அத்தியாயம் - 29
கீழே விருந்தினர் அறையில் இருந்து சிவந்த முகத்துடன் மஹா வெளியே வருவதையும், சிரித்துக் கொண்டே வினோத் அவளின் பின் வருவதையும் கண்ட அர்ஜூனிற்கு எதுவோ சரியில்லை என்று உணர்த்த, படிகளில் இறங்கிய படியே ஒன்றும் பேசாமல் தங்களைக் கூர்ந்துப் பார்த்தபடியே வரும் அண்ணனை பார்த்த மஹாவிற்கு நெஞ்சுக் கூட்டில் குளிரெடுத்தது....
வேகமாக அறையை விட்டு ஓடிய மஹா சட்டென்று நின்றதும், அவளின் பார்வை போன இடத்தைப் பார்த்த வினோத்திற்குச் சப்த நாடியும் ஒடுங்கிப் போனது தங்களையே ஆழ்ந்தப் பார்வைப் பார்த்துக் கொண்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்த அர்ஜூனைக் கண்டதும்...
தன்னையும் அறியாமல் மஹாவைத் திரும்பிப் பார்த்தவன் அவள் விழிகளில் தெரிந்த அச்சத்தையும் கலக்கத்தையும் கண்டவனுக்குத் தன்னவளின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த திகிலிற்கு நாம் தானே காரணம் என்று குற்ற உணர்வு வர, திரும்பி அர்ஜூனின் பார்வையை எதிர் கொண்டவன் மஹாவிற்கு அருகில் சென்று நிற்க, அவர்களைப் பார்த்தவாறே ஒன்றும் பேசாமல் தன் மனைவியைத் தேடித் தோட்டத்திற்குச் சென்றான் அர்ஜூன் ..
தோட்டத்தில் அமர்ந்திருந்த கலா திவ்யாவின் கரத்தைப் பற்றித் தன் மடி மீது வைத்துக் கொண்டவர் ஸ்ரீயிடம்...
ஸ்ரீ, எனக்குத் திவ்யாவ ஒரு வாரம் எங்க வீட்டுல வச்சுக்கனும்னு ஆசையாக இருக்குடி... நீ மாப்பிள்ளையிடம் பேசிட்டு சொல்றியா? நானே வந்து அவளை அழைச்சுட்டு போறேன்" எனவும்...
தன் தோழியின் ஏக்கம் புரிந்தாலும் அர்ஜூன் திவ்யாவை எங்கும் வெளியில் விடாது தன் பாதுகாப்பிற்குள்ளேயே வைத்திருப்பதை அறிந்திருந்ததால்...
"கலா, அர்ஜூன் இப்போ திவ்யாவை வெளியே கோவிலுக்குக் கூட விட ரொம்ப யோசிக்கிறான்... அவ எங்க வெளியே போகனும்னாலும் அவன் தான் கூட்டிட்டுப் போறான்... இப்போ அவனிடம் திவ்யாவை ஒரு வாரத்திற்கு அனுப்ப சொன்னா நிச்சயம் அனுப்ப மாட்டான்... அதனால் கொஞ்சம் நாளாகட்டும்... அதற்கப்புறம் பேசுறேனே?" என்றார்.
தங்கள் மகளைத் தங்களுடன் சில நாட்களாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைபட்டவருக்குத் தங்கள் மருமகனின் மனசும் புரிந்து தான் இருந்தது.... நேற்றில் இருந்து அவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாரே அவன் தன் மனைவியைத் தலையில் வைத்து தாங்குவதை....
சரி என்றவர் மேலும் சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, வீட்டில் இருந்து மஹா வினோத்தைப் பற்றிய யோசனையுடன் தோட்டத்திற்கு வந்த அர்ஜூன் திவ்யாவைப் பார்த்தவன்...
"திவி.... நான் கிளம்பறேன்... வெளியில் எங்கேயும் போகனும்னா சொல்லு, நான் வந்து கூட்டிட்டு போறேன்" என்றான்...
கலாவை திரும்பி பார்த்த ஸ்ரீ சொன்னேன் அல்லவா என்பது போல் பார்க்க, அவரும் புரிந்தது என்பது போல் புன்னகைத்தார்...
"சரிங்க" என்ற திவ்யா அர்ஜூனைப் பின் தொடர...
"நீ பேசிட்டு இரு, நான் கிளம்பறேன்" என்றான்...
"இல்லை பரவாயில்லை" என்றவள் அவனுடன் சேர்ந்து நடக்க, உள்ளே வந்த அர்ஜூன் இன்னும் வினோத்தும் மஹாவும் ஒன்றாக நிற்பதை பார்க்கவும் ஒன்றும் பேசாமல் மௌனமாக வீட்டின் வாயிலை நோக்கி நடக்க, அர்ஜூனின் அருகில் வந்த மஹா தயங்கிவாறே..
"அண்ணா, உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றாள்..
அதற்கும் பதில் பேசாது புருவங்களைச் சுருக்கி பார்த்தவனின் அனல் கக்கும் பார்வையில் அவனின் உள்ளத்தில் இருந்த கட்டுக் கடங்காத கோபம் தெரிய, எரி நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சி போல் மனதிற்குள் துடிதுடித்துப் போனவளுக்குப் புரிந்து போனது இனி அடுத்து நடக்கவிருப்பது....
"கடவுளே! இது எங்க போய் முடியும்னு தெரியலையே..." என்று உச்சி முதல் உள்ளங்கால் வரை வெளிப்படையாக நடுங்க, உள்ளங்கைகள் இரண்டும் வியர்த்து விறுவிறுக்க, கைகளைப் பிசைந்தவாறே அர்ஜூனின் கனல் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலைக் குனிந்தவளைக் கண்டவன் அதற்கு மேலும் அங்கு நிற்கப் பிடிக்காதவன் போல் விருட்டென்று வெளியே செல்ல,
கணவனுடன் வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே தன் அண்ணனும் மஹாவும் நெருங்கி நிற்பது கண்களில் பட்டவுடன் "ஏன் இவங்க ரெண்டு பேரும் இவ்வளவு நெருங்கி நிற்கிறாங்க?" என்று யோசித்துக் கொண்டிருந்த திவ்யாவிற்கு இப்பொழுது மஹாவின் பேச்சும், அதற்குத் தன் கணவனின் கோபப் பார்வையும் எதுவோ சரியில்லை என்பதை உணர்த்தியது....
ஆனால் தன் கணவனிடம் அதனைப் பற்றிக் கேட்கும் தைரியம் மட்டும் அவளுக்கு வரவில்லை…
வெளியே வந்தவள் யோசனையுடன் அர்ஜூனைப் பின் தொடர்ந்து நடக்க, அவள் அமைதியாக வருவதை உணர்ந்தவன் சட்டென்று நிற்கவும் அவனுக்கு மிக அருகில் வந்து கொண்டிருந்தவள் அவன் நின்றதை உணராமல் அவன் மீது மோதி தடுமாறி கீழே விழப் போனாள்...
அவள் கீழே விழாதவாறு அவளின் இடையைத் தாங்கி பிடித்தவன்....
"என்ன திவி இது? எந்த உலகத்தில இருக்க? இந்நேரம் கீழ விழுந்திருந்தின்னா என்ன ஆவது? என்று வெடித்தான்...
அர்ஜூனிற்கே வினோத் மஹாவின் செயல் அதிர்ச்சியாகத் தான் இருந்தது என்றால் திவ்யாவிற்குச் சொல்லவா வேண்டும்...
அவள் ஏற்கனவே தானே இந்த வீட்டிற்கு மருமகளாகவும், அர்ஜூனிற்கு மனைவியாகவும் வர தகுதி இல்லாதவளோ என்று இன்னமும் அவ்வப்பொழுது நினைத்துக் கொண்டிருக்கிறாள் (அர்ஜூனின் மனதில் அப்படி ஒரு எண்ணம் சிறிதளவும் இல்லை என்றாலும் இவள் எப்பொழுதாவது சில சமயங்களில் தனக்குள் நினைத்துக் கொள்வது உண்டு)...
அப்படி இருக்க மஹா இந்த வீட்டின் செல்லம்... தன் அண்ணனிற்கும் அவளுக்கும் உள்ளது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதிலே அவளின் எண்ணங்கள் சுழன்றுக் கொண்டிருந்ததால் தான் அர்ஜூன் சட்டென்று நின்றதும் அவனைக் கவனிக்காமல் அவன் மீது மோதிக் கீழே விழப் பார்த்தது...
கணவனின் கோபப் பேச்சில் திக்கென்று இருக்க, அவனையே கண் இமைகளைக் கூடச் சிமிட்டாமல் பார்த்தவளைக் கண்டவனுக்கு அவளின் யோசனை இப்பொழுது எங்கு இருக்கிறது என்பதும் புரிய தனது சத்தத்தால் அவளின் முகத்தில் தெரிந்த அச்சத்தில் கனிவடைந்தவன் அவளின் இடையைப் பிடித்திருந்த கரத்தில் அழுத்தத்தைக் கூட்டி இன்னும் தன்னருகில் அவளை இழுத்து...
"திவி, இங்க இந்த வீட்டில் உன்னோட வேலை உன் உடம்பப் பாத்துக்கிறதும், உன் ஹஸ்பண்டைப் பார்த்துகிறதும், உன் வயித்துல இருக்கிற நம்ம குழந்தையைப் பாத்துக்கிறதும் மட்டும் தான்... யோசனை எல்லாம் என் மீதும், நம் குழந்தையின் மீதும் மட்டுமே தான் இருக்கனும்.. வேற எதைப் பத்தியும் நீ கவலைப்படுறது எனக்குப் பிடிக்காது.... புரியுதா?" என்று அவளின் கன்னத்தைத் தட்ட...
"சரி" என்பது போல் தலை அசைத்தவளைக் கண்டவனுக்கு அவள் இன்னமும் யோசனையில் இருந்த விடுபடவில்லை என்பது புரிபடவும், மேலும் அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன்...
"ஹே... திவி.... என்ன நான் சொல்றது புரியுதா? என்று கேட்க...
ஏதோ கனவுலகத்தில் இருந்து திரும்பி வந்தவள் போல் புன்னகைத்தவள்...
"புரியுது" என்றாள்....
சுற்றும் முற்றும் பார்த்தவன் குனிந்த தன்னவளின் பட்டுக் கன்னத்தில் மென்மையாக முத்தம் இட்டவன் போய் வருகிறேன் என்பது போல் தலை அசைத்து தன் காரில் ஏற, தன் கணவன் தன் கண்களில் இருந்து மறையும் வரை அந்த இடத்திலேயே நின்றவள் வீட்டிற்குள் நுழைந்ததும் தன் அண்ணனைத் தேட, அதற்குள் தோட்டத்தில் இருந்த அனைவரும் வீட்டிற்குள் நுழையவும் இப்பொழுது அண்ணனிடம் பேசுவது முறையல்ல என்று எண்ணியவள் அமைதியாக இருந்துவிட்டாள்....
ஆனால் அர்ஜூன் தன்னையும், மஹாவையும் சுட்டுப் பொசுக்குவது போல் பார்த்த பார்வையைக் கண்ட வினோத்திற்கு மனம் அடங்கவில்லை...
தங்கள் இருவரையும் அந்த நிலைமையில் எதிர்பாராமல் பார்த்தது நிச்சயம் அத்தானிற்குக் கோபத்தைக் கிளறியிருக்கும்... இருந்தும் அவர் ஒன்றும் சொல்லாமல் செல்வதைப் பார்த்தால் நிச்சயம் ஏதாவது பிரச்சனை வெடிக்கும் போல் தெரிகிறது... இதனால் மஹாவிற்கு மட்டும் அல்ல, திவ்யாவிற்கும் அத்தானிற்கும் இடையிலும் பிரச்சனை வர வாய்பிருக்கிறது... அதற்குள் தான் இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தவன் தன் அன்னையிடம் சென்று...
"அம்மா, எனக்கு வெளியில ஒரு முக்கிய வேலை ஒன்னு இருக்கு..... ரயில்வே ஸ்டேஷனுக்கு நீங்க கிளம்புறதுக்கு முன் நான் வந்திடுறேன்" என்றான்.
சென்னையில் அவனுக்கு என்ன வேலை என்று யோசித்தவர் அவனிடமே கேட்க,
"என் வேலை விஷயமாம்மா... சீக்கிரம் வந்திடுறேன்" என்றவன் கிளம்பிப் செல்கையில் மஹாவைப் திரும்பி பார்த்தவன் தலையை மட்டும் ஆட்டிவிட்டு செல்ல, அவன் எங்குப் போகிறான் என்று ஏற்கனவே தெரிந்திருந்ததால்...
"இன்னைக்கு ஒரு பூகம்பம் வெடிக்கப் போவுது... அர்ஜூன் அண்ணா ஏற்கனவே எரிமலை மாதிரி கோபத்தில் இருக்காரு... இதில் இவருக்குக் கொஞ்சம் கூடப் பயம் என்பதே இல்லை... இரண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணி கலங்கடிக்கப் போறாங்களோ தெரியலையே" என்று நினைத்த மஹாவிற்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து இருந்தது.
அவள் எதிர்பார்த்தது போலவே வீட்டை விட்டு வெளியே வந்த வினோத் சென்றது நேரே சென்னையின் நடுநாயகமாக அமைந்திருந்த அந்தப் பதினொரு அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கு...
அது எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் தலைமை அலுவலகம்...
அந்த மிகப் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடத்தைப் பார்த்தவனுக்கு உண்மையில் மஹா அவ்வளவு உயரத்திலும் தான் தரையிலும் இருப்பது போல் தோன்ற, இருந்தும் தேவதையைப் போன்று தன் இதயத்தில் ஆழ புகுந்திருக்கும், தன் உயிரின் வேர் வரை சென்று தன் உணர்ச்சிகளில் கலந்து இருக்கும் தன்னவளை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற பிடிவாதத்தினால் அர்ஜூனைப் பார்க்க கட்டிடத்திற்குள் நுழைந்தவன் நுழைந்த விநாடி அப்படியே பிரமித்துப் போய் நின்றான் அலுவலகத்தின் உட்புற பிரமாண்ட அமைப்பில்...
சென்னையில் இத்தனை உயரத்திற்கு, அதுவும் இவ்வளவு பெரிய கட்டிடம்..... அதிலும் கட்டிடத்தின் உட்புறம் (இண்டீரியர்) மிகவும் அழகாகவும் பிரமாண்டமாகவும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணம் விளையாடி இருக்க அர்ஜூனின் வீடே அத்தனை அழகு என்றால் அவனின் அலுவலகம் அதை விடக் கொள்ளை அழகு.
சில நிமிடங்கள் பிரமிப்பில் ஆழ்ந்து சிலைப் போல் நின்றவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு ரிஷப்ஷனில் தான் அர்ஜூனைப் பார்ப்பதற்காக வந்திருப்பதாகச் சொல்ல,
"டு யூ ஹேவ் என் அப்பாயிண்ட்மெண்ட் வித் அவர் எம் டி சார்? [Do you have an appointment with our M D sir?" என்றாள் ரிஷப்ஷனிஸ்ட்டில் ஒருத்தி..
"இல்லை, ஆனால் வினோத் வந்திருப்பதாகச் சொல்லுங்கள்" [Please let him know this is Vinoth] " என்று அவன் ஆங்கலத்தில் பகரவும் சரி என்றவள் யோசனையுடன் அவனின் முகத்தைப் பார்த்தவாறே கதிரை அழைத்தாள்..
ஏனெனில் வினோத்திற்கும் அர்ஜூனுடனான தன் உறவு முறையைச் சொல்லி அவனைச் சந்திப்பதில் விருப்பம் இல்லை...
அதனைப் போல் தங்கள் MD-க்கும் முன்னறிவுப்பு இல்லாமல் ஒருவரும் தன்னைச் சந்திப்பது பிடிக்காது...
