அத்தியாயம் 25
வந்தவன் வேலை ஆட்களை அழைத்துத் தன் காரில் இருந்தவைகளை எடுத்து வரச் சொன்னவனின் விழிகள் தன்னிச்சையாகத் தன் மனையாளைத் தேட, அவள் சமையல் அறையில் இருப்பதைத் தெரிந்துக் கொண்டவன் அவளைத் தேடிச் சென்றான்.
அங்குத் தன் அன்னையுடன் சேர்ந்து பாங்காக அவள் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கு இத்தனை நாள் காத்திருந்த பலன் கிட்டியதாகவே பட்டது.
அவள் அருகில் வந்தவன் அவளுக்கு மட்டும் கேட்குமாறு குனிந்து, "நிறைய ட்ரெஸ் வாங்கி வந்திருக்கேன், நம் ரூமில் தான் வச்சிருக்கேன்.... அதில் ஸ்பெஷலா பர்ப்பிள் கலர்ல ஸில்க் ஸாரி இருக்கு.... போய் அதைக் கட்டிட்டு ரெடியாகு..." என்றான்.
அவன் தன் பின்னால் வந்து நின்றதே தெரியாமல் அவள் சமையலில் ஈடுப்பட்டிருக்க அவன் தீடீரென்று கிசுகிசுத்ததும் தூக்கிவாரிப் போட்டது என்றால் அவன் சொன்ன செய்தியில் நெஞ்சு படபடக்க அவனை நிமிர்ந்து கெஞ்சுதலாகப் பார்த்தவளைக் கண்டவனுக்கு இந்த உலகமே தன் காலடியில் வந்து விழுந்ததைப் போன்ற பிரமிப்பு வந்தது.
அவன் பார்வையின் வீரியத்தைத் தாங்காமல் சடக்கென்று தலையைத் திருப்பியவள் சங்கீதாவைப் பார்க்க அவர் இவர்கள் இருவரையும் கண்டும் காணாதது போல் மும்முரமாக வேலையில் இருந்தார்.
"சீக்கிரம் வா.." என்று சொல்லி திரும்பியவனைச் சங்கீதாவின் குரல் அழைத்தது.
"ஹர்ஷா டின்னர் ரெடிப்பா.... ஒரேடியா சாப்பிட்டுட்டு போ..."
"ஒகே மாம்.." என்றவன் டைனிங் டேபிளில் அமர கனிகா உணவு பறிமாற உள்ளம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க வழக்கத்தை விடச் சிறிது அதிகமாகவே சாப்பிட்ட மகனை கண்ட சிதம்பரத்திற்கும் சங்கீதாவிற்கும் மகனின் மனதில் இத்தனை நாள் இருந்த பாரத்தின் அளவு புரிந்தது.
சாப்பிட்டவன் 'மேலே வா' என்பது போல் தலை அசைத்துக் கனிகாவிடம் சைகை செய்து மாடி ஏற இன்றைக்கு இவரிடம் இருந்து எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்று குழம்பியவளாக ஸ்தம்பித்து நின்றாள்.
மாமியாரும் மாமனாரும் உணவு உண்ட பின் தானும் ஏனோ தானோ என்று கொறித்தவள் சமையல் அறைக்குள்ளே கதி என்று கிடக்க, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவள் இன்னும் கீழேயே இருப்பதைக் கண்டவன் சலிப்புடன் கீழே இறங்கி வர, சமையல் அறையில் அவளைக் கண்டவன் அருகில் நெருங்கி,
"இன்னும் இங்க என்ன பண்ணுற?" என்றான்.
ஏற்கனவே அரண்டு போய் இருந்தவள் திடுக்கிடலுடன் அவனைத் திரும்பி பார்க்க அவள் கரம் பற்றி இழுத்தவன் தன் அறைக்குச் செல்ல, சங்கீதாவும் சிதம்பரமும் தங்களையே பார்த்திருப்பதைப் பார்த்தவளுக்குக் கூச்சமாக இருக்க, குனிந்த தலை நிமிராமலே அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள்.
தங்கள் அறையை அடைந்ததும் அவளை உள்ளே இழுத்து கதவை சாத்தியவன் புடவையைக் கொடுத்து கட்ட சொல்ல,
இப்போ எதுக்கு வேற புடவை, கட்டியிருக்கிறதே நல்லா தான் இருக்கு, ஆனால் சொன்னால் கேட்கிற ஆளா இவர் என்று குழம்பியவள் வேறு வழியின்றி,
"புடவை எங்க மாத்துறது??" என்றாள் தயங்கியவாறே.
அவளுக்கே தான் கேட்கும் கேள்வியில் எவ்வளவு முட்டாள் தனம் தெரிகிறது என்று புரிந்தது.
"ஏன்? இங்க மாத்திறதுக்கு என்ன?" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
மௌனமாகத் தலை கவிழ்ந்தவாறே இருந்தவளை கண்டவனுக்குச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வர மூச்சுக் காத்துப் படும் அளவிற்கு அவள் அருகில் நெருங்கி நின்றவன், "இங்கேயே ட்ரெஸ் பண்ணு..." என்றான்.
மெதுவாக நிமிர்ந்தவள் திரும்பி குளியல் அறையைப் பார்க்க,
"இல்லை பரவாயில்லை, இங்கேயே மாத்து..." என்றான் விடாப்பிடியாக.
"இங்கேயா?" என்று வாய் விட்டு கூறியவளை நக்கல் சிரிப்புடன் பார்த்தவன் அவள் முகம் நோக்கி குனிந்து,
"ஓ.... நான் இருக்கிறேன் என்று வெட்கமோ.... ஏன்? நான் உன்னை அப்படிப் பார்த்ததே இல்லையா?" என்றான் வார்த்தைகளில் இள நகை ஓட.
அதிர்ந்தவள் உள்ளும் புறமும் நடுக்கம் எடுக்க, ஒவ்வொரு வார்த்தையாக,
"நீங்க கொஞ்சம் வெளியில் இருங்கீங்களா?" என்றாள் தயங்கியவாறே.
குறும்பு சிரிப்பு சிரித்தவன் தலை முடியை அழுந்த கோதிவிட்டுத் தோள்களைக் குலுக்கியவன் பால்கனிக்கு செல்ல அவன் எங்கு வந்துவிடுவானோ என்று அச்சத்தில் புடவையை அவசரம் அவசரமாக அணிந்தவள், இனி என்ன செய்வது என்று குழப்பத்துடன் கட்டிலின் விளிம்பில் அமர்ந்தாள்.
ஒவ்வொரு விநாடியும் படபடப்புடன் செல்ல, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பயத்தில் வியர்க்க ஆரம்பித்து இருந்தது.
அவன் அன்று தன்னிடம் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் மிருகத்தனமாக நடந்து கொண்ட விதம் கண் முன் தோன்ற நாக்கு உலர நடுங்கும் விரல்களை இறுக்கப் பிடித்துக் கொண்டவள் அவன் வரவிற்காகத் திகிலுடன் காத்திருந்தாள்.
திகில் படம் பார்க்கும் பொழுது ஒரு சின்னச் சத்தம் கேட்டால் கூட உடல் முழுவதும் தூக்கிப் போட செய்யுமே... அப்படித் தூக்கிப் போட்டது அவன் உள்ளே வரும் பொழுது அவன் திறந்த கதவின் சத்தம்.
விருட்டென்று எழுந்து நின்றவள் தலை தரையில் பதிந்துவிடும் அளவிற்குக் குனிந்து நிற்க அவளின் அச்சம் கண்டவன்,
"ஏன்டி, இன்னுமா உனக்கு இந்தப் பயம் போகலை??" என்று சொன்னாலும் அவளின் பயந்த சுபாவமே அவனை அவளிடம் இழுத்துச் சென்றது.
அருகில் வந்தவனை நிமிர்ந்து பார்க்காமல், "நான் கீழே படுத்துக்கிறேன்.." என்றவள் நகரப் போக,
சட்டென்று அவளை நெருங்கியவன்,
"கீழப் படுக்கிறேன் என்றால்?" என்று திருப்பி அவளையே கேட்க,
"இல்லை, நான் இங்க கீழேயே படுத்துக் கொள்கிறேன்.." என்று தரையைக் காட்டவும்,
"இன்னும் எத்தனை முறை இப்படி வலிக்க வலிக்க அடிப்படி.." என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்திருந்தால் அவன் மனதில் பட்ட வலி கண்களில் தெரிவது அவளுக்கும் தெரிந்திருக்கும்.
தலை கவிழ்ந்தவாறே அவள் மீண்டும் நகரப் போகப் பின்னால் இரண்டு அடி வைத்தவள் தடுக்கி விழப் போகச் சட்டென்று அவள் இடையை வளைத்து பிடித்தவன் அருகில் இழுக்கச் சூடான அவன் மூச்சு காத்து பழைய நினைவுகளைக் கண் முன் நிறுத்தியது.
கலங்கிய முகத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க,
"கனி, நான் உன் ஹர்ஷா டி.... எப்படி டி இப்படி மாறின??" என்றான் வார்த்தைகளில் அத்தனை சோகத்தையும் தாங்கி.
