அத்தியாயம் 18
அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு வர குளியல் அறைக்குள் சென்றவள் நெஞ்சைப் பிளந்து வெடித்து வெளியேறிய கதறலுடன்,
"நீங்க என்னைப் பத்தி என்ன நினைச்சிருந்தாலும் பரவாயில்லைங்க.... ஆனால் உங்களுக்கு நான் கொடுத்த வாக்கை மீற முடியாது.... உங்களைத் தவிர என் வாழ்க்கையில் எந்த ஆம்பளைக்கும் இடம் இல்லை... அப்படியே நடக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் நான் தீக்குளிச்சிருவேன்னு சொன்னேன்..... என்னால இப்போ இருக்கும் சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முடியும்னு தோணலை... அந்த ஓநாய் நிச்சயம் என்னை வேட்டையாடிடுவான்.... அவன் கிட்ட இருந்து இன்னைக்குத் தப்பிச்சுட்டேன்... ஆனால் எப்பவும் முடியுமான்னு தெரியலை.... அதுக்கு இது ஒண்ணு தான் வழி.." என்று கூறியவள் பூச்சி மருந்தை தன் வாயில் ஊற்றினாள்
மற்ற பெண்களைப் போல் தைரியமானவளாக இருந்திருந்தால் ஒரு வேளை அவளால் இதைப் போன்ற சூழ் நிலைகளில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்க முடியும்... ஆனால் இயற்கையிலேயே மிகுந்த பயந்த சுபாவம் உள்ளவளுக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்த முடிவே சிறந்ததாகத் தோன்றியது.
மற்றவர்களுக்கு முட்டாள்தனமாக, கோழைத் தனமாகத் தெரியும் இந்த முடிவு, தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்குச் சரியான முடிவாகத் தெரிவது தான் கொடுமையே!!!!
குடித்து முடித்தவள் மெதுவாக வீட்டிற்குள் நுழைந்து தன் அன்னையின் புகைப்படத்தின் அருகில் வந்தவள் அதன் கீழ் அப்படியே முழங்காலை மடித்து அமர்ந்து தலை சாய்த்தவளின் எண்ணம் முழுவதும் "ஹர்ஷா! ஹர்ஷா! ஹர்ஷாவே தான்!!!!"
***************************************************
அன்று காலையில் இருந்தே மனம் ஏனோ படபடப்பாக இருக்க, கல்லூரியிலும் ஹர்ஷாவின் மனதிற்கு எதுவோ சரியில்லாதது போல் தோன்றியது.... இதயம் வேகமாக அடித்துக் கொள்வது போல் இருக்க, ஏதோ கெட்ட விஷயம் நடக்கப் போவது போல் திகிலாக இருந்தது.
அதற்கு மேல் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் தன் அறைக்கு வந்தவன் தன் அன்னையை அழைக்க, அவன் குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டு கலக்கம் அடைந்தவர், "என்ன ஹர்ஷா? இஸ் எவ்ரிதிங் ஆல் ரைட்?" என்றார்.
"யெஸ் மாம்...ஹவ் ஆர் யூ அன்ட் டாட்? [Yes, mom.. How are you and dad?] " என்றான்... அவன் குரல் சரியில்லாதைப் போல் தோன்ற 'நாங்க நல்லா இருக்கோம் ஹர்ஷா.... ஏன்பா இந்த நேரத்தில் கூப்புடுற....எதுனா பிரச்சனையா?"
"நோ மாம்...பிரச்சனை ஒண்ணும் இல்லை...சும்மா உங்க குரலைக் கேட்கணும்னு தோனுச்சு, அதான்.."
"ஹர்ஷா...ஐ டோன்ட் நோ வாட்ஸ் ஹாப்பனிங் டு யூ [ Harsha, I don't know what's happening to you]....முன்ன மாதிரி நீ எங்க கூடப் பேசறது கூட இல்லை... ரொம்பத் தூரம் தள்ளி போய்ட்டப்பா... கொஞ்சம் யோசிச்சு பாரு, எனக்கும் உன் டாடுக்கும் உன்னை விட்டால் வேறு யாரு இருக்கா... சொல்லு.... சீக்கிரம் திரும்பி வாப்பா... என்ன பிரச்சனையா இருந்தாலும் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சரி பண்ணுவோம்... இப்படி எங்களைக் கஷ்டப்படுத்தாதப்பா..."
அவரின் குரலில் தெரிந்த ஏக்கமும் வருத்தமும் அவனையும் தாக்க, இதற்கு மேல் பேசினால் உடைந்து விடுவோம் என்று உணர்ந்தவன், "ஓகே மாம்...ஐ வில் கால் யூ லேட்டர்..." என்று அழைப்பை துண்டித்தான்..
ஆனால் அவனுக்கு இன்னும் மனதில் தெளிவில்லை.... என்ன இது?? மனசு இவ்வளவு பாரமாக இருக்கு என்று தலையை அழுந்த கோதியவாறே போர்ட்டிக்கோவில் வந்து அமர்ந்தவனுக்குத் தெரியவில்லை அந்த உணர்வு, தன் உணர்வுகளில் கலந்துவிட்ட தன் உயிரான தன்னவளின் இறுதி கதறல் என்று.
சிறு கேவலுடன் முழங்காலில் முகம் புதைத்திருந்தவளுக்கு மருந்தின் வீரியம் தாங்க இயலாமல் போக, தரையில் சாய்ந்தவள் கண்கள் சொருக ஆரம்பிக்க, தன்னை அறியாமல் மெதுவாக "அம்மா" என்று அழைத்தாள்.
அந்தச் சிறு முனகலில் விழித்த சுந்தரம் தன் அருகில் தாயின் படத்திற்குக் கீழ் தரையில் படுத்திருந்த மகளைப் பார்த்தவர் பதறி எழுந்தவரின் இதயம் ஒரு நிமிடம் உறைந்து போனது...
"கண்ணம்மா" என்று கதறியவர் அவளைப் பற்றி நிமிர்த்த, கண்கள் சொருகி கிடந்தவளிடம் இருந்து வந்த வாடை சொல்லியது அவள் பூச்சி மருந்தை அருந்தியிருக்கிறாள் என்று.
"பாவி மகளே!!!" என்று கதறியவர் வெளியே ஓடி வந்து சாலையில் பித்துப் பிடித்தவர் போல் ஓட, எதிர்பட்ட ஆட்டோ ஓட்டுனரிடம் விளக்கம் சொல்லி அதே ஆட்டோவில் கனிகாவை தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்.
மருத்துவர்கள் அவளின் நிலை அறிந்து ஐ.சியூ.வில் சேர்க்க, வேறு வழியில்லாமல் அகிலுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, கேட்டவனுக்கு இந்தப் பூ உலகமே இருண்டது போல் இருந்தது....
'அடிப்பாவி, கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாயே!!!' என்று உள்ளுக்குள் குமுறியவன் தன் பெற்றோரிடம் சொல்ல, அனைவரையும் சுமந்து கொண்டு அவர்களின் கார் கிராமத்தை நோக்கி விரைந்தது....
பெரு முயற்சி செய்து மருத்துவப் படை அவளின் உயிரை மீட்க போராட, ஐ.சி.யுவின் வாயிலில் நின்றிருந்த அகிலுக்கும் சுந்தரத்திற்கும் மற்ற அனைவருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிந்தது....
ஒரு வழியாக ஐ.சி.யுவில் இருந்து வெளியில் வந்த மருத்துவர் இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் வரை எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது என்று கூற, காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை....
ஆனால் அகிலின் மனதில் மட்டும் உறுத்திக் கொண்டே இருந்தது, இந்த விஷயத்தை எப்படியும் ஹர்ஷாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று...
ஏனெனில் இவளின் இன்றைய நிலைமைக்குக் காரணம் அவனே... அவனுக்குத் தெரிய வேண்டும் அவனுடைய முட்டாள் தனத்தின் விளைவு, கோபத்தின் விளைவு எப்படி ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையைச் சின்னா பின்னமாக ஆக்கியுள்ளது என்று....
