும் கடலின் புறம் திரும்ப, அவனைப் பிடித்திருந்த கைகளைத் தளர்த்தியவள் அமைதியாகத் தலை கவிழ்ந்து நிற்க, அவள் புறம் திரும்பியவன், "ஏன் கைய எடுத்துட்ட?" என்றான்..
நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தையும் அதிர்வையும் உணர்ந்தவன்,
"கனி, நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்... எனக்கு அந்த அகிலை பிடிக்கலைன்னு... ஏன்னு கேட்காத.... எனக்கு அவனைப் பிடிக்கலை... அவ்வளவு தான்... இதில் இன்னும் டு டேஸ்ல நான் அப்ராட் போறேன்...இப்போ உங்க இரண்டு பேரையும் இப்படிப் பார்த்தால் எப்படி என்னால நிம்மதியா இருக்க முடியும்?" என்றான்.
அவனின் அத்தனை செயல்களும் எங்கே அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயத்தில் தான் என்று அவளுக்கும் தெரியும், ஆனால் அவனது அதிரடியான செயல்கள் தான் அவளை அச்சுறுத்துகிறது... கலங்கடிக்கிறது..
அவன் கரத்திற்குள் தன் கரங்களை மீண்டும் நுழைத்தவள் தோளில் சாய்ந்தவாறு,
"நீங்க எப்போ வந்தாலும் நான் உங்களுக்காகக் காத்திட்டு இருப்பேன்... நான் உங்களுக்கு மட்டும் தான்... இனி அவருடன் எங்கும் போக மாட்டேன்..." என்றாள்..
தன் வார்த்தையை அவள் காப்பாற்றியிருந்தால் பின்னாளில் நடக்கவிருக்கும் விதியின் விளையாட்டுக்களைத் தடுத்திருக்கலாமோ!
அவளைத் தன் தோள் வளைவுக்குள் வைத்துக் கொண்டவன் மனம் முழுவதும் 'அகிலிடம் இருந்து இவளை எப்படிக் காப்பாற்றுவது? அவனை நம்புவது முட்டாள் தனம்... இதற்கு நாளையே ஒரு வழி செய்ய வேண்டும்..' என்று தோன்றியது.
அவளை வழக்கமாக இறக்கும் பேருந்து நிலையத்தில் இறக்கியவனின் முகம் இன்னும் தெளிவில்லாமல் இருப்பதைப் பார்த்தவளுக்குப் புரிந்து போனது அவனின் கோபம் இன்னமும் தணியவில்லை என்று..... ஆனால் இதற்கு மேல் எதுவும் கேட்டால் மறுபடியும் ஏதாவது ஏடாகூடமாகச் செய்துவிடுவான் என்று அஞ்சி அமைதியானாள்..
வீட்டிற்கு வந்தவனின் மனக்கண்ணிற்கு முன் ஏனோ அகில், கனிகாவின் தோளைப் பற்றியிருந்த காட்சியே வந்து போனது....
இரவு முழுவதும் தன் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தவனின் கோபம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்ததே தவிரக் குறைந்தபாடில்லை..
'எத்தனை முறை நான் சொல்லியும் மறுத்தவள் அவன் ஒரே ஒரு முறை சொன்னதும் கடைக்கு வந்து விட்டாள்.... அப்படி என்றால் என்னை விட அவனால் அவளிடம் எதையும் சாதித்துக் கொள்ள முடியும் என்று தானே அர்த்தம்.... தான் அவள் விருப்பப்படி அவள் மீது விரல் கூடப் படாமல் இருக்க அவன் எவ்வாறு இப்படிப் பப்ளிக்கில் அவளின் தோளைப் பற்றிக் கூட்டி செல்ல முடியும்... அவளும் ஒன்றும் சொல்லவில்லேயே...'
'அப்படி என்றால் நான் இரண்டு வருடம் வெளி நாட்டில் இருக்கும் நேரம் இங்கு எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது.... கனி நிச்சயம் தவறு செய்ய மாட்டாள்.... ஆனால் அந்த ராஸ்கல் எப்ப நான் அவளை விட்டு தூர செல்வேன் என்றே இருப்பான் போல் இருக்கிறது... அவன் நிச்சயம் கனியை அடைய எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்பான் போல் இருக்கிறது..' என்று நினைத்தவன் விடிய விடிய குழம்பி விடியும் போது ஒரு விபரீத முடிவை எடுத்திருந்தான்..