"எனக்குத் தெரியும் நீ மாறினதுக்கு முழுக் காரணமும் நான் தான், நான் மட்டும் தான்.... அதுக்குக் காரணம் என்னோட பிடிவாதம், திமிரு, கர்வம், ஈகோ எல்லாம்... உன்னை இரண்டு வருஷம் தவிக்க விட்டுவிட்டேன்... எனக்குத் தெரியும்... ஆனால் ஒரு நாள் கூட உன்னை நான் நினைக்காம இருந்தது இல்லை டி.. ஒவ்வொரு நாளும் நான் உன்னை முதன் முதலா காலேஜில் பார்த்தது, உன்னைக் கோவிலில் சந்திச்சு உனக்குக் குங்குமம் வச்சுவிட்டது, உனக்கு ஸாரி [Saree] எடுத்துக் கொடுத்தது, உன்னிடம் நம்ம காலேஜ் ஆடிட்டோரியத்துல வச்சு என் லவ்வ ப்ரொப்போஸ் பண்ணினது, ஒவ்வொண்ணையும் நினைச்சு நினைச்சு எப்படித் தவிச்சிருக்கேன் தெரியுமா...."
கூறியவன் ஒரு நீண்ட பெரு மூச்சுவிட்டு அவளை ஆழ்ந்து பார்த்தவாறே தொடர்ந்தான்.
"ஆனால் என்னோட இயற்கையான ஆணவம் உன் கிட்ட என்னைப் பேசவிடலை... ஆனால் உன்னை விட்டு பிரிஞ்ச சில மாதங்களிலேயே உன்னோடு மறுபடியும் பேசனும்னு ஆசை வந்திருச்சு... அப்போ தான் என் தலையில் இடியை தூக்கி போட்ட மாதிரி அந்த ஃபோட்டோஸ் வந்தது.... என்ன தான் என் மனசு காதலிச்சவனையே தொடவிடாதவ வேற ஒருத்தனையா தொடவிட்டுடுவான்னு சொன்னாலும், என்னோட ஓவர் பொஸஸிவ்னெஸ் என் மனசில சந்தேகம்ங்கிற தீயை ஏற்றிவிட்டது..... ஆனால் என்னையும் அறியாமல் என்னோட ஆழ் மனசில நீ தப்பானவ இல்லைன்னு பதிஞ்சுருக்கணும்.... அதனால் தான் நீ தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்சன்னு அகில் ஃபோன் பண்ணினவுடன் என் உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு உன்கிட்ட வந்து சேர்ந்தேன்....."
"எப்படி டி என்னைய விட்டு போக மனசு வந்துச்சு? உன் கூடக் கிட்டதட்ட எட்டு மாசம் சுத்தி இருக்கிறேன்... தனித்தனியா இருந்தாலும், பிரிஞ்சு இருந்தாலும், ஹர்ஷா நம்மளை கைவிட மாட்டான் என்கிற நம்பிக்கையை நான் உனக்குக் கொடுக்கவே இல்லையா?" எனும் பொழுது அவன் இதயம் வலியில் துடித்ததை அவளும் உணர்ந்ததாலோ கண்கள் கலங்க விழி நீர் வழிய அவனையே பார்த்திருந்தாள்.
"ஆனால் நானும் தப்புப் பண்ணிட்டேன்... உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சு இருந்தும், உன் மனச யாராலும் மாத்த முடியாதுன்னு தெரிஞ்சும் முட்டாள் தனமா தப்புப் பண்ணிட்டேன்... ஐ ஆம் சோ ஸாரி ஃபார் தட்... ப்ளீஸ் டோண்ட் பனிஷ் மி மோர் கனி... [I am so sorry for that... please dont punish me more Kani]... என்னால தாங்க முடியலைடி.... ரொம்பக் கஷ்டமா இருக்கு... பழைய மாதிரி, நம்ம காலேஜ் டேஸ்-ல இருந்த மாதிரி மாறணும் போல் இருக்குடி.." என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க அவனது ஸ்பரிஸம் அவளின் உயிர் வரை சென்று சிலிர்க்க வைத்தாலும் கட்டைப் போல் நின்றிருந்தவளைக் கண்டவன் விரக்தியில் அவளை மெல்ல விடுவித்தான்.
தன்னுடைய அணைப்பு அவளின் இறுக்கத்தைக் கூட்டவே செய்ததை உணர்ந்தவன் மனம் ஒடிந்து போனான்.
சில நொடிகள் தயங்கியவன் பின் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தன்னைத் தெளிவு படுத்திவிடும் விதமாக,
"கனி, நான் அமெரிக்கா போகும் முன் நீ எனக்கு வேணும்னு எதிர்பார்த்தது எங்க நீ என்னை விட்டு போய்டுவியோ என்ற பயத்தில் தான்.... நம்ம மேரேஜிற்கு அப்புறம் கூட என்னால் இன்னைக்குச் செய்தது போல் உன்னைத் தூக்கி வந்திருக்க முடியும்.... ஆனால் நீயாகத் தான் மனசு மாறி என்னைத் தேடி வரணும்னு வெயிட் பண்ணினேன்...."
"பட் எங்க வீட்டில் நான் உனக்கு ஆசையா வாங்கிக் கொடுத்த ஜ்வெல்ஸை பார்த்ததும் நீ என்னை முழுசும் வெறுத்திட்டியோன்னு நெஞ்சில் ஒரு பயம் வந்தது... நான் எதுக்காகவும் யாருக்காகவும் அப்படிக் கலங்கியது இல்லை, ஆனால் முதல்முறையா நிஜமாவே உன்னை இழந்திடுவேனோன்னு பயம் வந்தது... அதோடு உன்னோட நிரகாரிப்பு எனக்கு அவமானமாகவும் இருந்து... அதனால் உன்னைப் பார்த்து இங்க கூட்டிட்டு வரணும்னு தான் உன் வீடு தேடி வந்தேன்... ஆனால் நீ என்னை வெளியே போகச் சொல்லவும் தான் நான் அப்படி முரட்டுத் தனமாக நடந்துக்கிட்டேன்...."
"நிச்சயமா நம் மேரேஜிற்கு முன்னோ, அல்லது அன்று நான் அப்படி நடந்ததுக்குக் காரணம் செக்ஸ் இல்லை... அஃப்கோர்ஸ், உன் மேல எனக்கு நெஞ்சு நிறைய ஆசை இருக்கு... ஆனால் உன்னை அப்படி அடாவடித்தனமா அடைய வச்சது என்னோட பயமும் கோபமும்தான்... ஆனால் இப்போ நீ என் கிட்ட வந்திட்ட, இனி எனக்குப் பயமில்லை.... அதனால உனக்கு எப்போ பிடிக்குதோ, உனக்கு எப்போ நான் வேணும்னு தோணுதோ அப்போ உன்னைத் தொடுறேன்... ஆனால் சத்தியமா அது நீயா விரும்பினா மட்டும் தான்..."
"மட்டும்" என்ற வார்த்தையில் மிக மிக அழுத்தம் கொடுத்தவன் தொடர்ந்து,
"நானா இனி உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன்.." என்று அழுத்தமான குரலில் கூறி அவளை விட்டு கட்டிலின் மறுபுறம் வந்து படுத்தான்.
அவள் அப்பொழுதும் அதே இடத்தில் அசையாது சிலைப் போல் நிற்கவும் அவளுக்கு இன்னும் தன் மேல் நம்பிக்கை வரவில்லை என்பதை உணர்ந்தவன் கனிவுடன்,
"நீ கீழ படுக்கணும்னு அவசியம் இல்லை... இங்கே என்னோட பெட்லயே படுக்கலாம்... என்னால உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது..." என்று மீண்டும் சொன்னவன் அவளுக்கு முதுகு காட்டி படுக்க, ஏக்கத்துடன் அவன் முதுகையே வெறித்துப் பார்த்திருந்தவளுக்குத் தன் மனம் என்ன எதிர்ப்பார்க்கின்றது என்றே புரிபடவில்லை.
இத்தனை நாட்கள் ஒவ்வொரு இரவும் தன் மனம் கவர்ந்தவளை நினைத்து உறங்காமல் கலங்கி விழித்து இருந்ததாலோ என்னவோ இன்று தன்னவளை தன்னுடன் போராடி அழைத்து வந்த மகிழ்ச்சியினாலோ என்னவோ அவன் சடுதியில் நித்திரையில் ஆழ்ந்தான்.
ஆனால் கனிகாவிற்குத் தான் தூக்கம் தூரம் போயிருந்தது.
உறக்கம் வராமல் படுத்திருந்தவள் மூச்சு முட்டுவது போல் இருக்க மெல்ல எழுந்து பால்கனிக்கு சென்றவள் அதன் அழகை பார்த்து மதி மயங்கி போனாள்.
சுற்றிலும் அழகான ரோஜாப் பூக்கள் வெவ்வேறு நிறத்தில் தொட்டியில் வைக்கப்பட்டிருக்க அதனைச் சுற்றிலும் அழகுக்காக வளர்க்கப்படும் தோட்டச் செடிகள் சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு வண்ணம் என்று கண்களைக் கவர அதன் நடுவில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து அதன் கம்பியில் சாய்ந்தவளின் மனம் ஏனோ ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் கரையை அடைந்ததும் தவிப்பு அடங்கி மௌனமாகத் திரும்பி கடலை நோக்கி செல்வது போல் அத்தனை அமைதியாக இருந்தது.
அப்படியே கண்கள் சொருக ஊஞ்சலில் தலை சாய்த்தவள் உறங்கியும் போனாள்.
உள்ளே தன் மனம் கவர்ந்தவளை தன்னுடன், தன்னுடைய அறையில் பார்த்திருந்த நிம்மதியில் உறங்கி கொண்டு இருந்தவன் நடு இரவில் தன் கைகளால் துழாவ தன் கைகளுக்கு அவள் அகப்படாமல் போகவே பதறி எழுந்தான்.