அன்னையின் மரணத்திற்குப் பிறகு ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்று தன் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்தவளை தன் பிடிவாதமான காதலால் தன் பிடிக்குள் வைத்து, பின் அவளை ஒரே நாளில் ஒதுக்கி தள்ளியதும் இல்லாமல் அவளுக்கு அருவருப்பான நம்பிக்கை துரோக பட்டத்தையும் கட்டி, இதோ இப்பொழுது வாழ்வுக்கும் சாவிற்கும் இடையில் போராட வைத்தது முதல் அத்தனைக்கும் காரணகர்த்தா அவனே....
அவனுக்குக் கனிகாவின் நிலை தெரிய வேண்டும்... முடிவெடுத்தவன் சென்னைக்கு மீண்டும் பயணமானான்..
இந்த நிலைமையில் அவன் கனிகாவை விட்டுத் தூரம் செல்வது அவன் பெற்றோருக்கு மட்டும் அல்ல சுந்தரத்திற்கும் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது...
ஆனால் அவனால் ஒரு தக்க காரணத்தை அவர்களுக்குச் சொல்ல முடியவில்லை....
"மாமா, நான் இங்க இருந்து ஒண்ணும் பண்ணப் போறதில்லை....ஆனால் எனக்குச் சென்னையில் கனிகா சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய வேலை இருக்கு... அத நான் இப்போ செய்யலைன்னா என்னால என்னையவே மன்னிக்க முடியாது.... அதனால் ஏன், எங்க போறேன்னு கேட்காதீங்க, பட் நான் அப்பப்போ உங்களுக்கு ஃபோன் பண்ணி கனிகாவை பத்தி தெரிஞ்சுக்கிறேன்.... அது வரை அம்மாவும் அப்பாவும் நிகிலாவும் உங்க கூடவே இருப்பாங்க.." என்றவன் அவர்களின் பதிலுக்குக் காத்திராமல் சென்னைக்கு விரைந்தான்.....
ஹர்ஷாவின் தந்தை இந்தியாவிலேயே பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர், அவருக்குச் சென்னையில் பல இடங்களில் பல தொழில்களின் அலுவலகங்களும் கிளைகளும் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும்....
அதில் தலைமை கிளைக்குச் சென்று முதலில் அவருடைய வீட்டின் விலாசத்தைக் கண்டு பிடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தவனுக்கு அது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை....
தான் இதே செயலை இரண்டு வருடங்களுக்கு முன்னரே செய்திருந்தால் ஒரு வேளை கனிகா இன்று நல்ல படியாக இருந்திருக்கலாம் என்ற குற்ற உணர்வு வர எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் ஹர்ஷாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் ஒரு வழியாகச் சிதம்பரத்தின் வீட்டை அடைந்தான்....
வாசலில் நின்ற காவலாளியிடம் தான் ஹர்ஷாவின் உடன் படித்த தோழன் என்றும் ஹர்ஷாவின் தந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூற, அவர் அவனை வீட்டின் காம்பௌண்டிற்குள் உள்ளே கூட விடவில்லை....
நேரம் ஆக ஆகக் கனிகாவின் நினைவுகள் அழுத்த, தலையைக் கோதியவாறே ஒன்றும் செய்ய இயலாமல் வாசலிலேயே காத்திருந்தவனுக்கு தெய்வம் போல் காட்சி தந்தார் சங்கீதா....
வெளியில் சென்று இருந்தவர் வீட்டிற்குத் திரும்ப, வாசலில் காத்திருந்த அகிலை பார்த்தவர் என்ன என்று கேட்க, தான் ஹர்ஷாவின் கல்லூரி தோழன் என்றும் அவனுடன் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஆனால் இப்பொழுது அவனிடம் பேசிய ஆக வேண்டும் என்று கூறினான்....
வீட்டிற்குள் அழைத்தவர் அவனின் கலங்கிய தோற்றத்தை பார்த்து "என்னப்பா எதுவும் பிரச்சனையா? என்க,
"இல்லைம்மா, உடனே நான் அவன் கிட்ட பேசனும்..." என்று அவன் கூற அவனின் அம்மா என்ற சொல் சங்கீதாவின் மனதை ஈர்த்தது... இவனும் கிட்டதட்ட ஹர்ஷாவின் வயதை ஒத்தவன் போல் இருக்கிறான் என்று நினைத்தவர்,
"ஹர்ஷா இப்போல்லாம் முன்ன மாதிரி இல்லைப்பா... யாரிடமும் சரியாகப் பேச மாட்டேங்கிறான்.... எத்தனையோ தடவை இந்தியா திரும்பச் சொல்லியும் அவனுக்கு வர இஷ்டம் இல்லங்கிறான்....என்ன நடந்தது ஏன் இப்படி மாறினான்னு தெரியலை...அவனோட ஃப்ரெண்ட்ஸ் எத்தனையோ பேர் அவன் நம்பரை எங்களிடம் கேட்கிறார்கள்...ஆனால் யாருக்கும் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கான்.... ஆனால் உன்னைப் பார்த்தால் ஏதோ பிரச்னையில் இருக்கிற மாதிரி இருக்கு... அதனால் அவன் நம்பரை கொடுக்கிறேன்...நீயாவது முடிந்தால் அவனைத் திரும்பி இந்தியா வரச் சொல்லுப்பா.." என்று கெஞ்சினார்....
ஆக இவர் சொல்லுவதைப் பார்த்தால் ஹர்ஷாவும் சந்தோஷமாக இல்லை... எங்கேயோ இடிக்கிறதே என்று யோசிக்க ஆரம்பித்தவன் அதற்கு இது நேரம் இல்லை என்று அவரிடம் நம்பரை வாங்கியவன் அவர் காபி அருந்த சொல்லியும் இன்னொரு நாள் வருவதாகக் கூறி அதி வேகமாக விரைந்தான்.
****************************************
கல்லூரியில் இருந்து வந்ததில் இருந்து தன் அறையில் அடைந்து கிடந்த ஹர்ஷாவிற்கு இன்னமும் அந்தப் படபடப்பும் திகிலும் குறைந்தபாடில்லை....
நெருஞ்சி முள் போல் எதுவோ நெஞ்சில் குத்திக் கொண்டே இருக்க நிச்சயம் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க இருக்கிறது என்று உள் மனது சொல்ல கலங்கியவன் அவனுக்கு நெருங்கியவர்கள் என்றால் அது அவனுடைய பெற்றோர் மட்டும் தான் ஆனால் அவர்களும் தங்களுக்கு ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார்களே... அப்படியானால் யாருக்கு என்ன நடக்கப் போகிறது என்று யோசித்தவாறே படுத்திருந்தான்....
உச்சத்தைப் பார்த்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்குச் சுரீரென்று கனிகாவின் முகம் வந்து போனது... அப்படியானால் அவளுக்குத் தான் என்னவோ நடந்திருக்க வேண்டும், ஏதோ ஒரு ஆபத்தில் சிக்கியிருக்கிறாள் என்று உள்ளுணர்வு கூற நெஞ்சு பிசைவது போல் இருக்கத் தன்னை அறியாமல் "கனிஈஈஈஈஈஈ" என்று அலறியவன் நெஞ்சை பிடித்தவாறே எழுந்து அமர்ந்தான்....
காதலிப்பவளிடம் அவன் காதல் வார்த்தைகள் பேசவில்லை, அவளின் நலம் அறிய முயற்சிக்கவில்லை, ஆனால் அவளைத் தன் உயிராகச் சுமந்திருந்தவன் தூர தேசத்திலும் அவளின் வலியை மட்டும் உணர்ந்தான்...
ஒரு வேளை இந்நேரம் அவள் அகிலை திருமணம் செய்து கொண்டிருக்கலாம் அல்லது திருமணம் செய்ய முடிவு செய்திருக்கலாம் ஆனால் அவளின் உயிருக்கு மட்டும் எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று மனதார எண்ணியவன், "கடவுளே அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது" என்று வேண்டினான்....