அதனால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றிச் சிந்தியாமல்!!!!!
*******************************************
கல்லூரி முடிந்து விடுமுறை விட்டுவிட்டதால் வழக்கத்தை விடச் சற்று நேரம் கழித்தே எழுந்தவள் குளியல் அறைக்குள் செல்ல சரியாக அவளின் அலைபேசி அழைத்தது... வேகமாக ஓடி வந்தவள் அழைப்பை எடுக்க,
"கனி, நான் நாளைக்கு ஊருக்கு போறதுக்குள்ள உன்னைப் பார்க்கணும்....உன் கூடக் கொஞ்சம் பேசணும்... இன்னைக்கு ஈவ்னிங் நான் சொல்ற இடத்திற்கு வா..." என்றான்..
நாளை காலை அவர் கிளம்புகிறார்... அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் அவரைக் காண முடியாது... இடையில் வர வாய்ப்பில்லை என்று வேறு சொல்லியிருக்கிறார் என்ற நினைப்பே அழுகையைக் கொண்டு வர, தொண்டை அடைக்க "சரிங்க" என்றாள்.
இடத்தைக் குறுந்தகவல் மூலம் அனுப்பியவன் தான் அவளை ஆறு மணி போல் பிக்கப் செய்வதாகச் சொன்னான்.
"அவ்வளவு லேட்டாகவா?"
"ஆமா கனி, எனக்கு இன்னைக்கு நிறைய வேலைகள் இருக்கு... அது மட்டும் இல்லாமல் இன்னைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் என்னோட மாம் கூட நான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்... ஐ வில் பிக் யூ அப் அட் ஸிக்ஸ்..." என்றான்.
மாலை சீக்கிரமாகக் கிளம்பியவள் எப்பொழுதும் அலங்காரம் செய்து கொள்ள விரும்பாவிட்டாலும் இன்று அவனுக்காக அலங்கரித்துக் கொண்டு அத்தையிடம் தன் தோழிகளுடன் கோவிலுக்குப் போவதாகச் சொல்ல, அவரும் சரி என்று சொல்லிவிட்டார்..
ஆறு மணிக்கு முன்பே அவன் சொன்ன இடத்திற்கு வந்தவளை சரியாக ஆறு மணிக்கு வந்தவன் காரில் ஏற்றி செல்ல, "எங்க போறோம்?" என்றாள்..
"ஏன் சொன்ன தான் என் கூட வருவியா?"
"இல்லை, கோவிலுக்குப் போறதா அத்தைக் கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்... ஏற்கனவே கொஞ்சம் இருட்டிடுச்சு... சீக்கிரம் வீட்டிற்குப் போக வேண்டும்.... இல்லைன்னா அத்தை சந்தேகப்படுவாங்க..."
"சீக்கிரம் பத்திரமா உன்னைக் கொண்டு போய் விட்டுறேன்...பயப்படாம வா..."
கிட்டதட்ட ஒரு அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு கார் ஒரு பங்களாவின் முன்னால் நிற்க, எங்கு வந்திருக்கிறோம் என்று புரியாமல் அவனையே பார்த்திருக்க "இறங்கு" என்றான்.
"இது யாரோட வீடுங்க? இவ்வளவு பெரிசா இருக்கு.... நாம் ஏன் இங்கு வந்திருக்கோம்?"
அடுக்காகக் கேள்விகள் கேட்க ஒன்றும் பேசாமல் காரை விட்டு இறங்கியவன் அவள் புறம் வந்து அவள் கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றான்.
அத்தனை பெரிய பங்களாவை இது வரை அவள் நேரில் பார்த்தது இல்லை... ஒரு வேளை இவரோட வீடோ என்று எண்ணியவள், 'ஐயோ! அப்போ அவரோட அம்மா அப்பா எல்லாரும் இருப்பாங்களே..' என்று திகைத்து அவன் கரத்தை இறுக பற்றிக் கொள்ள, அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த சாவியைக் கொண்டு கதவை திறக்க 'வீட்டில் யாரும் இல்லையோ, அப்போ இங்க எதுக்கு வந்திருக்கிறோம்?' என்று குழம்பினாள்.