அவள் சற்று நேரத்திற்கு முன் தன்னைக் கலங்கிய முகத்துடனும் கவலையைத் தேக்கி வைத்த விழிகளுடனும் பார்த்திருந்த தோற்றம் கண் முன்னே தோன்றியது.
அவள் தன்னை விட்டு சென்று விட்டாளோ என்று அரண்டவன் அவளைக் காணாமல் தேடி பால்கனிக்கு வந்தவன் அங்குப் பூக்களின் நடுவே அன்று மலர்ந்த பூவாக உறங்கிக் கொண்டு இருந்த தன் மனையாளைப் பார்த்தவனுக்கு உலகத்தையே வென்று விட்ட உவகைத் தோன்றியது.
அவள் அருகில் வந்தவன் அவளை அசையாமல் மெல்ல தூக்கி கட்டிலில் கிடத்தியவன் அவளையே சற்று நேரம் உற்றுப் பார்க்க, அவளின் வாசம் நாசியில் புகுந்து மனதையும் உடலையும் சிலிர்ப்பில் ஆழ்த்தியது.
அவளின் தலையைக் கோதிவிட்டவன் மென்மையாக நெற்றியில் முத்தமிட, தூக்கத்திலும் அவனை உணர்ந்தவள் போல் அவனின் கரங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டு தூங்கிப் போனாள்.
அவளையே கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளை இறுக்கி அணைத்தபடியே அவனும் உறங்கிப் போனான்.
கிட்டதட்ட இரண்டரை வருடங்களுக்குப் பிறகு அமைதியான உறக்கம்... இருவருக்குமே.
***************************************************
மறு நாள் வழக்கம் போல் அதிகாலையில் விழித்தவள் தான் கதகதப்பான அணைப்பில் படுத்திருப்பதை உணர மெல்ல தலையை நிமிர்த்திப் பார்த்தவள் தான் ஒருக்களித்துப் படுத்திருப்பதும் அவளைப் பின்னாலில் இருந்து கட்டி அணைத்தவாறே ஹர்ஷா படுத்திருப்பதையும் கண்டவளுக்கு அத்தனை ஆச்சரியம்.. தான் எப்படி ஊஞ்சலில் இருந்து இங்குப் படுக்கைக்கு வந்தோம் என்று.
தன் கணவன் தான் தன்னை இங்குத் தூக்கி வந்திருக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு அத்தனை சிலிர்ப்பாக இருந்தது.
வழித் தவறிப் போன கோழிக் குஞ்சு தன் தாயைக் கண்டதும் பேரமைதி கொண்டு தாயின் சிறகுகளுக்குள் ஓடி அணைவாக அடங்கிக் கொள்ளுமே, அது போல் கணவனை விட்டு பிரிய மனமில்லாமல் சற்றுப் பின்னால் உடலை நகர்த்தி அவன் மார்பினுக்குள் பாந்தமாக அடங்கியவள் கண்களை மூடி படுக்க, அவளின் அசைவில் விழித்தவன் அவளின் செயலைக் கண்டும் காணாதது போல் இதழில் விரிந்த புன்முறுவலுடன் அமைதியாகப் படுத்திருக்க எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ தெரியவில்லை.
கணவன் வீட்டிற்கு வந்த முதல் நாளே இத்தனை தாமதமாகக் கீழே செல்வதா என்று யோசித்தவள் அவன் விழித்திருப்பதை அறியாமல் மெதுவாகத் தன் இடையை அணைத்திருந்த அவன் கரத்தை விலக்கியவள் அறையை விட்டு செல்ல, அவள் சென்றதை அறிந்ததும் கண் விழித்தவனுக்கு அத்தனை பூரிப்பாக இருந்தது அவளின் மனமாற்றம்.
அவள் மற்றவர்களுக்கு, குறிப்பாக அவனுக்குத் தெரியக் கூடாது என்று ஆழ்மனதில் மறைத்து வைத்திருந்த இன்னும் மாறாத காதலைக் கண்டு கொண்டவனின் இதயம் மகிழ்ச்சியில் துள்ள இள நகையுடன் குளியல் அறைக்குள் சென்றான்.
கீழே வந்ததும் எங்குக் குளிப்பது என்று புரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கும் மருமகளைப் பார்த்த சங்கீதாவிற்குச் சிரிப்பு வந்தது.
"ஏன்டா, இவ்வளவு சீக்கிரம் முழிச்சுட்ட... இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கியிருக்கலாமில்ல?"
"இல்லத்த, நான் எங்க வீட்டில் நாலரை மணிக்கெல்லாம் முழிச்சுத் தான் பழக்கம்... இன்னைக்குக் கொஞ்சம் லேட்டா ஆச்சு" என்றவளுக்கு அவரின் புன்சிரிப்பு அவர் தான் சொன்னதை வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டார் என்பதை உணர்த்த கூச்சத்தில் முகம் சிவந்தாள்.
"அத்தை நான் குளிக்கணும், அவங்க இன்னும் தூங்கிட்டு இருக்காங்க, நான் அங்க குளிச்சா தொந்தரவா இருக்கும்.... வேற ஏதாவது பாத்ரூம் இருக்கா?”
"என் கூட வா..." என்று அவளை ஹர்ஷாவின் அறைக்கு அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றவர் அவன் வாங்கி வந்திருந்த புத்தம் புது உடைகளைக் கொடுத்து.
"கனிகா... இது உன் வீடு, ஹர்ஷாவோட ரூம் தான் உன் ரூம்... நீ உன்னோட ட்ரெஸ் எல்லாம் அவன் ரூமிலேயே வச்சுக்க..." என்றவர் வெளியேறினார்.
சிறிது நேரத்திற்குள் குளித்து முடித்துக் கீழே இறங்கி வந்தவள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி பூஜை புனஸ்காரங்களை முடித்துச் சமையல் அறைக்குள் புக, அவளின் வரவை எதிர்பார்த்திருந்த வேலையாட்களுக்குத் தங்கள் இளைய எஜமானியைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
காலை உணவு செய்து முடிக்கவும் ஹர்ஷாவும் சிதம்பரமும் கீழே இறங்கி வரவும் நேரம் சரியாக இருக்க, டைனிங் டேபிளில் பதார்த்தங்களை வைத்தவள் பறிமாறும் முன் கணவனை நோக்க, அவன் அவளைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
மனதை என்னவோ பிசைய அவனுக்குப் பார்த்துப் பார்த்து பறிமாறியவள் அவன் உண்டதும் அவன் பின் செல்ல துடித்த கால்களைக் கட்டுபடுத்தி அடக்கியவள் விழிகளில் நீர் தேங்கி நிற்க அவனையே பார்த்திருந்தாள்.
அவளின் பார்வை தன் மீது தான் படிந்திருக்கிறது என்று உணர்ந்து வெற்றிப் புன்னகை சிந்தியவன் திரும்பியும் பாராமல் தன் அறைக்குள் சென்று கதவை அடைக்க அவளுக்குத் தான் அத்தனை ஏமாற்றமாக இருந்தது.
அந்த நொடி அவளது மனதில் தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க இயலாது... அந்தக் கணம் இத்தனை நாளாய் தான் இழந்தது என்ன என்பதை அவள் உணர்ந்தாள்.
தன் கணவனின் புறக்கணிப்பு வெகு அழுத்தமாய் இதயத்தில் ஆழ இறங்க செய்வதறியாது சிறிது நேரம் நின்றவள் சங்கீதாவும் சிதம்பரமும் தன்னையே உற்று பார்த்திருப்பதை உணர்ந்து விழி நீரை அவர்களுக்குத் தெரியாமல் கண்மூடி உள்ளிழுத்துக் கொண்டவள் தன் வேலைகளைத் தொடர்ந்தாள்.
சிறிது நேரத்திலேயே கீழே இறங்கி வந்தவன் தான் அலுவலகத்திற்குப் போவதாகத் தன் அன்னையிடம் மட்டும் தெரிவித்துவிட்டு சட்டென்று வெளியேறினான்.
கணவனைப் பின் தொடர்ந்து செல்வதா? வேண்டாமா? என்று குழம்பி நிற்க அவளருகில் வந்து அவள் தோளைத் தொட்டு,
"என்னடா, உங்களுக்குள்ள மறுபடியும் ஏதாவது பிரச்சனையா?" என்றார் சங்கீதா.
"இல்லை அத்தை, அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்றவள் மிகுந்த சிரமப்பட்டுக் கண்களுக்கு எட்டாது புன்னகைக்க,
"எல்லாம் சரியாகிடும்டா..." என்றவருக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
*******************************
ஹர்ஷா கனிகாவை தன்னுடன் அழைத்து வந்து இதனோடு இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது.
ஒவ்வொரு நாளும் வெகு நேரம் கழித்தே இரவு வீடு திரும்புபவன் அதிகாலையிலேயே அலுவலகத்திற்குச் சென்றுவிடுவான்.
அவனின் புறக்கணிப்பு அணு அணுவாய் சித்திரவதை செய்யத் தவித்தவளுக்கு அவனிடம் கேள்வி கேட்கும் தைரியம் மட்டும் வரவே இல்லை.
அவனைக் கண்ட முதல் நாளில் இருந்து இதோ இன்று அவன் மனைவியாக அவனருகே இருந்தும் அதே அச்சம் இன்னும் மனதில்.
அடுத்து கழிந்த நாட்களெல்லாம் முழுதாகத் தவிப்பில் கரைய ஒவ்வொரு நாளும் அவன் அருகில் படுத்ததும் அவளின் பூ மேனி உணர்ச்சி வேகத்தில் நடுங்கும்.