நமக்குப் பிடித்தவர்களுக்கு நம்மைப் பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்கள் எங்கிருந்தாலும் நல்ல விதமாக இருக்க வேண்டும் என்று உளமாற நினைப்பது தானே தூய அன்புக்கு அஸ்திவாரம்.... என்ன தான் அவன் தன்னுடைய கர்வத்திற்கும் ஆணவத்திற்கும் எப்பொழுதும் முதலிடம் கொடுத்திருந்தாலும், அவனின் காதல் உண்மை தானே.... கலக்கத்துடன் அமர்ந்திருந்தவனுக்குத் திடுக்கென்று தூக்கிவாரிப் போட்டது அவனின் அலைபேசிக்கு வந்த அழைப்புச் சத்தத்தில்....
கலங்கிய முகத்துடன் அலைபேசியைப் பார்த்தவனுக்கு அழைப்பை எடுக்கவே அச்சமாக இருந்தது... நெஞ்சு முழுமையும் பயம் கவ்வி கொள்ளச் சிறிது நேரம் வரை காத்திருந்தவன் மீண்டும் அலை பேசி அழைக்கச் சற்று தயங்கியவாறே அழைப்பை எடுக்க அங்கு "ஹர்ஷா, நான் அகில் பேசுறேன்...கனிகாவின் மாமா பையன்" என்றவுடனே சேர்த்து வைத்திருந்த ஒட்டு மொத்த தைரியமும் அவனை விட்டு அகன்றது....
"அகில், கனிக்கு என்னாச்சு?" என்று படபடப்புடன் கேட்ட ஹர்ஷாவின் கேள்வியில் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான் அகில்...
'முட்டாள்கள்!!!! ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை, ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் இந்த அளவிற்குக் காதலிக்கிறார்கள்...... அவள் என்னடா என்றால் இவன் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்பது போல் தற்கொலை வரை போயிருக்கிறாள்.... இவன் என்னடா என்றால் இத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தும் அவளுக்கு நடந்த விபரீதத்தை உணர்ந்து ஃபோனை எடுத்தவுடனே கனிகாவிற்கு என்னாச்சு என்கிறான்.... இவனுக்கு எப்படித் தெரியும் கனிகாவின் நிலைமை... அப்படி என்றால் இவன் உள்ளுணர்வு எதனையோ இவனுக்கு உணர்த்தியிருக்கு, அடி முட்டாள்கள்!!' என்று நினைத்தவன்,
"ஹர்ஷா....கனிகா பாய்ஸன் சாப்பிட்டுட்டா...." என்று கூறியது மட்டும் தான் ஹர்ஷாவின் காதில் விழுந்தது....
அலைபேசி கையில் இருந்து நழுவி தரையில் விழ கட்டிலில் பொத்தென்று விழுந்தவனின் இதயம் வெடித்துச் சிதறியது போல் இருந்தது....
அப்படி என்றால் என் உள்ளுணர்வு உணர்த்தியது சரி.... சட்டென்று சுயநினைவிற்கு வந்தவன் தரையில் கிடந்த அலைபேசியை எடுக்க, அதில் அகில் "ஹர்ஷா" என்று கத்திக் கொண்டிருந்தான்....
"அகில், அவளுக்கு என்னாச்சு? ஏன் இப்படிப் பண்ணினா? இப்போ எப்படி இருக்கா?" என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க,
"ஹர்ஷா அவள் பாய்ஸன் சாப்பிட்டுட்டான்னு மாமா சொன்னதும் நாங்க எல்லாரும் வேப்பங்குடிக்கு போய்ட்டோம்.. அங்குப் பக்கத்திலேயே ஒரு ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருக்காங்க... இன்னும் ஐ.சி.யுவில் தான் இருக்கா.... இருபத்தி நாலு மணி நேரம் சென்று தான் எதையும் உறுதியா சொல்ல முடியும்னு டாக்டர் சொன்னவுடனேயே நான் சென்னைக்குக் கிளம்பிட்டேன்... நான் எப்படியும் உங்கக்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லிடணும் தான் திரும்பச் சென்னை வந்து எப்படியோ உங்க கம்பெனி மூலமா உங்க வீட்டிற்குப் போய் உங்க அம்மாக்கிட்ட உங்க காண்டாக்ட் நம்பர் வாங்கினேன்.."
ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா,
"அகில், நான் இப்போவே இண்டியா கிளம்பறேன்....எனக்கு என் கனிய பார்க்கணும்.." என்றவன் அகிலின் பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்துத் தன் நண்பனை அழைத்து இந்தியா செல்ல டிக்கட் எடுக்கச் சொன்னவன் "ஐ ஹாவ் டு லீவ் அஸ் ஏர்லி அஸ் பாஸிபில் [I have to leave as early as possible] " என்று கத்தியவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் விமான நிலையத்தில் இருந்தான்....
விமானம் கிளம்பியதில் இருந்து ஒவ்வொரு விநாடியும் மூச்சு விடக் கூட முடியாமல் தவிப்பது போல் தவித்தவனை விமானப் பணிப்பெண்ணின், "டு யூ வாண்ட் எனி திங் டு ட்ரிங் ஸார்? [Do you want anything to drink sir?"] " என்ற அழைப்பு சுய நினைவுக்குக் கொண்டு வந்தது..
அவனின் கலங்கிய கண்களைப் பார்த்தவள் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பது புரிய, அவன் முகம் நோக்கி குனிந்தவள் மெதுவாக "இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட் ஸார்?" என்றாள்...
"யெஸ்" என்றவன் தன்னை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்குமாறு அவளுடன் பணி செய்யும் அனைவரிடமும் சொல்ல சொன்னான்.....
"ஷ்யூர் ஸார்.." என்றவள் அதன் பிறகு அவன் அருகில் யாரும் நெருங்காமல் பார்த்துக் கொண்டாள்... இடையில் அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தவன் தன் தந்தைக்கு அழைத்தான்....
"டாட் இன்னும் ஆறு மணி நேரத்தில் நான் சென்னை ஏர்போர்ட் வந்து இறங்கிவிடுவேன்....என்னோட காரை ஏர்போர்ட்டிற்கு அனுப்பி வைங்க..." என்றான்.
சிதம்பரத்திற்கு அவன் திடீரென்று இந்திய திரும்புவது குழப்பத்தைக் கொடுத்தது.
"ஹர்ஷா என்ன ஆச்சு? எதுவும் ப்ராப்ளமா? எங்க கிட்ட ஏன் நீ வரதைப் பத்தி முன்னமே சொல்லலை.."
"டாட், ப்ளீஸ் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க... காரை மட்டும் அனுப்பி வைங்க.. நீங்களோ, மாம்மோ வர வேண்டாம்..." என்றவன் அவர் பதில் சொல்லும் முன் அழைப்பை துண்டித்தான்....
அவன் குரலில் இருந்து தொய்வு, கலக்கம் அனைத்தையும் உணர்ந்தவருக்குத் தன் மகன் தங்களிடம் இருந்து எதனையோ மறைக்கிறான், அது மட்டும் இல்லாமல் அவன் கலங்கி போய் இருப்பது போல் தெரிகிறது என்று நினைத்தவர் அவன் சொல்லியும் கேளாமல் தானே விமான நிலையத்திற்குச் செல்ல காரை கிளப்பினார்...
அவரின் பதட்டம் தன்னையும் தொற்றிக்கொள்ளப் பிடிவாதமாகச் சங்கீதாவும் இணைந்து கொண்டார்.... விமான நிலையத்தைச் சென்றடைந்த அவர்கள் ஹர்ஷாவிற்காகப் பதட்டத்தோடு காத்திருக்க அடுத்தச் சில மணி நேரங்களில் ஹர்ஷா விமானம் நிலையத்தை விட்டு வெளியில் வந்தான்...
இரண்டு வருடங்கள் தங்கள் ஒரே மகனை பிரிந்து இருந்தவர்களுக்கு இன்று அவன் திரும்பி வருவது மகிழ்ச்சியாக இருந்த அதே சமயம், அவன் இந்த இரண்டு வருடங்களில் எந்நேரமும் எதனையோ இழந்தது போல் இருந்ததும், இப்பொழுது பதற்றத்துடன் பேசியதும் கலக்கத்தைக் கொடுத்தது....
விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தவன் தன் தந்தைக்கு அழைக்க அதற்குள் அவனை எதிர்பார்த்து விமான நிலையத்தின் வாயிலில் காத்திருந்தவர் ஓட்டமும் நடையுமாக அவன் இருந்த இடத்திற்குச் சென்றார்....
கார் டிரைவரை எதிர்பார்த்திருந்தவன் தந்தையைக் கண்டதும் ஒன்றும் பேசாமல் அவர் அருகில் செல்ல, அவனின் முகத்தில் இருந்த கலவரத்தை பார்த்தவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்...
"டாட், கிவ் மி தி கி [Dad, give me the key]" என்றவன் காரின் சாவியை வாங்க கை நீட்ட,
"ஹர்ஷா, நீ எங்க வேண்டுமானாலும் போ... ஆனால் நாங்களும் உன் கூட வருவோம்..." என்றார்...
நாங்களும் என்றால் என்று யோசித்தவனுக்குத் தந்தையைத் தொடர்ந்து வந்திருந்த தன் அன்னையைக் கண்டதும் தன்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை....
ஆனால் நின்று அழுது கரைவதற்கு இது நேரமில்லை என்று உணர்ந்தவன் தன் உணர்வுகளை வலுக்கட்டாயமாகக் கட்டுப்பட்டுத்திக் கொண்டு அவரிடம் இருந்து காரின் சாவியை வாங்கியவன் தன் காரைப் புயல் வேகத்தில் கிளப்பினான்.....
கார் ஜெட் வேகத்தில் வேப்பங்குடி நோக்கி பறக்க அகில் சொன்ன இருபத்திநாலு மணி நேரம் எப்பொழுதோ கடந்திருந்தது...
இது வரை அகிலிற்கு அழைக்க மனதில் தைரியமும், உடலில் சக்தியும் இல்லாமல் தளர்ந்திருந்தவன், இனியும் தாமதிப்பதில் பயனில்லை என்று உணர்ந்து ஒரு கையில் காரை செலுத்தியவாறே நடுங்கும் விரல்களோடு அகில் அழைத்திருந்த எண்ணுக்கு அழைத்தான்....
அவனின் பொறுமையைச் சோதிப்பது போல் அகில் அவன் அழைப்பை எடுக்கவில்லை.... உடலில் பதற்றம் வந்து தொற்றிக் கொள்ள, இதயம் வெளியில் வந்து விழுந்துவிடுவது போல் துடிதுடிக்க, உயிரை கைகளில் தேக்கி வைத்துக் கொண்டு மீண்டும் அகிலுக்கு அழைத்தான்...
நீண்ட நேரம் சென்று அகில் அழைப்பை எடுக்க எகிறி துடிக்கும் இதயத்துடன், "அகில்... ஹர்ஷா பேசுறேன்... கனி எப்படி இருக்கா?" என்றான்...
அகில் சொல்லும் ஒற்றை வார்த்தையில் தன் உயிரை தேக்கி வைத்திருந்தவனிடம், "ஆபத்தான கட்டத்தில் இருந்து தாண்டிட்டா ஹர்ஷா... பட் ஸ்டில் ஐ. சி. யுவில் தான் இருக்கா..." என்ற வார்த்தையில் ஆகாயத்தை நோக்கி தன்னிடம் இருந்து விடைப் பெற்று சென்று கொண்டிருந்த உயிரை மீண்டும் இவ்வுலகிற்குக் கொண்டு வந்தது போல் இருந்தது....
அகிலின் பதிலில் சட்டென்று காரின் வேகத்தைக் குறைத்தவன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டுக் கார் ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்தவனின் உடல் குலுங்க, அதிருந்தார்கள் சிதம்பரமும் சங்கீதாவும்...
ஏனெனில் சின்ன வயதில் இருந்து ஹர்ஷா எதற்காகவும் அழுதது இல்லை, எது வேண்டும் என்றாலும் முரட்டுத் தனமாக ஆர்ப்பாட்டம் செய்து தனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள்வானே ஒழிய அவள் கண்களில் நீர் என்பது சிந்தியதில்லை...
அப்பேற்பட்ட மகன் இன்று உடல் குலுங்க மனம் வெதும்ப அழுது கொண்டிருக்கிறான் என்றால் என்ன நடந்திருக்கும்? அவனை எது இந்த அளவிற்குப் பாதித்திருக்கும்? என்று கலங்கிய சங்கீதா பதற்றத்துடன் பின் சீட்டிலிருந்து எக்கி அவன் முதுகை தொட, அதற்குள் சிதம்பரம் திரும்பி அவரைப் பார்த்து 'அவனைத் தொந்தரவு செய்யாதே' என்பது போல் சைகை செய்தார்....
கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு முன் ஹர்ஷா தங்களிடம் ஒரு முறை தங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டதை நினைத்தவர், ஒன்றன் பின் ஒன்றாகக் கோர்த்துப் பார்த்தவர், அவன் வெளிநாடு சென்றதில் இருந்து அவன் இருந்த விதமும், இதோ இன்று அரண்டு அடித்து இந்தியா வந்ததும், இப்பொழுது "எப்படி இருக்கா கனி?" என்று தன் உயிரை தேக்கி வைத்து கேட்ட விதமும் அவருக்கு நன்கு உணர்த்தியது...
தன் மகனுக்குக் கனி என்ற பெண்ணிடம் உள்ள காதலை.... தன்னைச் சமன்படுத்தியவன் காரைக் கிளப்ப, அகிலுக்கு அழைத்து மருத்துவமனை விலாசத்தைத் தன் அலைபேசிக்கு அனுப்ப சொன்னான்... கிட்டதட்ட 2 மணி நேர பயணத்திற்குப் பிறகு மருத்துவமனையை அடைந்தவன் காரை நிறுத்திய நொடியே ஐ.சி.யூவை நோக்கி ஓடினான்...
அவன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய விதத்திலும், அவனின் பதற்றமும், தவிப்பும், அழுகையும் சொல்லாமல் சொல்லியது தஙகள் மகனின் இதயத்தில் புதைந்து இருக்கும் காதலின் ஆழத்தை... அவனைப் பின் தொடர்ந்து ஓடிய சிதம்பரத்திற்கும் சங்கீதாவுக்கும் தன் மகன் விரும்பும் பெண்ணிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று இருந்தது....
நேரே ஐ.சி.யுவை அடைந்தவன் ஐ.சி.யுவின் வாயிலில் இருந்த சேரில் அகில் அமர்ந்திருக்க, அவனை நோக்கி ஒடியவன் மூச்சு வாங்க "அகில்" என்று அழைத்தான்...
நிமிர்ந்து பார்த்த அகிலுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது ஹர்ஷாவைப் பார்த்த பொழுது...
தான் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன் ஹோட்டலில் சந்தித்த ஹர்ஷாவா இது என்று.... அவன் எத்தனை கம்பீரத்துடனும் ஆளுமையுடனும் வசீகரத்துடனும் இருந்தான்... ஆனால் இந்த ஹர்ஷா களைத்து போன தோற்றத்துடன் தாடியை கூடச் சவரம் செய்யாமல் கலைந்த முகத்துடன் இளைத்துப் பரிதாபமாக இருந்தான்...
"கனி எங்க அகில்?"
நடுங்கும் குரலில் ஹர்ஷா கேட்க, அவனைப் பரிதாபமாகப் பார்த்தவன், "உள்ளே தான் இருக்கா ஹர்ஷா... இன்னும் கொஞ்ச நேரத்தில் ரெகுலர் ரூமிற்குள் மாத்திவிடுறதா டாக்டர் சொல்லியிருக்காங்க..." என்றான்.
அவன் கை காட்டிய திசையைப் பார்த்தவன் அங்கு அறையின் கதவில் கண்ணாடி துவாரம் போல் இருக்க, அதன் வழியாக உள்ளே பார்த்தவன் விருட்டென்று தன்னிச்சையாக இரண்டடி பின்னால் நகர்ந்தான்....
ஏனெனில் அங்குப் படுத்திருந்த கனிகா அவன் கனிகா போல் அல்ல...