அவளை உள்ளே அழைத்துச் சென்றவன் கதவை மூட, வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை...
வீட்டின் அலங்காரத்தையும் பகட்டையும் பார்த்தவள், "இது யாரோடு வீடுங்க?" என்று மறுபடியும் கேட்க,
"திஸ் இஸ் ஒன் ஆஃப் அவர் கெஸ்ட் ஹவுஸ் [This is one of our guest house]... வீக் என்ட்ஸ்ல ஃப்ரெண்ட்ஸ் கூட அடிக்கடி வருவேன்..." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றது ஒரு படுக்கை அறை.
அது வரை எங்கு வந்திருக்கிறோம் என்று மட்டும் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு அவன் படுக்கை அறைக்குள் அழைத்துச் செல்லவும் முகத்தில் பளாரென்று அறைந்தது போல் உண்மை புரிய, படபடப்புடன் அதிர்ந்து அவனை நோக்க, அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தவாறே தன் காலால் அவன் படுக்கை அறை கதவையும் மூடினான்..
தொடரும்
கல்வி ஆண்டு இறுதியை நெருங்க, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நடக்கும் ஃபேர்வெல் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட அந்த நாளும் வந்தது.
அனைத்து மாணவிகளுக்கும் பிரசிடெண்ட் ஹர்ஷாவை பிரிவது அத்தனை சோகமாக இருந்தது... இறுதி ஆண்டு மாணவர்கள் யாவரும் ஃபேர்வெல் பார்ட்டியை சிறப்பாகக் கொண்டாட, அங்கு ஹர்ஷாவை பிரிய போவதை நினைத்துக் கரித்துக் கொண்டு வந்தது கனிகாவிற்கு..
ஏற்கனவே ஓரிரு தடவைகள் தான் வெளிநாடு செல்ல இருப்பதை அவன் கூறியிருந்தாலும் அவள் முகம் சுருங்குவதைப் பார்த்திருந்தவன் அவளிடம் மேற்கொண்டு அதைப் பற்றிப் பேசியிருக்கவில்லை.... ஆனால் இப்பொழுது அந்த நாளும் நெருங்கிவிட்டது.
அன்று மாலை அவளைச் சந்தித்தவன் அவள் முகம் சரியில்லாததைப் பார்த்து விசாரிக்க,
"நீங்க கண்டிப்பா வெளி நாடு போய்த் தான் ஆகணுமா?" என்றாள்...
அவள் தவிப்பு புரிந்தவன்,
"கனி... எனக்கு மட்டும் உன்னை விட்டு போகணும் என்று ஆசையா என்ன? இது எங்க டாட் உடைய விருப்பம்... அவருக்கு நான் பிஸ்னஸ்ல இறங்கனும் என்று விஷ்... பட் நான் கம்ப்யூட்டர் பற்றிப் படிக்கணும் என்று சொல்லிவிட்டேன்... அதற்கு அவர் மறுப்பு ஒன்றும் சொல்லவில்லை... பட் ஒரே ஒரு டீல், நான் MCA முடிந்தவுடன் அவர் விருப்பப்படி பிஸ்னஸ் மேனெஜ்மண்ட் படிக்கணும்... அதுவும் அப்ராட்ல... ஸோ ஐ ஹாவ் டு கீப் அப் மை வெர்ட் [So i have to keep up my word].. டு இயர்ஸ் தான்... அப்புறம் உன்னைத் தேடி ஓடி வந்து விடுவேன்..." என்றான்..
அவன் சொன்ன எந்த விளக்கமும் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை...
மாறாக அவன் வருவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் என்று சொன்னது மனதிற்குப் பாரமாக இருக்க, கண்கள் கலங்க அவனையே பார்த்திருந்தாள்..