அவனோ அதைக் கண்டு கொள்ளாதது போல் தூங்க, நெருப்பில் இருப்பதைப் போல் தத்தளித்தவளின் தூக்கம் அவளைத் தாண்டி வெகு தூரப் போயிருக்கும்.
ஆனால் அவனுக்கோ நினைத்த மாத்திரத்தில் கனிகா என்றுமே அவன் மனதில் குளுமையைக் கொண்டு வருபவள்.
தூர இருக்கும் பொழுதே அவளைத் தேடி தவியாய்த் தவித்தவன் இப்பொழுது தன் அருகில், அதுவும் தன்னுடன் ஒரே படுக்கையில் இருந்தும் அவளைத் தொடாமல் தள்ளி இருப்பதற்கு அவன் படும் பாடு அவனுக்கு மட்டுமே தெரியும்.
தன்னுடைய உணர்வுகளைப் பணயம் வைத்து அவளைத் தள்ளி வைத்திருந்தான் அவள் தானாகத் தன்னைத் தேடி வர வேண்டும் என்பதற்காக.
அவள் தன்னைப் பார்க்காத பொழுது அவளை உரிமையாக மேய்ந்தன அவன் கண்கள்.
இரவில் பூங்கொடியாய் தன் அருகில் படுத்திருந்தவளை கண்டு அவன் உணர்வுகள் கட்டவிழ்க்க,
"உன் மேல எந்தளவுக்கு ஆசை வச்சிருக்கேன்னு காட்டணும்னு ஆசையா இருக்குடி, உன்னை முத்தத்தாலும் அணைப்பாலும் குளிப்பாட்டணும் அத்தனை வெறியா இருக்குடி...." என்று தனக்குள்ளே புலம்பிக் கொள்பவன் அவள் அறியாத வண்ணம் அவள் அருகில் நெருங்கி படுத்து, ஓடிக் களைத்துப் பின் தன் இணையைச் சேர்ந்த நிம்மதியில் உறங்கி போவான்.
அன்றும் அதே போலவே வெகு சீக்கிரம் அலுவலகத்திற்குக் கிளம்பியவன் காலை உணவை முடித்துக் கை கழுவ தன் அருகில் நின்றுக் கொண்டிருந்தவளிடம் சன்னமான குரலில்,
"இன்னக்கு மாம் அன்ட் டாடோட வெட்டிங் டே.... வழக்கமாக நாங்க மூணு பேரும் ஏதாவது ரெஸ்டாரண்ட் போவோம்... நீயும் கிளம்பி ரெடியாக இரு... நான் வந்து உங்களை அழைச்சுட்டு போறேன்..." என்றான்.
அவன் அவளிடம் பேசியே வெகு நாட்கள் ஆகியிருந்தது.... எப்படி அவரால் இப்படி இருக்க முடிகிறது? என்று அவளைத் தன் மௌனத்தாலும் பாரா முகத்தாலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தான்.
இப்படி இருக்க அவனாகத் திடீரென்று தன்னுடன் பேசியதில் மகிழ்ச்சி அடைந்தவள் அதே சந்தோஷ முகத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க,
"மாம் கிட்டேயும் டாட் கிட்டேயும் ப்லெஸ்ஸிங்ஸ் வாங்கணும்... வா..." என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் நடக்க,
அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் பின்னால் ஓடியவள் அவனுடன் சேர்ந்து மாமியார் மாமனாரை வாழ்த்தப் போனாள்.
வேகமாக நடந்தவனின் பின்னால் கிட்ட தட்ட ஓடியவள் அவன் சட்டென்று நின்றதும் அவன் மீது மோதி தடுமாறி நிற்க அவளின் நிலைமையை உணர்ந்தவன் அவள் தோள் பற்றி நிற்க வைத்தான்.
இத்தனை நாட்களுக்குப் பிறகு தன் கணவனின் தொடுகை உள்ளத்தில் பூப்பூக்கச் செய்ய நாணத்துடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அவள் பார்ப்பது தெரிந்ததும் சட்டென்று திரும்பி மாடி ஏறினான்.... பாகாக உருகிய அவளின் மனம் ஒரு நொடியில் சருகாகக் கருகி வாடிப் போனது.
பெரியவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்கள் அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற சங்கீதாவிற்கும் சிதம்பரத்திற்கும் ஏனோ அந்தத் திருமண நாள் அத்தனை மகிழ்ச்சியைத் தந்தது.
"அடுத்த வருஷம் எங்களோட வெட்டிங் டேவை எங்க பேரப்பிள்ளையோட சேர்ந்து கொண்டாடணும்..." என்று அவர்கள் கூற நாணத்துடன் கணவனை மீண்டும் திரும்பி பார்த்தவளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தாத அவன் முகத்தில் இருந்து அவன் எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
தன் முகத்தையும் பார்க்காது தன் அன்னை தந்தையிடம் மட்டும் விடைபெற்று அவன் அமைதியாகச் செல்ல, குழம்பிப் போய் நின்றாள்.
வழக்கமாகத் தங்கள் திருமண நாள் அன்று மூவரும் ஏதாவது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு உணவு சாப்பிட செல்வது வழக்கம்... கனிகாவிற்கும் தெரியப்படுத்தி இருந்தார் சங்கீதா.
மதியம் ஹர்ஷா கொடுத்ததாக ஒரு பையை அலுவலகத்தில் பணிபுரிபவர் கொண்டு வந்து கொடுக்கப் பிரித்துப் பார்த்தவள் மலைத்து போனாள்.
சிகப்பு நிறத்தில் மணிகளும், கற்களும் பதித்த டிசைனர் புடவை கண்களைப் பறித்தது... அதற்கு ஏற்றார் போன்று அவளுக்கென்றே அளவெடுத்தது போல் தைத்த ப்ளவுஸ்.
மாலை புடவையை அணிந்து அவனுக்காகக் காத்திருக்க, வீட்டிற்குள் நுழைந்தவனின் கண்கள் அவளைக் கண்டதும் ஒரு விநாடி அவளிடம் நிலைத்து நின்றது.
பின் தோள்களைக் குலுக்கியவன் வேகமாக மாடி ஏற, தன் கணவனின் பார்வைக்காக வெகு நேரம் காத்திருந்தவளுக்குப் பெருத்த அடியாக இருந்தது அவனின் கண்டு கொள்ளாமை.
'ஏன் இந்தப் புறக்கணிப்பு? என்ன எதிர்பார்க்கிறார் என்னிடம்? அவர் விரும்பியது போல இப்பொழுது அவருடனே இருக்கிறேனே... இன்னும் என்ன வேண்டும்? தள்ளி இருந்த பொழுதெல்லாம் என்னைத் தேடி வந்தவர் இப்பொழுது தொடும் தூரத்தில் இருந்தும் ஏன் இந்த ஒதுக்குதல்?'
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவளின் ஒரு பார்வைக்காகக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே தவம் கிடந்தவன், இடையில் விதி வசத்தாலும், தன்னுடைய கூடப் பிறந்த திமிர் தனத்தாலும், பிடிவாதத்தாலும், அவளின் வாழ்க்கையைச் சூனியமாக்கியிருந்தாலும் தவறை உணர்ந்த அந்த நிமிடமே அவளைத் தேடி ஓடோடி வந்தவன்.
தன் கணவன் தன்னைப் பழி வாங்குவதாக எண்ணினாளே தவிர அவளாகத் தன்னை அவனிடம் ஒப்புக் கொடுக்க முன் வரவில்லை..... அவள் தானாக அவனிடம் வர வேண்டும், அது வரை அவளைத் தொடமாட்டேன் என்று முதல் நாள் இரவு சொன்னதை அவள் மறந்து போனாளோ?
ஆனால் அவனது எண்ணங்களோ வேறாக இருந்தது.
ஒரு ஆண்மகன், அதுவும் செயல், பேச்சு, நினைவுகள் எல்லாவற்றிலும் கர்வம் குடிக் கொண்டிருந்தவன்..... இதற்கு மேல் இறங்கி வருவதற்கு என்ன இருக்கிறது? இருந்தும் அவள் வீடு வரை சென்று அவளைத் தூக்கி வந்தேன், அப்பொழுதும் என்னை மன்னிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ அவள் தயாராக இல்லை.... அதனாலேயே ஒவ்வொரு விநாடியும் அவள் வேண்டும், வேண்டும் என்று இதயம் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கும் போதெல்லாம் என் மனதை அடக்கி அவளை என் வழிக்கு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்... இது அவனது விவாதம்.
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரவு உணவை முடித்தவர்கள் வீட்டிற்குத் திரும்ப மாலை வெளியில் கிளம்பியதில் இருந்து இதோ வீடு வரும் வரை அவன் தன் அன்னை தந்தையிடம் மட்டுமே பேசியவன் மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை.
அவன் தன்னைத் தேடி வந்த பொழுதெல்லாம் ஒதுங்கியவள், அவனுக்குப் பாராமுகம் காட்டியவள், இன்று அவன் அதையே திருப்பிச் செய்யும் பொழுது பழி வாங்குகிறான் என்றே எண்ணியவள் அவனின் மனதை புரிந்து கொள்ளவில்லை.
ஆக இரு உள்ளங்களும் காதலில் தளும்பி தத்தளித்துக் கொண்டிருந்தாலும் தங்கள் இடத்தில் தங்களை மட்டுமே வைத்துப் பார்த்தார்களே ஒழிய தங்கள் இணையைத் தங்கள் இடத்தில் வைத்து பார்க்க தவறிவிட்டார்கள்.
காதலில் கூடாதது கர்வமே... இது எப்பொழுது புரியுமோ இந்த இரு இளம் தம்பதியினருக்கு!!!!!