தொடரும்..
அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு வர குளியல் அறைக்குள் சென்றவள் நெஞ்சைப் பிளந்து வெடித்து வெளியேறிய கதறலுடன்,
"நீங்க என்னைப் பத்தி என்ன நினைச்சிருந்தாலும் பரவாயில்லைங்க.... ஆனால் உங்களுக்கு நான் கொடுத்த வாக்கை மீற முடியாது.... உங்களைத் தவிர என் வாழ்க்கையில் எந்த ஆம்பளைக்கும் இடம் இல்லை... அப்படியே நடக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் நான் தீக்குளிச்சிருவேன்னு சொன்னேன்..... என்னால இப்போ இருக்கும் சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முடியும்னு தோணலை... அந்த ஓநாய் நிச்சயம் என்னை வேட்டையாடிடுவான்.... அவன் கிட்ட இருந்து இன்னைக்குத் தப்பிச்சுட்டேன்... ஆனால் எப்பவும் முடியுமான்னு தெரியலை.... அதுக்கு இது ஒண்ணு தான் வழி.." என்று கூறியவள் பூச்சி மருந்தை தன் வாயில் ஊற்றினாள்
மற்ற பெண்களைப் போல் தைரியமானவளாக இருந்திருந்தால் ஒரு வேளை அவளால் இதைப் போன்ற சூழ் நிலைகளில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்க முடியும்... ஆனால் இயற்கையிலேயே மிகுந்த பயந்த சுபாவம் உள்ளவளுக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்த முடிவே சிறந்ததாகத் தோன்றியது.
மற்றவர்களுக்கு முட்டாள்தனமாக, கோழைத் தனமாகத் தெரியும் இந்த முடிவு, தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்குச் சரியான முடிவாகத் தெரிவது தான் கொடுமையே!!!!
குடித்து முடித்தவள் மெதுவாக வீட்டிற்குள் நுழைந்து தன் அன்னையின் புகைப்படத்தின் அருகில் வந்தவள் அதன் கீழ் அப்படியே முழங்காலை மடித்து அமர்ந்து தலை சாய்த்தவளின் எண்ணம் முழுவதும் "ஹர்ஷா! ஹர்ஷா! ஹர்ஷாவே தான்!!!!"
***************************************************
அன்று காலையில் இருந்தே மனம் ஏனோ படபடப்பாக இருக்க, கல்லூரியிலும் ஹர்ஷாவின் மனதிற்கு எதுவோ சரியில்லாதது போல் தோன்றியது.... இதயம் வேகமாக அடித்துக் கொள்வது போல் இருக்க, ஏதோ கெட்ட விஷயம் நடக்கப் போவது போல் திகிலாக இருந்தது.
அதற்கு மேல் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் தன் அறைக்கு வந்தவன் தன் அன்னையை அழைக்க, அவன் குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டு கலக்கம் அடைந்தவர், "என்ன ஹர்ஷா? இஸ் எவ்ரிதிங் ஆல் ரைட்?" என்றார்.
"யெஸ் மாம்...ஹவ் ஆர் யூ அன்ட் டாட்? [Yes, mom.. How are you and dad?] " என்றான்... அவன் குரல் சரியில்லாதைப் போல் தோன்ற 'நாங்க நல்லா இருக்கோம் ஹர்ஷா.... ஏன்பா இந்த நேரத்தில் கூப்புடுற....எதுனா பிரச்சனையா?"
"நோ மாம்...பிரச்சனை ஒண்ணும் இல்லை...சும்மா உங்க குரலைக் கேட்கணும்னு தோனுச்சு, அதான்.."
"ஹர்ஷா...ஐ டோன்ட் நோ வாட்ஸ் ஹாப்பனிங் டு யூ [ Harsha, I don't know what's happening to you]....முன்ன மாதிரி நீ எங்க கூடப் பேசறது கூட இல்லை... ரொம்பத் தூரம் தள்ளி போய்ட்டப்பா... கொஞ்சம் யோசிச்சு பாரு, எனக்கும் உன் டாடுக்கும் உன்னை விட்டால் வேறு யாரு இருக்கா... சொல்லு.... சீக்கிரம் திரும்பி வாப்பா... என்ன பிரச்சனையா இருந்தாலும் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சரி பண்ணுவோம்... இப்படி எங்களைக் கஷ்டப்படுத்தாதப்பா..."
அவரின் குரலில் தெரிந்த ஏக்கமும் வருத்தமும் அவனையும் தாக்க, இதற்கு மேல் பேசினால் உடைந்து விடுவோம் என்று உணர்ந்தவன், "ஓகே மாம்...ஐ வில் கால் யூ லேட்டர்..." என்று அழைப்பை துண்டித்தான்..
ஆனால் அவனுக்கு இன்னும் மனதில் தெளிவில்லை.... என்ன இது?? மனசு இவ்வளவு பாரமாக இருக்கு என்று தலையை அழுந்த கோதியவாறே போர்ட்டிக்கோவில் வந்து அமர்ந்தவனுக்குத் தெரியவில்லை அந்த உணர்வு, தன் உணர்வுகளில் கலந்துவிட்ட தன் உயிரான தன்னவளின் இறுதி கதறல் என்று.
சிறு கேவலுடன் முழங்காலில் முகம் புதைத்திருந்தவளுக்கு மருந்தின் வீரியம் தாங்க இயலாமல் போக, தரையில் சாய்ந்தவள் கண்கள் சொருக ஆரம்பிக்க, தன்னை அறியாமல் மெதுவாக "அம்மா" என்று அழைத்தாள்.
அந்தச் சிறு முனகலில் விழித்த சுந்தரம் தன் அருகில் தாயின் படத்திற்குக் கீழ் தரையில் படுத்திருந்த மகளைப் பார்த்தவர் பதறி எழுந்தவரின் இதயம் ஒரு நிமிடம் உறைந்து போனது...
"கண்ணம்மா" என்று கதறியவர் அவளைப் பற்றி நிமிர்த்த, கண்கள் சொருகி கிடந்தவளிடம் இருந்து வந்த வாடை சொல்லியது அவள் பூச்சி மருந்தை அருந்தியிருக்கிறாள் என்று.
"பாவி மகளே!!!" என்று கதறியவர் வெளியே ஓடி வந்து சாலையில் பித்துப் பிடித்தவர் போல் ஓட, எதிர்பட்ட ஆட்டோ ஓட்டுனரிடம் விளக்கம் சொல்லி அதே ஆட்டோவில் கனிகாவை தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்.
மருத்துவர்கள் அவளின் நிலை அறிந்து ஐ.சியூ.வில் சேர்க்க, வேறு வழியில்லாமல் அகிலுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, கேட்டவனுக்கு இந்தப் பூ உலகமே இருண்டது போல் இருந்தது....
'அடிப்பாவி, கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாயே!!!' என்று உள்ளுக்குள் குமுறியவன் தன் பெற்றோரிடம் சொல்ல, அனைவரையும் சுமந்து கொண்டு அவர்களின் கார் கிராமத்தை நோக்கி விரைந்தது....
பெரு முயற்சி செய்து மருத்துவப் படை அவளின் உயிரை மீட்க போராட, ஐ.சி.யுவின் வாயிலில் நின்றிருந்த அகிலுக்கும் சுந்தரத்திற்கும் மற்ற அனைவருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிந்தது....
ஒரு வழியாக ஐ.சி.யுவில் இருந்து வெளியில் வந்த மருத்துவர் இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் வரை எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது என்று கூற, காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை....
ஆனால் அகிலின் மனதில் மட்டும் உறுத்திக் கொண்டே இருந்தது, இந்த விஷயத்தை எப்படியும் ஹர்ஷாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று...
ஏனெனில் இவளின் இன்றைய நிலைமைக்குக் காரணம் அவனே... அவனுக்குத் தெரிய வேண்டும் அவனுடைய முட்டாள் தனத்தின் விளைவு, கோபத்தின் விளைவு எப்படி ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையைச் சின்னா பின்னமாக ஆக்கியுள்ளது என்று....