"கனி ப்ளீஸ், நான் ஊருக்குப் போவதற்கு இன்னும் த்ரீ வீக்ஸ் இருக்கு... அதற்குள் ஏன் இத்தனை கவலை? லெட்ஸ் எஞ்சாய் எவ்ரி மொமண்ட் [Let's enjoy every moment]..." என்றவன் அதைப் பற்றி மேற்கொண்டு பேசாமல் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி அவள் மனதை மாற்ற முயற்சித்தான்.
ஆனால் அவள் மனமோ அவன் இன்னும் மூன்று வாரங்கள் தான் தன்னுடன் இருப்பான் என்பதிலேயே உழன்று கொண்டு இருந்தது..
தேர்வுகள் ஒரு வழியாக முடிய இன்னும் இரண்டு நாட்களில் தான் வெளிநாடு செல்லவிருப்பதால் கனிகாவை தினமும் தனிமையில் சந்தித்தான் ஹர்ஷா...
ஆனால் தான் வாக்குக் கொடுத்தது போல் தன் விரல் நுனி கூட அவள் மேல் படாமல் ஜாக்கிரதையாகவே இருந்தான்..
அன்று காலை வெளிநாடு பயணத்திற்கும், அவன் செல்லவிருந்த இடம் குளிர் பிரதேசமாக இருந்ததினால் அதற்கு ஏற்ற உடைகளை எடுப்பதற்கும் ஷாப்பிங் மாலிற்குச் செல்ல, எதிர்பாராதவிதமாக அதே மாலிற்கு அகிலுடன் வந்திருந்தாள் கனிகா.
அகில்,
"நீ எப்பவும் சேலை அல்லது பாவாடை தாவணி தானே கட்டிக் கொள்கிறாய், இன்று ஒரு ஜீன்ஸ், டாப்ஸ் அல்லது ஒரு சுடிதாராவது எடு, உனக்கு ரொம்ப எடுப்பாக இருக்கும்.." என்று சொன்னதை எவ்வளவோ மறுத்தும் அவளை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்..
அகிலுடன் ஷாப்பிங் மாலிற்கு வந்த கனிகாவிற்கு அங்கு வந்த பின் தான் தெரிந்தது அங்கு இருக்கும் எந்த ஒரு பொருளையும் அவளால் வாங்க முடியாது என்று... ஏனெனில் அத்தனையும் அவ்வளவு விலை.
ஆனால் அவன் வற்புறுத்தியதற்காகத் தனக்கு ஒரு சுடிதார் மட்டும் எடுக்க ஒரு கடையில் நுழைந்தவள் எத்தனை தேடியும் தான் எதிர்பார்த்த குறைந்த விலையில் ஒரு சுடிதார் கூடக் கிடைக்காததால் வெளியே வர, அவள் பின்னாடியே வந்த அகில்.
"கனிகா...எங்க போற?" என்று வினவ,
"அத்தான்... எனக்கு ஒண்ணும் வேண்டாம் அத்தான்... ரொம்ப விலையா இருக்கு...." என்றாள்.
"என்ன, கனிகா...நான் தான் சொன்னேன்ல... விலை எதுவா இருந்தாலும் உனக்குப் பிடித்ததா அட் லீஸ்ட் ஒரு சுடியாவது எடுன்னு..." என்றவன் அவள் பின்புறம் வந்து அவளின் இரண்டு தோள்களின் மீதும் கை வைத்து கடையின் உள்ளே வலுகட்டாயாமாக அழைத்துச் சென்றான்.
அங்கு அதற்குள் தனக்கு வேண்டியவைகளை வாங்கிய ஹர்ஷா வீட்டிற்குக் கிளம்ப எத்தனிக்க ஒரு கடையின் வாயிலில் கனிகாவின் குரல் கேட்டதும் திரும்பி பார்க்க,
அங்கு அவன் கண்ட காட்சி அவன் பிபியை எகிற வைத்தது....
பயண நாள் நெருங்க நெருங்க ஏற்கனவே கனிகாவை தனியாக இரண்டு வருடங்கள் அகிலுடன் விட்டு செல்வதை நினைத்து பயந்து இருக்க, இப்பொழுது கண் எதிரே அவன் அவளிடம் இத்தனை நெருக்கமாக இருப்பதைப் பார்த்ததும் விதிர்த்து போனவன் வேகமாக அவர்கள் நுழைந்த கடைக்குள் தானும் நுழைந்தான்..