தொடரும்..
வந்தவன் வேலை ஆட்களை அழைத்துத் தன் காரில் இருந்தவைகளை எடுத்து வரச் சொன்னவனின் விழிகள் தன்னிச்சையாகத் தன் மனையாளைத் தேட, அவள் சமையல் அறையில் இருப்பதைத் தெரிந்துக் கொண்டவன் அவளைத் தேடிச் சென்றான்.
அங்குத் தன் அன்னையுடன் சேர்ந்து பாங்காக அவள் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கு இத்தனை நாள் காத்திருந்த பலன் கிட்டியதாகவே பட்டது.
அவள் அருகில் வந்தவன் அவளுக்கு மட்டும் கேட்குமாறு குனிந்து, "நிறைய ட்ரெஸ் வாங்கி வந்திருக்கேன், நம் ரூமில் தான் வச்சிருக்கேன்.... அதில் ஸ்பெஷலா பர்ப்பிள் கலர்ல ஸில்க் ஸாரி இருக்கு.... போய் அதைக் கட்டிட்டு ரெடியாகு..." என்றான்.
அவன் தன் பின்னால் வந்து நின்றதே தெரியாமல் அவள் சமையலில் ஈடுப்பட்டிருக்க அவன் தீடீரென்று கிசுகிசுத்ததும் தூக்கிவாரிப் போட்டது என்றால் அவன் சொன்ன செய்தியில் நெஞ்சு படபடக்க அவனை நிமிர்ந்து கெஞ்சுதலாகப் பார்த்தவளைக் கண்டவனுக்கு இந்த உலகமே தன் காலடியில் வந்து விழுந்ததைப் போன்ற பிரமிப்பு வந்தது.
அவன் பார்வையின் வீரியத்தைத் தாங்காமல் சடக்கென்று தலையைத் திருப்பியவள் சங்கீதாவைப் பார்க்க அவர் இவர்கள் இருவரையும் கண்டும் காணாதது போல் மும்முரமாக வேலையில் இருந்தார்.
"சீக்கிரம் வா.." என்று சொல்லி திரும்பியவனைச் சங்கீதாவின் குரல் அழைத்தது.
"ஹர்ஷா டின்னர் ரெடிப்பா.... ஒரேடியா சாப்பிட்டுட்டு போ..."
"ஒகே மாம்.." என்றவன் டைனிங் டேபிளில் அமர கனிகா உணவு பறிமாற உள்ளம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க வழக்கத்தை விடச் சிறிது அதிகமாகவே சாப்பிட்ட மகனை கண்ட சிதம்பரத்திற்கும் சங்கீதாவிற்கும் மகனின் மனதில் இத்தனை நாள் இருந்த பாரத்தின் அளவு புரிந்தது.
சாப்பிட்டவன் 'மேலே வா' என்பது போல் தலை அசைத்துக் கனிகாவிடம் சைகை செய்து மாடி ஏற இன்றைக்கு இவரிடம் இருந்து எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்று குழம்பியவளாக ஸ்தம்பித்து நின்றாள்.
மாமியாரும் மாமனாரும் உணவு உண்ட பின் தானும் ஏனோ தானோ என்று கொறித்தவள் சமையல் அறைக்குள்ளே கதி என்று கிடக்க, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவள் இன்னும் கீழேயே இருப்பதைக் கண்டவன் சலிப்புடன் கீழே இறங்கி வர, சமையல் அறையில் அவளைக் கண்டவன் அருகில் நெருங்கி,
"இன்னும் இங்க என்ன பண்ணுற?" என்றான்.
ஏற்கனவே அரண்டு போய் இருந்தவள் திடுக்கிடலுடன் அவனைத் திரும்பி பார்க்க அவள் கரம் பற்றி இழுத்தவன் தன் அறைக்குச் செல்ல, சங்கீதாவும் சிதம்பரமும் தங்களையே பார்த்திருப்பதைப் பார்த்தவளுக்குக் கூச்சமாக இருக்க, குனிந்த தலை நிமிராமலே அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள்.
தங்கள் அறையை அடைந்ததும் அவளை உள்ளே இழுத்து கதவை சாத்தியவன் புடவையைக் கொடுத்து கட்ட சொல்ல,
இப்போ எதுக்கு வேற புடவை, கட்டியிருக்கிறதே நல்லா தான் இருக்கு, ஆனால் சொன்னால் கேட்கிற ஆளா இவர் என்று குழம்பியவள் வேறு வழியின்றி,
"புடவை எங்க மாத்துறது??" என்றாள் தயங்கியவாறே.
அவளுக்கே தான் கேட்கும் கேள்வியில் எவ்வளவு முட்டாள் தனம் தெரிகிறது என்று புரிந்தது.
"ஏன்? இங்க மாத்திறதுக்கு என்ன?" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
மௌனமாகத் தலை கவிழ்ந்தவாறே இருந்தவளை கண்டவனுக்குச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வர மூச்சுக் காத்துப் படும் அளவிற்கு அவள் அருகில் நெருங்கி நின்றவன், "இங்கேயே ட்ரெஸ் பண்ணு..." என்றான்.
மெதுவாக நிமிர்ந்தவள் திரும்பி குளியல் அறையைப் பார்க்க,
"இல்லை பரவாயில்லை, இங்கேயே மாத்து..." என்றான் விடாப்பிடியாக.
"இங்கேயா?" என்று வாய் விட்டு கூறியவளை நக்கல் சிரிப்புடன் பார்த்தவன் அவள் முகம் நோக்கி குனிந்து,
"ஓ.... நான் இருக்கிறேன் என்று வெட்கமோ.... ஏன்? நான் உன்னை அப்படிப் பார்த்ததே இல்லையா?" என்றான் வார்த்தைகளில் இள நகை ஓட.
அதிர்ந்தவள் உள்ளும் புறமும் நடுக்கம் எடுக்க, ஒவ்வொரு வார்த்தையாக,
"நீங்க கொஞ்சம் வெளியில் இருங்கீங்களா?" என்றாள் தயங்கியவாறே.
குறும்பு சிரிப்பு சிரித்தவன் தலை முடியை அழுந்த கோதிவிட்டுத் தோள்களைக் குலுக்கியவன் பால்கனிக்கு செல்ல அவன் எங்கு வந்துவிடுவானோ என்று அச்சத்தில் புடவையை அவசரம் அவசரமாக அணிந்தவள், இனி என்ன செய்வது என்று குழப்பத்துடன் கட்டிலின் விளிம்பில் அமர்ந்தாள்.
ஒவ்வொரு விநாடியும் படபடப்புடன் செல்ல, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பயத்தில் வியர்க்க ஆரம்பித்து இருந்தது.
அவன் அன்று தன்னிடம் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் மிருகத்தனமாக நடந்து கொண்ட விதம் கண் முன் தோன்ற நாக்கு உலர நடுங்கும் விரல்களை இறுக்கப் பிடித்துக் கொண்டவள் அவன் வரவிற்காகத் திகிலுடன் காத்திருந்தாள்.
திகில் படம் பார்க்கும் பொழுது ஒரு சின்னச் சத்தம் கேட்டால் கூட உடல் முழுவதும் தூக்கிப் போட செய்யுமே... அப்படித் தூக்கிப் போட்டது அவன் உள்ளே வரும் பொழுது அவன் திறந்த கதவின் சத்தம்.
விருட்டென்று எழுந்து நின்றவள் தலை தரையில் பதிந்துவிடும் அளவிற்குக் குனிந்து நிற்க அவளின் அச்சம் கண்டவன்,
"ஏன்டி, இன்னுமா உனக்கு இந்தப் பயம் போகலை??" என்று சொன்னாலும் அவளின் பயந்த சுபாவமே அவனை அவளிடம் இழுத்துச் சென்றது.
அருகில் வந்தவனை நிமிர்ந்து பார்க்காமல், "நான் கீழே படுத்துக்கிறேன்.." என்றவள் நகரப் போக,
சட்டென்று அவளை நெருங்கியவன்,
"கீழப் படுக்கிறேன் என்றால்?" என்று திருப்பி அவளையே கேட்க,
"இல்லை, நான் இங்க கீழேயே படுத்துக் கொள்கிறேன்.." என்று தரையைக் காட்டவும்,
"இன்னும் எத்தனை முறை இப்படி வலிக்க வலிக்க அடிப்படி.." என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்திருந்தால் அவன் மனதில் பட்ட வலி கண்களில் தெரிவது அவளுக்கும் தெரிந்திருக்கும்.
தலை கவிழ்ந்தவாறே அவள் மீண்டும் நகரப் போகப் பின்னால் இரண்டு அடி வைத்தவள் தடுக்கி விழப் போகச் சட்டென்று அவள் இடையை வளைத்து பிடித்தவன் அருகில் இழுக்கச் சூடான அவன் மூச்சு காத்து பழைய நினைவுகளைக் கண் முன் நிறுத்தியது.
கலங்கிய முகத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க,
"கனி, நான் உன் ஹர்ஷா டி.... எப்படி டி இப்படி மாறின??" என்றான் வார்த்தைகளில் அத்தனை சோகத்தையும் தாங்கி.