ரிஷப்ஷனிஸ்ட் கதிருக்கு அழைக்க ஆனால் அவனுக்கும் வினோத் யாரென்று தெரியவில்லையாதாலால் அவனே அர்ஜுனை அழைத்து வினோத் என்பவர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்று கூற, ஒரு விநாடி யோசித்த அர்ஜூன்...
"ஒகே, லெட் ஹிம் கம் [Let him come]" என்றான்...
தன்னை என்ன ஏது என்று கூடக் கேட்காமல் கதிர் அழைத்துச் செல்லவும் அவனுடன் சேர்ந்து நடந்த வினோத்திற்கு ஒரு பக்கம் அர்ஜூனின் கோபத்தை நினைத்துக் கலக்கமாகவும் மறுபக்கம் திவ்யாவை நினைத்து தயக்கமாகவும் இருந்தது....
ஆனால் அதே சமயம் அவனால் எந்தக் காரணத்திற்காகவும் மஹாவை விட்டுக் கொடுக்க முடியாது.
கதிருடன் நடந்தவன் Managing Director Arjun Krishna என்று பொறிக்கப்பட்ட அறைக்கு வெளியே நின்ற கதிர் கதவைத் தட்டவும்...
"யெஸ் கமின்" என்ற அர்ஜூனின் கம்பீரக்குரலில் தன் உடம்பில் ஒட்டியிருந்த தைரியத்தில் பாதி வெளியே ஓடிச் சென்றது என்றால் அவன் பணித்ததற்குப் பிறகு அறையில் நுழைந்தவனுக்கு அர்ஜூன் அமர்ந்திருந்த தோரணையும், அவன் தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் கணினியில் முகம் புதைந்திருந்ததில் தெரிந்த அவனின் ஆணவமும் மீதி தைரியத்தை வெகு தூரத்திற்குப் பறக்கச் செய்திருந்தது...
தன்னை அடியோடு வசீகரிக்கும் தன்னவளின் எழில் முகமும், தான் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது தன்னைப் பார்த்திருந்த அவளின் அழகிய கண்களில் தெரிந்த சஞ்சலமும், அதே சமயம் இங்குச் சிம்ம சொப்பனம் போல் கம்பீரமாக அதிகாரத்துடன் அமர்ந்திருக்கும் அர்ஜூனின் அந்தஸ்தும் வினோத்தின் மூளையை வேலை செய்ய விடாமல் மரத்துப் போகச் செய்ய, உள்ளே நுழைந்ததில் இருந்து அசையாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தன் மச்சினனின் தடுமாற்றத்தை அவனை நிமிர்ந்துப் பார்க்காமலே மனதில் குறித்துக் கொண்ட அர்ஜூன்...
"கம் இன் வினோத்" என்று கூற,
அவர்களைத் தனிமையில் விட்டு வெளியே சென்ற கதிருக்கு, தன் M D முன்னறிவிப்பில்லாமல் வந்த வினோத்தை சந்திப்பது அதிசயமாக இருந்தது என்றால் அதிலும் தன் அறைக்கே உடனடியாக அழைத்து வரச் சொன்னது வியப்பில் ஆழ்த்தியது.
"ஹேவ் எ ஸீட் வினோத் [Have a seat Vinoth] " என்று அர்ஜூன் கூறவும்,
அமர்ந்த வினோத் எதுவும் பேசாமல் தலை குனிந்தவாறே அமர்ந்து இருப்பதைக் கண்டு இன்னமும் கணினியில் இருந்து தன் தலையை நிமிர்த்தாமலே,
"பேசறதுக்குன்னு வந்துட்டு இப்போ பேசலைன்னா எப்படி? என்றான் தன் கம்பீர குரலில்...
அவன் அவ்வாறு சொன்னதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்கு இன்னும் தன்னால் அர்ஜுனைக் கண்ட பிரம்மையில் இருந்து வெளி வர முடியாது போக...
இருந்தும் சில விநாடிகளில் தன்னைத் திடப்படுத்திக் கொண்டவன் தன் தொண்டையைச் செறுமிக் கொண்டு,
"உங்கள பிஸியான நேரத்தில் டிஸ்டர்ப் பண்ணிட்டேன் நினைக்கிறேன்" என்று தயங்கவும் அவனை நிமிர்ந்துப் பார்த்த அர்ஜூன்...
"இட்ஸ் ஓகே... சொல்லுங்க" என்று அவனை ஆழ்ந்துப் பார்த்தவாறே கூற மெல்ல பேச துவங்கினான் வினோத்...
"என் மேலே நிச்சயம் உங்களுக்குக் கோபம் இருக்கும் அத்தான்... உங்க கோபமும் நியாயமானது தான்... உங்க வசதியும் அந்தஸ்தும் எனக்குத் தெரியும்... அதே மாதிரி என்னோட தகுதி என்னன்னும் எனக்குத் தெரியும்...." என்றவன் சிறிது தயங்கி...
"திவ்யாவோட அண்ணனா நான் இப்போ உங்களோட பேச வரலை.... அந்த உரிமையோட நான் நிச்சயம் மஹாவ எனக்குக் கேட்க மாட்டேன்" என்றான் அழுத்தமாக....
வினோத் பேசத் துவங்கியதும் சேரில் ஊன்றியிருந்த தன் வலக் கையை முகவாயில் கொடுத்து கூர்மையான கண்களோட அவனையே அர்ஜூன் பார்த்திருக்க, அவனின் கழுகுப் பார்வையில் உள்ளுக்குள் சகலமும் நடுங்கிப் போயிருந்த வினோத்திற்குத் தான் பேச வந்ததை முழுவதுமாகப் பேசி விடுவோமா?? என்ற சந்தேகம் தான் தோன்றியது...
தன்னை சில விநாடிகள் பார்த்திருந்த வினோத் மேலே பேசுவதற்குத் தயங்குவது போல் அர்ஜூனிற்குத் தெரிய,
"ம்ம்ம், சொல்ல வந்தத முழுசா சொல்லுங்க" என்று கூறவும், தன் தயக்கத்தைச் சடுதியில் உதறிய வினோத் சடசடவென்று பேசி முடித்தான்...
"இந்த வருஷம் என்னோட காலேஜ் முடியுது அத்தான்... காலேஜ்ல நான் டிஸ்டிங்ஷன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்... காலேஜ் கேம்பஸ் இண்டெர்வியூவில ஏற்கனவே செல்க்ட் ஆகிட்டேன்... எந்த இடத்தில் ட்ரெய்னிங், எத்தனை மாசம் என்று எல்லா டீட்டெய்ல்ஸும் கூடிய சீக்கிரம் சொல்லிடுவாங்க... ட்ரெய்னிங் முடிஞ்சதும் ஒரு மூனு வருஷமாவது வேலைப் பார்க்கனும், எங்க அம்மா அப்பாவோட கடன அடைக்கனும்... அப்புறம் தான் என்னோட மேரேஜ்ன்னு ப்ளான் பண்ணியிருந்தேன்... ஆனால் நிச்சயம் மஹா மாதிரி ஒரு பெண்ணைப் பார்ப்பேன், அவள விரும்புவேன்னு நான் கனவிலயும் நினைச்சுப் பார்த்ததில்லை... எங்க வீட்டுக் கஷ்டம் உணர்ந்து காதல் மட்டும் இல்லை, வேற எந்தத் தேவையில்லாத பழக்கமும் நான் வச்சிக்கல... படிப்பில் மட்டும் தான் என்னுடைய முழுக் கவனமும் இருக்கனும் அப்படிங்கறதல ரொம்பத் தீவிரமா இருந்தேன்.... " என்றவன் சில விநாடிகள் தயங்கி...
"ஆனால் மஹாவப் பார்த்ததும் நான் எனக்குள்ள போட்டுக்கிட்ட கட்டுப்பாடு என்னை அறியாம உடைஞ்சிடுச்சு... இதுக்கு நிச்சயம் உங்க வசதியோ, திவ்யா என்னோட தங்கைங்கிற உரிமையோ இல்ல, சத்தியமா இல்லை... எனக்கு நல்லாவே தெரியும்... நீங்க மஹாவிற்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்ப்பீங்கன்னு... அந்த மாப்பிள்ளைங்க பக்கத்தில நிக்கிற தகுதிக் கூட எனக்கில்லைன்னு தெரியும்... ஆனால் இரண்டு விஷயத்தில் நான் உங்களுக்கு உறுதி கொடுக்க முடியும்... ஒன்னு நீங்க எல்லாரும் சம்மதிச்சா மட்டும் தான் நான் அவள என்னவளா எடுத்துப்பேன்.... இரண்டாவது உங்க அளவுக்கு இல்லைன்னாலும் என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சந்தோஷமா நான் மஹாவை வச்சிப்பேன்" என்று அழுத்தமாகக் கூறி முடித்தான்...
அவன் பேசி முடித்தும் ஒன்றும் சொல்லாமல் மௌனமாகத் தன் விழிகளை நேருக்கு நேர் பார்த்திருந்த அர்ஜூனைக் கண்ட வினோத்திற்கு இதற்கு மேல் என்ன சொல்வதென்றெ தெரியவில்லை.
ஆனால் அவனின் அடி மனதில் எங்கே அர்ஜூன் தனக்கு மஹாவைத் தர இயலாது என்று கூறிடுவானோ என்று பயம் கவ்வியிருக்கத் தன்னிலைக்கு விளக்கம் கொடுப்பதற்காக மேலும் தொடர்ந்தவன்...
"இத வச்சு மஹாவை எனக்குக் கொடுங்கன்னு கேட்கிறது எந்த விதத்திலேயும் நியாயம் இல்லை தான்... ஆனால் நான் வாழ்க்கையில் ரொம்ப நல்லா வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு... கடினமா உழைச்சு எங்க அம்மா அப்பா மட்டும் இல்ல எனக்கு மனைவியா வரப் போறவளையும் நல்லா காப்பாத்தனும் அப்படிங்கிற வெறியில் தான் நான் நல்லா படிச்சுக்கிட்டு இருக்கேன்... என் மேல் நம்பிக்கை இருந்தா நீங்க எனக்கு மஹாவ கொடுங்க" என்றவனின் குரலில் அழுத்தமும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருந்ததே ஒழிய, எந்தப் பிசிறோ தடுமாற்றமோ கடுகளவும் இல்லை...
தன் எதிரில் அமர்ந்ததும் வினோத்தின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும், அவனின் கண்களில் தெரிந்த ஒரு வித பிரமிப்பையும் கண்டிருந்த அர்ஜூனிற்கு அவன் மஹாவைப் பற்றிப் பேசத் துவங்கியதும் அவனின் விழிகளில் தெரிந்த உறுதியும், குரலில் தெரிந்த தெளிவும் அவன் மேல் ஒரு நல்ல மதிப்பையே உருவாக்கியிருந்தது.... இவன் திவ்யாவைப் போன்று பயந்தவனில்லை என்றாலும், அவளைப் போன்ற நல்ல மனம் உள்ளவனாகவே தெரிந்தான்...
இருந்தும் இன்று காலையில் மஹாவுடன் ஒரே அறையில் இருந்து அவன் வெளி வந்ததை ஏனோ அர்ஜூனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை...
தான் பேச வந்த அனைத்தையும் பேசி முடித்தும் பதில் எதுவும் பேசாத அர்ஜூனைப் பார்த்தவனுக்கு அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று தோன்ற,
அவனின் மன நிலையைப் புரிந்து கொண்ட அர்ஜூன் நிமிர்ந்து உட்கார்ந்தவன் தன் முகத்திலோ வார்த்தைகளிலோ எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தனக்கு முன் இருந்த சதுரங்க பலகையில் காய்களை நகர்த்தியவாறே..
"நீங்க எப்போ மஹாவை லவ் பண்ண ஆரம்பிச்சீங்க?" என்றான் நிதானமாக...
போச்சுடா... உள்ளுக்குள்ள இருக்கிற அடங்காத கோபம் தறிகெட்டு வெளியே வராமல் தன்னைக் கட்டுப்படுத்த தான் அவன் சதுரங்கமே விளையாடுவான்.... அப்பொழுது அவனின் கண்காணாத, அவன் பார்வையில் பட முடியாத தொலைவான இடத்தில் இருக்கும் எதிராளியின் நிலைமையே அந்தோ பரிதாபமாக இருக்கும் பொழுது இப்பொழுது அவனுக்கு எதிரிலே நேரெதிராக அமர்ந்திருக்கும் வினோத்தின் நிலைமை?????
தான் தனது காதலிற்கு இவ்வளவு விளக்கம் கொடுத்தும் தனது முடிவைச் சொல்லாது, அவனின் கண்களுக்கு எதிரிலேயே தான் இவ்வளவு நெருக்கமாக அமர்ந்திருந்தும் தன் முகம் நோக்காமல் சதுரங்க பலகையில் காய்களை நகர்த்தியவாறே தன்னிடம் தங்களின் காதல் தோன்றிய விதத்தைப் பற்றிக் கேள்விக் கேட்கும் அர்ஜுனைப் புரிந்து கொள்ள முடியாது, அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிய வினோத்திற்கு நன்றாகத் தெரிந்து போனது...
இப்பொழுது அர்ஜூனின் கேள்விக்குத் தான் கூறும் எந்தப் பதிலாலும் மஹாவுடனான தன் காதல் அவளின் வசதியையோ அந்தஸ்தையோ பார்த்து வரவில்லை என்பதை நிருபிக்க முடியாது என்று...
அதனைப் போன்று அவன் தன்னைத் தானே எதிர்த்து அமைதியாகவும், நிதானமாகவும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும் விதத்தில், அழகில் மதி மயங்கியவனிற்குத் தெரியும் இவ்வாறு விளையாடுபவர்களின் குணாதிசியங்கள்...
அவர்கள் தங்களைத் தானே எதிர்ப்பதன் மூலம் எதிராளிகளின் பலவீனத்தை அறிந்து அவர்களை எப்படி எந்தக் கோணத்தில் இருந்து தாக்குவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று..... மற்றும் இரு பக்கங்களின் இருந்தும் அவர்களே விளையாடுவதால் வாழ்க்கையில் அவர்களை எதிர்க்கும் எதிராளிகளே இருக்கக் கூடாது என்பதும் அவர்களின் குறிக்கோள் என்று....
தன்னைக் கேள்விக் கேட்டும் தான் இன்னும் பதில் சொல்லாவிட்டாலும் தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் ஒவ்வொரு காயாக நகர்த்தும் தன் தங்கையின் கணவனைப் பார்க்கவும் உள்ளுக்குள் பதட்டமாக, இதயம் வேறு தாறுமாறாகத் துடிக்க, இருந்தும் தன் மனதில் உள்ள உண்மையை மட்டுமே கூறுவது என்று முடிவெடுத்தவன்....
"உங்க வீட்டிற்கு முதன் முதலா வந்திருந்தப்போ தான் அத்தான்" என்றவன் சட்டென்று தன்னையும் அறியாமல் குரலில் பதற்றத்தை வெளிப்படுத்தி....
"அத்தான், திவ்யாவிற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்றான்...
அவனுக்கு எங்கே தன்னால் தன் தங்கையின் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பயம்...
அவனின் பதற்றத்தைக் கவனித்த அர்ஜூன் தன் சதுரங்க விளையாட்டை நிறுத்தி வினோத்தை நிமிர்ந்துப் பார்த்தவன்....
"வினோத், என் வைஃபை பத்தி எனக்குத் தெரியும்... நீங்க இவ்வளவு பதற வேண்டியது இல்லை" என்றவன் மேலும் தன் சேரில் சாய்ந்து அமர்ந்தவனாக...
"ஆக முதல்ல மேரேஜ் ஆன எங்களுக்குள்ள லவ் வருவதற்கு முன்னாடியே உங்களுக்கு வந்திடுச்சு??" என்றான்......