அகில் கனிகாவின் வெகு அருகில் நின்று ஒவ்வொரு சுடிதாராகக் காண்பிக்க அதன் விலையைப் பார்த்தவளின் தலையைத் தட்டியவன்,
"கனிகா, நீ இப்போ அட் லீஸ்ட் ஒரு சுடியாவது எடுக்கப் போறியா? இல்லையா?" என்று கூற,
"அவளுக்குத் தான் சுடிதார் பிடிக்காதே.... தென் வொய் ஆர் யூ ஃபோர்ஸிங் ஹெர்? [Then why are you forcing her]... " என்ற ஆளை அசத்தும் அமர்த்தலான குரலில் சட்டென்று திரும்பினார்கள் இருவரும்.
அங்கு அடக்கப்பட்ட கோபத்துடன் ஹர்ஷா நின்று கொண்டு இருக்க எதிர்பாராதவிதமாக ஹர்ஷாவை அங்குக் காணவும் அதிர்ச்சியில் உறைந்தாள் கனிகா.
அகில் அத்தானுடன் தான் வெளியில் வந்தது நிச்சயம் அவனுக்குப் பிடிக்காது என்று தெரியும்.... அதுவும் இப்பொழுது, தான் அகில் அத்தானுடன் இத்தனை நெருக்கத்தில் நின்றிருப்பதை வேறு பார்த்துவிட்டார் என்று நினைத்தவள் சட்டென்று ஒரு அடி அகிலை விட்டு நகர்ந்து நின்றவள் அச்சத்தில் ஹர்ஷாவையே பார்த்திருக்க,
"கனி, எப்பவுமே நீ ஸாரி ஆர் ஹாஃப் ஸாரி தான் கட்டுற, வேறு ஏதாவது ட்ரெஸ் போடக்கூடாதா?" என்று ஹர்ஷா எத்தனை முறையோ கேட்டிருக்கிறான்.
"அதெல்லாம் எனக்குப் பிடிக்காது..." என்று ஒரேடியாக அவள் மறுத்து இருக்கிறாள்.
"அட் லீஸ்ட் சுடியாவது வாங்கித் தருகிறேன்...போட்டுக்கோ....உன் ஸ்ட்ரக்ச்சருக்கு ரொம்ப அழகா இருக்கும்" என்று சொல்ல, அப்பொழுதும்,
"இல்லைங்க, எனக்கு என்னமோ அது எல்லாம் போட பிடிக்காதுங்க...." என்று மறுத்துவிட அதற்கு மேல் அவனும் அவளை வற்புறுத்தினதில்லை.... ஏனெனில் புடவையிலும் தாவணியிலும் அவள் அத்தனை பாந்தமாகச் சிற்பம் போல இருப்பாள்..
ஆனால் தான் அத்தனை சொல்லியும் சுடிதார் வாங்காதவள் இன்று அகில் சொன்னதும் அவனுடன் சேர்ந்து கடைக்கு வந்திருப்பதைப் பார்த்தவனுக்கு ஆத்திரமும் எரிச்சலும் போட்டிக் போட்டுக் கொண்டு வர, அதற்குள் அகில் ஹர்ஷாவின் கேள்விக்குப் பதில் அளித்தான்.
"அவளுக்குப் பழக்கம் இல்லாததால் போட மாட்டேன் என்று சொல்கிறாள்... நான் எடுத்துக் கொடுத்தால் ஏன் வேண்டாம் என்று சொல்லப் போகிறாள்?"
அகிலின் பதிலில் திடுக்கிட்டவள் அகிலை திரும்பி பார்த்தவளுக்கு இன்று செம்மையாக மாட்டினோம் என்று இருந்தது... ஹர்ஷாவின் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்தவள், "அத்..." என்று ஆரம்பித்தவளுக்கு ஹர்ஷா ஏற்கனவே அத்தான் பொத்தான் என்று அவனை அழைக்கக்கூடாது என்று சொன்னது ஞாபகம் வர,
"எனக்குச் சுடிதார் வேண்டாம்...போகலாம் வாங்க..." என்றவள் வார்த்தைகள் அகிலை நோக்கி இருந்தாலும் பார்வை எல்லாம் ஹர்ஷாவிடமே இருந்தது.