"எனக்குத் தெரியும் நீ மாறினதுக்கு முழுக் காரணமும் நான் தான், நான் மட்டும் தான்.... அதுக்குக் காரணம் என்னோட பிடிவாதம், திமிரு, கர்வம், ஈகோ எல்லாம்... உன்னை இரண்டு வருஷம் தவிக்க விட்டுவிட்டேன்... எனக்குத் தெரியும்... ஆனால் ஒரு நாள் கூட உன்னை நான் நினைக்காம இருந்தது இல்லை டி.. ஒவ்வொரு நாளும் நான் உன்னை முதன் முதலா காலேஜில் பார்த்தது, உன்னைக் கோவிலில் சந்திச்சு உனக்குக் குங்குமம் வச்சுவிட்டது, உனக்கு ஸாரி [Saree] எடுத்துக் கொடுத்தது, உன்னிடம் நம்ம காலேஜ் ஆடிட்டோரியத்துல வச்சு என் லவ்வ ப்ரொப்போஸ் பண்ணினது, ஒவ்வொண்ணையும் நினைச்சு நினைச்சு எப்படித் தவிச்சிருக்கேன் தெரியுமா...."
கூறியவன் ஒரு நீண்ட பெரு மூச்சுவிட்டு அவளை ஆழ்ந்து பார்த்தவாறே தொடர்ந்தான்.
"ஆனால் என்னோட இயற்கையான ஆணவம் உன் கிட்ட என்னைப் பேசவிடலை... ஆனால் உன்னை விட்டு பிரிஞ்ச சில மாதங்களிலேயே உன்னோடு மறுபடியும் பேசனும்னு ஆசை வந்திருச்சு... அப்போ தான் என் தலையில் இடியை தூக்கி போட்ட மாதிரி அந்த ஃபோட்டோஸ் வந்தது.... என்ன தான் என் மனசு காதலிச்சவனையே தொடவிடாதவ வேற ஒருத்தனையா தொடவிட்டுடுவான்னு சொன்னாலும், என்னோட ஓவர் பொஸஸிவ்னெஸ் என் மனசில சந்தேகம்ங்கிற தீயை ஏற்றிவிட்டது..... ஆனால் என்னையும் அறியாமல் என்னோட ஆழ் மனசில நீ தப்பானவ இல்லைன்னு பதிஞ்சுருக்கணும்.... அதனால் தான் நீ தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்சன்னு அகில் ஃபோன் பண்ணினவுடன் என் உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு உன்கிட்ட வந்து சேர்ந்தேன்....."
"எப்படி டி என்னைய விட்டு போக மனசு வந்துச்சு? உன் கூடக் கிட்டதட்ட எட்டு மாசம் சுத்தி இருக்கிறேன்... தனித்தனியா இருந்தாலும், பிரிஞ்சு இருந்தாலும், ஹர்ஷா நம்மளை கைவிட மாட்டான் என்கிற நம்பிக்கையை நான் உனக்குக் கொடுக்கவே இல்லையா?" எனும் பொழுது அவன் இதயம் வலியில் துடித்ததை அவளும் உணர்ந்ததாலோ கண்கள் கலங்க விழி நீர் வழிய அவனையே பார்த்திருந்தாள்.
"ஆனால் நானும் தப்புப் பண்ணிட்டேன்... உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சு இருந்தும், உன் மனச யாராலும் மாத்த முடியாதுன்னு தெரிஞ்சும் முட்டாள் தனமா தப்புப் பண்ணிட்டேன்... ஐ ஆம் சோ ஸாரி ஃபார் தட்... ப்ளீஸ் டோண்ட் பனிஷ் மி மோர் கனி... [I am so sorry for that... please dont punish me more Kani]... என்னால தாங்க முடியலைடி.... ரொம்பக் கஷ்டமா இருக்கு... பழைய மாதிரி, நம்ம காலேஜ் டேஸ்-ல இருந்த மாதிரி மாறணும் போல் இருக்குடி.." என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க அவனது ஸ்பரிஸம் அவளின் உயிர் வரை சென்று சிலிர்க்க வைத்தாலும் கட்டைப் போல் நின்றிருந்தவளைக் கண்டவன் விரக்தியில் அவளை மெல்ல விடுவித்தான்.
தன்னுடைய அணைப்பு அவளின் இறுக்கத்தைக் கூட்டவே செய்ததை உணர்ந்தவன் மனம் ஒடிந்து போனான்.
சில நொடிகள் தயங்கியவன் பின் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தன்னைத் தெளிவு படுத்திவிடும் விதமாக,
"கனி, நான் அமெரிக்கா போகும் முன் நீ எனக்கு வேணும்னு எதிர்பார்த்தது எங்க நீ என்னை விட்டு போய்டுவியோ என்ற பயத்தில் தான்.... நம்ம மேரேஜிற்கு அப்புறம் கூட என்னால் இன்னைக்குச் செய்தது போல் உன்னைத் தூக்கி வந்திருக்க முடியும்.... ஆனால் நீயாகத் தான் மனசு மாறி என்னைத் தேடி வரணும்னு வெயிட் பண்ணினேன்...."
"பட் எங்க வீட்டில் நான் உனக்கு ஆசையா வாங்கிக் கொடுத்த ஜ்வெல்ஸை பார்த்ததும் நீ என்னை முழுசும் வெறுத்திட்டியோன்னு நெஞ்சில் ஒரு பயம் வந்தது... நான் எதுக்காகவும் யாருக்காகவும் அப்படிக் கலங்கியது இல்லை, ஆனால் முதல்முறையா நிஜமாவே உன்னை இழந்திடுவேனோன்னு பயம் வந்தது... அதோடு உன்னோட நிரகாரிப்பு எனக்கு அவமானமாகவும் இருந்து... அதனால் உன்னைப் பார்த்து இங்க கூட்டிட்டு வரணும்னு தான் உன் வீடு தேடி வந்தேன்... ஆனால் நீ என்னை வெளியே போகச் சொல்லவும் தான் நான் அப்படி முரட்டுத் தனமாக நடந்துக்கிட்டேன்...."
"நிச்சயமா நம் மேரேஜிற்கு முன்னோ, அல்லது அன்று நான் அப்படி நடந்ததுக்குக் காரணம் செக்ஸ் இல்லை... அஃப்கோர்ஸ், உன் மேல எனக்கு நெஞ்சு நிறைய ஆசை இருக்கு... ஆனால் உன்னை அப்படி அடாவடித்தனமா அடைய வச்சது என்னோட பயமும் கோபமும்தான்... ஆனால் இப்போ நீ என் கிட்ட வந்திட்ட, இனி எனக்குப் பயமில்லை.... அதனால உனக்கு எப்போ பிடிக்குதோ, உனக்கு எப்போ நான் வேணும்னு தோணுதோ அப்போ உன்னைத் தொடுறேன்... ஆனால் சத்தியமா அது நீயா விரும்பினா மட்டும் தான்..."
"மட்டும்" என்ற வார்த்தையில் மிக மிக அழுத்தம் கொடுத்தவன் தொடர்ந்து,
"நானா இனி உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன்.." என்று அழுத்தமான குரலில் கூறி அவளை விட்டு கட்டிலின் மறுபுறம் வந்து படுத்தான்.
அவள் அப்பொழுதும் அதே இடத்தில் அசையாது சிலைப் போல் நிற்கவும் அவளுக்கு இன்னும் தன் மேல் நம்பிக்கை வரவில்லை என்பதை உணர்ந்தவன் கனிவுடன்,
"நீ கீழ படுக்கணும்னு அவசியம் இல்லை... இங்கே என்னோட பெட்லயே படுக்கலாம்... என்னால உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது..." என்று மீண்டும் சொன்னவன் அவளுக்கு முதுகு காட்டி படுக்க, ஏக்கத்துடன் அவன் முதுகையே வெறித்துப் பார்த்திருந்தவளுக்குத் தன் மனம் என்ன எதிர்ப்பார்க்கின்றது என்றே புரிபடவில்லை.
இத்தனை நாட்கள் ஒவ்வொரு இரவும் தன் மனம் கவர்ந்தவளை நினைத்து உறங்காமல் கலங்கி விழித்து இருந்ததாலோ என்னவோ இன்று தன்னவளை தன்னுடன் போராடி அழைத்து வந்த மகிழ்ச்சியினாலோ என்னவோ அவன் சடுதியில் நித்திரையில் ஆழ்ந்தான்.
ஆனால் கனிகாவிற்குத் தான் தூக்கம் தூரம் போயிருந்தது.
உறக்கம் வராமல் படுத்திருந்தவள் மூச்சு முட்டுவது போல் இருக்க மெல்ல எழுந்து பால்கனிக்கு சென்றவள் அதன் அழகை பார்த்து மதி மயங்கி போனாள்.
சுற்றிலும் அழகான ரோஜாப் பூக்கள் வெவ்வேறு நிறத்தில் தொட்டியில் வைக்கப்பட்டிருக்க அதனைச் சுற்றிலும் அழகுக்காக வளர்க்கப்படும் தோட்டச் செடிகள் சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு வண்ணம் என்று கண்களைக் கவர அதன் நடுவில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து அதன் கம்பியில் சாய்ந்தவளின் மனம் ஏனோ ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் கரையை அடைந்ததும் தவிப்பு அடங்கி மௌனமாகத் திரும்பி கடலை நோக்கி செல்வது போல் அத்தனை அமைதியாக இருந்தது.
அப்படியே கண்கள் சொருக ஊஞ்சலில் தலை சாய்த்தவள் உறங்கியும் போனாள்.
உள்ளே தன் மனம் கவர்ந்தவளை தன்னுடன், தன்னுடைய அறையில் பார்த்திருந்த நிம்மதியில் உறங்கி கொண்டு இருந்தவன் நடு இரவில் தன் கைகளால் துழாவ தன் கைகளுக்கு அவள் அகப்படாமல் போகவே பதறி எழுந்தான்.
அவள் சற்று நேரத்திற்கு முன் தன்னைக் கலங்கிய முகத்துடனும் கவலையைத் தேக்கி வைத்த விழிகளுடனும் பார்த்திருந்த தோற்றம் கண் முன்னே தோன்றியது.