வினோத்தால் அர்ஜூனின் முகப் பாவத்தில் இருந்து "என் தங்கையை உனக்குக் கொடுப்பதா என்ற கோபத்தில் பேசுகிறாரா? அல்லது போயும் போயும் உன்னைப் போல ஒருத்தனை என் தங்கை விரும்புகிறாளே என்ற எரிச்சலில் பேசுகிறாரா? அல்லது திவ்யாவிற்காக இவ்வளவு பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டியுள்ளதே என்ற சலிப்பில் பேசுகிறாரா?" என்று சுத்தமாகக் கணிக்க முடியவில்லை...
இதற்கு மேல் அர்ஜூனின் விருப்பம் என்னவோ அதுவே தான் நடக்கும் என்று மனதிற்குள் குமுறியவன் கலக்கத்துடன் தவித்து அமர்ந்திருக்க...
அவனது தவிப்பையும், தன் பதிலை ஏக்கத்துடன் எதிர்பார்த்து தன் முகத்தையே பார்த்திருப்பதையும் கண்ட அர்ஜூன் ஒரு அண்ணனாகப் பேச துவங்கினான்.....
"வினோத்.... ஒரு வேளை திவ்யாவை பத்தி நான் முழுசும் புரிஞ்சிக்கிறதுக்கு முன் உங்க காதல் பத்தி தெரிந்திருந்ததுன்னா, நான் நிச்சயம் இதுக்குப் பெரிய எதிர்ப்ப தெரிவிச்சு இருப்பேன்..... ஆனால் இப்போ திவ்யா எனக்கு எவ்வளவு முக்கியம்னு உங்களுக்குத் தெரியும்... காலையில் உங்க இரண்டு பேரையும் பார்த்தப்பவே அவ முகத்தில உள்ள பயத்த நான் பார்த்தேன்...... எங்கே உங்களிடம் நான் பிரச்சனை பண்ணிடுவேனோன்னு பயந்து கலங்கிப் போய் இருந்தாள்... நிச்சயம் அவ மனசு கஷ்டப்படுற மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன்...." என்றவன் வினோத்தை ஆழந்து பார்த்தவாறே..
"ஆனால் அதுக்காக என் தங்கையோட வாழ்க்கையும் எனக்கு ரொம்ப முக்கியம்" என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன், சில விநாடிகளுக்குப் பிறகு தன் சேரில் இருந்த எழுந்திருக்க,
அவன் எழவும் வினோத்தும் அவனுடன் சேர்ந்து எழுந்திருக்க, "உட்காருங்க" என்பது போல் சைகை செய்தவன்...
"வினோத்... எனக்கு நீங்க சில கியாரண்டீஸ் (உத்தரவாதங்கள்) கொடுக்கனும்" என்றான்...
அவன் கேட்ட தோரணையே ஏதோ பெரிதாகக் கேட்கப் போகிறான் என்று தெரிந்தது... ஆனால் இவர் இந்த அளவிற்குப் பொறுமையாகப் பேசியதே பெரிது என்று நினைத்த வினோத் வேறு வழியின்றிச் சரி என்று தலை அசைக்க....
"நீங்க சொன்ன மாதிரி காலேஜ் முடிஞ்சு த்ரீ இயர்ஸுக்குள்ல நல்ல வேலையில் செட்டில் ஆகிடுங்க... நான் நிச்சயம் நீங்க எங்க லெவலுக்கு இருக்கனும்னு எதிர் பார்க்கமாட்டேன்... ஆனால் அதே சமயம் எனக்குத் திருப்தி படுகிற மாதிரி இருக்கனும் உங்க வளர்ச்சி... இரெண்டாவது, அது வரைக்கும் நீங்க மஹாவ பார்க்கவோ அவளிடம் பழகவோ கூடாது" என்றான் நிதானமாக ஆனால் அழுத்தமான, கம்பீரமான குரலில்......
தன்னுடைய முதல் நிபந்தனையைச் சொன்ன பொழுது வினோத்தின் முகத்தில் தெரிந்த பெருமையையும், இரண்டாவது நிபந்தனையைச் சொன்ன பொழுது அவன் முகத்தில் தெரிந்த கலவரத்தையும் கண்ட அர்ஜூனிற்கு வினோத்தின் காதல் கொண்ட மனம் புரிந்தது...
தன் மனமுழுவதும் உறைந்திருந்த, தன் இதயத்தில் ஆழப் புதைந்திருந்த, புதிதாக அரும்பியிருந்த தன் மனைவியின் மீதான காதலைத் தான் அவளிடம் மனம் திறந்து சொல்வதற்கு முன் அவளிடம் கட்டுக்கடங்காத தன் கோபத்தைக் காட்ட, அதனால் துடிதுடித்துப் போனவள் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு போன அந்த இரு இரவுகளும் தான் எவ்வளவு மனம் தவித்துப் போனோம் என்று அர்ஜூனிற்குத் தெரியும்...
அதற்கு முன் திருமணம் ஆன நாளில் இருந்து ஒரு நாள் கூடத் தான் மனம் விட்டு அவளிடம் காதலை வெளிப்படுத்தி இருந்ததில்லை... தன் மனையாளின் மீது இருந்த ஆசையை வார்த்தைகளால் அவளுடன் பகிர்ந்து கொண்டு இருக்கவில்லை... அப்படி இருக்க அவள் பிரிந்து சென்ற இரண்டு நாட்களும் ஏனோ பல நாள் தன்னுடன் ஒன்றி வாழ்ந்தவளைப் பிரிந்தது போலத் தானே மனம் வலித்தது...
அவள் இல்லாது அதற்கு மேலும் ஒரு நாள் கூட இருக்க முடியாமல் முக்கிய வேலைகளை எல்லாம் கூட ஒதுக்கி வைத்து விட்டு அவளைக் காண, தானே அவள் ஊருக்குச் சென்றது நியாபத்திற்கு வந்தது....
அப்படி இருக்க, காலையில் இவர்கள் இருவரும் ஒரே அறையில் இருந்து வந்ததைப் பார்த்தால், அதுவும் மஹாவின் முகத்தில் தெரிந்த வெட்கமும் சிரிப்பும் சொன்னதே இவர்களின் காதலை...
ஆகையால் இவர்களிடம் ஒருவொருக்கொருவர் பார்க்கவும் கூடாது, பேசவும் கூடாது, அதுவும் மூன்று வருடங்களுக்கு என்று சொல்வது திரைப்படத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம்... நிஜ வாழ்க்கையில் அது சரிப்பட்டு வராது என்பது அர்ஜூனிற்குத் தெரியும்...
ஆனால் அதே சமயம் அவனுக்கு வினோத்தை பற்றி ஒரு நம்பிக்கை வர வேண்டும்..
அவன் திவ்யாவின் அண்ணன் தான், திவ்யாவைப் போல் நல்லவன் தான்..... இருந்தும் தன் தங்கையின் வாழ்க்கையில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக் கூடாது என்று தான் அவன் இந்த நிபந்தனைகளைப் போட்டது.
வினோத் தன் காதலைப் பற்றிச் சொல்லும் பொழுது அர்ஜூனின் மனதில் இத்தனை எண்ணங்கள் ஓடியிருந்ததென்றால் இப்பொழுது அவனது நிபந்தனைகளைக் கேட்ட வினோத்திற்கோ...
"இவர் என் வளர்ச்சியைப் பற்றி எதிர்ப்பார்ப்பது சரியே என்றாலும், மஹாவைப் பார்க்காமல் அவளுடன் பேசாமல் மூன்று வருடங்களா?" என்று குழம்பியவனின் மனம் இருதலை கொள்ளி எறும்பாகத் தவித்தது....
அவனுக்கு மஹாவை தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள அர்ஜூனின் சம்மதமும் வேண்டும் அதே சமயம் தன்னவளைப் பாராமல் அவளுடன் பேசாமல் மூன்று நீண்ட வருடங்கள் எப்படி இருப்பது என்பதை அர்ஜூனிடம் கேட்கும் தைரியமும் இல்லை...
காதலை சுமந்திருந்த இதயத்தில் இருந்து, அழகிய கவிதைப் போல் தன் கருத்தில் குடிக் கொண்டிருந்தவளை, மலர் கொடி போல் தன் மீது இன்று காலை முழுவதுமாகப் படர்ந்திருந்தவளை அர்ஜூன் தன்னிடம் இருந்து வலியப் பிடுங்கியது போல் வலித்தது வினோத்திற்கு...
ஆனால் அதே சமயம் அர்ஜூனை எதிர்க்கவோ அவருடைய நிபந்தனைகளை மறுப்பதற்க்கோ தன்னிடம் என்ன சக்தி இருக்கிறது என்று உணர்ந்தவன், "சரி அத்தான்" என்றான் சன்னமான குரலில்....
"சரி வினோத், நீங்க கிளம்புங்க... நான் மாம் அண்ட டாட் கிட்ட பேசுறேன்" என்று சொன்ன அர்ஜூனைப் பார்த்து ஒரு சிறு புன்னகையையே சிந்தியவன் மனம் முழுவதும் குழப்பத்துடன் வெளியேற...
"உங்க மேல எனக்கு இருக்கிற நம்பிக்கையால தான் வினோத் நான் இந்தக் கண்டிஷன்களையே போட்டேன்... ஐ ஹோப் யூ கீப் அப் யுவர் வேர்ட்ஸ் [I hope you keep up your words]... நீங்க உங்க வார்த்தைகளைக் காப்பாத்துவதில் தான் இருக்கு நான் மஹாவை உங்களுக்குக் கொடுப்பதும் கொடுக்காமல் போவதும்" என்று என்ன தான் வினோத் தன் மனைவியின் அண்ணனாக இருந்தாலும், மஹாவின் அண்ணனாக அவள் வாழ்க்கையின் நலன்கள் கருதியே அர்ஜூன் இந்த முடிவை எடுத்திருந்தான்....
அர்ஜூனின் அறையை விட்டு வெளியில் வந்த வினோத்திற்குக் கிட்டதட்ட மூச்சே அடைத்துவிடும் போல் இருந்தது....
"அப்பா, ஒரு அரை மணி நேரம் இவர் கூட இருப்பதற்கே எனக்கு இப்படி மூச்சு முட்டுதே... எப்படித் தான் திவ்யா இவரைச் சமாளிக்கிறாளோ?" என்று எண்ணியவனுக்கு எங்குத் தெரியப் போகிறது??
வெளி உலகத்திற்கும் தன் குடும்பத்தில் திவ்யாவைத் தவிர மற்றவர்களுக்கு மட்டும் தான் அவன் சிம்ம சொப்பனம்...
அவன் மனையாளைப் பொறுத்தவரை அவளின் முகத்தில் ஒரு சிறு கலக்கமோ, அவளின் விழிகளில் ஏதேனும் சிறு ஏக்கமோ தெரிந்தாலும் கூட அவளின் மேல் அடங்காத காதல் கொண்டுள்ள அவன் இதயம் பதறி துடித்துவிடும் என்பது....
அர்ஜூனின் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த வினோத்தின் மனதில்....
"அத்தானின் கண்டிஷன்களை மஹா எப்படி எடுத்துக் கொள்வாளோ தெரியவில்லையே.... என்னை மூனு வருஷம் பார்க்கக் கூடாது, என்னிடம் பேச கூடக் கூடாதுன்னு சொன்னா என்ன சொல்வாளோ" என்று யோசித்தவனுக்கு "அத்தான் இந்த அளவிற்கு இறங்கி பேசுவார்னு நினைச்சுக் கூடப் பார்க்கவில்லை... அது வரைக்கும் நல்லது" என்ற நிம்மதியும் படர்ந்தது...
நேரே வீட்டிற்கு வந்தவன் தன் அன்னையும் தந்தையும் பிரயாணத்திற்குத் தயாராக இருக்க, தான் வீட்டிற்குள் நுழைந்ததும் கலக்கமும் ஆர்வமுமாகத் தன் முகத்தையே பார்த்திருந்த மஹாவை திரும்பியும் பார்க்காமல் பயணத்திற்குத் தானும் தயாராக,
அவன் வந்ததில் இருந்து அவனையே பாத்திருந்த மஹாவிற்குத் தன்னவனின் பாரா முகத்தைக் கண்டு அச்சத்திலும் வேதனையிலும் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.
சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் ஊருக்குக் கிளம்பத் திவ்யாவின் கரங்களைத் தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்ட கலா....
"திவ்யா, உடம்பப் பார்த்துக்கமா.... ஸ்ரீயும், மாப்பிள்ளையும் சொல்ற மாதிரி நடந்துக்க என்ன?" என்றவர் விழிகளில் நீர் ததும்பி நிற்க கிளம்பினார்.
அன்னையும் தந்தையும் முதலில் வெளியே செல்ல, வீட்டிற்குத் திரும்பி வந்ததில் இருந்து வினோத்தின் முகம் வேறு சரியில்லாததைக் கவனித்து வந்த திவ்யாவிற்கு ஏதோ நடந்து இருக்கிறது என்று புரிய, அவனிடம் நெருங்கி நின்றவள் வாய் வரை வந்த வார்த்தைகளை உதிர்க்காமலே விட்டாள்...
அவளின் தவிப்பு புரிந்த வினோத் நிச்சயம் அத்தான் இவளிடம் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லுவார் என்று நம்பிக்கையில் அவளின் தலையைக் கோதியவன்...
"சரி திவ்யா... உடம்பப் பாத்துக்க... அடிக்கடி ஃபோன் பண்ணு, என்ன?" என்றவன் வீட்டை விட்டு வெளியில் செல்லும் வரை மஹாவை திரும்பியும் பார்த்தான் இல்லை...
அவர்கள் அனைவரும் கிளம்பவும், காலையில் நடந்த சம்பவம் மீண்டும் திவ்யாவின் நியாபகத்திற்கு வந்து அவளைக் கலக்கத்தில் வதைத்தது என்றால் காலையில் தன்னைச் சுட்டெரிக்கும் சூரியனைப் போன்று பார்வைப் பார்த்துவிட்டு சென்ற தன் அண்ணனை திகிலுடன் எதிர்பார்த்திருந்த மஹாவிற்கோ அவன் வருவதற்குத் தாமதம் ஆக ஆக இதயம் துடிப்பதை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போனது..
இரவு வெகு நேரம் சென்று வீடு திரும்பிய அர்ஜூன் தன் அறைக்குச் சென்று குளித்து முடித்து இரவு உணவிற்காகக் கீழ் இறங்கி வந்தவன் டைனிங் டேபிளில் அமர, அவன் வந்ததில் இருந்து ஒரு வார்த்தைக் கூட அவனிடம் பேசாமல் உணவு பரிமாறிய தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தவனிற்கு அவளின் முகத்தில் இருந்த கலக்கத்தின் காரணம் புரிந்தது...
கடலூருக்கு அவளை அழைக்கப் போகும் பொழுது திவ்யாவின் மேல் வினோத்திற்கு இருந்த பாசத்தைத் தான் கண்கூடாகப் பார்த்திருந்தானே...
அவனும் அவளைக் கண்டு கொள்ளாதது போல உணவு அருந்த, தன் அண்ணனின் அருகில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த மஹா அவனை நிமிர்ந்துப் பார்த்தால் தானே....
ஒரு வழியாக உண்டு முடித்து எழுந்தவன் தன் தலை தட்டில் புதைந்தது போல் குனிந்து உண்டு கொண்டிருந்த மஹாவைப் பார்த்து....
"மஹா உன் கூடக் கொஞ்சம் பேசனும்.... என் ரூமிற்கு வா..." என்றவன் அவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.
அர்ஜூன் தனியாகத் தன்னை அழைத்ததும் உலகத்தில் உள்ள அத்தனை கடவுள்களிடமும் வேண்டிக் கொண்டவள் அச்சத்துடனும் கலக்கத்துடனும் அவன் பின் செல்ல, அவள் அறைக்குள் நுழைந்தவுடன்....