அவள் கரத்தை பற்றி இழுத்த ஹர்ஷா அகிலை முறைத்தவாறே அவளை வெளியே இழுத்துச் செல்ல, அவன் சட்டென்று அவ்வாறு இழுக்கவும் நிலை குலைந்தவள் ஹர்ஷாவின் தோளில் மோத, அவளின் தோள் மீது கை வைத்து இறுக பற்றியவன் நேரே தன் காருக்கு அழைத்துச் சென்றான்...
ஹர்ஷாவின் செயலில் அதிர்ந்த அகில் கடைகளில் இருப்பவர்கள் அனைவரும் தங்களையே பார்த்திருக்க வேறு வழியில்லாமல் தானும் வெளியே வந்தவன் அங்குக் கார் பார்க்கிங்கில் ஹர்ஷா கனிகாவை ஏற்றிவிட்டு தானும் அமர்ந்து காரை சீறிக் கிளப்ப, ஹர்ஷாவை நினைத்து பயந்தவன் அதே சமயம் அவன் கனிகா மேல் காட்டிய உரிமையையும் நினைத்து வியந்தான்.
காரில் ஏறியதுமே கனிகா ஹர்ஷாவை திரும்பி பார்க்க, அவள் தன்னையே பார்ப்பதை அறிந்தவன் இருந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை.
காரை கடற்கரையை நோக்கி செலுத்தியவன் கடற்கரையை அடைந்ததும் எதுவும் பேசாமல் தான் மட்டும் இறங்கி கடலை நோக்கி நடக்க, அவன் பின்னால் ஓடியவள் அவன் அருகில் சென்றதும் அவன் இடது கரத்தினுள் தன் இரு கைகளையும் நுழைத்து, "என்னங்க...கோபமா?" என்றாள்.
சிறிது தூரம் சென்றவன் தன் இரு கைகளையும் ஜீன்ஸ் பேண்டின் பாக்கட்டில் விட்டு நிமிர்ந்து கடலையே வெறித்துப் பார்க்க, "
அகில் அத்தான் தான் நான் எவ்வளவு சொல்லியும் வற்புறுத்தி கூட்டி வந்தாங்க.." என்றாள்..
அவள் அத்தான் என்றதுமே அவளைத் திரும்பி பார்த்தவன் அவள் விழிகளை ஊடுருவதைப் போல் பார்த்தவாறே,
"அப்போ அவன் வற்புறுத்தி சொன்னால் எதுவேனா செய்துவிடுவியா?" என்றான்..
அவன் அமைதியாகத் தான் அந்தக் கேள்வியைக் கேட்டான்.
ஆனால் அதில் உள்ள அர்த்தம் அவள் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அதிர செய்தது
.
இரு கண்களிலும் கண்ணீர் துளிகள் ஊற்றெடுக்க அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளை பார்த்தவன் மறுபடியும் கடலின் புறம் திரும்ப, அவனைப் பிடித்திருந்த கைகளைத் தளர்த்தியவள் அமைதியாகத் தலை கவிழ்ந்து நிற்க, அவள் புறம் திரும்பியவன், "ஏன் கைய எடுத்துட்ட?" என்றான்..
நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தையும் அதிர்வையும் உணர்ந்தவன்,
"கனி, நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்... எனக்கு அந்த அகிலை பிடிக்கலைன்னு... ஏன்னு கேட்காத.... எனக்கு அவனைப் பிடிக்கலை... அவ்வளவு தான்... இதில் இன்னும் டு டேஸ்ல நான் அப்ராட் போறேன்...இப்போ உங்க இரண்டு பேரையும் இப்படிப் பார்த்தால் எப்படி என்னால நிம்மதியா இருக்க முடியும்?" என்றான்.
அவனின் அத்தனை செயல்களும் எங்கே அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயத்தில் தான் என்று அவளுக்கும் தெரியும், ஆனால் அவனது அதிரடியான செயல்கள் தான் அவளை அச்சுறுத்துகிறது... கலங்கடிக்கிறது..