அவள் தன்னை விட்டு சென்று விட்டாளோ என்று அரண்டவன் அவளைக் காணாமல் தேடி பால்கனிக்கு வந்தவன் அங்குப் பூக்களின் நடுவே அன்று மலர்ந்த பூவாக உறங்கிக் கொண்டு இருந்த தன் மனையாளைப் பார்த்தவனுக்கு உலகத்தையே வென்று விட்ட உவகைத் தோன்றியது.
அவள் அருகில் வந்தவன் அவளை அசையாமல் மெல்ல தூக்கி கட்டிலில் கிடத்தியவன் அவளையே சற்று நேரம் உற்றுப் பார்க்க, அவளின் வாசம் நாசியில் புகுந்து மனதையும் உடலையும் சிலிர்ப்பில் ஆழ்த்தியது.
அவளின் தலையைக் கோதிவிட்டவன் மென்மையாக நெற்றியில் முத்தமிட, தூக்கத்திலும் அவனை உணர்ந்தவள் போல் அவனின் கரங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டு தூங்கிப் போனாள்.
அவளையே கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளை இறுக்கி அணைத்தபடியே அவனும் உறங்கிப் போனான்.
கிட்டதட்ட இரண்டரை வருடங்களுக்குப் பிறகு அமைதியான உறக்கம்... இருவருக்குமே.
***************************************************
மறு நாள் வழக்கம் போல் அதிகாலையில் விழித்தவள் தான் கதகதப்பான அணைப்பில் படுத்திருப்பதை உணர மெல்ல தலையை நிமிர்த்திப் பார்த்தவள் தான் ஒருக்களித்துப் படுத்திருப்பதும் அவளைப் பின்னாலில் இருந்து கட்டி அணைத்தவாறே ஹர்ஷா படுத்திருப்பதையும் கண்டவளுக்கு அத்தனை ஆச்சரியம்.. தான் எப்படி ஊஞ்சலில் இருந்து இங்குப் படுக்கைக்கு வந்தோம் என்று.
தன் கணவன் தான் தன்னை இங்குத் தூக்கி வந்திருக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு அத்தனை சிலிர்ப்பாக இருந்தது.
வழித் தவறிப் போன கோழிக் குஞ்சு தன் தாயைக் கண்டதும் பேரமைதி கொண்டு தாயின் சிறகுகளுக்குள் ஓடி அணைவாக அடங்கிக் கொள்ளுமே, அது போல் கணவனை விட்டு பிரிய மனமில்லாமல் சற்றுப் பின்னால் உடலை நகர்த்தி அவன் மார்பினுக்குள் பாந்தமாக அடங்கியவள் கண்களை மூடி படுக்க, அவளின் அசைவில் விழித்தவன் அவளின் செயலைக் கண்டும் காணாதது போல் இதழில் விரிந்த புன்முறுவலுடன் அமைதியாகப் படுத்திருக்க எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ தெரியவில்லை.
கணவன் வீட்டிற்கு வந்த முதல் நாளே இத்தனை தாமதமாகக் கீழே செல்வதா என்று யோசித்தவள் அவன் விழித்திருப்பதை அறியாமல் மெதுவாகத் தன் இடையை அணைத்திருந்த அவன் கரத்தை விலக்கியவள் அறையை விட்டு செல்ல, அவள் சென்றதை அறிந்ததும் கண் விழித்தவனுக்கு அத்தனை பூரிப்பாக இருந்தது அவளின் மனமாற்றம்.
அவள் மற்றவர்களுக்கு, குறிப்பாக அவனுக்குத் தெரியக் கூடாது என்று ஆழ்மனதில் மறைத்து வைத்திருந்த இன்னும் மாறாத காதலைக் கண்டு கொண்டவனின் இதயம் மகிழ்ச்சியில் துள்ள இள நகையுடன் குளியல் அறைக்குள் சென்றான்.
கீழே வந்ததும் எங்குக் குளிப்பது என்று புரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கும் மருமகளைப் பார்த்த சங்கீதாவிற்குச் சிரிப்பு வந்தது.
"ஏன்டா, இவ்வளவு சீக்கிரம் முழிச்சுட்ட... இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கியிருக்கலாமில்ல?"
"இல்லத்த, நான் எங்க வீட்டில் நாலரை மணிக்கெல்லாம் முழிச்சுத் தான் பழக்கம்... இன்னைக்குக் கொஞ்சம் லேட்டா ஆச்சு" என்றவளுக்கு அவரின் புன்சிரிப்பு அவர் தான் சொன்னதை வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டார் என்பதை உணர்த்த கூச்சத்தில் முகம் சிவந்தாள்.
"அத்தை நான் குளிக்கணும், அவங்க இன்னும் தூங்கிட்டு இருக்காங்க, நான் அங்க குளிச்சா தொந்தரவா இருக்கும்.... வேற ஏதாவது பாத்ரூம் இருக்கா?”
"என் கூட வா..." என்று அவளை ஹர்ஷாவின் அறைக்கு அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றவர் அவன் வாங்கி வந்திருந்த புத்தம் புது உடைகளைக் கொடுத்து.
"கனிகா... இது உன் வீடு, ஹர்ஷாவோட ரூம் தான் உன் ரூம்... நீ உன்னோட ட்ரெஸ் எல்லாம் அவன் ரூமிலேயே வச்சுக்க..." என்றவர் வெளியேறினார்.
சிறிது நேரத்திற்குள் குளித்து முடித்துக் கீழே இறங்கி வந்தவள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி பூஜை புனஸ்காரங்களை முடித்துச் சமையல் அறைக்குள் புக, அவளின் வரவை எதிர்பார்த்திருந்த வேலையாட்களுக்குத் தங்கள் இளைய எஜமானியைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
காலை உணவு செய்து முடிக்கவும் ஹர்ஷாவும் சிதம்பரமும் கீழே இறங்கி வரவும் நேரம் சரியாக இருக்க, டைனிங் டேபிளில் பதார்த்தங்களை வைத்தவள் பறிமாறும் முன் கணவனை நோக்க, அவன் அவளைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
மனதை என்னவோ பிசைய அவனுக்குப் பார்த்துப் பார்த்து பறிமாறியவள் அவன் உண்டதும் அவன் பின் செல்ல துடித்த கால்களைக் கட்டுபடுத்தி அடக்கியவள் விழிகளில் நீர் தேங்கி நிற்க அவனையே பார்த்திருந்தாள்.
அவளின் பார்வை தன் மீது தான் படிந்திருக்கிறது என்று உணர்ந்து வெற்றிப் புன்னகை சிந்தியவன் திரும்பியும் பாராமல் தன் அறைக்குள் சென்று கதவை அடைக்க அவளுக்குத் தான் அத்தனை ஏமாற்றமாக இருந்தது.
அந்த நொடி அவளது மனதில் தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க இயலாது... அந்தக் கணம் இத்தனை நாளாய் தான் இழந்தது என்ன என்பதை அவள் உணர்ந்தாள்.
தன் கணவனின் புறக்கணிப்பு வெகு அழுத்தமாய் இதயத்தில் ஆழ இறங்க செய்வதறியாது சிறிது நேரம் நின்றவள் சங்கீதாவும் சிதம்பரமும் தன்னையே உற்று பார்த்திருப்பதை உணர்ந்து விழி நீரை அவர்களுக்குத் தெரியாமல் கண்மூடி உள்ளிழுத்துக் கொண்டவள் தன் வேலைகளைத் தொடர்ந்தாள்.
சிறிது நேரத்திலேயே கீழே இறங்கி வந்தவன் தான் அலுவலகத்திற்குப் போவதாகத் தன் அன்னையிடம் மட்டும் தெரிவித்துவிட்டு சட்டென்று வெளியேறினான்.
கணவனைப் பின் தொடர்ந்து செல்வதா? வேண்டாமா? என்று குழம்பி நிற்க அவளருகில் வந்து அவள் தோளைத் தொட்டு,
"என்னடா, உங்களுக்குள்ள மறுபடியும் ஏதாவது பிரச்சனையா?" என்றார் சங்கீதா.
"இல்லை அத்தை, அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்றவள் மிகுந்த சிரமப்பட்டுக் கண்களுக்கு எட்டாது புன்னகைக்க,
"எல்லாம் சரியாகிடும்டா..." என்றவருக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
*******************************
ஹர்ஷா கனிகாவை தன்னுடன் அழைத்து வந்து இதனோடு இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது.
ஒவ்வொரு நாளும் வெகு நேரம் கழித்தே இரவு வீடு திரும்புபவன் அதிகாலையிலேயே அலுவலகத்திற்குச் சென்றுவிடுவான்.
அவனின் புறக்கணிப்பு அணு அணுவாய் சித்திரவதை செய்யத் தவித்தவளுக்கு அவனிடம் கேள்வி கேட்கும் தைரியம் மட்டும் வரவே இல்லை.
அவனைக் கண்ட முதல் நாளில் இருந்து இதோ இன்று அவன் மனைவியாக அவனருகே இருந்தும் அதே அச்சம் இன்னும் மனதில்.
அடுத்து கழிந்த நாட்களெல்லாம் முழுதாகத் தவிப்பில் கரைய ஒவ்வொரு நாளும் அவன் அருகில் படுத்ததும் அவளின் பூ மேனி உணர்ச்சி வேகத்தில் நடுங்கும்.