"கதவை சாத்து" என்றான்.
தன் கட்டிலுக்கு அருகில் சேரை இழுத்துப் போட்டவன் அவளை அமர செய்து அவள் கண்களைக் கூர்ந்து பார்த்தவாறே..
"ஏன் வினோத்தை சூஸ் பண்ணின மஹா? என்றான் அதிரடியாக...
கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள், சன்னமான குரலில்....
"திவ்யா அண்ணி மாதிரி அவரும் ரொம்ப நல்லவர்ண்ணா" என்றாள்.
தலை குனிந்து தன் இடது கை விரல்களால் தன் நெற்றியை அழுந்தித் தேய்த்துக் கொண்டவாறே சத்தம் வராமல் மெல்லியதாகப் புன்னகைத்து கொண்டவன், நிமிர்ந்து....
"அது எனக்குத் தெரியும்... ஆனால் அது மட்டும் போதுமா மஹா லைஃபில? சரி நீயும் வினோத்தும் என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?" என்றான்.
அவன் கேட்கும் கேள்வி புரியாமல் அவனையே பார்க்க,
"மார்னிங் வினோத் என்னைய பார்க்க வந்தது தெரியும் இல்லையா?" என்றான்.
ஆமாம் என்று தலையாட்டிவள் மீண்டும் அமைதியாக இருக்க,
"வினோத் எதுவும் உன் கிட்ட சொல்லவில்லையா?" என்று மேலும் கேட்க,
அவள் இல்லை என்பது போல் தலை அசைக்கவும், எப்படி வாயடிப்பவள் இப்படி அமைதியாக இருப்பதைப் பார்த்து காதல் என்ற உணர்வு இதயத்தில் ஊடுருவிவிட்டால் எவரையும் எப்படியும் மாற்றும் சக்தியாக அது மேலெழுந்து புத்தியையும் சித்தத்தையும் கலங்கடித்து ஒரு மனதினை அடியோடு மாற்றிவிடுகிறது என்று நினைத்தவனின் விழிகளின் முன் திவ்யாவின் அழகு முகம் படர, புன்னகைத்துக் கொண்டவன் காலையில் அவனுக்கும் வினோத்திற்கும் இடையில் நடந்ததை முழுவதுமாக எடுத்துரைத்தான்....
"மஹா.... உனக்கு இதற்குச் சம்மதமா?
"எப்படி அண்ணா அவர பார்க்காம பேசாம அவ்வளவு நாள் இருக்கிறது?"
"மஹா எனக்கு இது வெறும் இன்பாக்ஷுவேஷன் இல்லைன்னு தெரியனும்... அத நீங்க தான் ப்ரூவ் பண்ணனும்... அதுக்காகத் தான் இந்தக் கண்டிஷன்ஸே"
"சரின்னா... நிச்சயம் நாங்க ப்ரூவ் பண்ணுவோம்.... ஆனால் ப்ளீஸ்ண்ணா, எங்கள சேர்த்து மட்டும் வச்சிடுங்க" என்று விழிகளில் நீர் தளும்பி நிற்க கலங்கியவளின் முன் குனிந்தவன் வாழ்க்கையில் முதல் முறை தன் தங்கையின் தலை முடியை ஆறுதலாகத் தடவிக் கொடுத்து,
"நான் என்னைக்காவது சொன்ன சொல் தவறி இருக்கேனா மஹா?" என்று கேட்க,
இல்லை என்பது போல் தலையை அசைத்தவளைக் கண்டவன்...
"அப்புறம் ஏன் இந்தக் கலக்கம்? நான் சொன்னதை நீங்க செஞ்சா நானும் என் வார்த்தையைக் காப்பாத்துவேன்... சரி நீ போய்த் திவ்யாவை அனுப்பு" என்றவன் மடி கணினியை எடுத்து வைத்துக் கொண்டு தன் வேலையைத் தொடர, இன்னும் குழப்பம் விலகாத முகத்துடன் கீழ் இறங்கி சென்றவளை நிமிர்ந்துப் பார்த்தவன் அடுத்து தன் மனைவியை என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்று யோசனையில் ஆழ்ந்தவாறே அவளின் வரவிற்காகக் காத்திருந்தான்...
தன் கணவன் மஹாவைத் தனியாகப் பேச அழைத்ததிலேயே கலங்கி போய் இருந்த திவ்யா, சிறிது நேரத்தில் குழம்பிய முகத்துடன் தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தவளைப் பார்த்தவள் வேகமாக அவளின் அருகில் செல்ல....
"அண்ணி, அண்ணா உங்களை வரச் சொல்றாங்க" என்று விட்டு சட்டென்று தன் அறைக்குள் மஹா மறைய, திவ்யாவின் வயிற்றுக்குள் ஒரு பெரிய உருளை உருள துவங்கியது....
என்ன தான் தன் கணவன் தன்னைத் தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கிக் கொண்டிருந்தாலும் அவனின் இயற்கைக் குணங்களான கோபம், பிடிவாதம் ஆணவம், அதிகாரம் அனைத்தும் அவனை விட்டு இன்னும் செல்லவில்லையே....
கூடப் பிறந்த தங்கையான மஹாவிற்கே இந்த நிலைமை என்றால் வினோத்தின் நிலைமையை எண்ணி அடி வயிறு கலங்க மெல்ல தங்கள் அறைக்குள் வந்தவள் அவன் கட்டிலில் அமர்ந்து தான் வருவதும் தெரிந்தும் தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் கணினியிலேயே கண்களைப் பதித்திருப்பதைக் கண்டவளுக்கு இன்று ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது என்றே தோன்றியது...
மெல்ல கட்டிலில் ஏறி அவன் அருகில் படுத்தவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக அவனையே பார்த்திருக்க, அவளின் மௌனத்தின் காரணம் புரிந்திருந்ததால் மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் கணினியில் பதித்திருந்த விழிகளை எடுக்காமல் சில நிமிடங்கள் பேசாதிருக்க....
அவனின் மேல் நிலைத்திருந்த பார்வையை வேறு எந்தப் பக்கமும் திருப்பாமல் அவனையே கண் கொண்டு பார்த்திருக்க, இதற்கு மேலும் தன்னவளின் பொறுமையைச் சோதிக்காமல்...
"இன்னைக்குக் காலையில வினோத் என் ஆஃபீஸிக்கு வந்தார்" என்றான் அதிரடியாக.....
அவன் திடீரென்று அவ்வாறு சொன்னதும் திக்கென்று இருக்க அரண்டவள் வெடுக்கென்று எழ..
அவள் அப்படி அலறி துடித்து எழுந்ததும் பதறியவன்...
"என்ன திவி? இது மாதிரி அவசரப்பட்டு எழுந்திருக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது" என்று சலிப்புடன் கூறியவன் அவளின் குணம் தெரிந்தும் தான் இவ்வாறு அவளைச் சோதிப்பது போல் அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது திடுதிப்பென்று பேசியது தன் தவறே என்று வருந்தியவன் மடி கணினியை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு அவளின் அருகில் நகர்ந்து அமர...
"அண்ணா எதுக்கு வந்தாங்க?" என்றாள் கண்களில் அச்சத்தைத் தேக்கி வைத்து......
அவளின் பயத்தைப் பார்த்தவனுக்குத் தன் மனையாளின் மேல் மேலும் கனிவு வர அவளைத் தன் மேல் சரித்துக் கொண்டவன்...
"ம்ப்ச்.... இப்போ எதுக்கு இவ்வளவு பயம்?" என்றான்...
"என்னங்க, அண்ணன்ட்ட நீங்க கோபம் எதுவும் படலையே?"...
"எதுக்கு?"
"எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்... என் அண்ணா ரொம்ப நல்லவருங்க... ஆனால் அவர் இப்படிப் பண்ணுவார்ன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை?" என்றவளின் விழிநீர் அவனின் சட்டைக்கு இடையில் தெரிந்த வெற்று மார்பில் பட,
அவளின் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தியவன்....
"நான் காலையில என்ன சொன்னேன்.... உன் கவலை எல்லாம் உன் உடம்பை பத்தியும், என்ன பத்தியும், நம்ம குழந்தையைப் பத்தியும் மட்டும் தான் இருக்கனும்னு... திரும்பவும் ஏன் இவ்வளவு கவலைப்படுற?" என்று கேட்டான் கரிசனத்துடன்....
இருந்தும் அவளின் முகத்தில் தெளிவில்லாததைப் பார்த்தவன், காலையில் தனக்கும் வினோத்திற்கும் இடையில் நடந்த உரையாடல்களைச் சொல்ல, அவனை நம்பாமல் வழக்கம் போல் கண்களை அகல விரித்து மருண்டப் பார்வைப் பார்க்கவும்,
கருத்தரித்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நாளில் இருந்து அவளின் மனதில் பூத்திருந்த பூரிப்பின் சாயல் அவள் முகத்திலும் படிந்திருந்ததால், அவளின் அழகு எங்கும் பல மடங்கு பரிமளித்துத் தேவதையைப் போல் காட்சியளித்தவளை கண்டவனின் பார்வையில் இருந்து இதுவரை தெரிந்த கனிவும் இரக்கமும் மாயமாய்ப் பறந்து அந்த இடத்தைத் தாபமும் விரசமும் ஆட்கொண்டது...
முகத்தை மட்டும் தன்னை நோக்கி அண்ணாந்துப் பார்த்தவாறு தனது நெஞ்சில் படுத்திருக்க அவளின் செவ்விதழ்கள் வேறு அவனின் முகத்திற்கு வெகு அருகில் இருக்க, மார்பகத்தை மறைத்தோடியிருந்த சேலையும் சிறிதே விலகியிருந்ததில் கண்ணைக் கவரும் சித்திரம் போல் தன் மேல் படர்ந்திருந்தவளைக் கண்டவனுக்கு, மருத்துவர் தாம்பத்தியத்திற்குக் கருத்தரிப்பு தடையில்லை என்று சொல்லியிருந்தாலும் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு தன்னவளிடம் தன் மென்மையான பக்கத்தையே கடந்த சில நாட்களாகக் காட்டியிருந்தவனிற்குள் அடங்கியிருந்த தாபம் உத்தஸ்தாயிக்கு சென்று அவனின் உறுதியை உடைத்தெறிந்தது...
தன்னவளின் முகத்தை இன்னும் தன்னை நோக்கி நிமிர்த்தியவன் அவளின் முகத்தில் சிதறியிருந்த ஓரிரு முடிகளை விரல்களால் ஒதுக்கியவாறே...
"இப்படி பார்க்க பார்க்க தான் எனக்கு என்னென்னமோ பண்ணனும் தோனுதுடி" என்றவன் அவளின் இதழ் நோக்கி குனிய,
அவனை விட்டு சட்டென்று விலகியவள்..
"என்னங்க.... எவ்வளவு முக்கியமான விஷயம் பத்தி பேசிட்டு இருக்கோம், இப்ப போய்..." என்று இழுக்கக் கடுப்பானவன்...
"சரி... அதுக்காக இப்படித் தள்ளிப் படுத்தே பேச சொல்றியா? என்றான் தாபம் சட்டென்று அறுப்பட்ட கோபத்தில்....
அவனின் கோபத்தைக் கண்டு புன்னகைத்தவள் மீண்டும் அவன் நெஞ்சில் படுத்தவாறே
"இல்லை.... இப்படிப் படுத்தும் பேசலாம்... ஆனால் நீங்க பேசனும்... வேற எதுவும் செய்யக் கூடாது... " என்றவள் அவனின் விழிகளில் தன் விழிகளைப் படரவிட்டு ஆச்சரியத்துடன்...
"நிஜமாவே மஹா அண்ணிய எங்க அண்ணனுக்குக் கொடுப்பீங்களா?" என்றாள்......
உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பும் மனைவியுடனான தாம்பாத்தியத்தை யாசித்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கூடத் தன்னிலையில் இருந்து இறங்காதவன் விடாப்பிடியாக....
"நான் சொன்ன கண்டிஷன்களை அவங்க இரண்டு பேரும் மீறாமல் இருந்தால்!!" என்றான் அழுத்தமாக...
காதலிக்கறவங்க ஒருத்தருக்கொருத்தர் எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும் என்று அவள் மீண்டும் தன் யோசனை உலகத்திற்குச் செல்ல, அவளை இறுக்கி அணைத்தவன்.....
"திவி, அவங்க பிரச்சனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.... முதல்ல என்ன கவனிடி" என்று கூறியவன் அவளுள் மூழ்க துவங்க...
அவனின் அத்து மீறல்களில் கூடக் கவனம் செலுத்தாமல்...
"என்னங்க, நீங்க சொல்ற மாதிரி நிச்சயம் இரண்டு பேரும் இருப்பாங்க.... எனக்கு இரண்டு பேரையும் பத்தி நல்லா தெரியும்.. அது மட்டும் இல்ல, எங்க அண்ணன் நிச்சயம் மஹா அண்ணிய தங்க தட்டுல வச்சு தாங்குவாங்க பாருங்களேன்" என்று அவள் விடாமல் அதேயே பேச,
அவளின் இதழ்களை விரலால் வருடிவிட்டபடியே....
"திவி, நீ எப்போ என் லைஃபில் வந்தியோ அப்பவே, உன் வீட்டில் இருக்கிறவங்களும் என் லைப்பில் ஒருத்தராகிட்டாங்க... நான் இந்தக் கண்டிஷன்ஸ போட்டதே அவங்க அவங்களோட லவ்வை, லைஃப்பை சீரியஸாக எடுத்துக்கனும்னு தான்... வினோத் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணட்டும், அவருக்கு நம்ம ஐ டி கம்பெனியில் மேனேஜ்மெண்ட் போஸ்ட் தந்துவிடுகிறேன்" என்றவன்,
"அது சரி... அதென்ன உங்க அண்ணா மட்டும் தான் அவர் வைஃப்ப தங்க தட்டுல வச்சு தாங்குவாரா? ஏன் நாங்கெல்லாம் தாங்கலையா?" என்று கேட்டவனின் பார்வை கூர்மையாக அவளின் இதழ்களில் படிய, அவனின் எண்ணம் புரிந்தவள் நாணத்தில் முகம் விகசிக்கத் தன் உதடு மடித்துத் தலைக் கவிழப் போனவளின் மென் இதழ்களைச் சரேலென வெளிவந்த தாபத்தின் பிரவாகத்தினால் சட்டென்று முரட்டுத்தனமாக முற்றுகையிட,
தனது கணவனின் வன்மையான தாம்பத்திய சாகஸங்களுக்கு அவளின் தளிர் மேனி தானாக இளக தன்னவனுக்குள் புதையத் துவங்கியவள் விடியும் வரை வெளி வரவில்லை....
ஆத்மார்த்தமான காதலுடன் கூடிய காமம் அர்ஜூன் திவ்யா தம்பதியரின் இரவை இனிமையான நீண்ட உறங்கா இரவாக மாற்றியது என்றால், காதலில் முதல் அடி எடுத்து வைத்து அதற்குள் வேலிகளையும் கடுமையான சோதனைகளையும் சந்தித்திருந்த இளம் உள்ளங்கள் வினோத் மஹாவிற்கு அந்த இரவு கலக்கத்தையும், அச்சத்தையும், தவிப்பையும் சுமந்த உறங்கா இரவாக மாறிப்போனது....
ஆனால் இது விடியாத இரவு அல்லவே.... அவர்களின் காதல் பயணத்தில் ஏற்றங்களையும், இறக்கங்களையும், சோதனைகளையும், வெற்றிகளையும் மாற்றி மாற்றிச் சுமந்து வரப் போகும் அழகான விடியலை தாங்கி வந்த இரவே அது...
அது காதலில் தத்தளித்துக் கொண்டிருக்கும், மனம் பாரத்துடன் தவித்து இருக்கும் இந்த இளம் காதலர்களுக்குப் புரியுமா?