அவன் கரத்திற்குள் தன் கரங்களை மீண்டும் நுழைத்தவள் தோளில் சாய்ந்தவாறு,
"நீங்க எப்போ வந்தாலும் நான் உங்களுக்காகக் காத்திட்டு இருப்பேன்... நான் உங்களுக்கு மட்டும் தான்... இனி அவருடன் எங்கும் போக மாட்டேன்..." என்றாள்..
தன் வார்த்தையை அவள் காப்பாற்றியிருந்தால் பின்னாளில் நடக்கவிருக்கும் விதியின் விளையாட்டுக்களைத் தடுத்திருக்கலாமோ!
அவளைத் தன் தோள் வளைவுக்குள் வைத்துக் கொண்டவன் மனம் முழுவதும் 'அகிலிடம் இருந்து இவளை எப்படிக் காப்பாற்றுவது? அவனை நம்புவது முட்டாள் தனம்... இதற்கு நாளையே ஒரு வழி செய்ய வேண்டும்..' என்று தோன்றியது.
அவளை வழக்கமாக இறக்கும் பேருந்து நிலையத்தில் இறக்கியவனின் முகம் இன்னும் தெளிவில்லாமல் இருப்பதைப் பார்த்தவளுக்குப் புரிந்து போனது அவனின் கோபம் இன்னமும் தணியவில்லை என்று..... ஆனால் இதற்கு மேல் எதுவும் கேட்டால் மறுபடியும் ஏதாவது ஏடாகூடமாகச் செய்துவிடுவான் என்று அஞ்சி அமைதியானாள்..
வீட்டிற்கு வந்தவனின் மனக்கண்ணிற்கு முன் ஏனோ அகில், கனிகாவின் தோளைப் பற்றியிருந்த காட்சியே வந்து போனது....
இரவு முழுவதும் தன் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தவனின் கோபம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்ததே தவிரக் குறைந்தபாடில்லை..
'எத்தனை முறை நான் சொல்லியும் மறுத்தவள் அவன் ஒரே ஒரு முறை சொன்னதும் கடைக்கு வந்து விட்டாள்.... அப்படி என்றால் என்னை விட அவனால் அவளிடம் எதையும் சாதித்துக் கொள்ள முடியும் என்று தானே அர்த்தம்.... தான் அவள் விருப்பப்படி அவள் மீது விரல் கூடப் படாமல் இருக்க அவன் எவ்வாறு இப்படிப் பப்ளிக்கில் அவளின் தோளைப் பற்றிக் கூட்டி செல்ல முடியும்... அவளும் ஒன்றும் சொல்லவில்லேயே...'
'அப்படி என்றால் நான் இரண்டு வருடம் வெளி நாட்டில் இருக்கும் நேரம் இங்கு எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது.... கனி நிச்சயம் தவறு செய்ய மாட்டாள்.... ஆனால் அந்த ராஸ்கல் எப்ப நான் அவளை விட்டு தூர செல்வேன் என்றே இருப்பான் போல் இருக்கிறது... அவன் நிச்சயம் கனியை அடைய எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்பான் போல் இருக்கிறது..' என்று நினைத்தவன் விடிய விடிய குழம்பி விடியும் போது ஒரு விபரீத முடிவை எடுத்திருந்தான்..
அதனால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றிச் சிந்தியாமல்!!!!!
*******************************************
கல்லூரி முடிந்து விடுமுறை விட்டுவிட்டதால் வழக்கத்தை விடச் சற்று நேரம் கழித்தே எழுந்தவள் குளியல் அறைக்குள் செல்ல சரியாக அவளின் அலைபேசி அழைத்தது... வேகமாக ஓடி வந்தவள் அழைப்பை எடுக்க,
"கனி, நான் நாளைக்கு ஊருக்கு போறதுக்குள்ள உன்னைப் பார்க்கணும்....உன் கூடக் கொஞ்சம் பேசணும்... இன்னைக்கு ஈவ்னிங் நான் சொல்ற இடத்திற்கு வா..." என்றான்..
நாளை காலை அவர் கிளம்புகிறார்... அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் அவரைக் காண முடியாது... இடையில் வர வாய்ப்பில்லை என்று வேறு சொல்லியிருக்கிறார் என்ற நினைப்பே அழுகையைக் கொண்டு வர, தொண்டை அடைக்க "சரிங்க" என்றாள்.