அவனோ அதைக் கண்டு கொள்ளாதது போல் தூங்க, நெருப்பில் இருப்பதைப் போல் தத்தளித்தவளின் தூக்கம் அவளைத் தாண்டி வெகு தூரப் போயிருக்கும்.
ஆனால் அவனுக்கோ நினைத்த மாத்திரத்தில் கனிகா என்றுமே அவன் மனதில் குளுமையைக் கொண்டு வருபவள்.
தூர இருக்கும் பொழுதே அவளைத் தேடி தவியாய்த் தவித்தவன் இப்பொழுது தன் அருகில், அதுவும் தன்னுடன் ஒரே படுக்கையில் இருந்தும் அவளைத் தொடாமல் தள்ளி இருப்பதற்கு அவன் படும் பாடு அவனுக்கு மட்டுமே தெரியும்.
தன்னுடைய உணர்வுகளைப் பணயம் வைத்து அவளைத் தள்ளி வைத்திருந்தான் அவள் தானாகத் தன்னைத் தேடி வர வேண்டும் என்பதற்காக.
அவள் தன்னைப் பார்க்காத பொழுது அவளை உரிமையாக மேய்ந்தன அவன் கண்கள்.
இரவில் பூங்கொடியாய் தன் அருகில் படுத்திருந்தவளை கண்டு அவன் உணர்வுகள் கட்டவிழ்க்க,
"உன் மேல எந்தளவுக்கு ஆசை வச்சிருக்கேன்னு காட்டணும்னு ஆசையா இருக்குடி, உன்னை முத்தத்தாலும் அணைப்பாலும் குளிப்பாட்டணும் அத்தனை வெறியா இருக்குடி...." என்று தனக்குள்ளே புலம்பிக் கொள்பவன் அவள் அறியாத வண்ணம் அவள் அருகில் நெருங்கி படுத்து, ஓடிக் களைத்துப் பின் தன் இணையைச் சேர்ந்த நிம்மதியில் உறங்கி போவான்.
அன்றும் அதே போலவே வெகு சீக்கிரம் அலுவலகத்திற்குக் கிளம்பியவன் காலை உணவை முடித்துக் கை கழுவ தன் அருகில் நின்றுக் கொண்டிருந்தவளிடம் சன்னமான குரலில்,
"இன்னக்கு மாம் அன்ட் டாடோட வெட்டிங் டே.... வழக்கமாக நாங்க மூணு பேரும் ஏதாவது ரெஸ்டாரண்ட் போவோம்... நீயும் கிளம்பி ரெடியாக இரு... நான் வந்து உங்களை அழைச்சுட்டு போறேன்..." என்றான்.
அவன் அவளிடம் பேசியே வெகு நாட்கள் ஆகியிருந்தது.... எப்படி அவரால் இப்படி இருக்க முடிகிறது? என்று அவளைத் தன் மௌனத்தாலும் பாரா முகத்தாலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தான்.
இப்படி இருக்க அவனாகத் திடீரென்று தன்னுடன் பேசியதில் மகிழ்ச்சி அடைந்தவள் அதே சந்தோஷ முகத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க,
"மாம் கிட்டேயும் டாட் கிட்டேயும் ப்லெஸ்ஸிங்ஸ் வாங்கணும்... வா..." என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் நடக்க,
அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் பின்னால் ஓடியவள் அவனுடன் சேர்ந்து மாமியார் மாமனாரை வாழ்த்தப் போனாள்.
வேகமாக நடந்தவனின் பின்னால் கிட்ட தட்ட ஓடியவள் அவன் சட்டென்று நின்றதும் அவன் மீது மோதி தடுமாறி நிற்க அவளின் நிலைமையை உணர்ந்தவன் அவள் தோள் பற்றி நிற்க வைத்தான்.
இத்தனை நாட்களுக்குப் பிறகு தன் கணவனின் தொடுகை உள்ளத்தில் பூப்பூக்கச் செய்ய நாணத்துடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அவள் பார்ப்பது தெரிந்ததும் சட்டென்று திரும்பி மாடி ஏறினான்.... பாகாக உருகிய அவளின் மனம் ஒரு நொடியில் சருகாகக் கருகி வாடிப் போனது.
பெரியவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்கள் அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற சங்கீதாவிற்கும் சிதம்பரத்திற்கும் ஏனோ அந்தத் திருமண நாள் அத்தனை மகிழ்ச்சியைத் தந்தது.
"அடுத்த வருஷம் எங்களோட வெட்டிங் டேவை எங்க பேரப்பிள்ளையோட சேர்ந்து கொண்டாடணும்..." என்று அவர்கள் கூற நாணத்துடன் கணவனை மீண்டும் திரும்பி பார்த்தவளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தாத அவன் முகத்தில் இருந்து அவன் எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
தன் முகத்தையும் பார்க்காது தன் அன்னை தந்தையிடம் மட்டும் விடைபெற்று அவன் அமைதியாகச் செல்ல, குழம்பிப் போய் நின்றாள்.
வழக்கமாகத் தங்கள் திருமண நாள் அன்று மூவரும் ஏதாவது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு உணவு சாப்பிட செல்வது வழக்கம்... கனிகாவிற்கும் தெரியப்படுத்தி இருந்தார் சங்கீதா.
மதியம் ஹர்ஷா கொடுத்ததாக ஒரு பையை அலுவலகத்தில் பணிபுரிபவர் கொண்டு வந்து கொடுக்கப் பிரித்துப் பார்த்தவள் மலைத்து போனாள்.
சிகப்பு நிறத்தில் மணிகளும், கற்களும் பதித்த டிசைனர் புடவை கண்களைப் பறித்தது... அதற்கு ஏற்றார் போன்று அவளுக்கென்றே அளவெடுத்தது போல் தைத்த ப்ளவுஸ்.
மாலை புடவையை அணிந்து அவனுக்காகக் காத்திருக்க, வீட்டிற்குள் நுழைந்தவனின் கண்கள் அவளைக் கண்டதும் ஒரு விநாடி அவளிடம் நிலைத்து நின்றது.
பின் தோள்களைக் குலுக்கியவன் வேகமாக மாடி ஏற, தன் கணவனின் பார்வைக்காக வெகு நேரம் காத்திருந்தவளுக்குப் பெருத்த அடியாக இருந்தது அவனின் கண்டு கொள்ளாமை.
'ஏன் இந்தப் புறக்கணிப்பு? என்ன எதிர்பார்க்கிறார் என்னிடம்? அவர் விரும்பியது போல இப்பொழுது அவருடனே இருக்கிறேனே... இன்னும் என்ன வேண்டும்? தள்ளி இருந்த பொழுதெல்லாம் என்னைத் தேடி வந்தவர் இப்பொழுது தொடும் தூரத்தில் இருந்தும் ஏன் இந்த ஒதுக்குதல்?'
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவளின் ஒரு பார்வைக்காகக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே தவம் கிடந்தவன், இடையில் விதி வசத்தாலும், தன்னுடைய கூடப் பிறந்த திமிர் தனத்தாலும், பிடிவாதத்தாலும், அவளின் வாழ்க்கையைச் சூனியமாக்கியிருந்தாலும் தவறை உணர்ந்த அந்த நிமிடமே அவளைத் தேடி ஓடோடி வந்தவன்.
தன் கணவன் தன்னைப் பழி வாங்குவதாக எண்ணினாளே தவிர அவளாகத் தன்னை அவனிடம் ஒப்புக் கொடுக்க முன் வரவில்லை..... அவள் தானாக அவனிடம் வர வேண்டும், அது வரை அவளைத் தொடமாட்டேன் என்று முதல் நாள் இரவு சொன்னதை அவள் மறந்து போனாளோ?
ஆனால் அவனது எண்ணங்களோ வேறாக இருந்தது.
ஒரு ஆண்மகன், அதுவும் செயல், பேச்சு, நினைவுகள் எல்லாவற்றிலும் கர்வம் குடிக் கொண்டிருந்தவன்..... இதற்கு மேல் இறங்கி வருவதற்கு என்ன இருக்கிறது? இருந்தும் அவள் வீடு வரை சென்று அவளைத் தூக்கி வந்தேன், அப்பொழுதும் என்னை மன்னிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ அவள் தயாராக இல்லை.... அதனாலேயே ஒவ்வொரு விநாடியும் அவள் வேண்டும், வேண்டும் என்று இதயம் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கும் போதெல்லாம் என் மனதை அடக்கி அவளை என் வழிக்கு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்... இது அவனது விவாதம்.
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரவு உணவை முடித்தவர்கள் வீட்டிற்குத் திரும்ப மாலை வெளியில் கிளம்பியதில் இருந்து இதோ வீடு வரும் வரை அவன் தன் அன்னை தந்தையிடம் மட்டுமே பேசியவன் மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை.
அவன் தன்னைத் தேடி வந்த பொழுதெல்லாம் ஒதுங்கியவள், அவனுக்குப் பாராமுகம் காட்டியவள், இன்று அவன் அதையே திருப்பிச் செய்யும் பொழுது பழி வாங்குகிறான் என்றே எண்ணியவள் அவனின் மனதை புரிந்து கொள்ளவில்லை.
ஆக இரு உள்ளங்களும் காதலில் தளும்பி தத்தளித்துக் கொண்டிருந்தாலும் தங்கள் இடத்தில் தங்களை மட்டுமே வைத்துப் பார்த்தார்களே ஒழிய தங்கள் இணையைத் தங்கள் இடத்தில் வைத்து பார்க்க தவறிவிட்டார்கள்.
காதலில் கூடாதது கர்வமே... இது எப்பொழுது புரியுமோ இந்த இரு இளம் தம்பதியினருக்கு!!!!!
தொடரும்..