தொடரும்..
கீழே விருந்தினர் அறையில் இருந்து சிவந்த முகத்துடன் மஹா வெளியே வருவதையும், சிரித்துக் கொண்டே வினோத் அவளின் பின் வருவதையும் கண்ட அர்ஜூனிற்கு எதுவோ சரியில்லை என்று உணர்த்த, படிகளில் இறங்கிய படியே ஒன்றும் பேசாமல் தங்களைக் கூர்ந்துப் பார்த்தபடியே வரும் அண்ணனை பார்த்த மஹாவிற்கு நெஞ்சுக் கூட்டில் குளிரெடுத்தது....
வேகமாக அறையை விட்டு ஓடிய மஹா சட்டென்று நின்றதும், அவளின் பார்வை போன இடத்தைப் பார்த்த வினோத்திற்குச் சப்த நாடியும் ஒடுங்கிப் போனது தங்களையே ஆழ்ந்தப் பார்வைப் பார்த்துக் கொண்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்த அர்ஜூனைக் கண்டதும்...
தன்னையும் அறியாமல் மஹாவைத் திரும்பிப் பார்த்தவன் அவள் விழிகளில் தெரிந்த அச்சத்தையும் கலக்கத்தையும் கண்டவனுக்குத் தன்னவளின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த திகிலிற்கு நாம் தானே காரணம் என்று குற்ற உணர்வு வர, திரும்பி அர்ஜூனின் பார்வையை எதிர் கொண்டவன் மஹாவிற்கு அருகில் சென்று நிற்க, அவர்களைப் பார்த்தவாறே ஒன்றும் பேசாமல் தன் மனைவியைத் தேடித் தோட்டத்திற்குச் சென்றான் அர்ஜூன் ..
தோட்டத்தில் அமர்ந்திருந்த கலா திவ்யாவின் கரத்தைப் பற்றித் தன் மடி மீது வைத்துக் கொண்டவர் ஸ்ரீயிடம்...
ஸ்ரீ, எனக்குத் திவ்யாவ ஒரு வாரம் எங்க வீட்டுல வச்சுக்கனும்னு ஆசையாக இருக்குடி... நீ மாப்பிள்ளையிடம் பேசிட்டு சொல்றியா? நானே வந்து அவளை அழைச்சுட்டு போறேன்" எனவும்...
தன் தோழியின் ஏக்கம் புரிந்தாலும் அர்ஜூன் திவ்யாவை எங்கும் வெளியில் விடாது தன் பாதுகாப்பிற்குள்ளேயே வைத்திருப்பதை அறிந்திருந்ததால்...
"கலா, அர்ஜூன் இப்போ திவ்யாவை வெளியே கோவிலுக்குக் கூட விட ரொம்ப யோசிக்கிறான்... அவ எங்க வெளியே போகனும்னாலும் அவன் தான் கூட்டிட்டுப் போறான்... இப்போ அவனிடம் திவ்யாவை ஒரு வாரத்திற்கு அனுப்ப சொன்னா நிச்சயம் அனுப்ப மாட்டான்... அதனால் கொஞ்சம் நாளாகட்டும்... அதற்கப்புறம் பேசுறேனே?" என்றார்.
தங்கள் மகளைத் தங்களுடன் சில நாட்களாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைபட்டவருக்குத் தங்கள் மருமகனின் மனசும் புரிந்து தான் இருந்தது.... நேற்றில் இருந்து அவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாரே அவன் தன் மனைவியைத் தலையில் வைத்து தாங்குவதை....
சரி என்றவர் மேலும் சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, வீட்டில் இருந்து மஹா வினோத்தைப் பற்றிய யோசனையுடன் தோட்டத்திற்கு வந்த அர்ஜூன் திவ்யாவைப் பார்த்தவன்...
"திவி.... நான் கிளம்பறேன்... வெளியில் எங்கேயும் போகனும்னா சொல்லு, நான் வந்து கூட்டிட்டு போறேன்" என்றான்...
கலாவை திரும்பி பார்த்த ஸ்ரீ சொன்னேன் அல்லவா என்பது போல் பார்க்க, அவரும் புரிந்தது என்பது போல் புன்னகைத்தார்...
"சரிங்க" என்ற திவ்யா அர்ஜூனைப் பின் தொடர...
"நீ பேசிட்டு இரு, நான் கிளம்பறேன்" என்றான்...
"இல்லை பரவாயில்லை" என்றவள் அவனுடன் சேர்ந்து நடக்க, உள்ளே வந்த அர்ஜூன் இன்னும் வினோத்தும் மஹாவும் ஒன்றாக நிற்பதை பார்க்கவும் ஒன்றும் பேசாமல் மௌனமாக வீட்டின் வாயிலை நோக்கி நடக்க, அர்ஜூனின் அருகில் வந்த மஹா தயங்கிவாறே..
"அண்ணா, உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றாள்..
அதற்கும் பதில் பேசாது புருவங்களைச் சுருக்கி பார்த்தவனின் அனல் கக்கும் பார்வையில் அவனின் உள்ளத்தில் இருந்த கட்டுக் கடங்காத கோபம் தெரிய, எரி நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சி போல் மனதிற்குள் துடிதுடித்துப் போனவளுக்குப் புரிந்து போனது இனி அடுத்து நடக்கவிருப்பது....
"கடவுளே! இது எங்க போய் முடியும்னு தெரியலையே..." என்று உச்சி முதல் உள்ளங்கால் வரை வெளிப்படையாக நடுங்க, உள்ளங்கைகள் இரண்டும் வியர்த்து விறுவிறுக்க, கைகளைப் பிசைந்தவாறே அர்ஜூனின் கனல் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலைக் குனிந்தவளைக் கண்டவன் அதற்கு மேலும் அங்கு நிற்கப் பிடிக்காதவன் போல் விருட்டென்று வெளியே செல்ல,
கணவனுடன் வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே தன் அண்ணனும் மஹாவும் நெருங்கி நிற்பது கண்களில் பட்டவுடன் "ஏன் இவங்க ரெண்டு பேரும் இவ்வளவு நெருங்கி நிற்கிறாங்க?" என்று யோசித்துக் கொண்டிருந்த திவ்யாவிற்கு இப்பொழுது மஹாவின் பேச்சும், அதற்குத் தன் கணவனின் கோபப் பார்வையும் எதுவோ சரியில்லை என்பதை உணர்த்தியது....
ஆனால் தன் கணவனிடம் அதனைப் பற்றிக் கேட்கும் தைரியம் மட்டும் அவளுக்கு வரவில்லை…
வெளியே வந்தவள் யோசனையுடன் அர்ஜூனைப் பின் தொடர்ந்து நடக்க, அவள் அமைதியாக வருவதை உணர்ந்தவன் சட்டென்று நிற்கவும் அவனுக்கு மிக அருகில் வந்து கொண்டிருந்தவள் அவன் நின்றதை உணராமல் அவன் மீது மோதி தடுமாறி கீழே விழப் போனாள்...
அவள் கீழே விழாதவாறு அவளின் இடையைத் தாங்கி பிடித்தவன்....
"என்ன திவி இது? எந்த உலகத்தில இருக்க? இந்நேரம் கீழ விழுந்திருந்தின்னா என்ன ஆவது? என்று வெடித்தான்...
அர்ஜூனிற்கே வினோத் மஹாவின் செயல் அதிர்ச்சியாகத் தான் இருந்தது என்றால் திவ்யாவிற்குச் சொல்லவா வேண்டும்...
அவள் ஏற்கனவே தானே இந்த வீட்டிற்கு மருமகளாகவும், அர்ஜூனிற்கு மனைவியாகவும் வர தகுதி இல்லாதவளோ என்று இன்னமும் அவ்வப்பொழுது நினைத்துக் கொண்டிருக்கிறாள் (அர்ஜூனின் மனதில் அப்படி ஒரு எண்ணம் சிறிதளவும் இல்லை என்றாலும் இவள் எப்பொழுதாவது சில சமயங்களில் தனக்குள் நினைத்துக் கொள்வது உண்டு)...
அப்படி இருக்க மஹா இந்த வீட்டின் செல்லம்... தன் அண்ணனிற்கும் அவளுக்கும் உள்ளது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதிலே அவளின் எண்ணங்கள் சுழன்றுக் கொண்டிருந்ததால் தான் அர்ஜூன் சட்டென்று நின்றதும் அவனைக் கவனிக்காமல் அவன் மீது மோதிக் கீழே விழப் பார்த்தது...
கணவனின் கோபப் பேச்சில் திக்கென்று இருக்க, அவனையே கண் இமைகளைக் கூடச் சிமிட்டாமல் பார்த்தவளைக் கண்டவனுக்கு அவளின் யோசனை இப்பொழுது எங்கு இருக்கிறது என்பதும் புரிய தனது சத்தத்தால் அவளின் முகத்தில் தெரிந்த அச்சத்தில் கனிவடைந்தவன் அவளின் இடையைப் பிடித்திருந்த கரத்தில் அழுத்தத்தைக் கூட்டி இன்னும் தன்னருகில் அவளை இழுத்து...
"திவி, இங்க இந்த வீட்டில் உன்னோட வேலை உன் உடம்பப் பாத்துக்கிறதும், உன் ஹஸ்பண்டைப் பார்த்துகிறதும், உன் வயித்துல இருக்கிற நம்ம குழந்தையைப் பாத்துக்கிறதும் மட்டும் தான்... யோசனை எல்லாம் என் மீதும், நம் குழந்தையின் மீதும் மட்டுமே தான் இருக்கனும்.. வேற எதைப் பத்தியும் நீ கவலைப்படுறது எனக்குப் பிடிக்காது.... புரியுதா?" என்று அவளின் கன்னத்தைத் தட்ட...
"சரி" என்பது போல் தலை அசைத்தவளைக் கண்டவனுக்கு அவள் இன்னமும் யோசனையில் இருந்த விடுபடவில்லை என்பது புரிபடவும், மேலும் அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன்...
"ஹே... திவி.... என்ன நான் சொல்றது புரியுதா? என்று கேட்க...
ஏதோ கனவுலகத்தில் இருந்து திரும்பி வந்தவள் போல் புன்னகைத்தவள்...
"புரியுது" என்றாள்....
சுற்றும் முற்றும் பார்த்தவன் குனிந்த தன்னவளின் பட்டுக் கன்னத்தில் மென்மையாக முத்தம் இட்டவன் போய் வருகிறேன் என்பது போல் தலை அசைத்து தன் காரில் ஏற, தன் கணவன் தன் கண்களில் இருந்து மறையும் வரை அந்த இடத்திலேயே நின்றவள் வீட்டிற்குள் நுழைந்ததும் தன் அண்ணனைத் தேட, அதற்குள் தோட்டத்தில் இருந்த அனைவரும் வீட்டிற்குள் நுழையவும் இப்பொழுது அண்ணனிடம் பேசுவது முறையல்ல என்று எண்ணியவள் அமைதியாக இருந்துவிட்டாள்....
ஆனால் அர்ஜூன் தன்னையும், மஹாவையும் சுட்டுப் பொசுக்குவது போல் பார்த்த பார்வையைக் கண்ட வினோத்திற்கு மனம் அடங்கவில்லை...
தங்கள் இருவரையும் அந்த நிலைமையில் எதிர்பாராமல் பார்த்தது நிச்சயம் அத்தானிற்குக் கோபத்தைக் கிளறியிருக்கும்... இருந்தும் அவர் ஒன்றும் சொல்லாமல் செல்வதைப் பார்த்தால் நிச்சயம் ஏதாவது பிரச்சனை வெடிக்கும் போல் தெரிகிறது... இதனால் மஹாவிற்கு மட்டும் அல்ல, திவ்யாவிற்கும் அத்தானிற்கும் இடையிலும் பிரச்சனை வர வாய்பிருக்கிறது... அதற்குள் தான் இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தவன் தன் அன்னையிடம் சென்று...
"அம்மா, எனக்கு வெளியில ஒரு முக்கிய வேலை ஒன்னு இருக்கு..... ரயில்வே ஸ்டேஷனுக்கு நீங்க கிளம்புறதுக்கு முன் நான் வந்திடுறேன்" என்றான்.
சென்னையில் அவனுக்கு என்ன வேலை என்று யோசித்தவர் அவனிடமே கேட்க,
"என் வேலை விஷயமாம்மா... சீக்கிரம் வந்திடுறேன்" என்றவன் கிளம்பிப் செல்கையில் மஹாவைப் திரும்பி பார்த்தவன் தலையை மட்டும் ஆட்டிவிட்டு செல்ல, அவன் எங்குப் போகிறான் என்று ஏற்கனவே தெரிந்திருந்ததால்...
"இன்னைக்கு ஒரு பூகம்பம் வெடிக்கப் போவுது... அர்ஜூன் அண்ணா ஏற்கனவே எரிமலை மாதிரி கோபத்தில் இருக்காரு... இதில் இவருக்குக் கொஞ்சம் கூடப் பயம் என்பதே இல்லை... இரண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணி கலங்கடிக்கப் போறாங்களோ தெரியலையே" என்று நினைத்த மஹாவிற்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து இருந்தது.
அவள் எதிர்பார்த்தது போலவே வீட்டை விட்டு வெளியே வந்த வினோத் சென்றது நேரே சென்னையின் நடுநாயகமாக அமைந்திருந்த அந்தப் பதினொரு அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கு...
அது எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் தலைமை அலுவலகம்...
அந்த மிகப் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடத்தைப் பார்த்தவனுக்கு உண்மையில் மஹா அவ்வளவு உயரத்திலும் தான் தரையிலும் இருப்பது போல் தோன்ற, இருந்தும் தேவதையைப் போன்று தன் இதயத்தில் ஆழ புகுந்திருக்கும், தன் உயிரின் வேர் வரை சென்று தன் உணர்ச்சிகளில் கலந்து இருக்கும் தன்னவளை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற பிடிவாதத்தினால் அர்ஜூனைப் பார்க்க கட்டிடத்திற்குள் நுழைந்தவன் நுழைந்த விநாடி அப்படியே பிரமித்துப் போய் நின்றான் அலுவலகத்தின் உட்புற பிரமாண்ட அமைப்பில்...
சென்னையில் இத்தனை உயரத்திற்கு, அதுவும் இவ்வளவு பெரிய கட்டிடம்..... அதிலும் கட்டிடத்தின் உட்புறம் (இண்டீரியர்) மிகவும் அழகாகவும் பிரமாண்டமாகவும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணம் விளையாடி இருக்க அர்ஜூனின் வீடே அத்தனை அழகு என்றால் அவனின் அலுவலகம் அதை விடக் கொள்ளை அழகு.
சில நிமிடங்கள் பிரமிப்பில் ஆழ்ந்து சிலைப் போல் நின்றவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு ரிஷப்ஷனில் தான் அர்ஜூனைப் பார்ப்பதற்காக வந்திருப்பதாகச் சொல்ல,
"டு யூ ஹேவ் என் அப்பாயிண்ட்மெண்ட் வித் அவர் எம் டி சார்? [Do you have an appointment with our M D sir?" என்றாள் ரிஷப்ஷனிஸ்ட்டில் ஒருத்தி..
"இல்லை, ஆனால் வினோத் வந்திருப்பதாகச் சொல்லுங்கள்" [Please let him know this is Vinoth] " என்று அவன் ஆங்கலத்தில் பகரவும் சரி என்றவள் யோசனையுடன் அவனின் முகத்தைப் பார்த்தவாறே கதிரை அழைத்தாள்..
ஏனெனில் வினோத்திற்கும் அர்ஜூனுடனான தன் உறவு முறையைச் சொல்லி அவனைச் சந்திப்பதில் விருப்பம் இல்லை...
அதனைப் போல் தங்கள் MD-க்கும் முன்னறிவுப்பு இல்லாமல் ஒருவரும் தன்னைச் சந்திப்பது பிடிக்காது...