அன்னையின் மரணத்திற்குப் பிறகு ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்று தன் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்தவளை தன் பிடிவாதமான காதலால் தன் பிடிக்குள் வைத்து, பின் அவளை ஒரே நாளில் ஒதுக்கி தள்ளியதும் இல்லாமல் அவளுக்கு அருவருப்பான நம்பிக்கை துரோக பட்டத்தையும் கட்டி, இதோ இப்பொழுது வாழ்வுக்கும் சாவிற்கும் இடையில் போராட வைத்தது முதல் அத்தனைக்கும் காரணகர்த்தா அவனே....
அவனுக்குக் கனிகாவின் நிலை தெரிய வேண்டும்... முடிவெடுத்தவன் சென்னைக்கு மீண்டும் பயணமானான்..
இந்த நிலைமையில் அவன் கனிகாவை விட்டுத் தூரம் செல்வது அவன் பெற்றோருக்கு மட்டும் அல்ல சுந்தரத்திற்கும் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது...
ஆனால் அவனால் ஒரு தக்க காரணத்தை அவர்களுக்குச் சொல்ல முடியவில்லை....
"மாமா, நான் இங்க இருந்து ஒண்ணும் பண்ணப் போறதில்லை....ஆனால் எனக்குச் சென்னையில் கனிகா சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய வேலை இருக்கு... அத நான் இப்போ செய்யலைன்னா என்னால என்னையவே மன்னிக்க முடியாது.... அதனால் ஏன், எங்க போறேன்னு கேட்காதீங்க, பட் நான் அப்பப்போ உங்களுக்கு ஃபோன் பண்ணி கனிகாவை பத்தி தெரிஞ்சுக்கிறேன்.... அது வரை அம்மாவும் அப்பாவும் நிகிலாவும் உங்க கூடவே இருப்பாங்க.." என்றவன் அவர்களின் பதிலுக்குக் காத்திராமல் சென்னைக்கு விரைந்தான்.....
ஹர்ஷாவின் தந்தை இந்தியாவிலேயே பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர், அவருக்குச் சென்னையில் பல இடங்களில் பல தொழில்களின் அலுவலகங்களும் கிளைகளும் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும்....
அதில் தலைமை கிளைக்குச் சென்று முதலில் அவருடைய வீட்டின் விலாசத்தைக் கண்டு பிடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தவனுக்கு அது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை....
தான் இதே செயலை இரண்டு வருடங்களுக்கு முன்னரே செய்திருந்தால் ஒரு வேளை கனிகா இன்று நல்ல படியாக இருந்திருக்கலாம் என்ற குற்ற உணர்வு வர எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் ஹர்ஷாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் ஒரு வழியாகச் சிதம்பரத்தின் வீட்டை அடைந்தான்....
வாசலில் நின்ற காவலாளியிடம் தான் ஹர்ஷாவின் உடன் படித்த தோழன் என்றும் ஹர்ஷாவின் தந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூற, அவர் அவனை வீட்டின் காம்பௌண்டிற்குள் உள்ளே கூட விடவில்லை....
நேரம் ஆக ஆகக் கனிகாவின் நினைவுகள் அழுத்த, தலையைக் கோதியவாறே ஒன்றும் செய்ய இயலாமல் வாசலிலேயே காத்திருந்தவனுக்கு தெய்வம் போல் காட்சி தந்தார் சங்கீதா....
வெளியில் சென்று இருந்தவர் வீட்டிற்குத் திரும்ப, வாசலில் காத்திருந்த அகிலை பார்த்தவர் என்ன என்று கேட்க, தான் ஹர்ஷாவின் கல்லூரி தோழன் என்றும் அவனுடன் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஆனால் இப்பொழுது அவனிடம் பேசிய ஆக வேண்டும் என்று கூறினான்....
வீட்டிற்குள் அழைத்தவர் அவனின் கலங்கிய தோற்றத்தை பார்த்து "என்னப்பா எதுவும் பிரச்சனையா? என்க,
"இல்லைம்மா, உடனே நான் அவன் கிட்ட பேசனும்..." என்று அவன் கூற அவனின் அம்மா என்ற சொல் சங்கீதாவின் மனதை ஈர்த்தது... இவனும் கிட்டதட்ட ஹர்ஷாவின் வயதை ஒத்தவன் போல் இருக்கிறான் என்று நினைத்தவர்,
"ஹர்ஷா இப்போல்லாம் முன்ன மாதிரி இல்லைப்பா... யாரிடமும் சரியாகப் பேச மாட்டேங்கிறான்.... எத்தனையோ தடவை இந்தியா திரும்பச் சொல்லியும் அவனுக்கு வர இஷ்டம் இல்லங்கிறான்....என்ன நடந்தது ஏன் இப்படி மாறினான்னு தெரியலை...அவனோட ஃப்ரெண்ட்ஸ் எத்தனையோ பேர் அவன் நம்பரை எங்களிடம் கேட்கிறார்கள்...ஆனால் யாருக்கும் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கான்.... ஆனால் உன்னைப் பார்த்தால் ஏதோ பிரச்னையில் இருக்கிற மாதிரி இருக்கு... அதனால் அவன் நம்பரை கொடுக்கிறேன்...நீயாவது முடிந்தால் அவனைத் திரும்பி இந்தியா வரச் சொல்லுப்பா.." என்று கெஞ்சினார்....
ஆக இவர் சொல்லுவதைப் பார்த்தால் ஹர்ஷாவும் சந்தோஷமாக இல்லை... எங்கேயோ இடிக்கிறதே என்று யோசிக்க ஆரம்பித்தவன் அதற்கு இது நேரம் இல்லை என்று அவரிடம் நம்பரை வாங்கியவன் அவர் காபி அருந்த சொல்லியும் இன்னொரு நாள் வருவதாகக் கூறி அதி வேகமாக விரைந்தான்.
****************************************
கல்லூரியில் இருந்து வந்ததில் இருந்து தன் அறையில் அடைந்து கிடந்த ஹர்ஷாவிற்கு இன்னமும் அந்தப் படபடப்பும் திகிலும் குறைந்தபாடில்லை....
நெருஞ்சி முள் போல் எதுவோ நெஞ்சில் குத்திக் கொண்டே இருக்க நிச்சயம் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க இருக்கிறது என்று உள் மனது சொல்ல கலங்கியவன் அவனுக்கு நெருங்கியவர்கள் என்றால் அது அவனுடைய பெற்றோர் மட்டும் தான் ஆனால் அவர்களும் தங்களுக்கு ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார்களே... அப்படியானால் யாருக்கு என்ன நடக்கப் போகிறது என்று யோசித்தவாறே படுத்திருந்தான்....
உச்சத்தைப் பார்த்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்குச் சுரீரென்று கனிகாவின் முகம் வந்து போனது... அப்படியானால் அவளுக்குத் தான் என்னவோ நடந்திருக்க வேண்டும், ஏதோ ஒரு ஆபத்தில் சிக்கியிருக்கிறாள் என்று உள்ளுணர்வு கூற நெஞ்சு பிசைவது போல் இருக்கத் தன்னை அறியாமல் "கனிஈஈஈஈஈஈ" என்று அலறியவன் நெஞ்சை பிடித்தவாறே எழுந்து அமர்ந்தான்....
காதலிப்பவளிடம் அவன் காதல் வார்த்தைகள் பேசவில்லை, அவளின் நலம் அறிய முயற்சிக்கவில்லை, ஆனால் அவளைத் தன் உயிராகச் சுமந்திருந்தவன் தூர தேசத்திலும் அவளின் வலியை மட்டும் உணர்ந்தான்...
ஒரு வேளை இந்நேரம் அவள் அகிலை திருமணம் செய்து கொண்டிருக்கலாம் அல்லது திருமணம் செய்ய முடிவு செய்திருக்கலாம் ஆனால் அவளின் உயிருக்கு மட்டும் எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று மனதார எண்ணியவன், "கடவுளே அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது" என்று வேண்டினான்....