இடத்தைக் குறுந்தகவல் மூலம் அனுப்பியவன் தான் அவளை ஆறு மணி போல் பிக்கப் செய்வதாகச் சொன்னான்.
"அவ்வளவு லேட்டாகவா?"
"ஆமா கனி, எனக்கு இன்னைக்கு நிறைய வேலைகள் இருக்கு... அது மட்டும் இல்லாமல் இன்னைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் என்னோட மாம் கூட நான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்... ஐ வில் பிக் யூ அப் அட் ஸிக்ஸ்..." என்றான்.
மாலை சீக்கிரமாகக் கிளம்பியவள் எப்பொழுதும் அலங்காரம் செய்து கொள்ள விரும்பாவிட்டாலும் இன்று அவனுக்காக அலங்கரித்துக் கொண்டு அத்தையிடம் தன் தோழிகளுடன் கோவிலுக்குப் போவதாகச் சொல்ல, அவரும் சரி என்று சொல்லிவிட்டார்..
ஆறு மணிக்கு முன்பே அவன் சொன்ன இடத்திற்கு வந்தவளை சரியாக ஆறு மணிக்கு வந்தவன் காரில் ஏற்றி செல்ல, "எங்க போறோம்?" என்றாள்..
"ஏன் சொன்ன தான் என் கூட வருவியா?"
"இல்லை, கோவிலுக்குப் போறதா அத்தைக் கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்... ஏற்கனவே கொஞ்சம் இருட்டிடுச்சு... சீக்கிரம் வீட்டிற்குப் போக வேண்டும்.... இல்லைன்னா அத்தை சந்தேகப்படுவாங்க..."
"சீக்கிரம் பத்திரமா உன்னைக் கொண்டு போய் விட்டுறேன்...பயப்படாம வா..."
கிட்டதட்ட ஒரு அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு கார் ஒரு பங்களாவின் முன்னால் நிற்க, எங்கு வந்திருக்கிறோம் என்று புரியாமல் அவனையே பார்த்திருக்க "இறங்கு" என்றான்.
"இது யாரோட வீடுங்க? இவ்வளவு பெரிசா இருக்கு.... நாம் ஏன் இங்கு வந்திருக்கோம்?"
அடுக்காகக் கேள்விகள் கேட்க ஒன்றும் பேசாமல் காரை விட்டு இறங்கியவன் அவள் புறம் வந்து அவள் கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றான்.
அத்தனை பெரிய பங்களாவை இது வரை அவள் நேரில் பார்த்தது இல்லை... ஒரு வேளை இவரோட வீடோ என்று எண்ணியவள், 'ஐயோ! அப்போ அவரோட அம்மா அப்பா எல்லாரும் இருப்பாங்களே..' என்று திகைத்து அவன் கரத்தை இறுக பற்றிக் கொள்ள, அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த சாவியைக் கொண்டு கதவை திறக்க 'வீட்டில் யாரும் இல்லையோ, அப்போ இங்க எதுக்கு வந்திருக்கிறோம்?' என்று குழம்பினாள்.
அவளை உள்ளே அழைத்துச் சென்றவன் கதவை மூட, வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை...
வீட்டின் அலங்காரத்தையும் பகட்டையும் பார்த்தவள், "இது யாரோடு வீடுங்க?" என்று மறுபடியும் கேட்க,
"திஸ் இஸ் ஒன் ஆஃப் அவர் கெஸ்ட் ஹவுஸ் [This is one of our guest house]... வீக் என்ட்ஸ்ல ஃப்ரெண்ட்ஸ் கூட அடிக்கடி வருவேன்..." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றது ஒரு படுக்கை அறை.
அது வரை எங்கு வந்திருக்கிறோம் என்று மட்டும் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு அவன் படுக்கை அறைக்குள் அழைத்துச் செல்லவும் முகத்தில் பளாரென்று அறைந்தது போல் உண்மை புரிய, படபடப்புடன் அதிர்ந்து அவனை நோக்க, அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தவாறே தன் காலால் அவன் படுக்கை அறை கதவையும் மூடினான்..
தொடரும்