ரிஷப்ஷனிஸ்ட் கதிருக்கு அழைக்க ஆனால் அவனுக்கும் வினோத் யாரென்று தெரியவில்லையாதாலால் அவனே அர்ஜுனை அழைத்து வினோத் என்பவர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்று கூற, ஒரு விநாடி யோசித்த அர்ஜூன்...
"ஒகே, லெட் ஹிம் கம் [Let him come]" என்றான்...
தன்னை என்ன ஏது என்று கூடக் கேட்காமல் கதிர் அழைத்துச் செல்லவும் அவனுடன் சேர்ந்து நடந்த வினோத்திற்கு ஒரு பக்கம் அர்ஜூனின் கோபத்தை நினைத்துக் கலக்கமாகவும் மறுபக்கம் திவ்யாவை நினைத்து தயக்கமாகவும் இருந்தது....
ஆனால் அதே சமயம் அவனால் எந்தக் காரணத்திற்காகவும் மஹாவை விட்டுக் கொடுக்க முடியாது.
கதிருடன் நடந்தவன் Managing Director Arjun Krishna என்று பொறிக்கப்பட்ட அறைக்கு வெளியே நின்ற கதிர் கதவைத் தட்டவும்...
"யெஸ் கமின்" என்ற அர்ஜூனின் கம்பீரக்குரலில் தன் உடம்பில் ஒட்டியிருந்த தைரியத்தில் பாதி வெளியே ஓடிச் சென்றது என்றால் அவன் பணித்ததற்குப் பிறகு அறையில் நுழைந்தவனுக்கு அர்ஜூன் அமர்ந்திருந்த தோரணையும், அவன் தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் கணினியில் முகம் புதைந்திருந்ததில் தெரிந்த அவனின் ஆணவமும் மீதி தைரியத்தை வெகு தூரத்திற்குப் பறக்கச் செய்திருந்தது...
தன்னை அடியோடு வசீகரிக்கும் தன்னவளின் எழில் முகமும், தான் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது தன்னைப் பார்த்திருந்த அவளின் அழகிய கண்களில் தெரிந்த சஞ்சலமும், அதே சமயம் இங்குச் சிம்ம சொப்பனம் போல் கம்பீரமாக அதிகாரத்துடன் அமர்ந்திருக்கும் அர்ஜூனின் அந்தஸ்தும் வினோத்தின் மூளையை வேலை செய்ய விடாமல் மரத்துப் போகச் செய்ய, உள்ளே நுழைந்ததில் இருந்து அசையாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தன் மச்சினனின் தடுமாற்றத்தை அவனை நிமிர்ந்துப் பார்க்காமலே மனதில் குறித்துக் கொண்ட அர்ஜூன்...
"கம் இன் வினோத்" என்று கூற,
அவர்களைத் தனிமையில் விட்டு வெளியே சென்ற கதிருக்கு, தன் M D முன்னறிவிப்பில்லாமல் வந்த வினோத்தை சந்திப்பது அதிசயமாக இருந்தது என்றால் அதிலும் தன் அறைக்கே உடனடியாக அழைத்து வரச் சொன்னது வியப்பில் ஆழ்த்தியது.
"ஹேவ் எ ஸீட் வினோத் [Have a seat Vinoth] " என்று அர்ஜூன் கூறவும்,
அமர்ந்த வினோத் எதுவும் பேசாமல் தலை குனிந்தவாறே அமர்ந்து இருப்பதைக் கண்டு இன்னமும் கணினியில் இருந்து தன் தலையை நிமிர்த்தாமலே,
"பேசறதுக்குன்னு வந்துட்டு இப்போ பேசலைன்னா எப்படி? என்றான் தன் கம்பீர குரலில்...
அவன் அவ்வாறு சொன்னதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்கு இன்னும் தன்னால் அர்ஜுனைக் கண்ட பிரம்மையில் இருந்து வெளி வர முடியாது போக...
இருந்தும் சில விநாடிகளில் தன்னைத் திடப்படுத்திக் கொண்டவன் தன் தொண்டையைச் செறுமிக் கொண்டு,
"உங்கள பிஸியான நேரத்தில் டிஸ்டர்ப் பண்ணிட்டேன் நினைக்கிறேன்" என்று தயங்கவும் அவனை நிமிர்ந்துப் பார்த்த அர்ஜூன்...
"இட்ஸ் ஓகே... சொல்லுங்க" என்று அவனை ஆழ்ந்துப் பார்த்தவாறே கூற மெல்ல பேச துவங்கினான் வினோத்...
"என் மேலே நிச்சயம் உங்களுக்குக் கோபம் இருக்கும் அத்தான்... உங்க கோபமும் நியாயமானது தான்... உங்க வசதியும் அந்தஸ்தும் எனக்குத் தெரியும்... அதே மாதிரி என்னோட தகுதி என்னன்னும் எனக்குத் தெரியும்...." என்றவன் சிறிது தயங்கி...
"திவ்யாவோட அண்ணனா நான் இப்போ உங்களோட பேச வரலை.... அந்த உரிமையோட நான் நிச்சயம் மஹாவ எனக்குக் கேட்க மாட்டேன்" என்றான் அழுத்தமாக....
வினோத் பேசத் துவங்கியதும் சேரில் ஊன்றியிருந்த தன் வலக் கையை முகவாயில் கொடுத்து கூர்மையான கண்களோட அவனையே அர்ஜூன் பார்த்திருக்க, அவனின் கழுகுப் பார்வையில் உள்ளுக்குள் சகலமும் நடுங்கிப் போயிருந்த வினோத்திற்குத் தான் பேச வந்ததை முழுவதுமாகப் பேசி விடுவோமா?? என்ற சந்தேகம் தான் தோன்றியது...
தன்னை சில விநாடிகள் பார்த்திருந்த வினோத் மேலே பேசுவதற்குத் தயங்குவது போல் அர்ஜூனிற்குத் தெரிய,
"ம்ம்ம், சொல்ல வந்தத முழுசா சொல்லுங்க" என்று கூறவும், தன் தயக்கத்தைச் சடுதியில் உதறிய வினோத் சடசடவென்று பேசி முடித்தான்...
"இந்த வருஷம் என்னோட காலேஜ் முடியுது அத்தான்... காலேஜ்ல நான் டிஸ்டிங்ஷன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்... காலேஜ் கேம்பஸ் இண்டெர்வியூவில ஏற்கனவே செல்க்ட் ஆகிட்டேன்... எந்த இடத்தில் ட்ரெய்னிங், எத்தனை மாசம் என்று எல்லா டீட்டெய்ல்ஸும் கூடிய சீக்கிரம் சொல்லிடுவாங்க... ட்ரெய்னிங் முடிஞ்சதும் ஒரு மூனு வருஷமாவது வேலைப் பார்க்கனும், எங்க அம்மா அப்பாவோட கடன அடைக்கனும்... அப்புறம் தான் என்னோட மேரேஜ்ன்னு ப்ளான் பண்ணியிருந்தேன்... ஆனால் நிச்சயம் மஹா மாதிரி ஒரு பெண்ணைப் பார்ப்பேன், அவள விரும்புவேன்னு நான் கனவிலயும் நினைச்சுப் பார்த்ததில்லை... எங்க வீட்டுக் கஷ்டம் உணர்ந்து காதல் மட்டும் இல்லை, வேற எந்தத் தேவையில்லாத பழக்கமும் நான் வச்சிக்கல... படிப்பில் மட்டும் தான் என்னுடைய முழுக் கவனமும் இருக்கனும் அப்படிங்கறதல ரொம்பத் தீவிரமா இருந்தேன்.... " என்றவன் சில விநாடிகள் தயங்கி...
"ஆனால் மஹாவப் பார்த்ததும் நான் எனக்குள்ள போட்டுக்கிட்ட கட்டுப்பாடு என்னை அறியாம உடைஞ்சிடுச்சு... இதுக்கு நிச்சயம் உங்க வசதியோ, திவ்யா என்னோட தங்கைங்கிற உரிமையோ இல்ல, சத்தியமா இல்லை... எனக்கு நல்லாவே தெரியும்... நீங்க மஹாவிற்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்ப்பீங்கன்னு... அந்த மாப்பிள்ளைங்க பக்கத்தில நிக்கிற தகுதிக் கூட எனக்கில்லைன்னு தெரியும்... ஆனால் இரண்டு விஷயத்தில் நான் உங்களுக்கு உறுதி கொடுக்க முடியும்... ஒன்னு நீங்க எல்லாரும் சம்மதிச்சா மட்டும் தான் நான் அவள என்னவளா எடுத்துப்பேன்.... இரண்டாவது உங்க அளவுக்கு இல்லைன்னாலும் என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சந்தோஷமா நான் மஹாவை வச்சிப்பேன்" என்று அழுத்தமாகக் கூறி முடித்தான்...
அவன் பேசி முடித்தும் ஒன்றும் சொல்லாமல் மௌனமாகத் தன் விழிகளை நேருக்கு நேர் பார்த்திருந்த அர்ஜூனைக் கண்ட வினோத்திற்கு இதற்கு மேல் என்ன சொல்வதென்றெ தெரியவில்லை.
ஆனால் அவனின் அடி மனதில் எங்கே அர்ஜூன் தனக்கு மஹாவைத் தர இயலாது என்று கூறிடுவானோ என்று பயம் கவ்வியிருக்கத் தன்னிலைக்கு விளக்கம் கொடுப்பதற்காக மேலும் தொடர்ந்தவன்...
"இத வச்சு மஹாவை எனக்குக் கொடுங்கன்னு கேட்கிறது எந்த விதத்திலேயும் நியாயம் இல்லை தான்... ஆனால் நான் வாழ்க்கையில் ரொம்ப நல்லா வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு... கடினமா உழைச்சு எங்க அம்மா அப்பா மட்டும் இல்ல எனக்கு மனைவியா வரப் போறவளையும் நல்லா காப்பாத்தனும் அப்படிங்கிற வெறியில் தான் நான் நல்லா படிச்சுக்கிட்டு இருக்கேன்... என் மேல் நம்பிக்கை இருந்தா நீங்க எனக்கு மஹாவ கொடுங்க" என்றவனின் குரலில் அழுத்தமும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருந்ததே ஒழிய, எந்தப் பிசிறோ தடுமாற்றமோ கடுகளவும் இல்லை...
தன் எதிரில் அமர்ந்ததும் வினோத்தின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும், அவனின் கண்களில் தெரிந்த ஒரு வித பிரமிப்பையும் கண்டிருந்த அர்ஜூனிற்கு அவன் மஹாவைப் பற்றிப் பேசத் துவங்கியதும் அவனின் விழிகளில் தெரிந்த உறுதியும், குரலில் தெரிந்த தெளிவும் அவன் மேல் ஒரு நல்ல மதிப்பையே உருவாக்கியிருந்தது.... இவன் திவ்யாவைப் போன்று பயந்தவனில்லை என்றாலும், அவளைப் போன்ற நல்ல மனம் உள்ளவனாகவே தெரிந்தான்...
இருந்தும் இன்று காலையில் மஹாவுடன் ஒரே அறையில் இருந்து அவன் வெளி வந்ததை ஏனோ அர்ஜூனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை...
தான் பேச வந்த அனைத்தையும் பேசி முடித்தும் பதில் எதுவும் பேசாத அர்ஜூனைப் பார்த்தவனுக்கு அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று தோன்ற,
அவனின் மன நிலையைப் புரிந்து கொண்ட அர்ஜூன் நிமிர்ந்து உட்கார்ந்தவன் தன் முகத்திலோ வார்த்தைகளிலோ எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தனக்கு முன் இருந்த சதுரங்க பலகையில் காய்களை நகர்த்தியவாறே..
"நீங்க எப்போ மஹாவை லவ் பண்ண ஆரம்பிச்சீங்க?" என்றான் நிதானமாக...
போச்சுடா... உள்ளுக்குள்ள இருக்கிற அடங்காத கோபம் தறிகெட்டு வெளியே வராமல் தன்னைக் கட்டுப்படுத்த தான் அவன் சதுரங்கமே விளையாடுவான்.... அப்பொழுது அவனின் கண்காணாத, அவன் பார்வையில் பட முடியாத தொலைவான இடத்தில் இருக்கும் எதிராளியின் நிலைமையே அந்தோ பரிதாபமாக இருக்கும் பொழுது இப்பொழுது அவனுக்கு எதிரிலே நேரெதிராக அமர்ந்திருக்கும் வினோத்தின் நிலைமை?????
தான் தனது காதலிற்கு இவ்வளவு விளக்கம் கொடுத்தும் தனது முடிவைச் சொல்லாது, அவனின் கண்களுக்கு எதிரிலேயே தான் இவ்வளவு நெருக்கமாக அமர்ந்திருந்தும் தன் முகம் நோக்காமல் சதுரங்க பலகையில் காய்களை நகர்த்தியவாறே தன்னிடம் தங்களின் காதல் தோன்றிய விதத்தைப் பற்றிக் கேள்விக் கேட்கும் அர்ஜுனைப் புரிந்து கொள்ள முடியாது, அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிய வினோத்திற்கு நன்றாகத் தெரிந்து போனது...
இப்பொழுது அர்ஜூனின் கேள்விக்குத் தான் கூறும் எந்தப் பதிலாலும் மஹாவுடனான தன் காதல் அவளின் வசதியையோ அந்தஸ்தையோ பார்த்து வரவில்லை என்பதை நிருபிக்க முடியாது என்று...
அதனைப் போன்று அவன் தன்னைத் தானே எதிர்த்து அமைதியாகவும், நிதானமாகவும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும் விதத்தில், அழகில் மதி மயங்கியவனிற்குத் தெரியும் இவ்வாறு விளையாடுபவர்களின் குணாதிசியங்கள்...
அவர்கள் தங்களைத் தானே எதிர்ப்பதன் மூலம் எதிராளிகளின் பலவீனத்தை அறிந்து அவர்களை எப்படி எந்தக் கோணத்தில் இருந்து தாக்குவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று..... மற்றும் இரு பக்கங்களின் இருந்தும் அவர்களே விளையாடுவதால் வாழ்க்கையில் அவர்களை எதிர்க்கும் எதிராளிகளே இருக்கக் கூடாது என்பதும் அவர்களின் குறிக்கோள் என்று....
தன்னைக் கேள்விக் கேட்டும் தான் இன்னும் பதில் சொல்லாவிட்டாலும் தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் ஒவ்வொரு காயாக நகர்த்தும் தன் தங்கையின் கணவனைப் பார்க்கவும் உள்ளுக்குள் பதட்டமாக, இதயம் வேறு தாறுமாறாகத் துடிக்க, இருந்தும் தன் மனதில் உள்ள உண்மையை மட்டுமே கூறுவது என்று முடிவெடுத்தவன்....
"உங்க வீட்டிற்கு முதன் முதலா வந்திருந்தப்போ தான் அத்தான்" என்றவன் சட்டென்று தன்னையும் அறியாமல் குரலில் பதற்றத்தை வெளிப்படுத்தி....
"அத்தான், திவ்யாவிற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்றான்...
அவனுக்கு எங்கே தன்னால் தன் தங்கையின் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பயம்...
அவனின் பதற்றத்தைக் கவனித்த அர்ஜூன் தன் சதுரங்க விளையாட்டை நிறுத்தி வினோத்தை நிமிர்ந்துப் பார்த்தவன்....
"வினோத், என் வைஃபை பத்தி எனக்குத் தெரியும்... நீங்க இவ்வளவு பதற வேண்டியது இல்லை" என்றவன் மேலும் தன் சேரில் சாய்ந்து அமர்ந்தவனாக...
"ஆக முதல்ல மேரேஜ் ஆன எங்களுக்குள்ள லவ் வருவதற்கு முன்னாடியே உங்களுக்கு வந்திடுச்சு??" என்றான்......