நமக்குப் பிடித்தவர்களுக்கு நம்மைப் பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்கள் எங்கிருந்தாலும் நல்ல விதமாக இருக்க வேண்டும் என்று உளமாற நினைப்பது தானே தூய அன்புக்கு அஸ்திவாரம்.... என்ன தான் அவன் தன்னுடைய கர்வத்திற்கும் ஆணவத்திற்கும் எப்பொழுதும் முதலிடம் கொடுத்திருந்தாலும், அவனின் காதல் உண்மை தானே.... கலக்கத்துடன் அமர்ந்திருந்தவனுக்குத் திடுக்கென்று தூக்கிவாரிப் போட்டது அவனின் அலைபேசிக்கு வந்த அழைப்புச் சத்தத்தில்....
கலங்கிய முகத்துடன் அலைபேசியைப் பார்த்தவனுக்கு அழைப்பை எடுக்கவே அச்சமாக இருந்தது... நெஞ்சு முழுமையும் பயம் கவ்வி கொள்ளச் சிறிது நேரம் வரை காத்திருந்தவன் மீண்டும் அலை பேசி அழைக்கச் சற்று தயங்கியவாறே அழைப்பை எடுக்க அங்கு "ஹர்ஷா, நான் அகில் பேசுறேன்...கனிகாவின் மாமா பையன்" என்றவுடனே சேர்த்து வைத்திருந்த ஒட்டு மொத்த தைரியமும் அவனை விட்டு அகன்றது....
"அகில், கனிக்கு என்னாச்சு?" என்று படபடப்புடன் கேட்ட ஹர்ஷாவின் கேள்வியில் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான் அகில்...
'முட்டாள்கள்!!!! ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை, ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் இந்த அளவிற்குக் காதலிக்கிறார்கள்...... அவள் என்னடா என்றால் இவன் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்பது போல் தற்கொலை வரை போயிருக்கிறாள்.... இவன் என்னடா என்றால் இத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தும் அவளுக்கு நடந்த விபரீதத்தை உணர்ந்து ஃபோனை எடுத்தவுடனே கனிகாவிற்கு என்னாச்சு என்கிறான்.... இவனுக்கு எப்படித் தெரியும் கனிகாவின் நிலைமை... அப்படி என்றால் இவன் உள்ளுணர்வு எதனையோ இவனுக்கு உணர்த்தியிருக்கு, அடி முட்டாள்கள்!!' என்று நினைத்தவன்,
"ஹர்ஷா....கனிகா பாய்ஸன் சாப்பிட்டுட்டா...." என்று கூறியது மட்டும் தான் ஹர்ஷாவின் காதில் விழுந்தது....
அலைபேசி கையில் இருந்து நழுவி தரையில் விழ கட்டிலில் பொத்தென்று விழுந்தவனின் இதயம் வெடித்துச் சிதறியது போல் இருந்தது....
அப்படி என்றால் என் உள்ளுணர்வு உணர்த்தியது சரி.... சட்டென்று சுயநினைவிற்கு வந்தவன் தரையில் கிடந்த அலைபேசியை எடுக்க, அதில் அகில் "ஹர்ஷா" என்று கத்திக் கொண்டிருந்தான்....
"அகில், அவளுக்கு என்னாச்சு? ஏன் இப்படிப் பண்ணினா? இப்போ எப்படி இருக்கா?" என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க,
"ஹர்ஷா அவள் பாய்ஸன் சாப்பிட்டுட்டான்னு மாமா சொன்னதும் நாங்க எல்லாரும் வேப்பங்குடிக்கு போய்ட்டோம்.. அங்குப் பக்கத்திலேயே ஒரு ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருக்காங்க... இன்னும் ஐ.சி.யுவில் தான் இருக்கா.... இருபத்தி நாலு மணி நேரம் சென்று தான் எதையும் உறுதியா சொல்ல முடியும்னு டாக்டர் சொன்னவுடனேயே நான் சென்னைக்குக் கிளம்பிட்டேன்... நான் எப்படியும் உங்கக்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லிடணும் தான் திரும்பச் சென்னை வந்து எப்படியோ உங்க கம்பெனி மூலமா உங்க வீட்டிற்குப் போய் உங்க அம்மாக்கிட்ட உங்க காண்டாக்ட் நம்பர் வாங்கினேன்.."
ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா,
"அகில், நான் இப்போவே இண்டியா கிளம்பறேன்....எனக்கு என் கனிய பார்க்கணும்.." என்றவன் அகிலின் பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்துத் தன் நண்பனை அழைத்து இந்தியா செல்ல டிக்கட் எடுக்கச் சொன்னவன் "ஐ ஹாவ் டு லீவ் அஸ் ஏர்லி அஸ் பாஸிபில் [I have to leave as early as possible] " என்று கத்தியவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் விமான நிலையத்தில் இருந்தான்....
விமானம் கிளம்பியதில் இருந்து ஒவ்வொரு விநாடியும் மூச்சு விடக் கூட முடியாமல் தவிப்பது போல் தவித்தவனை விமானப் பணிப்பெண்ணின், "டு யூ வாண்ட் எனி திங் டு ட்ரிங் ஸார்? [Do you want anything to drink sir?"] " என்ற அழைப்பு சுய நினைவுக்குக் கொண்டு வந்தது..
அவனின் கலங்கிய கண்களைப் பார்த்தவள் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பது புரிய, அவன் முகம் நோக்கி குனிந்தவள் மெதுவாக "இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட் ஸார்?" என்றாள்...
"யெஸ்" என்றவன் தன்னை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்குமாறு அவளுடன் பணி செய்யும் அனைவரிடமும் சொல்ல சொன்னான்.....
"ஷ்யூர் ஸார்.." என்றவள் அதன் பிறகு அவன் அருகில் யாரும் நெருங்காமல் பார்த்துக் கொண்டாள்... இடையில் அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தவன் தன் தந்தைக்கு அழைத்தான்....
"டாட் இன்னும் ஆறு மணி நேரத்தில் நான் சென்னை ஏர்போர்ட் வந்து இறங்கிவிடுவேன்....என்னோட காரை ஏர்போர்ட்டிற்கு அனுப்பி வைங்க..." என்றான்.
சிதம்பரத்திற்கு அவன் திடீரென்று இந்திய திரும்புவது குழப்பத்தைக் கொடுத்தது.
"ஹர்ஷா என்ன ஆச்சு? எதுவும் ப்ராப்ளமா? எங்க கிட்ட ஏன் நீ வரதைப் பத்தி முன்னமே சொல்லலை.."
"டாட், ப்ளீஸ் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க... காரை மட்டும் அனுப்பி வைங்க.. நீங்களோ, மாம்மோ வர வேண்டாம்..." என்றவன் அவர் பதில் சொல்லும் முன் அழைப்பை துண்டித்தான்....
அவன் குரலில் இருந்து தொய்வு, கலக்கம் அனைத்தையும் உணர்ந்தவருக்குத் தன் மகன் தங்களிடம் இருந்து எதனையோ மறைக்கிறான், அது மட்டும் இல்லாமல் அவன் கலங்கி போய் இருப்பது போல் தெரிகிறது என்று நினைத்தவர் அவன் சொல்லியும் கேளாமல் தானே விமான நிலையத்திற்குச் செல்ல காரை கிளப்பினார்...
அவரின் பதட்டம் தன்னையும் தொற்றிக்கொள்ளப் பிடிவாதமாகச் சங்கீதாவும் இணைந்து கொண்டார்.... விமான நிலையத்தைச் சென்றடைந்த அவர்கள் ஹர்ஷாவிற்காகப் பதட்டத்தோடு காத்திருக்க அடுத்தச் சில மணி நேரங்களில் ஹர்ஷா விமானம் நிலையத்தை விட்டு வெளியில் வந்தான்...
இரண்டு வருடங்கள் தங்கள் ஒரே மகனை பிரிந்து இருந்தவர்களுக்கு இன்று அவன் திரும்பி வருவது மகிழ்ச்சியாக இருந்த அதே சமயம், அவன் இந்த இரண்டு வருடங்களில் எந்நேரமும் எதனையோ இழந்தது போல் இருந்ததும், இப்பொழுது பதற்றத்துடன் பேசியதும் கலக்கத்தைக் கொடுத்தது....
விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தவன் தன் தந்தைக்கு அழைக்க அதற்குள் அவனை எதிர்பார்த்து விமான நிலையத்தின் வாயிலில் காத்திருந்தவர் ஓட்டமும் நடையுமாக அவன் இருந்த இடத்திற்குச் சென்றார்....
கார் டிரைவரை எதிர்பார்த்திருந்தவன் தந்தையைக் கண்டதும் ஒன்றும் பேசாமல் அவர் அருகில் செல்ல, அவனின் முகத்தில் இருந்த கலவரத்தை பார்த்தவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்...
"டாட், கிவ் மி தி கி [Dad, give me the key]" என்றவன் காரின் சாவியை வாங்க கை நீட்ட,
"ஹர்ஷா, நீ எங்க வேண்டுமானாலும் போ... ஆனால் நாங்களும் உன் கூட வருவோம்..." என்றார்...
நாங்களும் என்றால் என்று யோசித்தவனுக்குத் தந்தையைத் தொடர்ந்து வந்திருந்த தன் அன்னையைக் கண்டதும் தன்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை....
ஆனால் நின்று அழுது கரைவதற்கு இது நேரமில்லை என்று உணர்ந்தவன் தன் உணர்வுகளை வலுக்கட்டாயமாகக் கட்டுப்பட்டுத்திக் கொண்டு அவரிடம் இருந்து காரின் சாவியை வாங்கியவன் தன் காரைப் புயல் வேகத்தில் கிளப்பினான்.....
கார் ஜெட் வேகத்தில் வேப்பங்குடி நோக்கி பறக்க அகில் சொன்ன இருபத்திநாலு மணி நேரம் எப்பொழுதோ கடந்திருந்தது...
இது வரை அகிலிற்கு அழைக்க மனதில் தைரியமும், உடலில் சக்தியும் இல்லாமல் தளர்ந்திருந்தவன், இனியும் தாமதிப்பதில் பயனில்லை என்று உணர்ந்து ஒரு கையில் காரை செலுத்தியவாறே நடுங்கும் விரல்களோடு அகில் அழைத்திருந்த எண்ணுக்கு அழைத்தான்....
அவனின் பொறுமையைச் சோதிப்பது போல் அகில் அவன் அழைப்பை எடுக்கவில்லை.... உடலில் பதற்றம் வந்து தொற்றிக் கொள்ள, இதயம் வெளியில் வந்து விழுந்துவிடுவது போல் துடிதுடிக்க, உயிரை கைகளில் தேக்கி வைத்துக் கொண்டு மீண்டும் அகிலுக்கு அழைத்தான்...
நீண்ட நேரம் சென்று அகில் அழைப்பை எடுக்க எகிறி துடிக்கும் இதயத்துடன், "அகில்... ஹர்ஷா பேசுறேன்... கனி எப்படி இருக்கா?" என்றான்...
அகில் சொல்லும் ஒற்றை வார்த்தையில் தன் உயிரை தேக்கி வைத்திருந்தவனிடம், "ஆபத்தான கட்டத்தில் இருந்து தாண்டிட்டா ஹர்ஷா... பட் ஸ்டில் ஐ. சி. யுவில் தான் இருக்கா..." என்ற வார்த்தையில் ஆகாயத்தை நோக்கி தன்னிடம் இருந்து விடைப் பெற்று சென்று கொண்டிருந்த உயிரை மீண்டும் இவ்வுலகிற்குக் கொண்டு வந்தது போல் இருந்தது....
அகிலின் பதிலில் சட்டென்று காரின் வேகத்தைக் குறைத்தவன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டுக் கார் ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்தவனின் உடல் குலுங்க, அதிருந்தார்கள் சிதம்பரமும் சங்கீதாவும்...
ஏனெனில் சின்ன வயதில் இருந்து ஹர்ஷா எதற்காகவும் அழுதது இல்லை, எது வேண்டும் என்றாலும் முரட்டுத் தனமாக ஆர்ப்பாட்டம் செய்து தனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள்வானே ஒழிய அவள் கண்களில் நீர் என்பது சிந்தியதில்லை...
அப்பேற்பட்ட மகன் இன்று உடல் குலுங்க மனம் வெதும்ப அழுது கொண்டிருக்கிறான் என்றால் என்ன நடந்திருக்கும்? அவனை எது இந்த அளவிற்குப் பாதித்திருக்கும்? என்று கலங்கிய சங்கீதா பதற்றத்துடன் பின் சீட்டிலிருந்து எக்கி அவன் முதுகை தொட, அதற்குள் சிதம்பரம் திரும்பி அவரைப் பார்த்து 'அவனைத் தொந்தரவு செய்யாதே' என்பது போல் சைகை செய்தார்....
கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு முன் ஹர்ஷா தங்களிடம் ஒரு முறை தங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டதை நினைத்தவர், ஒன்றன் பின் ஒன்றாகக் கோர்த்துப் பார்த்தவர், அவன் வெளிநாடு சென்றதில் இருந்து அவன் இருந்த விதமும், இதோ இன்று அரண்டு அடித்து இந்தியா வந்ததும், இப்பொழுது "எப்படி இருக்கா கனி?" என்று தன் உயிரை தேக்கி வைத்து கேட்ட விதமும் அவருக்கு நன்கு உணர்த்தியது...
தன் மகனுக்குக் கனி என்ற பெண்ணிடம் உள்ள காதலை.... தன்னைச் சமன்படுத்தியவன் காரைக் கிளப்ப, அகிலுக்கு அழைத்து மருத்துவமனை விலாசத்தைத் தன் அலைபேசிக்கு அனுப்ப சொன்னான்... கிட்டதட்ட 2 மணி நேர பயணத்திற்குப் பிறகு மருத்துவமனையை அடைந்தவன் காரை நிறுத்திய நொடியே ஐ.சி.யூவை நோக்கி ஓடினான்...
அவன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய விதத்திலும், அவனின் பதற்றமும், தவிப்பும், அழுகையும் சொல்லாமல் சொல்லியது தஙகள் மகனின் இதயத்தில் புதைந்து இருக்கும் காதலின் ஆழத்தை... அவனைப் பின் தொடர்ந்து ஓடிய சிதம்பரத்திற்கும் சங்கீதாவுக்கும் தன் மகன் விரும்பும் பெண்ணிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று இருந்தது....
நேரே ஐ.சி.யுவை அடைந்தவன் ஐ.சி.யுவின் வாயிலில் இருந்த சேரில் அகில் அமர்ந்திருக்க, அவனை நோக்கி ஒடியவன் மூச்சு வாங்க "அகில்" என்று அழைத்தான்...
நிமிர்ந்து பார்த்த அகிலுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது ஹர்ஷாவைப் பார்த்த பொழுது...
தான் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன் ஹோட்டலில் சந்தித்த ஹர்ஷாவா இது என்று.... அவன் எத்தனை கம்பீரத்துடனும் ஆளுமையுடனும் வசீகரத்துடனும் இருந்தான்... ஆனால் இந்த ஹர்ஷா களைத்து போன தோற்றத்துடன் தாடியை கூடச் சவரம் செய்யாமல் கலைந்த முகத்துடன் இளைத்துப் பரிதாபமாக இருந்தான்...
"கனி எங்க அகில்?"
நடுங்கும் குரலில் ஹர்ஷா கேட்க, அவனைப் பரிதாபமாகப் பார்த்தவன், "உள்ளே தான் இருக்கா ஹர்ஷா... இன்னும் கொஞ்ச நேரத்தில் ரெகுலர் ரூமிற்குள் மாத்திவிடுறதா டாக்டர் சொல்லியிருக்காங்க..." என்றான்.
அவன் கை காட்டிய திசையைப் பார்த்தவன் அங்கு அறையின் கதவில் கண்ணாடி துவாரம் போல் இருக்க, அதன் வழியாக உள்ளே பார்த்தவன் விருட்டென்று தன்னிச்சையாக இரண்டடி பின்னால் நகர்ந்தான்....
ஏனெனில் அங்குப் படுத்திருந்த கனிகா அவன் கனிகா போல் அல்ல...
தொடரும்..