வினோத்தால் அர்ஜூனின் முகப் பாவத்தில் இருந்து "என் தங்கையை உனக்குக் கொடுப்பதா என்ற கோபத்தில் பேசுகிறாரா? அல்லது போயும் போயும் உன்னைப் போல ஒருத்தனை என் தங்கை விரும்புகிறாளே என்ற எரிச்சலில் பேசுகிறாரா? அல்லது திவ்யாவிற்காக இவ்வளவு பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டியுள்ளதே என்ற சலிப்பில் பேசுகிறாரா?" என்று சுத்தமாகக் கணிக்க முடியவில்லை...
இதற்கு மேல் அர்ஜூனின் விருப்பம் என்னவோ அதுவே தான் நடக்கும் என்று மனதிற்குள் குமுறியவன் கலக்கத்துடன் தவித்து அமர்ந்திருக்க...
அவனது தவிப்பையும், தன் பதிலை ஏக்கத்துடன் எதிர்பார்த்து தன் முகத்தையே பார்த்திருப்பதையும் கண்ட அர்ஜூன் ஒரு அண்ணனாகப் பேச துவங்கினான்.....
"வினோத்.... ஒரு வேளை திவ்யாவை பத்தி நான் முழுசும் புரிஞ்சிக்கிறதுக்கு முன் உங்க காதல் பத்தி தெரிந்திருந்ததுன்னா, நான் நிச்சயம் இதுக்குப் பெரிய எதிர்ப்ப தெரிவிச்சு இருப்பேன்..... ஆனால் இப்போ திவ்யா எனக்கு எவ்வளவு முக்கியம்னு உங்களுக்குத் தெரியும்... காலையில் உங்க இரண்டு பேரையும் பார்த்தப்பவே அவ முகத்தில உள்ள பயத்த நான் பார்த்தேன்...... எங்கே உங்களிடம் நான் பிரச்சனை பண்ணிடுவேனோன்னு பயந்து கலங்கிப் போய் இருந்தாள்... நிச்சயம் அவ மனசு கஷ்டப்படுற மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன்...." என்றவன் வினோத்தை ஆழந்து பார்த்தவாறே..
"ஆனால் அதுக்காக என் தங்கையோட வாழ்க்கையும் எனக்கு ரொம்ப முக்கியம்" என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன், சில விநாடிகளுக்குப் பிறகு தன் சேரில் இருந்த எழுந்திருக்க,
அவன் எழவும் வினோத்தும் அவனுடன் சேர்ந்து எழுந்திருக்க, "உட்காருங்க" என்பது போல் சைகை செய்தவன்...
"வினோத்... எனக்கு நீங்க சில கியாரண்டீஸ் (உத்தரவாதங்கள்) கொடுக்கனும்" என்றான்...
அவன் கேட்ட தோரணையே ஏதோ பெரிதாகக் கேட்கப் போகிறான் என்று தெரிந்தது... ஆனால் இவர் இந்த அளவிற்குப் பொறுமையாகப் பேசியதே பெரிது என்று நினைத்த வினோத் வேறு வழியின்றிச் சரி என்று தலை அசைக்க....
"நீங்க சொன்ன மாதிரி காலேஜ் முடிஞ்சு த்ரீ இயர்ஸுக்குள்ல நல்ல வேலையில் செட்டில் ஆகிடுங்க... நான் நிச்சயம் நீங்க எங்க லெவலுக்கு இருக்கனும்னு எதிர் பார்க்கமாட்டேன்... ஆனால் அதே சமயம் எனக்குத் திருப்தி படுகிற மாதிரி இருக்கனும் உங்க வளர்ச்சி... இரெண்டாவது, அது வரைக்கும் நீங்க மஹாவ பார்க்கவோ அவளிடம் பழகவோ கூடாது" என்றான் நிதானமாக ஆனால் அழுத்தமான, கம்பீரமான குரலில்......
தன்னுடைய முதல் நிபந்தனையைச் சொன்ன பொழுது வினோத்தின் முகத்தில் தெரிந்த பெருமையையும், இரண்டாவது நிபந்தனையைச் சொன்ன பொழுது அவன் முகத்தில் தெரிந்த கலவரத்தையும் கண்ட அர்ஜூனிற்கு வினோத்தின் காதல் கொண்ட மனம் புரிந்தது...
தன் மனமுழுவதும் உறைந்திருந்த, தன் இதயத்தில் ஆழப் புதைந்திருந்த, புதிதாக அரும்பியிருந்த தன் மனைவியின் மீதான காதலைத் தான் அவளிடம் மனம் திறந்து சொல்வதற்கு முன் அவளிடம் கட்டுக்கடங்காத தன் கோபத்தைக் காட்ட, அதனால் துடிதுடித்துப் போனவள் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு போன அந்த இரு இரவுகளும் தான் எவ்வளவு மனம் தவித்துப் போனோம் என்று அர்ஜூனிற்குத் தெரியும்...
அதற்கு முன் திருமணம் ஆன நாளில் இருந்து ஒரு நாள் கூடத் தான் மனம் விட்டு அவளிடம் காதலை வெளிப்படுத்தி இருந்ததில்லை... தன் மனையாளின் மீது இருந்த ஆசையை வார்த்தைகளால் அவளுடன் பகிர்ந்து கொண்டு இருக்கவில்லை... அப்படி இருக்க அவள் பிரிந்து சென்ற இரண்டு நாட்களும் ஏனோ பல நாள் தன்னுடன் ஒன்றி வாழ்ந்தவளைப் பிரிந்தது போலத் தானே மனம் வலித்தது...
அவள் இல்லாது அதற்கு மேலும் ஒரு நாள் கூட இருக்க முடியாமல் முக்கிய வேலைகளை எல்லாம் கூட ஒதுக்கி வைத்து விட்டு அவளைக் காண, தானே அவள் ஊருக்குச் சென்றது நியாபத்திற்கு வந்தது....
அப்படி இருக்க, காலையில் இவர்கள் இருவரும் ஒரே அறையில் இருந்து வந்ததைப் பார்த்தால், அதுவும் மஹாவின் முகத்தில் தெரிந்த வெட்கமும் சிரிப்பும் சொன்னதே இவர்களின் காதலை...
ஆகையால் இவர்களிடம் ஒருவொருக்கொருவர் பார்க்கவும் கூடாது, பேசவும் கூடாது, அதுவும் மூன்று வருடங்களுக்கு என்று சொல்வது திரைப்படத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம்... நிஜ வாழ்க்கையில் அது சரிப்பட்டு வராது என்பது அர்ஜூனிற்குத் தெரியும்...
ஆனால் அதே சமயம் அவனுக்கு வினோத்தை பற்றி ஒரு நம்பிக்கை வர வேண்டும்..
அவன் திவ்யாவின் அண்ணன் தான், திவ்யாவைப் போல் நல்லவன் தான்..... இருந்தும் தன் தங்கையின் வாழ்க்கையில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக் கூடாது என்று தான் அவன் இந்த நிபந்தனைகளைப் போட்டது.
வினோத் தன் காதலைப் பற்றிச் சொல்லும் பொழுது அர்ஜூனின் மனதில் இத்தனை எண்ணங்கள் ஓடியிருந்ததென்றால் இப்பொழுது அவனது நிபந்தனைகளைக் கேட்ட வினோத்திற்கோ...
"இவர் என் வளர்ச்சியைப் பற்றி எதிர்ப்பார்ப்பது சரியே என்றாலும், மஹாவைப் பார்க்காமல் அவளுடன் பேசாமல் மூன்று வருடங்களா?" என்று குழம்பியவனின் மனம் இருதலை கொள்ளி எறும்பாகத் தவித்தது....
அவனுக்கு மஹாவை தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள அர்ஜூனின் சம்மதமும் வேண்டும் அதே சமயம் தன்னவளைப் பாராமல் அவளுடன் பேசாமல் மூன்று நீண்ட வருடங்கள் எப்படி இருப்பது என்பதை அர்ஜூனிடம் கேட்கும் தைரியமும் இல்லை...
காதலை சுமந்திருந்த இதயத்தில் இருந்து, அழகிய கவிதைப் போல் தன் கருத்தில் குடிக் கொண்டிருந்தவளை, மலர் கொடி போல் தன் மீது இன்று காலை முழுவதுமாகப் படர்ந்திருந்தவளை அர்ஜூன் தன்னிடம் இருந்து வலியப் பிடுங்கியது போல் வலித்தது வினோத்திற்கு...
ஆனால் அதே சமயம் அர்ஜூனை எதிர்க்கவோ அவருடைய நிபந்தனைகளை மறுப்பதற்க்கோ தன்னிடம் என்ன சக்தி இருக்கிறது என்று உணர்ந்தவன், "சரி அத்தான்" என்றான் சன்னமான குரலில்....
"சரி வினோத், நீங்க கிளம்புங்க... நான் மாம் அண்ட டாட் கிட்ட பேசுறேன்" என்று சொன்ன அர்ஜூனைப் பார்த்து ஒரு சிறு புன்னகையையே சிந்தியவன் மனம் முழுவதும் குழப்பத்துடன் வெளியேற...
"உங்க மேல எனக்கு இருக்கிற நம்பிக்கையால தான் வினோத் நான் இந்தக் கண்டிஷன்களையே போட்டேன்... ஐ ஹோப் யூ கீப் அப் யுவர் வேர்ட்ஸ் [I hope you keep up your words]... நீங்க உங்க வார்த்தைகளைக் காப்பாத்துவதில் தான் இருக்கு நான் மஹாவை உங்களுக்குக் கொடுப்பதும் கொடுக்காமல் போவதும்" என்று என்ன தான் வினோத் தன் மனைவியின் அண்ணனாக இருந்தாலும், மஹாவின் அண்ணனாக அவள் வாழ்க்கையின் நலன்கள் கருதியே அர்ஜூன் இந்த முடிவை எடுத்திருந்தான்....
அர்ஜூனின் அறையை விட்டு வெளியில் வந்த வினோத்திற்குக் கிட்டதட்ட மூச்சே அடைத்துவிடும் போல் இருந்தது....
"அப்பா, ஒரு அரை மணி நேரம் இவர் கூட இருப்பதற்கே எனக்கு இப்படி மூச்சு முட்டுதே... எப்படித் தான் திவ்யா இவரைச் சமாளிக்கிறாளோ?" என்று எண்ணியவனுக்கு எங்குத் தெரியப் போகிறது??
வெளி உலகத்திற்கும் தன் குடும்பத்தில் திவ்யாவைத் தவிர மற்றவர்களுக்கு மட்டும் தான் அவன் சிம்ம சொப்பனம்...
அவன் மனையாளைப் பொறுத்தவரை அவளின் முகத்தில் ஒரு சிறு கலக்கமோ, அவளின் விழிகளில் ஏதேனும் சிறு ஏக்கமோ தெரிந்தாலும் கூட அவளின் மேல் அடங்காத காதல் கொண்டுள்ள அவன் இதயம் பதறி துடித்துவிடும் என்பது....
அர்ஜூனின் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த வினோத்தின் மனதில்....
"அத்தானின் கண்டிஷன்களை மஹா எப்படி எடுத்துக் கொள்வாளோ தெரியவில்லையே.... என்னை மூனு வருஷம் பார்க்கக் கூடாது, என்னிடம் பேச கூடக் கூடாதுன்னு சொன்னா என்ன சொல்வாளோ" என்று யோசித்தவனுக்கு "அத்தான் இந்த அளவிற்கு இறங்கி பேசுவார்னு நினைச்சுக் கூடப் பார்க்கவில்லை... அது வரைக்கும் நல்லது" என்ற நிம்மதியும் படர்ந்தது...
நேரே வீட்டிற்கு வந்தவன் தன் அன்னையும் தந்தையும் பிரயாணத்திற்குத் தயாராக இருக்க, தான் வீட்டிற்குள் நுழைந்ததும் கலக்கமும் ஆர்வமுமாகத் தன் முகத்தையே பார்த்திருந்த மஹாவை திரும்பியும் பார்க்காமல் பயணத்திற்குத் தானும் தயாராக,
அவன் வந்ததில் இருந்து அவனையே பாத்திருந்த மஹாவிற்குத் தன்னவனின் பாரா முகத்தைக் கண்டு அச்சத்திலும் வேதனையிலும் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.
சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் ஊருக்குக் கிளம்பத் திவ்யாவின் கரங்களைத் தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்ட கலா....
"திவ்யா, உடம்பப் பார்த்துக்கமா.... ஸ்ரீயும், மாப்பிள்ளையும் சொல்ற மாதிரி நடந்துக்க என்ன?" என்றவர் விழிகளில் நீர் ததும்பி நிற்க கிளம்பினார்.
அன்னையும் தந்தையும் முதலில் வெளியே செல்ல, வீட்டிற்குத் திரும்பி வந்ததில் இருந்து வினோத்தின் முகம் வேறு சரியில்லாததைக் கவனித்து வந்த திவ்யாவிற்கு ஏதோ நடந்து இருக்கிறது என்று புரிய, அவனிடம் நெருங்கி நின்றவள் வாய் வரை வந்த வார்த்தைகளை உதிர்க்காமலே விட்டாள்...
அவளின் தவிப்பு புரிந்த வினோத் நிச்சயம் அத்தான் இவளிடம் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லுவார் என்று நம்பிக்கையில் அவளின் தலையைக் கோதியவன்...
"சரி திவ்யா... உடம்பப் பாத்துக்க... அடிக்கடி ஃபோன் பண்ணு, என்ன?" என்றவன் வீட்டை விட்டு வெளியில் செல்லும் வரை மஹாவை திரும்பியும் பார்த்தான் இல்லை...
அவர்கள் அனைவரும் கிளம்பவும், காலையில் நடந்த சம்பவம் மீண்டும் திவ்யாவின் நியாபகத்திற்கு வந்து அவளைக் கலக்கத்தில் வதைத்தது என்றால் காலையில் தன்னைச் சுட்டெரிக்கும் சூரியனைப் போன்று பார்வைப் பார்த்துவிட்டு சென்ற தன் அண்ணனை திகிலுடன் எதிர்பார்த்திருந்த மஹாவிற்கோ அவன் வருவதற்குத் தாமதம் ஆக ஆக இதயம் துடிப்பதை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போனது..
இரவு வெகு நேரம் சென்று வீடு திரும்பிய அர்ஜூன் தன் அறைக்குச் சென்று குளித்து முடித்து இரவு உணவிற்காகக் கீழ் இறங்கி வந்தவன் டைனிங் டேபிளில் அமர, அவன் வந்ததில் இருந்து ஒரு வார்த்தைக் கூட அவனிடம் பேசாமல் உணவு பரிமாறிய தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தவனிற்கு அவளின் முகத்தில் இருந்த கலக்கத்தின் காரணம் புரிந்தது...
கடலூருக்கு அவளை அழைக்கப் போகும் பொழுது திவ்யாவின் மேல் வினோத்திற்கு இருந்த பாசத்தைத் தான் கண்கூடாகப் பார்த்திருந்தானே...
அவனும் அவளைக் கண்டு கொள்ளாதது போல உணவு அருந்த, தன் அண்ணனின் அருகில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த மஹா அவனை நிமிர்ந்துப் பார்த்தால் தானே....
ஒரு வழியாக உண்டு முடித்து எழுந்தவன் தன் தலை தட்டில் புதைந்தது போல் குனிந்து உண்டு கொண்டிருந்த மஹாவைப் பார்த்து....
"மஹா உன் கூடக் கொஞ்சம் பேசனும்.... என் ரூமிற்கு வா..." என்றவன் அவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.
அர்ஜூன் தனியாகத் தன்னை அழைத்ததும் உலகத்தில் உள்ள அத்தனை கடவுள்களிடமும் வேண்டிக் கொண்டவள் அச்சத்துடனும் கலக்கத்துடனும் அவன் பின் செல்ல, அவள் அறைக்குள் நுழைந்தவுடன்....
"கதவை சாத்து" என்றான்.
தன் கட்டிலுக்கு அருகில் சேரை இழுத்துப் போட்டவன் அவளை அமர செய்து அவள் கண்களைக் கூர்ந்து பார்த்தவாறே..
"ஏன் வினோத்தை சூஸ் பண்ணின மஹா? என்றான் அதிரடியாக...
கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள், சன்னமான குரலில்....
"திவ்யா அண்ணி மாதிரி அவரும் ரொம்ப நல்லவர்ண்ணா" என்றாள்.
தலை குனிந்து தன் இடது கை விரல்களால் தன் நெற்றியை அழுந்தித் தேய்த்துக் கொண்டவாறே சத்தம் வராமல் மெல்லியதாகப் புன்னகைத்து கொண்டவன், நிமிர்ந்து....
"அது எனக்குத் தெரியும்... ஆனால் அது மட்டும் போதுமா மஹா லைஃபில? சரி நீயும் வினோத்தும் என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?" என்றான்.
அவன் கேட்கும் கேள்வி புரியாமல் அவனையே பார்க்க,
"மார்னிங் வினோத் என்னைய பார்க்க வந்தது தெரியும் இல்லையா?" என்றான்.
ஆமாம் என்று தலையாட்டிவள் மீண்டும் அமைதியாக இருக்க,
"வினோத் எதுவும் உன் கிட்ட சொல்லவில்லையா?" என்று மேலும் கேட்க,
அவள் இல்லை என்பது போல் தலை அசைக்கவும், எப்படி வாயடிப்பவள் இப்படி அமைதியாக இருப்பதைப் பார்த்து காதல் என்ற உணர்வு இதயத்தில் ஊடுருவிவிட்டால் எவரையும் எப்படியும் மாற்றும் சக்தியாக அது மேலெழுந்து புத்தியையும் சித்தத்தையும் கலங்கடித்து ஒரு மனதினை அடியோடு மாற்றிவிடுகிறது என்று நினைத்தவனின் விழிகளின் முன் திவ்யாவின் அழகு முகம் படர, புன்னகைத்துக் கொண்டவன் காலையில் அவனுக்கும் வினோத்திற்கும் இடையில் நடந்ததை முழுவதுமாக எடுத்துரைத்தான்....
"மஹா.... உனக்கு இதற்குச் சம்மதமா?
"எப்படி அண்ணா அவர பார்க்காம பேசாம அவ்வளவு நாள் இருக்கிறது?"
"மஹா எனக்கு இது வெறும் இன்பாக்ஷுவேஷன் இல்லைன்னு தெரியனும்... அத நீங்க தான் ப்ரூவ் பண்ணனும்... அதுக்காகத் தான் இந்தக் கண்டிஷன்ஸே"
"சரின்னா... நிச்சயம் நாங்க ப்ரூவ் பண்ணுவோம்.... ஆனால் ப்ளீஸ்ண்ணா, எங்கள சேர்த்து மட்டும் வச்சிடுங்க" என்று விழிகளில் நீர் தளும்பி நிற்க கலங்கியவளின் முன் குனிந்தவன் வாழ்க்கையில் முதல் முறை தன் தங்கையின் தலை முடியை ஆறுதலாகத் தடவிக் கொடுத்து,
"நான் என்னைக்காவது சொன்ன சொல் தவறி இருக்கேனா மஹா?" என்று கேட்க,
இல்லை என்பது போல் தலையை அசைத்தவளைக் கண்டவன்...
"அப்புறம் ஏன் இந்தக் கலக்கம்? நான் சொன்னதை நீங்க செஞ்சா நானும் என் வார்த்தையைக் காப்பாத்துவேன்... சரி நீ போய்த் திவ்யாவை அனுப்பு" என்றவன் மடி கணினியை எடுத்து வைத்துக் கொண்டு தன் வேலையைத் தொடர, இன்னும் குழப்பம் விலகாத முகத்துடன் கீழ் இறங்கி சென்றவளை நிமிர்ந்துப் பார்த்தவன் அடுத்து தன் மனைவியை என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்று யோசனையில் ஆழ்ந்தவாறே அவளின் வரவிற்காகக் காத்திருந்தான்...
தன் கணவன் மஹாவைத் தனியாகப் பேச அழைத்ததிலேயே கலங்கி போய் இருந்த திவ்யா, சிறிது நேரத்தில் குழம்பிய முகத்துடன் தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தவளைப் பார்த்தவள் வேகமாக அவளின் அருகில் செல்ல....
"அண்ணி, அண்ணா உங்களை வரச் சொல்றாங்க" என்று விட்டு சட்டென்று தன் அறைக்குள் மஹா மறைய, திவ்யாவின் வயிற்றுக்குள் ஒரு பெரிய உருளை உருள துவங்கியது....
என்ன தான் தன் கணவன் தன்னைத் தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கிக் கொண்டிருந்தாலும் அவனின் இயற்கைக் குணங்களான கோபம், பிடிவாதம் ஆணவம், அதிகாரம் அனைத்தும் அவனை விட்டு இன்னும் செல்லவில்லையே....
கூடப் பிறந்த தங்கையான மஹாவிற்கே இந்த நிலைமை என்றால் வினோத்தின் நிலைமையை எண்ணி அடி வயிறு கலங்க மெல்ல தங்கள் அறைக்குள் வந்தவள் அவன் கட்டிலில் அமர்ந்து தான் வருவதும் தெரிந்தும் தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் கணினியிலேயே கண்களைப் பதித்திருப்பதைக் கண்டவளுக்கு இன்று ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது என்றே தோன்றியது...
மெல்ல கட்டிலில் ஏறி அவன் அருகில் படுத்தவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக அவனையே பார்த்திருக்க, அவளின் மௌனத்தின் காரணம் புரிந்திருந்ததால் மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் கணினியில் பதித்திருந்த விழிகளை எடுக்காமல் சில நிமிடங்கள் பேசாதிருக்க....
அவனின் மேல் நிலைத்திருந்த பார்வையை வேறு எந்தப் பக்கமும் திருப்பாமல் அவனையே கண் கொண்டு பார்த்திருக்க, இதற்கு மேலும் தன்னவளின் பொறுமையைச் சோதிக்காமல்...
"இன்னைக்குக் காலையில வினோத் என் ஆஃபீஸிக்கு வந்தார்" என்றான் அதிரடியாக.....
அவன் திடீரென்று அவ்வாறு சொன்னதும் திக்கென்று இருக்க அரண்டவள் வெடுக்கென்று எழ..
அவள் அப்படி அலறி துடித்து எழுந்ததும் பதறியவன்...
"என்ன திவி? இது மாதிரி அவசரப்பட்டு எழுந்திருக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது" என்று சலிப்புடன் கூறியவன் அவளின் குணம் தெரிந்தும் தான் இவ்வாறு அவளைச் சோதிப்பது போல் அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது திடுதிப்பென்று பேசியது தன் தவறே என்று வருந்தியவன் மடி கணினியை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு அவளின் அருகில் நகர்ந்து அமர...
"அண்ணா எதுக்கு வந்தாங்க?" என்றாள் கண்களில் அச்சத்தைத் தேக்கி வைத்து......
அவளின் பயத்தைப் பார்த்தவனுக்குத் தன் மனையாளின் மேல் மேலும் கனிவு வர அவளைத் தன் மேல் சரித்துக் கொண்டவன்...
"ம்ப்ச்.... இப்போ எதுக்கு இவ்வளவு பயம்?" என்றான்...
"என்னங்க, அண்ணன்ட்ட நீங்க கோபம் எதுவும் படலையே?"...
"எதுக்கு?"
"எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்... என் அண்ணா ரொம்ப நல்லவருங்க... ஆனால் அவர் இப்படிப் பண்ணுவார்ன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை?" என்றவளின் விழிநீர் அவனின் சட்டைக்கு இடையில் தெரிந்த வெற்று மார்பில் பட,
அவளின் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தியவன்....
"நான் காலையில என்ன சொன்னேன்.... உன் கவலை எல்லாம் உன் உடம்பை பத்தியும், என்ன பத்தியும், நம்ம குழந்தையைப் பத்தியும் மட்டும் தான் இருக்கனும்னு... திரும்பவும் ஏன் இவ்வளவு கவலைப்படுற?" என்று கேட்டான் கரிசனத்துடன்....
இருந்தும் அவளின் முகத்தில் தெளிவில்லாததைப் பார்த்தவன், காலையில் தனக்கும் வினோத்திற்கும் இடையில் நடந்த உரையாடல்களைச் சொல்ல, அவனை நம்பாமல் வழக்கம் போல் கண்களை அகல விரித்து மருண்டப் பார்வைப் பார்க்கவும்,
கருத்தரித்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நாளில் இருந்து அவளின் மனதில் பூத்திருந்த பூரிப்பின் சாயல் அவள் முகத்திலும் படிந்திருந்ததால், அவளின் அழகு எங்கும் பல மடங்கு பரிமளித்துத் தேவதையைப் போல் காட்சியளித்தவளை கண்டவனின் பார்வையில் இருந்து இதுவரை தெரிந்த கனிவும் இரக்கமும் மாயமாய்ப் பறந்து அந்த இடத்தைத் தாபமும் விரசமும் ஆட்கொண்டது...
முகத்தை மட்டும் தன்னை நோக்கி அண்ணாந்துப் பார்த்தவாறு தனது நெஞ்சில் படுத்திருக்க அவளின் செவ்விதழ்கள் வேறு அவனின் முகத்திற்கு வெகு அருகில் இருக்க, மார்பகத்தை மறைத்தோடியிருந்த சேலையும் சிறிதே விலகியிருந்ததில் கண்ணைக் கவரும் சித்திரம் போல் தன் மேல் படர்ந்திருந்தவளைக் கண்டவனுக்கு, மருத்துவர் தாம்பத்தியத்திற்குக் கருத்தரிப்பு தடையில்லை என்று சொல்லியிருந்தாலும் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு தன்னவளிடம் தன் மென்மையான பக்கத்தையே கடந்த சில நாட்களாகக் காட்டியிருந்தவனிற்குள் அடங்கியிருந்த தாபம் உத்தஸ்தாயிக்கு சென்று அவனின் உறுதியை உடைத்தெறிந்தது...
தன்னவளின் முகத்தை இன்னும் தன்னை நோக்கி நிமிர்த்தியவன் அவளின் முகத்தில் சிதறியிருந்த ஓரிரு முடிகளை விரல்களால் ஒதுக்கியவாறே...
"இப்படி பார்க்க பார்க்க தான் எனக்கு என்னென்னமோ பண்ணனும் தோனுதுடி" என்றவன் அவளின் இதழ் நோக்கி குனிய,
அவனை விட்டு சட்டென்று விலகியவள்..
"என்னங்க.... எவ்வளவு முக்கியமான விஷயம் பத்தி பேசிட்டு இருக்கோம், இப்ப போய்..." என்று இழுக்கக் கடுப்பானவன்...
"சரி... அதுக்காக இப்படித் தள்ளிப் படுத்தே பேச சொல்றியா? என்றான் தாபம் சட்டென்று அறுப்பட்ட கோபத்தில்....
அவனின் கோபத்தைக் கண்டு புன்னகைத்தவள் மீண்டும் அவன் நெஞ்சில் படுத்தவாறே
"இல்லை.... இப்படிப் படுத்தும் பேசலாம்... ஆனால் நீங்க பேசனும்... வேற எதுவும் செய்யக் கூடாது... " என்றவள் அவனின் விழிகளில் தன் விழிகளைப் படரவிட்டு ஆச்சரியத்துடன்...
"நிஜமாவே மஹா அண்ணிய எங்க அண்ணனுக்குக் கொடுப்பீங்களா?" என்றாள்......
உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பும் மனைவியுடனான தாம்பாத்தியத்தை யாசித்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கூடத் தன்னிலையில் இருந்து இறங்காதவன் விடாப்பிடியாக....
"நான் சொன்ன கண்டிஷன்களை அவங்க இரண்டு பேரும் மீறாமல் இருந்தால்!!" என்றான் அழுத்தமாக...
காதலிக்கறவங்க ஒருத்தருக்கொருத்தர் எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும் என்று அவள் மீண்டும் தன் யோசனை உலகத்திற்குச் செல்ல, அவளை இறுக்கி அணைத்தவன்.....
"திவி, அவங்க பிரச்சனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.... முதல்ல என்ன கவனிடி" என்று கூறியவன் அவளுள் மூழ்க துவங்க...
அவனின் அத்து மீறல்களில் கூடக் கவனம் செலுத்தாமல்...
"என்னங்க, நீங்க சொல்ற மாதிரி நிச்சயம் இரண்டு பேரும் இருப்பாங்க.... எனக்கு இரண்டு பேரையும் பத்தி நல்லா தெரியும்.. அது மட்டும் இல்ல, எங்க அண்ணன் நிச்சயம் மஹா அண்ணிய தங்க தட்டுல வச்சு தாங்குவாங்க பாருங்களேன்" என்று அவள் விடாமல் அதேயே பேச,
அவளின் இதழ்களை விரலால் வருடிவிட்டபடியே....
"திவி, நீ எப்போ என் லைஃபில் வந்தியோ அப்பவே, உன் வீட்டில் இருக்கிறவங்களும் என் லைப்பில் ஒருத்தராகிட்டாங்க... நான் இந்தக் கண்டிஷன்ஸ போட்டதே அவங்க அவங்களோட லவ்வை, லைஃப்பை சீரியஸாக எடுத்துக்கனும்னு தான்... வினோத் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணட்டும், அவருக்கு நம்ம ஐ டி கம்பெனியில் மேனேஜ்மெண்ட் போஸ்ட் தந்துவிடுகிறேன்" என்றவன்,
"அது சரி... அதென்ன உங்க அண்ணா மட்டும் தான் அவர் வைஃப்ப தங்க தட்டுல வச்சு தாங்குவாரா? ஏன் நாங்கெல்லாம் தாங்கலையா?" என்று கேட்டவனின் பார்வை கூர்மையாக அவளின் இதழ்களில் படிய, அவனின் எண்ணம் புரிந்தவள் நாணத்தில் முகம் விகசிக்கத் தன் உதடு மடித்துத் தலைக் கவிழப் போனவளின் மென் இதழ்களைச் சரேலென வெளிவந்த தாபத்தின் பிரவாகத்தினால் சட்டென்று முரட்டுத்தனமாக முற்றுகையிட,
தனது கணவனின் வன்மையான தாம்பத்திய சாகஸங்களுக்கு அவளின் தளிர் மேனி தானாக இளக தன்னவனுக்குள் புதையத் துவங்கியவள் விடியும் வரை வெளி வரவில்லை....
ஆத்மார்த்தமான காதலுடன் கூடிய காமம் அர்ஜூன் திவ்யா தம்பதியரின் இரவை இனிமையான நீண்ட உறங்கா இரவாக மாற்றியது என்றால், காதலில் முதல் அடி எடுத்து வைத்து அதற்குள் வேலிகளையும் கடுமையான சோதனைகளையும் சந்தித்திருந்த இளம் உள்ளங்கள் வினோத் மஹாவிற்கு அந்த இரவு கலக்கத்தையும், அச்சத்தையும், தவிப்பையும் சுமந்த உறங்கா இரவாக மாறிப்போனது....
ஆனால் இது விடியாத இரவு அல்லவே.... அவர்களின் காதல் பயணத்தில் ஏற்றங்களையும், இறக்கங்களையும், சோதனைகளையும், வெற்றிகளையும் மாற்றி மாற்றிச் சுமந்து வரப் போகும் அழகான விடியலை தாங்கி வந்த இரவே அது...
அது காதலில் தத்தளித்துக் கொண்டிருக்கும், மனம் பாரத்துடன் தவித்து இருக்கும் இந்த இளம் காதலர்களுக்குப் புரியுமா?
தொடரும்..